Posted in இலங்கை செய்திகள்

கத்தியால் குத்தி ஒருவர் படுகொலை

கத்தியால் குத்தி ஒருவர் படுகொலை

இலங்கை வெல்லம்பிட்டிய காவல்துறை பகுதியில் இரு பேக்கரி ஊழியர்களுக்கு

இடையில் இடம்பெற்ற சண்டையை அடுத்து ஒருவர் குத்தி படுகொலை செய்ய பட்டுளளார்

குற்றவாளி கைது செய்ய பட்டு விசாரணைக்கு உட்படுத்த பட்டுளளார் ,பகைமை காரணமாக இந்த கொலை


இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது

    Posted in இலங்கை செய்திகள்

    ஜனாதிபதி செயலகத்தை சுற்றி பாதுகாப்பு அதிகரிப்பு

    ஜனாதிபதி செயலகத்தை சுற்றி பாதுகாப்பு அதிகரிப்பு

    இலங்கை ஆளும் ஜனாதிபதி கோட்டாவுக்கு எதிராக மக்கள் தொடர்ந்து வீதி இறங்கி போராடி வருகின்றனர்

    இவர்களின் இந்த போராட்டங்களுக்கு மதிப்பளித்து பதவி விலகிட ஆளும் ஆட்சியாளர்கள் மறுத்து வருகின்றனர்

    இவ்வாறான நிலையில்மக்கள் தன்னெழுச்சி வெடித்து பறக்கும் வேளையில் ,காலிமுக திடலை சுற்றி பாதுகாப்பு பல படுத்த பட்டுள்ளது

    அப்பகுதியில் பணி புரியும் பணியாளர்கள் வாகனங்கள் யாவும் தீவிர சோதனைக்கு உள்ளாக்க பட்ட பின்னர் அனுமதிக்க படுகின்றனர்

    இது மேலும் மக்களை சீற்றம் உற வைத்துள்ளது

      கொத்து குண்டு தாக்குதலில் 12 சிறுவர்கள் மரணம் - சவூதி அட்டூழியம்
      Posted in இலங்கை செய்திகள்

      ஒருவர் சுட்டுக் கொலை – உருவெடுக்கும் கலாச்சாரம்

      ஒருவர் சுட்டுக் கொலை – உருவெடுக்கும் கலாச்சாரம்

      இலங்கை பெலியத்த பகுதியில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டு

      தாக்குதலில் சிக்கி 42 வயதுடைய நபர் ஒருவர் பலியாகியுள்ளார்

      ஒருவாரத்தில் இடம்பெற்ற மூன்றாவது துப்பாக்கி சூட்டு தாக்குதல் இதுவாக அமைய பெற்றுள்ளது

      இலங்கையில் ஆயுதங்கள் வைத்திருந்தால் அவர்களுக்கு இருபது வருட சிறை

      தண்டனை வழங்க படும் என்பது விதியாக உள்ள நிலையிலும் இவ்விதமான சம்பவங்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளமை குறிப்பிட்ட தக்கது

        Posted in இலங்கை செய்திகள்

        விடுதியில் தங்கிய பளை மாணவி -சடலமாக மீட்பு

        விடுதியில் தங்கிய பளை மாணவி -சடலமாக மீட்பு

        யாழ்ப்பாணம், கலட்டிச் சந்தியில் உள்ள தங்குமிடத்தில் இருந்து பல்கலைக்கழக

        மாணவி ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

        தவறான முடிவெடுத்து அந்த மாணவி உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார் என்று தெரிய வருகின்றது.

        உயிரிழந்தவர் பளையைச் சேர்ந்தவர் என்றும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக

        கலைப்பீட இரண்டாம் வருட மாணவி என தெரியவந்துள்ளது.

        உயிரிழப்புக்கான காரணம் தெரியவராத நிலையில் யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக

        விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

          Posted in Uncategorized

          யாழில் கோடாரி வெட்டு – ரவுடிகள் அட்டூழியம்

          யாழில் கோடாரி வெட்டு – ரவுடிகள் அட்டூழியம்

          யாழ்ப்பாணம் பருத்துறை திக்கம் பகுதியில் 44 வயதான நபர் மீது கோடரி வெட்டு

          தாக்குதல் இடம்பெற்றுள்ளது

          மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரே இந்த தாக்குதலை நடத்தி விட்டு தப்பி

