இஸ்ரேல் முகாம்கள் தாக்குதல்
இஸ்ரேல் முகாம்கள் தாக்குதல்
இஸ்ரேல் முகாம்கள் தாக்குதல் இஸ்ரேல் படைகளுக்கு பாரிய இழப்பு .
இஸ்ரேலியா இராணுவத்தின் வடக்கு எல்லைகளை இலக்கு வைத்து மிக பெரும் தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
பாலஸ்தீனம் இஸ்ரேலுக்கு இடையில் போர்
பாலஸ்தீனம் இஸ்ரேலுக்கு இடையில் போர் ஆரம்பிக்க பட்ட நாள் முதல் ,இஸ்ரேல் இராணுவத்தின் வடக்கு எல்லை ராணுவ நிலைகள் கடும் சேதங்களை உள்ளாகி வருகின்றன .
காசா மக்கள் மீதான இனஅழிப்பு தாக்குதலை இஸ்ரேல் இராணுவம் அரம்பைத்த நாள் முதல் ,இஸ்ரேல் இராணுவ முகாம்கள் மீதான தாக்குதல்களை ,பல்ஸினம் காசா போராளிகள் நடத்திய வண்ணம் உள்ளன .
நமக்கு ஒருங்கிணைக்க பட்ட தாக்குதல்களை தெற்கு லெபனான் ஹிஸ்புல்லா போர் படைகள் ,மற்றும் காசா ஹமாஸ் போராளிகள் ஆகியோர் சிறப்பாக நடத்திய வண்ணம் உள்ளனர் .
இந்த இரு போராளி குழுக்கள் தாக்குதல்களினாலேயே இஸ்ரேல் முகாம்கள் பலமாக பாதிக்க பட்டுள்ளன .
யூத இராணுவத்தின் இராணுவ முகாம்கள் உள்ளே நிறுத்தி வைக்க பட்ட பல ஏவுகணைகள் ,அதி முக்கிய ஆயுத தளபாடங்களை அழிக்க பட்டுள்ளன .
எட்டு மாதங்கள் களைந்து இஸ்ரேல் பாலஸ்தீனம் மீதான ஆக்கிரமிப்பு போரினை நடத்திய வண்ணம் உள்ளது .
அந்த பாலஸ்தீனம் காசா மக்கள் இறையாண்மையுடன் வாழும் நிலையை பெற்று கொடுக்கும் நோக்குடனேயே இஸ்ரேல் இராணுவ முகாம்கள் தொடராக தாக்கி அழிக்க பட்ட வண்ணம் உள்ளன .
அமெரிக்கா ஐரோப்பிய ஆதரவு
அமெரிக்கா ,ஐரோப்பிய நாட்டின் ஆதரவுடன் பருத்து பெருத்த இஸ்ரேலிய இராணுவம் மிக பெரும் தாக்குதலை நடத்திய வண்னம் உள்ளது .
பல பில்லியன் டொலர்களை நாள் தோறும் செலவு செய்து ,போரை நடத்தி வருகிறார் ,ஆளும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு .
இந்த போரில் வெற்றி பெற முடியாத இருவராக இஸ்ரேல் பிரதம நெதன்யாகு காணப்படுகின்றார் .
போரை நிறுத்தினால் ஆட்சி கவிழ்க்க ,படும் அவ்வாறான ஆபத்தான மரண பொறிக்குள் சிக்கி இருக்கும் நெதன்யாகுவின் ஆட்சி ,இந்த போருடன் முற்று பெற போகிறதுஎன்பதை இந்த விடயம் தெளிவாக எடுத்து காட்டியுள்ளது .
இலங்கையில் நடந்த ஆட்சி கவிழ்ப்பு போன்ற ஒன்று ,இஸ்ரேலிலும் இடம்பெற போவதை இப்பொழுதே அடித்து கூறலாம் .
6குடும்பங்களை சேர்ந்த 35பேர் பாதிப்பு
6குடும்பங்களை சேர்ந்த 35பேர் பாதிப்பு
6குடும்பங்களை சேர்ந்த 35பேர் பாதிப்பு ,பொகவந்தலாவ பொலிஸ்பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ கெம்பியன் 57 பிரிவிலும்
கெம்பியன் கீழ் பிரிவிலும் நேற்று (22) இரவு பெய்த கடும் காற்றுடன் கூடிய வானிலையால் ஆறு வீடுகள் பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
இதில் குடியிருப்புகளில் உள்ள கூறைதகடுகள் வீசிய பலத்த காற்றுக்கு அள்ளுண்டு சென்றுள்ளது இதனால் ஆறு குடும்பங்களை சேர்ந்த 35 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு வீடுகளில் இருந்த சில பொருட்கள் சேதமடைந்துள்ளது.
வீடுகளை சீர் செய்யும் நடவடிக்கை
பாதிக்கப்பட்ட குடும்பங்களை பிரதேசத்திற்கு பொருப்பான கிராம உத்தியோத்தர் மற்றும் தோட்ட முகாமைத்துவம் இனைந்து பாதிக்கப்பட்ட வீடுகளை சீர் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவளை நேற்று இரவு வீசிய பலத்த காற்றின் காரணமாக பொகவந்தலாவ மற்றும் இராணிகாடு வரையிலான பிரதான வீதிகளின் அருகாமையில் உள்ள
மரங்கள் சரிந்து விழுந்துள்ளமையினால் பொகவந்தலாவ பிரதேசத்திற்கான மின்சாரம் முழுமையாக தடைப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் காசல்ரீ நீர் தேக்கத்திற்கு நீர் ஏந்தி செல்லும் கேசல்கமுவ ஒயாவின் நீர் மட்டம் அதிகரித்துள்ளமையால் கேசல்கமுவ ஒயாவின்
அன்மையில் உள்ள குடியிருப்பாளர்களை அவமானமாக இருக்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.
தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளம்
தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளம்
தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளம் ,தோட்டத் தொழிலாளர்களுக்கான நாள் சம்பள அதிகரிப்பை அரசு அறிவித்திருப்பினும், ஒருசில தோட்டக் கம்பனிகள் குறித்த சம்பள அதிகரிப்பை வழங்க முடியாதென அரசுக்கு
முன்மொழிவுகளைச் சமர்ப்பித்துள்ளன. குறித்த நிலைமையைக் கருத்தில் கொண்டு கீழ்க்காணும் படிமுறைகளை மேற்கொள்வதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
- நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் அவர்களால் சமகால வாழ்க்கைச் செலவு மற்றும் அண்மையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளின் விளைவுகளைக் கருத்தில் கொண்டு தோட்டத் தொழிலாளர் ஒருவருக்குச் செலுத்த வேண்டிய குறைந்தபட்ச சம்பளத்தை மதிப்பீடு செய்தல்.
- அவ்வாறு மதிப்பீடு செய்யப்படும் சம்பளத்தைச் செலுத்துவது தொடர்பாக ஒவ்வொரு தோட்டக் கம்பனிகளிடம் காணப்படுகின்ற இயலுமைகளை பரிசீலிப்பதற்குக் குழுவொன்றை நியமித்தல்
- அத்துடன், ஏதேனுமொரு தோட்டக் கம்பனி முறைகேடான முகாமைத்துவத்தால் சம்பளம் செலுத்துவதற்கு தவறினால், அவ்வாறான தோட்டக் கம்பனிகளுடனான காணிக் குத்தகை ஒப்பந்தத்தை இரத்துச் செய்வதற்கு இயலுமாகும் வகையில் சட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கான படிமுறைகளை மேற்கொள்ளல்.
- வீடியோ
இஸ்ரேல் விமானம் சுட்டு வீழ்த்தல்
இஸ்ரேல் விமானம் சுட்டு வீழ்த்தல்
இஸ்ரேல் விமானம் சுட்டு வீழ்த்தல் ,என பாலஸ்தீனம் ஹமாஸ் போராளிகள் அறிவித்துள்ளனர் .
பாலஸ்தீனம் காசா மேற்குக்கரை பகுதி ஊடாக பறந்து கொண்டிருந்த ,ஆள் இல்லாத உளவு விமானம் ஒன்றே சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக அறிவிக்க பட்டுள்ளது .
பாலஸ்தீனம் இஸ்ரேல் போர்
பாலஸ்தீனதிற்கும் இஸ்ரேலுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற இந்த போரின் பின்னர் 12 இஸ்ரேலிய விமானங்கள் ஹமாஸ் போர் படைகளினால் வெற்றிகரமாக வீழ்த்த பட்டுள்ளன .
இடைவிடாது தொடரும் இஸ்ரேல் ஹமாஸ் இடையிலான போர் தீவிர பெற்று செல்லும் நிலையில் ,பாலஸ்தீன காசா மக்கள் அகதிகளாக ஓடிய வண்ணம் உள்ளனர் .
காசா மக்களுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா
காசா மக்களுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா போர் படைகளும் கடும் தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளனர் .
இதேவேளை ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் கானியா , ஈரான் மத தலைவருடன் திடீர் சந்திப்பை மேற்கொண்டார் .
இந்த திடீர் பேச்சின் பொழுது பல முக்கிய விடயங்கள் பேச பட்டுள்ளன .
எதிர்காலத்தில் இஸ்ரேல் ,பாலஸ்தீனம் இடையில் இடம்பெற உள்ள போர் மற்றும் அதனால் எழப்போகும் விளைவுகள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளன .
விபத்தில் பலியான ஈரான் ஜனாதிபதி
ஈரான் ஜனாதிபதி ரைசி பயணித்த உலங்கு வானூர்தி விபத்தில் சிக்கி வீழ்ந்து நொறுங்கி பலியானார் .
அவ்வாறான அந்த விபத்தில் பலியான ஈரான் ஜனாதிபதியின் இறுதி மாறின நிகழ்வில் கலந்து கொள்ள ஹமாஸ் அரசியல் தலைவர் ஈரான் சென்றிருந்தார் .
இதன் பொழுதே ஈரான் மத தலைவரை சந்தித்து பேச்சில் ஈடுபட்டார் .
மிக முக்கியமான தகவலுடன் களம் திரும்பிய இஸ்மாயில் கணைய ஹமாஸ் இராணுவ தலைமைகளுக்கு முக்கிய விடயத்தை தெரிய படுத்தியுள்ளார் .
இஸ்ரேலுக்கு எதிரான யுத்தம்
இந்த அறிவிப்பின் பின்புலத்தில் ,இஸ்ரேலுக்கு எதிரான யுத்தம் மற்றும் அதன் விடயங்கள் பாரதூரமான ஒன்றாக அமைய பெறலாம் என கணிக்க பெறுகிறது .
ஹமாஸ் போர்
இந்த சந்திப்பு இடம்பெற்ற கால பகுதியில் ,ஹமாஸ் போர் படைகள் நாடத்திய தாக்குதலில் இஸ்ரேல் இராணுவத்தின் 12 டாங்கிகளுக்கு மேல் அழிக்க பட்டுள்ள காட்சிகள் வெளியாகிள்ளது குறிப்பிட தக்கது .
அங்கீகாரம் பெறும் பாலஸ்தீன நாடு
அங்கீகாரம் பெறும் பாலஸ்தீன நாடு
அங்கீகாரம் பெறும் பாலஸ்தீன நாடு கடுப்பாகும் இஸ்ரேல்.
இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையில் நீண்டு செல்லும் போரினை அடுத்தும் ,மக்களின் உயிரிழப்பை கருத்தில் கொண்டு ,பாலஸ்தீனம் தனி நாடு என்ற நிலைக்கு தற்போது உலக நாடுகள் பயணிக்க ஆரம்பித்துள்ளன .
இஸ்ரேல் இராணுவத்தின் ஆக்கிமிரப்பு
இடைவிடாத இஸ்ரேல் இராணுவத்தின் ஆக்கிமிரப்பும் ,அழித்தொழிப்பும் ,மக்கள் பட்டினி வதை கடத்தல் ,படு கொலை என்பன பெரும் நெருக்கடியை சர்வதேச அரங்கிற்கு ஏற்படுத்தியுள்ளன .
