பந்தை எடுக்க முயன்ற மாணவன் நீரில் மூழ்கி பலி
Posted in இலங்கை செய்திகள்

பந்தை எடுக்க முயன்ற மாணவன் நீரில் மூழ்கி பலி

பந்தை எடுக்க முயன்ற மாணவன் நீரில் மூழ்கி பலி

பந்தை எடுக்க முயன்ற மாணவன் நீரில் மூழ்கி பலி ,திக்வெல்லவில் உள்ள தனது பாடசாலையில் நீச்சல் தாடாகம் விழுந்த கிரிக்கெட் பந்தை எடுக்க முயன்ற 17 வயது பாடசாலை மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

உயிரிழந்த மாணவன் திக்வெல்ல, விஜித மகா வித்தியாலயத்தில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மாணவர் தனது வகுப்பு நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது, பந்து தற்செயலாக நீச்சல் தாடாகத்தில் விழுந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

மீட்க அவர் தண்ணீரில் இறங்கிய போது மீண்டும் மேலே வர முடியவில்லை அதனால் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

மாணவனை தாக்கிய மாணவன்
Posted in இலங்கை செய்திகள்

மாணவனை தாக்கிய மாணவன்

மாணவனை தாக்கிய மாணவன்

மாணவனை தாக்கிய மாணவன் பத்தரமுல்லையில் உள்ள ஒரு பிரபலமான தேசிய பாடசாலையின் 11 ஆம் தர மாணவன் ஒருவன் அதே பாடசாலையில்

உள்ள மற்றொரு மாணவனால் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலுக்கு உள்ளான மாணவர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கடந்த 3 ஆம் திகதி மதியம் 12.05 மணியளவில் மூன்று மாணவர்களுடன் வந்த 11 ஆம் தர மாணவன் இந்த தாக்குதலை மேற்கொண்டதோடு, தாக்குதலுக்கு இலக்கான மாணவரின் காது சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும், இந்த தாக்குதலின் விளைவாக காதில் காயம் ஏற்பட்ட மாணவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்க பாடசாலை நிர்வாகம்

எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், மாணவனை வைத்தியசாலையில் அனுமதிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு தேசிய வைத்தியசாலையை தொடர்புகொண்டு வினவிய போது, குறித்த மாணவன் இன்று (07) செவிப்புலன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

தாக்குதலுக்கு உள்ளான மாணவனின் பெற்றோர் இது தொடர்பாக தலங்கம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளனர். பாடசாலை நேரத்தில்

மாணவன் மீது இவ்வளவு கடுமையான தாக்குதல் நடந்துள்ள பின்னணியில், பாடசாலை நிர்வாகம் மாணவனை சிகிச்சைக்கு அனுப்பாமல் கடமை தவறி செயற்பட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளான மாணவன் ஒரு திறமையான இசைக்கலைஞர் என்றும், அவரது காதில் ஏற்பட்ட காயம் அவரது எதிர்காலத்தை கடுமையாக

பாதிக்கும் என்றும் கூறிய மாணவனின் தாயார், சட்டத்தின் மூலம் நீதி கோருவதாகவும் கூறினார்.

“எங்களுக்கு இழப்பீடு தேவையில்லை. என் மகனுக்கு நடந்தது இன்னொரு பிள்ளைக்கு நடக்கக்கூடாது என்பதற்காக நான் சட்ட நடவடிக்கை எடுக்க விரும்புகிறேன். ஏனென்றால், இவ்வாறான சந்தர்ப்பத்தில் என் மகன் மீது

கத்தியால் குத்தி இருந்தால் என்ன நடந்திருக்கும்? அதனால்தான் நான் சட்டத்தின்படி செயல்பட விரும்புகிறேன். எனக்கு பணம் முக்கியமில்லை. நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.”

இருப்பினும், இது குறித்து நாங்கள் விசாரித்தபோது, ​​சம்பந்தப்பட்ட பாடசாலையின் அதிபர், தாக்குதல் குறித்து மறுநாள் காலையில் தனக்குத்

தெரிவிக்கப்பட்டதாகவும், பாடசாலை நிர்வாகம் இந்த விவகாரம் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

பஸ்ஸில் இருந்து விழுந்த மாணவன்
Posted in இலங்கை செய்திகள்

பஸ்ஸில் இருந்து விழுந்த மாணவன்

பஸ்ஸில் இருந்து விழுந்த மாணவன்

பஸ்ஸில் இருந்து விழுந்த மாணவன் ,வீதியில் பயணித்துக் கொண்டிருந்த சிசுசெரிய பேருந்தின் மிதி பலகையில் இருந்து மாணவர் ஒருவர் விழுந்த சம்பவம் தொடர்பான விசாரணையில், ​​சாரதி மற்றும் நடத்துனரின்

கவனக்குறைவான மற்றும் அலட்சியமாக வாகனம் ஓட்டி

கவனக்குறைவான மற்றும் அலட்சியமாக வாகனம் ஓட்டியதே விபத்துக்குக் காரணம் என்று கண்டறியப்பட்டதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் நேற்று (03) பதிவாகியிருந்த நிலையில், சம்பவம் தொடர்பான வீடியோவையும் அத தெரண செய்தி வெளியிட்டுள்ளது.

அதன்படி, வடமேற்கு மாகாண போக்குவரத்து ஆணைக்குழு இந்தப் பேருந்தில் பணியாற்றிய சாரதி மற்றும் நடத்துனரின் சேவைகளை தற்காலிகமாக

நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழு

மேலும், விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்கும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தனது நன்றியைத் தெரிவித்துள்ளது குறிப்பிட தக்கது இங்காகும் என்பதை கவனத்தில் கொள்க .

மாணவன் நிர்வாணமாக்கப்பட்டு படுகொலை
Posted in இலங்கை செய்திகள்

மாணவன் நிர்வாணமாக்கப்பட்டு படுகொலை

மாணவன் நிர்வாணமாக்கப்பட்டு படுகொலை

மாணவன் நிர்வாணமாக்கப்பட்டு படுகொலை நிர்வாணமாக்கப்பட்டு பகிடிவதைக்கு உள்ளான பல்கலை மாணவன் தற்கொலை.

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன்
ஒருவன் பகிடி வதையால் அவமானம் தாங்க முடியாது கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இப்ப பல்கலைக்கழகத்தின் இரண்டாம் ஆண்டு
மாணவர் ஒருவர் Shorts அணிந்து நடமாடியதாக
அம்மாணவனை சகல உடைகளும் களையப்பட்டு
நிர்வாணமாக்கப் பட்டுள்ளான்.

இதனால் அவமானம் தாங்க முடியாத நிலையில் இம்மாணவன்
தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் இடம்பெற்று வருகின்ற இவ்வாறன பகிடிவதை காரணமாக பல அப்பாவி பல்கலைக்கழக மாணவர்கள், தற்கொலை செய்து வருகின்ற விடயம் பெற்றோர்கள் மத்தியில் அதிர்வல்களை ஏற்படுத்தி உள்ளது.

இலங்கையில் கல்வி நிலைகளில் உரிய மாற்றத்தை ஏற்படுத்தி ,மாணவர்களை துன்புறுத்தும் நடவடிக்கையை தடுத்து நிறுத்த கல்வி அமைச்சு தவறி வருவதை இவை எடுத்துக்காட்டுகிறது.

காலம் தோறும் பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்கள் இவ்வாறான பகிடிவத்தைக்கு உள்ளாகி வருகின்ற சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகிறது.

பொறுப்பு வாய்ந்த கல்வி அமைச்சராக மக்களுக்கும் மாணவருக்கும் வழங்கினால் இவ்வாறான இழிநிலையைச் செயற்பாடுகளை தடுக்க முடியும்.

