மனைவி வயிற்றை வெட்டிய கணவன்
Posted in உலக செய்திகள்

மனைவி வயிற்றை வெட்டிய கணவன்

கர்ப்பிணி மனைவி வயிற்றை வெட்டிய கணவன்

மனைவி வயிற்றை வெட்டிய கணவன் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

கர்ப்பிணியான மனைவியின் வயிற்றில் உள்ளது என்ன பிள்ளை, என்பதை பார்க்க இவ்வாறு அவர் வெட்டியுள்ளது தெரிய வந்துள்ளது .

இந்திய உத்தரபிரதேச பகுதியில் எட்டு மாத கர்ப்பிணியான மனைவியின் வயிற்றில் உள்ள குழந்தை ,ஆணா பெண்ணா என அறிய ,ஆசை பட்ட கணவன் மனைவியின் வயிற்றை வெட்டியுள்ளார் .

ஆண் குழந்தை வெட்டி கொலை

இவருக்கு முன்னதாக ஐந்து பெண் பிள்ளைகள் தொடராக பிறந்த நிலையில் ,ஆண் குழந்தை இல்லை என வீரக்தி உற்ற கணவன் ,ஆண் குழந்தை வேண்டும் என ஆசைப்பட்டு இப்பொழுது மனைவியை கர்ப்பம் ஆக்கியுள்ளார் .

அதனை அடுத்தே எட்டு மாத கர்ப்பிணியான மனைவியின் வயிற்றை வெட்டிய கணவன்,குழந்தையை பார்க்க முனைந்துள்ளார் .

அரிவாளை எடுத்து மனைவியின் வயிற்றை வெட்டியுள்ளார் ,கணவன் அரிவாள் வெட்டில் வயிற்றில் உள்ள சிசு ,இறந்துள்ளது

மனைவி ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டார் .

ஆபத்தான நிலையில் மனைவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ,பொலிஸாரினால் ,கணவன் கொலை குற்ற சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்க பட்டுள்ளார் .

பிள்ளை வரம் என்பது கடவுள் கொடுக்கும் வரமாகும் ,அதனை யாரும் தட்டி கழிக்க முடியாது .

பெண் பிள்ளைகள் பெற்ற பல குடும்பங்கள் அதே பெண் பிள்ளைகளினால் , அந்த குடும்பம் கொண்டாட படும் நிலைக்கு உள்ளான சம்பவங்களும் ,இந்த உலகில் பதிவாகியுள்ளது .

அவ்வாறான நிலையில் இந்த கணவன் புரிந்த செயல் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

இப்படியும் முரட்டு கணவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதற்கு இவை ஒரு உதாரணமாக உள்ளது .

Error: View 9293b2au4w may not exist
ரணில் விக்கிரமசிங்கா கிளிநொச்சி இரணைமடுவில்
Posted in இலங்கை செய்திகள்

ரணில் விக்கிரமசிங்கா கிளிநொச்சி இரணைமடுவில்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா கிளிநொச்சியில்

ரணில் விக்கிரமசிங்கா கிளிநொச்சி இரணைமடுவில் மக்களுக்கு காணி உறுதிகளை வழங்கியுள்ளார் என ரணில் விக்கிரமசிங்கா ஊடக பிரிவு தெரிவித்துள்ளது .

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா கிளிநொச்சி பயணம்

தமிழர் வடபகுதியாக விளங்கும் கிளிநொச்சி இரணை மடுவிற்கு பயணம் செய்த, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா தமிழ் மக்கள் 1700 பேருக்கு காணி உறுதிகளை வழங்கி வைத்தார் .

டக்கிளஸ் தேவானந்தா தலைமையில் ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்ட ,ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா, காணி உறுதிகளை மக்களுக்கு கிளிநொச்சி இரணைமடுவில் வழங்கி வைத்துள்ளார் .

வனஜீவராசி திணைக்களம்

வனஜீவராசி திணைக்களம் உறுதிகளை ,இதே ரணில் விக்கிரமசிங்காவின் ஆட்சியில் பறித்து வரும் நிலையில் ,கிளிநொச்சி இரணைமடுவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவினால் இவ்விதம் உறுதி பத்திரங்கள் வழங்கி வைக்க பட்டுள்ளது .

இலங்கை ஆளும் ஜனாதிபதிகள் சிங்கள பவுத்த மேலான்மை பாசிச கொள்கைகள் இன்றுவரை மாறவில்லை என்பதை ,காணி அபகரிப்பு நடத்தும் வனஜீவராசிகள் திணைக்கள நடவடிக்கைகள் எடுத்து காட்டுகின்றன .

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மகத்தான வெற்றியை ஐக்கிய தேசிய கட்சி பெற்றுவிட வேண்டும் என்பதில், தற்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா அதி தீவிர நகர்வில் ஈடுபட்டு வருவதை ,இந்த பயண விடயங்கள் மக்கள் சந்திப்புக்கள் எடுத்து காட்டுகின்றன .

பாலஸ்தீனம் தனிநாடாக 20நாடுகள் அறிவிக்க தயார்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

பாலஸ்தீனம் தனிநாடாக 20நாடுகள் அறிவிக்க தயார்

பாலஸ்தீனம் தனிநாடாக 20நாடுகள் அறிவிக்க தயார்

பாலஸ்தீனம் தனிநாடாக 20நாடுகள் அறிவிக்க தயார் , ஆகி வருவதகாக தகவல் ,

பாலஸ்தீனமானது தனிநாடாக மலர்வதற்கு எதிராக கொதிக்கும் இஸ்ரேல் .அடக்கு முறைகளை உடைத்து பாலஸ்தீன புதிய தேசம் உலக பந்தில் உருவாக்கம் பெறுகிறது .

வன்முறை தாக்குதல் முடிவுக்கு வருகிறது


பல்லாண்டு அதிகார அடக்குமுறை வன்முறை தாக்குதல் முடிவுக்கு வருகிறது .


