Author: நலன் விரும்பி
சோமாலியாவில் சிக்கிய தமிழன் பதற வைக்கும் பயங்கரம்
சோமாலியாவில் சிக்கிய தமிழன் பதற வைக்கும் பயங்கரம்
இந்தியாவில் youtube பிரபலம் ஒன்று வீடியோ பிடித்து காண்பிக்க போய் சிக்கிய திகில் சம்பவம் வெளியாகியுள்ளது .
அவருக்கு சோமாலியாவில் நடந்தது என்ன என்பதும் எவ்வாறு சோமாலியாவில் சிக்கினார் ,வீடியோ பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
சோமாலியாவுக்கு நீங்கள் சென்றால் அங்கே செத்தான் என்பதற்கு இந்த காணொளி உதாரணம்.
அங்கு வெளிநாட்டவர்கள் செல்ல முடியாது என்பதற்கு இவரது இந்த பதிவு சாட்சியாக உள்ளது.
இதில் அழுத்தியும் காணொளி பார்க்கலாம்
தங்கம் திருடிய திருடர்கள் 177 பவுன் நகையுடன் கைது
தங்கம் திருடிய திருடர்கள் 177 பவுன் நகையுடன் கைது
இலங்கை ; கண்டி கட்டன் பகுதியில் உள்ள நகை அடைவு பிடிக்கும் கடையொன்றுக்குள் புகுந்த திருடர்கள் அங்கிருந்த 177பவுன் தங்க நகைகளை திருடி தப்பி சென்றனர் .
இந்த தங்க நகை திருட்டில் ஈடுபட்ட ஒரு பெண் உள்ளிட்ட மூன்று ஆண்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்த தங்க நகை திருட்டு தொடர்பாக ஆறு மாதங்களாக இடம்பெற்று வந்த விசாரணைகளின் பின்னர் தங்கம் திருடிய நபர்கள் அதே திருடிய தங்கத்துடன் சிக்கியுள்ளனர் .
இந்த நகை திருடிய திருடர்கள் நால்வரும் திருடிய நகைகளுடன் கைது செய்யப்பட்ட நிலையில் நீதவான் நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளனர்.
ஆறுமாதங்கள் கழித்து திருடர்கள் திருடிய நகைகளுடன் சிக்கியது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
உக்கிரேனுக்கு கவச வாகனங்களை வழங்கும் கனடா மிரளுமா எதிரி
உக்கிரேனுக்கு கவச வாகனங்களை வழங்கும் கனடா மிரளுமா எதிரி
கனடா – ரஷ்ய இராணுவத்தின் உக்கிரேன் நாட்டின் மீதான இராணுவ நடவடிக்கையை கட்டு படுத்த கனடா உக்கிரேனுக்கு முப்பத்தி ஒன்பது நவீன கவச வாகனங்களை வழங்குகிறது .
கனடா ஆயுத உதவி
இந்த கவச வாகனங்கள் ஆயுத உதவி வாங்குதல் ஊடாக முன்னேறி வரும் ரஷ்ய இராணுவத்தின் படை நகர்வை தடுத்து நிறுத்தமா உக்கிரேன் என்பதும் இந்த கவச வாகனங்கள் கண்டு மிரளுமா எதிரி இராணுவம் என்பதே கேள்வியாக உள்ளது .
சூடு பிடிக்கும் உக்கிரேனுக்கான ஆயுத விற்பனை
பல பில்லியனுக்கு அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, நாடுகளில் உக்கிரேன் ஆயுதங்களை வாங்கி குவித்து போரிட்ட பொழுதும் தாம் இழந்த பகுதிகளை அதனால் மீட்க முடியவில்லை .
அவ்வாறான நிலையில் உக்கிரேனுக்கு கவச வாகனங்களை கனடா வழங்குவது என்பது தமது ஆயுத வியாபாரத்தை பெருக்கிடவே என்பது இதில் இருந்து புலனாகிறது .
அனுபவம் வாய்ந்த முன்னணி தாக்குதல் படைப்பிவினர் உக்கிரேன் இராணுவத்தில் பலியாகியும் ,காயப்பட்டு முடங்கியுள்ள நிலையில் இவ்வாறு அனுபவம் வாய்ந்த ரஷ்ய இராணுவத்தினருடன் உக்கிரேன் இராணுவம் மோதலை தொடுத்திட முடியுமா என்கின்ற கேள்வி இங்கே வைக்க படுகிறது .
உக்கிரேன் களத்தில் நடத்த படும் ஆயுத சோதனைகள்
உக்கிரேன் நாட்டுக்கு உதவி வருகிறோம் என்கின்ற போர்வையில் அமெரிக்கா ,பிரித்தானியா கனடா நேட்டோ நாடுகள் ஆயுதங்களை பல மில்லியனுக்கு விற்ற வண்ணம் உள்ளன .