          சென்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது


          பாதிக்க பட்டவர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டுளளார்

            Posted in உலக செய்திகள்

            உணவகத்தில் வெடித்த மனித குண்டு – உடல் சிதறி பலர் பலி

            உணவகத்தில் வெடித்த மனித குண்டு – உடல் சிதறி பலர் பலி

            சோமாலிய தலைநகர் பகுதியில் தற்கொலை குண்டு தாரி நடத்திய தாக்குதலில் சிக்கி


            ஏழுபேர் உடல் சிதறி பலியாகினர் மேலும் எட்டுக்கு மேற்பட்டவர்கள் பாடுகாயமடைந்துள்ளனர்

            உணவகம் முற்றாக சேதமடைந்துள்ளது

            இந்த தாக்குதலானது Mogadishu’s Lido Beach பகுதியில் இடம்பெற்றுள்ளது ,


            சம்பவத்தை அடுத்து விசேட இராணுவத்தினர் குவிக்க பட்டு தேடுதல் முடுக்கி விட பட்டுள்ளது

              Posted in இலங்கை செய்திகள்

              இலங்கையில் சீமெந்தின் விலை பை ஒன்றுக்கு 450 ஆக அதிகரிப்பு

              இலங்கையில் சீமெந்தின் விலை பை ஒன்றுக்கு 450 ஆக அதிகரிப்பு

              இலங்கையில் சீமந்தின் விலை பை ஒன்றுக்கு 450 ரூபாவால் அதிகரிக்க பட்டுள்ளது

              ,தற்போது ஒரு பய் மூவாயிரம் ரூபாவுக்கு விற்க படுகிறது

              நாள் தோறும் இலங்கையில் பொருள்களின் விலைகள் அதிகரிக்க பட்டு வருவதால் மக்கள் மேலும்


              கொந்தளித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

                Posted in இலங்கை செய்திகள்

                எண்ணெய் பவுசருக்கு தீவைத்தவர் கைது

                எண்ணெய் பவுசருக்கு தீவைத்தவர் கைது

                இலங்கை ரம்புகளை பகுதியில் எண்ணெய் பவுசருக்கு தீவைத்த இருபத்தி எட்டு வயது

                நபர் ஒருவர் உளவுத்துறையால் கைது செய்ய பட்டுள்ளார்

                கைதானவர் தீவிர விசாரனைக்கு உட்படுத்த பட்டுள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர்

                  Posted in Uncategorized

                  மீள உருவெடுக்கும் எபோலா நோய் – பீதியில் உலகம்

                  மீள உருவெடுக்கும் எபோலா நோய் – பீதியில் உலகம்

                  உலக நாடுகளை அச்சுறுத்திய எபோலா காச்சல் நோயானது மீள கொங்கோவில் தற்போது ஆரம்பித்துள்ளது

                  இந்த நோயினால் பாதிக்க பட்ட டசின் கணக்கானோர் அடையாளம் காணப்பட்ட

                  நிலையில் இந்த நோயானது மிக வேகமாக பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது

                  இந்த நோயின் தாக்கம் மனித உடலின் தசைகள் உதிர்ந்து விழுதல் தன்மை கொண்டது

                  ,
                  நடந்து செல்ல சதைகள் வீழ்ந்து நொறுங்கும் தன்மை கொண்டது என தெரிவிக்க படுகிறது

                    Posted in Uncategorized

                    உயிரோடு தீயில் கருகி 100 பேர் மரணம்

                    உயிரோடு தீயில் கருகி 100 பேர் மரணம்

                    நையீரியா கடற்கரை பகுதி ஒன்றில சட்டவிரோத ஒயில் வியாபர ,அகழ்வில் ஈடுபட்ட சுமார் நூறு பேர்


                    தீயில் கருகி இறந்துள்ள சமபவம் இடம் பெற்றுள்ளது

                    அரச தகவலின் படி ,படகில் வந்திறங்கி சட்டவிரோத செயல் பாட்டில் ஈடுபட்ட நூறு

                    ஊழியர்களே இவ்விதம் மரணமாகியுள்ளதாக தெரிவிக்க படுகிறது

                    அங்கு இடம் பெற்ற வெடி விபத்தில் சிக்கி எழுந்த தீயில் உயிரோடு கருகி அனைவரும் இறந்துள்ளனர்


