ஈழத்துப் பெண்களின் வீரத்து நினைவுகள்
Posted in கவிதைகள் நிலா தமிழ்

ஈழத்துப் பெண்களின் வீரத்து நினைவுகள்

ஈழத்துப் பெண்களின் வீரத்து நினைவுகள்

கற்றைக் கருங்குழலும் பூவிழியும்
ஒற்றைத் திருநுதலும் ஒல்கிடையும்
கொண்டிருந்தும்
அற்றை ஈழத்தாய் அருந்துயர்
நீக்கவென்று
மற்றைக் கிசையாமல் மறவர் ஆனவர்கள் !

எற்றைக் கெம் நிலை ஏற்றம் உறும் என
அற்றைக் கேங்கி நின்ற எம் மக்களைக் காக்க
ஒற்றைத் தலைவனாய் நின்ற
எம் தலை வனின்
நற்றைப் பெருமை முழுமையும்
உணர்ந்து தோள் கொடுத்தவர்கள்!

ஈழத்துப் பெண்களின் வீரத்து நினைவுகள்

வல்லடிமை புரிந்த சிங்களத்தின்
மல்லடிமைச் சேற்றில் புதையாமல்
இல்லறத்தைத் தான் ஒதுக்கி
இளம் பருவச் சீரொதுக்கி
வல்ல மற நெஞ்சை வளையாத இரும்பாக்கி
ஒல்லைப் பெரும் போர் புரிந்து
எல்லை காத்து நின்றவர்கள் !

வெம் பகைவர் காலில் தலை தெறித்தோட
ஆலைப் படுபஞ்சாய் ஆக்கப்படுத்தி
காலை முதற் கொண்டு கவின் மாலைப் பொழுது வரை
காவலரணில் சற்றும் விழி
சோர்தல் இல்லாது
வியன் றமிழ் ஈழத்தைக் காவல் செய்தவர்கள்!

கருமை சூழ்ந்த கங்குல்கள் ஒவ்வொன்றும்
புலரட்டும்
இவர்கள் நினைவோடு
மலரட்டும்
இவர்கள் கனவோடு
ஊனுருக உயிருருக உள்ளொளி பெருக அவர்கள் நினைவைக் கருக்கொண்டு
அவர்கள் கனவை நிறைவேற்றுவோம்!

-நிலாதமிழ்.

இஸ்ரேலுக்குள் குண்டு தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலுக்குள் குண்டு தாக்குதல்


இஸ்ரேலுக்குள் குண்டு தாக்குதல்

இஸ்ரேலுக்குள் குண்டு தாக்குதல் நடத்த பட்டுள்ளதாக அங்கு வெடித்து சிதறிய மினிபஸ் காட்சிகள் காணப்படுகின்றன .

இஸ்ரேல் மத்திய இஸ்ரேல் பகுதியை இலக்கு வைத்து பாலஸ்தீனம் ஹமாஸ் மக்கள் விடுதலை போராளிகள் நடத்திய தாக்குதலை அடுத்து இந்த மினிபஸ் குண்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது .

மினிபஸ் செலுத்தி சென்ற சாரதி பலத்த தீ எரிகாயங்களுக்கு உள்ளான நிலையில் மீட்க பட்டு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .

மத்திய இஸ்ரேலை தக்க ஆரம்பித்துள்ள ஹமாஸ்

தொடராக இஸ்ரேல் நகரங்கள் ஹமாஸ் தாக்குதலுக்கு உள்ளாகி வருவதால் இஸ்ரேல் மக்கள் மத்தியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது .

பலஸ்தீன காசா மக்கள் மீதான தாக்குதலை நிறுத்தி ,கைதிகளை விடுவித்து தரும் படி கோரி சிறை கைதிகள் உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர் .

குண்டு தாக்குதல்

அவ்விதமான நிலையில் தற்போது இந்த குண்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளதான உலக செய்திகள் தெரிவிக்கின்றன .

எட்டு மாதங்களாக தொடரும் இஸ்ரேல் பாலஸ்தீனம் காசா போர் மிக பெரும் அவலங்களையும் இழப்புக்களையும் ஏற்படுத்தியுள்ளது .

மக்களை இலக்கு வைத்து கோர தாக்குதலை இஸ்ரேல் ஆக்கிரமிப்பு இராணுவம் நடத்திய வண்ணம் உள்ளது இங்கே குறிப்பிட தக்கது .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
துப்பாக்கிச் சூடு சந்தேகநபர் கைது
Posted in இலங்கை செய்திகள்

துப்பாக்கிச் சூடு சந்தேகநபர் கைது

துப்பாக்கிச் சூடு சந்தேகநபர் கைது

துப்பாக்கிச் சூடு சந்தேகநபர் கைது ,காலி – அஹுங்கல்ல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாரால் சந்தேக நபர் கைது

கொஸ்கொடை பொலிஸார் நேற்று (26) பெந்தர கஹ்பிலியாகந்த பகுதியில் வைத்து சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

சந்தேகநபரிடம் இருந்து 03 கிராம் 410 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

36 வயதான சந்தேகநபர் நில்லபதன பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

அஹுங்கல்ல பொலிஸ் பிரிவில் துப்பாக்கி சூடு

கடந்த 08 ஆம் திகதி இரவு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் அஹுங்கல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட போகஹபிட்டிய லோகன்வத்த

பகுதியிலுள்ள வீடொன்றில் வைத்து நபர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தனர்.

இலங்கையில் சமீப கலங்கலாக இவ்வாறான குற்றங்கள் அதிகரித்து வருவது ,இலங்கையில் துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்துள்ளதை காண்பிக்கிறது .

தடை செய்ய பட்ட ஆயுதங்கள் எவ்வாறு இவ்வாறான கொலை குற்றவாளிகளிடம் சிக்கியது என்பதற்கு ,.இலங்கை காவல் துறையிடம் இதுவரை பதில் ஏதும் இல்லை என்பது குறிப்பிட தக்கது .

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் மரணம்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை பிரான்ஸ் தூதுவர் மரணம்

இலங்கை பிரான்ஸ் தூதுவர் மரணம்

இலங்கை பிரான்ஸ் தூதுவர் மரணம் தொடர்பில் இறுதி முடிவு இதுவரை எடுக்கப்படவில்லை என பிரான்ஸ் தூதரகம் தெரிவித்துள்ளது.

