Author: நலன் விரும்பி
பொலிசாரின் விடுமுறை இரத்து
பொலிசாரின் விடுமுறை இரத்து
பொலிசாரின் விடுமுறையை எதிர்வரும் 15 ஆம் திகதி (ஜூன் 15) வரை இரத்துச் செய்வதற்கு
தீர்மானிக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரசு தொற்று பரவல் நிலைமையை தொடர்ந்து பொலிஸ் உத்தியோகத்தர்களின் விடுமுறையை கடந்த 17ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை ரத்து செய்ய நடவடிக்கை
எடுக்கப்பட்டது. தொடர்ந்தும் பயண கட்டுப்பாடுகள் அமல் படுத்தப் படுவதால் பொலிசாரின்
விடுமுறையை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை இரத்துச் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.
பயணிகள் விமானங்கள் விதிக்கப்பட்டுள்ள தடை நாளை நீக்கம்
பயணிகள் விமானங்கள் விதிக்கப்பட்டுள்ள தடை நாளை நீக்கம்
நாட்டுக்குவரும் அனைத்து பயணிகள் விமானங்கள் தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள தற்காலிக தடை நாளை தொடக்கம் நீக்கப்படுவதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்
இருப்பினும் நாட்டுக்குவரும் விமானங்களின் எண்ணிக்கை வரையறுக்கப்படும் என்று விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் டீ. வீ.ஜானக்க தெரிவித்துள்ளார்
ஒரு விமானத்தில் பயணிக்கக்கூடியவர்களின் எண்ணிக்கை 75 அல்லது அதற்கு குறைந்த எண்ணிக்கையாகும் என்றும் இராஜாங்க அமைச்சர் டீ. வீ.ஜானக்க தெரிவித்துள்ளார்.
14 துப்பாக்கிகள்-2,400 தோட்டாக்கள் காணவில்லை – விசாரணை ஆரம்பம்
14 துப்பாக்கிகள்-2,400 தோட்டாக்கள் காணவில்லை – விசாரணை ஆரம்பம்
இலங்கை காலி கடல்பகுதியில் இந்தோனேசிய கப்பல் ஒன்றுக்கு ஏற்றி செல்ல எடுத்த செல்ல பட்ட
ஆயுதங்களில் 14 துப்பாக்கிகள் மற்றும் 2,400 தோட்டாக்கள் என்பன கடலில் வீழ்ந்து காணாமல் போயுள்ளதாம்
அதனால் ,அது தொடர்பான விசாணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
இந்த ஆயுத விற்பனையில் ஈடுபடுவது வேறு யாருமில்லை ,இலங்கையில் ஆளும் அதிபர் கோட்டா தான்
இலங்கையில் ஒரே நாளில் கொரனோவால் 36 பேர் மரணம்
இலங்கையில் ஒரே நாளில் கொரனோவால் 36 பேர் மரணம்
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி சுமார் முப்பது பேர் மரணமாகியுள்ளனர்
இதுவரை இந்த நோயின் தாக்குதலில் சிக்கி 1,441.பேர் பாதிக்க பட்டுள்ளனர்
வேகமாக பரவும் இந்த நோயினை கட்டு படுத்த முடியாது அரசு அரசு திணறி வருகிறது
தீ விபத்துக்குள்ளான கப்பலினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இழப்பீடு
தீ விபத்துக்குள்ளான கப்பலினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இழப்பீடு
கொழும்பு துறைமுகத்திற்கு அருகாமையில்; தீ விபத்துக்குள்ளான கப்பலில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் குறிப்பிட்ட கப்பல் கம்பெனி மூலாகவும் காப்புறுதி நிறுவனத்தின் ஊடாகவும்
இழப்பீட்டை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பு துறைமுகத்தை அண்டிய பகுதியில் தீ விபத்துக்குள்ளான கப்பல் மூலம் சுற்றாடலுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை மதிப்பீடு செய்து நீதிமன்றத்திற்கு தகவல்களை அறிக்கையிட நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
இந்த தீ விபத்து மூலம் சுற்றாடலுக்கும், இயல்பு வாழ்க்கைக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மீன்பிடித் தொழிலுக்கு
கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது தவிர நீர்கொழும்பு கண்டல் தாவர கட்டமைப்புக்கும் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை கப்பலில் ஏற்பட்ட தீ தற்போது பெரும்பாலும் கட்டுப்படுத்த பட்டிருப்பதாக கடற்படைத்
தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த் உறுதியாக தெரிவித்துள்ளார். இது தொடர்பான சட்ட நடவடிக்கை குறித்து சட்டமா அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
ஒரே இடத்தில் ஒன்றுகூட வேண்டாம்- மக்களிடம் கோரிக்கை
ஒரே இடத்தில் ஒன்றுகூட வேண்டாம்-மக்களிடம் கோரிக்கை
தடுப்பூசியை ஏற்றிக் கொள்வதற்காக அனாவசியமான முறையில் ஒரே இடத்தில் ஒன்று கூட வேண்டாம் என்று வைத்திய நிபுணர் டாக்டர் ஹேமந்த ஹேரத் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இவ்வாறு செயற்பட்டால் ஆபத்தான நிலை ஏற்படலாம். தடுப்பூசி கிடைத்தவுடன் சகல பகுதிகளுக்கும் அதனை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முடிந்தவரை வீடுகளில் தங்கியிருக்குமாறும் சுகாதார துறை அதிகாரிகள் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்
இதேவேளை பயணத் தடை விதிக்கப்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் அரசாங்கம் வழங்கியுள்ள சில சலுகைகளை துஷ்பிரயோகம் செய்ய வேண்டாம் என்று அதிகாரிகள் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
கொரோனா வைரஸ் பரவல் வேகமாக இடம்பெற்று வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் சில மட்டுப்பாடுகளை அறிமுகம் செய்துள்ளது.
மக்களை பாதுகாக்கும் நோக்கிலேயே இந்த மட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கின்றன. மக்களின் அன்றாட வாழ்வுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சில சலுகைகளை
அரசாங்கம் வழங்கி இருந்தாலும் அவற்றை சிலர் துஷ்பிரயோகம் செய்ததாகவும் அதிகாரிகள் சுட்டிக் காட்டியுள்ளனர். இந்த விடயம் பற்றி பொறுப்புடன் செயற்படுமாறு அவர்கள் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
புதிய கொவிட் விடுதி முல்லைத்தீவில் திறப்பு
புதிய கொவிட் விடுதி முல்லைத்தீவில் திறப்பு
கொவிட் -19 நோயாளிகளுக்காக இராணுவப் படையினரால் கட்டப்பட்ட புதிய வாட்டு முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் உபாலி ராஜபக்ஷவினால்
வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டு சுகாதார அதிகாரிகளிடம் சனிக்கிழமை உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்பட்டது.
முல்லைத்தீவு பாதுகாப்புப் படை தலைமையகத்தின் 68 வது படைப்பிரிவின் 681 வது பிரிகேட்டின் 16 வது பொறியியலாளர் சேவைகளின் படையினரின் தொழில்நுட்ப உதவியுடன் இந்த புதிய
விடுதி அனைத்து மருத்துவ வசதிகளுடன் 25 கட்டில்கள் கொண்டதாக கட்டமைக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவின் பல்வேறு பகுதிகளில் தொற்றாளர்களின் எண்ணிக்கையின் அதிகரிப்பினை கருத்தில் கொண்டு சில நன்கொடையாளர்களின் நிதி உதவியுடன் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியும் கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் அறிவுறுத்தலின்
பேரில் 68 வது படைப்பிரிவு தளபதி பிரிகேடியர் டி.ஆர்.என்.ஹெட்டியராச்சி, 681 வது பிரிகேட் தளபதி
மற்றும் 16 வது பொறியியலாளர் சேவை படையின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் கீர்த்தி பண்டார ஆகியொரின் மேற்பார்வையில் திட்டம் நிறைவு செய்யப்பட்டது.
