கடற்படை கப்பல்களில் இந்தியா தப்பி ஓடிய முக்கிய நபர்கள்
இலங்கை அரசியல்வாதிகளுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருவதால் கொழும்பு துறைமுகத்தில் தரித்து நின்ற இரண்டு சிங்கள கடல் படை கப்பல்கள் மூலம் முக்கிய நபர்கள் தப்பி ஒடியுள்ளனர் .
கயபாகு , சித்துல, என்ற சிங்கள கடல் படையின் அதிவேக கப்பல்கள் மூலம் இவர்கள் தப்பி ஓடியுள்ளனர் .
இந்த முக்கிய நபர்கள் இந்தியாவின் முக்கிய பகுதிக்கு இந்த போர் கப்பல் மூலம் தப்பி சென்று கொண்டிருப்பதாக சமுக வலைதளத்தில் காட்சிகள் வெளியாகியுள்ளன .
கொழும்பு துறைமுகத்தில் பணியாற்றும் ஒருவர் தனது கைபேசியில் தப்பி ஓடும் முக்கிய நபர்களை பதிவாக்கி வெளியிட்டுள்ளார் .
இதுவே தற்போது சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது .
துப்பாக்கி குண்டுகளுக்கு தப்பினாலும் மக்கள் கைகளில் உள்ள கைபேசி கமராவுக்கு தப்ப முடியாது அரசியல்வாதிகள் திணறிய வண்ணம் உள்ளனர்.