அவரது இறுதிக் கிரியைகள் இந்நாட்டில் நடைபெறுமா? அல்லது அவரது உடல் பிரான்ஸுக்கு எடுத்துச் செல்லப்படுமா? என்பது குறித்து இன்று (27) இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என தூதரகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் இறந்தார்

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் Jean Francois Pactet இராஜகிரியில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் உயிரிழந்த நிலையில், நேற்று பிற்பகல் வெலிக்கடை பொலிஸ் அதிகாரிகள் குழுவினால் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

திடீர் சுகவீனம் காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிரான்ஸ் தூதுவர் இவ்வாறு உயிரிழந்தார்.

தனது 56 ஆவது வயதில் பிரான்ஸ் தூதுவர் இவ்வாறு உயிரிழந்தார்.

1970 ஆம் ஆண்டு பிறந்த Jean Francois Pactet, 2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் இலங்கை மற்றும் மாலைத்தீவுகளுக்கான பிரான்ஸ் தூதுவராக கடமையாற்றி வந்தார்.

தொழில் ரீதியான இராஜதந்திரியான அவர் முன்னர் பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகத்தில் கலாச்சாரம் மற்றும் கல்விக்கான துணை இயக்குநர் போன்ற பதவிகளை வகித்தார்

இவர்கள் மூளை குழம்பியவர்கள் சஜித்
Posted in இலங்கை செய்திகள்

இவர்கள் மூளை குழம்பியவர்கள் சஜித்

இவர்கள் மூளை குழம்பியவர்கள் சஜித் ,பஸ்களை வழங்கும் போது பஸ் மேன் என பெயர் சூட்டி அழைக்கின்றனர்.

இருப்பவர்களிடம் இருந்து எடுத்து இல்லாதோருக்கு இவ்வாறு பகிர்ந்து வருவதில் தவறில்லை.

உலகம் சுற்றி வந்த மூளை

இவ்வாறு விமர்சிப்பவர்கள் உலகம் சுற்றி வந்து அவர்களின் மூளை குழம்பிப்போயுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்த திட்டம் எந்தளவு முக்கியமானது என்பது தற்போதைய ஜனாதிபதி பிரதமராக இருந்தபோது, ​​’மூச்சு’ திட்டத்தின் கீழ் நாட்டுக்கு உதவுமாறு கேட்டுக் கொண்டார்.

அப்போது 150 இலட்சம் ரூபா பெறுமதியான இருதய நோயாளர்களுக்கான மருந்தை அரசாங்கத்தினால் பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்ட போது, எதிர்க்கட்சித் தலைவராக இருந்து அந்த மருந்தை நாட்டுக்கு பெற்றுக் கொடுத்தேன்.

76 வருட வரலாற்றில் இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெறுவது இதுவே முதல் தடவை என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

கல்விக்கு முன்னுரிமை அளிப்பதே ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியக் கொள்கைகளில் பிரதானமானது. இதற்கு எம்மிடம் நிறைய வேலைத்திட்டங்கள் இருக்கின்றன.

சமூக வலைத்தளங்கள்

இவற்றைக் கூறும் போது, ​​சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி, பல்வேறு விதமாக மக்களுக்குப் பொய்யான தகவல்களை வழங்கி, 220 இலட்சம் மக்களை மீண்டும் 2019 போல் ஏமாற்றும் முயற்சி இடம்பெற்று வருகிறது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இதுபோன்ற ஏமாற்று வேலைகளை செய்யாமல், போட்டி போட்டுக்கொண்டு மக்களுக்கு உதவவும், மருத்துவமனைகள் மற்றும் பாடசாலைகளுக்கு உதவவும் ஒன்று சேருமாறு எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்தார்.

இதன் மூலம் நாட்டு மக்கள் நன்மையடைவார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

76 ஆண்டு கால வரலாற்றில் அதிகாரம் இல்லாமல் நாட்டிற்காக சேவை செய்த ஒரே எதிர்க்கட்சி ஐக்கிய மக்கள் சக்தியே என்றும், மக்கள் கோரும்

முறைமையில் மாற்றத்தைக் கூட போராட்டத்திற்கு முன்னரே ஐக்கிய மக்கள் சக்தியால் ஆரம்பிக்கப்பட்டதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டம்

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 200 ஆவது கட்டமாக 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள்

அனுராதபுரம், கெக்கிராவ, பலாகல, மனேருவ மகா வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வு மே 25 ஆம் திகதி இடம்பெற்றது.

இதன்போது, பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினருக்கு ஒரு இலட்சம் ரூபா நிதியுதவியும் வழங்கி வைக்கப்பட்டது.

பிரபஞ்சம் 200 ஆவது கட்டத்தையும் தாண்டி விட்டது. இதன் பெருமை எனக்கு மட்டும் சொந்தமானதல்ல,

மொனராகலை மாவட்டத்தில்

2021 டிசம்பர் 30 ஆம் திகதி அன்று மொனராகலை மாவட்டத்தில் உள்ள போதாகம வித்தியாலத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்ட பிரபஞ்சம் ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்களை வழங்கும் இந்தத் திட்டம், இன்று 200 ஆவது

கட்டத்தை எட்டியுள்ளது. எனக்கு மாத்திரமல்லாது, இந்த வேலைத்திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு பல வழிகளிலும் உழைத்து வரும், ஒத்துழைப்பு

வழங்கிய, வழங்கி வரும் அனைவருக்கும் இதன் பெருமையும் பாராட்டும் சேர வேண்டும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

பிரசவித்த குழந்தை மாயம்
Posted in இலங்கை செய்திகள்

பிரசவித்த குழந்தை மாயம்

பிரசவித்த குழந்தை மாயம்

பிரசவித்த குழந்தை மாயம் ,பிரசவத்தின் போது உயிரிழந்தாக கூறப்படும் குழந்தையின் சடலத்தை தமக்கு காட்டுவதற்கு மாத்தறை புதிய மாவட்ட

வைத்தியசாலையின் பணிக்குழாமினர் நடவடிக்கை எடுக்கவில்லை எனஅந்த குழந்தையின் உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

சடலம் தொடர்பில் வைத்தியசாலை பணிக்குழாமினர் மூன்று தடவைகள் முன்னுக்கு பின் முரணான கருத்துக்களை வெளியிட்டமை தொடர்பில் பலத்த சந்தேகம் நிலவுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

மாத்தறை வெலிகம பகுதி

மாத்தறை வெலிகம பகுதியைச் சேர்ந்த 24 வயதான காவிந்த்யா மதுஷானி தனது முதல் குழந்தையைப் பிரசவிப்பதற்காக மாத்தறை புதிய மாவட்ட பொது வைத்தியசாலையில் கடந்த 22ஆம் திகதி அனுமதிக்கப்பட்டார்.