பறக்கும் படை -மற்றும் காவல்துறையால் 755 பேர் கைது
பறக்கும் படை -மற்றும் காவல்துறையால் 755 பேர் கைது
இலங்கையில் கொரனோ தனிமை படுத்தல் விதிகளை மீறி செயல் பட்ட சுமார் 755 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்
இவர்கள் முகக் கவசம் அணியாமை சென்றமை ,மற்றும் மாகாண எல்லைகளை கடந்து சென்ற
குற்ற சத்துக்களில் காவல்துறை மற்றும் ,விசேட பறக்கும் படையினரால் இந்த கைது வேட்டை இடம்பெற்றுள்ளது
ஹாலிவுட்டுக்கு சென்ற நாயகி
ஹாலிவுட்டுக்கு சென்ற நாயகி
பிரபல பாலிவுட் நடிகையான ஹூமா குரேஷி, பா.இரஞ்சித் இயக்கத்தில் வெளியான காலா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார்.
இவர் தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகும் வலிமை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஆர்மி ஆப் தி டெத் படத்தின் போஸ்டர்
இந்நிலையில், நடிகை ஹூமா குரேஷி, ‘ஆர்மி ஆப் தி டெட்’ படம் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமாகி இருக்கிறார். இப்படத்தை ஜாக் ஷிண்டர் இயக்கி உள்ளார்.
இது ஜாம்பி வகை படமாகும். ஏற்கனவே பாலிவுட் நடிகைகளான பிரியங்கா சோப்ரா, தீபிகா
படுகோனா, டிம்பிள் கபாடியா, அமைரா தஸ்தூர், ஐஸ்வர்யா சோனார் ஆகியோர் ஹாலிவுட்டுக்கு சென்ற நிலையில், தற்போது ஹூமா குரேஷியும் அந்த வரிசையில் இணைந்துள்ளார்.
தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் – நடிகர் சத்யராஜ் வேண்டுகோள் video
தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் – நடிகர் சத்யராஜ் வேண்டுகோள் video
தமிழகத்தில் கொரோனா 2-வது அலையின் தீவிரம் படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்
கொள்ளுமாறு தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்கும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
ஆனால், பொதுமக்கள் சிலர் தடுப்பூசி போட்டுக் கொள்வதில் அலட்சியம் காட்டுகிறார்கள். இதனால் திரைப்பிரபலங்கள் பலரும் கொரோனா தடுப்பூசி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள்.
அந்த வகையில் தடுப்பூசி தொடர்பாக நடிகர் சத்யராஜ் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது: “சமீப காலமாக சில வேதனையான விஷயங்களைக் கேள்விப்படுகிறேன்.
யாருமே சரியாக தடுப்பூசி போட்டுக் கொள்வதில்லை. செல்போன் வந்த பிறகு, நமக்கு நாமே மருத்துவர் ஆகிவிட்டோம். அக்கம்பக்கத்தினர், சொந்தக்காரர்கள், நண்பர்கள் என அனைவருமே மருத்துவர்கள் ஆகிவிட்டார்கள். அது எப்படி?.
மருத்துவத்துக்கு படித்தவர்கள் தான் மருத்துவராக இருக்க முடியும். அதனால் தடுப்பூசி பற்றி ஏதேனும் குழப்பம் இருந்தால், தெரிந்த மருத்துவரை அணுகுங்கள். அவர்கள் சரியான அறிவுரை
வழங்குவார்கள். நம்ம உடம்புக்கு ஒன்றும் வராது என்று காலரை தூக்கிவிட்டுக் கொண்டு, இது சத்தியத்துக்குக் கட்டுப்பட்ட உடம்பு என்பது எல்லாம் இருந்துட்டு போகட்டும்.