                    இது குறித்த விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளது

                      Posted in சினிமா

                      விஜய் 66 படத்தில் இணையும் பிரபல நடிகர்

                      விஜய் 66 படத்தில் இணையும் பிரபல நடிகர்

                      விஜய் நடித்து வரும் ’தளபதி 66’ திரைப்படத்தில் விஜய்யின் சகோதரராக நடிக்கும் நடிகர் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

                      விஜய் 66 படத்தில் இணையும் பிரபல நடிகர்
                      விஜய்


                      பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து, விஜய் தற்போது தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார். வம்சி இயக்கும் இப்படத்தை தில் ராஜூ தயாரிக்கிறார். தமன்

                      இசையமைக்கிறார். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் முடிவடைந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக செட் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

                      இந்த படத்தில் விஜய்யின் சகோதரராக மோகன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், இந்த படத்தில் நடிக்கவில்லை என்பதை மோகன் உறுதி

                      செய்தார். இதனை அடுத்து தற்போது 2000ஆம் ஆண்டுகளில் பிரபல நடிகராக வலம்

                      வந்த ஷாம் இந்த படத்தில் விஜய்யின் சகோதரராக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

                      நடிகர் ஷாம், 12 பி, இயற்கை, தில்லாலங்கடி, உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.


                      விஜய் நடித்த ‘குஷி’ படத்தில் விஜய்யின் நண்பர்களில் ஒருவராக ஷாம் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

                        Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                        லண்டனில் – பேய் பிடித்த மனைவியை வெட்டி கொன்ற கணவன்

                        லண்டனில் – பேய் பிடித்த மனைவியை வெட்டி கொன்ற கணவன்

                        பிரிட்டன் Godwin Road, Margate பகுதியில் 56 வயதுடைய நபர் ஒருவர் தனது மனைவியை

                        கழுத்தில் வெட்டி கொலை புரிந்துள்ளார் ,பின்னர் அவரது நெஞ்சிலும் குத்தியுள்ளார்

                        தனது மனைவிக்கு பேய் பிடித்துள்ளது என்ற முதன்மை குற்ற சாட்டை முன்வைத்து இவர் இந்த கொலையினை புரிந்துள்ளாராம்

                        கழுத்தை வெட்டி கொலை செய்த பின்னர் காவல்துறைக்கு அழைப்பினை

                        மேற்கொண்டு தனது மனைவியை கொன்று விட்டதாக தெரிவித்துள்ளார் ,போலீசார்

                        ஏன் கொன்ராய் என வினவியதுக்கு, அதற்கு பல காரணங்கள் உள்ளது என தெரிவித்துள்ளார்

                        வீடு வந்து கதவை தட்டிய பொழுது இரத்த வெள்ளத்தில் கிடந்த மனைவியை மீட்டனர் ,ஆனால் அவர் இறந்து விட்டார்

                        தற்போது கொலையாளி மன நிலை பாதிக்க பட்ட
                        நிலையில் இந்த கொலையினை புரிந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது

                          Posted in இலங்கை செய்திகள்

                          இந்தியவிடம் மேலும் 500 மில்லியன் டொலர் கடன் வாங்கும் இலங்கை

                          இந்தியவிடம் மேலும் 500 மில்லியன் டொலர் கடன் வாங்கும் இலங்கை

                          இலங்கையில் ஏற்பட்டுள்ள தற்கால பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உலக

                          நாடுகளிடம் ஓடி ஓடி இலங்கை கடனை வாங்கி குவிகிறது

                          தற்போது ஐநூறு மில்லியன் டொலரினை இலங்கைக்கு இந்தியா மேலும் கடனாக வழங்க உள்ளது

                          இந்த டொலர் கடன் ஒயில் இறக்குமதிக்கு பயன் படுத்த படும் என இலங்கை

                          நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்

                            Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                            லண்டன் – டோவர் பகுதியில் சிக்கிய கஞ்சா பண்ணை

                            லண்டன் – டோவர் பகுதியில் சிக்கிய கஞ்சா பண்ணை

                            லண்டன் Folkestone Road, Dover பகுதியில் உள்ள வீடொன்றை போலீசார் திடீரென சுற்றி

                            வளைத்தனர் ,அப்பொழுது நகு 180 கஞ்சா செடிகள் மற்றும் அது வளர்க்க பயன் படுத்த பட்ட உபகரணங்கள் என்பன மீட்க பட்டன

