Posted in இலங்கை செய்திகள்

கோட்டா ரணில் பதவி விலகும்வரை ஜனாதிபதி மாளிகையில் தரித்து நிற்கும் மக்கள்

கோட்டா ரணில் பதவி விலகும்வரை ஜனாதிபதி மாளிகையில் தரித்து நிற்கும் மக்கள்

இலங்கையின் மக்களாட்சி தலைவரான கோட்டபாய ரணில் பதவி விலகும்வரை நாம் ஜனாதிபதி மாளிகையில் தரித்து நிற்போம் என கூறியவாறு மக்கள் பெரும் திரளில் அங்கே நிற்கின்றனர் .

எதிர்வரும் பதின்மூன்றாம் திகதி இலங்கை ஜனாதிபதி கோட்டாபய பதவி விலகுவர் என அறிவித்துள்ள நிலையில் மக்கள் அதனை ஏற்காது தொடர்ந்தும் அலரிமாளிகையில் மற்றும் ஜனாதிபதி செயலகம் அருகில் காத்துள்ளனர்.

இராணுவம் பொலிசார் மக்களுடன் முறுகளில் ஈடுபட்டால் அதுவே பெரும் வன்முறை மோதலாக வெடிக்கும் நிலை காணப்படுகிறது.

முட்டாள் கோட்டாவும் பொம்மை ரணிலும் எமக்கு வேண்டாம் என்கிறது மக்கள் மன்றம் ,தம்மை எதிர்த்தவர்களை பழிவாங்க துடிக்கிறது இந்த அரசியல் தலைகள் .

Posted in இலங்கை செய்திகள்

இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் சவேந்திர சில்வா வேண்டுதல்

இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் சவேந்திர சில்வா வேண்டுதல்

இலங்கை இராணுவத்தின் இராணுவத் தளபதியாக விளங்கிய சவேந்திர சில்வா இராணுவத்தினர் மீது மக்கள் தாக்குதல் நடத்த வேண்டாம் என கண்டிப்பான வேண்டுதலை விடுத்துள்ளனர்.

கொதிப்பில் மீளவும் மக்கள் இலங்கை இராணுவத்தின் சமீப கால மக்கள் மீதான வன்முறை தாக்குதல் தொடர்பில் எவ்வித கருத்தையும் தெரிவிக்காது இவ்விதம் சவேந்திர சில்வா அறிவித்துள்ளது மக்கள் மத்தியில் மீளவும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது .

தொடர்ந்து செல்லும் அரசியல்வாதிகளிற்கு எதிரான மக்கள் போராட்டத்தை இவரது பேச்சு மீண்டும் தூண்டி விடும் என எதிர் பார்க்க படுகிறது

    Posted in இலங்கை செய்திகள்

    ஊடகவியலாளர்களை தாக்கப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறோம் சஜித்

    ஊடகவியலாளர்களை தாக்கப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறோம் சஜித்

    பிரதமர் ரணிலின் இல்லத்திற்கு முன்னால் ஊடகவியலாளர்களை இலக்காக் கொண்டு தாக்கப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறோம்*!

    பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இல்லத்திற்கு முன்பாக அரச வன்முறையைப் பயன்படுத்தி சிரச ஊடகவியலாளர்கள் நால்வரை இலக்காக்

    கொண்டு அவர்கள் மீது பொலிஸாரும் பாதுகாப்புப் படையினரும் நடத்திய கொடூரமான மனிதாபிமானமற்ற தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

    அது மட்டுமன்றி, தாக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களைக் கூட விரட்டி விரட்டி தாக்கும் அளவுக்கு பாதுகாப்புப் படையினர் மனிதாபிமானமற்றவர்களாக மாறிவிட்டனர்.

    ஊடகவியலாளர்களை தாக்கப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறோம் சஜித்

    மக்களுக்கு தகவல் அறியும் உரிமையை உறுதி செய்வதற்காக நாகரீகமான ஊடகப் பயன்பாட்டில் ஈடுபட்ட மற்றும் அது தொடர்பாக மக்களின்

    நன்மதிப்பைப் பெற்ற ஊடகவியலாளர்கள் குழுவொன்று குறிவைக்கப்பட்டு தாக்கப்பட்டமை அதிகாரம் வாய்ந்த ஜனாதிபதியை நான்கு சுவர்களுக்குள்

    முடக்கி வீட்டுக்கு அனுப்பிய மக்கள் போராட்டத்திலிருந்து பிரதமர் இன்னும் பாடம் கற்கவில்லை என்பதையே இந்தக் கோழைத்தனமான தாக்குதல் உணர்த்துகிறது.

    மக்கள் இறையாண்மை மக்களிடமே உள்ளது என்பதை முன்னெப்போதையும் விட அதிகமாக நிரூபிக்கப்படும் இச்சூழ்நிலையிலும் கூட இவ்வளவு

    கொடூரமாக நடந்துகொள்ள பாதுகாப்புப் படையினருக்கு பனிப்புரை வழங்கியது யார் என்பதும், சிரச ஊடகவியலாளர்களையே குறிவைத்து

    தாக்குதலை நடத்தும் தேவை யாருக்குள்ளது என்ற விடயத்தில் பலத்த சந்தேகம் எழுந்துள்ளது.

    உடனடியாக பாரபட்சமற்ற விசாரணையை மேற்கொண்டு குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும்.