வெள்ளம் போல் ஓடிய மக்கள் கண்ணீர் துளிகள் வற்றி பெரும் சமுத்திரம் ஒன்றாக காசா மக்கள் வாழ்வு மாற்றம் பெற போகிறது .

அடக்கப்பட்ட ஒரு தேசத்தின் பெரும் கனவும் ,அடக்குமுறையின் உச்சத்தின் வெளிப்பாட்டு தன்மையும் தற்போது முடிவுக்கு வரவுள்ளது .

நெதன்யாகருவின் இன அழிப்பு

இஸ்ரேல் ஆளும் நெதன்யாகுவின் இன அழிப்பும் ,அதன் வக்கிர நிலைப்பாடுகளும் உலக அரங்கில் அம்பல பட்டுள்ளது .

அமெரிக்கா இஸ்ரேல் என்பன எவ்வாறான கொடிய மோசமானவர்கள் என்பதையும் இஸ்ரேல் பாலஸ்தீனம் காசா போர் வெளிப்படுத்தியுள்ளது .

அதனால் பல நாடுகள் தற்பொழுது தன்னெழுச்சியாக பலஸ்த்தீனம் தனி நாடக மாற்றம் பெறுவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன..

மக்கள் பாலஸ்தீனம் தனிநாடாக மலர்வதை இட்டு பெரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன .

இஸ்ரேல் ஆளும் பிரதமர் நெதன்யாகு

இந்த விடுதலையை விரைவாக பாலஸ்தீனம் பெற்றுக்கொள்ள ,இஸ்ரேல் ஆளும் பிரதமர் நெதன்யாகு வழி ஏற்படுத்தி கொடுத்தார் என்றே அடித்து கூறலாம் .

தொடரான ஆக்கிரமிப்பு ,அழித்தொழிப்பு ,அண்டை நாடுகள் மீதான இராணுவ படையெடுப்பு இஸ்ரேலிய ,இராணுவ முரண் நிலைகளினால் இஸ்ரேல் பெரும் நெருக்கடியில் இன்று சிக்கி தவித்து வருகிறது .

இராணுவ அரசுகளின் நடைமுறை

முரண் பாடு கொண்ட முற்றிலும் நிகழ்கால களமுனைக்கு இராணுவ ,அரசுகளின் நடைமுறை நிகழ்வே,இன்று பாலஸ்தீனம் தனிநாடாக மலர்வதற்கு காரணமாக மாற்றம் பெற்றுள்ளது .

உலக நாடுகளில் தனி நாடக பிரிந்து செல்ல துடிக்கும் பலநாடுகளுக்கு ,இன்றைய பாலஸ்தீனம் பிரிந்து செல்லும் நிலைப்பாடு மிக பெரும் முன் உதாரணமாக காணப்படுகின்றன .

மக்கள் உரிமை கோரி போராட்டம்

அரேபிய தேசத்திலும் ,ஆபிரிக்க நாடுகளிலும் பல நாடுகள் ,இவ்வாறு தமது மக்கள் உரிமை கோரி போராடிய வண்ணம் உள்ளனர்

மனம் மாறிய உலகம் .மறுமலர்ச்சி உருவாக்கம் .சிரியாவில் கார் குண்டு தாக்குதல் இஸ்ரேலை தாக்கிட காரணம் ஈரான் ஜனாதிபதி என இராணுவம் அறிவிப்பு

Error: View 9293b2au4w may not exist
அண்ணா
Posted in கவிதைகள் நிலா தமிழ்

அண்ணா

அண்ணா

நஞ்சினை மாலையாய் அணிந்தவர்
பிஞ்சிலே வேங்கையாய் நிமிர்ந்தவர்
துஞ்சிடா வீரத்தைக் கொண்டவர்-நம்
நெஞ்சிலே ஈரத்தை விதைத்தவர்!

கஞ்சியை நாளுமே உண்டேனும்
பஞ்சியை துளியேனும் கொள்ளாமல்
கொஞ்சியே பேசிடும் தமிழுக்காய்- தன்
எஞ்சிய வாழ்வினை அர்ப்பணித்தவர்!

மிஞ்சியே பகை படை கொண்டு வந்தாலும்
அஞ்சியே எங்கேனும் ஓடிடாமல்
விஞ்சியே நின்று பகை எதிர்த்து– எம்
மஞ்சிய தாய் நாட்டைக் காத்தவர்!

கெஞ்சிடும் குடும்பத்தைத் துறந்தவர்
பஞ்சிடும் பஞ்சணையை வெறுத்தவர்
தஞ்சிடும் மக்களைக் காத்தவர் – கடும்
வஞ்சிடும் துரோகிகளை துவைத்தவர்!

வஞ்சியருக்கு சமவுரிமையை கொடுத்தவர்
அஞ்சியவருக்கும் வீரத்தை ஊட்டியவர்
துஞ்சியவரையும் தன்னாற்றலால்
எழ வைத்தவர் – எதிரியாயினும்
கெஞ்சியவருக்கு உயிர்ப்பிச்சை கொடுத்தவர்!

கெஞ்சியே இறைஞ்சுகின்றோம்
எஞ்சிய எம் வாழ்வைக் கழித்திட
விஞ்சிய மனவுரத்தை தந்திட – நம்
நெஞ்சிலே என்றும் இறையாய்
வாழுங்கள் அண்ணா!

-நிலாதமிழ்.
25.05.2024.

வடகிழக்கிற்கு ரணில் உதவினார்
Posted in இலங்கை செய்திகள்

வடகிழக்கிற்கு ரணில் உதவினார்

வடகிழக்கிற்கு ரணில் உதவினார்

வடகிழக்கிற்கு ரணில் உதவினார் ,ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த காலம் முதல் வடக்கு மற்றும் கிழக்கின் அபிவிருத்திக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளார் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் நிர்மாணிக்கப்பட்ட மருத்துவ பயிற்சி மற்றும் ஆராய்ச்சி துறை கட்டடத்தை நேற்று முற்பகல் திறந்து

வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் எம்.ஏ. சுமந்திரன் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றுகையில்,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த காலம் முதல் வடக்கு மற்றும் கிழக்கின் அபிவிருத்திக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளார்.

