தங்க நகை பணத்தை சுருட்டி கொண்டு தப்பி ஓடிய கோட்டா

Spread the love

தங்க நகை பணத்தை சுருட்டி கொண்டு தப்பி ஓடிய கோட்டா

இலங்கை ஜனாதிபதி கோட்டபாய இலங்கை கயானாவில் இருந்த தங்க நகைகள் மற்றும் பல மில்லியன் டொலர் பணம் என்பனவற்றை சுருட்டி கொண்டு நாட்டை விட்டு தப்பி ஓடியுள்ளார்.

இவர் இலங்கையின் விமான நிலையத்தில் தயார் நிலையில் வைக்க பட்டுள்ள விமானம் மூலம் தப்பித்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .

கோட்டாவின் தங்கம் மற்றும் பணம் என்பன கடற்படை கப்பலில் ஏற்ற பட்டு கொழும்பு துறைமுகத்தில் இருந்து அவை தப்பி சென்றுள்ளது.

ஆயுத வியாபாரத்தில் ஈடுபட்ட கோட்டபாயாவின் கப்பல் ஒன்றில் இந்த தங்கம் மற்றும் பணம் என்பன இலங்கை நடுக் கடல் பகுதியில் வைத்து மாற்ற பட்டு வெளிநட்டு ஒன்றுக்கு எடுத்து செல்ல படலாம் என எதிர் பார்க்க படுகிறது.

லிபியாவில் கடாபி,ஈராக்கில் சதாம் உசைன், ஆப்கனிஸ்தான் அதிபர் ஆகியோர் இவ்விதம் தங்கம் பணத்துடன் இறுதியில் தப்பிக்க இருந்ததும் தப்பித்து சென்றதும் வரலாறாக உள்ளது.

அவ்விதமான வரலாற்று பட்டியலில் இலங்கை இனவாதியும் தமிழ் இனப் படு கொலையாளியுமான கோட்டபாயவும் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

சிங்கள மக்களின் தனித்துவ ஆதரவு பெற்று ஆட்சிக்கு எறியவர்கள் இலங்கை என்ற நாட்டைன் சூறையாடி தமது குடும்ப வியாபாரத்தை ஆரம்பித்து நாட்டை பிச்சைக்காரர்கள் ஆக்கியுள்ளனர் .

தங்க நகை பணத்தை சுருட்டி கொண்டு தப்பி ஓடிய கோட்டா

ஐம்பது ஆண்டு ஆட்சி கனவு கலைந்து போனது .

வீணாக விடுதலை புலிகளையும் அதன் மக்களையும் அழித்த பெரும் சாப கேடு இவர்களது குடும்பத்தை துரத்துகிறது .

இப்பொழுது மகிந்த ராஜபக்ச குடும்பத்தை இலங்கையை விட்டே அதே மக்களினால் விரட்டியடிக்க பட்டுள்ள செயல் இலங்கை வரலாற்றில் பதிவாகியுள்ளது.

மக்கள் போராட்டம் வெடித்து பறக்கும் இவ்வேளையில் தங்கம் பெரும் தொகை டொலருடன் நாட்டை விட்டு தப்பி ஓடிய கேவலம் கோட்டாவுக்கு ஏற்பட்டுள்ளது .

புலிகளின் தலைவரை நாயை போல சுட்டு இழுத்து வந்தேன் என பெருமிதம் கொண்டாடிய கோட்டா அதை கேட்டு இரசித்த சிங்கள இனவாதிகள் இன்று அதே சிங்கள மக்களினால் நாயை போல விரட்டியடிக்க படும் வரலாறு இலங்கையில் எழுத பட்டுள்ளது.

தவிர பவுத்த மத சங்கத்தின் சாபக்கேடுக்கும் கோட்டா பாயாவுக்கு ஏற்பட்டுள்ளது .

இந்த நிகழ்வு இலங்கையில் ஆளும் இனி ஆளப்போகும் ஆட்சியாளர்களுக்கு ஒரு எச்சரிக்கை மணியாக அடிக்கும் .

இவ்வேளை தமிழர்களை அணைத்து செல்ல மறுத்தால் அவர்கள் ஆட்சி அதிகாரம் இழந்து தவிக்கும் நிலைக்கு இலங்கை ஆட்சியாளர்கள் அமைச்சர்கள் செல்வார்கள்.


இவ்வாறு எதிர்வரும் காலங்களில் வரலாறு புதிய வரலாற்றை எழுதும் காலம் இடம்பெறலாம் எனவும் எதிர் பார்க்கலாம்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *