Posted in Uncategorized

யாழில் சீன மொழியில் அரச கட்டிடம் – தமிழை காணவில்லை

யாழில் சீன மொழியில் அரச கட்டிடம் – தமிழை காணவில்லை

இலங்கை வடக்கு யாழ்ப்பாணம் தமிழர்களின் பூர்வீக பகுதியாக விளங்கி வருகிறது ,இங்கு தமிழர்கள் வசித்து வருகின்றனர்

,அவ்விதமான சாவக்கேசரி பகுதியில் சீனா நிறுவனத்தினால் அமைக்க பட்டுள்ள,அரச அலுவலகம் ஒன்றின் கட்டடத்தில் சீனா ,சிங்களம்,மற்றும் ஆங்கிலத்தில் எழுத பட்டுள்ளது

அதில் தமிழையே காணவில்லை ,தொடர்ந்து சீன நிறுவனம் அமைக்கும் கட்டடங்கள் அனைத்திலும் தமிழ் மொழி புறக்கணிக்க பட்டு வருகிறது

புலிகளை அழித்த இந்தியாவுக்கு ,சீன கொடுக்கும் பரிசு இதுதான் போலும் ,மகிழ்ச்சியா இந்தியர்களே ..?

    Posted in இலங்கை செய்திகள்

    தாய் கள்ள காதல் ,பொலிஸ் சிப்பாயை கொன்று வீசிய மகன்

    தாய் கள்ள காதல் ,பொலிஸ் சிப்பாயை கொன்று வீசிய மகன்

    காணாமல்போன பொலிஸ் கான்ஸ்டபிள் கொலை செய்யப்பட்டதாக கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து, 3

    பொலிஸ் குழுக்கள் கடந்த 18 ஆம் திகதி முதல் குளியாபிட்டிய, கங்கனிமுல்ல காட்டில் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.

    குறித்த தேடுதல் நடவடிக்கையின் போது காட்டில் பல இடங்களில் இரத்தம் காணப்பட்டதாகவும் ஆனால் சடலம்

    எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் வீரகெட்டிய பகுதியை வசிப்பிடமாக கொண்ட 37 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் கடந்த 16 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதேவேளை, குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் கடவத்த பகுதியில் உள்ள பெண் ஒருவருடன் கள்ள உறவில்

    இருந்ததாகவும், அந்த பெண்ணின் மகன் இந்த கொலையை மேற்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    தாய் கள்ள காதல் பொலிஸ்
    https://www.youtube.com/watch?v=V2x2bofkbpY