Author: நலன் விரும்பி
சசிகுமாருக்கு அறிவுரை சொன்ன ரஜினி
சசிகுமாருக்கு அறிவுரை சொன்ன ரஜினி
எம்.ஜி.ஆர்.மகன் படத்தை தொடர்ந்து சசிகுமார் நடிப்பில் உருவாகி இருக்கும் ராஜவம்சம் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
சசிகுமாருக்கு அறிவுரை சொன்ன ரஜினி
சசிகுமார் – ரஜினி
சசிகுமார் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘ராஜவம்சம்’. இப்படத்தில் நிக்கி கல்ராணி
கதாநாயகியாக நடித்து இருக்கிறார். கதிர்வேல் இயக்கியிருக்கும் இப்படத்தில் 49 நடிகர்கள்
நடித்துள்ளனர். இப்படத்தின் விழாவின் சசிகுமார் பேசும்போது, ‘இந்த கூட்டுக்குடும்பம்
சம்பந்தப்பட்ட படத்தைக் கதிர் என்னிடம் கூறினார். மிகவும் பிடித்திருந்தது. நானும் கூட்டு
குடும்பத்தில் வாழ்ந்து இருக்கிறேன், வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்.
சசிகுமார்
இப்படத்தில் அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவாளர் சித்தார்த்
அனைவரையும் அழகாக கேமராவில் காட்டியுள்ளார். எடிட்டர் சாபு ஜோசப் இப்படத்தில்
பணிபுரிந்ததில் மகிழ்ச்சி. சாம் சி எஸ் பின்னணி இசை மிகப்பெரிய பலம். இப்படத்திற்கு
இன்னொரு மிகப்பெரிய பலம் தயாரிப்பாளர் டி.டி.ராஜா சார். ரஜினி சார் பேட்ட படத்தில் எனக்கு
ஒரு அட்வைஸ் கொடுத்தார். படத்தைத் தயாரிக்க மட்டும் வேண்டாம் என்றார். எதற்குச்
சொல்கிறேன் என்றால் அதில் அவ்வளவு சிரமமும் பொறுமையும் திறமை வேண்டும் என்று அவர் சொன்னார்’ என்றார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கமல் விலகல்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கமல் விலகல்
நடிகர், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், தான் தொகுத்து வழங்கும் பிக்பாஸ்
நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக கூறப்படுகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கமல் விலகல்?
கமல்
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியை நடிகர்
கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை தமிழில் நான்கு சீசன்கள் முடிந்துள்ளன
. தற்போது 5-வது சீசன் நடைபெற்று வருகிறது. 4 சீசனை தொடர்ந்து 5வது சீசனையும் கமல் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்நிலையில், நடிகர் கமலுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், தனியார்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதனால், வரும் பிக்பாஸ்
நிகழ்ச்சியை கமல் கலந்துக் கொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்பு
காரணமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சில வாரங்கள் கமல் விலகுவதாக கூறப்படுகிறது.
கமல்
இதையடுத்து வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
புலம் பெயர் தமிழர்கள் சார்பில் அமெரிக்காவில் பேசினாராம் – தேசத்துரோகி சுமந்திரன் கூவல்
புலம் பெயர் தமிழர்கள் சார்பில் அமெரிக்காவில் பேசினாராம் – தேசத்துரோகி சுமந்திரன் கூவல்
தமிழ்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் மகிந்த கோத்தபாயாவின் அரச சட்டத்தரணியுமான
சுமந்திரன் அமெரிக்காவில் இலங்கை ,மற்றும் புலம் பெயர் தமிழர்கள் சார்பில் சென்று
பேசியுள்ளதாக கூவியுள்ளார்
இவரது இந்த கூவல் புலம் பெயர் தமிழர்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது
இதே சுமந்திரன்புலம் பெயர் புலிகள் குழுக்களுடன் பேசி அவர்களை மகிந்த பக்கம் இழுத்து
சென்றவர் என்பதாக உள்ளக கசிவுகள் தெரிவிக்கின்றன
யாழில் புலிகள் தயாரிப்பு கண்ணிவெடி மீட்பாம் – இராணுவம்
யாழில் புலிகள் தயாரிப்பு கண்ணிவெடி மீட்பாம் – இராணுவம்
யாழ்ப்பாணம் வேலணை பகுதியில் புலிகளை தயாரிப்பு கண்ணிவெடி ஒன்றை தாம்
மீட்டுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது
தமிழர்கள் மாவீரர் நாளினை அனுஷ்ட்டிக்க தயாராகி வரும் நிலையில்
இவ்வாறான குண்டுகள் மீட்க படுவதாக சிங்கள உளவுத்துறை பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவது
தமிழர்களை கைது செய்ய போகும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பார்க்க படுகிறது
அரசியல்வாதியை கட்டி வைத்த மக்கள்
அரசியல்வாதியை மின் கபம்தில் கட்டி வைத்த மக்கள்
இலங்கை களுத்துறை பகுதியை சேர்ந்தபிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கிராமம் ஒன்றுக்குள்
புகுந்து ரகளையில் ஈடுபட்டுள்ளார்
அதிக மதுபோதையில் காணப்பட்ட இவர் இந்த செயலில் ஈடுபட்ட வேளை
அவரை கட்டி வைத்து மக்கள் தாக்கியுள்ளனர்
இவ்வாறு தாக்குதலில் ஈடுபட்டவர் ஆளும் கோத்தபாயவின் கட்சியை சேர்ந்தவர் என்பது குறிப்பிட தக்கது
புலிகள் குழு சுமந்திரனை விரட்டியதாம் – சிங்கள உளவுத்துறை கூவல்
புலிகள் குழு சுமந்திரனை விரட்டியதாம் – சிங்கள உளவுத்துறை கூவல்
கனடாவிற்கு சென்றிருந்த கூட்டமைப்பின் பேச்சாளாரும் ,சிங்கள ஆட்சியாளர்களின் கூலியாகவும்
,தமிழ் தேச துரோகியாகவும் செயல்பட்டு வரும் சுமந்திரன் கலந்து கொள்ளவிருந்த கூட்டத்தில்
அவரை பேசவிடாது அங்கு நின்ற மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்
அத்துடன் தேசத்துரோகி ஒழிக என கோசம் முழங்கினர் ,இவ்வாறான இடையூறை புலிகள் ஆதரவு
குழுக்கள் இணைந்து நடத்தியாக அந்த சிங்கள உளவுத்துறை ஊடகம் கூவியுள்ளது
வீதி விபத்தில்சிக்கி ஒரே நாளில் 8 பேர் மரணம்
வீதி விபத்தில்சிக்கி ஒரே நாளில் 8 பேர் மரணம்
இலங்கையில் கடந்த 24 மணித்தியாலத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் சிக்கி எட்டு பேர்
பலியாகியுள்ளனர்
மேலும் பல டசின் பேர் காயமடைந்துள்ளனர்
நாள் தோறும் இலங்கையில் வீதி விபத்துகளில் சிக்கி நல்லவர் பலியாகி வருகின்றனர் என்ற
அதிர்ச்சிகர புள்ளி விபரம் உள்ளமை குறிப்பிட தக்கது
அரியாலையில் 68 மில்லியன் ரூபா கேரளா கஞ்சா மீட்பு
அரியாலையில் 68 மில்லியன் ரூபா கேரளா கஞ்ச மீட்பு
இந்தியா கேரளாவில் இருந்து கடத்தி வரப்பட்ட நிலையில் அறுபத்தி எட்டு மில்லியன் ரூபா
பெறுமதியான கஞ்சா மீட்க பட்டுள்ளது
அரியாலை பகுதியில் வீடொன்றில் மறைத்து வைக்க பட்டிருந்த நிலையில் இந்த கஞ்சா
கடற்படையின் உதவியுடன் மீட்க பட்டுள்ளது
இந்த கடத்தலோடு தொடர்புடைய சிலரும் கைது செய்ய பட்டுள்ளனர்

கதாநாயகி வேடத்திற்கு அடம் பிடிக்கும் நடிகை
கதாநாயகி வேடத்திற்கு அடம் பிடிக்கும் நடிகை
சினிமாவை விட்டு பல வருடங்கள் விலகி இருந்த நடிகை மீண்டும் கதாநாயகி வேடத்திற்கு ஆசைப்படுகிறாராம்.
கதாநாயகி வேடத்திற்கு அடம் பிடிக்கும் நடிகை
தமிழ் சினிமாவில் போ என்று சொல்லி பிரபலமான நடிகை, குறுகிய காலத்திலேயே பல
படங்களில் நடிக்க ஒப்பந்தமானாராம். அதன்பின் முன்னணி இயக்குனர் படத்தில் நடித்து மிகவும்
பிரபலமானதால், தான் பெரிய நடிகையாகிவிட்டோம் என்று தனது சம்பளத்தை அதிகமாக உயர்த்தினாராம்.
