முல்லைத்தீவு நடுக்காட்டில் மாவீரர் அனுஷ்டிப்பு
Posted in இலங்கை செய்திகள்

முல்லைத்தீவு நடுக்காட்டில் மாவீரர் அனுஷ்டிப்பு

முல்லைத்தீவு நடுக்காட்டில் மாவீரர் அனுஷ்டிப்பு

CLICK HERE VIDEO

எங்கே எங்கே எங்கள் மாவீரர் எங்கே |மாவீரர் பாடல்
Posted in இலங்கை செய்திகள் பாடல்கள்

எங்கே எங்கே எங்கள் மாவீரர் எங்கே |மாவீரர் பாடல்

எங்கே எங்கே எங்கள் மாவீரர் எங்கே |மாவீரர் பாடல்

எங்கே எங்கே எங்கள் மாவீரர் எங்கே |மாவீரர் பாடல் |Maaveerar songs |Vanni Mainthan Songs|Ai Tamil SongTamil Song பாடல் இன்றைய நாளில் மாவீரர் தினம் .ஆகும் .

இன்றைய நாளில் மாவீரர் தினம்

பாடல் |Ai Tamil Song இன்றைய நாளில் மாவீரர் தினம் .தமிழ் தாயக விடுதலைக்காக தம் உயிர்களை நீர்த்த மாவீரர்களை மக்கள் நினைவு கொள்ளும் நாளாகும் .


இன்றைய நாளில் எமது கல்லறை மேனியர் கண் விழித்து மக்களுடன் உறவாடும் காலம் ஆகும் .

கல்லறை மேனியர் கண் விழித்து

பூக்களை எடுத்து கல்லறை மேனியர் காலடி சென்று மக்கள் வழிபாடு நடத்தும் காலம் இது .

நாங்கள் வாழ்ந்திட தம்மை தந்த மாவீரர்கள் காலத்தால் அழியாத காவிய நாயகர் என்பது வரலாறு கூறும் வாய்மையாக உள்ளது குறிப்பிட தக்கது .

click here video

விதைத்த விதைகள் உறங்குமா| | மாவீரர் பாடல்கள்
Posted in இலங்கை செய்திகள் பாடல்கள்

விதைத்த விதைகள் உறங்குமா| | மாவீரர் பாடல்கள்

விதைத்த விதைகள் உறங்குமா| | மாவீரர் பாடல்கள்

விதைத்த விதைகள் உறங்குமா| | மாவீரர் பாடல்கள் | ஈழம் பாடல்கள் |231 |T Ammu|Ai Tamil SongTamil SongTamil Song பாடல் இன்றைய நாளில் மாவீரர் தினம் .ஆகும் .

இன்றைய நாளில் மாவீரர் தினம்

பாடல் |Ai Tamil Song இன்றைய நாளில் மாவீரர் தினம் .தமிழ் தாயக விடுதலைக்காக தம் உயிர்களை நீர்த்த மாவீரர்களை மக்கள் நினைவு கொள்ளும் நாளாகும் .


இன்றைய நாளில் எமது கல்லறை மேனியர் கண் விழித்து மக்களுடன் உறவாடும் காலம் ஆகும் .

கல்லறை மேனியர் காலடி

பூக்களை எடுத்து கல்லறை மேனியர் காலடி சென்று மக்கள் வழிபாடு நடத்தும் காலம் இது .

நாங்கள் வாழ்ந்திட தம்மை தந்த மாவீரர்கள் காலத்தால் அழியாத காவிய நாயகர் என்பது வரலாறு கூறும் வாய்மையாக உள்ளது குறிப்பிட தக்கது .

click here video

லண்டன் எக்சல் மாவீரர் மண்டபத்திற்கு கோடி வழங்கும் அந்த தமிழர் யார்
Posted in இலங்கை செய்திகள்

லண்டன் எக்சல் மாவீரர் மண்டபத்திற்கு கோடி வழங்கும் அந்த தமிழர் யார்

லண்டன் எக்சல் மாவீரர் மண்டபத்திற்கு கோடி வழங்கும் அந்த தமிழர்யார்

லண்டன் எக்சல் மாவீரர் மண்டபத்திற்கு கோடி வழங்கும் அந்த தமிழர் யார் ,லண்டன் எக்சல் மாவீரர் மண்டபத்திற்கு கோடி வழங்கும் அந்த தமிழர் யார் என்ற கேள்வியை மக்கள் கேட்டு நிக்கின்றனர் .

