Posted in இலங்கை செய்திகள்

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 269 ஆக உயர்வு

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 269 ஆக உயர்வு

இலங்கையில் இதுவரையில் பதிவான கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை 269 ஆகும்.

இன்றைய தினம் (2020.04.19) இதுவரையில் கொரோனா வைரசு தொற்றினால் உறுதி செய்யப்பட்ட 15 நோயாளர்கள்

பதிவாகியிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க உறுதி செய்தார்.

இந்த நோயாளர்கள் 15 பேரும் கொரோனா தொற்று நோயாளர்களுடன்

நெருக்கமாக தொடர்பை கொண்டிருந்ததினால் கொழும்பு பிரதேசத்தில்

தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தவர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

கொரோனா நோயாளிகளின்
கொரோனா நோயாளிகளின்
Posted in உலக செய்திகள்

ரஷியாவில் வேகமாக பரவும் கொரனோ – ஒரே நாளில் 6060 பேர் பாதிப்பு

ரஷியாவில் வேகமாக பரவும் கொரனோ – ஒரே நாளில் 6060 பேர் பாதிப்பு

ரஷியாவில் அமெரிக்காவை முந்தி சென்று விடும் பாரிய அளவில் மிக வேகமாக கொரனோ வைரஸ் பரவி வருகிறது


கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் மட்டும் 6060 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
மேலும் 48 பேர் பலியாகியுள்ளனர்

இதுவரை சுமார் 42,853 பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,இவ்வாறு பெரும் தொகையில்

மக்கள் பாதிக்க பட்டு வருவதால் வீதி எங்கும் இராணுவம் நிறுத்த பட்டுள்ளது ,

மக்கள் உயிர் பலிகளை தடுக்கும் முகமாக சில பகுதிகளில் லக்கடவுன்

செய்ய பட்டுள்ளது ,உலகம் தழுவிய நிலையில் 170 ஆயிரம் பேர் பலியாகியும் 23 லட்சம் மக்கள் பாதிக்க பட்டுள்ளனர்

ரஷியாவில் வேகமாக பரவும்
ரஷியாவில் வேகமாக பரவும்
Posted in இலங்கை செய்திகள்

நாளை முதல் 18 மாவட்டங்களுக்கு ஊரடங்கு தளர்வு

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் கொழும்பு, கம்பஹா,

களுத்துறை, புத்தளம், கண்டி, கேகாலை, மற்றும் அம்பாறை மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் எதிர்வரும் 20 ஆம்

திகதி காலை 5 மணிக்கு தளர்த்தப்பட்டு அன்று இரவு 8 மணிக்கு மீள அமுல்படுத்தப்படும்.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

இதனையடுத்து மறு அறிவித்தல் வரை இந்த மாவட்டங்களில் இரவு 8 மணி முதல் காலை 5 மணி வரையில் தினமும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும்.

கண்டி, கேகாலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் அலவத்துகொட, அக்குரணை, வரகாபொல மற்றும் அக்கரைப்பற்று

பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.

இந்த மாவட்டங்களுக்கு உட்பட்ட ஏனைய பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு சட்டம் ஏப்ரல் மாதம் 20 ஆம் முதல் தினமும் காலை 5 மணிக்கு தளர்த்தப்பட்டு இரவு 8 மணிக்கு மீள அமுல்படுத்தப்படும்.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களின் சில பொலிஸ் பிரிவுகள் தவிர்ந்த ஏனைய பொலிஸ் பிரிவுகளில்

எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் தினமும் காலை 5 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டு இரவு 8 மணிக்கு மீள அமுல்படுத்தப்படும்.

அதனடிப்படையில் கொழும்பு மாவட்டத்தில் கொட்டாஞ்சேனை, கிராண்ட்பாஸ், பம்பலப்பிட்டி, வாழைத்தோட்டம், மருதானை

கொத்தடுவ, முல்லேரியா, வெல்லம்பிட்டிய, கல்கிஸ்ஸ, தெஹிவளை மற்றும் கொஹுவல ஆகிய பொலிஸ் பிரிவுகளிலும்

கம்பஹா மாவட்டத்தில் ஜா-எல, கொச்சிக்கடை மற்றும் சீதுவ ஆகிய பொலிஸ் பிரிவுகளிலும் தொடர்ந்தும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

நாளை முதல் 18 மாவட்டங்களுக்கு
நாளை முதல் 18 மாவட்டங்களுக்கு
Posted in கொரனோ வைரஸ் பிரான்ஸ் செய்திகள்

கொரனோவின் தாக்குதலில் பிரான்சில் 642 பேர் பலி

கொரனோவின் தாக்குதலில் பிரான்சில் 642 பேர் பலி

பிரான்சில் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் 642 பேர்

பலியாகியுள்ளனர் ,இதுவரை அங்கு இடம்பெற்ற உயிர் பலி எண்ணிக்கை 19,323 ஆக உயந்துள்ளது

தொடர்ந்து இந்த நோயினால் பாதிக்க பட்ட நிலையில் 151,793 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்


அது தவிர 5,893 பேர் மிக ஆபத்தான நிலையில் உள்ளனர் ,இவர்கள் அனைவரும் செயற்கை சுவசமுறைக்கு உள்ளான நிலையில் உயிர் பெற்றுள்ளனர்

இந்த சுவாச கவசம் கழற்றி விட்டால் அதுவே அவர்களின் இறுதி மூச்சு நிற்கும் தருணங்கள் ஆகும் .


நாள் தோறும் அதிகரித்து செல்லும் மரணங்கள் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கொரனோவின் தாக்குதலில்
கொரனோவின் தாக்குதலில்
Posted in கொரனோ வைரஸ்

அமெரிக்காவில் கொரனோவால் 37 ஆயிரம் பேர் பலி-710,272 பேர் பாதிப்பு

அமெரிக்காவில் கொரனோவால் 37 ஆயிரம் பேர் பலி-710,272 பேர் பாதிப்பு

அமெரிக்காவில் வேகமாக பரவி வரும் கொரனோ நோயில் சிக்கி இதுவரை

முப்பத்தி ஏழாயிரம் பேர் பலியாகியுள்ளனர் .மேலும் 710,272 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

இவை மருத்துவ மனைகளிலில் இறந்தவர்களது புள்ளி விபரங்கள்

மருத்துவமனை தவிர்ந்து வயோதிப மடங்கள் மற்றும் வீடுகளில் தங்கி

இறந்தவர்கள் இழப்பு இதில் இணைக்க படவில்லை , அவற்றை இணைப்பின் உயிர் பலி அதிகம் என்பதாகும்

தொடர்ந்து வரும் இரு வாரங்களில் ஒரு லட்சம் மக்கள் உயிர் பலிகளாக அமையும் என எச்சரிக்க பட்டுள்ளது சுட்டி காட்ட தக்கது

அமெரிக்காவில் கொரனோவால்
அமெரிக்காவில் கொரனோவால்
Posted in உலக செய்திகள்

இந்தியா கடற்படையினர் 21 பேருக்கு கொரனோ -சோதனைகள் தீவிரம்

இந்தியா கடற்படையினர் 21 பேருக்கு கொரனோ -சோதனைகள் தீவிரம்

இந்தியாவின் கடல் படையினர் இருபத்தி ஒரு பேருக்கு கொரனோ நோயானது தொற்றியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது ,மும்பையில்

உள்ள கடல் படை தளத்தில் உள்ள படையினருக்கு மேற்கொள்ள பட்ட

கொரனோ சோதனைகளின் பொழுதே மேற்படி விடயம் கண்டு பிடிக்க பட்டுள்ளது

இவ்வாறு அடையாள படுத்த பட்ட சிப்பாய்கள் தனிமை படுத்த பட்டு தீவிர மருத்துவ கண்காணிப்புக்கு உள்ளாக்க பட்டுள்ளனர்

மேலும் இவர்களுடன் பழகிய அனைவரும் தற்பொழுது தீவிர சோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளனர் .


இராணுவம் வெளியிட்ட தகவலின் எண்ணிக்கை இதுவாக உள்ளது ,இழப்புக்கள் மேலும் அதிகம் என உள்ளக தவகல்கள் சில கசிகின்றன

இந்தியா கடற்படையினர்
இந்தியா கடற்படையினர்
Posted in இலங்கை செய்திகள்

பூனானை தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் இருந்து 222 பேர் வீடுகளுக்கு அனுப்பி வைப்பு

பூனானை தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் இருந்து 222 பேர் வீடுகளுக்கு அனுப்பி வைப்பு

பூனானை தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் இருந்து மேலும் 222 நபர்கள் மூன்று வார காலம் தனிமைப்படுத்தப்பட்ட

செயல்முறைக்குப் பிறகு தனிமைப்படுத்தப்பட்ட சான்றிதழ்களுடன் நேற்றுக் காலை (17) ஆம் திகதி தங்களது வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர்.

