Posted in சினிமா

அவருடன் திருமணமா அதிர்ச்சியில் நடிகை

அவருடன் திருமணமா அதிர்ச்சியில் நடிகை

பாலிவுட் நடிகர் அமீர்கானுடன் திருமணம் நடக்க போவதாக வந்த தகவலால் பிரபல நடிகை

அதிர்ச்சி அடைந்துள்ளார்.

அமீர்கானுடன் திருமணமா? அதிர்ச்சியில் நடிகை
அமீர்கான்


கடந்த சில நாட்களாக பாலிவுட் திரையுலகில் பரபரப்பான செய்தியாக வலம் வந்து

கொண்டிருப்பது அமீர்கான்-பாத்திமா சனா திருமண வதந்திதான். பாத்திமா சனா ஷேக்

அமீர்கான் நடித்து பெரிய ஹிட் ஆன தங்கல் படத்தில் அவரது மகளாக நடித்தவர். ஏற்கனவே

அமீர்கானுக்கு இரண்டு திருமணம் நடந்து முடிந்த நிலையில் அவருக்கு விவாகரத்து ஆனது.

தற்போது மூன்றாவதாக பாத்திமா சனா ஷேக்கை மணம் முடிக்க இருப்பதாகப் பேச்சு எழுந்து வருகிறது.

பாத்திமா சனா ஷேக்

இந்நிலையில் நடிகை பாத்திமா சனா ஷேக் இது வெறும் வதந்திதான் இது பற்றி என்னிடம் கேள்வி

கேட்காமல் சிலர் தங்கள் விருப்பம்போல் எழுதுகிறார்கள். இதில் உண்மையில்லை என்று கூறியிருக்கிறார்.

    Posted in சினிமா

    நீதிபதி அனுமதியளித்தும் வீட்டுக்குள் போக மறுத்த நடிகர் மன்சூரலிகான்

    நீதிபதி அனுமதியளித்தும் வீட்டுக்குள் போக மறுத்த நடிகர் மன்சூரலிகான்

    பிரபல நடிகர் மன்சூரலிகான், அங்கீகாரம் இல்லாமல் வீடு கட்டப்பட்டதாக சில நாட்களுக்கு முன்பு அதிகாரிகள் சீல் வைத்தார்கள்.

    நீதிபதி அனுமதியளித்தும் வீட்டுக்குள் போக மறுத்த நடிகர் மன்சூரலிகான்
    மன்சூரலிகான்


    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான மன்சூரலிகான், பல்வேறு சமூக பிரச்சனைகளுக்கு அறப்போட்டங்கள் மூலமாகவும், சட்ட ரீதியிலும் தீர்வு கண்டு வருகிறார்.

    இந்த நிலையில், சென்னை அரும்பாக்கத்தில் உள்ள நடிகர் மன்சூரலிகானின் வீடு, அங்கீகாரம் இல்லாமல் கட்டப்பட்டதாக கூறி சீல் வைக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து அவர் சென்னை உயர்

    நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததோடு, தனது வீட்டில் மாட்டிக்கொண்ட தான் வளர்க்கும் பூனையை மீட்பதற்காக வீட்டை திறக்க வேண்டும், என்ற கோரிக்கையும் வைத்தார்.

    வெளிநாட்டை சேர்ந்த மன்சூரலிகானின் செல்ல பூனை அந்த வீட்டுக்குள் சிக்கிக்கொண்டு சுமார் ஒரு மாதம் ஆன நிலையில், சமீபத்தில் உயர் நீதிமன்ற நீதிபதி, பூனையை மீட்பதற்காக 1 மணி

    நேரம் மட்டும் வீட்டை திறந்துவிடுமாறு உத்தரவிட்டார். ஆனால், பூனை ஒரு மாதமாக உணவு இன்றி உயிரிழந்ததால், நீதிமன்றம் அறிவித்தது போல், தனது வீட்டை திறக்க வேண்டாம், என்று மறுப்பு தெரிவித்த மன்சூரலிகான், அது தொடர்பாக நீதிமன்றத்திற்கு கடிதமும் கொடுத்து விட்டா

    ர்.