    எந்தவொரு சக்திவாய்ந்த அதிகாரமும் மக்கள் சக்தியால் தோற்கடிக்கப்படும் என்பதை சட்டவிரோத பிரதமர் அறிந்திருக்க


    வேண்டும் என்பதோடு,நாடு அராஜக நிலைக்கு செல்ல வழிவகுக்காமல் அவர் உடனடியாக பதவி விலக வேண்டும்.

      Posted in பிரித்தானிய செய்தி

      லண்டனில் குத்துக் கரணம் அடித்த கார்

      லண்டனில் குத்துக் கரணம் அடித்த கார்

      லண்டன் Albert Road, Ashford. பகுதியில் வேகமாக பயணித்த கார் ஒன்று சாரதியின் கட்டு பாட்டை இழந்து குத்துக்கரணம் அடித்துள்ளது.

      தலைகீழாக கவிழ்ந்த காரில் இருந்தவர்கள் பலத்த காயங்களுடன் மீட்க பட்டு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .

      இந்த கார் விபத்தினால் அந்த வழி சாலை போக்குவரத்து சில மணி நேரம் தடை பட்டது.

      சம்பவம் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் அம்புலன்ஸ் என்பன பாதிக்க பட்டவர்களை மீட்டு மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர் .

      குத்துகரணம் அடித்து கவிழ்ந்த கார் விபத்து தொடர்பில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்.

      லண்டனில் கார்கள் இப்படியும் குத்துகாரணம் அடிக்கும் என்பது இதன் மூலம் காணமுடிகிறது .

        Posted in பிரித்தானிய செய்தி

        லண்டனில் வீட்டுக்குள் புகுந்த கார்

        லண்டனில் வீட்டுக்குள் புகுந்த கார்

        லண்டன் Hurst Road Bexley பகுதியில் சனிக்கிழமை கார் ஒன்று வீட்டுக்குள் நுழைந்துள்ளது .

        அந்த சாலை வழியாக வேகமாக பயணித்த கார் ஒன்று சாரதியின் கட்டு பாட்டை இழந்து வீட்டின் முன்பாக நிறுத்து வைத்திருந்த காரில் மோதி சிதறியது .

        இதன் பொழுது அந்த கார் அந்த வீட்டின் யன்னல் கதவுகளை உடைத்து உரசி சென்றது .

        எனினும் வீட்டின் உள்ளே இவ்வேளை இருந்த தாய் மகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படவில்லை.

        இந்த கோர விபத்தில் சிக்கி எவரும் பலியாகவில்லை .


        ஆனால் வீட்டின் மதில் மற்றும் யன்னல் கதவுகளை உடைந்துள்ளன. இவ்வேளை வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்க பட்டிருந்த கார் உட்பட கடும் சேதமடைந்துள்ளன.

        பிரிட்டனில் இவ்விதமான விபத்துக்கள் அதிகரித்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .

          Posted in இலங்கை செய்திகள்

          முட்டாள் கோட்டாவும் பொம்மை ரணிலும் எமக்கு வேண்டாம் மக்கள் முழக்கம்

          முட்டாள் கோட்டாவும் பொம்மை ரணிலும் எமக்கு வேண்டாம் மக்கள் முழக்கம்

          இலங்கையில் ஆளும் ஜனாதிபதி முட்டாள் கோட்டாவும் , பொம்மை பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவும் நமக்கு வேண்டாம் என மக்கள் குழு அறிவித்துள்ளது.

          ரணில் இலங்கையின் ஜனாதிபதியாக வர முடியாது ,மக்கள் ஆதரவு இன்றி பின் கதவால் பிரதமர் ஆன பொம்மை ரணிலும் எமக்கு தேவையில்லை.

          புதியவர் நியமிக்க பட வேண்டும். அவரும் 12 மதத்திற்கு பின்னர் தேர்தல் மூலம் தேர்வு செய்ய பட வேண்டும் என்கின்ற பல விடயங்களை மக்கள் குழு பரிந்துரைத்துள்ளது .

          நாடு தழுவிய ரீதியில் தமிழர் சிங்களவர்கள் முஸ்லீம்கள் என மக்கள் திரண்டு நடத்திய போராட்டம் காரணமாக இலங்கை பதட்டத்தில் உறைந்துள்ளது.


          கோட்டாபய ஜனாதிபதி இல்லை. அவரது குடும்பத்தில் அவன் ஒரு முட்டாள் .என தலைமை பிக்கு ஒருவர் கடுமையாக சாடினார்.

          அவர் பதுங்கு குழிக்குள் அல்லது இராணுவ முகாமில் மக்களுக்கு பயந்து மறைந்து உள்ளார் .

          இந்த முட்டாளும் பொம்மையும் எமக்கு வேண்டாம் என மக்கள் மன்றம் பகிரங்கமாக அறிவித்துள்ளது.

          இவர்கள் எங்கு பதுங்கி இருந்தாலும் உடனே பதவி விலகுவதாக அறிவிக்க வேண்டும் .

          இல்லை எனின் மக்களை எழுச்சி இதனை விட மோசமானதாக அமையும் என்கிறது மக்கள் குழு.

          கோட்டா மாளிகையை தேடி வந்தோம். ஆனால் அவர் அங்கிருந்து தப்பி விட்டார் .

          இதன் மூலம் மக்கள் சொல்ல வந்த செய்தியை அவர் புரிந்திருப்பார்.

          எனவே உடனே முட்டாளும் ,பொம்மையும் பதவி விலக வேண்டும் என இவர்கள் இடித்துரைத்துள்ளனர்.