இன்று திறந்து வைக்கப்படும் யாழ்.பல்கலைக்கழகத்தின் இந்த மருத்துவ பீடக் கட்டடம் வடக்கிற்கு மாத்திரமன்றி நாட்டிற்கும் ஒரு நல்ல முதலீடாகும் என சுட்டிக்காட்டலாம்.

மேலும் இது எதிர்காலத்தில் இலங்கையில் நிபுணர்களின் புகலிடமாக மாறும் என நான் நம்புகிறேன்.

முன்னதாக இச்சபையில் உரையாற்றியவர்கள் கூறியது போல் யாழ்.மாவட்டத்தின் அபிவிருத்தியிலும், மக்களின் அபிவிருத்தியிலும் ஜனாதிபதி விசேட கவனம் செலுத்தியுள்ளார் என்றார்.

ரோலில் இருந்த கறல் பிடித்தகம்பி
Posted in இலங்கை செய்திகள்

ரோலில் இருந்த கறல் பிடித்தகம்பி

ரோலில் இருந்த கறல் பிடித்தகம்பி

ரோலில் இருந்த கறல் பிடித்தகம்பி ,யாழ்ப்பாணம், மருதனார்மடம் சந்தியில் உள்ள வெதுப்பகத்தில் வாங்கிய ரோலுக்குள்

சுமார் 4 இஞ்சி அளவிலான கறல் பிடித்த கம்பி காணப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

நேற்று வெள்ளிக்கிழமை மாலை உறவினர் வீட்டுக்கு கொண்டு செல்வதற்காக குறித்த வெதுப்பகத்தில் ஒருவர் 80 ரூபா விதம் 10 ரோல்கள் வாங்கிச் சென்றுள்ளார்.

ரோலை உண்பதற்காக பரிமாறியபோது

உறவினர்களின் வீட்டில் குறித்த ரோலை உண்பதற்காக பரிமாறியபோது, நான்கு வயது சிறுமி ஒருவருக்கு ஊட்டுவதற்காக தாய் ரோலை பிரித்த போதே ரோலிற்குள் கறல் பிடித்த கம்பி இருந்தது தெரிய வந்துள்ளது.

இது தொடர்பான படங்களை குறித்த வெதுப்பகத்தில் ரோலினை கொள்ளளவு செய்த நபர் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளார்.

இதனிடையே தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குள் இவ்வாறான உணவக சீர் கேட்டுச் சம்பவங்கள் அண்மைக்காலத்தில்

பொதுமக்கள் தரப்பில் விசனம்

தொடர்ச்சியாக இடம்பெற்று வருவது குறித்து பொது மக்கள் தரப்பில் விசனம் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் சுகாதார அதிகாரிகள் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் பொதுமக்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டுவருகிறது.

மர்மமான முறையில் உயிரிழந்த இருஇளைஞர்கள்
Posted in இலங்கை செய்திகள்

மர்மமான முறையில் உயிரிழந்த இருஇளைஞர்கள்

மர்மமான முறையில் உயிரிழந்த இருஇளைஞர்கள்

மர்மமான முறையில் உயிரிழந்த இருஇளைஞர்கள் ,தொம்பே, மல்வான மாயிவல பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த இருவரின் சடலங்கள் வயல் ஒன்றில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்கள் 18 மற்றும் 29 வயதுடைய ரம்பொட, நாவலதென்னவத்தை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வயல்வெளியில் இரண்டு சடலங்கள்

தொம்பே, மல்வான மாயிவல பிரதேசத்தில் வயல்வெளியில் இரண்டு சடலங்கள் மிதப்பதாக 119 மற்றும் 118 அவசர அழைப்பு பிரிவுக்கு கிடைத்த

முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்கள் இருவரும் கடந்த 22ம் திகதி தாம் தங்கியிருந்த விடுதியில் இருந்து வௌிறேயி மீண்டும் திரும்பாததால், விடுதியில் தங்கியிருந்த ஒருவர் பொலிஸில் முறைப்பாடு அளித்துள்ளார்.

மர்ம மரணங்கள்

இலங்கை திரு நாட்டில் இடம்பெறு இவ்விதமான மர்ம மரணங்கள் தொடர்பில் மக்களுக்கு பெரும் பீதியை ஏற்படுத்திய வண்ணம் உள்ளது .

ஆளும் அரசும் அதன் காவல்துறையினாலும் ஏன் இந்த மர்ம மனித படுகொலைகளை தடுக்க இயலவில்லை என்ற கேள்வி எழுப்ப படுகிறது .

வரலாற்று சாதனையாக பல ஆண்டுகளாக இவ்விதமான மர்ம படுகொலைகள் ,இடம் பெற்ற வண்னம் உள்ளது .

இவை ஆளும் அரசுகள் மீதான சந்தேகத்தை ஏற்படுத்தி வருவதாக மக்கள் விசனம் தெரிவித்து வருகின்றனர் .

காணாமல் போன மாணவன்
Posted in இலங்கை செய்திகள்

காணாமல் போன மாணவன்

காணாமல் போன மாணவன்

மதுரங்குளி பகுதியில் இருந்து கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் வீட்டிலிருந்து காணாமல் போன 12 வயது மாணவன் கதிர்காமம், 20 ஏக்கர் –

டோசர்வெவ கௌதம சதகம் அரன விகாரையில் தங்கிருந்த நிலையில் 22 ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளார் என மதுரங்குளி பொலிஸார் தெரிவித்தனர்.

மதுரங்குளி முன்மாதிரி பாடசாலை

மதுரங்குளி முன்மாதிரி பாடசாலையில் தரம் 7 இல் கல்வி கற்கும் நெதுசர பிரியனந்த எனும் மாணவன் கடந்த 18 ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்தார்.

