எலி காய்ச்சல் 10பேர் பலி
Posted in இலங்கை செய்திகள்

எலி காய்ச்சல் 10பேர் பலி

எலி காய்ச்சல் 10பேர் பலி

எலி காய்ச்சல் 10பேர் பலி ,அநுராதபுரம் மாவட்டத்தில் எலிக்காய்சல் நோயினால் 10 பேர் உயிரிழந்துள்ளதாக பிரதேச சுகாதார சேவை அநுராதபுரம் அலுவலக தொற்றுநோய் பிரிவின் வைத்திய அதிகாரி தேஜன சோமதிலக்க தெரிவித்தார்.

அநுராதபுரம் மாவட்டத்தில்

2024 மற்றும் 2025 ஆண்டுகளில் அநுராதபுரம் மாவட்டத்தில் வருடந்தோறும் 300 க்கும் அதிகமான எலிக்காய்சல் நோயாளிகள் பதிவாகின்றனர்.

அதிகமான நோயாளர்கள் அநுராதபுரம் மாவட்டத்தின்

அதிகமான நோயாளர்கள் அநுராதபுரம் மாவட்டத்தின் கெப்பித்திகொள்ளாவ பிரதேச செயலாளர் பிரிவிலேயே பதிவாகியுள்ளனர்.

இதில், நாச்யாதுவ, நொச்சியாகம, விளச்சிய, திறப்பனை, இபலோகம, தலாவ, தம்புத்தேகம, ராஜாங்கனை, மதவாச்சி உள்ளிட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளிலேயே எலிக்காய்சல் நோயினால் பத்து பேர் உயிரிழந்துள்ளனர்

பருத்தித்துறையில் காய்ச்சலால் உயிரிழந்த இளைஞன்
Posted in இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் காய்ச்சலால் உயிரிழந்த இளைஞன்

பருத்தித்துறையில் காய்ச்சலால் உயிரிழந்த இளைஞன்

பருத்தித்துறையில் காய்ச்சலால் உயிரிழந்த இளைஞன் பருத்தித்துறையில் காய்ச்சலால் இளைஞர் ஒருவர் உயிரிழந்தது அப்பகுதியில் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்களாகக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த இளைஞர் உயிரிழந்த நிலையில் , உடற்கூற்று மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காகக் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த 21 வயது நிரம்பிய இளைஞன் ஒருவரே காய்ச்சலால் உயிரிழந்துள்ளார்.

மேற்படி இளைஞர் கொழும்பில் உயர் படிப்பை கற்றுவரும் நிலையில், யாழ்ப்பாணத்தில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பிய நிலையில் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்தார்.

நான்கு நாட்களாகக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிந்த நிலையில் நேற்று புதன்கிழமை உடல்நிலை மிக மோசமான நிலையில் குடும்பத்தினர் அவரை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

அவரின் உடற்கூற்று மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காகக் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், கடந்த வாரமே காய்ச்சல் தொடர்பாக சுகாதார பிரிவினரால் மக்களுக்கு அறிவிப்பு விடுக்கப்பட்டிருந்தது.

கொசுக்களால் பரவும் நோய்கள் மற்றும் வழக்கமான வைரஸ் காய்ச்சல் அதிகரித்து வருவதால், இரண்டு நாட்களுக்கு மேல் நீடிக்கும் காய்ச்சல் இருந்தால்,

மருத்துவரை அணுகுமாறு சுகாதார அதிகாரிகள் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.

இது தொடர்பில் ஆலோசகர் மருத்துவர் அச்சலா பாலசூரிய கூறியதாவது, சரியான மருத்துவ ஆலோசனை இல்லாமல் வீட்டிலேயே காய்ச்சலுக்கு சிகிச்சை அளிப்பது ஆபத்தானது.