ஆனால் அரசியல்வாதிகளும் அரசுகளும் அந்த பல்கலைக்கழக மாணவர்களை தம் பக்கம் திசை திருப்ப தமக்கு ஆதரவுகளை வைத்து ,இவ்வாறான சித்து விளையாட்டு நடவடிக்கை ஆரம்பித்துள்ளது இந்த மாணவனுடைய தற்கொலை படுகொலைகள் காண்பிக்கிறது.

அவ மதித்தல் என்பது ஒரு மாணவனுடைய உள்ளத்தை உருக்கி சிதைவடைய செய்து நலிவடையச் செய்து அவனை வதைத்து படுகொலை செய்வதற்கு ஒப்பான செயலாகும்.

ஆகவே இலங்கையில் இது போன்ற நடவடிக்கை மேலும் தொடராது இருக்க கல்வி அமைச்சு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

என்பதே உலகளாவிய தமிழ் மக்கள் சிங்கள மக்களுடைய என்ன கோட்பாடாகவும் கருத்தாகவும் இருக்கிறது.

ஆளுகின்ற அனுராருடைய ஆட்சியில் நடக்கின்ற இவ்வாறான படுகொலைகள் நிகழ்வுகளை அணுகுற அரசு தடுக்குமா..? மாணவர்களை காப்பாற்றும் இதுதான் மக்களுக்கு கேள்வியாக உள்ளது.

துறவியின் உடையில் நுழைய முயன்ற மாணவன் கைது
Posted in இலங்கை செய்திகள்

துறவியின் உடையில் நுழைய முயன்ற மாணவன் கைது

துறவியின் உடையில் நுழைய முயன்ற மாணவன் கைது

துறவியின் உடையில் நுழைய முயன்ற மாணவன் கைது ,பௌத்த துறவியின் உடையில் ஸ்ரீ தலதா மாளிகைக்குள்நுழைய முயன்ற பள்ளி மாணவன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் கம்பஹா, கிரல்லவெல பகுதியைச் சேர்ந்த18 வயதுடைய பாடசாலை மாணவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

புத்த துறவிகளுக்கான ஒதுக்கப்பட்ட வரிசை வழியாகதலதா மாளிகைக்குள் நுழைய முயன்ற போது அவர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்துகண்டி பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாணவன் அடித்துக் கொலை 11 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

மாணவன் அடித்துக் கொலை 11 பேர் கைது

மாணவன் அடித்துக் கொலை 11 பேர் கைது

மாணவன் அடித்துக் கொலை 11 பேர் கைது ,வெலகெதர பொலிஸ் பிரிவில் சக பாடசாலை மாணவனின் மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பதினொரு இளைஞர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர், சில

வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சிறார் தடுப்பு மையங்களுக்கு அனுப்பப்பட்டதுடன், மேலும் இருவர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஏப்ரல் 16 ஆம் திகதி தனிப்பட்ட தகராறு காரணமாக சக பாடசாலை மாணவனை இளைஞர்கள் குழு ஒன்று உடல் ரீதியாக தாக்கியது.

பலத்த காயமடைந்த சிறுவன் குருநாகல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஏப்ரல் 22 ஆம் திகதி உயிரிழந்தார்.

தாக்குதல் நடந்த நாளில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, 18 வயதுக்குட்பட்டவர்கள் என்பதால்,

சிறார் தடுப்பு மையங்களுக்கு அனுப்பப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மீதமுள்ள எட்டு சந்தேக நபர்களும் நேற்று பிலேஸ்ச நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர், அதன் பின் இரண்டு சந்தேக நபர்கள் ஏப்ரல் 29 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

மீதமுள்ள ஆறு சந்தேக நபர்கள் வயது குறைந்தவர்கள் என்பதால், அவர்களை சிறார் தடுப்பு மையங்களுக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது.