குறித்த மாணவனின் தாய் தொழில் நிமித்தம் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில், மாணவன் பாட்டி வீட்டில் வசித்து வந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் தனது பாட்டியோடு முரண்பட்ட நிலையில், 18 ஆம் திகதி யாருக்கும் சொல்லாமல் வீட்டில் இருந்து வெளியேறிய மாணவன் இன்னமும்

வீடு திரும்பவில்லை என உறவினர்கள் மதுரங்குளி பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர்.

இந்த நிலையில், குறித்த மாணவன் புத்தளம் – மதுரங்குளியில் இருந்து கொழும்புக்கு சென்றுள்ளதாகவும், பின் அந்த மாணவனின் விருப்பத்தின் படி

கதிர்காமம், 20 ஏக்கர் – டோசர்வெவ கௌதம சதகம் அரன விகாரையில் ஒப்படைக்கப்பட்டதாகவும் தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பௌத்த பிக்குவாக துறவறம் பூண்டுள்ளார்

இவ்வாறு பௌத்த விகாரையில் ஒப்படைக்கப்பட்ட, குறித்த மாணவனின் விருப்பத்திற்கிணங்க கடந்த 20 ஆம் திகதி “மதுரங்குளி சுபோதி” எனும்

பெயரில் பௌத்த பிக்குவாக துறவறம் பூண்டுள்ளார் என கௌதம சதகம் அரன விகாரையின் விகாராதிபதி கலன்பிந்துனுவெவ அனுருத்த மைத்திரி தேரர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட குறித்த மாணவன், கௌதம சதகம் அரன விகாரையில் இருப்பதாக மதுரங்குளி பொலிஸாருக்கு

தகவல் வழங்கப்பட்டதுடன், அந்த மாணவனை அழைத்துவர நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும், பௌத்த துறவியாகுவதே தனது விருப்பம் எனவும், தான் விகாரையை விட்டு வேறு எங்கும் செல்லப் போவதில்லை என மதுரங்குளி சுபோதி” எனும் பெயரில் பௌத்த பிக்குவாக துறவறம் பூண்டுள்ள அந்த மாணவன் தெரிவித்துள்ளார் எனக் கூறப்படுகிறது.

இஸ்ரேலுக்கு ஹிஸ்புல்லா எச்சரிக்கை
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலுக்கு ஹிஸ்புல்லா எச்சரிக்கை


இஸ்ரேலுக்கு ஹிஸ்புல்லா எச்சரிக்கை

இஸ்ரேலுக்கு ஹிஸ்புல்லா எச்சரிக்கை , ரபா எல்லை மீது தாக்குதல் நடத்தப்பட்டால் பயங்கர தாக்குதலை நடத்துவோம் என ஹிஸ்புல்லா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது .

பாலஸ்தீன மக்கள் மீதான இனஅழிப்பு

பாலஸ்தீன மக்கள் மீதான இனஅழிப்பு தாக்குதலை இஸ்ரேலிய இராணுவம் நன்கு திட்டமிட்டு நடத்திய வண்ணம் உள்ளது .

ஆண்டுகளாக நடத்தி வந்த இஸ்ரேல் இனவாத அரசின் இனப்படுகொலைகள் தற்போது உலக அரங்கில் பேசு பொருளாக மாற்றம் பெற்றுள்ளன .

ஜெர்மன் ஹிட்லரை போல இஸ்ரேல் ஆளும் நெதன்யாகு இனப்படுகொலையாளியாகி மாற்றம் பெற்றுள்ளார் .

பெரும் மனித பேரழிவு

வரலாறு காணாத மிக பெரும் மனித பேரழிவை நடத்தி நாடற்றவராக பாலஸ்தீனம் காசா மக்களை ஆட்படுத்தி வருகிறார் .

இவ்வாறான கால பகுதியில் ரபா மீதான தாக்குதலை இஸ்ரேல் அரச இராணுவம் தொடர்ந்து நடத்தினால் , மிக பெரும் பேரழிவை இஸ்ரேலிய, யூத படைகள் சந்திக்கும் என்பதாக லெபனான் ஹிஸ்புல்லா போர் படைகள் அறிவித்துள்ளன .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
நாட்டில் பலபகுதிகளில் சீரற்ற வானிலை
Posted in இலங்கை செய்திகள்

நாட்டில் பலபகுதிகளில் சீரற்ற வானிலை

நாட்டில் பலபகுதிகளில் சீரற்ற வானிலை

நாட்டில் பலபகுதிகளில் சீரற்ற வானிலை ,நாட்டில் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையினை தொடர்ந்து நுவரெலியாவில்

மழையுடனான காலநிலை காணப்படுகின்ற நிலையில் இன்று (25) காலை முதல் அதிக பனிமூட்டம் நிறைந்து காணப்படுகின்றது.

குறிப்பாக நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் பிலக்பூல் சந்தி , வெண்டிகோனர் , பங்களாஹத்த , நானுஓயா , ரதல்ல குறுக்கு வீதி போன்ற

வாகனங்களை செலுத்துவதில் பெரும் சிரமங்கள்

இடங்களில் வழகைக்கு மாறாக அதிகளவான பனி மூட்டம் காணப்படுகின்றது இதனால் சாரதிகள் வாகனங்களை செலுத்துவதில் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றன.

நுவரெலியா – ஹட்டன் ஏ7 பிரதான வீதியில் சென்ற வாகனங்கள் அதிக ஒலி எழுப்பியவாறும், வாகன விளக்குகளை ஒளிரவிட்டும் செல்வதை அவதானிக்க

முடிந்தது . மேலும் தொடர்ந்து மழை பெய்வதால் அதிக குளிருடன் கூடிய காலநிலை காணப்படுவதை உணரக் கிடைத்துள்ளது.