இலங்கை தமிழரசு கட்சி

மேற்படி மாவீரர் நாள் மண்டபத்திற்கு இலங்கை தமிழரசு கட்சியை சேந்த முக்கிய அரசியல் எம்பி ஒருவர் உறவினர்

ஒருவர் பணத்தை செலுத்துவதாக செய்திகள் கசிந்துள்ளது .

தமிழ் தேசியத்தை விற்கும் லண்டன் கட்டமைப்பிடம் தமிழ் தேசியம் கேப்சும் அந்த தமிழ் அரசியல் வாதி உறவில் உள்ளாரா என்ற கேள்வியை இது எழுப்பி நிற்கிறது .

அரசியல் வியாபாரி

இந்த ஓட்டு மாத்து அரசியல் வியாபாரிகளை தமிழர்கள் அடையாளம் கண்டு தோலுரிக்க வேண்டும் என்பது உலக தமிழர்களின் ஏக்கமாக உள்ளது

ஒரு நாள் தமிழர்களிடம் இவர்கள் சிக்கும் போது கோவணம் இன்றி அலையும் நிலை ஏற்படும் என எதிர் பார்க்க படுகிறது .

கொட்டும் மழையில் தயாரான மாவீரர் நாள் பிரம்மாண்ட திடல்
Posted in இலங்கை செய்திகள்

கொட்டும் மழையில் தயாரான மாவீரர் நாள் பிரம்மாண்ட திடல்

கொட்டும் மழையில் தயாரான மாவீரர் நாள் பிரம்மாண்ட திடல்

கொட்டும் மழையில் தயாரான மாவீரர் நாள் பிரம்மாண்ட திடல்

video

மாவீரர் தின அனுஷ்டிப்பு நால்வருக்கு பிணை
Posted in இலங்கை செய்திகள்

மாவீரர் தின அனுஷ்டிப்பு நால்வருக்கு பிணை

மாவீரர் தின அனுஷ்டிப்பு நால்வருக்கு பிணை

மட்டக்களப்பு தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் தினமான நவம்பர் 27ஆம் திகதியன்று இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வுகளில் கலந்துகொண்டபோது கைதுசெய்யப்பட்ட நான்கு பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

23 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான 2 சரீர பிணையில், வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.

எதிர்வரும் ஜனவரி மாதம் உயர்தரப்பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவன் உட்பட நான்கு பேர் பிணையில் செவ்வாய்க்கிழமை (19) விடுக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நால்வருக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வாழைச்சேனை பொலிஸாரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்தனர்.

மாவீரர் தின அனுஷ்டிப்பு நால்வருக்கு பிணை

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதியை சந்தித்த பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சாணக்கியன் ஆகியோர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டவர்களை விடுதலைசெய்யுமாறு வலியுறுத்தியிருந்தனர்

அத்துடன் இவர்களது விடுதலை தொடர்பில் ஆரம்பம் முதல் இறுதி வரை மட்டக்களப்பு மாவட்ட சிவில் அமைப்புக்கள் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்த வழக்கு ஜனவரி 1ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள திகதி குறிப்பிடப்பட்டுள்ளது.

மாவீரர் துயிலுமில்லத்தில் நடந்த பெரும் அதிர்ச்சி சம்பவம் video
Posted in இலங்கை செய்திகள்

மாவீரர் துயிலுமில்லத்தில் நடந்த பெரும் அதிர்ச்சி சம்பவம் video

மாவீரர் துயிலுமில்லத்தில் நடந்த பெரும் அதிர்ச்சி சம்பவம்

video

மாவீரர் துயிலுமில்லத்தில் நடந்த பெரும் அதிர்ச்சி சம்பவம் video
மாவீரர் துயிலுமில்லத்தில் நடந்த பெரும் அதிர்ச்சி சம்பவம் video
மாவீரர் தினத்தை முன்னிட்டு புதுக்குடியிருப்பில் இன்று கதவடைப்பு
Posted in இலங்கை செய்திகள்

மாவீரர் தினத்தை முன்னிட்டு புதுக்குடியிருப்பில் இன்று கதவடைப்பு

மாவீரர் தினத்தை முன்னிட்டு புதுக்குடியிருப்பில் இன்று கதவடைப்பு

மாவீரர் தினத்தை முன்னிட்டு புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தினர் இன்று முழுமையான கதவடைப்பை மேற்கொள்ள தீர்மானித்துள்ளனர்.

