Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதி தெரிவு தொடர்பில் நாளை மனோ கணேசன்

ஜனாதிபதி தெரிவு தொடர்பில் நாளை மனோ கணேசன்

தமிழ் முற்போக்கு கூட்டணி தலைமைக்குழு ஜனாதிபதி தெரிவு தொடர்பில் நாளை முடிவு
– தமுகூ தலைவர் மனோ கணேசன்

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமைக்குழு நாளை செவ்வாய்கிழமை 19ம் திகதி
மாலை 6 மணிக்கு கொழும்பு நுகேகொடை ஏகநாயக அவனியுவில் (#15/1 Ekanayake Avenue, Nugegoda)
அமைந்துள்ள கட்சி செயலகத்தில் கூடி, 20ம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட
வேட்பு மனுக்கள் சமர்பித்துள்ள அனைத்து வேட்பாளர்கள் தொடர்பிலும், கலந்துரையாடி முடிவெடுக்கும் என தமிழ்
முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி ஊடகங்களுக்கு தெரிவத்துள்ளார்.

    Posted in உலக செய்திகள்

    இளம்பெண்ணை மனைவியுடன் இனைந்து கற்பழித்த கணவன்

    இளம்பெண்ணை மனைவியுடன் இனைந்து கற்பழித்த கணவன்

    இந்திய டில்லி பகுதியில் செருப்பு தொழில் சாலையில் பணிபுரிந்த 15 வயது இளம் பெண்ணை அந்த நிறுவனத்தின் மேனேஜர் கற்பழித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தனது மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என அந்த சிறுமியை வீட்டுக்கு அழைத்து சென்ற கணவன் தனது மனைவியுடன் இணைந்து இளம் பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார்.

    மூன்று நாட்களாக கொடூரமாக கற்பழித்த அவர் பின்னர் பெண்ணின் வீட்டுக்கு அனுப்பி வைக்கும் பொழுது அவளது வாய்க்குள் அசிட்டை ஊற்றியுள்ளார் .

    இளம்பெண்ணை மனைவியுடன் இனைந்து கற்பழித்த கணவன்

    அதனை அருந்திய இளம் பெண் உடல் பகுதியில் பலமாக எரிந்த நிலையில் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளார்.

    கொலை கற்பழிப்பு மற்றும் கடத்தல் வழக்கில் மேனேஜர் கைது செய்யப்பட்டு நீதிமனற விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார் .

    மேற்படி இளம் பெண் கற்பழிப்பு சம்பவம் அந்த பகுதியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பெண்கள் அமைப்புக்கள் இந்த கற்பழிப்பை புரிந்த நபருக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என போராட்டங்களில் குதித்துள்ளனர்.

    தனது மனைவியுடன் இணைந்து இளம் பெண்ணை கற்பழித்த கணவன் செயல் உலகளாவிய ரீதியில் மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

      Posted in இலங்கை செய்திகள்

      மக்கள் போராட்டம் 100 நாட்களை நிறைவு

      மக்கள் போராட்டம் 100 நாட்களை நிறைவு

      காலி முகத்திடலில் ஆரம்பமான போராட்டம் இன்றுடன் (17) 100 நாட்களை நிறைவு செய்கிறது.

      கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி, கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி பதவியிலிருந்து விலகுமாறு வலியுறுத்தி இளைஞர்கள் குழுவொன்று இந்த எதிர்ப்புப் பிரச்சாரத்தை ஆரம்பித்தது.

      இதேவேளை, போராட்டத்தில் தங்களது உயிரை அர்ப்பணித்த மக்களைக் நினைவுகூறும் விசேட நிகழ்வும் நேற்று (16) இரவு போராட்ட களத்தில் இடம்பெற்றது.

      இதற்கு திரளான மக்கள் கலந்துகொண்டதுடன், போராட்டத்தின் 100வது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

        Posted in பிரித்தானிய செய்தி

        லண்டனில் இளம் பெண் குற்றி கொலை இருவர் கைது

        லண்டனில் இளம் பெண் குற்றி கொலை இருவர் கைது

        லண்டன் Elfirda Close பகுதியில் வீட்டுக்குள் வைத்து முப்பது வயதுடைய இளம் பெண் ஒருவர் குற்றி கொலை செய்யப்பட்டுள்ளார் .