சிலர் இது ஒரு எளிய வைரஸ் காய்ச்சல் என்று நினைக்கலாம், ஆனால், டெங்கு அல்லது சிக்குன்குனியா போன்ற கடுமையான நோய்கள் இதே போன்ற அறிகுறிகளுடன் தொடங்கலாம்.

இருப்பினும், ஆரம்பத்திலேயே பரிசோதனை செய்து கொள்வதும், நிலைமையை மோசமாக்கும் மருந்துகளைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதும் முக்கியம்.

மருத்துவரை அணுகாமல் ஆஸ்பிரின் அல்லது ஐபுப்ரூஃபன் போன்ற மருந்துச் சீட்டு வலி நிவாரணிகளை எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும் அவர் பொதுமக்களுக்கு அறிவுறுத்துகிறார்.

காய்ச்சலா மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

காய்ச்சலா மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

காய்ச்சலா மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

காய்ச்சலா மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை ,காய்ச்சல் அறிகுறிகள் இருப்பின் உடனே மருத்துவமனையை அணுகுமாறு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொசுக்களால் பரவும் நோய்கள் மற்றும் வழக்கமான வைரஸ் காய்ச்சல் அதிகரித்து வருவதால், இரண்டு நாட்களுக்கு மேல் நீடிக்கும் காய்ச்சல் இருந்தால்,

மருத்துவரை அணுகுமாறு சுகாதார அதிகாரிகள் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.

இது தொடர்பில் ஆலோசகர் மருத்துவர் அச்சலா பாலசூரிய கூறியதாவது, சரியான மருத்துவ ஆலோசனை இல்லாமல் வீட்டிலேயே காய்ச்சலுக்கு சிகிச்சை அளிப்பது ஆபத்தானது.

சிலர் இது ஒரு எளிய வைரஸ் காய்ச்சல் என்று நினைக்கலாம், ஆனால், டெங்கு அல்லது சிக்குன்குனியா போன்ற கடுமையான நோய்கள் இதே போன்ற அறிகுறிகளுடன் தொடங்கலாம்.

இருப்பினும், ஆரம்பத்திலேயே பரிசோதனை செய்து கொள்வதும், நிலைமையை மோசமாக்கும் மருந்துகளைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதும் முக்கியம்.

மருத்துவரை அணுகாமல் ஆஸ்பிரின் அல்லது ஐபுப்ரூஃபன் போன்ற மருந்துச் சீட்டு வலி நிவாரணிகளை எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும் அவர் பொதுமக்களுக்கு அறிவுறுத்துகிறார்.

இந்த மருந்துகள் அனைத்து வகையான காய்ச்சலுக்கும் பாதுகாப்பானதாக இருக்காது.

உங்களுக்கு இரண்டு நாட்களுக்கு மேல் நீடிக்கும் காய்ச்சல், குறிப்பாக சோர்வு, தோல் வெடிப்புகள் அல்லது மூட்டு வலி இருந்தால்,

முறையான பரிசோதனைக்காக மருத்துவமனை அல்லது மருத்துவமனைக்குச் செல்வது நல்லது.

மேலும், இந்த நாட்களில் சிக்குன்குனியா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

முக்கிய அறிகுறிகளில் திடீர் அதிக காய்ச்சல், கடுமையான மூட்டு வலி, தசை வலி, தலைவலி, குமட்டல், சோர்வு மற்றும் தோல் வெடிப்புகள் ஆகியவை அடங்கும்.

பெரும்பாலான நோயாளிகள் ஒரு வாரத்திற்குள் குணமடைந்தாலும், சில சந்தர்ப்பங்களில், குறிப்பாக வயதானவர்களிடையே, மூட்டு வலி மாதங்கள் அல்லது ஆண்டுகள் கூட நீடிக்கும்.

எனவே, காய்ச்சல் இரண்டு நாட்களுக்கு மேல் நீடித்தால் மருத்துவ ஆலோசனையைப் பெறுவதன் முக்கியத்துவத்தை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

இதற்கிடையில், ஜனவரி முதல் இலங்கையில் 17,000 க்கும் மேற்பட்ட டெங்கு வழக்குகளும் 16,600 சிக்குன்குனியா வழக்குகளும் பதிவாகியுள்ளன.