அதன்படி, மருந்தகங்கள் தவிர அனைத்து கடைகளும் பூட்டப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நடைபெறும் மாவீரர்களுக்கான அஞ்சலி நிகழ்வுகளில அனைவரும்
கலந்துகொள்ள வேண்டும் என்றும் புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்

நேரலை: 27-11-2022 #மாவீரர்நாள் ஈகியர் நினைவேந்தல் - சீமான் நினைவுரை
Posted in இலங்கை செய்திகள்

மாவீரர் தினத்தை நினைவுகூர முயற்சித்தால் இதுதான் கதி

மாவீரர் தினத்தை நினைவுகூர முயற்சித்தால் இதுதான் கதி

எதிர்வரும் நாட்களில் வடக்கு கிழக்கில் இடம்பெறவுள்ள சட்டவிரோத “மாவீரர் தின நிகழ்வுகள்” தொடர்பில் பொலிஸ் மா அதிபர் மற்றும் பயங்கரவாத

விசாரணைப் பணியகத்தின் பணிப்பாளர் ஆகியோர் இன்று (24) மேன்முறையீட்டு நீதிமன்றில் உறுதிமொழி ஒன்றை வழங்கினர்.

இதன்போது, பொதுச் சட்டம் மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் தேவையான சட்ட நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர்.

மாவீரர் தினத்தை நினைவுகூர முயற்சித்தால் இதுதான் கதி

இம்மாதம் 27ஆம் திகதி முதல் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் நடைபெறவுள்ள சட்டவிரோத மாவீரர் தின நிகழ்வுகளுக்கு எதிராக சட்டத்தை

அமுல்படுத்துமாறு கோரி இராணுவத்தின் ஓய்வுபெற்ற புலனாய்வு அதிகாரியினால் சமர்ப்பிக்கப்பட்ட மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, ​​பொலிஸ் மா அதிபர் மற்றும் பயங்கரவாதத் தடுப்புப் பணியகத்தின் பணிப்பாளர் சார்பில்


ஆஜரான சிரேஷ்ட அரசாங்க சட்டத்தரணி ஷமிந்த விக்ரம இந்த உறுதிமொழியை வழங்கினார்.

video

நீதிமன்ற அவமதிப்பு-ஓய்வு பெற்ற மேஜருக்கு 4 ஆண்டுகள் சிறை
Posted in இலங்கை செய்திகள்

மாவீரர் நினைவேந்தலுக்கு தடை விதிக்க கோரிய மனு தள்ளுபடி

மாவீரர் நினைவேந்தலுக்கு தடை விதிக்க கோரிய மனு தள்ளுபடி

மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை விதிக்க கோரிய மனுவை பருத்தித்துறை நீதவான் நீதிமன்று தள்ளுபடி செய்துள்ளது.

யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை பொலிஸாரினால், தமது பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில், தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர்

நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்த தடை விதிக்க கோரி பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் மனு தாக்கல் செய்தனர்.

குறித்த மனு மீதான விசாரணை நேற்று (17) வெள்ளிக்கிழமை எடுத்துக்கொள்ளப்பட்ட போது , நினைவேந்தலுக்கு தடை விதிக்க முடியாது என மனுவை மன்று தள்ளுபடி செய்தது

மாவீரர்
Posted in கவிதைகள் நிலா தமிழ்

மாவீரர்

மாவீரர்

கார்த்திகையில் சுடர்ந்து கனன்றெரியும் கனலிகளே
கார்த்திகையின் நாயகர்களே
உமை நினைந்துருகி
கார்த்திகைப் பூவெடுத்து
கார்த்திகை 27 இல்
உம் பாதந் தொழுதிடுவோம்!

விழித்திரையில் நீர் வழிந்திட
எம் மி(ம)னத்தின் குறைகளை சொல்லிக் கதறிட
மொழியுரை ஏதுமற்று
நடைப் பிணமாக
உமைத் தேடி
நிரை நிரையாக வந்து
விம்மி யழுதிடுவோம்!

கல்லாக இருந்து எமைக் காக்கும் கடவுளர் போல்
தில்லாக நின்று
எமை யழித்த படையழித்து
ஈழவளின் மானம் காத்து
கார்த்திகைக்கு பெருமை சேர்த்த
உமை கணமும்
நினைந்து ருகிடுவோம்!