    மன்சூரலிகான்

    மேலும், இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நடிகர் மன்சூரலிகான், ”தான் 20 வருடங்களுக்கு முன்பு வாங்கிய இடத்தில் முறையாக அனுமதி பெற்று

    வீடு கட்டினேன். இன்று வரை சொத்து வரி உள்ளிட்ட வரிகள் கட்டிக்கொண்டிருக்கிறேன். ஆனால், அந்த சொத்தை வாங்கியவர்களின் குடும்பத்தில் இருந்த பிரச்சனை காரணமாக, என் வீட்டின் மீது

    தவறான தகவல்களையும், புகார்களையும் பரப்பி, என் வீட்டுக்கு இத்தகைய நிலையை ஏற்படுத்தியுள்ளார்கள். அந்த பகுதியில் இருக்கும் அனைத்து வீடுகளுக்கும் என்னை போன்று தான்

    வீடு கட்டியுள்ளார்கள். ஆனால், அவர்களுக்கு இத்தகைய நிலை ஏற்படவில்லை. காரணம், நான் ஒரு நடிகன் என்பதால் எனக்கு இப்படி ஒரு பிரச்சனை கொடுத்திருக்கிறார்கள்.

    இது தொடர்பாக போராட்டம் நடத்தி தீர்வு காணும்படி, என் நண்பர்கள் சொல்கிறார்கள். மற்றவர்களுக்காக போராடி வரும் நான், எனக்காக போராட விருப்பம் இல்லை.

    இருந்தாலும், இந்த பிரச்சனையை உச்ச நீதிமன்றம் மூலம் நிச்சயம் தீர்வு காண்பேன்” என்று தெரிவித்துள்ளார்.

      Posted in Uncategorized

      அப்பாவி மக்களை குண்டு வைத்து கொல்லும் இலங்கை இனவாத அரசு photo

      அப்பாவி மக்களை குண்டு வைத்து கொல்லும் இலங்கை இனவாத அரசு photo

      இன்று பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதரகத்துக்கு முன்னால், மதியம் 12 :30 மணியளவில்

      ,தமிழருக்கான சுதந்திர வேட்டைகாரர்களால் போராட்டம் ஒன்று நடத்த பட்டது

      இவை நிகழ்கால கொரனோ விதிகளுக்கமையவும் , பிரித்தானிய சட்ட திட்டங்களை பின்பற்றியும் அமைதியான முறையில் அர்ப்பாட்டம் நடைபெற்றது .


      இந்த போராட்டத்தின் பொழுது மறைந்து இருந்து குண்டு வெடிப்பு தாக்குதல்களை

      மேற்கொள்ளும் இலங்கை இனவாத அரசின் முகதிரையை ஆர்ப்பாட்ட காரர்கள் கோஷமிட்டு கிழித்தெறிந்தனர்

      .அதனை உயர்ஸ்தாணிகத்திற்குள் உள்ளே இருந்த வண்ணம் சிங்கள கூலிகள் அவதானித்துக்கொண்டிருத்தனர் ,


      மறைந்திருந்து முழு ஆர்ப் பாட்ட நிகழ்வையும் காணொளி ,மற்றும் புகைப்படங்கள்
      பிடித்து கொண்டிருந்ததை பங்கு பற்றியவர்கள் கண்கொண்டு பார்க்க கூடியதாக இருந்தது .


      மேலும் இவ் ஆர்ப்பாட்ட பேரணியில்
      ஈஸ்டர் பண்டிகையின் போது தேவாலயங்களில் குண்டுவைத்து தீவிரவாத தாக்குதல் என்ற

      போர்வைக்குள் கொல்லப்பட்ட அப்பாவி மக்களின் கொலைக்கு இன்னும் ஏன் நீதி வழங்கப்படவில்லை என இலங்கை இனவாத அரசை பொங்கியெழுந்து கேட்டனர் .