தவிர தமது போராயுதங்களை உக்கிரேன் களமுனையில் சோதனை செய்து வருகின்றன .அதற்காக குறைந்த வட்டியில் இந்த ஆயுத கடனுதவி வழங்க படுகிறது .
இலங்கையை போல ஆயுதங்களை வாங்கி குவித்து போரிடும் உக்கிரேன் இறுதியில் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி போன்று சிக்கி தவிக்கும் நிலைக்கு செல்ல கூடும்.
மறுபுறம் எதிரி இராணுவத்திடம் உக்கிரேன் முழுமையாக வீழ்ந்து விட்டால் இந்த கடனை யார் வழங்குவது என்ற கேள்வியும் எழுகிறது .
இவ்வாறான சிக்கலான நிலைக்குள் உக்கிரேன் சிக்கி தவித்து வருகிறது . தமது முக்கிய படையணிகள் அழிந்து ,மக்கள் பல்லாயிரம் பேர் பலியாகி ,மேலும் அவர்கள் சொத்துக்கள் பெருமளவில் அழிந்து சுடுகாடாக காட்சி அளிக்கிறது உக்கிரேன் .
இவ்வாறான இறுக்கமான ரஷ்ய இராணுவத்தின் முற்றுகையில் சிக்கி தவிக்கும் உக்கிரேன் இராணுவம் எவ்வாறு அந்த முற்றுகையில் இருந்து மீண்டு எழ முடியும் ..?
மேற்குலக நாடுகளின் தோள்களில் ஏறி நின்று ஆடி வரும் உக்கிரேன் வீழ்ந்து மூழ்கும் காலம் அருகில் என்பதே இந்த பர பரப்பு ஆயுத விற்பனை எடுத்து காண்பிக்கிறது .
- வன்னி மைந்தன் –
ஓடிய பெண் வீழ்ந்தார் சிரித்த மக்கள் இப்படி ஆகிடிச்சே வீடியோ
ஓடிய பெண் வீழ்ந்தார் சிரித்த மக்கள் இப்படி ஆகிடிச்சே வீடியோ
லண்டன் புறநகர் பகுதியான பேர்மிங்கம் பகுதியில் ஓடிய பெண் திடீரென கால் தடக்கி வீழ்ந்தார் .இவரது வீழ்ந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்கலில் வைரலாகி வருகிறது
பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற பெற்றோர்களுக்கான ஓட்ட போட்டியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது .
இந்த பெண்மணி இப்பொழுது இந்த வீடியோ வெளியீட்டுக்கு பின்னர் தற்போது பிரபலமாகிவிட்டார்.
இதில் அழுத்தி காணொளி பார்க்கவும்
- காசாவின் ஸெய்தூன் பகுதியில் இடிபாடுகளிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐம்பத்தைந்து உடல்கள் மீட்கப்பட்டன
- 7ஐரோப்பா நாடுகளில் வெளிநாட்டவரை அனுப்ப திட்டம்
- குளத்தில் கவிழ்ந்த டிராக்டர் விபத்தில் 17 வயது இளைஞர் பலி
- டி-56 ரக துப்பாக்கியும் தோட்டா கண்டு பிடிப்பு
- சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் பலி, 11 பேர் காணாமல் போயினர்
- பொரலஸ்கமுவ துப்பாக்கிச் சூடு
- பால் தேநீர் மற்றும் சாதாரண தேநீர் விலைகள் ரூ. 5 குறைக்கப்பட்டன
- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
- தெஹிவலாவில் ஒருவர் தீ வைத்துக் கொளுத்தப்பட்ட வழக்கில் முக்கிய சந்தேக நபர் கைது
- ஈரானின் கார்க் தீவுக்கு அருகே அமெரிக்கத் தாக்குதலில் ஈரானிய எண்ணெய்க் கப்பல் தாக்கப்பட்டது
மீனாவின் கணவர் மரணம் அதிர்ச்சியில் திரையுலகம்
இந்தியா ;மீனாவின் கணவர் மரணம் அதிர்ச்சியில் திரையுலகம்
நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நேற்று இரவு காலமானார்.