ஆனாலும், நமது உடம்பைப் பற்றி நம்மை விட மருத்துவர்களுக்கு தான் நன்றாகத் தெரியும். அதற்குத்தான் அவர்கள் மருத்துவத்துக்கு படித்துள்ளார்கள். நான் சொல்வதைக் கூட கேட்காதீர்கள். நான் என்ன மருத்துவரா?
சமீபத்தில் கேட்கும் விஷயம் எல்லாம் மனவேதனையை தருகிறது. முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளி, கிருமி நாசினி மூலம் கையை சுத்தப்படுத்துவது எல்லாம் அனைவரும்
செய்கிறார்கள். ஆனால், இந்த தடுப்பூசி விஷயத்தில் பெரிய குழப்பம் இருக்கிறது. தயவுசெய்து மருத்துவர்களை அணுகி அறிவுரையை பெற்று தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்”. இவ்வாறு சத்யராஜ் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் மக்களை பிடிக்கும் பறக்கும் படை – படங்கள் உள்ளே
இலங்கையில் மக்களை பிடிக்கும் பறக்கும் படை – படங்கள் உள்ளே
இலங்கையில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ ,தனிமை படுத்தல் விதிகளை மீறி
செயல் படுபவர்களை இலங்கை இராணுவத்தின் பறக்கும் படையினர் களத்தில் இறக்கி விடப்பட்டுள்ளனர்
இவர்கள் இலங்கையின் அணைத்து பகுதிகளிலும் இந்த படையினர் களத்தில் இறக்கி விட பட்டுள்ளனர்
நவீன ஊந்துருளிகள் மூலம் ,வோக்கிகள் சகிதம் உலா வரும் இவர்கள் ,மக்களை கைது செய்யும் வேட்டையிலும் ,கண் காணிப்பு பணியிலும் ஈடுபடுத்த பட்டுள்ளனர்



பாலத்திற்குள் இருந்து பெண் சடலமாக மீட்பு – தொடரும் மர்ம கொலைகள்
பாலத்திற்குள் இருந்து பெண் சடலமாக மீட்பு – தொடரும் மர்ம கொலைகள்
இலங்கை புத்தளம் பகுதியில் உள்ள ரயில்வே பாதைக்கு அருகில் உள்ள பாலம் ஒன்றுக்குள் இருந்து பெண் ஒருவர் சடலமாக மீட்க ப்பட்டுள்ளார்
இவர் படுகொலை செய்ய பட்டு அந்த பாலத்தின் வாய்களுக்குள் வீச பட்டுள்ளார்
இறந்தவர் ஐந்து பிள்ளைகளின் தாய் என தெரிவிக்க பட்டுள்ளது ,மேற்படி கொலை தொடர்பான விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
இலங்கை கடலுக்குள் நுழைந்த 40 இந்திய படகுகள் விரட்டியடிப்பு
இலங்கை கடலுக்குள் நுழைந்த 40 இந்திய படகுகள் விரட்டியடிப்பு
இலங்கை வட பகுதிக்குள் உள்நுழைந்த இந்தியாவின் நாற்பது மீன்பிடி படகுகளை இலங்கை அரச
கடற்படையினர் விரட்டி அடித்துள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது
கொரனோ பரவலை அடுத்து இந்திய மீனவர்கள் இலங்கைக்குள் நுழைந்து வருகின்றனர் என்ற குற்ற சாட்டை இலங்கை அரசு முன் வைத்து வருகின்றமை குறிப்பிட தக்கது
இத்தாலிக்கு ,இலங்கையர்கள் உள்நுழைய அரசு தடை
இத்தாலிக்கு ,இலங்கையர்கள் உள்நுழைய அரசு தடை
இத்தாலிய நாட்டுக்குள் இலங்கையர்கள் உள்நுழைய அந்த நாடு தற்காலிக தடை விதித்துள்ளது ,
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் பரவலை அடுத்து மேற்படி இடைக்கால தடை விதிக்க பட்டுள்ளது
மேலும் இந்தியா ,பங்களாதேஸ் நாடுகளை சேர்ந்தவர்களும் உள்நுழைய தடை விதிக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது
சின்மயி சொல்வது பொய்…. வைரமுத்து மகன் மதன் கார்க்கி டுவிட்
சின்மயி சொல்வது பொய்…. வைரமுத்து மகன் மதன் கார்க்கி டுவிட்
சமூக வலைதளத்தில் ரசிகரின் கேள்விக்கு பதிலளித்த வைரமுத்துவின் மகன் மதன் கார்க்கி, பாடகி சின்மயி சொல்வது பொய் என்று பதிவிட்டுள்ளார்.