அதனை அடுத்தே பாலஸ்தீன தனி நாட்டை அங்கீகரிக்க தற்போது உலகம் தயாராகியுள்ளது .
முக்கிய ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள் விடுத்துள்ள அறிவிப்பும் , பெரும் நெருக்கடியை இஸ்ரேலுக்கு ஏற்படுத்தியுள்ளது .
இஸ்ரேல் நடத்தி வரும் கோர தாக்குதல்
வரலாற்று , சான்றுகளை மறந்து இஸ்ரேல் நடத்தி வரும் கோர தாக்குதல் சம்பவம் ,இன்று பாலஸ்தீனம் பிறிந்து செல்லும் முடிவே சரியானது என்ற நிலைக்கு உலகம் வருகை தந்துள்ள விடயம் ,வரேவர்க பட வேண்டிய விடயம் என பார்க்க படுகிறது .
அதிரடி தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா
ஏமன் விமான தளத்தை தாக்கிய அமெரிக்கா பிரிட்டன்
தமிழர்களுக்கு நீதி கிடைக்காது
தமிழர்களுக்கு நீதி கிடையாது
தமிழர்களுக்கு நீதி கிடைக்காது ,பொலிஸாரின் அராஜகமும் அடக்க முடியாத அதிகாரப்பசியும் தமிழ் மக்களின் வாழ்வியலை பறித்தெடுக்கின்றது.
இந்த நாட்டில் நீதி மரணித்து விட்டது. சட்டம் சாகடிக்கப்பட்டு விட்டது .இலங்கையின் சட்டத்தினால் தமிழர்களுக்கு ஒருபோதுமே நீதி கிடைக்காது என இலங்கை தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட எம்.பி.யான எஸ்.சிறிதரன் தெரிவித்தார்.
எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (22) எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறுத்தெரிவித்தார்.
இந்த அரசாங்கம் சட்டங்களை சரியான முறையில் நடைமுறைப்படுத்துகிறதா? சட்டங்களின் வரையறைகளை பின்பற்றுகின்றதா? நீதித்துறை சட்டங்களின் ஊடாக கொண்டுவரப்பட்ட பல்வேறு விடயங்கள் அந்த நீதித்துறை ஊடாகவே
நடைமுறைப்பபடுத்தப்படாமல் போகின்றது .கடந்த மே 17,18 ஆம் திகதிகளில் இலங்கையின் பல பாகங்களில் நடைபெற்ற விடயங்கள் தொடர்பில் இந்த நாடு ஒரு சட்டத்திற்குள்தான் இருக்கின்றதா? என்பதையும் இங்கு கேட்க விரும்புகின்றேன்.
மக்கள் கொல்லப்பட்ட 15 ஆம் ஆண்டு
மக்கள் கொல்லப்பட்ட 15 ஆம் ஆண்டு நிறைவில் அந்த முள்ளிவாய்க்கால் கஞ்சியை நினைவுபடுத்தி வடக்கு,கிழக்கு தெற்கு மக்கள் கூட இந்தக்கஞ்சியை எல்லா இடங்களிலும் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது ,
இவ்வாறு செய்கின்ற நிலையில் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலையில் உள்ள சம்பூரில் கஞ்சி காய்ச்சியதற்காக இரவில் வீடு புகுந்து பெண்களை பொலிஸார் அடாவடியாக கதறக்கதற கைது செய்து இழுத்து சென்றனர்.
கைது செய்வது எந்த நாட்டு சட்டத்திற்குள் உள்ளது. ?இலங்கை சட்டத்தில் இவ்வாறு உள்ளதா அல்லது இன்னொரு நாட்டு சட்டத்தை இலங்கை பின்பற்றுகின்றதா? என்றும் வினவினார்.
பெண் பொலிஸ் உத்தியோகத்தர்
பெண் பொலிஸ் உத்தியோகத்தர்
பெண் பொலிஸ் உத்தியோகத்தர் அவிசாவளையில் இருந்து கலிகமுவ நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியை பரிசோதிக்கும் போது பெண் பொலிஸ் உத்தியோகத்தரால் ஒருவருக்கும் சாரதி ஒருவருக்கும் இடையில் இடம்பெற்ற
சர்ச்சைக்குரிய உரையாடலின் காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ, குறித்த காணொளி தொகுக்கப்பட்டுள்ளதாக (Editing) தெரிவித்தார்.
பிந்தெனிய பொலிஸ்
பிந்தெனிய பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் பெண் பொலிஸ் உத்தியோகத்தரால் ஒருவருக்கும் முச்சக்கரவண்டி சாரதி ஒருவருக்கும் இடையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கருத்துத் தெரிவிக்கையில்,
“வாகன வருமான உத்தரவுப் பத்திரம் மற்றும் காப்பீட்டு சான்றிதழில் வெவ்வெறு பெயர்கள் இருந்துள்ளன. சாரதியாக மற்றொருவர் இருந்துள்ளார்.
வாகன வருமான உத்தரவுப் பத்திரம்
வாகன வருமான உத்தரவுப் பத்திரம் மற்றும் காப்பீட்டு சான்றிதழின் முகவரியும் வேறுபட்டுள்ளன. சாரதி வேறு பகுதியில் வசிப்பவர்.
இந்த காரணங்களால், வாகனத்தின் உரிமையை மாற்றாதது குறித்து அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்துள்ளது .
நீதிமன்ற உத்தரவின்படி ரூ. 5,000 அபராதமும் செலுத்தப்பட்டுள்ளது.” என்றார்.
சீரற்ற வானிலை மின்சாரம் துண்டிப்பு
சீரற்ற வானிலை மின்சாரம் துண்டிப்பு