இராணுவத்தினால் வழங்கப்பட்ட போக்குவரத்து வசதிகளுடன் கொழும்பு மற்றும் கடவத்த ஆகிய பிரதேசங்களை நோக்கி

புறப்பட்ட குறித்த குழுவினருக்கு படையினரால் சிற்றுண்டி உணவுகள், குடி நீர் மற்றும் மதிய உணவுப் பொதிகள் விஷேடமாக

குழந்தைகள் மற்றும் சிறுவர்களை கருத்திற்கொண்டு வழங்கப்பட்டுள்ளன.

குறித்த தனிமைப்படுத்தல் நிலையத்தின் கட்டளை அதிகாரி, அதிகாரிகள் மற்றும் ஏனைய படையினர் உட்பட பலர்,

வெற்றிகரமாக இந்த தனிமைப்படுத்தல் காலத்தினை நிறைவு செய்து புறப்பட்ட அவர்களை வழியனுப்பி வைத்தனர்.

பூனானை தனிமைப்படுத்தல்
பூனானை தனிமைப்படுத்தல்
Posted in இலங்கை செய்திகள்

சீனாவில் இருந்து விசேட விமானத்தில் இலங்கை வந்த கொரனோ சோதனை இயந்திரங்கள்

சீனாவில் இருந்து விசேட விமானத்தில் இலங்கை வந்த கொரனோ சோதனை இயந்திரங்கள்

சீனா அரசு இலங்கைக்கு தனது விசேட விமான மூலம் பீ சீ ஆர் இயந்திரங்கள் அனுப்பி வைத்துள்ளது


,இரு நாடுகளுக்கு இடையில் இடம் பெறும் பரஸ் பர இராயத்தந்திர ,நட்பு உறவுகளின்

அடிப்படையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்க பட்டுள்ளது இவ்வாறு அனுப்பி

வைக்க பட்ட இயந்திரங்களை சீனா இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது என்பதே வியப்பு

முன்னர் போலி கொரனோ கருவிகளை வழங்கியது ,அதன் பின்னர் இப்பொழுது

இலவசமாக இதனை வழங்கியுள்ளது ,சீனாவின் இரு முகத்தை இதன் மூலாம் கண்டு கொள்ள முடிகிறது

சீனாவில் இருந்து விசேட விமானத்தில்
சீனாவில் இருந்து விசேட விமானத்தில்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் கொரோனா நோயாளர் 241 ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா நோயாளர் 241 ஆக அதிகரிப்பு

இன்றைய தினம் (2020.04.17) இது வரையில் உறுதி செய்யப்பட்ட கொரோனா வைரசு தொற்று நோயாளர்கள் மூவர் (3)

பதிவாகியிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட

வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க அவர்கள் கொவிட் 19 தொற்று பரவுவதைதடுக்கும் மத்திய நிலையத்தில் உறுதி செய்தார்.

இதற்கமைவாக இலங்கையில் பதிவான மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 241 ஆகும்

இன்றைய தினத்தில் புதிவான மூன்று நோயாளர்கள்; புனானை தனிமைப்படுத்துல்

மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டிருந்த பெண்களாவார்கள்.

இதே போன்று இன்றைய தினம் சுமார் 530 பேருக்கு கொரனோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Posted in உலக செய்திகள்

லண்டனுக்கு விமானம் ஓடிய -2 விமானிகள் கொரனோவால் பலி

லண்டனுக்கு விமானம் ஓடிய -2 விமானிகள் கொரனோவால் பலி

துருக்கிய நாட்டின் மிக பெரும் திறமை வாய்ந்த விமானிகள் பலியாகியுள்ளனர்

துருக்கிய விமான சேவை நிறுவனத்தில் பணி புரிந்த இவர்கள் இருவரும்

கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி பரிதாபகரமாக பலியாகியுள்ளனர்