வெசாக் பௌர்ணமி தொடர் விடுமுறை

குறிப்பாக வெசாக் பௌர்ணமி தொடர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளமையால் வெளி மாவட்டத்தில் இருந்து பெரும் எண்ணிக்கையிலானவர்கள் நுவரெலியாவுக்கு வாகனங்களில் வருகை தந்துள்ளனர் எனவே குறித்த

சாரதிகளுக்கும் எதிரே வரும் வாகனங்கள் தெரியாதபடி கடும் பனிமூட்டம் நிலவுவதால் விபத்துக்களை தடுக்கும் நோக்கில் மிகவும் அவதானமாக

தங்களது வாகனங்களை செலுத்த வேண்டும் எனவும் வாகனங்கள் செலுத்தும் போது தங்களுக்கு உரியத்தான பக்கத்தில் வாகனங்களின் முகப்பு

விளக்குகளை ஒளிரச்செய்தவாறு வாகனங்களை செலுத்த வேண்டும் எனவும் போக்குவரத்து பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

படகு சேவைகள் நிறுத்தம்
Posted in இலங்கை செய்திகள்

படகு சேவைகள் நிறுத்தம்

படகு சேவைகள் நிறுத்தம்

படகு சேவைகள் நிறுத்தம் ,யாழ்ப்பாணத்தில் இருந்து கடல் கடந்து பயணிக்கும் தீவுப் பகுதிகளுக்கான படகுச் சேவைகள் இன்றும்

இடம்பெறமாட்டாது என யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு அறிவித்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களத்தின் காலநிலை

வளிமண்டலவியல் திணைக்களத்தின் காலநிலை அறிக்கையின் பிரகாரம் நேற்று 24 ஆம் திகதி கடல் அதிக கொந்தளிப்பாகக் காணப்பட்டதன்

காரணமாக பொதுமக்களின் பாதுகாப்புக் கருதி தீவுப் பகுதிகளுக்கான படகுச் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டன.

படகுச் சேவைகளே நேற்று முதல் நிறுத்தப்பட்டன

இதன் பிரகாரம் நெடுந்தீவு, எழுவைதீவு மற்றும் அனலைதீவுக்கான படகுச் சேவைகளே நேற்று முதல் நிறுத்தப்பட்டன.

இந்நிலையில், அதிக காற்றுடன் கூடிய காலநிலை தொடர்வதன் காரணமாக இன்றும் குறித்த 3

தீவுகளுக்குமான படகுச் சேவைகள் இடம்பெறமாட்டாது எனவும் நயினாதீவுக்கான படகுச் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில்

இடம்பெறும் எனவும் யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

உன்னை பார்க்கையில
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

உன்னை பார்க்கையில

உன்னை பார்க்கையில

உன்னை நானும் பார்க்கையில
உள்ளம் மெல்ல துள்ளுதடி
கள்ளம் இல்லா பேரழகை
கட்டி அணைக்க துடிக்குதடி

கொஞ்சி பேசும் மொழியழகில்
கொள்ளை பிரியம் வைக்குதடி
அச்சம் இல்லா பேசிடவே
அல்லும் பகலும் துடிக்குதடி

இடையின் அளவை அளக்கையில
இதயம் மெல்ல வெட்குதடி
தாளம் போடும் தாமரையை
தழுவ மோகம் துடிக்குதடி

துடையின் மேலே புருவமது
துரத்தி மெல்ல முறைக்கையில
மெல்ல வாலிபம் துடிக்கிறதே
மெழுகாய் உருகி அழுகிறதே

சொல்ல முடியா சுகமதனை
சொர்க்கமே நீ தருவாயா
அள்ளி பருகிட நாளுமே
அன்பே என்னை விடுவாயா …!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 24-05-2024

போராளி குடும்பத்தின் இன்றைய அவலநிலை
Posted in இலங்கை செய்திகள்

போராளி குடும்பத்தின் இன்றைய அவலநிலை

போராளி குடும்பத்தின் இன்றைய அவலநிலை

போராளி குடும்பத்தின் இன்றைய அவலநிலை ,தமது வறுமையை நீர்த்திட கோரி போராளி குடும்பம் கண்ணீர் கோரிக்கை .

தமிழீழ விடுதலை புலிகளின் படையில் இணைந்து மக்களுக்காக போராடி காயமடைந்த முன்னாள் போராளி ஒருவர் ,தனது வாழ்வாதாரத்தை உயர்த்திட கோரி உலக தமிழ் மக்களிடம் உதவி வேண்டி இருக்கின்றார் .

தேசத்தையும் ,தேச மக்களையும் காப்பற்றிட தன்னை அர்ப்பணித்து அந்த ஈழ விடுதலை போராளி ,காலில் காயமடைந்த நிலையில் ,தனது குடும்பத்தை பராமரிக்க முடியாத நிலையில் தவித்து வருகிறார் .

அவ்வாறன அந்த குடும்பத்தை காப்பற்றிட வேண்டிய பொறுப்பு உலக தமிழ் மக்களிற்கு உள்ளது .

வவுனியா பாவற்குளம்

எனவே அன்பார்ந்த தாய் தமிழ் உறவுகளே, வவுனியா பாவற்குளம் பகுதியில் வசித்து வரும் இந்த போராளி குடும்பத்தை காப்பற்ற வேண்டியது நமது பொறுப்பாகும் .

இரண்டு பிள்ளைகளுடன் வசித்து வரும் இந்த வவுனியா பாவற்குளம் போராளி குடும்பத்திற்கு ,குழாய் கிண்று ஒன்றை நிறுவிட மக்களே உதவிடுங்கள் .