மொத்த டெங்கு வழக்குகளில், 50 சதவீதத்திற்கும் அதிகமான வழக்குகள் மேற்கு மாகாணத்திலிருந்து பதிவாகியுள்ளன.

நிலைமையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, டெங்கு மற்றும் சிக்குன்குனியா பரவுவதைக் கட்டுப்படுத்த ஒரு சிறப்பு பணிக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாக,

மேல் மாகாண சபையின் சுகாதார அமைச்சின் செயலாளர் டாக்டர் எல்.ஏ.கலு ஆராட்சி
(Dr. L.A.Kaluarachchi) தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அதிகரிக்கும் மலேரியா காய்ச்சல்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் அதிகரிக்கும் மலேரியா காய்ச்சல்

இலங்கையில் அதிகரிக்கும் மலேரியா காய்ச்சல்

இலங்கையில் அதிகரிக்கும் மலேரியா காய்ச்சல் ,இலங்கையில் மலேரியா மீண்டும் அதிகரித்து வருவதாகவும், சமீபத்தில் வெளிநாடுகளில் இருந்து திரும்பிய நபர்களிடம் இது கண்டறியப்பட்டுள்ளதாகவும் சுகாதார

அதிகாரிகள் எச்சரிக்கின்றனர் என்று சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

மலேரியா எதிர்ப்பு பிரச்சாரத்தின் ஆலோசகர் சமூக மருத்துவர் டாக்டர் புபுது சூலசிறி கூறினார்.

மலேரியா மீண்டும் வருவதைத் தடுக்க இலங்கை ஒரு வலுவான திட்டத்தை பராமரித்து வருகிறது, பயணிகள் இந்த நோயுடன் திரும்புவதற்கான தொடர்ச்சியான ஆபத்தை அங்கீகரித்துள்ளது.

இலங்கையில், 2023 இல் 62 மலேரியா நோயாளிகள் இருந்தனர், ஒரு மரணம் ஏற்பட்டது, அதே நேரத்தில் 2024 இல் 38 வழக்குகள் மற்றும் ஒரு மரணம் பதிவாகியுள்ளது. 2025 இல் இதுவரை 14 வழக்குகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

உலக சுகாதார அமைப்பு (WHO) செப்டெம்பர் 2016 இல் இலங்கையை மலேரியா இல்லாததாக சான்றளித்தது, உள்நாட்டு பரவலை நீக்குவதில் அதன் வெற்றியை ஒப்புக்கொண்டது,” என்று டாக்டர் சூலசிறி மேலும் கூறினார்.

பன்றிக் காய்ச்சல் தொடர்பான அறிவிப்பு
Posted in இலங்கை செய்திகள்

பன்றிக் காய்ச்சல் தொடர்பான அறிவிப்பு

பன்றிக் காய்ச்சல் தொடர்பான அறிவிப்பு

பன்றிக் காய்ச்சல் தொடர்பான அறிவிப்பு ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அரசு கால்நடை மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நோயினால் பாதிக்கப்படாத பண்ணைகளில் உள்ள இறைச்சியை பாதுகாப்பான முறையில் மனித பாவனைக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த சங்கத்தின் தலைவர் மருத்துவர் சிசிர பியசிறி தெரிவித்தார்.

இதேவேளை, ஆபிரிக்க பன்றிக்காய்ச்சலால் பல பண்ணைகள் முற்றாக அழிந்துள்ளதாக உரிமையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எனவே தமது தொழில்களை மீளக் கட்டியெழுப்ப அரசாங்கம் நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்
Posted in இலங்கை செய்திகள்

வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்

வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்

வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல் சிறுவர்களுக்கு மத்தியில் காய்ச்சல் அதிகரித்து வருவதாக ரிட்ஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

ஏறக்குறைய மூன்று நாட்களுக்கு காய்ச்சல் நீடித்தால் அது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டுமென அவர் கூறியுள்ளார்.