விமான பயணிகளிடம் இருந்து கடத்த பட்ட நோயினால் ,பாதிக்க பட்ட

இவர்கள் சிகிச்சை பலனின்றி மருத்துவ மனையில் பலியாகினர் என்ற

தகவலை அந்த நாட்டு விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளது

லண்டனுக்கான விமான சேவையை நடத்தி வந்த விமானத்தின் ஓட்டிகளாக இவர்கள் செயல்பட்டுள்ளனர் ,அவ்வாறானவர்களே இவ்விதம் பலியாகியுள்ளனர்

மேலும் லண்டனில் இருந்து துருக்கி சென்ற 262 துருக்கிய பயணிகள் சிறப்பு முகாமில் அடைக்க பட்டு தனிமை படுத்த பட்டுள்ளனர் .

மருத்துவ சோதனைகளின் பின்னர் நோயானது இல்லை என கண்டறிய பட்டால் மட்டுமே இவர்கள் விடுவிக்க படுவார்கள் என தெரிவிக்க படுகிறது

லண்டனுக்கு விமானம் ஓடிய
லண்டனுக்கு விமானம் ஓடிய

Posted in இலங்கை செய்திகள்

21 பொலிசாருக்கு கொரனோ தொற்று – தனிமை படுத்தல்

21 பொலிசாருக்கு கொரனோ தொற்று – தனிமை படுத்தல்

இலங்கை Keselwatta பகுதியை சேர்ந்த காவல்துறையினர் 21 பேர் கொரனோ

நோயின் தொற்றுக்கு உள்ளாகி இருக்க கூடும் என்ற சந்தேகத்தில் 21 நாட்கள் தனிமை படுத்த பட்டுள்ளனர் .

கொரனோ தொற்றுக்கு உள்ளான ஒருவருடன் நெருங்கி பழகினார்கள்

என்ற நிலையில் இவர்கள் இவ்விதம் அவசரமாக தனிமை படுத்த பட்டுள்ளனர்

காவல்துறையினர் யாரவது பாதிக்க பட்டால் அவர்களுக்கு சிறப்பு முகாம்கள்

மூன்று அமைக்க பட்டிருந்தமை இங்கே நினைவு கூற தக்கது

21 பொலிசாருக்கு கொரனோ
21 பொலிசாருக்கு கொரனோ
Posted in கொரனோ வைரஸ் முக்கிய செய்திகள்

அமெரிக்காவில் 4,491 பேர் ஒரே நாளில் பலி -சடலங்கள் வைக்க இடமின்றி அவதி

அமெரிக்காவில் 35,000 பேர் பலி சடலங்கள் வைக்க இடமின்றி அவதி

அமெரிக்காவில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி இதுவரை முப்பத்தி ஐந்தாயிரம் பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 667,000 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

இவ்வாறு இறந்தவர்களது சடலங்களை வைப்பதற்கு இடமின்றி பெரும் நெருக்கடியில் அரசு சிக்கி தவித்து வருகிறது

ஒரே நாளில் 4,491 பேர் பலியாகியுள்ளனர்

சடலங்களை பிணங்கள் கட்டும் பைகளில் கட்டி கொண்டேனருக்குள் போட்டு ஏற்றி சென்று அப்படியே புதைக்கும் நிகழ்வுகளும் நடக்கிறது

எங்கும் மனித உடல்கள் ,நிரம்பி வழிகிறது ,மருத்துவ மனைகளில் தாதிமார் ,மருத்துவர்களினால் யார் யாருக்கு சிகிச்சை வழங்குவது என்ற நெருக்கடியில் உள்ளனர்

மேலும் ஐந்து ஆயிரம் பேர் எதிர்வரும் நாட்களில் பலியாகி கூடும் என எதிர் பார்க்க படுகிறது

தற்பொழுது பதின் மூவாயிரம் பேர் மிக ஆபத்தான நிலையில் உள்ளனர் ,

மருந்துகள் இன்றி தவிக்கும் அமெரிக்கா சீனாவை தமது நாட்டை சுத்தம் செய்து விட்டு செல்லும் படி மிக கோபத்துடன் டிரம்ப் பேசி இருந்தார்