          போர் கீரோ கோட்டா முட்டாளானர் ,அரசியல் சாணக்கியர் ரணில் பொம்மை ஆனார் .

          மக்கள் மன்றில் மனதில் நடந்த சகிப்பு தன்மை அற்று போனதன் வெளிப்பாடாக இவை காணப்படுகிறது

          இன்று இவர்களுக்கு நாளை நம்ம கிழட்டு சம்பந்தனுக்கும் சுமந்திரனுக்கும் இதுபோல நடக்கும் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.

            Posted in இலங்கை செய்திகள்

            கோட்டபாய பதவி விலகல் பட்டாசு கொளுத்திய காலிமுக திடல் மக்கள் video

            கோட்டபாய பதவி விலகல் பட்டாசு கொளுத்திய காலிமுக திடல் மக்கள் video

            இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச பதவி விலக கோரி மக்கள் மூன்று மாதங்களாக முன்னெடுத்த வந்த போராட்டம் இன்று வெற்றி பெற்றுள்ளது .

            கோட்டா பதவி விலகல் உறுதி படுத்த பட்டு அறிவிக்க பட்ட நிலையில் காலிமுக திடலில் கூடி இருந்த பல லட்சம் மக்கள் பட்டாசு கொளுத்தி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

            அவ்வாறான அந்த காட்சியை இதே காணொளியில் பார்த்து கொள்ளுங்கள்.

            இவர் காலிமுக திடல் போராட்ட களத்தில் இருந்து இன்றுவரை அந்த மக்களுடன் துணையாக நின்று குரல் வழங்கி வரும் முக்கிய தமிழராக இவர் கருதப்படுகிறார் என்பது குறிப்பிட தக்கது.

            இந்த காணொளியில் புதிய காட்சிகள் இதில் பார்க்கலாம்

              Posted in இலங்கை செய்திகள்

              தங்க நகை பணத்தை சுருட்டி கொண்டு தப்பி ஓடிய கோட்டா

              தங்க நகை பணத்தை சுருட்டி கொண்டு தப்பி ஓடிய கோட்டா

              இலங்கை ஜனாதிபதி கோட்டபாய இலங்கை கயானாவில் இருந்த தங்க நகைகள் மற்றும் பல மில்லியன் டொலர் பணம் என்பனவற்றை சுருட்டி கொண்டு நாட்டை விட்டு தப்பி ஓடியுள்ளார்.

              இவர் இலங்கையின் விமான நிலையத்தில் தயார் நிலையில் வைக்க பட்டுள்ள விமானம் மூலம் தப்பித்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .

              கோட்டாவின் தங்கம் மற்றும் பணம் என்பன கடற்படை கப்பலில் ஏற்ற பட்டு கொழும்பு துறைமுகத்தில் இருந்து அவை தப்பி சென்றுள்ளது.

              ஆயுத வியாபாரத்தில் ஈடுபட்ட கோட்டபாயாவின் கப்பல் ஒன்றில் இந்த தங்கம் மற்றும் பணம் என்பன இலங்கை நடுக் கடல் பகுதியில் வைத்து மாற்ற பட்டு வெளிநட்டு ஒன்றுக்கு எடுத்து செல்ல படலாம் என எதிர் பார்க்க படுகிறது.

              லிபியாவில் கடாபி,ஈராக்கில் சதாம் உசைன், ஆப்கனிஸ்தான் அதிபர் ஆகியோர் இவ்விதம் தங்கம் பணத்துடன் இறுதியில் தப்பிக்க இருந்ததும் தப்பித்து சென்றதும் வரலாறாக உள்ளது.

              அவ்விதமான வரலாற்று பட்டியலில் இலங்கை இனவாதியும் தமிழ் இனப் படு கொலையாளியுமான கோட்டபாயவும் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

              சிங்கள மக்களின் தனித்துவ ஆதரவு பெற்று ஆட்சிக்கு எறியவர்கள் இலங்கை என்ற நாட்டைன் சூறையாடி தமது குடும்ப வியாபாரத்தை ஆரம்பித்து நாட்டை பிச்சைக்காரர்கள் ஆக்கியுள்ளனர் .

              தங்க நகை பணத்தை சுருட்டி கொண்டு தப்பி ஓடிய கோட்டா

              ஐம்பது ஆண்டு ஆட்சி கனவு கலைந்து போனது .

              வீணாக விடுதலை புலிகளையும் அதன் மக்களையும் அழித்த பெரும் சாப கேடு இவர்களது குடும்பத்தை துரத்துகிறது .

              இப்பொழுது மகிந்த ராஜபக்ச குடும்பத்தை இலங்கையை விட்டே அதே மக்களினால் விரட்டியடிக்க பட்டுள்ள செயல் இலங்கை வரலாற்றில் பதிவாகியுள்ளது.

              மக்கள் போராட்டம் வெடித்து பறக்கும் இவ்வேளையில் தங்கம் பெரும் தொகை டொலருடன் நாட்டை விட்டு தப்பி ஓடிய கேவலம் கோட்டாவுக்கு ஏற்பட்டுள்ளது .

              புலிகளின் தலைவரை நாயை போல சுட்டு இழுத்து வந்தேன் என பெருமிதம் கொண்டாடிய கோட்டா அதை கேட்டு இரசித்த சிங்கள இனவாதிகள் இன்று அதே சிங்கள மக்களினால் நாயை போல விரட்டியடிக்க படும் வரலாறு இலங்கையில் எழுத பட்டுள்ளது.