      இந்த பேரணியில் கீழே வரும் கோஷங்கள் முழங்கின ,
      “போர்க்குற்றவாளி இலங்கஅதிபர்”
      “ஈஸ்ரர் குண்டு தாக்குதலுக்கு விசாரணை முடிவு என்ன”
      “அப்பாவி மக்களை மறந்து இருந்து குண்டு வைத்து கொல்லாதே”
      “இலங்கையை விட்டு ஏன் சிங்களவர் வெளியேறுகிறார்கள் “
      என்ற கேள்வி கோஷங்களை எழுப்பினர் …

      இணையில் தொடபாற் மனித உரிமை மீறல் மற்றும் தமிழர் அடக்குமுறை என்பன தலைவிரித்தாடி வரும் நிலையில், மர்ம படுகொலைகள் ,கடத்தல்கள் ,அச்சறுத்தல்கள் ,என்பன

      தொடர்ந்த வண்ணம் உள்ளது ஐநா மனித உரிமை மையம் சுட்டி காட்டி இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது

        Posted in சினிமா

        மருத்துவமனையில் கமல்… பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போவது யார்


        மருத்துவமனையில் கமல்… பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போவது யார்

        கொரோனா தொற்று காரணமாக கமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால், பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

        மருத்துவமனையில் கமல்… பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போவது இவரா?
        கமல்


        தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியை நடிகர்

        கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை தமிழில் நான்கு சீசன்கள் முடிந்துள்ளன.

        தற்போது 5-வது சீசன் நடைபெற்று வருகிறது. 4 சீசனை தொடர்ந்து 5வது சீசனையும் கமல் தொகுத்து வழங்கி வருகிறார்.

        தற்போது நடிகர் கமலுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், தனியார்

        மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதனால், சில வாரங்கள்

        பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகி, ஓய்வு எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து

        வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார் என்ற கேள்வி எழுந்து இருந்தது.

        விஜய் சேதுபதி

        இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்க இருப்பதாக தகவல்கள்

        வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதி இதற்கு முன் மாஸ்டர் செப் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

          Posted in சினிமா

          ஆசிரியர் தவறாக நடந்து கொண்டார் – பிரபல நடிகை பரபரப்பு தகவல்

          ஆசிரியர் தவறாக நடந்து கொண்டார் – பிரபல நடிகை பரபரப்பு தகவல்

          பிளிப்கார்ட்டின் லேடீஸ் அண்டு ஜென்டில்மென் சீசன் 2 நிகழ்ச்சியில் தனக்கு நடந்த பாலியல் வன்முறை குறித்து பிரபல இந்தி சீரியல் நடிகை தேவோலீனா பட்டாச்சார்ஜி கூறியுள்ளார்.

          டியூசன் ஆசிரியர் தவறாக நடந்து கொண்டார் – பிரபல நடிகை பரபரப்பு தகவல்
          தேவோலீனா பட்டாச்சார்ஜி

          பிரபல இந்தி சீரியல் நடிகை மற்றும் பரத நாட்டியக்கலைஞருமான தேவோலீனா பட்டாச்சார்ஜி, சமீபத்தில் தனக்கு சிறுவயதில் ஏற்பட்ட பாலியல் வன்முறை குறித்து கூறி இருந்தார்.

          அதில் தனது சிறுவயதில் கணித டியூஷன் ஆசிரியர் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக

          கூறினார். மேலும் இது குறித்து போலீசில் புகார் அளிக்க விரும்பியதாகவும், ஆனால், பெற்றோர் மறுத்ததால் தன்னால் அதை செய்ய முடியவில்லை என்றும் கூறினார்.