சீரற்ற வானிலை மின்சாரம் துண்டிப்பு ,சீரற்ற வானிலை காரணமாக கடந்த 3 நாட்களில் 300,000க்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அமைச்சர் தனது உத்தியோகபூர்வ X கணக்கில் குறிப்பொன்றையிட்டு இதனைத் தெரிவித்துள்ளார்.
36,900 மின்சார துண்டிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
மின்விநியோகத்தை சீரமைக்க மேலதிக ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், மின்சாரம் துண்டிக்கப்பட்ட இடங்களுக்கு அடுத்த 24 மணித்தியாலங்களில் மின்சாரம் விநியோகிக்கப்படும் எனவும் அமைச்சர் தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
மின்சாரம் விநியோகம்
இதேவேளை, மின்சார பாவனையாளர்கள் 1987 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பு அல்லது குறுஞ் செய்தி அனுப்பி மின்வெட்டு தொடர்பில் அறிவிக்க முடியும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது அறிவிப்பில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பாதிக்க பட்ட ,பகுதிகளுக்கும் மின்சார தேவை உள்ள மக்களுக்கும் விரைவாக நடவடிக்கை மேற்கொள்ள பட்டு ,அவர்கள் மின்சாரம் பெறும் வழிகள் பெற்று தரப்படும் என தெரிவிக்க பட்டுள்ளது .
யாழில் வாள் வெட்டு
யாழில் வாள் வெட்டு
யாழில் வாள் வெட்டு ,யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவம் ஒன்றில் காங்கேசன்துறை பொலிஸ் பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் உத்தியோகஸ்தர் உட்பட மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தொல்புரம் பகுதியில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்திற்கு, பொலிஸ் உத்தியோகத்தர் உள்ளிட்ட இளைஞர்கள் இடையிலான மோதலே காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை
இதில் பொலிஸ் உத்தியோகத்தர் உள்ளிட்ட மூவர் காயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில், தனிப்பட்ட முரண்பாடே வாள் வெட்டு சம்பவத்திற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸ் விசாரணை
இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மகிந்த ராஜப்பா பாக்ஸர் ஆட்சியின் பின்னரே யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு சம்பவங்கள் அதிகரித்து காணப்பட ஆரம்பித்தன .
கோத்தபாயவின் நிழல் டிவிஷன் படையின் நேரடி அறிவுறுத்தலின் பிரகாரம் இந்த வாள்வெட்டு தாக்குதல் யாழ்ப்பாணத்தில் அதிகரிக்க காரணமாக விளங்கியது.
இவ்வாறான குற்ற சாட்டு மக்களினால் முன் வைக்க பட்டு வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது .
இரான் வருகிறார் புட்டீன்
இரான் வருகிறார் புட்டீன்
இரான் வருகிறார் புட்டீன் ,ஈரானுக்குள் வைத்து ரஷ்ய ஜனாதிபதி புட்டீன் படுகொலை செய்ய பட கூடிய அபாயம் காணப்படுகிறது .
தனது நாட்டுக்கு நேசக்கரம் நீட்டிய ஈரான் ஜனாதிபதியின் இறுதி நிகழ்வில் கலந்து கொள்ள ,ரஷ்யா ஜனாதிபதி ஈரான் வருகிறார் .
ஈரானுக்கு வருகை தரும் ரஷ்யா ஜனாதிபதி புட்டீன் படுகொலை செய்ய பட கூடும் என எதிர் பார்க்க படுகிறது .
ஈரான் ஜனாதிபதியின் இறுதி நிகழ்வு
இதனை அடுத்து தற்போது ஈரான் ஜனாதிபதியின் இறுதி நிகழ்வில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
இஸ்ரேல் அமெரிக்கா என்பன இணைந்து ஈரானுக்கு மிக பெரும் தாக்குதலை நடத்த கூடும் என எதிர் பார்க்க படுகிறது .
மிக்வும் ஆபத்தான அபாயகர நடவடிக்கையில் ரஷ்ய ஜனாதிபதி புட்டீன் ஈடுபட்டுள்ளதாக இந்த விடயங்கள் எடுத்து காட்டுகின்றன .
எதிரி நாடுகளின் பார்வை
அணைத்து எதிரி நாடுகளின் பார்வை ஈரான் மீதும் ,ஈரானுக்கு வருகை தரும் ரஷ்யா ஜனாதிபதி புட்டீன் மீதும் வீழ்ந்துள்ளது .
தமது வலைக்குள் ரஷ்ய ஜனாதிபத்தி புட்டீன் சிக்கி விட்டார் என்பதே எதிரிகளின் மகிழ்ச்சியாக உள்ளது .
மாணவியை கொன்ற பேரூந்து
மாணவியை கொன்ற பேரூந்து
மாணவியை கொன்ற பேரூந்து ,புதிய கருவாத்தோட்டம் பிரதேசத்தில் இன்று காலை தனியார் பேருந்து ஒன்றின் சில்லில் சிக்கி 10 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.
கருவாத்தோட்டம் பொலிஸ் பிரிவு
