யாழில் மீண்டெழுந்த இலங்கை தமிழரசுகட்சி
யாழில் மீண்டெழுந்த இலங்கை தமிழரசுகட்சி நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி ஆதிக்கம் செலுத்தியுள்ளது.
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ். மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன.
அதற்கமைய, யாழ்ப்பாண மாநகர சபை, நல்லூர் பிரதேச சபை, வல்வெட்டித்துறை நகர சபை, நெடுந்தீவு பிரதேச சபை, வேலணை பிரதேச சபை, வலிகாமம் மேற்கு பிரதேச சபை, வலிகாமம் வடக்கு பிரதேச சபை,
வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை, வலிகாமம் தெற்கு பிரதேச சபை, வலிகாமம் கிழக்கு பிரதேச சபை, வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபை,
பருத்தித்துறை பிரதேச சபை, சாவகச்சேரி பிரதேச சபை ஆகியவற்றை இலங்கை தமிழ் அரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது.
இதேவேளை, பருத்தித்துறை நகர சபை, சாவகச்சேரி நகர சபையை அகில இலங்கை தமிழ் காங்கிரஸும் கைப்பற்றியுள்ளது.
அத்துடன் காரைநகர் பிரதேச சபையை சுயேட்சைக் குழுவும், ஊர்காவற்றுறை பிரதேச சபையை ஈழ மக்கள் ஜனநாயக கட்சியும் கைப்பற்றியுள்ளன.
இலங்கை தமிழ் அரசுக் கட்சி – 88,443 வாக்குகள் – 135 உறுப்பினர்கள்
தேசிய மக்கள் சக்தி – 56,615 வாக்குகள் – 81 உறுப்பினர்கள்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 51,046 வாக்குகள் – 79 உறுப்பினர்கள்
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 35,647 வாக்குகள் – 46 உறுப்பினர்கள்
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி – 18,011 வாக்குகள் – 32 உறுப்பினர்கள்
தமிழ் மக்கள் கூட்டணி – 11,893 வாக்குகள் – 15 உறுப்பினர்கள்
ஐக்கிய மக்கள் சக்தி – 4,103 வாக்குகள் – 4 உறுப்பினர்கள்
ஐக்கிய தேசிய கட்சி – 3,397 வாக்குகள் – 5 உறுப்பினர்கள்
சுயேட்சைக்குழு இலக்கம் 1 – 2,402 வாக்குகள் – 3 உறுப்பினர்கள்
சுயேட்சைக்குழு இலக்கம் 2 – 3,973 வாக்குகள் – 6 உறுப்பினர்கள்.
அதிக எதிர்பார்ப்போடு மக்கள் தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்தவண்ணம் இருந்தாலும், அநேகமானவர்கள் போட்டியிட்டதால் எந்தக் கட்சியினர் யாழை கைப்பாற்றுவார்கள் என்ற கேள்விதான் மேலோங்கியிருந்தது.
இந்நிலையில் இலங்கை தமிழரசு கட்சி 135 ஆசனங்களைக் கைப்பற்றி யாழ்ப்பாணத்தை தன்வசப்படுத்தியது மாபெரும் வெற்றி என்பதை விட வேறெதுவும் இல்லை.
எட்டப்ப கூட்டங்களால் தேர்தல் காலங்களில் மக்களின் எண்ணக்கருக்களை திசை திருப்பி ஏனைய கட்சிகள் தமிழர் பகுதிகளில் தமிழ் மக்களின் வாக்குகளை தம் வசமாக்க பொய்யுரைகளை பரப்பி வந்தனர்.
இருப்பினும், மக்கள் தமக்கான உரிமையை தம் இனத்தினைக் காப்பாற்ற இலங்கைத் தமிழரசு கட்சிக்கு வாக்களித்து வென்று காட்டியுள்ளமை பெருமைக்குரிய விடயமே.