              தவிர பவுத்த மத சங்கத்தின் சாபக்கேடுக்கும் கோட்டா பாயாவுக்கு ஏற்பட்டுள்ளது .

              இந்த நிகழ்வு இலங்கையில் ஆளும் இனி ஆளப்போகும் ஆட்சியாளர்களுக்கு ஒரு எச்சரிக்கை மணியாக அடிக்கும் .

              இவ்வேளை தமிழர்களை அணைத்து செல்ல மறுத்தால் அவர்கள் ஆட்சி அதிகாரம் இழந்து தவிக்கும் நிலைக்கு இலங்கை ஆட்சியாளர்கள் அமைச்சர்கள் செல்வார்கள்.


              இவ்வாறு எதிர்வரும் காலங்களில் வரலாறு புதிய வரலாற்றை எழுதும் காலம் இடம்பெறலாம் எனவும் எதிர் பார்க்கலாம்

                Posted in இலங்கை செய்திகள்

                மகிந்தா கோட்டா ரணில் வீடுகள் முற்றுகை அமைச்சர்கள் தப்பி ஒட்டம்

                மகிந்தா கோட்டா ரணில் வீடுகள் முற்றுகை அமைச்சர்கள் தப்பி ஒட்டம்

                இலங்கையில் ஆளும் ராஜபக்ச குடும்பம் முற்றாக பதவி விலக கோரி பல்லாயிரம் மக்கள் பேர் நாடு தழுவிய நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .

                தற்போது முன்னாள் பிரதமர் மகிந்த கோட்டபாய மற்றும் ரணில் வீடுகள் போராட்ட காரர்களினால் சுற்றிவளைக்க பட்டுள்ளது.

                பொலிஸாருக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் மக்கள் முறுகளில் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர்.

                தற்போது முக்கிய அமைச்சர்கள்,எம்பிக்கள் யாவரும் தமது வீடுகளை விட்டு வேறு இடங்களுக்கு தப்பி ஓடிய வண்ணம் உள்ளனர் .

                மகிந்தா கோட்டா ரணில் வீடுகள் முற்றுகை அமைச்சர்கள் தப்பி ஒட்டம்

                எரிபொருள் மற்றும் போக்குவரத்துக்கு அமைச்சர் வீடுகள் முற்றுகையிடலாம் என்பதால் அவர்களது வீடுகளுக்கு முன்பாக இராணுவம் பொலிசார் குவிக்க பட்டுள்ளனர்.

                அச்சத்தில் ராஜபக்ச குடும்பம்

                கோபத்தோடு கொதித்தெழுந்த மக்கள் ஆக்கிரோஷமாக போராட்டத்தை முன்னெடுத்த சென்ற வண்ணம் உள்ளனர் .

                வெடித்து பறக்கிறது .மக்கள் போராட்டம் மக்கள் களமுனைக்கு அதிகமாக வந்த வண்ணம் உள்ளனர் .

                இலங்கை ஆட்சிகவிழ்க்க படும் ஆட்டம் ஆரம்பிக்க பட்டுள்ளது .உலக ஊடகங்கள் சிலவற்றில் நேரலையாக இலங்கை காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்படுகிறது

                Posted in இலங்கை செய்திகள்

                கடற்படை கப்பல்களில் இந்தியா தப்பி ஓடிய முக்கிய நபர்கள் video

                கடற்படை கப்பல்களில் இந்தியா தப்பி ஓடிய முக்கிய நபர்கள்

                இலங்கை அரசியல்வாதிகளுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருவதால் கொழும்பு துறைமுகத்தில் தரித்து நின்ற இரண்டு சிங்கள கடல் படை கப்பல்கள் மூலம் முக்கிய நபர்கள் தப்பி ஒடியுள்ளனர் .

                கயபாகு , சித்துல, என்ற சிங்கள கடல் படையின் அதிவேக கப்பல்கள் மூலம் இவர்கள் தப்பி ஓடியுள்ளனர் .

                இந்த முக்கிய நபர்கள் இந்தியாவின் முக்கிய பகுதிக்கு இந்த போர் கப்பல் மூலம் தப்பி சென்று கொண்டிருப்பதாக சமுக வலைதளத்தில் காட்சிகள் வெளியாகியுள்ளன .


                கொழும்பு துறைமுகத்தில் பணியாற்றும் ஒருவர் தனது கைபேசியில் தப்பி ஓடும் முக்கிய நபர்களை பதிவாக்கி வெளியிட்டுள்ளார் .

                இதுவே தற்போது சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது .

                துப்பாக்கி குண்டுகளுக்கு தப்பினாலும் மக்கள் கைகளில் உள்ள கைபேசி கமராவுக்கு தப்ப முடியாது அரசியல்வாதிகள் திணறிய வண்ணம் உள்ளனர்.

                  Posted in இந்தியா செய்திகள் சினிமா

                  நடிகையுடன் ஓட்டலில் தங்கிய நடிகர் செருப்பால் அடிக்க வந்த மனைவி

                  நடிகையுடன் ஓட்டலில் தங்கிய நடிகர் செருப்பால் அடிக்க வந்த மனைவி

                  கொட்டல் ஒன்றில் நடிகரொருவருடன் நடிகை தங்கி இருந்ததை அறிந்த மனைவி நடிகையை இருப்பால் அடித்த காட்சிகள் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளன.