20 லட்சம் மக்கள் பலியாக கூடுமென எச்சரிக்கை விடுக்க பட்டிருந்தது ,அது நடந்து விடுமோ என்ற அச்சம் இப்பொழுது மக்கள் மத்தியில் உலவுகிறது

ஆபத்தான நிலையில் உள்ளவர்கள் வரும் நாட்களில் பலியாக கூடிய அபாயம் உள்ளது என்பது இங்கே சுட்டி காட்ட தக்கது

அமெரிக்காவில் கொரனோவால் 37 ஆயிரம் பேர் பலி-710,272 பேர் பாதிப்பு click here

அமெரிக்காவில்
அமெரிக்காவில்

Posted in இலங்கை செய்திகள்

கொழும்பு வீதிகளில் குவிக்க பட்டுள்ள இராணுவம் – படங்கள் உள்ளே

கொழும்பு வீதிகளில் குவிக்க பட்டுள்ள இராணுவம் – படங்கள் உள்ளே

இலங்கையில் கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து ஊரடங்கு

பிறப்பிக்க பட்டுள்ளது ,இவ்வேளை மக்கள் நட மாட்டங்கள் மற்றும்

திருடர்கள் கைவரிசையை தடுப்பதற்கு இராணுவத்தின் பீல்ட் பைக் படை பிரிவினர்


சுற்று காவல் ரோந்தில் ஈடுபட்டுள்ளனர் ,இவர்களுடன் இராணுவம் ,மற்றும் ;

போலீசாரும் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர

இன்று பத்து மணி நேரம் ஊரடங்கு தளர்த்த பட்ட பொழுதும் அவை மீள நீடிக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது

Posted in கொரனோ வைரஸ்

அமெரிக்காவில் ஒரே நாளில் 3700 பேர் பலி – தொடரும் பேரபாயம்

அமெரிக்காவில் ஒரே நாளில் 3700 பேர் பலி – தொடரும் பேரபாயம்

அமெரிக்காவில் பரவி வரும் கொரனோ வைரஸ் நோயின் தாக்குதலில் சிக்கி ஒரே நாளில் 3700 பேர் பலியாகியுள்ளனர் என

முக்கிய ஊடகம் ஒன்று பர பரப்பு தகவலை காட்சிகளுடன் வெளியிட்டுள்ளது

இந்த மக்கள் இறப்பை கட்டு படுத்த முடியாத நிலையில் அமெரிக்கா தினறி வருகிறது .

எதிர் வரும் நாட்களில் மக்கள் அதிக அழிவை சுமக்க வேண்டி வரும் என அமெரிக்கா அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தார்

அது இவை என தற்பொழுது அம்பலமாகியுள்ளது ,முன்னரே மக்கள் பலி அதிகாமாக இருந்துள்ளது எனவும் அதனை மூடி மறைத்த அரசு

வேறு வழி இல்லாத நிலையில் தற்பொழுது அதில் ஒரு பகுதியை அறிவித்து வருவதாக தெரிவிக்க பட்டுள்ளது

தொடர்ந்து சடலங்கள் வைப்பதற்கு இடம் இல்லாத நிலையிலும் சுடலையில் நிறைந்துள்ளதாலும் எரிக்கும் நிலைக்கு தள்ள பட்டுள்ளனர்

இதுவரை 630,000 பேர் இந்த நோயினால் பாதிக்க பட்டுள்ளனர் ,24,000 பேர் பலியாகியுள்ளனர்

உலகளாவிய 137,000 பேர் பலியாகும் 20 லட்சம் மக்கள் பாதிக்க பட்டுள்ளனர்

அமெரிக்காவில் கொரனோவின் கோரத் தாண்டவம் மக்களை அதிர வைத்த வண்ணம் நகர்ந்து செல்கிறது

அமெரிக்காவில் ஒரே நாளில்
அமெரிக்காவில் ஒரே நாளில்
Posted in இலங்கை செய்திகள்

கொரனோவால் களைகட்டும் கள்ள சந்தை வியாபாரம்- சிக்கிய பெரும் புள்ளி

கொரனோவால் களைகட்டும் கள்ள சந்தை வியாபாரம்- சிக்கிய பெரும் புள்ளி

இலங்கையில் வைரஸ் நோயின் பரவலை தடுக்கும் முகமாக ஊரடங்கு சட்டம் பிறப்பிக்க பட்டுள்ளது ,