        பலமான கத்தி குத்துக்கு இலக்கண நிலையில் பெண் மருத்துவமனையில் அனுமதிக்க பட்ட பொழுதும் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளார்.

        லண்டனில் இளம் பெண் குற்றி கொலை இருவர் கைது
        லண்டனில் இளம் பெண் குற்றி கொலை இருவர் கைது

        இந்த பெண் கொலை குற்றத்தில் ஈடுபட்டார்கள் என்ற குற்ற சாட்டில் முப்பது வயதான ஆணும் இருபது வயதுடைய பெண்ணும் கைது செய்யப்பட்டனர் .

        இருபது வயது பெண் இந்த பெண்ணை குற்றி கொலை புரிந்திட உதவினார் என்ற குற்றத்தில் கைது செய்ய பட்டுள்ளார்.

        கைதானவர்கள் ஆண் பெண் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளனர் .


        லண்டனில் சமீப காலங்களாக இவ்விதமான கத்தி குத்து தாக்குதல்கள் சம்பவங்கள் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது.

          Posted in இலங்கை செய்திகள்

          ரணிலை விரட்டுவோம் மக்கள் முழக்கம் கொதிக்கும் இலங்கை

          ரணிலை விரட்டுவோம் மக்கள் முழக்கம் கொதிக்கும் இலங்கை

          இலங்கையில் ரணில் விக்கிரமசிங்கா அதிகாரத்தில் இருப்பதை அனுமதிக்க முடியாது என இலங்கை போராட்ட காரர்கள் அறிவித்துள்ளனர்.

          தொடர்ந்தும் அதி உயர் பதவியில் நாட்டை மேலும் ரணில் விக்கிரமசிங்க ஆள முனைந்தால் அவருக்கு எதிராக பாரிய போராட்டத்தை முன்னெடுப்போம்.

          பல் நாட்டு அரசுடன் இணைந்து அதிகாரத்தை தக்கவைத்து கொள்ள ரணில் விக்கிரமசிங்க கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக மக்கள் தெரிவித்துள்ளனர் .

          ராஜபக்ச குடும்பத்தை காப்பாற்றிடவும் மேலும் நாட்டை கீழ்நோக்கி செல்லும் நிலைக்கு எடுத்து செல்ல பிற் படுத்தப்பட்ட சிந்தனைக்குள் ஊறியுள்ள ரணில் முயல்வார் .

          ரணிலை விரட்டுவோம் மக்கள் முழக்கம் கொதிக்கும் இலங்கை

          அதனால் அவரை அந்த பதவியில்; இருந்து விரட்டும் வரை நாம் போராடுவோம் என்கின்றனர் மக்கள் .

          இவ்வாறான மக்கள் போராட்டங்கள் இலங்கையில் தொடர்ந்தால் இலங்கை மேலும் சோமாலியாக மாறும் நிலை ஏற்படும் என மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

          மக்கள் மன்றம் விரும்பாத ஒருவர் ஜனாதிபதி நிலையில் அங்கம் வகிப்பதை முற்றாக கைவிட வேண்டும் என அந்த போராட்ட கார்கள் தெரிவித்துள்ளனர்.


          எரிபொருளை நாட்டுக்குள் எடுத்து அதனை நிவர்த்தி செய்துவிட்டால் மக்கள் போராட்டம் அமைதியாகிவிடும் என்பதால் எரிபொருளில் மற்றும் எரிவாயு விநியோகத்தை150 ரூபாவுக்குள் மக்களுக்குவிற்பனை செய்திடும் நரி தந்திரத்தில் ரணில் ஈடுபட்டுள்ளார்.

          இது தனது அதிகாரத்தை தக்க வைத்து கொள்ள்வும் மக்கள் எழுச்சியை மழுங்கடிக்க ரணில் விக்கிரமசிங்க போட்டுள்ள மகா நரி திட்டங்களில் இதுவும் ஒன்று என போராட்டகாரர்கள் தெரிவித்துள்ளனர் .