புதிய கருவாத்தோட்டம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடஹென்தென்ன பிரதேசத்தில் பேருந்தில் இருந்து இறங்கி குறித்த பேருந்துக்கு முன்னால் வீதியைக் கடக்கச் சென்ற போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த மாணவி, புதிய கருவாத்தோட்டம் பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை புதிய கருவாத்தோட்டம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையில் அதிகரித்து செல்லும் பேரூந்து விபத்தினால் ,மக்கள் பேருந்துகளில் பயனாகவே அச்சம் கொண்டுள்ளனர் .
சாரதிகள் பேருந்துகளை வீதி விதிமுறைகளுக்கு ஏற்ப செலுத்தி செல்லா நிலையிலேயே ,இலங்கையில் நாடு தழுவிய நிலையில் அதிக பேரூந்து விபத்துக்கள் அதிகரித்து காணப்படுகின்றன என்ற விடயம் அம்பலமாகியுள்ளது .
நிலங்களை பயிர்ச்செய்கைக்கு பயன்படுத்துவதற்கு புதிய சட்டங்கள்
நிலங்களை பயிர்ச்செய்கைக்கு பயன்படுத்துவதற்கு புதிய சட்டங்கள்
நிலங்களை பயிர்ச்செய்கைக்கு பயன்படுத்துவதற்கு புதிய சட்டங்கள் ,சமூக வலுவூட்டலுக்கு நிலம் ஒரு முக்கிய காரணியாக இருப்பதால், பயிரிடப்படாத
பயிர்ச்செய்கைக்கு நிலங்களை பயன்படுத்துவதற்கு அவசியமான புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருவதாக சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் தெரிவித்தார்.
கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை
மேலும், சமூக வலுவூட்டலுக்காக கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைக்கு திறன்விருத்தி மற்றும் தொழிற்கல்வியை உள்ளடக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் இதனைத் தெரிவித்தார்.
இராஜாங்க அமைச்சர்
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல்,
சமூக வலுவூட்டலுக்காக கல்வி முறையில் மாற்றம் வரவேண்டும். அதன்படி, கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையில் கணிதம், மதம், மொழி
போன்ற பாடங்களில் சித்திபெறாமை, பரீட்சையில் சித்திபெறாததாகக் கருதக் கூடாது.
எனவே, க.பொ.த சாதாரணதரப் பரீட்சையின் பாடத்திட்டத்தில் திறன்விருத்தி மற்றும் தொழிற்கல்வி பாடத்தை உள்ளடக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, இத் தீர்மானத்தை அடுத்த ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்த கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
கல்விச் சீர்திருத்தங்கள்
அதற்கிணங்க எதிர்காலத்தில் ஒரு முழுமையான நிபுணத்துவத்துவம் மிக்கவர்களை உருவாக்குவதற்குத் தேவையான கல்விச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.
சமூகத்தை வலுப்படுத்த நிலம் ஒரு முக்கிய காரணியாகும்.
எனவே, பயிர்ச்செய்கைக்கு ஏற்ற, ஆனால் இதுவரை பயிரிடப்படாத நிலத்தைப் பயன்படுத்தும் வகையில் புதிய சட்டங்களை கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஓய்வூதியம் வழங்க கோரிக்கை
முழு நாட்டையும் வலுவூட்ட அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.
அதற்காக, அரச மற்றும் தனியார் துறையினர் மட்டுமின்றி அனைத்து சுயதொழில் செய்பவர்களுக்கும் பங்களிப்பு ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கின்றோம்.
அதேபோல், ஒரு தொழில்முயற்சியாளர்களைக் கொண்ட நாட்டை உருவாக்க நாமும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். அதனுடன், அனைவரும் தொழில் கல்வியையும் பெற வேண்டும்.
அபிவிருத்தி நாட்டை செய்வதற்கும் முன்னேற்றுவதற்கும் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
முன்பள்ளி ஆசிரியர்களை வலுவூட்டுவதற்காக “லியசவிய நிகழ்ச்சித்திட்டத்தையும்” நாங்கள் ஆரம்பித்துள்ளோம்.
அஸ்வெசும பெறுபவர்களில் 12 இலட்சம் பயனாளிகளுக்கு வலுவூட்டுவது எமது முக்கிய நோக்கமாகும்.
அதற்காக இந்த வருடம் 03 இலட்சம் குடும்பங்கள் வலுவூட்டப்பட வேண்டும். அதற்குத் தேவையான சுமார் 188,000 ஆவணங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.
உலக வங்கி திட்டத்தின் கீழ்
அதன்போது, உலக வங்கி திட்டத்தின் கீழ் 10,000 குடும்பங்களையும், ஆசிய அபிவிருத்தி வங்கியின் கீழ் 16,000 குடும்பங்களையும் வலுவூட்டுத் தேவையான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளன.