“அண்மைய நாட்களாக குழந்தைகளுக்கு இடையில் வைரஸ் காய்ச்சல் அதிகரித்துள்ளது. இது இருமல் மற்றும் சளியுடன் கூடிய காய்ச்சலாகும். மேலும், டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

எனவே இருமல், சளி, காய்ச்சல், உடல்வலி, வாந்தி இருந்தால் வைரஸ் காய்ச்சலுக்கான அறிகுறியாகும்.
எனவே, மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால், உரிய இரத்தப் பரிசோதனை செய்துகொள்ளுங்கள்.” என அவர் அறிவுறுத்தியுள்ளார்.

காய்ச்சல் பறந்ததது மாவை கொண்டாட்டம்
Posted in இலங்கை செய்திகள்

காய்ச்சல் பறந்ததது மாவை கொண்டாட்டம்

காய்ச்சல் பறந்ததது மாவை கொண்டாட்டம்

காய்ச்சல் பறந்ததது மாவை கொண்டாட்டம் ,தமிழரசு கட்சியின் கூட்டத்தில் கலந்து கொள்ள காய்ச்சல் காரணமாக தவறிய மாவை சேனாதிராசா தோழர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார் .

யாழ்ப்பாணம் தாவடியில் உள்ள தர்மலிங்கம் நினைவு தூபியில் ,அவரது நினைவு நாளில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார் .

இதில் தர்மலிங்கத்தின் மகனான சித்தார்த்தன் ,அவருடன் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா ஆகியோர் கலந்து கொண்டு தமது நினைவு அஞ்சலியை செலுத்தி .கொண்டனர்

இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவாக ,தமிழரசு கட்சி செயலாற்ற போவதாக அறிவிக்க பட்ட நிலையில் ,மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி நிலவியது .

அதனை அடுத்து தற்பொழுது தமிழரசு கட்சி பொதுவேட்பாளருக்கு ஆதரவு தரமறுத்து சஜித்துக்கு ஆதரவை வழங்கிட முன் வந்த நிலையில் ,அந்த கட்சியின் கூட்டத்தில் வக்கெடுப்பில் கலந்து கொள்ள தனக்கு காய்ச்சல் சுகவீனம் என கூறி தப்பித்து கொண்ட மாவை தற்போது தோழர் நினைவிடத்தில் கொட்டாவி விட்டு அஞ்சலி செலுத்தியுள்ளார் .

பெட்டிகளுக்கு இவர்கள் பேரம் போயுள்ளது இந்த கட்சி படத்தை பார்க்கின்ற பொழுது தெளிவாகிறது .

அரசியல் வியாபாரிகள் இவர்கள் என மக்கள் கோரியது உண்மை தான் போலும் .

வைரஸ் காய்ச்சல் மக்களுக்கு எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

வைரஸ் காய்ச்சல் மக்களுக்கு எச்சரிக்கை

வைரஸ் காய்ச்சல் மக்களுக்கு எச்சரிக்கை

வைரஸ் காய்ச்சல் மக்களுக்கு எச்சரிக்கை ,வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பாதிகளிலிருந்து ஈக்களில் இருந்து பரவும் ஒரு வித வைரஸ் காரணமாக காய்ச்சல் தொற்று ஏற்பட்டு வருவதாக மக்களுக்கு இலங்கை சுகாதார அமைச்சர் அவசர எச்சரிக்கையுடைய விடுத்துள்ளது.