            Posted in இலங்கை செய்திகள்

            மக்கள் போராட்டங்களை தடுக்க கொழும்பில் ஊரடங்கு

            மக்கள் போராட்டங்களை தடுக்க கொழும்பில் ஊரடங்கு

            இலங்கையில் ஜனாதிபதி கோட்டாவை தொடர்ந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவை பதவி விலக வேண்டும் என கோரி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

            ஆனால் ரணில் பதவி விலகி மறுத்து மக்களை அடக்கி ஒடுக்க இராணுவம் போலீசை ஏவி விட்டுள்ளனர் .

            இதனால் இன்று மதியம் 12 மணி முதல் காலை ஐந்து மணிவரை கொழும்பு பகுதியில் ஊரடங்கு சட்டம் அமூல் படுத்த பட்டுள்ளது.

            பிரதமர் ரணிலின் இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

            ஊரடங்கு நீக்க பட்ட பின்னர் பிரதமர் ரணிலுக்கு எதிராக ஆயிர கணக்கில் மக்கள் எதிர்ப்பு பேரணியில் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்க படுகிறது.

              Posted in இலங்கை செய்திகள்

              ரணில் உடனடியாகப் பதவி விலக வேண்டும் – கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துரையாடல்

              ரணில் உடனடியாகப் பதவி விலக வேண்டும் – கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துரையாடல்

              நாட்டில் தற்பொழுது நிலவும் நெருக்கடி நிலையை தணிக்க ஒரு தீர்வாக பிரதமர் கூடிய விரைவில் தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என பாராளுமன்ற அலுவலகங்கள் பற்றிய குழுவின் உறுப்பினர்கள் மற்றும்

              பாராளுமன்ற கட்சி தலைவர்களின் பங்குபற்றலில் நேற்று (13) பிற்பகல் பாராளுமன்றக் கட்டத் தொகுதியில் இடம்பெற்ற விசேட கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.

              தற்பொழுது ஏற்பட்டுள்ள அரசியல் நிலவரம் குறித்து கௌரவ சபாநாயகர் விளக்கம் அளித்தார்.

              நாட்டில் நிலவும் சூழ்நிலை தொடர்பில் கட்சித் தலைவர்கள் நீண்ட நேரம் கலந்துரையாடியதுடன், பாதுகாப்பு படைகளின் பிரதானி, முப்படைகளின்

              தளபதிகள் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோர் தற்போதைய பாதுகாப்பு நிலமைகள் குறித்து இங்கு விளக்கம் அளித்தனர்.

              நாட்டு மக்களுக்கு அறிவித்தது போன்று இன்று (13) நள்ளிரவு 12மணிக்கு முன்னர் ஜனாதிபதி அவர்களின் பதவி விலகல் கடிதம் அனுப்பி வைக்கப்படும்

              என அதிமேதகு ஜனாதிபதி தொலைபேசி ஊடாக தனக்கு அறிவித்திருப்பதாக சபாநாயகர் இங்கு தெரிவித்தார்.

              ரணில் உடனடியாகப் பதவி விலக வேண்டும் – கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துரையாடல்

              இந்தக் கூட்டத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கௌரவ டிரான் அலஸ் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ மைத்திரிபால சிறிசேன, கௌரவ லக்ஷ்மன் கிரியல்ல, கௌரவ அனுரகுமார திஸாநாயக்க, கௌரவ மனோ

              கணேசன், கௌரவ வாசுதேவ நாணயக்கார , கௌரவ வீரசுமன வீரசிங்க, கௌரவ டக்ளஸ் தேவானந்தா, கௌரவ கயந்த கருணாதிலக, கௌரவ ரஞ்சித் மத்தும பண்டார, கௌரவ அங்கஜன் ராமநாதன் , கௌரவ கெவிந்து

              குமாரசிங்க, கௌரவ ரவூப் ஹக்கீம், கௌரவ வி.ராதாகிருஷ்ணன், கௌரவ உதய கம்மன்பில,


              சங்கைக்குரிய அத்துரலிய ரத்ன தேரர், கௌரவ எம் .ஏ சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

                Posted in இலங்கை செய்திகள்

                இலங்கையில் 6 மாதங்களில் விபத்தில் சிக்கி 459 பேர் உயிரிழப்பு

                இலங்கையில் 6 மாதங்களில் விபத்தில் சிக்கி 459 பேர் உயிரிழப்பு

                2022 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் ,இடம்பெற்ற வீதி விபத்துகள் காரணமாக 1,459 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

                ஜனவரி முதலாம் திகதி முதல் ஜூலை முதலாம் திகதி வரையான காலப்பகுதியில் இந்த விபத்துக்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

                மேலும், 1,387 பாரிய வீதி விபத்துக்களில் 1,459 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்துகளில் 3,326 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

                இந்த காலகட்டத்தில், 4,309 சிறு விபத்துகளும், 2,229 விபத்துக்களில் சொத்துக்களுக்கான சேதங்களும் ஏற்பட்டுள்ளன.