எட்டு சந்தேக நபர்களும் ஏப்ரல் 29 ஆம் திகதி அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்பட உள்ளனர். மாவத்கம பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தலைக்கவசத்தால் தாக்கப்பட்ட மாணவன் மரணம்
Posted in இலங்கை செய்திகள்

தலைக்கவசத்தால் தாக்கப்பட்ட மாணவன் மரணம்

தலைக்கவசத்தால் தாக்கப்பட்ட மாணவன் மரணம்

தலைக்கவசத்தால் தாக்கப்பட்ட மாணவன் மரணம் ரிதீகம – வெலெகெதர – ஷகரலிய வத்த பகுதியில் பாடசாலை உயர் வகுப்பு மாணவர்களால் தாக்குதலுக்கு இலக்காகி, குருணாகல் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மாணவன் ஒருவன் நேற்று உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர், குருணாகலை – புலுவல மகா வித்தியாலயத்தில் 11ஆம் தரத்தில் கல்வி கற்ற திலிண விராஜ் ஆவார்.

கடந்த 16ஆம் திகதி, ரிதீகம – வெலெகெதர – அங்ஹந்திய பகுதியில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வில் பங்கேற்பதற்காக, குறித்த மாணவன் சென்றிருந்தான்.

இதன்போது, அதே பாடசாலையில் சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் குழுவொன்றும், மற்றொரு வெளியாட்கள் குழுவும், தனிப்பட்ட பகைமையை காரணமாக அவனைத் தாக்கியுள்ளனர்.

இதன்போது, தலைக்கவசங்களால் மாணவனின் தலையில் தாக்கப்பட்டதால், அவர் மயக்கமடைந்து, முதலில் மாவத்தகம முதன்மை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக குருணாகலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

எனினும், குருணாகலை வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மாணவன் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தெரியவந்ததும், வெளிநாட்டில் இருந்த திலிணவின் தாய் தற்போது வீட்டிற்கு திரும்பியுள்ளார்.

மாணவனைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதல் நடத்திய அனைத்து சந்தேக நபர்களையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, குருணாகலை – வெலெகெதர பொலிஸ் நிலையத்தின் முன்பாக ஷகரலிய தோட்ட பகுதி மக்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தனர்

மாணவன் குத்திக் கொலை லண்டனில்
Posted in உலக செய்திகள்

மாணவன் குத்திக் கொலை லண்டனில்

மாணவன் குத்திக் கொலை லண்டனில்

மாணவன் குத்திக் கொலை லண்டனில் ,லண்டனில் ப்ளூடூத் பகுதியில் 14 வயது பாடசாலை மாணவன் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாடசாலை முடிந்து வீடு நோக்கி செல்ல பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த பொழுது அதில் பயணித்த சக மாணவர்களினால் இவர் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இரு மாணவர் குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற முரண்பாடு காரணமாகவே இந்த கத்தி குத்து தாக்குதல் சம்பவம் இடம்பெற்று இருக்கக்கூடும் என்ற சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

வீடியோ

குறித்த மாணவனை பறி கொடுத்த பெற்றோர் மற்றும் நண்பர்கள் பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

இந்த வருடத்தில் இடம்பெற்ற முதலாவது மாணவ படுகொலையாக இது காணப்படுகிறது.

குறித்த படுகொலையானது பயத்தையும் பீதியையும் பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் ஏற்படுத்தி உள்ளதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவங்கள் தடுத்து நிறுத்த படாவிட்டால் பாடசாலை பாதுகாப்பு பதிலே காணப்படும் என பெற்றோர்கள் கவலை வெளியிட்டு இருக்கின்றனர்.