          பிளிப்கார்ட்டின் லேடீஸ் அண்டு ஜென்டில்மென் சீசன் 2 நிகழ்ச்சியில் தேவோலீனா இந்த சம்பவம் குறித்து கூறியிருப்பதாவது,

          “அவர் அங்கு மிகச் சிறந்த ஆசிரியராக இருந்தார். எல்லோரும் அவரிடம் டியூஷனுக்குச்

          செல்வார்கள். எல்லா நல்ல மாணவர்களும், எனது இரண்டு சிறந்த நண்பர்களும் அவரிடம் தான் டியூஷனுக்குச் சென்றனர்.

          திடீரென்று, ஒரு வாரம், அவர்கள் (என் நண்பர்கள்) டியூஷன் செல்வதை நிறுத்திக் கொண்டனர்.அப்புறம் நான் மட்டும் டியூஷன் போனேன்.

          அப்போது ஆசிரியர் என்னிடம் தவறாக நடந்து கொண்டார் . வீட்டுக்குத் திரும்பி வந்து அதுகுறித்து

          அம்மாவிடம் சொல்லிவிட்டேன். நாங்கள் ஆசிரியரின் வீட்டுக்குச் சென்று, அவரின் மனைவியிடம்

          புகார் அளித்தோம். ஆனால், நான் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நினைத்தேன். ஆனால், என் பெற்றோர் அதற்கு சம்மதிக்கவில்லை.

          இது சமுதாயத்திற்கும் அனைத்து பெற்றோருக்குமான எனது அறிவுரை. உங்கள் பிள்ளைகள் இது

          போன்ற துன்பங்களை எதிர்கொள்ளும் போதெல்லாம், தயவுசெய்து, நடவடிக்கை எடுங்கள்” என கூறி உள்ளார்.

            Posted in சினிமா

            பிக்பாஸ் ஆரவ் – ராஹி தம்பதிக்கு குழந்தை பிறந்தது

            பிக்பாஸ் ஆரவ் – ராஹி தம்பதிக்கு குழந்தை பிறந்தது

            பிக்பாஸ் சீசன் ஒன் நிகழ்ச்சியில் வெற்றியாளராக தேர்வான ஆரவ் தற்போது படங்களில் நடித்து வருகிறார்.

            பிக்பாஸ் ஆரவ் – ராஹி தம்பதிக்கு குழந்தை பிறந்தது
            ஆரவ் – ராஹி


            கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஆரவ். ஓ காதல் கண்மணி,

            சைத்தான் ஆகிய படங்களில் சிறிய வேடத்தில் நடித்திருந்த ஆரவ், சரண் இயக்கிய ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.’ படத்தின் மூலம் ஹீரோவானார்.

            ஆரவ்வும், நடிகை ராஹியும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர். இதையடுத்து

            பெற்றோர்கள் சம்மதத்துடன் அவர்களது திருமணம் கடந்த ஆண்டு செப்டம்பர் 6-ந் தேதி

            நடைபெற்றது. இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

            ஆரவ்

            திருமணமாகி ஓராண்டு ஆன நிலையில், தற்போது இந்த தம்பதியினருக்கு ஆண் குழந்தை

            பிறந்துள்ளது. இதையடுத்து ஆரவ்வுக்கு சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

              Posted in Uncategorized

              புலிகளின் தற்கொலை அங்கி,குண்டுகள் மீட்பு

              புலிகளின் தற்கொலை அங்கி,குண்டுகள் மீட்பு

              புலிகள் பயன்படுத்து வந்த தற்கொலை அங்கிகள் ,மற்றும் தாங்கி எதிர்ப்பு குண்டுகள்


              என்பனவற்றை தாம் மீட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது

              யாழ்ப்பாணம் மாந்துவில் பகுதியில் இந்த வெடிகுண்டுகள் மீட்க பட்டுள்ளன ,மாவீரர் நாளினை