                எவ்வாறாயினும், இந்த நாட்களில் திடீரென வீதிகளில் வாகனங்களின் எண்ணிக்கை
                குறைந்ததினால் விபத்துக்கள் மிகக்குறைவாகவே காணப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

                  Posted in இலங்கை செய்திகள்

                  கோட்டாவை தூக்கில் மாட்டு வெளிநாடுகளில் தமிழர்கள் போராட்டம்

                  கோட்டாவை தூக்கில் மாட்டு வெளிநாடுகளில் தமிழர்கள் போராட்டம்

                  ஓட ஓட விரட்டுவோம்….நீதியின் முன் நிறுத்துவோம்….! போராடத் தயாராகும் புலம்பெயர் தமிழர்கள் !! – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

                  தமிழர்களுக்கு எதிரான சிறிலங்கா அரசின் இனப்படுகொலையாளி கோத்தபாய இராஜபக்சவுக்கு எதிரான போராட்டங்களுக்கு புலம்பெயர் தமிழர்கள் தயாராகி வருவதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது.

                  நாட்டைவிட்டு வெளியேறி தற்போது மாலைதீவில் தஞ்மடைந்துள்ள சிறிலங்காவின் ஜனாதிபதி கோத்தபாய இராஜபக்ச, அங்கிருந்து சிங்கப்பூருக்கு செல்ல இருப்பதாக செய்திகள் கூறப்படுகின்னறன.

                  இந்நிலையில் சர்வதேச நியாயாதிக்கத்தின் (universal jurisdiction) அடிப்படையில் இனப்படுகொலையாளி கோத்தபாய இராஜபக்ச கைது செய்யப்பட்டு

                  கோட்டாவை தூக்கில் மாட்டு வெளிநாடுகளில் தமிழர்கள் போராட்டம்

                  அந்நாட்டு நீதிமன்றின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் அந்நாட்டு தூதரகங்கள் முன்னால் போராட்டங்களை நடத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

                  ‘ஓட ஓட விரட்டுவோம்….நீதியின் முன் நிறுத்துவோம்….!’

                  என்ற முழக்கத்துடன் ஏற்பாடாகி வரும் இப்போராட்டத்தில் அனைத்து தமிழர் அமைப்புக்களையும் ஒருங்கிணையுமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சு கோரியுள்ளது.

                  போர் குற்றங்களில் ஈடுபட்டுள்ள சிறிலங்காவின் அரச பிரதிநிதிகளுக்கு எதிராக ஐ.


                  நா உறுப்பு நாடுகள் சர்வதேச நியாயாதிக்கத்தின் கீழ் சட்ட நடவடிக்கையினை முன்னெடுக்க வேண்டும் என


                  ஐ.நா மனித உரிமைச்சபையின் ஆணையாளர் மிச்சல் பசேலே அம்மையாhர் அவர்கள் முன்னர் அழைப்பொன்றினை விடுத்திருந்தார் என்பது இங்கு குறிப்பிடதக்கது.

                    Posted in பிரித்தானிய செய்தி

                    லண்டனில் வேகமாக பரவும் கொரோனோ தமிழர்கள் அதிகம் பாதிப்பு

                    லண்டனில் வேகமாக பரவும் கொரோனோ தமிழர்கள் அதிகம் பாதிப்பு

                    பிரிட்டன் லண்டன் பகுதியில் சமீப வாரங்களில் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி பல நூறு தமிழர்கள் பாதிக்க பட்டுள்ளனர்.

                    மக்கள் முகமூடிகளை அணியாது உலவிய வண்ணம் உள்ளனர்

                    பேருந்து மற்றும் பொது போக்குவரத்து பொது இடங்களில் அலட்சியத்துடன் நடந்து திரிந்தவர்களுக்கு இந்த நோயானது அதிகம் தாக்கியுள்ளது.