இளமைக் காலக் கனவுகளைத் துறந்து
எமதினத்தின்
வருங்கால சந்ததிக்காக
ஈழத்தின் யாகத் தீயில்
ஆகுதியாகிய உமை
நிதமும்
போற்றித் துதித்திடுவோம்!

ஈழத்தின் தலைமகனின் கனமறிந்து தோள் கொடுத்து
காலத்தின் தேவையை
ஈடேற்றி
ஞாலத்தில் வரலாறாகிய
தீரர்களே
உம் கனவை ஈடேற்ற எமக்கு வல்லமை
தாருமென்று இறைந்துருகி
நெய் விளக்கேற்றிடுவோம்!

நிலாதமிழ்.17.11.2023.

Posted in இலங்கை செய்திகள்

கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்துக்கு முன்பாக பதட்டம்

கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்துக்கு முன்பாக பதட்டம்

யாழ்ப்பாணம் – கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்துக்கு முன்பாக, இன்று (23), துப்புரவுப்

பணியில் ஈடுபடுகிறவர்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில், இராணுவத்தினரும் பொலிஸாரும் நடந்து கொண்டுள்ளனர்.

கோப்பாய் துயிலும் இல்லத்தை, இராணுவத்தினர் இடித்தழித்து, பாரிய இராணுவ முகாமை

அமைத்து, நிலைகொண்டுள்ளனர். அதனால் துயிலும் இல்லத்துக்கு முன்பாக உள்ள தனியார் காணியில், மாவீரர் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யபடுவது வழமையாகும்.

தற்போது மாவீரர் வாரம் ஆரம்பமாகியுள்ள நிலையில், அக்காணியின் முன்பக்கமாக வீதியின்

இருமருங்கினையும் துப்புரவு செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது , கோப்பாய் பொலிஸார் மற்றும் பெருமளவான இராணுவத்தினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர்.

சிவில் உடையில் வந்த இராணுவத்தினர் சிலர், தாமும் துப்புரவுப் பணியில் ஈடுபடுவதாக கூறி,

துப்புரவுப் பணியில் ஈடுபட்டு இருந்தவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக நடந்து கொண்டனர்.

இதேவேளை, இராணுவம் மற்றும் பொலிஸ் புலனாய்வாளர்களும் அங்கிருந்த ஊடகவியலாளர்கள்

உள்ளிட்டவர்களை அச்சுறுத்தும் விதமாக புகைப்படம் எடுத்ததுடன் வாகன இலக்கங்களையும் பதிவு செய்தனர்

    Posted in இலங்கை செய்திகள்

    தாயகநேரம் மாலை 6:05க்கு தொடங்குகின்றது உலகத்தமிழர்களின் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !

    தாயகநேரம் மாலை 6:05க்கு தொடங்குகின்றது உலகத்தமிழர்களின் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !

    தமிழர் தாயகப்பகுதியில் மாவீரர் நாளினை முன்னெடுப்பதற்கு சிறிலங்கா அரச தடைகளை விதித்துள்ள நிலையில், தாயக

    மக்களின் உணர்வெழுச்சியின் வடிவமாக உலகத்தமிழ் மாவீரர்நினைவேந்த் நிகழ்வினை இணையவழியே நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுகின்றது.

    ஆக்கிரமிப்புக்கும் இனஅழிப்புக்கும் எதிராக போராடினார்களேயன்றி, எவரையும் ஆக்கிரமிப்பதற்காகவோ அடிமை கொள்வதற்காகவோ மாவீரர்கள் போராடவில்லை. ஆனால்

    இன்று தமிழர் தேசத்தை ஆக்கிரமிப்புச் செய்துள்ள சிறிலங்கா அரசு கட்மைப்பு தமிழர்களின் நினைவேந்தும் உரிமைக்கு தடைவிதித்து வருகின்றது.

    இந்நிலையில் தேசப்புதல்வர்களை நினைவேந்தி உலகத்தமிழர் நாம் மாவீரர்கள் என்ற ஒற்றைப்புள்ளியில் உணர்வெழுச்சியோடு

    ஒன்றுகூடுகிறோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

    தாயக நேரம் மாலை 6:05க்கு (ஐரோப்பா மதியம் 1:35, நியு யோர்க் காலை 7:35) தொடங்குகின்ற நிகழ்வுகளை www.tgte.tv
    TGTE TV
    The Transnational Government of Tamil Eelam. TV Channel
    www.tgte.tv
    – Facebook : tgteofficial காணமுடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக பல்வேறு புலம்பெயர் நாடுகளில் மக்கள் பெருமளவில் பங்கெடுத்து

    மாவீரர்களை நினைவேந்த முடியாத நிலையும் ஏற்பட்டுள்ள நிலையில் வீடுகளில் இருந்தவாறு மாவீரர்களை நினைவேந்தும் வகையில் இது அமையவிருக்கின்றது.