                            சட்டவிரோதமாக மேற்கொள்ள பட்டு வந்த இந்த வியாபாரம் தடுத்து நிறுத்த பட்டுள்ளது

                            பொலிசாருக்கு கிடைக்க பெற்ற புலனாய்வு தகவலை அடுத்து மேற்கொள்ள பட்ட

                            சுற்றிவளைப்பில் இரண்டு லட்சம் பவுண்டுகள் பெறுமதியான கஞ்சா பண்ணையே இவ்வாறு சிக்கியுள்ளது

                            தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்க பட்டு வருகின்றன

                              Posted in இலங்கை செய்திகள்

                              இலங்கையில் உணவகங்கள் முப்பது வீதமானவை அடித்து பூட்டு

                              இலங்கையில் உணவகங்கள் முப்பது வீதமானவை அடித்து பூட்டு

                              இலங்கையில் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக நாடளாவிய ரீதியில் இயங்கி வந்த

                              முப்பது வீதமான உணவகங்கள் அடித்து பூட்ட பட்டுள்ளன

                              மேலும் இந்த தட்டுப் பாடு தொடர்ந்தால் பேக்கரி உற்பத்தியிலும் பாதிக்க படும் நிலை

                              ஏற்படும் என தெரிவிக்க படுகிறது

                              இந்த உணவகங்கள் மூடப்பட்டதால் அரசுக்கு பல மில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளதாக

                              சுட்டி காட்ட பட்டுள்ளது

                                Posted in இலங்கை செய்திகள்

                                இலங்கைக்கு சீனா அவசர உதவிகளை வழங்கும் – சீனா உறுதி

                                இலங்கைக்கு சீனா அவசர உதவிகளை வழங்கும் – சீனா உறுதி

                                இலங்கைக்கு கடனை அள்ளி வழங்கி மத்திய வங்கியை இலங்கை வரலாற்றில் முதன்

                                முதலாக கறுப்பு பட்டியலில் சீனா இணைத்தது

                                தற்போது எழுந்துள்ள நெருக்கடி நிலையில் இலங்கைக்கு சீனா மேலும் உதவிகளை வழங்கும் என தெரிவித்துள்ளது

                                சீனாவின் இந்த உதவி திட்டம் இலங்கைக்கு மேலும் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்பது வெளிப்படை

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  ஜனாதிபதி முறையுடன் மாகாணசபைகளும், விகிதாசார தேர்தல் முறையும் போக வேண்டும்-மனோ கணேசன்

                                  ஜனாதிபதி முறையுடன் மாகாணசபைகளும், விகிதாசார தேர்தல் முறையும் போக வேண்டும் என்ற கருத்து ஆபத்தானது

                                  • மனோ கணேசன்
                                    நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை அகற்றப்படுமானால், 13ம் திருத்தம் அதனோடு மாகாணசபைகளும், அதனோடு விகிதாரசார தேர்தல் முறைமையும் போக வேண்டும்” என்ற கருத்து அரங்குக்கு மெல்ல வருகிறது. இது ஆபத்தானது. கண்களை விற்று சித்திரம் வாங்க நாம் தயார் இல்லை. அரசியலமைப்பை திருத்துகிறோம் என்ற போர்வையில், இன்றைய அரசியலமைப்பின் கீழ் இருக்கும் இந்த குறைந்தபட்ச உரிமைகள் மீது, எவரும் கை வைத்தால், அதற்கு எதிராக தமிழ் முற்போக்கு கூட்டணி உயிரை கொடுத்து போராடும்.

                                  வடக்கு கிழக்கின் ஏனைய தமிழ் கட்சிகளும், முஸ்லிம் கட்சிகளும் இந்த இரண்டு விவகாரங்கள் தொடர்பில் தமது நிலைப்பாடுகளை பகிரங்கமாக அறிவித்தால், ஒட்டு

                                  மொத்த தமிழ், முஸ்லிம் கட்சிகளின் நிலைப்பாடுகளை நாம் அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் நாட்டுக்கு அறிவிக்கலாம் என ஜனநாயக மக்கள் முன்னணி – தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

                                  இதுபற்றி மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,

                                  அரசில் இருந்து விலகி விட்டதாக கூறும் இரத்தின தேரர் “நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை அகற்றப்படுமானால், 13ம் திருத்தம் அதனோடு மாகாணசபைகளும்,

                                  அதனோடு விகிதாரசார தேர்தல் முறைமையும் போக வேண்டும்” என, கட்சி தலைவர்கள் கூட்ட்டத்தில் கூறினார்.