மதுஷானி அந்த மருத்துவமனையில் சேவையாற்றும் மகப்பேற்று மருத்துவர் ஒருவரிடம் தனியார் மருத்துவ மையத்தில் மருத்துவ பரிசோதனை செய்துள்ள நிலையில் பிரசவத்திற்காக அந்த மருத்துவமனை தேர்வு செய்யப்பட்டது.

பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்று நடத்தப்பட்ட ஸ்கேன் மற்றும் அதற்கு முன்னர் தனியார் சிகிச்சை மையத்தில் நடத்தப்பட்ட

மருத்துவப் பரிசோதனையிலும் வயிற்றில் குழந்தை ஆரோக்கியமாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அண்மையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மதுஷானி தனது முதல் குழந்தையைப் பெற்றெடுத்துள்ள போதும், பின்னர் குழந்தை இறந்ததாக மருத்துவமனை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இதற்கமைய வைத்தியசாலையின் பிரேத அறையில் உள்ள சடலத்தை அடக்கம் செய்ததற்காக மாத்தறை மாநகர சபைக்கு 2500 ரூபாய் பணம்

செலுத்தி பற்றுச்சீட்டை கொண்டு வருமாறு வைத்தியசாலை பணிக்குழாமினர் உறவினர்களிடம் தெரிவித்துள்ளனர்.

மாநகர சபைக்கு செலுத்த நடவடிக்கை

அதன்படி, உரிய தொகையை மாநகர சபைக்கு செலுத்த நடவடிக்கை எடுத்திருந்தனர்.

எனினும் குழந்தையின் சடலத்தை தந்தையிடம் காட்டாமல் புதைத்தமை தொடர்பில் வைத்தியசாலை ஊழியர்களிடம் உறவினர்கள் வினவிய போது சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவித்தனர்.

உயிரிழந்த குழந்தையின் சடலத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில் உறவினர்கள் நேற்று முன்தினம் (25) இரவு வரை வைத்தியசாலையில்

காத்திருந்த போதிலும் வைத்தியசாலை பணிக்குழாமினர் எவரும் சடலம் தொடர்பில் உறுதியான அறிவிப்பை வெளியிடவில்லை.

இவ்வாறானதொரு பின்னணியில் இச்சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை அதிகாரிகளை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வினவ முற்பட்ட போதும் எவரும் அதுற்கு பதில் அளிக்கவில்லை

மண்சரிவு அபாய எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

மண்சரிவு அபாய எச்சரிக்கை

மண்சரிவு அபாய எச்சரிக்கை

7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கொழும்பு, நுவரெலியா, இரத்தினபுரி, கண்டி, கேகாலை, களுத்துறை மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் எச்சரிக்கை

நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ பிரதேச செயலகப் பிரிவிற்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி, அயகம, கலவான,

எஹலியகொட,குருவிட்ட, பலாங்கொடை,கிரியெல்ல, எலபாத்த ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் இரண்டாம் நிலை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் களுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய பிரதேச செயலகப் பிரிவிற்கும், கொழும்பு மாவட்டத்தின் சீதாவாக்கை பிரதேச செயலகப் பிரிவிற்கும், கேகாலை மாவட்டத்தின் கேகாலை, தெஹியோவிட்ட, ருவன்வெல்ல,

யட்டியாந்தோட்டை மற்றும் வரகாபொல ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் இரண்டாம் நிலை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

மக்களுக்கு காணி உறுதிகள்
Posted in இலங்கை செய்திகள்

மக்களுக்கு காணி உறுதிகள்

மக்களுக்கு காணி உறுதிகள்

மக்களுக்கு காணி உறுதிகள் ,முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியேற்றம் என்பது பாரிய செயற்பாடாக மாறியுள்ளது.

எனவே, மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு முழுமையான காணி உறுதிப் பத்திரம் வழங்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

புதுக்குடியிருப்பு மத்திய மகா வித்தியாலயத்தில்

புதுக்குடியிருப்பு மத்திய மகா வித்தியாலயத்தில் நேற்று முற்பகல் நடைபெற்ற வவுனியா மாவட்ட ‘உறுமய’ காணி உறுதி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் 5 பிரதேச செயலாளர் பிரிவுகளை உள்ளடக்கிய 600 முழுமையான காணி உறுதிப் பத்திரங்கள் இங்கு வழங்கப்பட்டதோடு,

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு ‘உறுமய’ வேலைத்திட்டத்தின் கீழ் 1,376 இலவசப் பத்திரங்கள் வழங்கப்பட உள்ளன.

இந்த நிகழ்வில் ஜனாதிபதி மேலும் உரையாற்றுகையில்,

ஜனாதிபதி என்ற வகையில் இன்று முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம் செய்யும் வாய்ப்பு கிடைத்தமைக்கு முதலில் எனது மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறேன்.

உறுமய காணி உறுதிப் பத்திரம் வழங்கும் திட்டத்தில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு முக்கியமானது.

யுத்தம் காரணமாக இப்பிரதேசத்தில் கட்டடங்கள் அழிந்து போனதுடன் பலர் தமது காணிகளை விட்டு வெளியேற வேண்டி ஏற்பட்டது. எனவே முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியேற்றம் என்பது பாரிய செயற்பாடாக மாறியுள்ளது.

எனவே, இந்தப் பிரதேசத்தில் உறுமய திட்டத்தை நடைமுறைப்படுத்துவதுடன், மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு முழுமையான காணி உறுதிப் பத்திரம் வழங்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார்.

இஸ்ரேல் இராணுவ தளபதிகள் பலி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உக்ரைன் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் இராணுவ தளபதிகள் பலி

இஸ்ரேல் இராணுவ தளபதிகள் பலி

இஸ்ரேல் இராணுவ தளபதிகள் பலி என இஸ்ரேல் இராணுவ தலைமையகம் அறிவித்துள்ளது .