                    தற்ப்போது கொரோனோ நோயானது மக்களுக்கு தொற்றி கொண்டாலே அதனை சோதனை செய்வதற்கு பணம் செலுத்த வேண்டும் .

                    முன்னர் லண்டனில் அது இலவசமாக கிடைக்க பெற்று வந்த நிலையில் தற்போது அதற்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்கிறது பிரிட்டன் அரசு .

                    நமக்கு தெரிந்த பல தமிழர்கள் இந்த நோயினால் பீடிக்க பட்டுள்ளனர் ,தமிழர்களே எச்சரிக்கையாக செயல்படுங்கள்.


                    பிரிட்டன் தழுவிய நிலையில் கொரனோ நோயானது மீளவும் அதிகமாக தாக்கி வருகிறது.

                    வரும் முன் தடுப்போம் உயிரை கப்பபோம் .

                      Posted in இலங்கை செய்திகள்

                      கோட்டா வாகனங்கள் திருட்டு தேடும் பொலிஸ்

                      கோட்டா வாகனங்கள் திருட்டு தேடும் பொலிஸ்

                      ஜனாதிபதி இல்லம் மற்றும் மாளிகையை முற்றுகையிட்ட போராட்ட காரர்கள் அந்த ஜனாதிபதி மாளிகை மற்றும் காரியாலயங்கள் என்பனவற்றை சேதமாக்கினர் .

                      அவ்வேளை ஜனாதிபதி மாளிகை மற்றும் காரியாலயங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருபது வாகனங்கள் மற்றும் அதன் கராச்சில் வைக்க பட்டிருந்த வாகன உதிரி பாகங்கள் என்பன காணாமல் போயுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

                      இவ்வாறு கணம் போன வாகனங்களை மீட்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

                      மேலும் ஜனாதிபதி மாளிகை என்பனவும் சேதமாக்க பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

                      இதன் திரொலியாக பலர் கைது செய்யப்படலாம் என எதிர் பார்க்க படுகிறது.


                      போலீசார் தகவல் அடிப்படையில் அங்கிருந்த வாகன உதிரிபாகங்களில் கிட்டத்தட்ட முழுவதுமாக காணாமல் போயுள்ளதக தெரிவிக்க படுகிறது.

                      கோட்டா கொள்ளையடித்த பணத்தை விட அந்த வாகன உதிரி பக்கங்கள் பெறுமதியா என மக்கள் மன்றம் கேட்பது சரியாகாதான் உள்ளது .

                        Posted in இலங்கை செய்திகள்

                        பேரூந்துக்கு கல்வீச்சு தாக்குதல் நடத்திய பெண் கைது

                        பேரூந்துக்கு கல்வீச்சு தாக்குதல் நடத்திய பெண் கைது

                        வவுனியா புளியம் குளம் பகுதியில் பயணித்த அரச பேரூந்து ஒன்றை இளம் பெண் ஒருவர் வழிமறித்துள்ளார் .

                        அவ்வேளை அந்த பேரூந்து நிற்காது புறப்பட்டு சென்றுள்ளது .

                        இதனால் ஆத்திரமுற்ற இளம் பெண் அந்த அரச பேரூந்து மீது கல்வீச்சு தாக்குதலை மேற்கொண்டுள்ளார் .

                        பேரூந்து மீது கல்வீச்சு தாக்குதலை புரிந்த குற்றத்திற்காக அந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

                        எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மக்கள் பெரிதும் அவதியுற்று வரும் நிலையில் இவ்வாறான சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றமை குறிப்பிட தக்கது.

                          Posted in உலக செய்திகள்

                          ரசியா இராணுவத்தின் 3 கேணல்கள் ஒரே நாளில் படுகொலை

                          ரசியா இராணுவத்தின் 3 கேணல்கள் ஒரே நாளில் படுகொலை

                          ரசியா இராணுவத்தின் முக்கிய படை தளபதிகளாக விளங்கிய மூன்று கேணல் தர இராணுவ அதிகாரிகள் உக்கிரேன் தாக்குதலில் படுகொலை செய்ய பட்டுள்ளனர்.

                          இவர்களே முக்கிய தாக்குதல்களை உக்கிரேன் மீது திட்டமிட்டு வழிநடத்தி வந்தவர்கள் .

                          அவ்விதமான மூவரும் இந்த போர் முனையில் உக்கிரேன் தாக்குதலில் படுகொலை செய்யப் பட்டுள்ளனர்.

                          ரசியாவின் இராணுவ முக்கிய கேணல் தர நபர்கள் நடமாட்டங்களை அமெரிக்கா உளவுத்துறை கண்காணித்து தகவல் வழங்க அந்த செய்மதி தகவலுடன் ரசியா இராணுவம் மீது உக்கிரேன் தாக்குதலை நடத்தி வருகிறது

                          .ரசியா இராணுவத்தின் 3 கேணல்கள் ஒரே நாளில் படுகொலை

                          இதற்கு பதிலடி தரும் வகையில் ஈரான் வழங்கிய உளவு விமானங்களை பயன் படுத்தி ரசியா உக்கிரேன் மீது கடும் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

                          ஈரானின் இந்த உளவு விமானங்களின் செயல் பாடுகள் மிக முக்கியமான பலத்தை ரசியா இராணுவத்திற்கு வழங்கியுள்ளது.

                          உக்கிரேன் கிழக்கு பகுதிகள் மீது ரசியா இராணுவம் அகோர தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது.

                          இதுவரை இன்றைய நாளில் அறுபதுக்கு மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளதாக உக்கிரேன் தெரிவிக்கிறது .

                          Posted in உலக செய்திகள்

                          ஆர்மேனியாவில் புதிய இராணுவ தளம் 2000 ரசியா இராணுவம் குவிப்பு

                          ஆர்மேனியாவில் புதிய இராணுவ தளம் 2000 ரசியா இராணுவம் குவிப்பு

                          ஆர்மேனியாவில் ரசியா இராணுவம் பாரிய இராணுவ முகாம் ஒன்றை அமைக்கிறது .

                          இந்த புதிய இராணுவ முகாமில் சுமார் இரண்டாயிரம் ரசியா இராணுவம் தங்க வைக்க ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன .


                          விமான தளத்துடன் கூடிய நவீன வசதிகளுடன் இந்த இராணுவத் தளத்தை ரசியா இராணுவம் அமைத்து வருகிறது.

                          ஆர்மேனியாவில் ரசியா இராணுவம் நிறுவ படுவதால் அமெரிக்கா நேட்டோ இராணுவம் கொதிப்பில் உறைந்துள்ளது .


                          மேலும் இந்த ரசியா இராணுவ முகாம் அமைத்தல் நாடுகளுக்கு இடையில் பதட்டத்தை அதிகரித்துள்ளது.

                          Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                          மலிவு விற்பனையில் லண்டன் Bexley Bromley Greenwich and Lewisham
                          பகுதிகள் வீடுகள்

                          மலிவு விற்பனையில் லண்டன் Bexley Bromley Greenwich and Lewisham
                          பகுதிகள் வீடுகள்

                          லண்டன் Bexley Bromley Greenwich and Lewisham
                          பகுதிகள் உள்ள மாநகர சபைகளில் வீடுகள் ஐந்து லட்சம் வரை கடந்த பன்னிரெண்டு மாதங்களுக்குள் மலிவு விலையில் விற்பனை செய்யப் பட்டுள்ளன.

                          கொரனோ தொற்று நோயானது வேகமாக பரவிய நிலையில் அந்த நோயின் தாக்குதலின் பொழுதும் வீடுகள் மலிவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

                          இந்த பகுதிகளில் வீடுகளின் விலை ஐந்து லட்சம் முதல் £573,280.வரையிலான விலைக்குள் அதிகமாக விற்பனை செய்ய பட்டுள்ள புதிய புள்ளி விபரம் வெளியாகியுள்ளது.


                          மேலும் இதே பகுதிகளில் மக்கள் வீடுகளை வாங்கி குவித்திட முயன்று வருவதாக அந்த தகவலில் மேலும் தெரிவிக்க பட்டுள்ளது .


                            கேழ்வரகு மாவுடன் பாசிப்பருப்பு சேர்த்து இப்படி ஒருமுறை செஞ்சு பாருங்க| Ragi flour Healthy Breakfast
                            Posted in இலங்கை செய்திகள்

                            சஜித் பிரேமதாச ஜனாதிபதியாகிறார்

                            சஜித் பிரேமதாச ஜனாதிபதியாகிறார்

                            இலங்கையில் முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசாவின் மகன் சஜித் பிரேமதாச இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவாகிறார் .