                                  அவரை இறுக்கமாக இடைமறித்து “எந்த அரசியலமைப்பு திருத்தம் வந்தாலும், விகிதாசார தேர்தல் முறைமை, 13ம் திருத்தம் என்ற குறைந்தபட்ச அதிகாரபரவலாக்கல் ஆகியவற்றின் மீது கைவைக்க நாம் விட மாட்டோம்.” என்று நான் பதில் சொன்னேன்.

                                  இந்த நிலைப்பாட்டிலேயே ஐக்கிய மக்கள் கூட்டணியின் சகோதர பங்காளி கட்சிகளான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்

                                  ஆகியவையும் உறுதியாக இருக்கின்றமையை அக்கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

                                  இந்த பிக்கு எம்பியின் இந்நிலைப்பாடு அங்கு வேறு சிலரின் மனதுகளுக்குள்ளும் ஒளிந்து இருப்பது எனக்கு தெரியும். கடந்த சில தினங்களாக நடைபெறும் கட்சி தலைவர்கள் கலந்துரையாடல்களில், இந்த கருத்து நேரடியாகவும், மறைமுகமாகவும், பல பெரும்பான்மை கட்சி அரசியல் கட்சி தலைவர்களால், பிரதிநிதிகளால் கூறப்பட்டது.

                                  இதுபற்றிய பேச்சு, நேற்று நடந்த கட்சி தலைவர் கூட்டத்தில் மீண்டும் வந்தது. நான் மீண்டும் சொன்னேன். “விகிதாசார தேர்தல் முறைமை, மாகாணசபைகளை அகற்றித்தான் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை அகற்ற முடியுமென்றால்,

                                  நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை முழுமையாக அகற்ற வேண்டாம். 20ம் திருத்தத்தை முழுமையாக அகற்றி 19ம் திருத்தத்தை மீண்டும் கொண்டு வருவோம். அதில் ஜனாதிபதி படுபலவீனமாகி விடுவார்.”

                                  “அதை விடுத்து, விகிதாசார தேர்தல் முறைமை, 13ம் திருத்தம் என்ற குறைபட்ச அதிகாரபரவலாக்கல் ஆகியவற்றின் மீது கை வைத்தால், அதற்கு எதிராக நான் என் உயிரை கொடுத்தாவது போராடுவேன்.” என்று கட்சி தலைவர்கள் கூட்டத்தில் நான்

                                  கூறியுள்ளேன். மேலும் இருக்கும் பிரச்சினைகளிலிருந்து விடுபடுவதை விடுத்து, மேலும் புதிய பிரச்சினைகளை உருவாக்க வேண்டாம் என சபாநாயகரிடம் நான் கூறினேன்.

                                  எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, இதுபற்றிய தன் கருத்தை நேற்று முதல்நாள் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் மிக தெளிவாக அறிவித்தார். “நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை முழுமையாக அகற்ற வேண்டும் என நாம் சொன்னாலும்,

                                  விகிதாசார தேர்தல் முறைமையையும், 13ம் திருத்தத்தையும் மாற்ற நாம் உடன்பட மாட்டோம். இவை தொடர்பாக எங்கள் பங்காளி கட்சிகளுக்கு நாம்

                                  உறுதியளித்துள்ளோம்.” என்று சஜித் பிரேமதாச, ஐக்கிய மக்கள் கூட்டணியின் சார்பாக கூறினார். இது ஒரு தேசிய கட்சி/கூட்டணி ஒன்றின் தலைவரின் மிக முற்போக்கான நிலைப்பாடாகும்.

                                  13ம் திருத்தம் தொடர்பில் தமக்கு அக்கறை இல்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் நண்பர் கஜேந்திரகுமார் எம்பி என்னிடம் கூறியுள்ளார்.

                                  ஆனால், விகிதாசார தேர்தல் முறைமையும், ஏதோ ஒருவகையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையும் தொடர வேண்டுமென்பதே தமது கட்சியின் நிலைப்பாடு என அவர் மேலும் கூறியுள்ளார்.

                                  13ம் திருத்தம் மூலமான மாகாணசபைகள், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மட்டுமல்ல, முழு நாட்டிலும் ஒன்பது மாகாணங்களிலும், குறிப்பாக மத்திய, மேல்,

                                  சப்ரகமுவ, ஊவா மாகாணங்களிலும் உள்ளன. ஆகவே அதுபற்றிய தமிழ் முற்போக்கு கூட்டணியின் நியாயமான நிலைபாட்டை வடக்கு கிழக்கு தமிழ் கட்சிகள் புரிந்துகொண்டிருப்பதாக நான் நினைக்கிறேன்.