அதற்காக அதிகாரிகளுக்கு வழங்கப்படும் பயிற்சியும் இம்மாதம் நிறைவடையும்.
இளைஞர் சேவைகள் மன்றம், தெங்கு அபிவிருத்திச் சபை மற்றும் சிறுதோட்ட அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைந்து பல சமூக வலுவூட்டல் வேலைத்திட்டங்கள் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இவற்றின் மூலம் உற்பத்திப் பொருளாதாரத்தை உருவாக்க எதிர்பார்க்கின்றோம்” என்று சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் மேலும் தெரிவித்தார்.
போதைப்பொருளுடன் பிலிப்பைன்ஸ் பெண்கைது
போதைப்பொருளுடன் பிலிப்பைன்ஸ் பெண்கைது
கொக்கேய்ன் போதைப்பொருளுடன் பிலிப்பைன்ஸ் பெண்கைது கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சுங்கப் பிரிவினரால் கைது
விமான நிலைய சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட போது, அவரிடம் இருந்து 2 கிலோ 851 கிராம் கொக்கெய்ன் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த கொக்கெய்ன் தொகையின் பெறுமதி 200 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாகும் என சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கட்டார் ஊடாக
இந்த பெண் எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபாவிலிருந்து தோஹா – கட்டார் ஊடாக இந்த நாட்டுக்கு வந்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் தனது சூட்கேஸில் மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் கோதுமை மா அடங்கிய 03 பொதிகளுடன் கொக்கைன் போதைப்பொருள் அடங்கிய 03 பொதிகளையும் மறைத்து வைத்திருந்தார்.
அவர் பிலிப்பைன்ஸில் வசிக்கும் 47 வயது உதவி கணக்காளர் என்பது தெரியவந்துள்ளது.
சந்தேகநபரான பெண்ணின் நண்பியின் ஊடாக போதைப்பொருள் கடத்தல்காரர்களால் குறித்த போதைப்பொருள் இலங்கைக்குள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும், போதைப்பொருள் கடத்தல்காரர்களால், குறித்த பெண் 5 நாட்களுக்கு இலங்கையில் உள்ள சுற்றுலா ஹோட்டல்களில் தங்குவதற்கு தேவையான
வசதிகளை செய்து தருவதற்கு தேவையான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக மேலும் தகவல் வெளியாகியுள்ளது.
புதிய மதுபான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படும்
புதிய மதுபான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படும்
புதிய மதுபான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படும் ,நாட்டின் சனத்தொகை மற்றும் சுற்றுலா பயணிகளின் வருகை போன்ற காரணிகளின் அடிப்படையில் மாத்திரமே
நிதி இராஜாங்க அமைச்சர்
புதிய மதுபான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
கரவனெல்ல பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றின் பின்னர், சதொச நிறுவனத்திற்கு சொந்தமான 100 மதுபான அனுமதிப்பத்திரங்களில் 55 அனுமதிப்பத்திரங்களை அர்ஜுன் அலோசியஸுக்கு சொந்தமான வேறு
நிறுவனங்களுக்கு மாற்ற அரசாங்கம் செயற்பட்டு வருவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து ஊடகவியலாளர்கள் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் கூறியதாவது –
வசூலிக்கப்படும் வரிகள்
மதுபான நிறுவனங்களிடம் இருந்து வசூலிக்கப்படும் வரிகள் இவ்வளவு கவனம் செலுத்தி, முறைபடி வசூலித்த ஒரு காலம் வேறு எங்கும் இல்லை.
அத்துடன் குற்றம் சுமத்தப்பட்டது போல், சதொச நிறுவனத்திற்கு சொந்தமான மதுபான அனுமதிப்பத்திரங்களை வழங்குமாறு எமக்கு கோரிக்கை விடுக்கப்படவில்லை.
மேலும், இதுபோன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டாலும், மதுபான உரிமத்தை வேறு ஒருவருக்கு குத்தகைக்கு விட முடியாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆகவே சட்டவிரோத மதுபானம் உற்பத்திச் செய்ததைக் கட்டுப்படுத்துவதும் அரசாங்கத்தின் நோக்கமாகும். மேலும், குறிப்பிட்ட பகுதிக்கு மதுபான உரிமம் வழங்கினால், பிரதேச செயலாளர் மற்றும் பொலிசாரின் கருத்தை கட்டாயம் கேட்க
வேண்டும். நியாயமான ஆட்சேபனைகள் எழும் போது எந்த நேரத்திலும் அந்தப் பகுதிகளுக்கு மதுபான உரிமம் வழங்க நடவடிக்கை எடுக்க மாட்டோம்.
2003ம் ஆண்டு மட்டும் வரி விதிப்பால் மதுவின் விலை 108% அதிகரித்துள்ளது. ஒருபோதும் மதுவின் சட்டப்பூர்வ பயன்பாட்டை அரசு அதிகரிக்கப் போவதில்லை.