                  படங்களில் நடத்திட நடிகர் மாருடன் இவ்வாறு நடிகைகள் தங்குவது இயல்பான ஒன்றாக திரையுலகில் இடம்பெற்று வருகிறது .

                  அவ்வாறான நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது .

                  நடிகருடன் நடிகை கொட்டலில் தங்கிய விவகாரமும் மனைவி செருப்பால் அடிக்க வந்த செயலும் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

                  இதெல்லாம் சினிமாவில் சகாயமப்பா .

                  Posted in பிரித்தானிய செய்தி

                  லண்டன் லூசியத்தில் பெண்ணை காணவில்லை தேடும் பொலீஸ்

                  லண்டன் லூசியத்தில் பெண்ணை காணவில்லை தேடும் பொலீஸ்

                  லண்டன் லூசியம் பகுதியில் பெண்ணை காணவில்லை என அந்த பகுதி எம்பி தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார் .

                  கடந்த ஐந்தாம் திகதி லூசியம் பகுதியில் காணப்பட்ட Fiona என்கின்ற 47 வயது பெண் காணாமல் போயுள்ளார் .

                  இவ்வாறூ காணாமல் போன இந்த பெண்ணை கண்ணுற்றால் தமக்கு அறியத் தரும்படி பொலிசார் வேண்டி நிற்கின்றனர் .

                  லண்டன் லூசியத்தில் பெண்ணை காணவில்லை தேடும் பொலீஸ்
                  லண்டன் லூசியத்தில் பெண்ணை காணவில்லை தேடும் பொலீஸ்

                  இந்த பெண் காணமல் போனமை தொடர்பாக அதே பகுதி பாராளும்னற உறுப்பினரும் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த பெண்ணை கண்ணுற்றால் பொலிசாருக்கு தெரிவிக்கும் படி அறிவித்துள்ளார் .


                  சமீப காலங்களாக லண்டன் லூசியம் பகுதியில் ஆண் பெண்கள் காணாமல் போகும் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றமை குறிப்பிட தக்கது .

                    Posted in பிரித்தானிய செய்தி

                    பிரிட்டனுக்கு ஆட்கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் லண்டன் Catford ஜெர்மன் நெதர்லாந்து நாடுகளில் கைது

                    பிரிட்டனுக்கு ஆட்கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் லண்டன் Catford ஜெர்மன் நெதர்லாந்து நாடுகளில் கைது

                    பிரிட்டனுக்கு கடல்வழியாக ஆள் கடத்தலில் ஈடுபட்டு வந்த நபர்களை கைது செய்யும் வேட்டையில் பிரிட்டன் உளவுத்துறையினர் ஈடுபட்டனர் .

                    இவ்விதம் ஆட்கடத்தலில் ஈடுபட்ட ஏயன்சிகள் லண்டன் Docklands and Catford ,Rushey Green, Catford,பகுதியில் கைது செய்ய பட்டுள்ளனர்.

                    இந்த ஆள்கடத்தலில் ஈடுபட்டு வந்த 21 வயதுடைய முக்கிய புள்ளி கைது செய்ய பட்டுள்ள்ளார் .

                    இவருடன் கூட்டிணைந்து செயல் பட்ட பெண் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

                    மேலும் ஜெர்மன் மற்றும் நெதர்லாந்து நாடுகளிலும் இந்த முகவர்கள் அந்த நாடு காவல்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளனர் .

                    பிரிட்டனுக்குள் நுழையும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டு படுத்த இந்த வேட்டை இடம்பெற்று வருகிறது.

                      Posted in பிரித்தானிய செய்தி

                      லண்டன் லூசியம் பகுதியில் வெடித்த காஸ் பைப்

                      லூசியம் பகுதியில் வெடித்த காஸ் பைப்

                      கடந்த தினம் இரவு 8.10 மணியளவில் லண்டன் லூசியம்
                      Lee High Road, SE13. பகுதியில் காஸ் பைப் வெடித்து சிதறியது .எனினும் இதன் பொழுது எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.

                      சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் மற்றும் மருத்துவ குழுக்கள் தமது சேவைகளை வழங்க தயாராக இருந்தனர் என மெட்ரோ போலீசார் தெரிவித்துள்ளனர்

                      தெய்வாதீனமாகா பெரும் உயிர் சேதம் இதன்போது தவிர்க்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது.

                      குறித்த வெடிப்பு தொட்ரபில் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன.

                        Posted in பிரித்தானிய செய்தி

                        லண்டனுக்குள் கடல்வழியாக 3136 அகதிகள் நுழைவு ரூவாண்டாவுக்கு அனுப்புவது தீவிரம்

                        லண்டனுக்குள் கடல்வழியாக 3 136 அகதிகள் நுழைவு ரூவாண்டாவுக்கு அனுப்புவது தீவிரம்

                        லண்டனுக்குள் ஆபத்தான கடல்வழியூடாக படகுகள் மூலம் அகதிகள் நுழைந்த வண்ணம் உள்ளனர் .இவ்வாறு நுழையும் அகதிகள் ரூவாண்டாவுக்கு அனுப்புவது தீவிரம் பெற்று வருகிறது .

                        இவ்வாறு கடந்த முப்பது நாட்களில் மட்டும் 76 படகுகளில் 3,136 அகதிகள்ஆபத்தான ஆங்கில கால்வாய் கடல்வழியாக லண்டனுக்குள் நுழைந்துள்ளனர் .

