Author: நலன் விரும்பி
கொழும்புக்கு வரும் வாகனங்களுக்கு ஸ்டிக்கர்
கொழும்புக்கு வரும் வாகனங்களுக்கு ஸ்டிக்கர்
கொழும்பு நகருக்குள் பிரவேசிக்கும் வாகனங்கள் அனைத்துக்கும் இன்று முதல் ஒரு நாளுக்கு மாத்திரம் செல்லுபடியாகும் ஸ்டிக்கர் ஓன்றை ஒட்ட பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அத்தியவசிய சேவைகளுக்காக பயணிக்கின்ற வாகனங்கள் பல தடவைகள் சோதனைக்குட்படுத்பப்படுவதை
தவிர்ப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்இ பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
இதேவேளை, முகக் கவசம் அணியாமை உட்பட, தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறியயமை தொடர்பாக மேலும் 1,038 பேர் நேற்றைய தினம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி, இதுவரையில் கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 20,140 என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
கொரனோவால் இறந்தவரை எரிக்க பணம் கறக்கும் அரசு
கொரனோவால் இறந்தவரை எரிக்கா பணம் கறக்கும் அரசு
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயினால் இறந்தவர்களை அடக்கம் செய்திட வவுனியா
நகர சபை ஏழாயிரம் ரூபாவைனை இறந்தவர்களிடம் அறவிட்டு வருகிறது ,மேற்படி சம்பவம் பெரும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது
நகர சபை மக்களுக்கு உதவிட உள்ள பொழுதுமம் ,துயரான கால கட்டத்தில் மக்களிடம் பணம் பறிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமை கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது
முல்லைத்தீவில் குண்டு வெடிப்பு
முல்லைத்தீவில் குண்டு வெடிப்பு
இலங்கை முல்லைதீவு தேவிபுரம் பகுதியில் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது,
உடையார் கட்டு அருகில் உள்ள தேவிபுரம் பகுதியில் பெண் ஒருவர் காணியை துப்பரவு செய்து
அந்த குப்பைகளை எரித்த பொழுது அதற்குள் மறைந்து கிடந்த குண்டு ஒன்று வெடித்துள்ளது
இதனால் பலத்த காயமடைந்த நிலையில் பெண் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளார்
விரைந்து சென்ற இராணுவத்தினர் காணியை சோதனை செய்து வருகின்றனர்
இலங்கை கடலில் மூழ்கும் சரக்கு கப்பல்
இலங்கை கடலில் மூழ்கும் சரக்கு கப்பல்
இலங்கை கடல் பரப்புக்குள் பயணித்த சரக்கு கப்பல் ஒன்று திடீரென தீ பற்றி எரிந்த நிலையில் கடலில் மூழ்கி வருகிறது
,மேற்படி கப்பல் மூழ்கினால் அதில் உள்ள என்னை கசிவுகள் கசிந்து பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால்
இந்தியாவின் உதவி கோர பட்டுள்ளது
கோட்டா ஆட்சியில் கடலில் எரிந்த இரண்டாவது கப்பல் இதுவாகும் என்பது குறிப்பிட தக்கது
- செங்கடல் கடற்கரையில் ஹூதிகளின் வெற்றி தெய்வீக வெற்றி ஈரான்
- ஈரான் போர் ‘மிக விரைவில்’ முடிவுக்கு வரும், எண்ணெய் விலைகள் வீழ்ச்சியடையும் என டிரம்ப்
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை
- ஹம்பாந்தோட்டா துறைமுக ஸ்மார்ட் சாவி திருட்டு கும்பல்
- ஏழு ஆண்டுகளில் தனது முதல் பயணமாக பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்காக சீனா
