கார் தீப்பிடித்து எரிந்ததில் ஆறு இளைஞர்கள் பலி
Posted in உலக செய்திகள்

கார் தீப்பிடித்து எரிந்ததில் ஆறு இளைஞர்கள் பலி

கார் தீப்பிடித்து எரிந்ததில் ஆறு இளைஞர்கள் பலி

கார் தீப்பிடித்து எரிந்ததில் ஆறு இளைஞர்கள் பலி ,மத்திய லிஸ்பனில் நடந்த கார் விபத்தில் 18 முதல் 20 வயதுக்குட்பட்ட ஆறு பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்க தூதரகத்திற்கு வெகு தொலைவில்

அமெரிக்க தூதரகத்திற்கு வெகு தொலைவில் இல்லாத அவெனிடா டாஸ் ஃபோர்காஸ் அர்மடாஸில் அதிகாலை 3:40 மணியளவில் இந்த மோதல் நிகழ்ந்தது.

பாதிக்கப்பட்ட ஆறு பேரும் ஐந்து இருக்கைகள் கொண்ட வாகனத்தில் ஏற்றப்பட்டிருந்ததாகவும், பின்னால் நான்கு பேர் அமர்ந்திருந்ததாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.

சம்பவ இடத்திலிருந்து படங்கள் BMW காரின் கருகிய ஷெல்லையும், தீயணைப்பு வீரர்கள் உள்ளே சிக்கியவர்களை அடையும் பணியில் ஈடுபட்டபோது அதன் கூரை அகற்றப்பட்டதையும் காட்டியது.

போர்த்துகீசிய ஊடகங்களின் ஆரம்ப அறிக்கைகள், 19 வயது ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழப்பதற்கு சில நிமிடங்கள் முன்பு “கவனச்சிதறல்” அடைந்திருக்கலாம் என்றும், குறைந்தது ஒரு பயணியாவது சீட் பெல்ட் அணியவில்லை என்றும் தெரிவிக்கின்றன.

பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டனர்
ஆறு பேரும் அங்கோலாவைச் சேர்ந்தவர்கள் என்பதை அதிகாரிகள் பின்னர் உறுதிப்படுத்தினர்.

இந்த சோகம் லிஸ்பனின் அங்கோலா சமூகம் முழுவதும் எதிரொலித்தது, மேலும் போர்ச்சுகலுக்கான நாட்டின் தூதரிடமிருந்து அதிகாரப்பூர்வ அறிக்கையைத் தூண்டியது.

தூதர் மரியா டி ஜீசஸ் ஃபெரீரா ஒரு இரங்கல் கடிதத்தில், பாதிக்கப்பட்டவர்களை “பிரகாசமான எதிர்காலம் கொண்ட இளைஞர்கள்” என்று விவரித்தார்.

நீரில்மூழ்கி இரு இளைஞர்கள் மாயம்
Posted in இலங்கை செய்திகள்

நீரில்மூழ்கி இரு இளைஞர்கள் மாயம்

நீரில்மூழ்கி இரு இளைஞர்கள் மாயம்

நீரில்மூழ்கி இரு இளைஞர்கள் மாயம் நாட்டின் இருவேறு பகுதிகளில் நீரில் மூழ்கி இரு இளைஞர்கள் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாவுல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட போவதென்ன

நாவுல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட போவதென்ன நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற பிபில, வனமெதகம பகுதியைச் சேர்ந்த 27 வயதான இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

நாவுல பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், ​​நேற்று (20) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த இளைஞர் மேலும் இருவருடன் போவதென்ன நீர்த்தேக்கத்தில் நீராடிக் கொண்டிருந்த போது அந்த அனர்த்தம் இடம்பெற்றதாக நாவுல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடற்கரையில் நேற்று

இதற்கிடையில், அஹங்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அஹங்கம கடற்கரையில் நேற்று (20) நீராடச் சென்ற இளைஞர் ஒருவரும் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

காணாமல் போனவர் வத்தளையைச் சேர்ந்த 24 வயதான இளைஞர் என தெரியவந்துள்ளது.

கடற்படை அதிகாரிகளின் உதவியுடன் நாவுல பொலிஸாரும் அஹங்கம பொலிஸாரும் காணாமல் போன இளைஞர்களைத் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

வியாழேந்திரன் கைது பட்டாசு கொளுத்திய இளைஞர்கள்
Posted in இலங்கை செய்திகள்

வியாழேந்திரன் கைது பட்டாசு கொளுத்திய இளைஞர்கள்

வியாழேந்திரன் கைது பட்டாசு கொளுத்திய இளைஞர்கள்

வியாழேந்திரன் கைது பட்டாசு கொளுத்திய இளைஞர்கள் ,முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் கைது செய்யப்பட்ட நிலையில், இளைஞர்கள் சிலர் பட்டாசு கொளுத்தி கொண்டாடியுள்ளனர்.

மட்டக்களப்பு நகர் மணிக்கூட்டு கோபுரத்து வீதி சுற்றுவட்டத்தில் நேற்று இரவு பட்டாசு கொளுத்தி கொண்டாடினர்.