                        லண்டனுக்குள் நுழையும் அகதிகள் யாவரும் ரூவாண்டாவுக்கு அனுப்பி வைக்க படுவார்கள் என்ற அறிவிப்பு வெளியாகி ரூவாண்டாவுக்கு முதலாவது விமானம் சென்றுள்ள நிலையிலும் லண்டனுக்குள் அகதிகள் வருகை அதிகரித்துள்ளது .

                        ஐரோப்பாவில் இருந்து பிரிட்டன் விலகிய பின்னர் ஆங்கில கால்வாயை கடந்து படகுகள் மூலம் நுழையும் அகதிகள் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது .

                        தொடர்ந்து லண்டனுக்குள் நுழையும் அகதிகளை தடுத்து நிறுத்திட முடியா நிலையில் பிரிட்டன் அரசு திணறிய வண்ணம் உள்ளது.

                        நேற்று மட்டும் கடல்வழியாக லண்டன் டோவர் பகுதியில் இரண்டு படகு மூலம் 94 சட்டவிரோத குடியேற்ற வாசிகள் வந்தடைந்துள்ளனர் .

                        லண்டனுக்குள் கடல்வழியாக 3136 அகதிகள் நுழைவு ரூவாண்டாவுக்கு அனுப்புவது தீவிரம்

                        லண்டனில் இருந்து நான்காயிரம் மைல்கள் அப்பால் உள்ள ரூவாண்டாவுக்கு நாடு கடத்த படுவார்கள் என்ற நிலை ஏற்படுத்த பட்டுள்ள நிலையிலும் அதனை செவி சாய்க்காது மக்கள் லண்டனுக்குள் வருகின்ற செயல்பாடு அதிகரித்த வண்ணம் உள்ளது..

                        அகதிகளின் வருகை நாள்தோறும் அதிகரித்து செல்வதால் அகதிகள் விடயத்தில் இறுக்கமான நடவடிக்கையை அரசு மேற்கொண்டு வருகிறது .

                        லண்டனுக்குள் கடல்வழியாக 3136 அகதிகள் நுழைவு ரூவாண்டாவுக்கு அனுப்புவது தீவிரம்
                        லண்டனுக்குள் கடல்வழியாக 3136 அகதிகள் நுழைவு ரூவாண்டாவுக்கு அனுப்புவது தீவிரம்

                        எனினும் இவ்விதமான நெருக்கடிகள் மத்தியிலும் லண்டனுக்குள் குறி வைத்து நுழையும் அகதிகள் எண்ணிக்கை தற்போது பலமடங்கு அதிகரித்துள்ளது.

                        லண்டனுக்குள் கடல்வழியாக அகதிகள் நுழைவு பெரும் சவால் நிறைந்த ஒன்றாக பிரிட்டன் அரசுக்கு ஏற்படுத்தியுள்ளது .

                        இந்த அகதிகள் கட வழியாக லண்டனுக்குள் நுழைவதற்கு பிரான்ஸ் அதிக ஆதரவு தெரிவித்து வருகிறது .

                        பிரான்ஸ் கடல் பகுதியில் தனது கட்டுப்பாட்டை தளர்த்திய நிலையில் பிரான்சுக்குள் அகதிகள் வருகை மிக இலகுவாக அதிகரிக்க பட்டுள்ளதாக குறிப்பிட படுகிறது .

                        பிரான்ஸ் பிரிட்டனுக்கு இடையிலான மீன்பிடி துறையில் முறுகல் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த அகதிகள் வருகை வெள்ளம் போல கட்டுடைத்து பாயும் நிலை அதிகரித்துள்ளது என்கிறது ஐரோப்பிய முக்கிய ஊடகம் ஒன்று . குறிப்பிட தக்கது .

                          Posted in இலங்கை செய்திகள்

                          மடு திருத்தலத்தின் வருடாந்த ஆடித் திருவிழா

                          மடு திருத்தலத்தின் வருடாந்த ஆடித் திருவிழா

                          கடந்த யூன் மாதம் 23 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார், மடு திருத்தலத்தின் வருடாந்த ஆடித் திருவிழா தற்போது நடைபெறுகிறது

                          திருவிழாத் திருப்பலி தமிழ், சிங்கள மொழிகளில் ஆயர்களின் தலமையில் கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்படுகிறது.

                          திருவிழாத் திருப்பலியை மன்னார் மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி லயனல் இம்மானுவேல் வெர்னாண்டோ ஆண்டகை, யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர்

                          அருட்கலாநிதி ஜஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை ஆகியோர் ஒப்புக்கொடுக்கிறார்கள்.

                          நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருவிழாவில் பங்கேற்றுள்ளார்கள்.

                          திருவிழாத் திருப்பலியின் நிறைவில் மடு அன்னையின் திருச்சொரூப பவனி இடம்பெற்று,
                          திருச்சொரூப ஆசீர்வாதத்துடன் திருவிழா நிறைவடையும்.

                          Posted in இலங்கை செய்திகள்

                          தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் பதவிக்கு திரு. ஜயந்த டி சில்வா நியமனம்

                          தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் பதவிக்கு திரு. ஜயந்த டி சில்வா நியமனம்

                          ஜயந்த டி சில்வா அவர்கள் தொழில்நுட்ப அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

                          குறித்த நியமனக் கடிதம், 30 ஆம் திகதி அன்று முற்பகல் கொழும்பு, கோட்டை

                          ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத்
                          அவர்களினால் ஜயந்த டி சில்வா அவர்களுக்கு கையளிக்கப்பட்டது.