பாலஸ்தீனம் காசா ஜபலியா பகுதியில் முன்னேற்ற நடவடிக்கையை மேற்கொண்ட இஸ்ரேல் இராணுவத்தை வழிமறித்து ஹமாஸ் மக்கள் விடுத்லை போர் படைகள் நடத்திய தாக்குதலின் பொழுதே இஸ்ரேல் இராணுவ தளபதிகள் பலியாகியுள்ளதா தெரிவிக்க பட்டுள்ளது .

காசா தெற்கு ஜபலியா பகுதியில் கடும் போர்

காசா தெற்கு ஜபலியா பகுதியில் இஸ்ரேல் இராணுவத்தின் தாங்கி கனரக படைகள் பெரும் இழப்பை சந்தித்த வண்ணம் உள்ளன .

ஜெபலியா பகுதி ஊடாக ஊடறுப்பு தாக்குதலை நடத்தி முன்னேற்ற நடவடிக்கையை மேற்கொண்ட ,மேற்கொள்ளும் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு இராணுவம் பலத்த இழப்பை சந்தித்த வண்ணம் உள்ளன .

கடந்த எட்டு மாதமாக இதே பகுதியில் இஸ்ரேல் இராணுவத்தின், முக்கிய முதன்மை படையணிகள் பெரும் அடியை வாங்கி சுருண்டு கொண்டன .

அவ்வாறான பெரும் இழுப்பை இப்பொழுதும் சந்தித்த வண்ணம் உள்ளதை, இந்த இரண்டு இராணுவ தளபதிகள் பலியான சம்பவங்கள் எடுத்து காண்பிக்கின்றன .

Error: View 9293b2au4w may not exist
மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்

மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்

மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் , ரபாவிற்கு அருகில் இடம்பெயர்ந்த காசா மக்கள் கூடாரங்கள் மீது இஸ்ரேலிய அரச இராணுவம் தாக்குதல் .

இஸ்ரேல் அரச ஆக்கிரமிப்பு இராணுவம் பீரங்கி மற்றும் விமான வழி தாக்குதலை நடத்தியதில் சிக்கி ,டஜன் கணக்கான மக்கள் பலியாகியும் ,காயமடைந்துள்ளதாக ,காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது .

சர்வதேச நீதிமன்ற உத்தரவு

சர்வதேச நீதிமன்ற உத்தரவுகளை மீறி ,இஸ்ரேல் இராணுவம் ரபா சாலையில் கோர தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளது .

இந்த பகுதியில் ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட அப்பாவி காசா மக்கள் இடம்பெயர்நது தங்கியுள்ளனர் .

இஸ்ரேல் இராணுவ தாக்குதல்

அவ்வாறான அப்பாவி மக்களை இலக்கு வைத்தே ,இஸ்ரேல் இராணுவ தாக்குதல் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

இஸ்ரேலிய அரச ஆக்கிரமிப்பு இராணுவம் நடத்தும் இந்த தாக்குதல்களை ,ஐரோப்பிய கூட்டமைப்பில் உள்ளிட்ட பல நாடுகள் கண்டித்து ,கணடனம் தெரிவித்துள்ளன .

ஐரோப்பியா கூட்டமைப்பின் ஒன்றிய நாடுகளே கண்டித்துள்ள செயலானது ,இஸ்ரேலுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலில் இரு சார கருத்துக்கள் நிலவி வருகின்றதை இவை காண்பிக்கின்றன .

Error: View 9293b2au4w may not exist
அமெரிக்காவை தாக்கிய புயல் 11பேர் மரணம் 60 பேர் காயம்
Posted in உலக செய்திகள்

அமெரிக்காவை தாக்கிய புயல் 11பேர் மரணம் 60 பேர் காயம்

அமெரிக்காவை தாக்கிய புயல் 11பேர் மரணம் 60 பேர் காயம்

அமெரிக்காவை தாக்கிய புயல் 11பேர் மரணம் 60 பேர் காயம் என தெரிவிக்க பட்டுள்ளது .

உலக வல்லரசு அமெரிக்காவினை தாக்கி வரும் கடும் புயல் மற்றும் கன மழை காரணமாக 11 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 60 க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர் .

டெக்சாஸ், ஓக்லஹோமா, ஆர்கன்சாஸ், மிசோரி ஆகிய இடங்களில் சூறாவளியால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது .

திடீர் சூறாவளியால் ஐந்து மாநிலங்கள் பாதிப்பு

இந்த சூறாவளியால் ஐந்து மாநிலங்கள் பாதிக்க பட்டுள்ளன .இதே பகுதிகளில் 25 சூறாவளி தாக்குதல்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

பாதிக்க பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் இடம்பெற்று வருவதுடன் ,மக்கள் தாற்காலிக ,இடை தங்கள் நிலையங்களில் தங்க வைக்க பட்டுள்ளதாக அந்த மாநில அரசுகள் அறிவித்துள்ளன .

சூறாவளியால் 100 க்கு மேற்பட்ட வாகனங்கள் சேதம்

திடீர் சூறாவளியால் 100 க்கு மேற்பட்ட வாகனங்கள் மற்றும் வீடுகள் என்பன சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

சீராற்ற காலநிலை காரணமாக அமெரிக்காவாவில் இயல்பு நிலை பாதிக்க பட்டதுடன் ,கடும் சூறாவளி புயல் காரணமாக பெரும் சொத்து இழப்பு ஏற்பட்டுள்ளது .

வீடுகளின் கூரைகளை அடித்து சென்ற சூறாவளி

மக்களது வீடுகளின் கூரைகள் சூறாவளியில் அடித்து செல்ல பட்டுள்ள காட்சிகள் வெளியாகியுள்ளன .

இந்த திடீர் சூறாவளி புயல் காரணமாக ,அமெரிக்காவின் ஐந்து மாநிலங்கள் கடுமையாக பாதிக்க பட்டுள்ளன .

அவ்விதம் புயலினால் பாதிக்க பட்ட பகுதிகளின் மொத்த சொத்து இழப்பு தொடர்பான கணக்கறிக்கை தயாராகி வருகிறது .

இவ் ஆண்டில் அமெரிக்காவில் ஏற்பட்ட அதி உச்ச சூறாவளி புயல் இதுவாக காணப்பட்டுள்ளது என்கின்ற புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன .

ஜனாதிபதி ஜோ பைடன் அனுதாபம்

ஜனாதிபதி ஜோ பைடன் புயலினால் பாதிக்க பட்ட மக்களுக்கு அனுதாபம் தெரிவித்துள்ளதுடன் ,கோர புயலினால் பாதிக்க பட்ட பகுதிகளுக்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் படியும் அறிவுறுத்தல் விடுத்துள்ளார் .