தனிமை படுத்தும் விதிகளை மீறி செயல் பட்ட 1,038 பேர் கைது
தனிமை படுத்தும் விதிகளை மீறி செயல் பட்ட 1,038 பேர் கைது
இலங்கையில் தனிமை படுத்தும் விதிகளை மீறி செயல் பட்ட சுமார் 1,038 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்
இதுவரை இடம்பெற்ற கைது எண்ணிக்கையில் இதுவே அதிக எண்ணிக்கையில் பதிவாகியுள்ளது ,தொடர்ந்து பறக்கும் படைகள் கண்காணிப்பில் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர்
யாழில் சீன மொழியில் அரச கட்டிடம் – தமிழை காணவில்லை
யாழில் சீன மொழியில் அரச கட்டிடம் – தமிழை காணவில்லை
இலங்கை வடக்கு யாழ்ப்பாணம் தமிழர்களின் பூர்வீக பகுதியாக விளங்கி வருகிறது ,இங்கு தமிழர்கள் வசித்து வருகின்றனர்
,அவ்விதமான சாவக்கேசரி பகுதியில் சீனா நிறுவனத்தினால் அமைக்க பட்டுள்ள,அரச அலுவலகம் ஒன்றின் கட்டடத்தில் சீனா ,சிங்களம்,மற்றும் ஆங்கிலத்தில் எழுத பட்டுள்ளது
அதில் தமிழையே காணவில்லை ,தொடர்ந்து சீன நிறுவனம் அமைக்கும் கட்டடங்கள் அனைத்திலும் தமிழ் மொழி புறக்கணிக்க பட்டு வருகிறது
புலிகளை அழித்த இந்தியாவுக்கு ,சீன கொடுக்கும் பரிசு இதுதான் போலும் ,மகிழ்ச்சியா இந்தியர்களே ..?
இத்தாலியில் சிங்களவருக்கு தூக்கு – சிறையில் நடந்த மரண தண்டனை
இத்தாலியில் சிங்களவருக்கு தூக்கு – சிறையில் நடந்த மரண தண்டனை
இத்தாலி ரோம் நகரில் வீதியால் சென்று கொண்டிருந்த முன்னாள் மனைவியை கத்தியால் குத்தி கொலை புரிந்தார் கணவர்
இவரது இந்த கொலை வெறித்தாக்குதலை அடுத்து கைது செய்ய பட்டு நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டார்
அவர் புரிந்த படுக்கலைக்கு மரண தண்டனை அளிக்க பட்டது ,சிறையில் அடைக்க பட்ட அவருக்கு கடந்த சனிக்கிழமை தூக்கு தண்டனை வழங்கி தீர்ப்பு நிறைவேற்ற பட்டுள்ளது
ஐரோப்பிய நாடுகளில் மரண தண்டனை ,ஒழிக்க பட்டுள்ளதாக கூற படுகின்ற பொழுதும் ,இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது குறிப்பிட தக்கது
பேரூந்தில் பயணித்த 48 பேர் கைது – பாயும் பொலிஸ் சோதனை
பேரூந்தில் பயணித்த 48 பேர் கைது – பாயும் பொலிஸ் சோதனை
இலங்கையில் நிலவி வரும் கொரனோ தாக்குதலை அடுத்து தனிமை படுத்தல் சட்டங்கள் அமூல்
படுத்த பட்டுள்ளது ,இவ்வேளை பேரூந்து ஒன்றில் பயணித்த 48 பேர் காவல்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளனர்
அரசு அறிவித்த விதிகளை மீறி மக்கள் தொடர்ந்தும் இவ்விதம் செயல் பட்டு வருவது ,அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
அதிரடி முடிவெடுத்த நயன்தாரா – விக்னேஷ் சிவன்
அதிரடி முடிவெடுத்த நயன்தாரா – விக்னேஷ் சிவன்
தரமணி படத்தின் மூலம் பிரபலமான வசந்த் ரவி, அடுத்ததாக நடித்துள்ள படம் ‘ராக்கி’. அறிமுக இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இப்படத்தை இயக்கி உள்ளார்.
இயக்குனர் பாரதிராஜாவும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தர்புகா சிவா இசையில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படத்தின் வெளியீட்டு உரிமையை நடிகை நயன்தாரா – இயக்குனர் விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது.