    Posted in இலங்கை செய்திகள்

    சிறலங்கா நீதிமன்றங்களை களமாக்கிய மாவீரர்கள் !

    சிறலங்கா நீதிமன்றங்களை களமாக்கிய மாவீரர்கள் !

    சிறிலங்காவின் உள்நாட்டு நீதிப்பொறிமுறையில் தமிழர்களுக்கான நீதி கிடையாது என்பதோடு, தமிழர்களுக்கான அரசியல்வெளி

    இல்லை என்பதனை சர்வதேச சமூகத்துக்கு வெளிப்படுத்தும் ஓர் களமாக, மாவீரர் நாளுக்கான சிறிலங்காவின் அரச

    கட்டமைப்புக்களின் தடைகள் அமைந்துள்ளன என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

    மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு சிறிலங்காவின் அரச கட்டமைப்புக்கள் ஏற்படுத்தி வரும் தடைகள் தொடர்பிலும், தாயக தமிழ் அரசியல்

    தலைவர்கள் அடுத்து எடுக்க வேண்டிய நிலைப்பாடு தொடர்பிலும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் விவகார அமைச்சு

    அறிக்கையொன்றினை விடுத்துள்ளது.
    அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இனநாயக மயப்படுத்தப்பட்ட சிறலங்காவின் அரச கட்டமைப்புக்களின்

    ஒன்றான நீதித்துறை, போர்குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்களை தண்டிக்காது அவர்களை விடுத்து,நீதிவேண்டி போராடும்

    பாதிப்புக்கு உள்ளான மக்களை அச்சத்துக்கு உள்ளாக்கும் செயல்களையே முன்னெடுத்து வருகின்றது.

    இனநாயகத்தின் பிரதிபலிப்பாகவுள்ள சிறிலங்காவின் நீதித்துறை என்பது,சிங்களவர்களுக்கு இடையிலான பிரச்சனைகளுக்கு நீதியினை நிலைநாட்டலாம். ஆனால் தமிழர்களுக்கும்

    சிங்களவர்களுக்கு இடையிலான பிரச்சனைகள் எனும் போது, அது இனநாயகத்தின் ஓர் கருவியாகவே சுதந்திர காலம் தொட்டு இயங்கி வருகின்றது.

    தமிழர்கள் ஈடுசெய் நீதியினை வேண்டிவந்த நிலையில், சர்வதேச சமூகத்தினால் முன்வைக்கப்பட்ட நிலைமாறுகால நீதியின் முறையே, தமிழர்களுக்கான நீதிக்கு சிறிலங்காவில் இடம் இல்லை

    என்பதனையே இவைகள் வெளிக்காட்டி வருகின்றன. ஐ.நா மனித உரிமைச்சபையின் தீர்மானங்களில் இருந்து சிறிலங்கா விலகிய நிலையானது நிலைமாறுகால நீதியினை கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது.

    தமிழின அழிப்பின் முதன்மைக் குற்றவாளியாக சிறிலங்கா அரசே இருக்கும் நிலையில் தமிழர்களுக்கான நீதிப்பொறிமுறையோ, அரசியல் விருப்போ அல்லது ஐக்கியநாடுகள் செயலாளர்

    நாயகத்தின் நிபுணர் குழு அறிக்கையில் குறிப்பிட்டவாறு நீதியை நிலை நிறுத்தக் கூடியவகையிலான விசாரணைகளுக்கான சூழலோ சிறிலங்காவில் கிடையாது என்கின்றது.

    இந்நிலையில் தமிழர்களுக்கான நீதிக்கான பொறிமுறை உள்ளநாட்டில் இல்லை என்பதும் மீண்டும் மீண்டும் நிருபணமாவதோடு, சர்வதேச நீதிப்பொறிமுறையே

    தமிழர்களக்கான நீதிக்கான பொறிமுறையாக இருக்கின்றது என்பதனை மாவீரர் நாளுக்கான வெளிக்காட்டுகின்றன.


    இவ்வேளையில் தமிழர் தாயக அரசியல் தலைவர்களை நோக்கி வேண்டுகோள் ஒன்றினை விடுக்கின்றோம்.