சின்மயி சொல்வது பொய்…. வைரமுத்து மகன் மதன் கார்க்கி டுவிட்
மதன் கார்க்கி, சின்மயி
கவிஞர் வைரமுத்து மீது தொடர்ந்து மீடூ புகார் தெரிவித்து வரும் பாடகி சின்மயி, சமீபத்தில் அவருக்கு கேரளாவின் மிக உயர்ந்த விருதுகளில் ஒன்றான ஓ.என்.வி விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதற்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதனிடையே நெட்டிசன் ஒருவர் சின்மயியிடம், ஏன் வைரமுத்துவை உங்கள் திருமணத்திற்கு அழைத்தீர்கள், ஏன் அவரது காலில் விழுந்தீர்கள் என புகைப்படத்தை வெளியிட்டு கேள்வி
எழுப்பினார். இதற்கு பதிலளித்த சின்மயி, கூப்பிட சொல்லி டார்ச்சர் பண்ணுனதே அவர் மகன் தான் என பதிலளித்தார்.
சின்மயி அளித்த பதில் குறித்து வைரமுத்துவின் மகனிடம் நெட்டிசன் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு மதன் கார்க்கி கூறியதாவது: “இது மேலும் ஒரு பொய். அவர் என் தந்தையை தன்
திருமணத்திற்கு அழைக்க விரும்பினார். ஆனால் என் தந்தை அவர் மீது அதிருப்தியில் இருந்ததால், அபாயின்ட்மென்ட் கொடுக்க மறுத்துவிட்டார்.
அதனால் அவரிடம் அபாயின்ட்மென்ட் வாங்கிக் கொடுக்குமாறு என்னிடம் கேட்டார். நானும் வாங்கிக் கொடுத்தேன். அவரின் வீட்டிற்கு சின்மயி தனியாக சென்று, அவரது பாதங்களை தொட்டு ஆசி வாங்கி, திருமணத்திற்கு வரவேற்றதாக” மதன் கார்க்கி கூறினார்.
காற்றின் மூலம் பரவும் புதிய வைரஸ் கண்டு பிடிப்பு
காற்றின் மூலம் பரவும் புதிய வைரஸ் கண்டு பிடிப்பு
பரவி வரும் கொரனோ நோயின் குடும்பத்தை சேர்ந்த புதிய வைரஸ் ஒன்று வியட்நாமில் கண்டு பிடிக்க பட்டுள்ளது .