இதனால், நடிகைக்கு பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்ததாம். நடிகையும் கொஞ்சம் கொஞ்சமாக
சினிமாவை விட்டு விலகினாராம். தற்போது மீண்டும் நடிக்க ஆசைப்பட்டு முயற்சிகள் செய்து
வருகிறாராம். ஆனால், பட வாய்ப்பு கேட்பவர்களிடம் கதாநாயகி வேடம்தான் வேண்டும் என்று
கேட்கிறாராம். நடிகையின் பேச்சை கேட்ட தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் மீண்டும்
நடிகைக்கு வாய்ப்புகள் எங்கு கிடைக்கபோகுது என்று பேசிக்கொள்கிறார்களாம்
நடிகரை விடாமல் வாய்ப்பு கேட்கும் நடிகை
நடிகரை விடாமல் வாய்ப்பு கேட்கும் நடிகை
பல வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருப்பவரிடம் நடிகை ஒருவர் தொடர்ந்து வாய்ப்பு கேட்டு வருகிறாராம்.
நடிகரை விடாமல் வாய்ப்பு கேட்கும் நடிகை
நடிப்பிலும், நடனத்திலும் ‘ராசா’வான மூன்றெழுத்து நடிகர், அவர். சமீபகாலமாக அவர் நடித்த
படங்கள் அனைத்தும் அதிரிபுதிரியாக ஓடி அமோக வெற்றி பெற்று வருகின்றன. அவருடைய
நட்சத்திர அந்தஸ்து, படத்துக்கு படம் உயர்ந்து கொண்டே போகிறதாம்.
நடிகருடன் ஏற்கனவே ஜோடியாக நடித்த ஒரு நடிகை கைவசம் தற்போது படமே இல்லையாம்.
அதனால் அந்த நடிகரை சந்தித்து வாய்ப்பு கேட்டாராம். ‘‘ஒரு பாட்டு என்றாலும் பரவாயில்லை…
உங்களுடன் சேர்ந்து ஆடினால் போதும்…’’ என்றாராம். வட இந்திய பெயரை கொண்ட அந்த
நடிகைக்கு வாய்ப்பு தருவதாக வாக்குறுதி கொடுத்து இருக்கிறாராம், நடிகர்
இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது யார் தெரியுமா?
இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது யார் தெரியுமா?
இணையத்தில் மக்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளியேற்றுப் படலம் நடக்கும்.
இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது யார் தெரியுமா?
பிக்பாஸ் 5
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியை நடிகர்
கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை தமிழில் நான்கு சீசன்கள் முடிந்துள்ளன. தற்போது 5-வது சீசன் நடைபெற்று வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் விதிப்படி ஒவ்வொரு வார இறுதியில் ஒரு போட்டியாளர்
வெளியேற்றப்படுவது வழக்கம். மக்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் இந்த வெளியேற்றுப்
படலம் நடக்கும். அதன்படி நதியா சங், அபிஷேக் ராஜா, சின்னப்பொண்ணு, சுருதி, மதுமிதா ஆகியோர் இதுவரை வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இசைவாணி
இந்நிலையில், இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போவது யார் என்பது குறித்த
தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி குறைந்த வாக்குகள் பெற்றதன் காரணமாக இசைவாணி வெளியேற்றப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜெய்பீம் திரைப்பட சர்ச்சை – வருத்தம் தெரிவித்தார் இயக்குனர்
ஜெய்பீம் திரைப்பட சர்ச்சை – வருத்தம் தெரிவித்தார் இயக்குனர்
ஜெய்பீம் திரைப்படத்திற்கு எழுந்த சில எதிர்மறை கருத்துகள் நான் சற்றும் எதிர்பாராதவை என படத்தின் இயக்குனர் ஞானவேல் கூறியுள்ளார்.
ஜெய்பீம் திரைப்பட சர்ச்சை – வருத்தம் தெரிவித்தார் இயக்குனர் ஞானவேல்
ஜெய்பீம் இயக்குனர் ஞானவேல்
நடிகர் சூர்யா, ஜோதிகா தயாரிப்பில் ஞானவேல் இயக்கி நடிகர் சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்படத்தில் மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் பெயரை குற்றவாளி
கதாபாத்திரத்துக்கு வைத்துள்ளதாக சர்ச்சை எழுந்தது. இதேபோல், குற்றவாளி கதாபாத்திரத்தின்
பின்பக்கம் வன்னியர்களின் அடையாளமான அக்னி குண்டத்தை காட்டியதாகவும் விமர்சனம் எழுந்தது. இதை தொடர்ந்து இந்த காட்சி மாற்றப்பட்டது.