                            Posted in இலங்கை செய்திகள்

                            ஊர்காவற்துறை கடலில் மிதந்த ஆண் சடலம் தொடரும் மர்ம கொலைகள்

                            யாழ்ப்பாணம் ; ஊர்காவற்துறை கடலில் மிதந்த ஆண் சடலம் தொடரும் மர்ம கொலைகள்

                            இலங்கை யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை கடலில் ஆனா ஒருவர் சடலமாக மீட்க மீட்க பட்டுள்ளார் .


                            கடலுக்கு சென்றவர்கள் சடலமாக மீட்க பட்டுள்ள சமபவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

                            குருநகர் பகுதியை சேர்ந்த ஐம்பத்தி எழுவயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு சடலமாக மீட்க ப்பட்டுள்ளார் .

                            ஊர்காவல்துறை கடல் பகுதியில் மிதந்த இவரது சடலத்தை கண்ணுற்ற சக மீனவர் பொலிசாருக்கு வழங்கிய தகவலை அடுத்தகு சடலம் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு உள்ளாக்க பட்டுள்ளது.


                            இலங்கையில்நாள் தோறும் நீர் ஏரிகளில் இருந்து மிதந்த சடலங்கள் மீட்க பட்ட வண்ணம் உள்ளது .

                            தொடரும் இந்த மர்மம் மரணங்கள் ,கொலைகள் பின்னல் உள்ளது யார் என்பது இதுவரை கண்டு பிடிக்கவில்லை.

                            இலங்கையை உலுப்பி வரும் நீர் நிலைகளில் மிதக்கும் மர்ம கொலைகள் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.


                            ஜே ஆர் ஜேவர்தன காலப்பகுதியில் இடம்பெற்ற இதே போன்ற கொலைகள் ஆளும் கோட்டபாய ஆட்சியில் தொடர்கிறது.

                            இவரது மர்ம மரணத்தின் பின்னர் நடந்துள்ள சம்பவம் என்ன என்பதை யார் கண்டு பிடிப்பது .

                            இவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது இயற்கையாக தவறி வீழ்ந்து மரணித்தாரா என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன.

                            நீரில் மூழ்கி மூச்சு திணறிஇறந்தார் என்றே மருத்துவ அறிக்கைகள் வழங்க பட்டு இவ்வாறான மரணங்களுக்கு முற்று புள்ளி வைக்க பட்டு விடுகிறது.

                            யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை கடலில் மிதந்த ஆணின் மரணத்தின் பின்னால் உள்ளது என்ன ..?
                            மக்கள் அவரது குடும்பம் எழுப்பும் இந்த கேள்விகளுக்கு உரிய பதில் கிடைக்குமா ..?

                            தொடரும் இந்த மர்ம கொலைகள் மறுநாள் என்று நிறுத்த படும் ..?

                              Posted in இலங்கை செய்திகள்

                              முல்லைதீவில் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட நபர் சிக்கினார்

                              முல்லைதீவில் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட நபர் சிக்கினார்

                              முல்லைதீவு பகுதியில் பல நாட்களாக சைக்கிள் திருட்டில் ஈடுபட்டு வந்த இளம் வாலிபர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார் .

                              இந்த இளம் வயது திருடனினால் 15 சைக்கிள்கள் திருட பட்டுள்ளன .மிக லாவகமாக வந்து சைக்கிள் திருடி செல்லும் இவரது திருட்டு சம்பவ காட்சிகள் காணொளியில் பதிவாகிய நிலையில் குறித்த இளம் சைக்கிள் திருடன் கைது செய்யப்பட்டுளளார்.

                              முல்லைத்தீவில் பரவலாக சைக்கிள்கள் திருட்டு சம்பவம் இடம்பெற்று வந்தது .இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்திய நிலையில் பொலிசார் மிக லாவகமாக அந்த திருடனை மடக்கி பிடித்தனர்.

                              முல்லைதீவில் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட நபர் சிக்கினார்
                              முல்லைதீவில் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட நபர் சிக்கினார்

                              திருட பட்ட சைக்கிள் அதன் உரிமையாளர்களிடம் வழங்கும் நடவடிக்கையை முல்லைதீவு போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

                              எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் இலங்கையில் சைக்கிள் பயன்பாடு அதிகரித்து காணப்படுவதால் சைக்கிள் விலை அதிகரித்துள்ளது.


                              அதனால் சைக்கிள் திருட்டில் பல திருடர்கள் தொடராக ஈடுபட்டு அதிக விலைக்கு சைக்கிள் விற்று வருகின்றனர் என்பது குறிப்பிட தக்கது .

                                Posted in இலங்கை செய்திகள்

                                ஐ.நா பாதுகாப்பு சபை விடயத்தில் உக்ரைனுக்கு நீதி தமிழர்களுக்கு அநீதியா

                                ஐ.நா பாதுகாப்பு சபை விடயத்தில் உக்ரைனுக்கு நீதி தமிழர்களுக்கு அநீதியா

                                பிரித்தானியாவை நோக்கி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கேள்வி !