நண்பர்களுக்கு மதுபான உரிமம்
அரசு தனது நண்பர்களுக்கு மதுபான உரிமம் வழங்குவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரிக்கிறோம்.
தற்போது வரை, நாட்டிலுள்ள மதுபான நிறுவனங்களுக்கு வழங்கப்படும் ஆர்.பி. 04 உரிமம் வெளியிடும் போது முதற்கட்ட கட்டணம் எதுவும் செலுத்தப்படவில்லை என்றாலும், தற்போது ஒன்றரை கோடி ரூபாய் (15 மில்லியன்) கட்டணமாக வசூலிக்கின்றது.
அனைத்து மதுபான அனுமதிப்பத்திரங்களுக்கும் அறவிடப்படும் வருடாந்த கட்டணம் பத்து மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கமைவாக சட்டவிரோத
மதுபானத்தின் வளர்ச்சியை குறைப்பதற்கும் சட்டப்பூர்வ மது பாவனையை குறைப்பதற்கும் அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
வாங்கிய பாணில் கண்ணாடி துண்டு
மக்கள் வாங்கிய பாணில் கண்ணாடி துண்டு
வாங்கிய பாணில் கண்ணாடி துண்டு ,யாழ்ப்பாணம், மருதானர்மடத்தில் உள்ள கடையொன்றில் நேற்று வாங்கிய பாணில் கண்ணாடி துண்டுகளில் ஒன்று காணப்பட்டுள்ளது.
சாப்பிட்டவர் பாணுக்குள் கண்ணாடி
பாணை வாங்கி சாப்பிட்டவர் பாணுக்குள் கண்ணாடிப் துண்டை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
குறித்த கடைக்கு சுன்னாகம் பகுதியில் உள்ள வெதுப்பகம் ஒன்றில் இருந்தே பாண் வழங்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவரால் பொதுச் சுகாதார பரிசோதகருக்கு அறிவித்து சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
உரிய முறையில் உணவகங்களை கண்காணிக்க மறுப்பு
இலங்கை சுகாதார அமைச்சு உரிய முறையில் உணவகங்களை கண்காணிக்க மறுத்து வரும் நிலையிலேயே ,இவ்விதமான சம்பவங்கள் அதிகரித்து செல்ல காரணமாகிறது .
மக்கள் நாள் தோறும் அதிகம் உட்க்கொள்ளும் உணவாக பாண் காணப்படுகிறது .
அவ்வாறு அதிகம் உண்ணும் பாண் தயாரிக்கும் வெதுப்பகங்களை கண்காணிக்க மறுப்பதாலே ,இவ்வாறு பாண்களில் பொருட்கள் காணப்பட காரணமாகிறது .
மேற்படி குற்ற சாட்டை ,பாணை விரும்பி உண்ணும் மக்கள் தெரிவித்து வருகின்றனர் எனற விடயம் வெளியாகியுள்ளது குறிப்பிட தக்கது .
வீட்டுக்கு சென்றவர் வெட்டிக் கொலை
வீட்டுக்கு சென்றவர் வெட்டிக் கொலை
வீட்டுக்கு சென்றவர் வெட்டிக் கொலை ,மொறொந்துடுவ, பொல்ஹேன பகுதியில் கூரிய ஆயுதங்களால் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக மொறொந்துடுவ பொலிஸார் தெரிவித்தனர்.
பண்டாரகம பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாய்த்தர்க்கம் நீண்டதில் மோதல்
உயிரிழந்த நபருக்கும் அவரது மைத்துனருக்கும் இடையிலான வாய்த்தர்க்கம் நீண்டதில் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தில் சந்தேக நபரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்த நபர் மேலும் சிலருடன் பொல்ஹேன பிரதேசத்தில் உள்ள தனது சகோதரியின் வீட்டிற்கு சென்றிருந்த போது இந்த தகராறு ஏற்பட்டுள்ளது.
பொலிஸார் விசாரணை
சம்பவம் தொடர்பில் மொரந்துடுவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையில் சமீப காலங்களாக இவ்வாறு வெட்டி படுகொலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன .
வோரோதம் காரணமாகவே வெட்டி படுகொலைகள் அதிகம் இடம்பெறுவதாக குற்றவியல் விசாரணை குழுக்கள் தெரிவிக்கின்றன .
அவ்வாறு தெரிவிக்கும் காவல்துறையினால் கூட இவ்வாறு இடம்பெறும் வெட்டி படுகொலை சம்பவங்களை ,தடுக்க முடியவில்லை என்ற விடயம் வெளியாகியுள்ளது .
பாதுகாப்பு வலயமென்று
பாதுகாப்பு வலயமென்று
பாதுகாப்பு வலயமென்று
பாதை தேடி நகர்ந்தோமே!
பாதகரின் ஆப்பு என்று
பாதம் வைக்க உணர்ந்தோமே!
பாதி வாழ்வை தக்கவைக்க
பாரங்களைச் சுமந்தோமே!
பாரத்தோடு பகலிரவாய்
பாவிகளாய் அலைந்தோமே!
சோறு சுகம் குறைந்தபோதும்
சோர்வு இனறி நடந்தோமே!
சேறுதண்ணியில் புதைந்தபோதும்
தேசம் என்றே கடந்தோமே!
வேறுபடை வந்தபோதும்
வேங்கையாக நிமிர்ந்தோமே!
ஆறமனம் அமைதியின்றி
அடிக்கடி இடம்பெயர்ந்தோமே!
காலம் பதில் சொல்லுமென்று
கனவோடு வாழ்கிறோமே!
காயங்களைச் சுமந்துகொண்டே
காலங்களைக் கடக்கிறோமே!
-பிறேமா(எழில்)-
- வெளியில் தெரியாத வேர்கள்.