உதவிட தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கம் இதோ –0044 7536707793

வாட்ஸ்சாப்பில் இணைந்து பயன் பெறுக

வைபரில் இணைந்து பயன் பெறுக

வீடியோ

ஹவுதி தாக்குதலில் எரியும் கப்பல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஹவுதி தாக்குதலில் எரியும் கப்பல்

ஹவுதி தாக்குதலில் எரியும் கப்பல்

ஹவுதி தாக்குதலில் எரியும் கப்பல் ,ஏடன் வளைகுடாவில் பயணித்த இஸ்ரேலியா ஆதரவு சரக்கு கப்பல் மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

இந்த தாக்குதலில் இஸ்ரேலிய ஆதரவு கப்பல் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

கப்பல் எரிவதாக தாக்குதலை நடத்திய ஏமன் ஹவுதி படைகள் தெரிவித்துள்ளன .

ஈரானிய ஜனாதிபதி இப்ராகிம் ரைசி

ஈரானிய ஜனாதிபதி இப்ராகிம் ரைசி விமான விபத்தில் உயிரிழந்த 72 மணித்தியாலத்தில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது .

காசா மக்கள் மீது இஸ்ரேலிய இராணுவம் ,இடைவிடாத தாக்குதலை நடத்தி கொண்டிருக்கும் இவ்வேளையில் ,அந்த மக்கள் மீதான இழப்புக்களை

தணிக்கவும் ,எதிரி படைகளுக்கும் பெரும் நெருக்கடிகளை வழங்கும் முகமாவே இந்த தாக்குதல் இடம்பெற்று கொண்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

உக்ரைன் ரஸ்யா இராணுவம் கடும் மோதல்

அதேவேளை உக்ரைன் ரஸ்யா இராணுவம் கடும் தாக்குதல் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

ரஷ்யா நடத்திய தாக்குதலில் மக்கள் பலர் காயமடைந்துள்ளனர் .

தொடரும் இரு தரப்பு தாக்குதலினால் மக்களுக்கு பலத்த இழப்பு ஏற்பட்டுள்ளது .

பல கிராமங்கள் இதுவரை இருளில் மூழ்கியுள்ளமை இங்கே குறிப்பிட தக்கது .

Error: View 9293b2au4w may not exist
ஈரான் வெளியுறவு அமைச்சர் உடலுடன் சொலைமாணி மோதிரம் அடக்கம்
Posted in உலக செய்திகள்

ஈரான் வெளியுறவு அமைச்சர் உடலுடன் சொலைமாணி மோதிரம் அடக்கம்

ஈரான் வெளியுறவு அமைச்சர் உடலுடன் சொலைமாணி மோதிரம் அடக்கம்

ஈரான் வெளியுறவு அமைச்சர் உடலுடன் சொலைமாணி மோதிரம் அடக்கம் ,ஈரான் எஜனாதிபதியுடன் விபத்தில் பலியான ஈரான் வெளியுறவு
அமைச்சர் ஹொசைன் அமீர் அப்புத்துலாகின் சடலம் நல்லடக்கம் செய்ய பட்டது .

இதன் பொழுது ஈராக்கில் வைத்து படுகொலை செய்ய பட்ட ,
தளபதி காசிம் சொலைமாநி அணிந்திருந்த மோதிரம் அவரது உடலோடு அடக்கம் செய்ய பட்டுள்ளது .

ஈரான் வெளியுறவு அமைச்சருக்கு

ஈரான் வெளியுறவு அமைச்சருக்கும் ,தளபதி காசீம் சோலைமணிக்கும் இடையில் ,சிறந்த நட்புறவு காணப்பட்டது .

அவ்வாறான நிலையில் தற்போது ,அந்த உறவின் உன்னதத்தை மதிக்கும் வகையின்,காசிம் சோலைமணியின் மகள் இந்த மோதிரத்தை ,
அவரது சடலத்துடன் இனைத்து நல்லடக்கம் செய்திட வழங்கியுள்ளார் .

இந்த செயல்பாடானது இராணுவ தளபதிக்கு ,வெளியுறவு அமைச்சருக்கும் இடையில் எவ்விதமான நெருங்கிய உறவு நிலை காணப்பட்டது என்பதை இந்த விடயம் உலக வெளியில் பகிரங்க படுத்தியுள்ளது .

ஈரானிய மக்கள் விடுதலைக்கு முன்னல் இராணுவ தளபதியும் ,இரண்டாம் நிலை தளிவருமாக விளங்கிய சோலைமானி அவர்கள் ஆற்றிய பெரும் சாதனை எவை என்பதை அவரது மரண நிகழ்வில் கலந்து கொண்ட மக்கள் கணப்பித்தனர் .

தனது தேசம் நாடு ,மக்கள் என் ஆவர் அள்ளும் பகலும் உறங்காது ,நாட்டை காக்க சிந்தித்து செயல்பட்ட விடயம் மேற்படி விடயத்தை காண்பித்துள்ளது .

பிளவு பட்ட அமைப்புக்களி ஒன்றினைத்த சாதனை

பிளவு பட்ட அமைப்புக்களி ஒன்றினைத்து ஒரு அணியில் இணைத்து அவர் பயணித்த அந்த பயணம் என்பதே ,ஈரானின் இன்றைய அசுரர் வளர்ச்சிக்கு காரணமாக விளங்கியது .

அதனாலே இஸ்ரேல் அமெரிக்காவுக்கு ,சோலைமானி மிக பெரும் அச்சுறுத்தும் நபராக காணப்பட்டார் .

இன்று மட்டும் இந்த வீர தளபதி உயிருடன் இருந்திருந்தால் இஸ்ரேல் மிக பெரும் அழிவை சந்தித்து இருக்கும் என்பதற்கு ,சான்றாக மாறி இருக்கும் .

அதனை நினைவு கூர்ந்தே அவரது மகள் .ஈரான் வெளியுறவு அமைச்சருக்கு தந்தையின் மோதிரத்தை அணிவித்து ,கவுரவித்துள்ளார் ,

தந்தையின் பணியை இவர் செய்தார் என்பதே அந்த மரியாதை ஊடக இந்த நிகழ்வு காண்பித்துள்ளது .