இப்படத்தை திரையரங்கில் ரிலீஸ் செய்ய பணிகள் நடைபெற்று வந்த நிலையில், கொரோனா 2-வது அலை பரவல் தமிழகத்தில் தீவிரமடைந்து, திரையரங்குகள் மூடப்பட்டது. இதனால் படத்தை ஓடிடி-யில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. ராக்கி படத்தின் வெளியீடு
குறித்து நடிகை நயன்தாரா – இயக்குனர் விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் விரைவில் முக்கிய அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகை சாந்தினி மீது முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் மனைவி பகீர் புகார்
நடிகை சாந்தினி மீது முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் மனைவி பகீர் புகார்
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை சாந்தினி, முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது அண்மையில் பாலியல் புகார் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மணிகண்டன் தன்னை 3 முறை கட்டாய கருக்கலைப்பு செய்ய வைத்ததாகவும், தனது அந்தரங்க புகைப்படங்களை வைத்து கொண்டு மிரட்டல் விடுப்பதாகவும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார்.
இதுதொடர்பாக அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது, கட்டாய கருக்கலைப்பு செய்தல், பாலியல் பலாத்காரம், பாலியல் வன்முறை
, நம்பிக்கை மோசடி உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதனிடையே, கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்க, முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் கார்த்திக்கிடம் முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் மனைவி வசந்தி புகார் ஒன்றை அளித்துள்ளார். நடிகை சாந்தினி, தன் கணவர்
மீது பொய்யான தகவலை பரப்பி, தங்கள் குடும்பத்திற்கு அவமரியாதையையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தி வருவதாகவும், இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
எனவும் அதில் தெரிவித்துள்ளார். இந்த புகார் அடையாறு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் மதுபான கடைகளுக்கு சீல் – குடிகாரர் அவதி
இலங்கையில் மதுபான கடைகளுக்கு சீல் – குடிகாரர் அவதி
நாட்டில் நிலவி வரும் கொரனோ நோயின் தாக்குதல் அதிகரிப்பை அடுத்து எதிர்வரும் ஏழாம்
திகதி வரை ,நாட்டில் உள்ள அனைத்து மதுபான கடைகளுக்கும் சீல் வைக்க நடவடிக்கை மேற்கொள்ள பட்டு வருகிறது
மக்களை நோயில் இருந்து காப்பாற்றி கொள்ளும் முகமாக இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ள படவுள்ளது
இந்த அறிவிப்பால் குடி மகன்கள் பெரும்தும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்
உணவின்றி உணவுக்காக வீதிகளில் அலைந்து திரியும் மான்களுக்கு உணவுகள் வழங்கும் மனிதாபிமான உதவி photo
உணவின்றி உணவுக்காக வீதிகளில் அலைந்து திரியும் மான்களுக்கு உணவுகள் வழங்கும் மனிதாபிமான உதவி photo
பைஷல் இஸ்மாயில் –
கொரோனா தொற்றுக் காரணமாக நாடு முழுவதும் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள இந்நிலையில்
பிரயாணிளின் வருகை இல்லாததால், திருகோணமலை மாவட்டத்திலுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட மான்கள் உணவின்றி உணவுக்காக வீதிகளில் அலைந்து திரிகின்றன.
திருகோணமலை நகரில் அமைந்துள்ள மத்திய வீதி, என் சி வீதி மற்றும் அதனை அன்டிய குடியிருப்பு இடங்களில்
மான் கூட்டங்கள் உணவுக்காக அலைந்து திரிகின்றதை கருத்திற்கொண்டு மான்களுக்கு உணவுகள் வழங்கப்படுகின்றது.