மாணவன் மீதான தாக்குதல்
Posted in இலங்கை செய்திகள்

மாணவன் மீதான தாக்குதல்

மாணவன் மீதான தாக்குதல்

மாணவன் மீதான தாக்குதல் ,மோட்டார் சைக்கிளை நிறுத்தாத காரணத்தினால் 16 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரை களுத்துறை – பயாகல பொலிஸ் போக்குவரத்து பிரிவின் அதிகாரிகள் குழுவினால்

கொடூரமாக தாக்கிய சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

குறித்த மாணவன் கடந்த 7ஆம் திகதி தனது தந்தையின் மோட்டார் சைக்கிளில் அருகில் உள்ள கடையொன்றுக்கு சென்றுள்ளதாகவும் பின்னர் அமர்ந்து சென்ற அவரது நண்பர் தலைக்கவசம் அணியவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது பயாகல பொலிஸ் போக்குவரத்து பிரிவின் நடமாடும் அதிகாரிகள் இருவர் அவர்களை துரத்திச் சென்று மோட்டார் சைக்கிளை நிறுத்தி அவர்களை திட்டியுள்ளனர்.

அப்போது பாடசாலை மாணவன் மோட்டார் சைக்கிளை மீண்டும் இயக்கி அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றுள்ளார்.

அவர்களை துரத்திச் சென்ற பொலிஸ் அதிகாரிகள் மோட்டார் சைக்கிளில் பின்னால் சென்ற மாணவனை கன்னத்தில் அரைந்துள்ளதுடன், மோட்டார் சைக்கிளை செலுத்திய மாணவனையும் சரமாரியாக தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதலுக்கு உள்ளான பாடசாலை மாணவர் சிகிச்சைக்காக களுத்துறை நாகொடை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பயாகல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு

அறிவிக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.

குளத்தில் மூழ்கிய மாணவன்
Posted in இலங்கை செய்திகள்

குளத்தில் மூழ்கிய மாணவன்

குளத்தில் மூழ்கிய மாணவன்

இரணைமடு குளத்தில் மூழ்கிய மாணவன் ,கிளிநொச்சி இரணைமடு நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற பாடசாலை மாணவன் ஒருவன் நீரில் மூழ்கி பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சகோதரர்கள் மற்றும் நண்பர்களுடன் இணைந்து , குளத்தில் நீராட சென்ற இந்த மாணவனே திடீரென நீரில் மூழ்கி காணாமல் போய் உள்ளார் .

அவ்வாறு காணாமல் போனவரை தேடி கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் கடற்படையினர் மற்றும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

சுழியோடிகள் உதவியுடன் காணாமல் போன அந்த மாணவனை தேடி கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் ,அவர்கள் களமிறங்கியிருக்கின்றனர் .

திருமுருகண்டி இந்து வித்யாலத்தில் தரம் ஒன்பதில் கல்வி கற்று வரும் 14 வயதுடைய மாணவனை இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது சகோதரர் நண்பர்களுடன் நீராட சென்ற பொழுதும் அவர்கள் தப்பித்துக் கொண்டனர் , அதே வேளை நீரில் மூழ்கிய தனது சகோதரனை காப்பாற்ற முடியாமல் அவர்கள் தத்தளித்து வந்துள்ளனர் .

குளத்தில் இவ்வாறு நீரில் மூழ்கி பலர் பல ஆண்டுகளாக பலியாகி வருகின்றனர்.

அதனுடைய ஆபத்தினை உணராமல் நீராடா செல்லுகின்றவர்களை இவ்வாறு பலியாகி வருகின்றனர் .

அடித்து பாயும் வெள்ளத்தில் நீராட சென்றதன் விளைவு ,அந்த நீரிழிவுகள் அடித்துச் செல்லப்பட காரணமாக இருந்திருக்க கூடும் என்கிற தகவல் வெளியாகியுள்ளது .

காணாமல் போன மாணவனுடைய சடலத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கையில், உதவியுடன் தேடுதல் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

15 வயது மாணவன் உயிரிழப்பு
Posted in இலங்கை செய்திகள்

15 வயது மாணவன் உயிரிழப்பு

15 வயது மாணவன் உயிரிழப்பு

15 வயது மாணவன் உயிரிழப்பு ஹம்பாந்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிப்பிக்குளம பகுதியில் நேற்று மாலை (05) பாடசாலை மாணவர் ஒருவர், மற்றுமொரு பாடசாலை மாணவரை தாக்கியுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.