              முன்னிட்டு ஆண்டு தோறும் இலங்கை இராணுவம் இவ்வாறான சம்பவங்களை உருவாக்கி

              வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது

                Posted in Uncategorized

                இலங்கையில் மனித உரிமை மீறல் அதிகரித்து செல்கிறது – பிரிட்டன் கவலை

                இலங்கையில் மனித உரிமை மீறல் அதிகரித்து செல்கிறது – பிரிட்டன் கவலை

                இலங்கையில் ஆளும் கோத்தபாயாவின் ஆட்சி காலத்தில் இலங்கையில் மனித உரிமை மீறல்கள்

                அதிகரித்து செல்வதாக பிரிட்டன் கவலை தெரிவித்துள்ளது


                இது போன்ற கருது ஐநாவும் தெரிவித்துள்ள நிலையில் அதனை செவி சாய்க்காது மிதவாத

                போக்கால் ஆளும்
                அரசு செயல் பட்டு வருகிறது

                மேற்படி விடயங்கள் நீடித்து செல்லுமாகின் அடகு இலங்கைக்கு பெரும் பின்னடைவை

                ஏற்படுத்தும் என எதிர்பார்க்க படுகிறது

                  Posted in Uncategorized

                  புலிகளின் கார்த்திகை மலரை அணிந்த இந்தியா இராணுவ தளபதி

                  புலிகளின் கார்த்திகை மலரை அணிந்த இந்தியா இராணுவ தளபதி

                  யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கிட்டு நிகழ்வில் இந்தியாவின் முக்கியஸ்தரும் ஜெனரல் ராகேஷ்

                  நட்ராஜ் ஜெயபாஸ்கரன் கலந்து கொண்டார் , இவ்வாறு கலந்து கொண்ட இவர் விடுதலை புலிகள்

                  பயன்படுத்திய கார்திகை மலரை அணிந்து மகிழ்ந்தார்


                  புலிகளை அழிக்க உதவிய இந்தியா இப்பொழுது புலிகளை தேடி செல்லும் பாதையில் நடந்து

                  செல்வதை இத்தகைய நிகழ்வுகள்
                  கோடிட்டு காட்டுகின்றன

                    Posted in இலங்கை செய்திகள்

                    மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை

                    மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை

                    இலங்கைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.

                    அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

                    2021 நவம்பர்24ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது

                    இலங்கைக்கு தென்கிழக்காக தற்போது நிலை கொண்டுள்ள கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை அடுத்த சில மணித்தியாலங்களில் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசமாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

                    கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.

                    மழை நிலைமை:

                    நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

                    புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான ஆழம் கூடிய கடற்பரப்புகளில் சில இடங்களில் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

                    காற்று :

                    நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடமேற்கு அல்லது வடகிழக்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 35-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

                    காங்கேசந்துறையிலிருந்து மன்னார், புத்தளம், கொழும்பு மற்றும் காலி ஊடாகஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 45-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

                    கடல் நிலை:

                    காங்கேசந்துறையிலிருந்து மன்னார், புத்தளம், கொழும்பு மற்றும் காலி ஊடாகஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும். நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் அவ்வப்போது ஓளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

                    இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள்மிகவும் கொந்தளிப்பாகவும்காணப்படும்.

                      Posted in இலங்கை செய்திகள்

                      வெளிநாட்டு மொடலில் அமைக்க பட்டுள்ள புதிய பாலம்

                      வெளிநாட்டு மொடலில் அமைக்க பட்டுள்ள புதிய பாலம்

                      இலங்கையில் அதிநவீன கேபிள்களை கொண்டு நிர்மாணிக்கப்பட்ட புதிய களனி பாலம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று மாலை திறந்து வைக்கப்படவுள்ளது.

                      பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் இதில் கலந்துகொள்வார்.

                      இலங்கையில் முதற்தடவையாக அதிதொழில்நுட்பம் வாய்ந்த கேபிள் மீது அமைக்கப்பட்ட இந்தப் பாலம், கல்யாணி தங்க நுழைவாயில் என பெயரிடப்பட்டிருக்கிறது.