ஜோ பைடன் சிக்கினார்

ஜனாதிபதி ஜோ பைடன் தேர்தலை எதிர்கொண்டுள்ள இவ்வேளையில் ,சீரற்ற காலநிலை புயலினால் பாதிக்க பட்ட மக்களுக்கு உரிய முறையில் தீர்வை வழங்கினால் மட்டுமே ,அவரினால் மகத்தான வெற்றியை பெற முடியும் என்ற நிலை காண படுகிறது .

அதனால் புயலினால் ஏற்பட்ட மக்கள் இழப்பை, அரசு செலுத்த வேண்டிய நிலைக்கு செல்ல கூடும் என எதிர் பார்க்க படுகிறது .

Error: View 9293b2au4w may not exist
பாலஸ்தீனம் தனி நாடு நோர்வே அறிவிப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

பாலஸ்தீனம் தனி நாடு நோர்வே அறிவிப்பு

பாலஸ்தீனம் தனி நாடு நோர்வே அறிவிப்பு

பாலஸ்தீனம் தனி நாடு நோர்வே அறிவிப்பு , பாலஸ்தீனம் தனி நாடு தொடர்பான அங்கிகரிப்பு ஆவணங்கள் நோர்வே உத்தியோக பூர்வமாக வழங்கியுள்ளது .

அடுத்து எதிர்வரும் 28 ஆம் திகதி பாலஸ்தீனம் அங்கீகரிக்க பட்ட உள்ளதாக ,நோர்வே ,ஐர்லாந்த் ,ஸ்பெயின் போன்ற நாடுகள் அங்கீகரிக்க போகின்றன .

இருபது நாடுகள் அதனை வரவேற்று ஆமோதிக்க போகின்றன

இவர்களுடன் மேலும் இருபது நாடுகள் அதனை வரவேற்று ஆமோதிக்க போகின்றன என்கின்ற விடயம் தெரிவிக்க படுகிறது .

எழுபது ஆண்டுகளாக அடக்குமுறை ,அவற்றில் கடந்த 45 ஆண்டுகளுக்கு மேலாக மிக கொடூரமான தாக்குதல்களை இஸ்ரேல் பாலஸ்தீனம் மீது நடத்தியது .

அதுவே இன்று பாலஸ்தீனம், தனி நாடக மாறுவதற்கு காரணமாக அமைய பெற்றுள்ளது .

அடக்குமுறை ,அடடூழியம் ,இனப்படுகொலை

தொடர் அடக்குமுறை ,அடடூழியம் ,இனப்படுகொலை ,வாழ்விடங்கள் அழித்தல் என்ற ,ஆக்கிரமிப்பு அரச பயங்கரவாத தாக்குதல்களின் வெளிப்பாடே பாலஸ்தீன தேசம் ஒரு ,இறைமையுள்ள சுதந்திர தேசமாக மாறிட காரணமாக அமைய பெற்றுள்ளது .

அந்த நாட்டை பெற்று கொடுக்க ஈரான் சாதனையை யாரும் மறந்துவிட கூடாது .

கூட்டிணைந்த நன்கு ஒருங்கிணைக்க பட்ட ,கூட்டு தாக்குதலே இந்த நிலைக்கு காரணமாக அமைய பெறுகிறது .

நெதன்யாகுவின் மூன்று தாசாப்த ஆண்டு இனப்படுகொலையின் அதீத வளர்ச்சியே இன்று இஸ்ரேல் அழிவில் சிக்கவும் ,மக்கள் அவரை வெறுத்து ஆட்சியிழந்த ஒருவராக மாற்றம் பெறவும் காரணமாக அமைகிறது .

இலங்கையில் கோட்டபாய ராஜபக்சவை போல ,இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவும் மாற போகிறார் என்பதற்கு இதுவும் ஒரு காரணமாக அமைய பெற்றுள்ளது .

மலர்கிறது பலஸ்தீன நாடு ,மனம் மகிழ்கிறது .எதனை ஆயிரம் உயிர் இழப்பு ,எத்தனை ஆண்டுகள் வலி ,அவலம் .

இத்தனையும் தந்து மகிழ்ந்த யூத ஆளும் அரச இராணுவ வெறியாட்டம் முடிவுக்கு வருகிறது .

விலங்குகளை போல மக்களை கொன்று குவித்து ஏப்பம் இட்ட யூத அரச பயங்கரவாதத்திற்கு ,சாட்டை அடி வழங்க பட்டுள்ளது .

எமது சொந்த மக்கள் விடுதலை போன்றே பலஸ்தீன தானி நட்டு இராச்சியத்தை தமிழினம் பார்க்கிறது .

video

Error: View 9293b2au4w may not exist
ஈரானின் அதிரடி இராணுவ தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரானின் அதிரடி இராணுவ தாக்குதல்

இஸ்ரேல் மீது ஈரானின் அதிரடி இராணுவ தாக்குதல்

ஈரானின் அதிரடி இராணுவ தாக்குதல் ,ஈரான் அதிரடி இராணுவ ஏவுகணைகள் இஸ்ரேலை அழித்திருக்கும் என அமெரிக்கா  ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவிப்பு .

இஸ்ரேல் இயலாமையை அம்பல படுத்தியுள்ள செயல் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

இஸ்ரேல் மீது ஈரான் கடும் ஏவுகணைகள் டிரோன் ரக வெடிகுண்டு விமானங்கள் மூலம் தாக்குதலை நடத்தின .

இஸ்ரேலியா இராணுவத்தின் ஒன்பது முக்கிய நிலைகளை தெரிவு செய்து 500 டிரோன் ரக விமானங்கள் ,ஏவுகணைகள் ஊடாக ஈரான் தாக்குதல் நடத்தியது .

இஸ்ரேல் மீது ஈரானின் அதிரடி தாக்குதல்

இந்த ஈரான் இராணுவத்தின் அதிரடி ஏவுகணை ,விமான தாக்குதலினால் இஸ்ரேல் மிக பெரும் நெருக்கடியை சந்தித்தது .

மூன்று மணித்தியாலமாக இஸ்ரேல் விமானங்களை பறக்க விடாது ஈரான் இராணுவம் ஏவுகணைகள் ,விமானம் மூலம் தாக்குதலை நடத்தியது .

சற்றும் எதிர் பாராத ஈரானின் இந்த ஏவுகணை ,ட்ரான் அதிரடி தாக்குதல் காரணமாக ,இஸ்ரேல் நிலை குலைந்து காணப்பட்டது .