மக்கள் நலன் கருதி முன்னெடுக்க பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்ட வண்ணம் இருக்க

,இதற்குள் கள்ள சந்தை வியாபாரம் ஊடாக குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க குறுக்கு மூலைகள் முயன்று வருகின்றன

மலிந்த விலையில் சாராயத்தை கொள்முதல் செய்து அதிக விலைக்கு கொட்டல் ஒன்றில் விற்பனை செய்து வந்த ஓனர் ஒருவர்

கைது செய்யப்பட்டுள்ளார் ,இவருக்கு இந்த கள்ள சந்தை வழியாக மதுபானங்கள் விற்பனை செய்தவர்களும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்க பட்டுள்ளனர்

குறுக்கு வழியில் பயணிப்பவர்கள் ஒருநாள் சிக்க வேண்டி வரும் ,அன்று சம்பாதித்த அனைத்தும் இழக்க நேரிடும் என்பதற்கு இவை ஒரு முன்னுதாரணமாக உள்ளதை அவதானிக்க .

கொரனோவால் களைகட்டும்
கொரனோவால் களைகட்டும்
Posted in இலங்கை செய்திகள்

அத்து மீறி உலாவிய 1,599 பேர்- அதிரடி கைது

அத்து மீறி உலாவிய 1,599 பேர்- அதிரடி கைது

இலங்கையில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் விடுக்க பட்ட ஊரடங்கு

சட்டத்தின் பொழுது அத்து மீறி வெளியில் உலாவிய 1,599 பேரை தாம் கைது செய்துள்ளதாக இலங்கை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

இவ்வாறு கைதானவர்களுக்கு ஐநூறு ரூபா முதலான தண்டமும் அறவிட

பட்டுள்ளதுடன் அவர்கள் போக்குவரத்திற்கு பயன் படுத்திய வாகனங்களும் பறிமுதல் செய்ய பட்டுள்ளன .

மேலும் 14 நாட்களுக்குள் குற்ற பணம் செலுத்த பட வேண்டும், தவறின்

நீதிமன்றில் முன்னிலை படுத்த படுவார்கள் என குறிப்பிட பட்டுள்ளது

அத்து மீறி உலாவிய
அத்து மீறி உலாவிய
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் 19 மாவட்டங்களில் -10 மணித்தியாலம் தாற்காலிகமாக ஊரடங்கு அகற்றல்

இலங்கையில் 19 மாவட்டங்களில் -10 மணித்தியாலம் தாற்காலிகமாக ஊரடங்கு அகற்றல்

இலங்கையில் பத்தொன்பது மாவட்டங்களில் தற்காலிகமாக பத்து மணித்தியாலங்கள்

வரை ஊரடங்கு அகற்ற பட்டு இருக்கும் என இராணுவம் அறிவித்துள்ளது

கண்டி ,யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகள் இதில் அடங்கும் என தெரிவிக்க பட்டுள்ளது ,


இவ்வேளை மக்கள் சென்று தமக்கு வேண்டிய பொருட்களை மற்றும் அத்தியாவசிய

முதன்மை விடயங்களை செய்திடவே இந்த அறிவிப்பு நடைமுறை படுத்த பட்டுள்ளது

மக்கள் முண்டியடித்த படி வீதிகள் செல்வதை காண முடிகிறது ,வீதி போக்குவரத்து

கண்காணிப்பில் போலீசார் மற்றும் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்

இலங்கையில் 19 மாவட்டங்களில்
இலங்கையில் 19 மாவட்டங்களில்
Posted in இலங்கை செய்திகள்

இந்தியாவில் இருந்து இலங்கை வந்த பெண்ணுக்கு கொரனோ

இந்தியாவில் இருந்து இலங்கை வந்த பெண்ணுக்கு கொரனோ

இந்தியாவுக்கு உல்லாச பயணம் மேற்கொண்டு விட்டு மீள் இலங்கை

திரும்பிய பெண் ஒருவருக்கு கொரனோ நோயானது தொற்றியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது

மருத்துவ சோதனைக்கு உட்படுத்திய போதே இந்த விடயம் தெரிய வந்துள்ளது

கொழும்பு கொட்டென பகுதியில் வசிக்கும் இந்த பெண்ணோடு பழகியவர்கள் இந்த சோதனைக்கு உள்ளாக்க பட்டுள்ளனர்

Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் 238 பேர் கொரனோவால் பாதிப்பு

இலங்கையில் 238 பேர் கொரனோவால் பாதிப்பு

நேற்றைய தினம் (2020.04.15) கொரோனா வைரசு நோயாளிகளில் உறுதி செய்யப்பட்ட 5 நோயாளர்கள் பதிவானதாக சுகாதார

சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

இதற்கமைவாக இதுவரையில் இலங்கையில் பதிவான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 238 ஆகும்.