                      அதிகளவான வாகனங்கள் கொழும்பு மாநகருக்குள் நுழைவதனால், தற்போதைய களனி

                      பாலத்தில் வாகன நெரிசல் ஏற்படுகிறது. இதனை அடிப்படையாகக் கொண்டு மஹிந்த ராஜபக்ஷ,

                      ஜனாதிபதி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சராக கடமையாற்றிய 2014ஆம் ஆண்டு

                      காலப்பகுதியில், புதிய களனிப் பாலத்தை நிர்மாணிப்பதற்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.

                      கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக பாதையின் முடிவில் இருந்து பண்டாரநாயக்க சுற்றுவட்டம்

                      வரை ஆறு வழிகளைக் கொண்டதாக அமைக்கப்பட்டிருக்கும் இந்தப் பாலம் அந்த இடத்தில்

                      இருந்து ஒறுகொடவத்த வரையும் இங்குறுகடே சந்தி வரையும் துறைமுக நுழைவாயில் வரையும் நான்கு வழிகளைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.

                      களனி கங்கைக்கு குறுக்காக அமைக்கப்பட்டிருக்கும் இந்தப் பாலம் 380 மீற்றர் நீளம்

                      கொண்டதாகும். 41 ஆயிரத்து 432 மில்லியன் ரூபா செலவில் இந்தப் பாலம்

                      நிர்மாணிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் நிதிப் பங்களிப்புடன் இந்தப் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

                        Posted in Uncategorized

                        பிரபாகரன் கஞ்சா கடத்தினார் – கண்டு பிடித்தார் டக்கிளஸ் video

                        பிரபாகரன் கஞ்சா கடத்தினார் – கண்டு பிடித்தார் டக்கிளஸ்

                        இலங்கையில் தமிழ் தேசிய விடுதலைக்கு போராடிய விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன்

                        கஞ்சா கடத்தினார் என தமிழ் மொழியை பேசியவாறு ஆளும் சிங்களவர்களை அண்டி பிழைத்து

                        ,மேலாக நக்கி பிழைக்கும் டக்கிளஸ் தேவனாந்த தெரிவித்துள்ளார்

                        சிறிதரன் எம்பி பாராளுமன்றில் பேசிக்கொண்டிருந்த பொழுது குறுக்கிட்ட டக்கிலஸ் இவ்விதம்

                        தெரிவித்துள்ளார்
                        இவரது இந்த பேச்சு மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது

                        தமிழ் மக்கள் போற்றும் ஒரு “தலைவனை” பற்றி பேசுவதற்கு அரசாங்கத்தின் கைக்கூலிகள் அருகதை அற்றவர்கள்!


                        இவர்களின் ஆதாரமற்ற அறிவிலித்தனமான கருத்துக்களை மக்கள் நன்கறிவார்கள்.


                        ஒழுக்கத்திலும் கொள்கையிலும் உயர்ந்தவர்கள் என்பதால் தான் விடுதலைப்புலிகள் மற்றையவர்களை விட இன்றும் தமிழ் மக்களிடத்தே உயர்ந்த இடத்தில் நிலைத்திருக்கிறார்கள்.

                        காணொளி முழுமையாக பார்க்க இதில் அழுத்துங்கள்

                        click here full video

                          Posted in இலங்கை செய்திகள்

                          இலங்கையில் கொரனோவில் சிக்கி 24 பேர் மரணம்

                          இலங்கையில் கொரானாவில் சிக்கி 24 பேர் மரணம்

                          இலங்கையில் மூன்றாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இருபத்தி


                          நான்கு பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 522 பேருக்கு மேல் பாதிக்க பட்டுள்ளனர்


                          தொடர்ந்து வேகமாக இந்த நோயானது பரவி வருவதால் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்க