- சேரன் குளிர்களி

- ஈழத் தமிழச்சி ஏலாத் தமிழச்சியா

- பாதுகாப்பு வலயமென்று

- செட்டிகுள முகாமும் சீ என்ற வாழ்க்கையும்

- தனியாகப் போறவளே

- அப்பான்ர சைக்கிளே அந்தநாள் வாகனம்

- பாரதமே இவர்களையாவது பறக்கவிடு

- டெங்கொழிக்க எங்களின் பங்கு

- மழைக்காலத் துன்பங்கள்

- நாங்கள் மலர்ந்துவிட்டோம்.

- சினிமாவுக்குள் மூழ்கும் சீமான்களுக்கு

- ஓடிஓடி வாழ்ந்தபோதும் ஓய்ந்திடாத கல்வி

- இளைஞரில்லா இலங்கை

- தியாகத்துக்கான காவடி தமிழர்

இஸ்ரேல் இன படுகொலை
இஸ்ரேல் இன படுகொலை
இஸ்ரேல் இன படுகொலை ,இஸ்ரேல் இனப்படுகொலை நடத்தவில்லை என அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார் .
ஜோ பைடனின் இந்த கருத்து பாலஸ்தீன காசா மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது .
இஸ்ரேல் பாலஸ்தீனம் காசா போர்
சர்வதேச நீதிமன்றம் இஸ்ரேல் பாலஸ்தீனம் காசா பகுதி உள்ளிட்ட பகுதியில் நடத்தி வருவது இனப்படுகொலை தான் என தெரிவித்துள்ளது .
இதனை அடுத்து தற்போது இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை கைது செய்யும் உத்தரவை சர்வதேச நீதிமன்றம் பிறப்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளது .
இந்த சர்வதேச பிடிவிறாந்து பிறப்பிக்க பட உள்ள நிலையிலேயே ,அமெரிக்காவிலும் ஜனாதிபதி ஜோ பைடன் இவ்வாறு தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது .
கண் முன்னே கொடிய அரச பயங்கரவாதம் மக்களை இனப்படுகொலை நடத்தி கொண்டிருக்கும் பொழுது ,அங்கு அவ்வாறான இனப்படுகொலை நடத்தப்படவில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது .
இந்த கருத்து அமெரிக்கா மீதான வெறுப்புணர்வை, ஜனாதிபதி பைடன் தூண்டி விட்டுளளார் என நோக்க முடிகிறது .
துப்பாக்கிச் சூடு களுத்துறையில்
களுத்துறையில் துப்பாக்கிச் சூடு
துப்பாக்கிச் சூடு களுத்துறையில் ,களுத்துறை, கட்டுகுருந்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், அவரது 8 வயது மகள் மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று (20) இரவு கட்டுகுருந்த புகையிரத நிலைய பொல வீதி பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் வீட்டினுள் புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கட்டுகுருந்த பிரதேசத்தில் வசிக்கும் 39 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் சுட்டு கொலை
குறித்த நபர் தனது 3 பிள்ளைகளுடன் தனது வீட்டில் இரவு உணவு அருந்திக் கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவரை சுட்டுக் கொன்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ரி 56 ரக துப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும், துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் துக்கதினம் பிரகடனம்
ஈரான் ஜனாதிபதிக்கு துக்கதினம் பிரகடனம்
இலங்கையில் துக்கதினம் பிரகடனம், ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மறைவை முன்னிட்டு இன்று (21) இலங்கையில் தேசிய துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார்.
ஈரானின் வடமேற்குப் பகுதியில்
ஈரானின் வடமேற்குப் பகுதியில் உள்ள மலைப் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உயிரிழந்தார்.
இந்த விபத்தில் ஹெலிகொப்டரில் பயணித்த ஈரான் வெளிவிவகார அமைச்சர், ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உட்பட 8 பேரும் உயிரிழந்துவிட்டதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஈரான் ஜனாதிபதியின் மறைவை முன்னிட்டு
இந்நிலையில் ஈரான் ஜனாதிபதியின் மறைவை முன்னிட்டு ,இலங்கையில் துக்கதினம் பிரகடனம் 5 நாட்கள் துக்க தினத்தை அனுசரிக்க ஈரான் நாட்டில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஈரான் ஜனாதிபதியின் மறைவுக்கு உலகத் தலைவர்கள் பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்துள்ளதோடு, பல நாடுகளில் துக்க தினங்களும் அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.