வயது 48 வயதாகும் இவருக்கு சில தினங்களுக்கு முன் திடீரென நுரையீரலில்
தொற்று அதிகமானதால், நுரையீரல் மற்றும் இதயம் செயலிழந்து தனியார்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு உறுப்புகள் கிடைக்காத நிலையில்,
ஒவ்வொரு உறுப்புகளும் செயலிழந்து சிகிச்சை பலனின்றி நடிகை மீனா கணவர் வித்யாசாகர் நேற்று (28.06.2022) உயிரிழந்தார்.
அவரது உடல் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
மீனாவின் கணவர் மரணம் அதிர்ச்சியில் திரையுலகம்
இன்று காலை நடிகர்கள் ரஜினி, சரத்குமார், பிரபுதேவா, சுந்தர்.சி, நாசர், மன்சூர் அலிகான், நடிகைகள் சினேகா,
சங்கீதா, இயக்குனர்கள் கே.எஸ்.ரவிகுமார், ரமேஷ் கண்ணா உள்ளிட்ட பல திரையுலகினர் நேரில் சென்று வித்யாசாகர்
உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அதன்பின்னர் வித்யாசாகரின் உடல் ஊர்வலமாக பெசன்ட் நகர் மின்மயானத்துக்கு
எடுத்துச்செல்லப்பட்டது. ஊர்வலம் மின்மயானத்தை அடைந்ததும் அவருக்கு இறுதி சடங்குகள் செய்யப்பட்டன.
அவருடைய மனைவி மீனா இறுதி சடங்குகளை செய்தார். அதன்பின்னர் வித்யாசாகரின் உடல் தகனம் செய்யப்பட்டது.
லண்டன் லூசியத்தில் காவல்துறையை வெட்டிய பெண்
லண்டன் லூசியத்தில் காவல்துறையை வெட்டிய பெண்
லண்டன் லூசியம் பகுதியில் முப்பத்தி ஒரு வயது பெண் ஒருவர் காவல்துறை ஊழியர் ஒருவரின் கை மாற்று கழுத்தில் கத்தியால் வெட்டியுள்ளார் .
இந்த பெண் நடத்திய கத்தி வெட்டு தாக்குதலில் சிக்கி காயமடைந்த பொலிஸ் ஊழியர் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளார் .
எனினும் இவர் உயிர் ஆபத்து இல்லா நிலையில் காணப்படுகிறார் ,கொலை குற்ற சாட்டில் பெண் கைது செய்யப்பட்டு நீதி மன்ற விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார்.
லண்டன் லூசியம் பகுதியில் காவல்துறை ஊழியரை கத்தியால் வெட்டிய பெண் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தீயில் எரிந்த பெண் திருகோணமலையில் சம்பவம்
தீயில் எரிந்த பெண் திருகோணமலையில் சம்பவம்
திருகோணமலை, அன்புவெளிபுரத்தில் இடம்பெற்ற தீ விபத்தில் 47 வயதான பெண் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ) இடம்பெற்றுள்ளது.
வீட்டின் சுவாமி அறையில் காலையில் விளக்கேற்றி விட்டு வீசிய தீ குச்சியின் தீ மூலமாக, சேமித்து வைக்கப்பட்டிருந்த பெற்றோல் கொள்கலனில் தீ ஏற்பட்டதனாலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது .
தீ பிடித்து உயிரிழந்தவரின் உடல் திருகோணமலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பதுக்கிய பெற்றோலில் தீயில் எரிந்து இறந்த பெண் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பைஷல் இஸ்மாயில் –
- காசாவின் ஸெய்தூன் பகுதியில் இடிபாடுகளிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐம்பத்தைந்து உடல்கள் மீட்கப்பட்டன

