மாடுகளை ஏற்றிச் சென்ற லொறி விபத்து
Posted in இலங்கை செய்திகள்

மாடுகளை ஏற்றிச் சென்ற லொறி விபத்து

மாடுகளை ஏற்றிச் சென்ற லொறி விபத்து

மாடுகளை ஏற்றிச் சென்ற லொறி விபத்து ,நுவரெலியா ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் இன்று (18) மாடுகளை ஏற்றிச் சென்ற லொறியில் திடீரென ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக

வாகனத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாக கட்டுப்பாட்டை இழந்து மண்மேட்டில் மோதி விபத்துக்குள்ளானதில் லொறியின் உதவியாளர் பலத்த காயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வெளிமடை பகுதியில் இருந்து நுவரெலியா வழியாக ஹட்டன் பகுதியில் உள்ள பண்ணை ஒன்றுக்கு குறித்த மாடுகளை ஏற்றிச்சென்ற போதே குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்துக்குள்ளான போது லொறியினுள் 9 மாடுகள் இருந்துள்ளதாகவும் அவற்றில் 2 மாடுகளுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளமையால் அருகில் உள்ள மிருக வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும்

இரண்டு மாடுகள் மாயமாகியுள்ளதாகவும் அவற்றை தேடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் ஐந்து தொன்களுக்கும் குறைவான வாகனங்கள் மாத்திரம் சென்று வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் பொலிஸாரும் இணைந்து இந்த

வீதியின் போக்குவரத்து தொடர்பில் சாரதிகளுக்கு விழிப்புணர்வூட்டும் ஏராளமான பதாதைகள் வீதியில் இருபுறமும் காட்சிப்படுத்தப்பட்டள்ள போதிலும் சட்டங்களை மீரும் சாரதிகள் இந்த வீதியில் ஐந்து தொன்களுக்கும்

அதிக எடையுள்ள வாகனங்களைச் செலுத்துவதன் காரணமாகவே அதிக விபத்துக்கள் தொடர்ச்சியாக இடம் பெற்று வருகின்றது.

விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

எனவே வீதி அபிவிருத்தி அதிகார சபை, பொலிஸார் மற்றும் பொறுப்பான அதிகாரிகள் இணைந்து நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் கனரக

வாகனங்கள் இங்கு செல்லாமல் தடுப்புகளை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

மாடு அறுக்கும் தொழுவம் குறித்து முறைப்பாடு
Posted in இலங்கை செய்திகள்

மாடு அறுக்கும் தொழுவம் குறித்து முறைப்பாடு

மாடு அறுக்கும் தொழுவம் குறித்து முறைப்பாடு

நானுஓயா பிரதான நகரில் அமைந்துள்ள மாடு அறுக்கும் தொழுவத்தில் சட்டவிரோத நடவடிக்கைகள் இடம்பெறுவதாக அக்கிராம மக்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

நானுஓயாவில் முறைசாரா மற்றும் சட்டவிரோத பசுக்கொலை மற்றும் மாட்டிறைச்சி வியாபாரம் நடைபெறுவதாக உரிய ஆதாரங்களுடன் கூடிய புகைப்படங்கள் நானுஓயா பிரதேசவாசிகள் குழுவொன்றும் இதில் அதிகம்

மாடு அறுக்கும் தொழுவம் குறித்து முறைப்பாடு

பாதிக்கப்பட்ட தரப்பினர்கள் இணைந்து எழுத்து மூலம் அடங்கிய கையொப்பங்கள் மற்றும் உரிய தீர்வை வழங்குமாறு கோரி ஜனாதிபதி

சுகாதார அதிகாரிகள், பௌத்த விவகார அமைச்சர், நீதி அமைச்சர், மத்திய மாகாண ஆளுநர் மற்றும் தலைமை மாநகர சுகாதார பரிசோதகர் உட்பட 19 இடங்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

அத்துடன், அடிக்கடி இப்பகுதியில் சட்டவிரோத மாடு வெட்டும் செயற்பாடுகள் இடம்பெற்றுவரும் நிலையில், உரிய அதிகாரிகள் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரியுள்ளனர்.

வீடியோ

Posted in இலங்கை செய்திகள்

மடு திருத்தலத்தின் வருடாந்த ஆடித் திருவிழா

மடு திருத்தலத்தின் வருடாந்த ஆடித் திருவிழா

கடந்த யூன் மாதம் 23 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார், மடு திருத்தலத்தின் வருடாந்த ஆடித் திருவிழா தற்போது நடைபெறுகிறது

திருவிழாத் திருப்பலி தமிழ், சிங்கள மொழிகளில் ஆயர்களின் தலமையில் கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்படுகிறது.

திருவிழாத் திருப்பலியை மன்னார் மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி லயனல் இம்மானுவேல் வெர்னாண்டோ ஆண்டகை, யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர்

அருட்கலாநிதி ஜஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை ஆகியோர் ஒப்புக்கொடுக்கிறார்கள்.

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருவிழாவில் பங்கேற்றுள்ளார்கள்.

திருவிழாத் திருப்பலியின் நிறைவில் மடு அன்னையின் திருச்சொரூப பவனி இடம்பெற்று,
திருச்சொரூப ஆசீர்வாதத்துடன் திருவிழா நிறைவடையும்.