பயணத்தடை காலங்களில் மான்களுக்கு உணவுகள் வழங்குவதற்கான வசதிகளை திருகோணமலை நகர சபையினால் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்

கொரானாவுக்கு இரையாகி 43 பேர் மரணம்
கொரானாவுக்கு இரையாகி 43 பேர் மரணம்
இலங்கையில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி கடந்த
தினம் மட்டும் 43 பேர் மரணமாகியுள்ளனர்
இந்த நோயின் தாக்குதலில் சிக்கி பலியாகி வருபவர்கள் எண்ணிக்கை நாள் தோறும் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது
யாழில் தண்ணி பாட்டியில் ஈடுபட்ட ஐவர் கைது
யாழில் தண்ணி பாட்டியில் ஈடுபட்ட ஐவர் கைது
யாழ்ப்பாணத்தில் தனிமை படுத்தல் விதிகளை மீறி , ஒன்று கூடி சாராயம் அருந்தி ,பட்டியில்
ஈடுபட்ட ஐவர் காவல்துறையால் கைது செய்ய பட்டுள்ளனர்
போலீசாருக்கு கிடைக்க பெட்ரா தகவலை அடுத்து இந்த வேட்டை இடம்பெற்றுள்ளது
காவல்துறையால் 1,047 பேர் கைது
காவல்துறையால் 1,047 பேர் கைது
இலங்கையில் தனிமை படுத்தல் விதிகளை மீறிய குற்ற சாட்டில் சுமார் 1,047 பேர் கைது செய்ய
பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்
முக கவசம் மற்றும் மாகாண எல்லைகளை கடந்த குற்ற சாட்டுக்களில் இந்த கைது இடம்பெற்றுள்ளது
17 இலட்சம் பேருக்கு கொரோனாத் தடுப்பூசி
17 இலட்சம் பேருக்கு கொரோனாத் தடுப்பூசி
நாட்டின் சனத்தொகையில் 17 இலட்சம் பேருக்கு கொரோனாத் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இதில் ஏழு இலட்சத்து 40 ஆயிரம் பேருக்கு சைனோபாம் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. ஒன்பது இலட்சத்து 25ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு முதலாவது கொவிஷில்ட் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. 26 ஆயிரத்து 821 பேருக்கு ஸ்புட்னிக் வீ தடுப்பூசியும் ஏற்றப்பட்டுள்ளது.
மேல் மாகாணம் உட்பட நாட்டின் 9 மாவட்டங்களில் கொரோனா தடுப்பு ஊசி ஏற்றும் வேலைத்திட்டம் இடம்பெறுகின்றது நாட்டுக்குத் தேவையான மேலும் 34 லட்சம் தடுப்பூசிகளை அரசாங்கம் கொள்வனவு செய்ய இருக்கிறது. அடுத்த வாரமளவில் நாட்டுக்கு பத்து இலட்சம் சீனாபோம் தடுப்பூசிகள் கிடைக்கவுள்ளன.
இதேவேளை நாட்டில் மேலும் இரண்டாயிரத்து 882 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள். 39 கொரோனா மரணங்களும் புதிதாக இடம் பெற்றுள்ளன. இதில் நேற்றைய தினத்தில் மாத்திரம் நான்கு கொரோனா மரணங்கள் சம்பவித்துள்ளன.
இதன்மூலம் இலங்கையில் இதுவரை இடம்பெற்ற கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 1480 ஆகும். நாட்டில் இதுவரை இனங்காணப்பட்ட மொத்த ஒருநாள் நோயாளர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 364 வரை அதிகரித்துள்ளது.
1000 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரம் உயர்த்தல்
1000 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரம் உயர்த்தல்
ஜனாதிபதியின் எண்ணக்கருவுக்கு அமைவாக நடைமுறைப்படுத்தப்படும் சுபீட்சத்தின்
தொலைநோக்கு என்ற வேலைத் திட்டத்தின் கீழ் இந்த பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக அபிவிருத்தி செய்யப்பட உள்ளன.