- 7ஐரோப்பா நாடுகளில் வெளிநாட்டவரை அனுப்ப திட்டம்

- குளத்தில் கவிழ்ந்த டிராக்டர் விபத்தில் 17 வயது இளைஞர் பலி

- டி-56 ரக துப்பாக்கியும் தோட்டா கண்டு பிடிப்பு

- சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் பலி, 11 பேர் காணாமல் போயினர்

எரிபொருள் பொலிசுக்கு மட்டும் – மக்கள் பொலிஸ் மோதல்
எரிபொருள் பொலிசுக்கு மட்டும் – மக்கள் பொலிஸ் மோதல்
இலங்கை மக்களுக்கு எரிபொருள் வழங்குதல் நிறுத்த பட்டு இராணுவம் மற்றும் பொலிஸ் பெற்று கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.
மக்கள் வரிசையில் காத்திருக்க பொலிசார் இராணுவம் தமது வாகனங்களில் வருகை தனது பெற்றோல் டீசல் பெற்று செல்லும் நிலை மக்கள் மத்தியில் முறுகளை ஏற்படுத்தியுள்ளது.
கோட்டபாய ராஜபக்சவின் இந்த நடவடிக்கை சிங்கள மக்கள் மத்தியில் மோதலை ஏற்படுத்தியுள்ளது.
அதே சிங்கள மக்களை பொலிசார் ஆடு மாடுகள் போல விரட்டும் நிலை ஏற்பட்டுள்ளது .
இலங்கை காவல்துறையின் இந்த செயல்பாடு மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதால் பெரும் போராட்டம் அரசுக்கு எதிராக வெடிக்கும் என எதிர் பார்க்கலாம்.