    சிறிலங்காவின் நீதிமன்றங்களை, பாராளுமன்றத்தை யாவற்றையும் ஒரு களமாக கொண்டு, தமிழர்களுக்கான நீதியோ, அரசியல் வெளியோ இல்லை என்பதனை இன்னும் வீச்சாக

    சர்வதேச சமூகத்துக்கு வெளிப்படுத்த வேண்டுவதோடு, சர்வதேச நீதிப்பொறிமுறையே தமிழர்களுக்கான நீதியைப் பெற்றுதரும் என்பதனை இடித்துரையுங்கள். மக்கள்மயப்பட்ட அரசியற்

    போராட்ட களமே அனைத்து தடைகளையும் உடைக்கின்ற ஆயுதமாக மாறும். தமிழர்களுக்கான நீதியையும் , அரசியல்

    உரிமைகளையும் வென்றெடுப்பதற்கான புதிய புதிய களங்களாக இவைகள் உருவாகட்டும் என்பதனையும் உரிமையோடு

    வேண்டுகிறோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Posted in இலங்கை செய்திகள்

    ஐ.நாவின் கவனத்தில் மாவீரர் நாளுக்கான தடை : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுப்பு

    ஐ.நாவின் கவனத்தில் மாவீரர் நாளுக்கான தடை : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுப்பு

    மாவீரர்நாளுக்கு சிறிலங்கா அரச கட்டமைப்புக்கள் விதித்துள்ள தடைகளை தொடர்பில் ஐ.நாவின் இரண்டு சிறப்பு

    அறிக்கையாளர்களின் கவனத்துக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கொண்டு சென்றுள்ளது.

    ஒன்றுகூடும் சுதந்திரத்துக்கான சிறப்பு அறிக்கையாளர், கருத்துச் சுதந்திரத்துக்கான சிறப்பு அறிக்கையாளர்களின் கவனத்துக்கு

    சர்வதேச மனித உரிமைகள்,சட்டங்களுக்கான வல்லுனர்கள் Global Diligence LLP filed மையத்தின் ஊடாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இந்த நடவடிக்கையினை எடுத்துள்ளது.

    முன்னராக தியாகி லெப்.கேணல் திலீபனினின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு சிறிலங்கா அரச கட்டமைப்புக்கள் விதித்த தடை தொடர்பிலும், இவ்வாறான முறைப்பாட்டை ஐ.நாவின் இவ்விரு

    சிறப்பு அறிக்கையாளர்களின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டிருந்ததோடு, இது தொடர்பில் சிறிலங்கா அரசு தனது

    கடுமையான எதிர்வினையை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு எதிராக வெளிப்படுத்தியிருந்தது.

    இந்நிலையில் அதன் தொடர்சியாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், மாவீரர் நாளுக்கு விதிக்கப்பட்டு வரும் தடைகள் தொடர்பில் ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர்களுக்கு மேற்கொண்ட

    முறையீட்டில்,
    இலங்கைத்தீவில் சிங்கள பௌத்த பேரினவாத ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவே தமிழர்கள் ஆயுத வழியிலும்,

    அமைதி வழியிலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். ‘மாவீர்ர் நாள்’ என்பது இத்தகைய அரச பயங்கரவாத அடக்குமுறையை

    எதிர்த்துப் போராடி உயிர்நீத்தவர்களை நினைவேந்துவதற்காக நடத்தப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல்

    களப்பலியான மாவீரன் லெப்டினண்ட் சங்கர் உயிர்நீத்த நாளே மாவீரர் நாளாக ஆண்டுதோறும் தமிழ்மக்களால் நினைவேந்தப்படுகின்றது.

    தமிழ்மக்களின் மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு தடைகளை விதிப்பதும், அச்சுறுத்துவதும் ஐ.நாவினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட சர்வதேச குடியியல் அரசியல் உரிமைகள் பற்றிய பன்னாட்டு

    ஒப்பந்தத்தின் முறையே உறுப்பு 21 மற்றும் 19ல் உத்தரவாதம் செய்யப்பட்டுள்ள ஒன்றுகூடும் உரிமையையும் பேச்சுரிமையையும் மீறுவதாகும் என்று முறையீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சிறிலங்காவின் பயங்கரவாத பட்டியலில் தமிழீழ விடுதலைப் புலிகளை இட்டிருப்பதானது, நினைவேந்தும் செயல்கள் உறுப்பு

    21இன் கீழ் சொல்லப்படும் கட்டுத்தளைகளுக்கு இடம்தரா விட்டால் , இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த விடாமல் மக்களைத் தடை

    செய்வதை நியாயப்படுத்த முடியாது எனவும் முறையீட்டில் சுட்டிக்காட்ப்பட்டுள்ளது.