இது தொடர்பாக பல மாவட்டங்களில் சூர்யாவுக்கு எதிராக பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். போலீசிலும் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா மீது புகார் அளித்தனர்.
ஜெய்பீம்
இந்நிலையில் ஜெய்பீம் திரைப்படம் சர்ச்சை தொடர்பாக இயக்குனர் வருத்தம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-
ஜெய்பீம் திரைப்படத்திற்கு எழுந்த சில எதிர்மறை கருத்துகள் நான் சற்றும் எதிர்பாராதவை. ஒரு
காலண்டர் படம் ஒரு சமூகத்தை குறிப்பதாக புரிந்துக் கொள்ளப்படும் என நான் அறியவில்லை. 1995-ம் ஆண்டை பிரதிபலிப்பதே அந்த காலண்டரின் நோக்கம்.
ஜெய்பீம் திரைப்பட ஆக்கத்தில் தனிப்பட்ட நபரையோ, குறிப்பிட்ட சமுதாயத்தையோ அவமதிக்கும் எண்ணம் சிறிதளவும் இல்லை.
மனவருத்தம் அடைந்தவர்களுக்கும், புண்பட்டவர்களுக்கும் உளப்பூர்வமான வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாவீரர் நாள் நடத்த தடை – தமிழர்கள் கொதிப்பு
மாவீரர் நாள் நடத்த தடை – தமிழர்கள் கொதிப்பு
யாழ்ப்பாணத்தில், மாவீரர் நாள் நிகழ்வுக்குத் தடை விதிக்கக் கோரி, பருத்தித்துறை மற்றும் மல்லாகம் நீதவான் நீதிமன்றங்களில், பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை, நாளை (22) நடைபெறவுள்ளது.
பருத்தித்துறை, நெல்லியடி, வல்வெட்டித்துறை ஆகிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளால், பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்திலும், சுன்னாகம், தெல்லிப்பழை மற்றும் காங்கேசன்துறை
ஆகிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளால், மல்லாகம் நீதவான் நீதிமன்றத்திலும், வெள்ளிக்கிழமை (19), மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு தடை கோரி, விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இன்று 21ஆம் திகதி தொடக்கம் வரும் நவம்பர் 28ஆம் திகதி வரை, இந்த தடை உத்தரவு வழங்குமாறு, பொலிஸாரால் கோரப்பட்டுள்ளது.
குற்றவியல் சட்டக்கோவையின் 120ஆவது பிரிவுக்கு அமையவும், பயங்கரவாத தடைச் சட்டத்தின் படியும், இந்த நிகழ்வை நடத்துவது குற்றம் என்று தெரிவித்த பொலிஸார், இதனை தடை செய்யுமாறும் கோரியுள்ளனர்.
அத்துடன், நாட்டில் நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் சட்டத்தின் பிரகாரமும் பொதுமக்களை ஒன்றுதிரட்டுவதற்கு தடை உள்ளதாக, பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த விண்ணப்பங்கள், வெள்ளிக்கிழமை (19), இரண்டு நீதிமன்றங்களிலும் பரிசீலனைக்கு எடுக்கப்பட்ட போது, பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டோர் மன்றில் முன்னிலையாகவில்லை.
இதனைத் தொடர்ந்து, அந்த விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை நாளை (22) நடைபெறும் எனவும் அதன் பின்னர் கட்டளை பிறப்பிப்பதாகவும் குறிப்பிட்ட நீதிமன்றங்கள், பிரதிவாதிகளுக்கு அழைப்பாணை சேர்ப்பிக்க உத்தரவிட்டன.