அத்துடன் அரச உடைமைகள் சூறையாடப்பட்டு அரச சொத்துக்கள் எரிக்க படும் நிலையும் தோற்றம் பெற போகிறது .
மாத்தளையில் இடம்பெற்ற இந்த போலீஸ் மக்கள் மோதல் சம்பவம் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது
எரிபொருள் பொலிசுக்கு மட்டும் எனும் சிங்கள ஆளும் அரசின் செயல் பாடு மக்கள் பெரும் போருக்கு தயாராகும் நிலையை உருவாக்கியுள்ளது.

பங்கு சந்தை இலவச பயிற்சிகள்
பங்கு சந்தை இலவச பயிற்சிகள்
பங்கு சந்தையில் வீட்டில் இருந்த படியே பணத்தை அள்ளிட என்ன வழி ..?உலக பங்கு சந்தை யில் வீட்டில் இருந்தபடியே நீங்கள் பணம் உழைத்திட உஙக்ளுக்கான சிக்கினல் மற்றும் அதற்கான இலவச பயிற்சிகளை நாம் தருகின்றோம் .
அச்சம் இன்றி யாவும் தெரிந்து பொறுமையுடன் பணத்தை அள்ளி வழங்கும் பங்கு சந்தை வர்த்தகத்தில் பணத்தை அள்ளிடவும் உங்களுக்கு நாங்கள் உதவுகின்றோம் .
எமக்கு தெரிந்ததை நமது அனுபவ பகிர்வுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம் .எம்முடன் வாட்ஸாப் வைபர் ஊடக தொடர்பு கொள்ள அழையுங்கள் வன்னி லண்டன் 0044 7536707793
இதில் அழுத்தி பங்கு சந்தை காணொளிகளை பாருங்கள்
துப்பாக்கி சூட்டு தாக்குதலில் 7 பேர் மரணம் 46 பேர் காயம்
துப்பாக்கி சூட்டு தாக்குதலில் 7 பேர் மரணம் 46 பேர் காயம்
அமெரிக்காவில் கடந்த பத்து வாரங்களில் இடம் பெற்ற துப்பாக்கி சூட்டு தாக்குதலில் சிக்கி ஏழுபேர் பலியாகியுள்ளனர் ,.மேலும் 46 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
அமெரிக்காவில் இடம்பெற்ற தொடர் துப்பாக்கி சூட்டு சம்பவத்தை அடுத்து துப்பாக்கி பாவனை மக்கள் மத்தியில் தடுக்க படுவதற்குரிய சட்ட மசோதா கொண்டுவரப்பட்டு அதன் மூலம் ஆயுத பாவணை கட்டு படுத்தலை அமெரிக்கா அரசு தீவிரமாக்கியுள்ளது.
இந்த புதிய சட்டங்களின் பின்னர் இந்த துப்பாக்கி சூட்டு தாக்குதல்கள் நிறுத்த படுமா என்பதே நமது கேள்வியாகும்.
பெண்ணை திருமணம் செய்ய வந்த பெண் கைது
பெண்ணை திருமணம் செய்ய வந்த பெண் கைது
இலங்கை ; ஒரு குழந்தையின் தாயாரான முஸ்லிம் பெண் ஒருவரை திருமணம் செய்ய இலங்கைக்கு வருகை தந்த தென்னிந்திய தமிழ் பெண் விடுதலை செய்யப்பட்டார்.
அந்த வழக்கு ஜூலை மாதம் 29 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அந்த வழக்கு நீதிவானின் சமாதான அறையில் நேற்று (27) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் இரு பெண்களின் உளநல மருத்துவ அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
அதன்பின்னர், முதலாவது சந்தேக நபரான, ஒன்றரை வயது குழந்தையின் தாயான 19 வயது பெண்ணை ஒரு இலட்சம் ரூபாய் ஆட்பிணையில் விடுவித்து
பெண்கள் காப்பகமொன்றில் ஒப்படைக்குமாறு அக்கரைப்பற்று நீதிமன்ற நீதிவான் எம்.எச்.எம்.ஹம்ஸா உத்தரவிட்டார்.
பெண்ணை திருணம் செய்ய முயன்ற பெண்
அவரது குழந்தையின் எதிர்கால நலன் மற்றும் குறித்த பெண்ணின் நடத்தைகள் தொடர்பில் அறிக்கை கிடைக்கும் வரை ஒப்படைக்குமாறும்
உத்தரவிட்ட நீதவான் வழக்கை, எதிர்வரும் ஜூலை மாதம் 29 ஆம் திகதி வரை ஒத்திவைத்தார்.
இரண்டாவது சந்தேக நபரான 24 வயது மதிக்கத்தக்க தமிழ்நாட்டின் குன்னத்தூரைச் சேர்ந்த பட்டதாரியான தமிழ் பெண்ணில் குற்றச்சாட்டுகள் நிருபிக்கப்படவில்லை.
அவர் சார்பில், முன்னிலையான பெண் சட்டத்தரணி , அந்தப் பெண்ணை இந்திய உயர்ஸ்தானிகர் காரியாலயத்தில் ஒப்படைத்து சொந்த இடத்திற்கு மீள அனுப்புவதற்கு விடுத்த விண்ணப்பத்தை பரீசீலனை செய்தார்.
பெண்ணை திருமணம் செய்ய வந்த பெண் கைது
அதன்பின்னர், இரண்டாவது சந்தேக நபரான தமிழ்நாட்டின் குன்னத்தூரைச் சேர்ந்த பட்டதாரியை விடுவித்து அனுமதி வழங்கினார்.
அந்தப் பெண்ணை, பெண்கள் உரிமை தொடர்பான அமைப்பு, பெண் சட்டத்தரணியுடன் வருகை தந்து மட்டக்களப்பில் இருந்து வேன் ஒன்றில் அழைத்து சென்றமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளும் இவ்வழக்கின், முதலாவது சந்தேக நபரான 19 வயது மதிக்கத்தக்க முஸ்லிம் பெண்ணின் சார்பாக