                            இவரை ஜனாதிபதியாகி நியமிக்குமாறு எதிர் கட்சிகள் பல பரிந்துரை செய்துள்ளதால் இவரே ஜனாதிபதியாகும் நிலை உருவாக்கம் பெறுகிறது எனப்படுகிறது .

                            அவ்வாறு இல்லாவிடினும் தேர்தல் நடத்தப்பட்டால் அதில் சஜித் மகத்தான வெற்றியை தட்டி செல்வார் என எதிர்பார்க்க படுகிறது.

                            பிரதமராக டலஸ் அழகப்பெரும நியமிக்க படலாம் என்கின்ற உள்ளக கசிவு தகவல்கள் வெளியாகியுள்ளன.


                            ஜனாதிபதி கோட்டாவுக்கு அடுத்து மக்களினால் அதிக வாக்கு பெற்றவராக சஜித் உள்ளார் .

                            எனவே அவரே ஜனாதிபதியாக்க வேண்டும் எனப்து மக்கள் பொது நிலைப்பாடாகவும் உள்ளது குறிப்பிட தக்கது.

                              Posted in இலங்கை செய்திகள்

                              இலங்கைக்கு இந்தியா இராணுவம் அனுப்ப படமாட்டாது

                              இந்தியா தனது படைகளை இலங்கைக்கு அனுப்புவதாக ஊகங்களின் அடிப்படையில் பல்வேறு ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும்

                              வெளியாகியிருக்கும் செய்திகளை உயர் ஸ்தானிகராலயம் முற்றுமுழுதாக மறுக்கின்றது.

                              இச்செய்திகளும் இவ்வாறான நோக்குகளும் இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை அடிப்படையாகக் கொண்டவை அல்ல.

                              1. ஜனநாயக பெறுமானங்கள் மற்றும் விழுமியங்கள், நிறுவனமயப்படுத்தப்பட்ட அமைப்புகள் மற்றும் அரசியலமைப்பு ரீதியான
                              2. கட்டமைப்பு ஆகியவற்றின் ஊடாக செழுமை மற்றும் முன்னேற்றத்தினை நனவாக்க விரும்பும் இலங்கை மக்களுடன் இந்தியா துணை நிற்பதாக இந்திய வெளியுறவு

                              3. அமைச்சின் ஊடகப்பேச்சாளர் நேற்றையதினம் மிகவும் தெளிவாக கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
                                Posted in உலக செய்திகள்

                                துப்பாக்கி சூடு 14 பேர் மரணம் 9 பேர் காயம்

                                துப்பாக்கி சூடு 14 பேர் மரணம் 9 பேர் காயம்

                                தென் ஆப்ரிக்கா tavern பகுதியில் மக்கள் கூடும் பகுதியில் ஆயுதங்களுடன் புகுந்த மர்ம நபர் நடத்திய துப்பாக்கி தாக்குதலில் சிக்கி 14 மக்கள் பலியாகினர் .

                                மேலும் இந்த துப்பாக்கி தாக்குதலில் சிக்கி ஒன்பது பேர் படுகாயமடைந்தனர் ,காயமடைந்தவர்கள் ஐந்து பேர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க படுகிறது.

                                தென் ஆப்பிரிக்காவில் இடம்பெற்ற இந்த மர்ம ஆயுததாரி நடத்திய துப்பாககி சூட்டு தாக்குதல் ஏன் என்பது தொடர்பாக தெரியவரவிலை .

                                Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                                லண்டனில் சிறுவனை கடித்து குதறிய நாய்

                                லண்டனில் சிறுவனை கடித்து குதறிய நாய்

                                லண்டன் Cumberland Avenue, Canterbury பகுதில் ஒன்பது வயது சிறுவன் ஒருவனை நாய் ஒன்று திடீரென கடித்து குதறியது .

                                இந்த சம்பவத்தின் பொழுது அந்த சிறுவன் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் அம்புலன்ஸ் உலங்குவானூர்தி மூலம் லண்டன் மருத்துவமனைக்கு எடுத்து செல்ல பட்டான்.