தாக்குதலுக்கு உள்ளாகி ஹம்பாந்தோட்டை வைத்தியசாலை யில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த

மாணவன் உயிரிழந்தமை தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹம்பாந்தோட்டை, பெத்தேவெல பகுதியில் வசிக்கும் 15 வயதுடைய பாடசாலை மாணவனே உயிரிழந்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை நகரிலுள்ள பாடசாலை

ஹம்பாந்தோட்டை நகரிலுள்ள பாடசாலையொன்றில் 10ஆம் தரத்தில் கல்வி கற்கும் இவர், நேற்று மேலதிக வகுப்பில் கலந்துகொள்வதற்காக சிப்பிக்குளம பகுதிக்கு சென்றுள்ளார்.

இதன்போது ஹம்பாந்தோட்டையில் உள்ள மற்றுமொரு பாடசாலை யைச் சேர்ந்த மாணவர் ஒருவர் குறித்த மேலதிக வகுப்புக்கு அருகில் சென்று 10ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவனை தாக்கியுள்ளார்.

இரு மாணவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட தகராறே மோதலுக்குக் காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், மாணவனின் மரணம் தொடர்பில் 17 வயதுடைய பாடசாலை மாணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Featured

Loading...
காணாமல் போன மாணவன்
Posted in இலங்கை செய்திகள்

காணாமல் போன மாணவன்

காணாமல் போன மாணவன்

மதுரங்குளி பகுதியில் இருந்து கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் வீட்டிலிருந்து காணாமல் போன 12 வயது மாணவன் கதிர்காமம், 20 ஏக்கர் –

டோசர்வெவ கௌதம சதகம் அரன விகாரையில் தங்கிருந்த நிலையில் 22 ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளார் என மதுரங்குளி பொலிஸார் தெரிவித்தனர்.

மதுரங்குளி முன்மாதிரி பாடசாலை

மதுரங்குளி முன்மாதிரி பாடசாலையில் தரம் 7 இல் கல்வி கற்கும் நெதுசர பிரியனந்த எனும் மாணவன் கடந்த 18 ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்தார்.

குறித்த மாணவனின் தாய் தொழில் நிமித்தம் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில், மாணவன் பாட்டி வீட்டில் வசித்து வந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் தனது பாட்டியோடு முரண்பட்ட நிலையில், 18 ஆம் திகதி யாருக்கும் சொல்லாமல் வீட்டில் இருந்து வெளியேறிய மாணவன் இன்னமும்

வீடு திரும்பவில்லை என உறவினர்கள் மதுரங்குளி பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர்.

இந்த நிலையில், குறித்த மாணவன் புத்தளம் – மதுரங்குளியில் இருந்து கொழும்புக்கு சென்றுள்ளதாகவும், பின் அந்த மாணவனின் விருப்பத்தின் படி

கதிர்காமம், 20 ஏக்கர் – டோசர்வெவ கௌதம சதகம் அரன விகாரையில் ஒப்படைக்கப்பட்டதாகவும் தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பௌத்த பிக்குவாக துறவறம் பூண்டுள்ளார்

இவ்வாறு பௌத்த விகாரையில் ஒப்படைக்கப்பட்ட, குறித்த மாணவனின் விருப்பத்திற்கிணங்க கடந்த 20 ஆம் திகதி “மதுரங்குளி சுபோதி” எனும்

பெயரில் பௌத்த பிக்குவாக துறவறம் பூண்டுள்ளார் என கௌதம சதகம் அரன விகாரையின் விகாராதிபதி கலன்பிந்துனுவெவ அனுருத்த மைத்திரி தேரர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட குறித்த மாணவன், கௌதம சதகம் அரன விகாரையில் இருப்பதாக மதுரங்குளி பொலிஸாருக்கு

தகவல் வழங்கப்பட்டதுடன், அந்த மாணவனை அழைத்துவர நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும், பௌத்த துறவியாகுவதே தனது விருப்பம் எனவும், தான் விகாரையை விட்டு வேறு எங்கும் செல்லப் போவதில்லை என மதுரங்குளி சுபோதி” எனும் பெயரில் பௌத்த பிக்குவாக துறவறம் பூண்டுள்ள அந்த மாணவன் தெரிவித்துள்ளார் எனக் கூறப்படுகிறது.