வெள்ள நீர்கள் வடிந்து வருகின்ற பகுதியில் ஈக்களில் இருந்து புதிதாக குஞ்சுகள் பொரிப்பதாகவும் முதிர்ந்த குஞ்சுகளின் ஊடாக அவை உணர்வுகளை தேடிச் சென்று குப்பைமட்டிலிருந்து உணவுகளை தேடி உண்பதாகவும் அதிலிருந்து வருகின்ற ஒரு விதமான வைரஸ் பரவல் மக்கள் மீது ஏற்படுகிறது .

இதனால் மக்கள் வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி ஒருவித காய்ச்சல் நோயிற்கு உள்ளாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனால் மக்களை மிக எச்சரிக்கையாக விழிப்புணர்வாகவும் இருக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஈக்கள் வயிற்று நோய், சத்தி ,வாந்தி பேதி ,தலை சுற்று என்பன அவர்களுக்கு ஏற்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது .

அதிகமாக வயிற்றோட்டம் காரணமாகவே மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்த சுகாதாரத் தன்மையற்ற பகுதிகளில் மிக எச்சரிக்கையாக இருக்கும்படியும் மக்கள் தம்மைத்தாமை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என தெரிவிக்க பட்டுள்ளது .

சுற்றுப்புறங்களை மீளவும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

மக்களே கவனமாக இருக்கும்படி சுகாதார அமைச்சு உங்களுக்கு மீளவும் ஒரு முறை அறிவித்துள்ளது.

Posted in உலக செய்திகள்

வேகமாக பரவி வரும் பறவை காய்ச்சல் -60,000 கோழிகள் அழிப்பு

வேகமாக பரவி வரும் பறவை காய்ச்சல் -60,000 கோழிகள் அழிப்பு

உலக நாடுகளை பேராபத்தில் துரத்தி வரும் கொரனோ வைரஸ் மக்களை

துரத்திய வண்ணம் இருக்க தற்பொழுது ,ஈராக்கில் பறவை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது ,

இதனால் இதுவரை சுமார் அறுபதாயிரம் கோழிகள் படு கொலை செய்யப் பட்டுள்ளன


இந்த நோயானது ஐரோப்பிய நாடுகளிலும் ஏற்பட கூடும் என்ற அச்சம் நிலவுகிறது

அவ்விதம் ஏற்பட்டால் ,கொலண்டில் இருந்தே அதிகமான கோழிகள் லண்டனுக்குள் இறக்குமதி செய்ய படுகின்றன

அவ்விதம் நோக்கின் லண்டனில் உள்ள தமிழர் கோழிக் கடைகள் மூடு விழா

காணும் நிலை மீளவும் ஏற்பட கூடிய பேராபத்து நிலவ கூடும் என்ற ஐயம் எழுந்துள்ளது

வேகமாக பரவி வரும்
வேகமாக பரவி வரும்
      Posted in இலங்கை செய்திகள்

      இலங்கையில் பரவும் புதிய வகை காய்ச்சால் – பலர் பாதிப்பு

      இலங்கையில் பரவும் புதிய வகை காய்ச்சால் – பலர் பாதிப்பு

      இலங்கையில் புதிய வகையான காய்ச்சல் ஒன்று பரவி வருகிறது ,இது நிமோனியா

      போன்ற ஒன்று என தெரிவிக்க படுகிறது,கடந்த சில நாட்களில் மேற்கொள்ள

      பட்ட கொரனோ சோதனைகளின் பொழுதே இந்த விடயம் கண்டறிய பட்டுள்ளது

        இவ் வகையான புதிய வைரஸ் காய்ச்சலில் சிக்கி பாதுகாப்பு படைகளும் பாதிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது

        எனினும் இதுவரை இந்த வைரஸ் காய்ச்சல் தொற்று எந்த வகையை சேர்ந்தது என்பது தொடர்பில் தெரியவரவில்லை

        கொரனோ நோயானதும் இவ்வகையான தொற்று ஒன்றால் பரவி வருகிறது இங்கே சுட்டி காட்ட தக்கது

        இலங்கையில் பரவும் புதிய
        இலங்கையில் பரவும் புதிய