பிரசன்னமாகி, குழந்தையையும் தாயையும் சிறுவர் காப்பகத்தில் ஒப்படைக்குமாறு வலியுறுத்தியது.
முஸ்லிம் பெண்ணின் முறைப்பாட்டாளர்களான பெற்றோர், கணவன் சார்பாக சட்டத்தரணிகளான ஏ.எம் ஜெனீர் மற்றும் எம்.ஐ றிஸ்வான் ஆகியோர் ஆஜராகி இருந்தனர்.
இரண்டாவது சந்தேக நபரான தமிழ்நாட்டின் குன்னத்தூரைச் சேர்ந்த பட்டதாரியான தமிழ் பெண்ணிற்கு மட்டக்களப்பில் இருந்து பெண்கள் உரிமைக்கான அமைப்பொன்றின் அணுசரனையில் பெண் சட்டத்தரணி ஒருவர் ஆஜராகி இருந்தார்.
கடந்த புதன்கிழமை (22) அன்று இவ்விடயம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் அக்கரைப்பற்று
நீதிமன்றத்தினால் இரு பெண்களையும் இவ்வாறு உளநல மருத்துவரிடம் காண்பித்து அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நீதி மன்றம் உத்தரவிட்டிருந்தார்.
இரு பெண்களையும் கல்முனை ஆதார வைத்தியசாலை மனநலப் பிரிவில் சேர்க்கப்பட்டு அங்கு அவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு இதன்
பின்னர் மேற்படி பெண்கள் இருவரும் நீதிமன்றக் கட்டளையின்படி விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
கடந்த திங்கட்கிழமை (20) இந்தியாவிலிருந்து அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தனது முஸ்லிம் நண்பியைத்தேடி தமிழ்நாட்டினை சேர்ந்த
தமிழ் பெண் ஒருவர் தேடி வந்துள்துள்ளதுடன் இருவரும் நண்பிகளாக தொலைபேசி மூலம் உரையாடி வந்துள்ளனர்.
இவ்விரு பெண்களும் தற்போது திருமணம் செய்வதற்கு விருப்பம் தெரிவித்ததை தொடர்ந்து அக்கரைப்பற்று முஸ்லிம் பெண்ணின் பெற்றோர் அக்கரைப்பற்று பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர்
மேற்படி பெண்கள் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் இந்தியாவில் திருமணம் செய்துள்ள நண்பி ஒருவர் மூலம் தொலைபேசியூடாக
தொடர்பினை பேணியுள்ளதுடன் முஸ்லிம் பெண்ணுக்கு திருமணமாகி ஒன்றரை வயது மகளும் கணவரும் இருக்கின்றார்.
பெண்ணின் தந்தை ஒரு கூலித் தொழிலாளி, அவரின் தாயார் மத்திய கிழக்கு நாடொன்றில்
வீட்டுப் பணிப்பெண்ணாக உள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
அவுஸ்ரேலியா சென்று கொண்டிருந்த படகு சிறை பிடிப்பு -47 பேர் கைது
அவுஸ்ரேலியா சென்று கொண்டிருந்த படகு சிறை பிடிப்பு -47 பேர் கைது
இலங்கை நீர்கொழும்பு பகுதியில் இருந்து அவுஸ்ரேலியா சென்று கொண்டிருந்த அகதிகள் படகு ஒன்று கடற்படையினரால் சிறை பிடிக்க பட்டுள்ளது
இந்த படகில் 47 பேர் அவுஸ்ரேலியாவுக்குள் நுழையும் முகமாக செண்றுகொண்டிருந்த பொழுதே கடற்படையினரால் கைது
இதற்கு முதல் நாளும் அவுஸ்ரேலியா செல்ல முயன்ற பலர் கைது செய்ய பட்டனர் .கடற்படையினரால் கைதானவர்களில் 34 ஆண்கள் 6 பெண்கள் 7 சிறுவர்கள் உள்ளடங்குவர் என தெரிவிக்க பட்டுள்ளது
கைதானவர்கள் பொலிஸ் விசாரணிகளின் பின்னர் நீதிமன்றில்
முன்னிலை படுத்த படுவார் என எதிர்பார்க்க படுகிறது.
பிள்ளையான் சிறைச்சாலை அதிகாரிகளுடன் சந்திப்பு
பிள்ளையான் சிறைச்சாலை அதிகாரிகளுடன் சந்திப்பு
மட்டக்களப்பு ; மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கும் பிள்ளையான மட்டக்களப்பு சிறைச்சாலை அதிகாரிகளுக்குமிடையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில் நாட்டில் ஏற்பட்டுள்ள
பொருளாதார நெருக்கடி எரிபொருள் பிரச்சினையின் காரணமாக சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் கடமைக்கு தடங்கல்கள் ஏற்படாதவகையில் எரிபொருளினை விநியோகிப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பிலும்
தீர்க்கமான முடிவுகள் இதன்போது எட்டப்பட்டுள்ளன.
இலங்கை மாணவர்களுக்கு இந்தியாவில் புலமைப்பரிசில்
இலங்கை மாணவர்களுக்கு இந்தியாவில் புலமைப்பரிசில்