                                  கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதியாக கலந்துக்கொள்ளும் நண்பர் சுமந்திரன் எம்பி, விகிதாசார தேர்தல் முறைமை, 13ம் திருத்தம் ஆகியவை தொடர்பில் எமது நிலைப்பாடுகளுடன் உடன்படுவதாக

                                  கூறுகிறார். ஆனால், அவரது சில கருத்துகள், “விகிதாசார தேர்தல் முறைமை, 13ம் திருத்தம்” ஆகியவற்றை தேசிய தளத்தில் தேவையற்ற சிக்கல்களில் கொண்டு போய் மாட்டி விடுமோ என்ற சந்தேகம் எனக்குள் ஏற்பட்டுள்ளது. ஆகவே இத்தகைய

                                  தேவையற்ற முரண்பாடுகளை தவிர்த்து கொள்ளும் நோக்கில், தமிழ் தேசிய கூட்டமைப்பு, இந்த இரண்டு விவகாரங்கள் தொடர்பில் தமது இன்றைய தெளிவான நிலைப்பாடுகளை அறிவிக்க கோருகிறேன்.

                                  வடக்கு கிழக்கின் ஏனைய தமிழ் கட்சிகளும் இந்த இரண்டு விவகாரங்கள் தொடர்பில் தமது நிலைப்பாடுகளை பகிரங்கமாக அறிவித்தால், ஒட்டு மொத்த தமிழ், முஸ்லிம்

                                  கட்சிகளின் நிலைப்பாடுகளை நாம் அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் நாட்டுக்கு அறிவிக்கலாம்.

                                    Posted in Uncategorized

                                    ஏமனில் வீழ்ந்து நொறுங்கிய இராணுவ சாட்டிலைட் – சுட்டு வீழ்த்த பட்டதா ..?

                                    ஏமனில் வீழ்ந்து நொறுங்கிய இராணுவ சாட்டிலைட் – சுட்டு வீழ்த்த பட்டதா ..?

                                    ஏமான் நாட்டு இராணுவத்தின் செய்மதி ஒன்று வீழ்ந்து நொறுங்கியுள்ளது


                                    இந்த் செய்மதி சுட்டு வீழ்த்த பட்டு இருக்கலாம் என நம்ப படுகிறது

                                    எனினும் ஏமன் இராணுவம் இது தொடர்பில் இதுவரை எதனையும் வெளியிடவில்லை

                                    என்பது குறிப்பிட தக்கது

                                      Posted in Uncategorized உலக செய்திகள்

                                      இஸ்ரேலுக்கு ரசியா எச்சரிக்கை – முறுகல் உச்சம்

                                      இஸ்ரேலுக்கு ரசியா எச்சரிக்கை – முறுகல் உச்சம்

                                      உக்கிரேனுக்கு இஸ்ரேல் அரசு ஆயுதங்களை வழங்கி வருகிறது ,இஸ்ரேலின் இந்த

                                      முடிவிற்கு ரசியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது

                                      தொடர்ந்து இஸ்ரேல் இவ்விதம்ஸ் செயல்பட்டால் அது விளைவுகளை சந்திக்கும் என ரசியா எச்சரித்துள்ளது .


                                      உக்கிரேன் ரசியாவிடம் வீழ்ச்சியுறும் நிலையில் உள்ள போதும், சர்வதேச முக்கிய நாடுகள்


                                      ஆயுதங்களை அள்ளி வழங்கி வருகின்றமை குறிப்பிட தக்கது.

                                        Posted in Uncategorized

                                        அமெரிக்காவில் துப்பாக்கி சூடு – ஐவர் காயம்

                                        அமெரிக்காவில் துப்பாக்கி சூடு – ஐவர் காயம்

                                        அமெரிக்கா வாஷிங்க்டன் பகுதியில் நடத்த பட்ட துப்பாக்கி சூட்டில் சிக்கி ஐவர் படுகாயமடைந்துள்ளனர்


                                        பாடசாலையில் சிறார்களை மீட்டு வந்தவர்களே இந்த தாக்குதலில் காயமடைந்துள்ளனர்

                                        இந்த் சூட்டு சம்பாவத்தை அடுத்து மக்கள் சிதறி ஓடினார்

                                        இது குறித்து போலீசார் விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உளளனர்