    போரில் இறந்தவர்களுக்கும் அவர்களின் கல்லறைகளுக்கும் மரியாதை செய்வது என்பது சர்வதேச மனிதவுரிமைச் சட்டங்களின்

    படி, குறிப்பாக மானிட கண்ணியத்துக்கான உரிமையின் படி பாதுகாக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதேவேளை கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கான சுகாதார கட்டுப்பாடுகளை காரணங்காட்டி, தமிழ்மக்களதது அடிப்படை உரிமைகளை பறிக்கும் வகையில் அதனை தவறாகப்

    சிறிலங்காவின் அரச கட்டமைப்பு பயன்படுத்தி வருவதாக மீளவும் ஐ.நாவுக்கு சுட்டிக்காட்டியுள்ள இந்த முறையீட்டில்,

    நினைவேந்தலைத் தடை செய்யும் நீதிபதிகளின் முடிவுகள் என்பது தமிழர்களுக்கு எதிரான இன ஒடுக்குமுறையிலும், இனப்

    பாகுபாட்டிலும் வேர்கொண்டிருக்கக் காணலாம் எனவும் தெரிவித்துள்ளது.

    நீதிமன்றங்களின் தடைக்கு அடிப்படையாக இருப்பது ‘பங்கேற்பாளர்களின் இன அடையாளமும் அதிகாரிகளோடு அவர்களுக்குள்ள உறவுமே’ ஆகும். காவல்துறையும் நீதிபதிகளும்

    அதிகாரங்களைத் தவறாகப் பயன்படுத்துவது ‘பாகுபாடான உரிமைமீறலும் தாக்குதலும்’ ஆகும். ‘சட்டங்களும் அவற்றுக்கான பொருள்விளக்கமும் பயன்பாடும் அமைதியான முறையில்

    ஒன்றுகூடும் உரிமையைத் துய்ப்பதில் ‘இனம்’ போன்ற அடிப்படையில் பாகுபாட்டைத் தோற்றுவிக்காத படி’ சிறிலங்கா உறுதி செய்ய வேண்டும்.’ மாவீர்ர் நாள் நினைவேந்தலைப்

    பொறுத்த வரை அமைதியாக நினைவேந்தும் கூட்டங்கூடும் உரிமையையும் கருத்துரிமையையும் ‘மதிக்கவும் உறுதி செய்யவும்’ வேண்டிய கடமையை சிறிலங்கா மீறுவது தெளிவாகத் தெரிகிறது

    எனவும் ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்களுக்கான முறையீட்டில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

    சர்வதேச போர் நியமங்களுக்கு மாறாக தமிழீழ விடுதலைப்புலிகளின் மாவீரர் கல்லறைத் தோட்டங்கள் சிறிலங்கா ஆக்கிரமிப்பு படைகளினால் இடித்து

    தரைமட்டமாக்கப்பட்டுள்ளதோடு, சர்வதேச கடப்பாடுகளுக்கு கட்டுப்படாத நிலையே காணப்படுகின்றமை இங்கு குறிப்பிடதக்கது.

    Posted in இலங்கை செய்திகள்

    மாவீரர் வாரத்தை கையிலெடுத்த புலம்பெயர் இளந்தலைமுறை !

    மாவீரர் வாரத்தை கையிலெடுத்த புலம்பெயர் இளந்தலைமுறை !

    தாயகம், தேசியம், அரசியல் இறையாண்மை எனும் ஈழத்தமிழர் தேசத்தின் அரசியல் பெருவிருப்பினை நெஞ்சினில் ஏந்தியவாறு

    ஆகுதியாகிய மாவீரர்களை நினைவேந்தும் மாவீரர் வாரத்தினை புலம்பெயர் இளந்தலைமுறையினர் கையில் எடுத்துள்ளனர்.