                                தற்போது லண்டன் மருத்துவ மனையில் சிகிச்சைபெற்று வரும் சிறுவன் நிலை தொடர்பில் உடனடியாக தெரியவரவில்லை.

                                நாயின் உரிமையாளர் கைது செய்ய பட்டு விசாரணைக்கு உள்ளாக்க பட்டுள்ளார்.

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  ஜனாதிபதி மாளிகையில் மக்கள் கூட்டம் முற்றுகை காட்சிகள்இதோ

                                  ஜனாதிபதி மாளிகையில் மக்கள் கூட்டம் முற்றுகை காட்சிகள்இதோ

                                  இலங்கை ஜனாதிபதி பதவி விலக கோரி வீதி இறங்கி போராடட்ம மக்கள் தற்போது ஜனாதிபதி மாளிகை உள்ளே புகுந்து இரண்டாவது நாளாக தமது தமது கட்டுப் பாட்டுக்குள் ஜனாதிபதி மாளிகையை வைத்துள்ளனர்.

                                  அதி நவீன வசதிகளுடன் ஆடம்பரமாக வசித்து வந்த ஜனாதிபதிகளின் வாழ்க்கையை இந்த விடயம் அம்பல படுத்தியுள்ளது.

                                  ஜனாதிபதி மாளிகையில் மக்கள் கூட்டம் காட்சிகள்இதோ

                                  மக்கள் ஜனாதிபதி அமரும் முக்கிய ஆசனங்களில் அமர்ந்து புகைப்படங்கள் காணொளிகளை பிடித்து மகிழ்ச்சியடைந்தனர் .

                                  தொடர்ந்து ஆயிர கணக்கில் மக்கள் ஜனாதிபதி மாளிகையை நோக்கி வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

                                  ஜனாதிபதி கோட்டா மற்றும் ரணில் பதவி விலகும் வரை தாம் ஜனாதிபதி மாளிகை உள்ளே தரித்து நிற்போம் என்கிறது மக்கள் கூட்டம்.

                                  தற்போது ஜனாதிபதி மாளிகை மக்கள் கண்காட்சி பூங்காவாக மாற்றம் பெற்றுள்ளது.

                                  இங்கே ஜனாதிபதி மாளிகை குறித்த பல காணொளி காட்சிகள் வைரலாகி வருகிறது .

                                  ஜனாதிபதி மாளிகையில் கோட்டாபய போலவே அவரது ஆசனத்தில் அமர்ந்து மகிழும் வாலிபர்கள் கிண்டல் பேச்சுக்கள் கலக்கலாக வைரலாகி வருகிறது.

                                  மக்கள் பணத்தில் ஜனாதிபதி மாளிகை ஆண்ட கோமாளி கோட்டாவின் கோட்டைக்குள் மக்கள் வெள்ளம் புகுந்துள்ளது.


                                  இலங்கை வரலாற்றில் பதிய பட்ட புதிய வரலாறு .தனி பெரும் பான்மை மூலம் வென்றவர் என்ற பெயரை கொண்ட கோட்டா இன்று அதே சிங்கள மக்களினால் ஜனாதிபதி மாளிகையை விட்டு நாயை போல விரட்ட பட்ட வரலாற்று சம்பவம் பதிவாகியுள்ளது .

                                  தமிழன் அழிந்த அதே மாதத்தில் ஆரம்பிக்க பட்ட ராஜபக்ச கூட்டத்தின் அவலம் இது .

                                  அரசியல் வாதிகளிற்கு நல்ல பாடமாக அமைய பெற்றுள்ளது .இது போலவே தமிழ் தலைமைகளுக்கு நடக்கும் என்பது நம்ம அரசியல்வாதிகள் புரிந்து கொண்டால் சிறப்பு .

                                  மக்கள் முதுகில் ஏறி சவாரி செய்திட நினைக்கும் அரசியல்வாதிகளிற்கு மக்கள் இனித் தர தயாராகும் தண்டனைகள் எவ்வாறு அமையும் என்பதை இதன் ஊடக காண முடியும் .

                                  ஜனாதிபதி மாளிகையில் மக்கள் கூட்டம் காட்சிகள்இதோ
                                  ஜனாதிபதி மாளிகையில் மக்கள் கூட்டம் முற்றுகை காட்சிகள்இதோ