இதேவேளை, யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸாரால் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்துக்கு அனுமதி அளித்த யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம்,
தடை உத்தரவு கட்டளையை நேற்று முன்தினம் (19) வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சுமந்திரனால் மக்களுக்கு பயனில்லை – தங்கமாளிகை அனந்தி கொதிப்பு
சுமந்திரனால் மக்களுக்கு பயனில்லை – தங்கமாளிகை அனந்தி கொதிப்பு
சுமந்திரனின் சட்டப்புலமை தமிழ் மக்களிற்கு எதையும் பெற்றுக்கொடுத்திருக்கவில்லை எனவும் அறைகளிற்குள் விளக்கேற்றி படங்களை பிரசுரிப்பதை விடுத்து பொது வெளிக்கு வர வேண்டும் எனவும் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி ஊடக மையத்தில் இன்று அவர் ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பிலேயே இவ்விடயத்தினை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
நவம்பர் மாதம் 21ம் திகதி முதல் 27ம் திகதிவரை மாவீரர் தினம். அதேபோல மே 18ம் திகதி பொதுமக்களிற்கான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல். தற்போது ஆட்சிக்கு வந்திருப்பவர்கள் இந்த இரண்டு நிகழ்வுகளையும் தடுத்து வந்திருக்கின்ற நிலையில் கடந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தலிற்கு முதல்நாள் சடுதியாக அந்த ஆடைத்தொழிற்சாலையில் கொரோனா தொற்று ஏற்ப்டுள்ளதாக செய்தியை கொண்டுவந்தார்கள்.
முல்லைத்தீவு வைத்தியசாலையில் பிசிஆர் பரிசோதனை மேற்கொண்டால் ஒரு கிழமை, முன்றுநாள், ஐந்து நாள் என்று சென்ற நிலையில் உடினடியாக அதன் முடிவுகளை சொல்லி கொத்தணி உருவாகுவது புால் மாஜையை காட்டினார்கள்.
எங்களுடைய நிகழ்வுகள், போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றபொழுது, கொரோனாவை சாட்டாக வைத்துக்கொண்டு அவர்கள் பழிவாங்குகின்ற அல்லது குரள்வளையை நெரிக்கின்ற செயற்பாட்டை முன்னெடுத்த வருகின்றார்கள்.
கடந்த மாவீரர் தினத்திலும் இவ்வாறு நீதிமன்ற தடைகளை எடுக்கப்பட்டிருந்தது. இம்முறையும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஓடியோடி இந்த தடைகளை நீதிமன்றங்களில் பெற்றுக்கொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கின்றார்கள். உண்மையில் இந்த தடையை பொலிசார் கொண்டுவர விரும்பினால், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அவர்கள் கொண்டுவர முயற்சிக்க வேண்டும்.
அது கொண்டுவர வேண்டுமாக இருந்தால் பாராளுமன்ற கெசட் நோட்டிபிக்கேசன் கொண்டுவரப்பட வேண்டும். ஆனால் குறிப்பிட்ட ஒரு இடத்தை சொல்லாமல், வெறுமன இன்ன இன்ன தொகுதியை அல்லது மாவட்டத்தை மையப்படுத்தி தடைகளை எடுத்து வருகின்றார்கள்.
இந்த விடயத்தை சவாலுக்குட்படுத்தக்கூடிய சட்டத்தரணிகள் குழாம் இருக்க வேண்டும். அந்த சட்டத்தரணிகள் குழாம் தமிழ்த் தேசியம் சார்ந்து விவாதிக்கவேண்டிய வேளை வந்திருக்கின்றது. மனமுவந்து சட்டத்தரணிகள் குழாம் இதற்கு தயாராக வேண்டும். நினைவுகூரல் என்பது மனித உரிமைக்குரிய ஓர் நிகழ்வு.
அந்த நினைவுகூரலுக்கு கடந்த அரசாங்கமும் எமக்கு அனுமதிக்கவில்லை. ஆனால் அவர்கள் கண்டும் காணாதும் இருந்தார்கள். அதனை எமது மக்கள் பயன்படுத்திக்கொண்டார்கள். ஆனால் இப்பொழுது அதற்கு அனுமதிக்காத வகையில் பல்வேறு தடைகள் ஏற்படுத்தப்படுகின்றது.
தடுப்பதற்கான முயற்சிகள் கடந்தவாரமே எடுக்கப்பட்டிருக்கின்றது. வழமையாக எந்த கடும் தேசிய தமிழ்க்கட்சிகளாக இருந்தாலும் பூட்டிய அறைக்குள் அல்லது தமது வளவிற்குள் நினைவேந்தலைசெய்து படங்களை பிரசுரிப்பதை நாங்கள் அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது.