எனினும் ஈரான் ஏவுகணை ,விமானங்களின் தாக்குதலினால் எமக்கு எதுவித பாதிப்பும் ஏற்படவில்லை என இஸ்ரேல் தெரிவித்து இருந்தது .

அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன்

அவ்வாறன கால பகுதியில் தற்போது அமெரிக்கா ஜோ பைடன் ஈரான் ஏவுகணைகள் விமானங்கள் தொடர்பாக இவ்விதம் தெரிவித்து ,ஆளும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் தோல்வியை அம்பல படுத்தியுள்ளார் .

இந்த அறிவிப்பினால் இஸ்ரேல் நெதன்யாகுவின் ஆட்சி அதிகாரம் முடிவிற்கு வருவதாக அமெரிக்கா அறிவிக்கிறது என எடுத்து கொள்ளலாம் .

இந்த போரில் வென்று தலை நிமிர்ந்தது ஈரான் ,மற்றும் ஹிஸ்புல்லா, ஹமாஸ் ,ஹவுதிகள் ,ஈராக்கிய படைகள் ,என்பதை யாராலும் மறுக்க முடியாது .

Iran Missiles Will Destroy Israel USA  

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
ஜனாதிபதியை சந்தித்தார் விக்னேஸ்வரன்
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதியை சந்தித்தார் விக்னேஸ்வரன்

ஜனாதிபதியை சந்தித்தார் விக்னேஸ்வரன்

ஜனாதிபதியை சந்தித்தார் விக்னேஸ்வரன் ,தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் வடமாகாண முன்னாள் முதலமைச்சருமான ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசரான பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

உணவகங்களில் திடீர் சோதனை
Posted in இலங்கை செய்திகள்

உணவகங்களில் திடீர் சோதனை

உணவகங்களில் திடீர் சோதனை

உணவகங்களில் திடீர் சோதனை ,சுகாதாரமற்ற சிற்றுண்டிகள் பொதுமக்களுக்கு விற்கப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவல்களை அடுத்து

உணவுப்பாதுகாப்பு மற்றும் சுத்தமான உணவை பொதுமக்களுக்கு உறுதிப்படுத்தல் என்ற நோக்கில் சாய்ந்தமருது பிரதேச உணவகங்களுக்கு திடீர் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கல்முனை பிராந்திய சுகாதார சேவை

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஸஹீலா இஸ்ஸதீனின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் சாய்ந்தமருது

சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஜே.கே.எம். அர்ஷாத் காரியப்பர் ஞாயிற்றுக்கிழமை (25) சாய்ந்தமருது பிரதேச உணவகங்களுக்கு திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டார்.

உணவகங்கள் பார்வை

சில வாரங்களுக்கு முன்னர் உணவகங்களை பார்வையிட்ட அவர் உணவக உரிமையாளர்களுக்கும், உணவு தயாரிப்பவர்களுக்கும் சுகாதார நடைமுறைகளை பேணி உணவுகளை தயாரிக்குமாறும், உணவகங்கள்

சுத்தமில்லாது இருத்தல், உணவு கையாளுகையில் முறையான ஒழுங்கீன்மை, நீண்ட நாட்களுக்கு பொருத்தமில்லாதவாறு உணவுகளை

குளிர்சாதனப்பெட்டிகளில் தேக்கி வைத்தல், சமையல் பாத்திரங்கள் மற்றும் சமையல் பொருட்களின் தரம் போன்றவற்றை சுகாதார முறைப்படி

உணவகதின் மீது உரிய நடவடிக்கை

பேணுமாறும் ஆலோசனை வழங்கியதுடன் அறிவித்தல்களை பேணி நடக்காத உணவகங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்திருந்தார்.

அதனை ஒட்டியதாக சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர்களான ஏ.எல்.எம். ஜெரின், ஜே.எம்.நிஸ்தார் உட்பட காரியாலய உத்தியோகத்தர்கள் சகிதம் சாய்ந்தமருது

உணவு நிலையங்கள் மீது திடீர் பரிசோதனை

பிரதேச உணவு தயாரிக்கும், விற்பனை செய்யும், வினியோகம் செய்யும் உணவு நிலையங்கள் மீது இன்று திடீர் பரிசோதனையும், முற்றுகையும் இடம்பெற்று சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரியின் அறிவித்தல்களை

பேணி நடக்காத உணவகங்களில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற மற்றும் முறையற்ற களஞ்சியத்தை கொண்டிருந்த உணவுகளும் கைப்பற்றப்பட்டது.

எச்சரிக்கை

மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற மற்றும் முறையற்ற களஞ்சியங்களை கொண்ட உணவுகளை வைத்திருந்தோர் மீது எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற உணவுகள் கைப்பற்றப்பட்டது.

அதே போன்று சில உணவகங்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்க தேவையான மேலதிக ஒழுங்குகளை சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் மேற்கொண்டுள்ளது.

யாழில் ஜனாதிபதி மக்களை சந்தித்தார்
Posted in இலங்கை செய்திகள்

யாழில் ஜனாதிபதி மக்களை சந்தித்தார்

யாழில் ஜனாதிபதி மக்களை சந்தித்தார்

யாழில் ஜனாதிபதி மக்களை சந்தித்தார் ,யாழில் ஜனாதிபதி இளைஇவ்வருடத்திற்குள் நாட்டை வங்குரோத்து நிலையிலிருந்து மீட்டு இளைஞர் யுவதிகளின் தொழில் பிரச்சினைத் தீர்க்கப்படுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார்.

அதேபோல், மீண்டும் ஏற்றுமதிப் பொருளாதாரத்தை உருவாக்கும் வகையில் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவேன் .

நவீன விவசாயத்தைக் கிராமத்திற்கு கொண்டுச் செல்வதற்கான வேலைத்திட்டம் அடுத்த வருடத்திலிருந்து ஆரம்பிக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் துறையப்பா விளையாட்டரங்கத்தில்

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் துறையப்பா விளையாட்டரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த யாழ். மாவட்ட மாநாட்டிலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இதன்போது யாழ்.மாவட்ட இளைஞர் யுவதிகளின் தேவைகள் மற்றும் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியிடம் நேரடியாக கூறுவதற்கான சந்தர்ப்பமும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது.

கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

“வட. மகாணத்தில் பயன்படுத்தப்படாத பல காணிகள் காணப்படுகின்றன. யாழில் மாத்திரமின்றி முழு நாட்டிலும் அவ்வாறான பல காணிகள் காணப்படுகின்றன.

அந்த இடங்கள் பயிர்ச்செய்கைக்கு பயன்படுத்தப்படவில்லை. கடந்த காலங்களில் எமது நாட்டில் விவசாய ஏற்றுமதி காணப்பட்டது.

அநுராதபுர காலத்தில் இலங்கை நெல் ஏற்றுமதி செய்தது

அநுராதபுர காலத்தில் இலங்கை நெல் ஏற்றுமதி செய்தது. பின்னர், தேயிலை, கோபி, இறப்பர், கறுவா உள்ளிட்டவைகளும் ஏற்றுமதி செய்யப்பட்டன. தற்போது அந்த ஏற்றுமதிச் செயற்பாடுகள் தடைப்பட்டுள்ளன.

அதனால், விவசாயத்தை நவீனமயப்படுத்தி ஏற்றுமதி பொருளாதாரத்தை மீண்டும் உருவாக்க வேண்டும்.

இளைஞர் யுவதிகள் விவசாயத்தில் ஈடுபடுவதற்கான வாய்ப்பை உருவாக்க வேண்டும். அரச மற்றும் தனியார் துறையுடன் இணைந்து நவீன விவசாயத்தை அறிமுகப்படுத்த எதிர்பார்க்கிறோம்.

அதனால் இலங்கை டொலர்களை ஈட்டிக்கொள்வதற்கான வாய்ப்பும் அதிகமாக கிடைக்கும்.

கடந்த வாரம் கேகாலைக்கான சுற்றுப் பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தேன்.

நவீன விவசாயச் செயற்பாடு

அங்கு நவீன விவசாயச் செயற்பாடுகளை முன்னெடுப்போரை காண முடிந்தது. தற்போது அவ்வாறானவர்களே எமக்குத் தேவைப்படுகின்றனர்.

நவீன விவசாயத்தில் 5000 சதுர அடியில் உயர் வருமானத்தை பெற்றுக்கொள்ள முடியும்.

ஒரு ஹெக்டயாரில் 08 மெட்ரிக் டொன் நெல் விளைச்சலை பெற்றுக்கொள்ள முடியும். அதனால் ஏற்றுமதி மற்றும் வீழ்ச்சியடையாத பொருளாதாரத்தையும் கட்டமைக்க முடியும்.

அரசாங்கம் கவனம்

அதேபோல் சுற்றுலா வர்த்தகத்தை பலப்படுத்துவது குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது.

அதேபோல் வலுசக்தி குறித்தும் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. கிளிநொச்சி, மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் காற்றின் மூலமான மின்சார உற்பத்தியை செய்வதற்கான சாத்தியங்களும் உள்ளன.

அதனால் கிகாவோட் அளவிலான மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். குளங்கள் மீது சூரிய சக்தி படலத்தை அமைத்து அதனூடாக மின்சாரம் தயாரிப்பது தொடர்பிலும் கவனம் செலுத்துகிறோம்.

இதற்காக பூநகரி மற்றும் இரணைமடு குளங்களை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

வடமாகாணமானது அதிகளவில் புதுப்பிக்கத்தக்க வலுசக்தியை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டிருக்கிறது.

ஆசியாவின் மிகப்பெரிய சூரிய சக்திப் படலம்

மேலும், இந்தப் பகுதியில் 700 மெகாவோட் திறன் கொண்ட ஆசியாவின் மிகப்பெரிய சூரிய சக்திப் படலத்தை நிறுவும் பணியை மேற்கொள்ளவிருக்கிறோம்.

இதனை ஆரம்பமாகக் கொண்டு ஆசியாவின் மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மையமாக வடக்கை மாற்ற முடியும்.

வலுசக்தி துறையின் முன்னேறிச் செல்ல அதிகளவில் மின் உற்பத்தியை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

எனவே, புதுப்பிக்கத்தக்க வலுசக்தி உற்பத்திக்காக இந்தியாவின் அதானி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளோம்.

காங்கேசன்துறை சீமெந்துக் கூட்டுத்தாபனத்தை மையமாக கொண்டு முதலீட்டு வலயம் ஒன்று நிறுவப்பட உள்ளது.

மாங்குளம் பிரதேசத்தில் முதலீட்டு வலயமொன்றை ஸ்தாபிப்பதற்கும் எதிர்பார்க்கிறோம். மீனவர்களுக்காக நமது கடற்பரப்பை பாதுகாக்கும் பொறுப்பு எமக்கு உள்ளது.

நவீன மீன்பிடி முறைகள் மூலம் மீன்பிடித் தொழில் துறையும் பலப்படுத்தப்படும்.

கடந்த நான்கு வருடங்களில் இலங்கையின் பொருளாதாரம் பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளது.

மக்கள் பெரும் அவதிப்பட்டனர். தற்போது நாடு வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டு வருகிறது.

நாடு வங்குரோத்து நிலையிலிருந்து மீண்ட பிறகு

நாடு வங்குரோத்து நிலையிலிருந்து மீண்ட பிறகு, இளைஞர்களின் தொழில் இல்லாத பிரச்சினை நிவர்த்திக்கப்படும்.

பொருளாதார மாற்றச் சட்டமூலம் ஏற்கனவே பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்தை உருவாக்க எதிர்பார்த்திருக்கிறோம்.

வியட்நாம், மலேசியா, தாய்லாந்து போன்ற ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரம் இலங்கையிலும் கட்டியெழுப்பப்பட வேண்டும்.

மேலும், உங்கள் வேண்டுகோளுக்கு இணங்க இன்னும் இரண்டு மாதங்களில் தென்னிந்திய கலைஞர்களை கொண்டு யாழ்ப்பாணத்தில் மாபெரும் இசை நிகழ்ச்சியை ஏற்பாடு

செய்யுமாறு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவருக்கு அறிவுறுத்தியிருக்கிறேன். வங்குரோத்து பொருளாதாரத்தில் இருந்து நாட்டை மீட்டெடுக்கவும்,

மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் அரசாங்கம் தொடர்ந்தும் அர்ப்பணிக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.ஞர்களுக்கு வழங்கிய உறுதி

முறிந்து விழுந்த மரம் மக்கள் பலி
Posted in இலங்கை செய்திகள்

முறிந்து விழுந்த மரம் மக்கள் பலி

முறிந்து விழுந்த மரம் மக்கள் பலி

முறிந்து விழுந்த மரம் மக்கள் பலி ,மோசமான வானிலை காரணமாக வீடு ஒன்றின் மீது மரம் விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.