இந்த வேலைத் திட்டத்தின் கீழ் மேல் மாகாணத்தில் அமுல்படுத்தப்படவிருக்கும் பாடசாலைகளின்
அபிவிருத்தி திட்டங்கள் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி எல் பீரிஸ் தலைமையில் நேற்று ஆராயப்பட்டது.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களின் உயர்மட்ட கல்வித்துறை அதிகாரிகளும் இந்த சந்திப்பில் சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது
திடீர் திருமணம் செய்த நடிகை
திடீர் திருமணம் செய்த நடிகை
சூர்யா நடித்த ’மாசு’ கார்த்தி நடித்த ’சகுனி’ உள்பட பல தமிழ் படங்களிலும், தெலுங்கு கன்னடம் மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் நடித்தவர் நடிகை பிரணிதா சுபாஷ். இவர் தொழில் அதிபர்
நிதின் ராஜன் என்பவரை நேற்று திருமணம் செய்துகொண்டார். ஊரடங்கு காலம் என்பதால் இந்த திருமணத்தில் இரு வீட்டாரின் மிகச் சிலர் மட்டுமே கலந்து கொண்டனர்.
கணவருடன் பிரணிதா
கணவருடன் பிரணிதா
மேலும் பிரணிதா சுபாஷின் திருமண புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருவதை அடுத்து ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும்
கொரோனா காலம் என்பதால் திருமணத்திற்கு யாரையும் அழைக்கவில்லை. அதனால் என்னை மன்னிக்க வேண்டும் என்று சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார்.
அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் தற்போது வலிமை திரைப்படம் உருவாகி வருகிறது. ஊரடங்கு காரணமாக இதன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
அஜித்
இந்நிலையில் சென்னையில் உள்ள நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போனில் பேசிய மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். மிரட்டல் விடுத்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்
கொழும்பில் அதிக கொரனோ நோயாளிகள்
இலங்கையில் 2,859 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இவர்களில் பெரும்பான்மையானோர் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என கொவிட் -19 வைரஸ் பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. இவர்களின் எண்ணிக்கை 608 ஆகும்.
இதற்கமைய, கம்பஹா மாவட்டத்திலிருந்து 547 பேரும், களுத்துறை மாவட்டத்திலிருந்து 447 பேரும், காலி மாவட்டத்திலிருந்து 143 பேரும், கேகாலை மாவட்டத்திலிருந்து 136 பேரும், கண்டி
மாவட்டத்திலிருந்து 108 பேரும், குருநாகல் மாவட்டத்திலிருந்து 99 பேரும், மாத்தறை மாவட்டத்திலிருந்து 82 பேரும், மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து 76 பேரும், இரத்தினபுரி
மாவட்டத்திலிருந்து 78 பேரும், கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து 57 பேரும், யாழ்ப்பாணம் மாவட்டத்திலிருந்து 56 பேரும், அம்பாந்தோட்டை மாவட்டத்திலிருந்து 50 பேரும், அம்பாறை மாவட்டத்திலிருந்து 46 பேரும் நேற்றையதினம் கொவிட் தொற்றுக்குள்ளானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும், பதுளை மாவட்டத்திலிருந்து 43 பேரும், மொனராகலை மாவட்டத்திலிருந்து 40 பேரும், புத்தளம் மாவட்டத்திலிருந்து 42 பேரும், அனுராதபுரம் மாவட்டத்திலிருந்து 39 பேரும், முல்லைத்தீவு
மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் இருந்து தலா 31 பேர் வீதமும், பொலன்னறுவை மாவட்டத்திலிருந்து 29 பேரும், நேற்றையதினம் அடையாளம் காணப்பட்டவர்களுள் அடங்குவர்.
அத்துடன், வவுனியா மாவட்டத்திலிருந்து 22 பேரும், நுவரெலியா மாவட்டத்திலிருந்து 17 பேரும், மாத்தளை மாவட்டத்திலிருந்து 14 பேரும், மன்னார் மாவட்டத்திலிருந்து 8 பேரும் நேற்றையதினம் பதிவாகியுள்ளனர்.
இதேவேளை, வெளிநாடுகளிலிருந்து வருகை தந்த 10 பேரும் நேற்றையதினம் கொவிட் வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.