Posted in இலங்கை செய்திகள்

மாட்டு திருடர்களை மடக்கிய காவல்துறை

மாட்டு திருடர்களை மடக்கிய காவல்துறை

திருகோணமலை, உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சர்தாபுர பிரதேசத்தில் சிறிய

லொறியொன்றில் நேற்று (31) அதிகாலை 4.30 மணியளவில் இறைச்சிக்காக கடத்திச் செல்லப்பட்ட 16 மாடுகளை தாம் மீட்டுள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

அத்தோடு, மாடுகளை ஏற்றிச் சென்ற லொறி பரிமுதல் செய்யப்பட்டு, லொறியின் ஓட்டுநரையும் உதவியாளரையும் கைதுசெய்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட 16 மாடுகளில் 10 ஆண் மாடுகளும் 6 பசுக்களும் அடங்குவதாகவும் கைது

செய்யப்பட்டவர்களையும் மீட்கப்பட்ட மாடுகளையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் உப்புவெளி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

    Posted in உலக செய்திகள்

    யுத்த பகுதியில் மாடுகளை திருடும் இராணுவம்

    யுத்த பகுதியில் மாடுகளை திருடும் இராணுவம்

    வடக்கு சிரியாவின் அல் அமீர் கிராமத்தில் வசித்து வந்த மக்களின் கால்நடைகளை

    துருக்கிய ஆதரவுடன் இயங்கி வரும் துணை இராணுவ குழுக்கள் திருடி செல்கின்றனர்

    இவ்விதம் ஒரே நாளில் இருபது மாடுகள் திருடி செல்ல பட்டுள்ளன ,இவற்றுடன்

    ஆடுகளும் உள்ளடங்கும் என் பாதிக்க பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்

    சமரச காலத்தில் இவ்விதம் இந்த கால்நடைகள் திருட்டு போவது

    மக்கள் மத்தியில் துயரை ஏற்படுத்தியுளளது

    மாடு
    மாடு
    Posted in உலக செய்திகள்

    பிரிட்டனில் முதலாளியை குத்தி கொன்ற எருமை – மூவர் காயம்

    பிரிட்டனில் முதலாளியை குத்தி கொன்ற எருமை – மூவர் காயம்

    பிரிட்டன் தெற்கு வேல்ஸ் பகுதியில் பால் பண்ணை வைத்து நடத்தி வந்த 57 வயது

    நபர் ஒருவரை , அவர் வளர்த்து வந்த எருமை ஒன்று கொம்பால் கோரமாக குத்தி படுகொலை .செய்துள்ளது

    இவரை கொலை செய்த பின்னர் அவரது மனைவி ,மற்றும் மகன் மீது கோரமாக

      தாக்குதல் நடத்தியுள்ளது .இதில் பலத்த காயமடைந்த நிலையில் அம்புலன்ஸ் வரவழைக்க பட்டு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்க பட்டுள்ளனர்

      தற்போது ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க படுகிறது ,சீஸ் செய்வதற்கு

      எருமையில் பாலை கறக்க முற்பட்ட பொழுதே இந்த திடீர் தாக்குதலை எருமை மாடு மேற்கொண்டுள்ளது

      விரைந்து வைத்த காவல் துறையினர் எருமையை சுட்டு கொன்றனர் ,பால் மாடு வயதாகும்

        வேளையில் பின்னர் அதனை இறைச்சிக்கு விற்பனை செய்து வருவது

        வழமையான ஒன்றாகும் ,மேற்படி சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

        பிரிட்டனில் முதலாளியை
        பிரிட்டனில் முதலாளியை
            Posted in உலக செய்திகள்

            ஐந்து கன்று குட்டிகளை ஈன்று அதிசய மாடு – video

            ஐந்து கன்று குட்டிகளை ஈன்று அதிசய மாடு – video

            இந்தியா கேரளா பகுதியில் மாடு ஒன்று ஐந்து கன்று குட்டிகளை ஈன்ற அதிசயம் நிகழ்ந்துள்ளது .


            இந்த அதிசிய மாட்டை கண்டு செல்ல அந்த வீட்டுக்கு மக்கள் படை எடுத்த வண்ணம் உள்ளனர்

                உலக ஊடகங்கள் முதல் சமூக வலைத் தளங்கள் வரை மிக வேகமாக

                பரவி ,வருகிறது கடவுளின் அதிசயத்தில் எத்தனை அதிசயங்கள்

                ஐந்து கன்று குட்டிகளை
                ஐந்து கன்று குட்டிகளை
                https://www.facebook.com/nayagan.arul.9/videos/1010273632707379/

                    Posted in இலங்கை செய்திகள்

                    இறைச்சிக்காக பசு மாடுகளை கொண்டு சென்றவர்கள் கைது

                    இறைச்சிக்காக பசு மாடுகளை கொண்டு சென்றவர்கள் கைது

                    இலங்கையில் ஊரடங்கு சட்டத்தை பயன் படுத்தி மாடுகளை இறைச்சிக்காக

                    கொண்டு சென்ற நபர்கள் காவல் துறையினரால் மடக்கி பிடிக்க பட்டுள்ளனர்

                    அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வது என்ற அனுமதி பத்திரத்தை

                    பயன் படுத்தி பசு மாடுகளை வெட்ட சென்ற வேளையை இந்த கைது இடம் பெற்றுள்ளது

                    இறைச்சிக்காக பசு மாடுகளை கொண்டு சென்றவர்கள் கைது
                    இறைச்சிக்காக பசு மாடுகளை கொண்டு சென்றவர்கள் கைது