மணல் அகழ்வு உரிமம் வழங்குவதற்காக 1.5 மில்லியன் ரூபாய் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை

புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு அதிகாரிகளால் எஸ்.வியாழேந்திரன் நேற்று கைது செய்யப்பட்டு ஏப்ரல் மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நீரில் மூழ்கி இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்
Posted in இலங்கை செய்திகள்

நீரில் மூழ்கி இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்

நீரில் மூழ்கி இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்

நீரில் மூழ்கி இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர் ,கஹட்டகஸ்திகிலிய பிரதேசத்தில் நீரில் மூழ்கி இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்

24 மற்றும் 34 வயதுடைய இரு இளைஞர்கள், கஹட்டகஸ்திகிலிய, இஹல கன்ஹிடிகம ஏரியில் குளித்த போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் பொல்கஹவெல மற்றும் புஜாபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்.

நேற்று (20) மாலை மேலும் இருவருடன் மது அருந்திவிட்டு ‘இஹல கன்ஹிடிகம’ ஏரியில் குளிப்பதற்குச் சென்ற இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக கஹட்டகஸ்திகிலிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை கஹட்டகஸ்திகிலிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இளைஞர்கள் இருவர் படுகொலை
Posted in இலங்கை செய்திகள்

இளைஞர்கள் இருவர் படுகொலை

இளைஞர்கள் இருவர் படுகொலை

இளைஞர்கள் இருவர் படுகொலை ,இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் சிலர் காயமடைந்துள்ளதுடன் ஒருவர் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் நேற்று (02) பரசன்கஸ்வெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பயிரிக்குளம் பகுதியில் பதிவாகியுள்ளது.

அநுராதபுரம், தன்னாயன்குளம் பகுதியை சேர்ந்த 30 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் மிஹிந்து மாவத்தை, பரசன்கஸ்வெவ பகுதியில் உள்ள தனது நண்பரின் வீட்டில் தங்கியிருந்த போது, ​​நண்பருடன் கருத்து வேறுபாட்டில் இருந்த சிலர் அவரது வீட்டிற்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது, இரு குழுக்களும் கூரிய ஆயுதங்களால் தாக்கிக் கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோதலில் காயமடைந்த இரு தரப்பையும் சேர்ந்த நான்கு பேர் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த இருவரை பொலிசார் கைது செய்துள்ள நிலையில், அவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பரசன்கஸ்வெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, ரத்கம, சிறிகந்துரவத்த பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் காயமடைந்த நபர் ஆராச்சிகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இந்த கொலை சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ரலஜயபுர சிறிகந்துரவத்த பிரதேசத்தில் வசித்து வந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மர்மமான முறையில் உயிரிழந்த இருஇளைஞர்கள்
Posted in இலங்கை செய்திகள்

மர்மமான முறையில் உயிரிழந்த இருஇளைஞர்கள்

மர்மமான முறையில் உயிரிழந்த இருஇளைஞர்கள்

மர்மமான முறையில் உயிரிழந்த இருஇளைஞர்கள் ,தொம்பே, மல்வான மாயிவல பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த இருவரின் சடலங்கள் வயல் ஒன்றில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்கள் 18 மற்றும் 29 வயதுடைய ரம்பொட, நாவலதென்னவத்தை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வயல்வெளியில் இரண்டு சடலங்கள்

தொம்பே, மல்வான மாயிவல பிரதேசத்தில் வயல்வெளியில் இரண்டு சடலங்கள் மிதப்பதாக 119 மற்றும் 118 அவசர அழைப்பு பிரிவுக்கு கிடைத்த

முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்கள் இருவரும் கடந்த 22ம் திகதி தாம் தங்கியிருந்த விடுதியில் இருந்து வௌிறேயி மீண்டும் திரும்பாததால், விடுதியில் தங்கியிருந்த ஒருவர் பொலிஸில் முறைப்பாடு அளித்துள்ளார்.

மர்ம மரணங்கள்

இலங்கை திரு நாட்டில் இடம்பெறு இவ்விதமான மர்ம மரணங்கள் தொடர்பில் மக்களுக்கு பெரும் பீதியை ஏற்படுத்திய வண்ணம் உள்ளது .

ஆளும் அரசும் அதன் காவல்துறையினாலும் ஏன் இந்த மர்ம மனித படுகொலைகளை தடுக்க இயலவில்லை என்ற கேள்வி எழுப்ப படுகிறது .

வரலாற்று சாதனையாக பல ஆண்டுகளாக இவ்விதமான மர்ம படுகொலைகள் ,இடம் பெற்ற வண்னம் உள்ளது .

இவை ஆளும் அரசுகள் மீதான சந்தேகத்தை ஏற்படுத்தி வருவதாக மக்கள் விசனம் தெரிவித்து வருகின்றனர் .

யாழில் வாலிபன் மீது இராணுவம் தாக்குதல்
Posted in இலங்கை செய்திகள்

யாழில் இராணுவத்தினருடன் தகராறில் ஈடுபட்ட இளைஞர்கள்

யாழில் இராணுவத்தினருடன் தகராறில் ஈடுபட்ட இளைஞர்கள்

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் – நீர்வேலி பகுதியில், துவிச்சக்கர வண்டியில் ரோந்து நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டிருந்த வேளை, மது போதையில் மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்கள், இராணுவத்தினரை

அச்சுறுத்தும் வகையில் மோட்டார் சைக்கிளை செலுத்தி, இராணுவத்தினரை தகாத வார்த்தைகளால் பேசி அவர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்துள்ளனர்.

அது தொடர்பில் இராணுவத்தினரால் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் ,

கோப்பாய் மற்றும் நீர்வேலி பகுதிகளை சேர்ந்த இரு இளைஞர்களையும் கைது
செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

No posts found.