உண்மையில் சுமந்திரனுடைய சட்டம், சட்ட புலமை தமிழ் மக்களிற்கு பயன்பட்டதாக இல்லை. ஏனைய தமிழ் கட்சிகளினுடைய தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, விக்னேஸ்வரனுடைய கட்சியாக இருக்கட்டும் எல்லோருமே ஒன்றுபட்டு இது தொடர்பான பேச்சுக்களில் ஈடுபட்டு உடனடியாக இதனை எவ்வாறு எதிர்கொள்வது பேசப்பட வேண்டும்.
வெளுமனே வீட்டுக்குள் கொழுத்துவதென்பது பொருத்தமானதல்ல. நாங்கள் சொல்லாவிடினும் வீடுகளில் மாவீரர்களை நினைந்து அவர்கள் விளக்கேற்றத்தான் போகின்றார்கள். ஆனால், உலகிற்கு சொல்வதற்கு ஒரு பொது வெளியில் வரவேண்டும். சகல கட்சிகளிலும் சட்டத்தரணிகள் நிறையப்பேர் இருக்கின்றார்கள்.
இந்த முறையாவது அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தங்களிற்குள் பேசி எவ்வாறு இந்த எவ்வாறு இவ்விடயத்தை விவாதத்திற்கு கொண்டு வர வேண்டும் என்பது இப்பொழுது தேவையாக உள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.
கொட்டலில் இறந்த நிலையில் ஆண் சடலமாக மீட்பு
கொட்டலில் இறந்த நிலையில் ஆண் சடலமாக மீட்பு
அனுராத புரம் பகுதியில் உள்ள கொட்டல் ஒன்றில் வசித்து வந்த ஆண் ஒருவர் சடலமாக மீட்க
பட்டுள்ளார் ,இவர் எவ்விதம் இங்கு இறந்தார் என்பது தொடர்பிலான விசாரணைகள் ஆம்பிக்க
பட்டுள்ளன
சடலம் மீட்க பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது
வெடி பொருட்களுடன் இருவர் கைது
வெடி பொருட்களுடன் இருவர் கைது
இந்தியாவில் இருந்து படகுமூலம் கடத்தி வரப்பட்டு வீடொன்றில் பதுக்கி வைக்க பட்டிருந்த
பெருமளவான
வெடிபொருட்களுடன் நபர் ஒருவர் கைது செய்ய பட்டுள்ளார்
கைதானவர்கள் தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்த பட்டு வருகின்றனர்
இராணுவமுகாம் அருகே தொலை தொடர்பு கருவிகள் கண்டு பிடிப்பு
இராணுவமுகாம் அருகே தொலை தொடர்பு கருவிகள் கண்டு பிடிப்பு
மன்னார் இராணுவ முகாம் அருகில் உள்ள கடல் பகுதியில் தொலை தொடர்பு கருவி ஒன்று கண்டு
பிடிக்க பட்டுள்ளது ,மீனவர்கள் வழங்கிய தகவலை அடுத்து மேற்படி தொலைத்தொடர்பு பெட்டி
கண்டு பிடிக்க பட்டுள்ளது
இதன் ஊடாக குறித்த இராணுவ முகாமின் உரையாடல்கள் ஒட்டு கேட்க பட்டதா என்ற சந்தேகம் வலுத்துள்ளது
இராணுவ விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது ,மேற்படி கருவி அமெரிக்கா தயாரிப்பு என
கன்டு பிடிக்க பட்டுள்ளது
பரபரப்பை ஏற்படுத்திய ராணி முகர்ஜியின் பேச்சு
பரபரப்பை ஏற்படுத்திய ராணி முகர்ஜியின் பேச்சு
பிரபல பாலிவுட் நடிகை, ராணி முகர்ஜி சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசியது, பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
பரபரப்பை ஏற்படுத்திய ராணி முகர்ஜியின் பேச்சு
ராணி முகர்ஜி
மும்பை திரையுலகம் என்றாலே அதிரடிக்குக் கொஞ்சமும் குறைவிருக்காது என்பது பலருக்கும்
தெரிந்த விஷயம். பல சம்பவங்களை திரையுலகினர் வெளியில் சொல்வதில்லை. இப்போது ராணி
முகர்ஜி தனக்கு நடந்த ஒரு சம்பவத்தை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
முஜ்சே தோஸ்தி கரோகே படத்திற்குப் பிறகு வேலை இல்லாமல் 8 மாதங்கள் சும்மா இருந்தேன்.