இதுவே இப்போது அரபுலகில் ,பேசு பொருளாக மாற்றம் பெற்றுள்ளது குறிப்பிட தக்கது .

சர்வதேச நீதிமன்றத்தை விமர்சித்த பைடன்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

சர்வதேச நீதிமன்றத்தை விமர்சித்த பைடன்

சர்வதேச நீதிமன்றத்தை விமர்சித்த பைடன்

சர்வதேச நீதிமன்றத்தை விமர்சித்த பைடன் ,சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் அதிகார தீர்ப்பை அமெரிக்கா அங்கீகரிக்கவில்லை என அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார் .

இஸ்ரேல் மற்றும் ஹமாஸை ஒரே தராசில்

இஸ்ரேல் மற்றும் ஹமாஸை ஒரே தராசில் வைத்து நிறுத்தி தீர்ப்பு கூறப்பட்ட விடயம்,ஏற்று கொள்ள பட முடியாத ஒன்று என காட்டாமாக பேசியுள்ளார் .

நீதிமன்ற தீர்ப்புக்களை ,கடுமையாக விமர்சிக்க முடியாது என்ற நிலை இருக்கின்ற பொழுது ,அவ்விதம் புரிந்தால் அதுவே நீதிமன்ற அவமதிப்பாக மாறும் என்ற விடயம் இருக்கின்ற பொழுது ,பைடன் இவ்விதம் பேசியுள்ள விடயம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது .

இஸ்ரேலிய அரச பயங்கரவாத தாக்குதல்களுக்கு ,ஆளும் அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் பகிரங்க ஆதரவை வழங்கிய வண்ணம் உள்ளார் .

இவரது இந்த கடும் போக்கு நிலைப்பாட்டுக்கு எதிராக அமெரிக்கா மக்களே கிளர்ந்து எழுந்துள்ளனர்

மேலும் பொறுப்பற்ற முறையில் பைடன் பேசி வரும் இவ்விதமான பேச்சுக்கள் ,அமெரிக்கா தேர்தலில் பைடனுக்கு பெரும் தோல்வியை ஏற்படுத்தும் என எதிர் பார்க்க படுகிறது .

Error: View 9293b2au4w may not exist
வீடொன்றின் மீது வீழ்ந்த பனைமரம்
Posted in இலங்கை செய்திகள்

வீடொன்றின் மீது வீழ்ந்த பனைமரம்

வீடொன்றின் மீது வீழ்ந்த பனைமரம்

வீடொன்றின் மீது வீழ்ந்த பனைமரம் ,அதிக காற்று காரணமாக யாழ்ப்பாணம் கொக்குவில் மேற்கு பகுதியில் உள்ள வீடொன்றின் மீது பனைமரம் ஒன்று முறிந்து விழுந்தில் குறித்த வீது சேதமடைந்துள்ளது.

நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவில்

நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவில் ஜே 125 கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட வீடொன்றே நேற்று (22) இவ்வாறு சேதமாகியுள்ளது.

இதேவேளை, அதிக காற்று காரணமாக நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த நால்வர் நேற்று பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த அனர்த்தம் தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிக்கையிட்டுள்ளது.

இலங்கையை இவ்வாறான புயல் தாக்கும் என காலநிலை அவதான நிலையம் அவதானித்து எச்சரித்த பொழுதும் இந்த சம்பவம் இடம்பெற்றதள்ளது .

பயன் பெறும் பனை மரங்கள்

மக்கள் அதிக பயன் பெறும் பனை மரங்கள் ,தமிழ் மக்கள் கலை பண்பாட்டு வாழ்வியலுடன் ஒன்றித்து பயணிக்கும் ஒரு காரனையாகி மாற்றம் பெற்றுள்ளது .

அவ்வாறான பனை மரங்கள் ,;தென்னை மரங்கள் என்பன வீடுகளின் அருகில் வளர்க்க படுகின்றன .

இது அறியாமையின் தன்மையா அல்லது ,அதன் விருப்பு நாள் இடம்பெறுவதா என்பதே கேள்வியாக உள்ளது .

இந்த பனை மரம் முறிந்து வீழ்ந்த சம்பவம் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது என்பது உண்மையாகவே காணப்படுகின்றன .

மரம் முறிந்து வீழ்ந்து ஆண்பலி
Posted in இலங்கை செய்திகள்

மரம் முறிந்து வீழ்ந்து ஆண்பலி

மரம் முறிந்து வீழ்ந்து ஆண்பலி

மரம் முறிந்து வீழ்ந்து ஆண்பலி ,நுவரெலியா மாவட்டத்தில் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக ராகலை மாகுடுகலை பகுதியில் மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததில் ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ராகலை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் இன்று (23) இடம்பெற்றுள்ளது.

வீசிய கடும் காற்றினால்

குறித்த பகுதியில் வீசிய கடும் காற்றினால் குறித்த மரம் சரிந்து விழுந்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் மஸ்கெலியாவை பிறப்பிடமாகவும் திருமணத்தின் பின்னர் மனைவியுடன் கந்தப்பளை ஹைபோரஸ்ட் இலக்கம் ஒன்றில் வசித்து வந்த கந்தசாமி ராஜ்குமார் என்ற 38 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை என தெரிவிக்கப்படுகின்றது

நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலை

உயிரிழந்தவரின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ராகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சமீப நாட்களாக இலங்கை நாடு தழுவிய நிலையில் இவ்வாறான சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன .

வீதிகள் ,வீடுகள் மேலே மரங்கள் முறிந்து விழும் சம்பவம் அதிகரித்து காணப்படுகின்றன .

அபாயம் நிறைந்த மரங்களின் கிளைகளை வெட்டிவிட மக்கள் தயக்கம் அல்லது அலட்சியம் அற்று காணப்படுவதே இந்த நிலைக்கு காரணம் என படுகிறது .