                                உக்ரைன் போர் தொடர்பில் ரஸ்யாவுக்கு எதிரான பல தீர்மானங்கள் ஐநா பாதுகாப்பு சபையில் அது நிறைவேற்றாது எனத் தெரிந்தும் அதனைக் கொண்டுவரக் காரணம் உக்ரைன் விடயத்தினை சர்வதேச தளத்தில்

                                வெளிப்படுத்துவதே ஆகும். அதுபோலவே தமிழினப்படுகொலைக்கான பொறுப்புக்கூறலுக்கு சிறிலங்கா விவகாரத்தினை ஐ.நா பாதுகாப்பு சபைக்கு

                                கொண்டுவர போதுமான காரணங்கள் காணப்படுகின்றன என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

                                பொறுப்புக்கூறலுக்கு சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்தும் நிலைப்பாட்டுக்கு ஐ.நா பாதுகாப்பு சபையில் போதுமான ஆதரவு கிட்டாது என பிரித்தானியாவின் வெளிநாட்டு, பொதுநலவாய மற்றும்

                                அபிவிருத்தி அலுவலகத்தின் பாராளுமன்ற துணைச் செயலாளர் விக்கி வோட் அவர்கள் கேள்வியொன்றுக்கு பதில் அளிக்கும் போது தெரிவித்திருந்தார்.

                                பிரித்தானியா உட்பட ஐந்து கூட்டு நாடுகளே ஐ.நா மனித உரிமைச்சபையில் சிறிலங்கா தொடர்பிலான 46ஃ1 தீர்மானத்தினை முன்னெடுத்திருந்த

                                நிலையில், பிரித்தானிய அரசாங்கத்தின் இக்கருத்து தமிழர்களுக்கு பெருத்த அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

                                இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்டு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், பிரித்தானியா அரசாங்கத்தின் இந்த நிலைப்பாடு புதிதல்ல. இதேநிலைப்பாட்டினை முன்னரும் ஒரு தடவை வெளிப்படுத்தியுள்ளது.

                                ஐ.நா பாதுகாப்பு சபை விடயத்தில் உக்ரைனுக்கு நீதி தமிழர்களுக்கு அநீதியா

                                அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தை நிறுவுவதில் முன்னிற்று உழைத்த பிரித்தானியா, இனப்படுகொலைக்கான பொறுப்புக்கூறலுக்கு நீதியைத் தேட,

                                அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தை பயன்படுத்த தயங்குவது ஏமாற்றத்தையே தருகின்றது.

                                குறிப்பாக சமகாலத்தில் உக்ரைன் போர் தொடர்பில் பிரித்தானியா உட்பட மேற்குலகம் நாடுகள் ரஸ்யாவுக்கு எதிரான பல தீர்மானங்களை ஐ.நா பாதுகாப்பு சபைக்கு கொண்டு சென்றுள்ளன. பாதுகாப்பு சபையில் அது

                                நிறைவேற்றப்படாது எனத் தெரிந்தும் அதனைக் கொண்டுவரக் காரணம் உக்ரைன் விடயத்தினை சர்வதேச தளத்தில் வெளிப்படுத்துவதே ஆகும்.

                                அதுபோலவே தமிழினப்படுகொலைக்கான பொறுப்புக்கூறலுக்கு சிறிலங்கா விவகாரத்தினை ஐ.நா பாதுகாப்பு சபைக்கு கொண்டுவர போதுமான காரணங்கள் காணப்படுகின்றன.

                                உக்ரைன் மக்களுக்கு ஒரு நீதி, தமிழ்மக்களுக்கு ஒரு நீதியா என்ற கேள்வி எழுகின்றது.
                                சிறிலங்காவின் மனித உரிமை மீறல்கள் ஜெனீவா ஐ.நா மனித உரிமைச்சபையில் கையாளப்படட்டும்.

                                ஆனால் இனழிப்புக்கும் மானிடத்துக்கு எதிரான குற்றங்களுக்கும் போர்க் குற்றங்களுக்குமான பொறுப்புக்கூறலுக்கான பொறிமுறை என்பது ஐ.நா பாதுகாப்புச் சபையூடாகவே கையாளப்படவேண்டியுள்ளது.

                                பொறுப்புகூறலுக்கு சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்த, சிறிலங்கா விவகாரத்தினை ஐ.நா பாதுகாப்பு சபைக்கு கொண்டு

                                செல்லுங்கள். அப்போது நீதிக்கு எதிரானவர்கள் யார் என்பது தெரியவரும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

                                2021 ஜனவரி 12ம் தேதி ஐ.நா மனித உரிமைகளுக்கான ஆணையாளரர் மிசேல்
                                பசேலேற் அம்மையாரின் அறிக்கையில், சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்புமாறு விடுத்திருந்ததோடு,


                                ஐநா மனித உரிமைகளுக்கான நான்கு முன்னாள் ஆணையாளர்கள், ஐ.நா.வின் நான்கு முன்னாள் உயர் அதிகாரிகள்,


                                இலங்கைக்கு பயணம் செய்து அறிக்கைகளை எழுதிய ஐ.நாவின் ஒன்பது முன்னாள் சிறப்பு அறிக்கையாளர்கள், ஐ.நா.


                                செயலாளர் நாயகம் குழுவின் மூன்று உறுப்பினர்கள், இலங்கை பற்றிய நிபுணர்கள் ஆகியோர் சிறிலங்காவை சர்வதேச


                                குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்புமாறு என்ற அழைப்பை விடுத்திருந்தனர் என்பது இங்கு குறிப்பிடதக்கது.