    பிரித்தானியா, பெல்ஜியம், அமெரிக்கா, கனடா, ஒஸ்றேலியா, பிரான்ஸ், சுவிஸ், ஜேர்மனி, நோர்வே என புலம்பெயர் தேசங்களில் பிறந்து வளர்ந்து வரும் இளந்தலைமுறையினர்,

    உணர்வெழுச்சியுடன் மாவீரர் வாரத்தினை இணைவழிமூலம் தொடங்கினர்.நொவெம்பர் 21-27 ஆகிய நாட்கள் மாவீரர் வாரமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

    https://youtu.be/WViAbu-gOyI

    தமது உரிமைகளுக்காக உயிர்நீத்த மாவீரர்களை நினைவேந்த முடியாத சவாலான நிலையினை தாயக தமிழர்கள் சிறிலங்கா ஆட்சியாளாகளினால் எதிர்கொண்டுள்ளனர். மறுபுறம் கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக பொதுஇடங்களில் ஒன்றுகூடமுடியாத அவசரகால சுகாதார நெருக்கடி நிலை புலம்பெயர் நாடுகளில் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் மக்களின் உணர்வெழுச்சியின் வடிவமாக இணையவழி தொழில்நுட்ப மூலமாக மாவீரர் வாரத்தினை புலம்பெயர் இளந்தலைமுறையினர் தொடங்கினர்.

    தியாகம், ஒழுக்கம், வீரம், அர்ப்பணிப்பு என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தொனிப்பொருளில் இடம்பெறுகின்ற இளந்தலைமுறையினரின் மாவீரர் வார நிகழ்வுகளை ஐரோப்பிய நேரம் இரவு 11 மணிக்கு நேரஞ்சலாக காணமுடியும். ( live on : https://tgte.tv/ , https://www.facebook.com/tgteofficial

    நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அடுத்ததலைமுறையாக விளங்கும் ‘அலைகள்’ இதனை முன்னெடுத்து வருவதோடு, பெண்களே முன்னின்று இதனை செயலாற்றிவருகின்றமை இங்கு குறிப்பிடதக்கது..

    Posted in இலங்கை செய்திகள்

    2020 மெல்பேர்ன் மாவீரர் நாள் நிகழ்வுகள் பற்றிய முக்கிய அறவித்தல்

    2020 மெல்பேர்ன் மாவீரர் நாள் நிகழ்வுகள் பற்றிய முக்கிய அறவித்தல்

    தமிழீழ விடுதலைக்காக இறுதிவரை போராடி வீரச்சாவடைந்த மாவீரர்களை நினைவுகொள்ளும் தேசிய நினைவெழுச்சி நாள் ஏற்பாடுகள் தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும்

    நடைபெற்றுவருகின்றன. இந்தவகையில் அவுஸ்திரேலிய நாட்டிலும் மாவீரர் நினைவு நாள் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் தமிழர் வாழும் அனைத்து மாநிலங்களிலும் நடைபெற்றுவரும் இவ்வேளையில்,

    ஓஸ்ரேலியாவின் விக்ரோரிய மாநில, மெல்பேர்ன் நகரில் எதிர்வரும் நவம்பர் மாதம் 27ம் திகதி, வெள்ளிக்கிழமை தேசிய

    நினைவெழுச்சிநாள் (மாவீரர் நாள்) நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட ஏற்பாடகியுள்ளது.

    இந்நிகழ்வுக்கு முன்பாக மெல்பேணில் வாழும் மாவீரர் குடும்பங்களை சேர்ந்தோர் அல்லது உரித்துடையோர் தமது விபரங்களை விரைவில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் மாவீரர்

    பணிமனையுடன் பதிவுசெய்து கொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்கள். அத்துடன் தற்போதய அரசாங்க விதிமுறைகளிற்கு அமைய அவுஸ்திரேலியா தமிழர்

    ஒருங்கிணைப்புக் குழுவின் விக்டோரிய பணிமனையின் உத்தியோகபூர்வமான அறிவித்தலும் இத்துடன் உங்கள் கவனத்திற்காக இணைத்து அனுப்பப்பட்டுள்ளது.

    தயவுகூர்ந்து இவ்வறிவித்தல்களை உங்கள் ஊடகங்களினுடாக தொடர்ச்சியாக வெளியீட்டு, அவுஸ்திரேலியா மெல்பேர்ண் வாழ் மக்களிற்கு உரிய முறையில் தெரியப்படுத்தவும். இதற்கு

    உங்களாலான முழுமையான ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

    அத்துடன் இம்மின்னஞ்சலைப் பெறும் தனிப்பட்ட அன்பர்கள், உங்களிற்கு தெரிந்த உற்றார், உறவினர், நண்பர்களுக்கும்

    இத்தகவல்களைத் தெரியப்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.