                          பட்டுள்ளது

                            Posted in Uncategorized

                            முஸ்லீம் எம்பி வீடு அடித்து நொறுக்கு – திருமலையில் தொடரும் பதட்டம்

                            முஸ்லீம் எம்பி வீடு அடித்து நொறுக்கு – திருமலையில் தொடரும் பதட்டம்

                            திருமலை கினியா பகுதியில் படகு சேவை தடம் புரண்டதில் ஏழுபேருக்கு மேல் பலியாகினர்

                            ,மேற்படி சம்பவத்தை அடுத்து அந்த பகுதி எம்பியாக விளங்கும் முசுலீம் எம்பி வீடு மீது கூடிய குழு

                            ஒன்று திடீர் தாக்குதலை நடத்தியது

                            இதில் அவரது ஆடம்பர வீடு பலத்த சேதங்களை உள்ளாகியுள்ளது ,தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது

                              Posted in இலங்கை செய்திகள்

                              கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்துக்கு முன்பாக பதட்டம்

                              கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்துக்கு முன்பாக பதட்டம்

                              யாழ்ப்பாணம் – கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்துக்கு முன்பாக, இன்று (23), துப்புரவுப்

                              பணியில் ஈடுபடுகிறவர்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில், இராணுவத்தினரும் பொலிஸாரும் நடந்து கொண்டுள்ளனர்.

                              கோப்பாய் துயிலும் இல்லத்தை, இராணுவத்தினர் இடித்தழித்து, பாரிய இராணுவ முகாமை

                              அமைத்து, நிலைகொண்டுள்ளனர். அதனால் துயிலும் இல்லத்துக்கு முன்பாக உள்ள தனியார் காணியில், மாவீரர் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யபடுவது வழமையாகும்.

                              தற்போது மாவீரர் வாரம் ஆரம்பமாகியுள்ள நிலையில், அக்காணியின் முன்பக்கமாக வீதியின்

                              இருமருங்கினையும் துப்புரவு செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

                              இதன்போது , கோப்பாய் பொலிஸார் மற்றும் பெருமளவான இராணுவத்தினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர்.

                              சிவில் உடையில் வந்த இராணுவத்தினர் சிலர், தாமும் துப்புரவுப் பணியில் ஈடுபடுவதாக கூறி,

                              துப்புரவுப் பணியில் ஈடுபட்டு இருந்தவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக நடந்து கொண்டனர்.

                              இதேவேளை, இராணுவம் மற்றும் பொலிஸ் புலனாய்வாளர்களும் அங்கிருந்த ஊடகவியலாளர்கள்

                              உள்ளிட்டவர்களை அச்சுறுத்தும் விதமாக புகைப்படம் எடுத்ததுடன் வாகன இலக்கங்களையும் பதிவு செய்தனர்

                                Posted in இலங்கை செய்திகள்

                                மாவீரர் நாளினை மதிக்காத வரை – இலங்கையில் நல்லிணக்கம் ஏற்படாது-சிறிதரன்


                                மாவீரர் நாளினை மதிக்காத வரை – இலங்கையில் நல்லிணக்கம் ஏற்படாது

                                இலங்கையில் இறந்த மாவீரர்களை நினைவு கூற இலங்கை ஆளும் அரசுகள் தடை விதித்து

                                வருகின்றன இவ்வாறு இவர்கள் செல்வார்கள் ஆயின் நாட்டில் எவ்வாறு நல்லிணக்கத்தை

                                ஏற்படுத்த முடியும் என


                                சிறிதரன் எம்பி கேள்வி எழுப்பியுள்ளார் .

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  இழுவைப் படகு விபத்து – சிலர் உயிரிழப்பு

                                  இழுவைப் படகு விபத்து – சிலர் உயிரிழப்பு

                                  கிண்ணிய நகரசபை மற்றும் பிரதேச சபையை இணைக்கும் குறிஞ்சாகேணி பாலத்தின் நிர்மாண

                                  பணிகளில் தற்காலிகமாக சேவையில் ஈடுப்பட்டிருந்த மோட்டார் இழுவைப் படகு இன்று நீரில் மூழ்கியுள்ளது.