ஆயுஷ் புலமைப்பரிசில் திட்டத்தின்கீழ் 2022-23 கல்வியாண்டில் ஆயுர்வேதம், யோகா, யுனானி, சித்த மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆகிய துறைகளில் பட்டப்படிப்பு/
பட்டப்பின்படிப்பு/கலாநிதி ஆகிய கற்கை நெறிகளை தொடர விரும்பும் இலங்கை பிரஜைகளுக்கு, கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் புலமைப் பரிசில்களை அறிவித்துள்ளது.
- இலங்கை கல்வி அமைச்சின் ஆலோசனையுடன் திறமைவாய்ந்த இலங்கை பிரஜைகளை தெரிவு செய்து இந்திய அரசாங்கம் இப்புலமைப்பரிசில்களை வழங்குகிறது.
- இப்புலமைப்பரிசில் திட்டங்கள் முழுமையான கற்கைநெறி கட்டணம் மற்றும் கற்கைநெறிக் காலம் முழுவதற்குமான மாதாந்த செலவின கொடுப்பனவுகள்
- அனைத்தையும் உள்ளடக்கியதுடன், இதற்காக தங்குமிட கொடுப்பனவு, வருடாந்த உதவித்தொகை மற்றும் சுகாதார நலன்புரி சேவைகள் போன்றவையும் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
- இவ்விடயம் தொடர்பான மேலதிக தகவல்களை கல்வியமைச்சின் என்ற www.mohe.gov.lk. இணையதளத்தில் காணமுடியும்.
- இதற்கான விண்ணப்பங்களை
- ICCR A2A தளம் ஊடாக (www.a2ascholarships.iccr.gov.in ) பதிவேற்றம் செய்வதற்கான இறுதி திகதியான 2022 ஜூலை 15ற்கு முன்னதாக அனுப்பிவைக்கவும்.
- மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள விரும்பும் விண்ணப்பதாரிகள் கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தை தொடர்பு
கொள்ளலாம் (E-mail- eduwing.colombo@mea.gov.in /0112421605, 0112422788 ext-605).
முடங்கும் இலங்கை அதிர்ச்சியில் மக்கள்
முடங்கும் இலங்கை அதிர்ச்சியில் மக்கள்
இலங்கையில் இன்று இரவு முதல் நாடு முற்றாக முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது .எரிபொருள் கொள்வனவு செய்திட இலங்கை அரசிடம் பணம் இல்லாத காரணத்தினால் நாட்டுக்கு எரிபொருள் எடுத்து வரும் கப்பல்கள் தாமதமடைந்து வருகிறது .
அதனால் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் எரிபொருள் வழங்க முடியும் என்ற அறிவிப்பு வெளியானதில் இருந்து இலங்கை மக்கள் பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
இலங்கையில் அடுத்து நடக்க போவது என்ன காணொளி
இந்த அறிவிப்பை அடுத்து மக்கள் வீதி இறங்கி போராடும் நிலை ஏற்பட்டுள்ளது .எரிபொருளுக்காக மக்கள் இனி காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்கிறது அரசு.
முடங்கும் இலங்கை அதிர்ச்சியில் மக்கள்
கோட்டபாய ராஜபக்சே அரசினால் இலங்கை வறுமை கோட்டின் கீழ் இழுத்து வரப்பட்டு மக்கள் வீதியில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மருத்துவம் ,மற்றும் உணவு தேவை போக்குவரத்திற்கு மட்டுமே எரிபொருள் வழங்க படும் என அறிவிக்க பட்டுள்ளது.
அதனால் நாடு முற்றான முடக்க நிலைக்கு செல்கிறது என்ற அபாய எச்சரிக்கை மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போதைவஸ்து 14 டன் தீயில் எரித்து அழிப்பு
போதைவஸ்து 14 டன் தீயில் எரித்து அழிப்பு
ஈரான் – ஈரானில் இராணுவம் மற்றும் காவல்துறையினரால் ஈரான் நாட்டின் எல்லை வழியாக கடத்தி வரப்பட்ட போதைவஸ்து பறிமுதல் செய்யப்பட்டது.
அவ்விதம் பறிமுதல் செய்ய பட்ட போதைவஸ்து எண்ணெய் ஊற்றி எரிக்கும் காட்சிகள் வெளியிட பட்டுள்ளது.
போதைவஸ்துடன் வெளிநாட்டு கப்பல் சிறை பிடிப்பு
பெரும் போதைவஸ்து கடத்தல் மன்னன் கைது
லண்டனில் காரை திருடி போதைவஸ்து வியாபாரம்
ஈரானில் போதைவஸ்து கடத்தி வருபவர்கள் கைது செய்யப்பட்டால் மக்கள் முன்பாக அவர்கள் தூக்கில் மாட்டி படுகொலை செய்ய பட்டு வருகின்றனர் .
அவ்வாறான கொடிய சட்டங்கள் பிறப்பிக்க பட்ட பொழுதும் இவ்விதமான போதைவஸ்து கடத்தல்கள்
தொடர்ந்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது.
- காசாவின் ஸெய்தூன் பகுதியில் இடிபாடுகளிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐம்பத்தைந்து உடல்கள் மீட்கப்பட்டன