நேற்றைய தினம் பதிவான 5 நோயாளர்களில் 4 பேர் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நபர்கள் ஆவதுடன் இவர்களில்

இருவர் யாழ்ப்பாணம் பலாலி தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் அடையாளங் காணப்பட்டார்கள்.

மற்ற நோயாளி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவராவார்

என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க மேலும் தெரிவித்தார்.

இலங்கையில் 238 பேர்
இலங்கையில் 238 பேர்
Posted in இலங்கை செய்திகள்

ஊரடங்கு அகற்ற பட்ட பகுதியில் புதிய நடைமுறை

ஊரடங்கு அகற்ற பட்ட பகுதியில் புதிய நடைமுறை

இடர் வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள மாவட்டங்களைத் தவிர, ஏனைய மாவட்டங்களுக்கான ஊரடங்குச் சட்டம் தற்சமயம் தளர்த்தப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று இடர் வலயங்களாக இனம் காணப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும்

யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் அமுலில் இருந்த ஊரடங்கு சட்டம் இன்று காலை 6 மணிக்கு நீக்கப்பட்டுள்ள நிலையில்,

பிற்பகல் 4 மணிக்கு மீண்டும் அமுலுக்கு வரும். அமுலுக் வரும் ஊரடங்கு சட்டம் மீண்டும் இந்த மாவட்டங்களில் ஏப்ரல் 20

திங்கட்கிழமை காலை 6 மணிக்கு நீக்கப்பட்டு அன்றைய தினம் மாலை 4 மணி முதல் மீண்டும் அமுல்படுத்தப்படும்.

ஏப்ரல் 20 ஆம் திகதி காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்குச் சட்டம் மீள அமுல்படுத்துவது தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும்.

இதேவேளை முக கவசத்தை அணியாமல் வருவோர் வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய செனாரட்ன தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டள்ள காலப்பகுதியில் வீதிகளில் அநாவசியமாக நடமாடும் பாதசாரிகளுக்கெதிராக கடும்

நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் ஊடக பேச்சாளர் அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் உள்ளிட்ட நடைமுறைகள்

மக்களின் நலனுக்காகவே மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனவே ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டிருப்பதனால் ஏற்படும்

கஷ்டங்களை புரிந்துணர்வுடனும் பொறுப்புடனும் பொறுத்துக்கொள்ளுமாறு அரசாங்கம் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

பொருட்களை கொள்வனவு செய்வது அத்தியாவசிய பொருட்களுடன் மட்டுப்படுத்திக் கொள்ளுமாறும், தேவையற்ற

பயணங்களை தவிர்க்குமாறும் அரசாங்கம் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய பணிகளுக்காக மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகளை வினைத்திறனாக பேணும் வகையில் நடைமுறையில் உள்ள முறைமைகளை துஷ்பிரயோகம்

செய்பவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும்.

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் வேறு பொருட்களை

வீடுகளில் இருந்தவாறே பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில் தொடர்ச்சியாக வழங்களை மேற்கொள்ள அரசாங்கம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.

விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் மற்றும் சிறு தேயிலை தோட்டங்கள், ஏற்றுமதி பயிர்கள் உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபட மக்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

எந்தவொரு மாவட்டத்திலும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக குறிப்பிடப்பட்டுள்ள பிரதேசங்கள் தொடர்ந்தும்

தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாகவே கருதப்படும். எவரும் இந்த கிராமங்களுக்கு உள்வருவதோ அல்லது வெளியேறுவதோ மறு

அறிவித்தல் வரை முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஊரடங்கு அகற்ற பட்ட பகுதியில்
ஊரடங்கு அகற்ற பட்ட பகுதியில்