Featured

Loading...
மாணவன் அடித்து மாணவன் படுகொலை
Posted in இலங்கை செய்திகள்

மாணவன் அடித்து மாணவன் பலி

மாணவன் அடித்து மாணவன் பலி

மாணவன் அடித்து மாணவன் பலி ,இந்த படுகொலை ,கிரிக்கெட் திடல் தொடர்பில் பாடசாலை மாணவர்கள் இருவருக்கு இ​டையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், மாணவர் ஒருவர் கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என்றக் குற்றச்சாட்டின் கீழ் மற்றுமொரு மாணவனை நாவலப்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நாவலப்பிட்டி மொன்டி கிறிஸ்டோ தோட்டத்தின் கீழ் பகுதியைச் சேர்ந்த ஸ்டேன்லி ஸ்டெப்பில் (வயது 13) என்ற பாடசாலை மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இரு மாணவர்களும் பாடசாலை நண்பர்கள் எனவும், இருவரும் கடந்த 23ஆம் திகதி தோட்டத்தில் கிரிக்கெட் விளையாடச் சென்ற போது, ​​கிரிக்கெட் திடல் தொடர்பில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியுள்ளது. இதில், மற்றைய மாணவர் கிரிக்கெட் மட்டையால் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதில் பலத்த காயமடைந்த மாணவன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மாணவன், திங்கட்கிழமை (29) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த செய்தி மிக பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் ,மக்கள் கொதிப்பில் உறைந்துள்ளனர்

Featured

Loading...
கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு
Posted in இலங்கை செய்திகள்

நீரில் மூழ்கி மாணவன் பலி

நீரில் மூழ்கி மாணவன் பலி

நாரம்மல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மெட்டியகனே மஹாவெவ பிரதேசத்தில் நீராடச் சென்ற பாடசாலை மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் மாரவிட, தம்பதெனிய பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

நேற்று (02) காலை 03 பாடசாலை மாணவர்கள் மெட்டியகனே மஹாவெவவில் நீராடச் சென்ற வேளையில் அவர்களில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்தார்.

நீரில் மூழ்கி மாணவன் பலி

பின்னர், மாணவர்களும் பிரதேசவாசிகளும் நீரில் மூழ்கிய மாணவனைக் மீட்டு தம்பதெனிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

எனினும் ஏற்கனவே மாணவர் உயிரிழந்துள்ளதை வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நாரம்மல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யானை தாக்கி 12 வயது பாடசாலை மாணவன் பலி
Posted in இலங்கை செய்திகள்

யானை தாக்கி 12 வயது பாடசாலை மாணவன் பலி

யானை தாக்கி 12 வயது பாடசாலை மாணவன் பலி

பனாமுர பிரதேசத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் யானை தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பனாமுர காவன்திஸ்ஸ ரஜமஹா விகாரையில் இன்று நடைபெறவிருந்த பெரஹரவிற்காக அழைத்து வரப்பட்ட யானையொன்று கட்டி வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு சென்ற போதே இந்த பாடசாலை மாணவன் தாக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலில் படுகாயமடைந்த பாடசாலை மாணவர் எம்பிலிபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.