இந்த அனர்த்தத்தில் மற்றுமொரு பெண்ணும் ஆண் ஒருவரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

பொலிஸ் பிரிவு

நேற்று (25) இரவு ஹப்புத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பங்கெட்டிய பிரதேசத்தில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

ஹப்புத்தளை, பங்கெட்டிய பிரதேசத்தில் வசித்து வந்த 65 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.

காயமடைந்தவர்கள் தியத்தலாவை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், ஹப்புத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாத்திரை சென்ற வான் விபத்து
Posted in இலங்கை செய்திகள்

யாத்திரை சென்ற வான் விபத்து

யாத்திரை சென்ற வான் விபத்து ஒருவர் பலி

யாத்திரை சென்ற வான் விபத்து ,யாத்திரை சென்று கொண்டிருந்த வேன் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன் 13 பேர் காயமடைந்துள்ளனர்.

கல்கமுவ, மீஓயாவிற்கு அருகில் இன்று (26) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சாரதிக்கு நித்திரை கலக்கம்

பாதெனியவில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த வேனின் சாரதிக்கு நித்திரை கலக்கம் ஏற்பட்டு மீஓயா பாலத்தில் மோதி வீதியை விட்டு விலகி மீண்டும் மரத்தில் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது வேனில் சுமார் 15 பேர் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தின் போது வேனில் பயணித்த ஒருவர் உயிரிழந்ததுடன், காயமடைந்த 13 பேர் கல்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

விபத்தில் உயிரிழந்தவர் எம்பிலிபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 69 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்து கல்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 07 பேர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கமுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இஸ்ரேல் மீது ஐநா பொருளாதார தடை
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் மீது ஐநா பொருளாதார தடை

இஸ்ரேல் மீது ஐநா பொருளாதார தடை

இஸ்ரேல் மீது ஐநா பொருளாதார தடை விதிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை முக்கியஸ்தர் அறிவிப்பு .

சர்வதேச நீதிமன்ற உத்தரவு மீறலை அடுத்து பொருளாதார தடையை விதிக்க ஐக்கிய நாடுகள் சபை முடிவுக்கு வந்துள்ளதாக அறிவிக்க பட்டுள்ளது .

ஐக்கிய நாடுகள் சபை

எகிப்தின் எல்லையோரம்,காண படும் ரபா எல்லை வழியூடாக இஸ்ரேல் இராணுவம் தாக்குதலை ஆரம்பித்துள்ள நிலையில் ,இந்த முடிவுக்கு ஐக்கிய நாடுகள் சபை வந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .

சர்வதேச நீதிமன்ற உத்தரவை மதிக்காது இஸ்ரேல் ஆக்கிரமிப்பு இராணுவம் ,பாலஸ்தீன மக்கள் மீது தாக்குதலை நடத்தி வருவதால் வேறு வழியின்றி இந்த நகர்வுக்கு ஐநா வந்துள்ளது .

இஸ்ரேல் போரை தடுக்க வேண்டுமாக இருந்தால், சர்வதேச பொருளாதார தடை ஊடகவே, இஸ்ரேல் நடத்தும் மனித குலத்திற்கு எதிரான கொடிய போரை தடுக்க முடியும் என ஐக்கிய நாடுகள் சபை நம்புகிறது .

இன அழிப்பு தாக்குதல்

எட்டு மாதங்கள் கடந்து தொடர் போரை நடத்தி மிக பெரும் இனஅழிப்பு தாக்குதலை நடத்திட இஸ்ரேல் தயாராகி வருகிறது .

இவ்வாறான நிலையில் ,அதனை தடுக்கும் நோக்குடன் இந்த பொருளாதார தடை என்ற ,ஆயுதத்தை ஐக்கிய நாடுகள் சபை எடுத்துள்ளதாக பார்க்க படுகிறது .

எனினும் இஸ்ரேல் மீது பொருளாதார தடையை விதிக்க அமெரிக்கா அனுமதி அளிக்காது என ஒரு தரப்பு கூறுகிறது .

எப்படி பார்த்தாலும் அமெரிக்காவை நம்பியவர்கள் ,அதே அமெரிக்காவினால் கவிழ்க்க பட்டு முதுகில் குத்திய நிகழ்வுகள் அதிகம் அரேங்கேறியுள்ளன .

அதை போலவே இஸ்ரேலுக்கும் அமெரிக்கா முதுகில் குற்றும் என எதிர் பார்க்க பாடுகிறது .

மிக பெரும் தோல்வியில் முடங்கி சேடம் இழுக்கும் இஸ்ரேலும் வேறுவழியின்றி ,சரண் அடையும் நிலைக்கு செல்ல நேரிடும் எனவே எதிர் பார்க்க படுகிறது

பாலஸ்தீனம் காசா தெற்கு பகுதியில் ஸ்னைப்பர் தாக்குதல் நடத்த பட்டதில், இஸ்ரேல் கனரக படைக்கு படைக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது .

அவ்வாறான தாக்குதல் புதிய காணொளிகள் வெளியாகி பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
நெஞ்சை பிளந்து உன்னை தேடி
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

நெஞ்சை பிளந்து உன்னை தேடி

நெஞ்சை பிளந்து உன்னை தேடி

நெஞ்சை பிளந்து உன்னை தேடி
நெடும் தூரம் நடந்தேன்
கொடும் போரில் கூட உனைத்தாங்கி
கோர வலியுடன் கடந்தேன்

இன்றெங்கே நீ இன்றெங்கே
இதயம் இன்றும் தேடுதே
உள்ளாயா இல்லை உயிர் நீத்தாயா
உள்ளமே பதில் கூறாயா

தாளம் இடும் இசையே
தரை தட்டும் கடலே
எங்கே இன்றெங்கே
என் சொந்தம் இன்றெங்கே

வான் முட்டும் மரமே
வளைந் தாடும் காற்றே
நீதி சொல்லாயா
நீர் விழி துடைக்காயா

நெஞ்சை பிளந்து இறக்க வா
நெஞ்சே உன்னை சுமந்து வாழ வா
தாய் மண்ணே பதில் கூறு
தாய் எங்கே என் தாய் எங்கே …!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 25-05-2024