                                  இன்று (23) காலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பலர் இதில்

                                  பயணம் செய்துள்ளனர். சிலர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர்

                                  தெரிவித்துள்ளார்.thumbnail yyஉயிரிழந்தவர்களின் சடங்கள் கிண்ணியா தள வைத்தியசாலையில்

                                  வைக்கப்பட்டுள்ளன. மீட்பு பணிகளில் கடற்படை மற்றும் பொலிசார் ஈடுப்பட்டுள்ளதாக பொலிஸ்

                                  ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்

                                    Posted in இலங்கை செய்திகள்

                                    இந்தியாவுக்குள் தங்கம் கடத்திய 10 இலங்கையர்கள் கைது

                                    இந்தியாவுக்குள் தங்கம் கடத்திய 10 இலங்கையர்கள் கைது

                                    இந்தியாவுக்குள் இலங்கை கொழும்பில் இருந்து தங்கம் கடத்தி சென்ற பத்து பேர் விமான நிலைய

                                    சுங்க அதிகாரிகளினால் கைது செய்ய பட்டுள்ளனர்

                                    இவ்வாறு கடத்தப்பட்ட தங்கம் அணைத்தின் பெறுமதி சுமார் ஒன்றரை கோடி என மதிப்பிட பட்டுள்ளது

                                    கைதானவர்களிடம் தொடர் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

                                      Posted in இலங்கை செய்திகள்

                                      இலங்கை வந்தடைந்த 4 லட்சம் பைசர் ஊசிகள்

                                      இலங்கை வந்தடைந்த 4 லட்சம் பைசர் ஊசிகள்

                                      இலங்கையில் மூன்றாம் அலையாக கொரனோ நோயானது பரவி வருகிறது


                                      இந்த நோயினை தடுப்பதற்கு இலங்கை நமக்கு லட்சம் பைசர் ஊசிகளை கொள்வனவு செய்து

                                      ,அவை தற்போது நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது

                                        Posted in சினிமா

                                        வில்லன் திருமணத்திற்கு நேரில் சென்று வாழ்த்திய சிரஞ்சீவி

                                        வில்லன் திருமணத்திற்கு நேரில் சென்று வாழ்த்திய சிரஞ்சீவி

                                        எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் வலிமை படத்தில் வில்லனாக நடித்திருக்கும் கார்த்திகேயாவிற்கு திருமணம் நடந்துள்ளது.

                                        வலிமை பட வில்லன் திருமணத்திற்கு நேரில் சென்று வாழ்த்திய சிரஞ்சீவி
                                        மணமக்களுடன் சிரஞ்சீவி


                                        அஜித்குமாரின் வலிமை படத்தில் வில்லனாக நடிப்பவர் கார்த்திகேயா. இவர் தெலுங்கில்

                                        ஆர்.எக்ஸ்.100 படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். அந்த படம் வெற்றிகரமாக ஓடியது.

                                        இதையடுத்து மேலும் பல படங்களில் நடித்தார். தற்போது ராஜவிக்ரமகா என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

                                        கார்த்திகேயாவுக்கும், லோகிதா என்பவருக்கும் காதல் மலர்ந்தது. சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்த

                                        பட விழாவுக்கு காதலியை அழைத்து வந்து அவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதை

                                        வெளிப்படையாக அறிவித்தார். எனக்கு தோழியாக காதலியாக இருந்தவர் என் வாழ்க்கை துணையாக மாறப்போகிறார் என்று கூறினார்.

                                        கார்த்திகேயா திருமணம்

                                        இந்த நிலையில் கார்த்திகேயா-லோகிதா திருமணம் ஐதராபாத்தில் நேற்று நடந்தது. மணமக்களை

                                        சிரஞ்சீவி உள்ளிட்ட தெலுங்கு நடிகர் – நடிகைகள் நேரில் வாழ்த்தினார்கள்.