யானை தாக்கி 12 வயது பாடசாலை மாணவன் பலி

எம்பிலிபிட்டிய கல்ஹமுன பிரதேசத்தில் வசிக்கும் 12 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் யானைக்கு பொறுப்பான யானை பாகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பனாமுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பருத்தித்துறையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

பல்கலைக்கழகத்தில் மாணவன் சடலமாக மீட்பு

பல்கலைக்கழகத்தில் மாணவன் சடலமாக மீட்பு

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மஹரகம, கட்டுவல பிரதேசத்தில் பல்கலைக்கழகத்தினால் நடத்தப்படும் மாணவர் விடுதியின் கீழ் தளத்தில் அவர் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்த விடுதியில் ஏறக்குறைய 64 மாணவர்கள் தங்கி இருப்பது தெரியவந்துள்ளது.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை பகுதியை சேர்ந்த 23 வயதான மாணவா் ஒருவரே இவ்வாறு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, மாணவனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து, உயிரிழந்த மாணவனின் உறவினர்கள் நீதவான் விசாரணையை கோரியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மஹரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

No posts found.
Posted in இலங்கை செய்திகள்

மாணவனை நான்கு வருடங்களாக கற்பழித்த டீச்சர்

மாணவனை நான்கு வருடங்களாக கற்பழித்த டீச்சர்

இலங்கை கொழும்பு பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் பணியாற்றிய டீச்சர் ஒருவர்


16 வயது மாணவனை கடந்த நான்கு வருடங்களாக கற்பழித்து வந்துள்ளார்


குறித்த மாணவனுடன் அறுபதுக்கு மேற்பட்ட தடவை கொட்டல்கள்களில் தங்கி உல்லாசத்தை அனுபவித்து வந்துள்ளார்

மேலும் பாடசாலையின் கணனி அறையிலும் பாலியல் வல்லுறவில் ஈடுபட்டுள்ளார்


மேற்படி சம்பவம் தற்போது அம்பலமான நிலையில் அவர் கைது செய்ய பட்டு நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளார்

பல நாள் திருட்டு ஒரு நாள் சிக்கும் என்பது இதைத்தான் போலும்

    Posted in இலங்கை செய்திகள்

    யாழில் தூக்கில் தொங்கிய நிலையில் மாணவன் சடலமாக மீட்பு – நடப்பது என்ன ..?

    யாழில் தூக்கில் தொங்கிய நிலையில் மாணவன் சடலமாக மீட்பு – நடப்பது என்ன ..?

    யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் உள்ளள பாடசாலை ஒன்றின்

    மாணவர் ஒருவர் காரைநகரில் தாயின் தயார் வீட்டில் தூக்கில்

    தொங்கிய நிலையில் சடலமாக

    மீட்க பட்டுள்ளார் இவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்தாரா அல்லது

    கொலை செய்து தூக்கில் தொங்க விடப்பட்டாரா என்ற சந்தேகம் வலுப்பெற்றுள்ளது

    இதுவரை யாழ்ப்பாணத்தில் கடந்த மூன்று வாரத்திற்குள்ளாக 24 பேர்

    இவ்விதம் மர்மமான முறையில் இறந்துள்ளமை குறிப்பிட தக்கது

        Posted in இலங்கை செய்திகள்

        யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை

        யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை

        யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் மருத்துவ பீடத்தில் கல்வி கற்ற மாணவன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக யாழ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

        குறித்த மாணவன் கடந்த சில நாட்களுக்கு முன்னதாகவே இவ்வாறு தற்கொலை செய்துக் கொண்ட போதிலும் அவரின் சடலம் நேற்று (03) கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

        யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் அந்த மாணவன் தங்கியிருந்த அறையில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அதனை பரிட்சித்த வீட்டார் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டமையை அறிந்துள்ளனர்.

        யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் மருத்துவ பீடத்தில் 4 ஆம் ஆண்டில் கல்விக் கற்ற இந்த மாணவன் மன்னார் பள்ளிமுனையை சேர்ந்தவராவார்.

        நியூமன் என்ற 26 வயதான மாணவனே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.