என் கெரியர் முடிந்துவிட்டது, ராணி அவ்வளவு தான் என்று சினிமா விமர்சகர்கள் தெரிவித்தார்கள்.
ராணி முகர்ஜி
அந்த நேரத்தில் தான் சாத்தியா பட வாய்ப்பு வந்தது. சாத்தியாவில் நடிக்க எனக்கு விருப்பம் இல்லை என்பதைத் தெரிவிக்க என் பெற்றோர் யஷ் சோப்ராவைச் சந்திக்கச் சென்றார்கள்.
யஷ் சோப்ராவோ தன் அறைக் கதவைப் பூட்டிவிட்டு எனக்கு போன் செய்தார். உன் பெற்றோரை
ஒரு அறையில் வைத்துப் பூட்டிவிட்டேன். சாத்தியா படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டால் மட்டுமே
அவர்களை வெளியே விடுவேன் என்றதால் நான் சாத்தியாவில் நடித்தேன் என்றார். ராணி
முகர்ஜியின் இந்தக் கருத்து பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது
வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைக்கு தாயான பிரீத்தி ஜிந்தா
வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைக்கு தாயான பிரீத்தி ஜிந்தா
பிரபல பாலிவுட் நடிகை பிரீத்தி ஜிந்தா, வாடகைத் தாய் மூலம் இரட்டை குழந்தைக்கு தாயானதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைக்கு தாயான பிரீத்தி ஜிந்தா
பிரீத்தி ஜிந்தா
பிரபல இந்தி நடிகை பிரீத்தி ஜிந்தா. இவர் மணிரத்னம் இயக்கிய “தில் சே” படத்தில் அறிமுகமாகி
முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். தில் சே படம் தமிழில் உயிரே என்ற பெயரில் வெளியானது.
பாலிவுட்டில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
கிரிக்கெட்டில் அதிக ஆர்வம் கொண்ட பிரீத்தி ஜிந்தா, ஐ.பி.எல். கிரிக்கெட் பஞ்சாப் அணியின்
உரிமையாளர்களுள் ஒருவராக இருக்கிறார். பிரீத்தி ஜிந்தா கடந்த 2016-ம் ஆண்டு அமெரிக்காவை
சேர்ந்த ஜீன் குட்எனப் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
தற்போது 46 வயதாகும் பிரீத்தி ஜிந்தா வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகளைப் பெற்றுள்ளார். அந்த குழந்தைகளுக்கு ஜெய் ஜிந்தா, ஜியா ஜிந்தா என்று பெயர் வைத்துள்ளார்.
சமூக வலைத்தளத்தில் பிரீத்தி ஜிந்தா வெளியிட்டுள்ள பதிவில், ‘‘நானும், கணவர் ஜீனும் மகிழ்ச்சியில் உள்ளோம், எங்கள் இதயங்கள் நன்றியுணர்வுடன் நிரம்பியுள்ளன. எங்கள் இரட்டை
குழந்தைகளை குடும்பத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். எங்கள் வாழ்க்கையில் இது புதிய
கட்டம். உற்சாகமாக இருக்கிறோம். மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் எங்கள் வாடகை
தாய்க்கு நன்றி” என கூறியுள்ளார். பிரீத்தி ஜிந்தாவுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
கனடாவில் சுமந்திரனுக்கு செருப்படி – தமிழர்கள் போராட்டம்
கனடாவில் சுமந்திரனுக்கு செருப்படி – தமிழர்கள் போராட்டம்
தமிழ் தேசிய கூட்டமைப்பின்சர்சைக்குரியவரும் ஆளும் சிங்கள ஆட்சியாளர்களின் கை
பொம்மையாகவும் தமிழ் தேசிய விடுதலைக்கு எதிராக செயல் பட்டு வரும் சின்ன கதிர்காமரான
சுமந்திரன் கனடாவிற்கு பயணம் செய்திருந்தார்
இவரது இந்த பயணத்திக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழர்கள் பெரும் போராட்டம் ஒன்றை
நடத்தியதுடன் ,கூட்டி குடுங்கடா சுமந்திரனுக்கு என்ற வார்த்தைகளை ,ஆண் பெண்கள் கோசமாக
முழங்கியதுடன் ,மேலும் கெட்ட வார்த்தைகள் ஊடக அவரை திட்டியவாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
சிங்கள பால் குடித்து வளர்ந்தவர் தான் என சுமந்திரன் தெரிவித்து வருகின்றமை குறிப்பிட தக்கது