இவை ,இந்தியா பிரித்தானியாவில் பரவி வரும் நோயினுடையது என தெரிவிக்க பட்டுள்ளது
காற்றில் கலந்து உயிரினங்களுக்கு வேகமாக பரவி வருவதால் மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது
முகக் கவசம் இன்றி மக்கள் நடமாட முடியாத சூழலை இந்த நோய்களின் தாக்குதல் ஏற்படுத்தியுள்ளது கவலை தருகிறது
கவிழ்ந்த பயணிகள் பேரூந்து -15 பேர் காயம்
கவிழ்ந்த பயணிகள் பேரூந்து -15 பேர் காயம்
இன்று காலை இரத்தினபுரி பகுதியில் இருந்து தேயிலை தோட்ட பணியாளர்களை ஏற்றிய
வண்ணம் புறப்பட்ட பேருந்து ஒன்று சாரதியின் கட்டு பட்டாடை இழந்து விபத்தில் சிக்கியததில் அந்த பேரூந்து கவிழ்ந்தது
இதன் பொழுது அதில் பயணித்த சுமார் பதின் ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர்
காயமடைந்தவர்கள் அனைவரும் இரத்தினபுரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
மேற்படி விபத்து தொடர்பில் போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
தனிமை படுத்தல் விதிகளை மீறிய 914 பேர் கைது
தனிமை படுத்தல் விதிகளை மீறிய 914 பேர் கைது
இலங்கையில் நிகழ்கால கொரனோ விதிகளை மீறி செயல் பட்ட சுமார் 914 பேர் காவல் துறையினரால் கைது செய்ய பட்டுள்ளனர்
டிரோன் உளவு விமானம் மூலம் கண்காணிக்க பட்டு நடத்த பட்ட சுற்றிவளைப்பில் அதிகம் பேர் கைதாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
இலங்கையில் அதிகரிக்கும் கொரனோ மரணம் ஒரே நாளில் 42 பேர் பலி
இலங்கையில் அதிகரிக்கும் கொரனோ மரணம் ஒரே நாளில் 42 பேர் பலி
இலங்கையில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி
கடந்த தினம் மட்டும் 42 பேர் பலியாகியுள்ளனர்
இலங்கையில் இடம் பெற்ற மரணங்களில் இதுவே அதிக எண்ணிகையிலாக பதிவாகியுள்ளது
இதுவரை இந்த நோயின் தாக்குதலில் சிக்கி இறந்தவர்கள் எண்ணிக்கை சுமார் 1,405 ஆக பதிவாகியுள்ளது
முத்தையன் காட்டில் ஏழை குடும்பத்திற்கு வீடு வழங்கிய இராணுவம்
முத்துஐயன்கட்டுகுளம், ஒட்டுச்சுட்டான் பகுதியில் கடந்த வியாழக்கிழமை (27) 64 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் மஞ்சுள கருணாரத்ன அவர்களின் தலைமையில் ஏற்பாடு
செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றின் போது,ஆர்.ராஜேஸ்வரி அவர்களின் குடும்பத்தின் நெருக்கடி நிலைமையை கருத்தில் கொண்டு அவருக்கான புதிய வீடொன்றுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
மேற்படி திட்டம் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி உபாலி ராஜபக்ஷ அவர்களின் ஆசிர்வாதத்துடன் மேஜர் ஜெனரல் மஞ்சுள கருணாரத்னவின் வேண்டுகோளின் பேரில்
கிடைக்கப்பெற்ற கொழும்பை சேர்ந்த நன்கொடையாளர் ஒருவரின் நிதி உதவியுடன் நிர்மாண பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
643 வது பிரிகேடின் தளபதி கேணல் டெரில் டி சில்வா அவர்களின் மேற்பார்வையில் 13 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையின் சிப்பாய்களால் கட்டுமானத்திற்கு அவசியமான மனித வள மற்றும் தொழில்நுட்ப உதவிகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் ஒடுசுட்டான் பிரதேச செயலாளர் திரு. டி. அகிலன், 643 பிரிகேட் தளபதி கேணல் டெரில் டி சில்வா, 13 இலங்கை தேசிய பாதுகாவலர் படையின் கட்டளை அதிகாரி மேஜர் ஜி.எஸ்.
எல் துஷார ஆகியோர் கலந்து கொண்டனர். வறிய குடும்பங்களுக்கான வீட்டு வசதிகளை பெற்றுக்கொடுக்கும்
சிறப்பு வீட்டுவசதி திட்டம் சமூக திட்டமாக ஆரம்பிக்கப்பட்டு நாடு முழுவதிலுமுள்ள பாதுகாப்பு படைத் தலைமையகங்களின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன..