மானிய வட்டி வீதத்தில் வங்கிக்கடன்
Posted in இலங்கை செய்திகள்

மானிய வட்டி வீதத்தில் வங்கிக்கடன்

மானிய வட்டி வீதத்தில் வங்கிக்கடன்

மானிய வட்டி வீதத்தில் வங்கிக்கடன் ,எதிர்வரும் வாரத்தில் இருந்து பல விசேட கடன் திட்டங்களை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

தொழில்துறையினருக்காக இந்த விசேட கடன் திட்டங்கள் செயற்படுத்தப்படவுள்ளதாக கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, பிரதேச மற்றும் மாவட்ட மட்டத்தில் தொழில்துறையினரின் நிதித் தேவைகள் கண்டறியப்பட்டு, வணிக வங்கிகள் மூலம் மானிய வட்டி வீதத்தில் கடன் வழங்கும் வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

கைத்தொழில் அமைச்சின் செயலாளர் சாந்த வீரசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் இலங்கையில் இடம்பெற உள்ளதை அடுத்து ,அத்தியாவசிய பொருட்டாகள் முதல் ,பல விலை கழிவை ரணில் விக்கிரமசிங்கா அரசு ஏற்படுத்தி வருகிறது .

அதன் ஒரு தொடர்ச்சியாகவே மக்களுக்கு மானிய வட்டிவீதத்துடன் உதவி திட்டங்கள் வழங்க படுவதன் புதிய அறிவிப்பையும் பார்க்க முடிகிறது .

இவை நன்கு திட்டமிடப்பட்ட மக்களை ஏமாற்றும், ஒரு கபட நாடகமாக பார்க்க படுகிறது என்பது குறிப்பிட தக்கது.

ஆண்களின் விதைப்பையில் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள்
Posted in இலங்கை செய்திகள்

ஆண்களின் விதைப்பையில் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள்

ஆண்களின் விதைப்பையில் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள்

ஆண்களின் விதைப்பையில் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் ,ஆண்களின் பாலின உறுப்புகளில் ஒன்று, விதைப்பை. இதுவே, ஆண்களின் இனப்பெருக்கத்துக்குத் தேவையான விந்தணுக்களை உற்பத்தி செய்யும்.

சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில், விதைப்பையினுள் `மைக்ரோ பிளாஸ்டிக்’ (Microplastics) எனப்படும் சிறு சிறு பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

நியூ மெக்சிகோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர்.

கருத்தடை அறுவை சிகிச்சையின்போது

பிரேதப் பரிசோதனையின்போதும், கருத்தடை அறுவை சிகிச்சையின்போதும் சேகரிக்கப்பட்டிருந்த 23 ஆண்களின் விதைப்பை மாதிரி செல்கள் மற்றும் 47 வளர்ப்பு நாய்களின் விதைப்பை மாதிரி செல்களையும் பரிசோதனைக்கு

எடுத்துக்கொண்டனர். சோதனையின் முடிவில், அனைத்து விதைப்பையிலும் பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

சராசரியாக ஒரு நாயின் விதைப்பையினுள் 122.63 மைக்ரோகிராம் அளவும், மனிதனின் விதைப்பையினுள் 328.44 மைக்ரோகிராம் பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

இதில், 12 வகையான பிளாஸ்டிக் துகள்கள் இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் அட்டவணைப்படுத்தியுள்ளனர். அதில், பாலிஎத்திலீனால் உருவான பிளாஸ்டிக் துகள்கள் அதிக அளவு உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இது குறித்து நியூ மெக்சிகோ பல்கலைக்கழகப் பேராசிரியர் சியோசங் யூ பேசுகையில், “வாய்வழியாக மற்றும் தோலில் இருக்கும் துளைகள் மூலம் உடலினுள் மைக்ரோ பிளாஸ்டிக் செல்வதற்கான வாய்ப்புகள் உண்டு.

இவை, மனித இனப்பெருக்க மண்டலத்தை சென்றடையுமா என்ற கேள்வி எங்களுக்குள் இருந்தது.

இதனைக் கண்டறியவே இந்த ஆய்வை மேற்கொண்டோம். நாய்களின் விதைப்பையில் பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது எங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

அதிகமான பிளாஸ்டிக் துகள்கள்

அதைவிட மூன்று மடங்கு அதிகமான பிளாஸ்டிக் துகள்கள் மனிதனின் விதைப்பையினுள் கண்டறியப்பட்டது எங்களுக்கு

பேரதிர்ச்சியைக் கொடுத்தது. பிளாஸ்டிக் துகள்கள் உடல் உறுப்புகளில் படிவதால் தொற்றுநோய், உறுப்புச் செயலிழப்பு, வளர்சிதை மாற்ற கோளாறு, டிஎன்ஏ சேதம் போன்றவற்றை ஏற்படுத்தலாம்.

இவை, விதைப்பையினுள் இருப்பதால் விந்தணு உற்பத்தியையும் பாதிக்கலாம். விந்தணுக்களிலும் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் பரவலாம்.

ஆண்களின் விதைப்பைகளில் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதால் இனப்பெருக்கத்திறன் குறைவது, விந்தணுக்கள் எண்ணிக்கை குறைவது போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும்.

இது எதிர்காலத்தில் குழந்தையின்மைப் பிரச்னைகளைத் தீவிரமாக்கும் வாய்ப்பு உள்ளது.

இனப்பெருக்க மண்டலத்தில் மைக்ரோ பிளாஸ்டிக்

இனப்பெருக்க மண்டலத்தில் மைக்ரோ பிளாஸ்டிக் இருக்குமான என்பதற்கான ஆய்வு மட்டுமே மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அவை எந்த அளவு இனப்பெருக்க மண்டலத்தையும், விந்தணு உற்பத்தியையும் பாதித்துள்ளத என்பது குறித்து இனிதான் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

அது மிகவும் முக்கியமானது என்பதால் உடனடியாக அதற்கான முயற்சிகளைத் தொடங்க இருக்கிறோம்” என்றார்.