- 7ஐரோப்பா நாடுகளில் வெளிநாட்டவரை அனுப்ப திட்டம்

- குளத்தில் கவிழ்ந்த டிராக்டர் விபத்தில் 17 வயது இளைஞர் பலி

- டி-56 ரக துப்பாக்கியும் தோட்டா கண்டு பிடிப்பு

- சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் பலி, 11 பேர் காணாமல் போயினர்

- பொரலஸ்கமுவ துப்பாக்கிச் சூடு

- பால் தேநீர் மற்றும் சாதாரண தேநீர் விலைகள் ரூ. 5 குறைக்கப்பட்டன

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- தெஹிவலாவில் ஒருவர் தீ வைத்துக் கொளுத்தப்பட்ட வழக்கில் முக்கிய சந்தேக நபர் கைது

- ஈரானின் கார்க் தீவுக்கு அருகே அமெரிக்கத் தாக்குதலில் ஈரானிய எண்ணெய்க் கப்பல் தாக்கப்பட்டது

விளையாடடு மைதானம் இடிந்து வீழ்ந்து 332 பேர் காயம்
விளையாடடு மைதானம் இடிந்து வீழ்ந்து 332 பேர் காயம்
கொலம்பியா ; விளையாட்டு மைதானம் ஒன்று கொலம்பியாவில் இடிந்து வீழ்ந்ததில் அந்த கட்டட இடி பாடுகளுக்குள்ள சிக்கி 332 பேர் படுகாயமடைந்துள்ளனர் .
இந்த இந்த விளையாட்டு மைதான இடிபாட்டில் சிக்கி இதுவரை ஆறு பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 12 பேர் மிக அபத்தான நிலையில் உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன .
கிளிநொச்சியில் 60.000 பார்வையாளர்களை கொண்ட விளையாட்டு மைதானம்
இந்த விளையாட்டு மைதானம் இடிந்து வீழ்ந்த விபத்து தொட்ரபில் ஆராய விசேட குழு ஒன்று நியமிக்க பட்டுள்ளது.
இந்த விளையாடடு மைதானம் இடிந்து வீழ்ந்த
சம்பவம் கொலம்பியா மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் பாடசாலைகள் அடித்து பூட்டு
இலங்கையில் பாடசாலைகள் அடித்து பூட்டு
இலங்கையில் பாடசாலைகள் அடித்து பூட்டுவதற்கு கலவி அமைச்சு உத்தரவிட்டுள்ளது .
இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக மேல்மாகாணத்தில் கொழும்பு வலயத்தில் மற்றும் அண்டிய பிரதேசங்களில் உள்ள
அனைத்து பாடசாலைகளையும் அடித்து பூட்டு .
அதே போல ஏனைய மாகாணங்களில் முக்கிய நகரங்களில்
அமைந்துள்ள பாடசாலைகளையும் ஜூலை 10 ஆம் திகதி வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
ஆசிரியர்கள் எரிபொருள் இன்றி பாடசாலை செல்ல முடியா நிலையில் தவித்து வந்தனர் ,கல்வி அமைச்சு அறிவித்துள்ள இந்த அறிவிப்பால் அவர்கள் சற்று மகிழ்வில் உறைந்துள்ளனர்
இதே போன்று மேலும் பல தொழில் துறைகள் அடித்து பூட்டும் ஆபாய நிலை ஏற்பட போகிறது.
அவுஸ்ரேலியாவுக்கு செல்ல முயன்ற 54 பேர் கைது
அவுஸ்ரேலியாவுக்கு படகில் செல்ல முயன்ற 54 பேரை கைது செய்த கடற்படை
இலங்கை ; அவுஸ்ரேலியாவுக்கு இலங்கையில் இருந்து கடல்வழியாக செல்ல முயன்ற 54 இலங்கையர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் .
கைதானவர்கள் பொலீஸ் விசாரணைக்கு உபடுத்த பட்டு நீதிமன்ற விசாரணைக்கு முன்னிலை படுத்தப்படவுள்ளனர் .
அவுஸ்ரேலியாவுக்கு இலங்கையில் இருந்து கடல்வழியாக பயணிப்பவர்கள் கிரிஷ்மஸ் தீவில் சிறை வைக்க பட்டு இலங்கைக்கு மீள அவுஸ்ரேலியாவால் நாடுகடத்த பட்டு வருகின்றனர் .
அவுஸ்ரேலியா செல்ல முயன்ற 35 பேர் கைது
இலங்கையர் 15 பேரை நாடு கடத்திய அவுஸ்ரேலியா
அவுஸ்ரேலியா செல்ல முயன்ற 38 பேர் கைது
அவ்விதமான நாடு கடத்தல் செயல்பாடுகள் தொடராக இடப்பெற்ற வண்ணம் இருக்க ,இலங்கையில் இருந்து அவுஸ்ரேலியாவுக்கு மக்கள் அகதிகளாக சென்றவண்ணம் உள்ளனர்.
இலங்கை கடல் வழியாக அவுஸ்ரேலியா செல்லும் படகுகள் எரிக்க படும் என இலங்கை அரசு எச்சரித்துள்ள போதும் இந்த அகதிகள் பயணம் முன்னெடுக்க பட்டு வருகின்றன .
தமது நாட்டுக்குள் இலங்கையில் இருந்து அவுஸ்ரேலியாவுக்குள் நுழைவதை தடுக்க அவுஸ்ரேலியா அரசு இலங்கைக்கு கண்காணிப்பு படகுகளை இலவசமாக வழங்கி இருந்தமை குறிப்பிட தக்கது
தனுஷ்கோடி கடற்கரையில் மயங்கிய நிலையில் தம்பதிகள் மீட்பு
தனுஷ்கோடி கடற்கரையில் மயங்கிய நிலையில் தம்பதிகள் மீட்பு
இலங்கையில் இருந்து படகு மூலம் தனுஷ்கோடிக்குச் சென்ற வயதான தம்பதிகள் கடற்கரையில் மயங்கிக் கிடந்த நிலையில் மீட்க பட்டுள்ளனர் .
இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக இதுவரையிலும் 85-க்கும் மேற்பட்டவர்கள் அகதிகளாக தமிழகம் தனுஷ்கோடி வழியாக சென்றுள்ளனர்.
இந்த நிலையில் திருகோணமலை பகுதியில் இருந்து படகு மூலம் வயதான தம்பதிகள் 2 பேர் இன்று (27) அதிகாலை ராமேஸ்வரம் அருகே உள்ள தனுஷ்கோடி கடற்கரையில் வந்து இறங்கினர்.
இவர்கள் இருவரும் மயக்கமுற்ற நிலையில் கடற்கரையில் சுருண்டு விழுந்து கிடந்தனர்.
கடற்கரையில் 2 வயது சிறுவனை கடித்து குதறிய நாய்கள்
இதுகுறித்து தகவல் அறிந்த கடலோர பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மயக்க நிலையில் இருந்த அவர்களை மீட்டு அம்பியூலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.







