Posted in உலக செய்திகள்

கொரனோ தாக்குதல் 130,000 பேர் பலி -தடுப்பூசி கண்டு பிடிப்பு

கொரனோ தாக்குதல் 130,000 பேர் பலி -தடுப்பூசி கண்டு பிடிப்பு

உலகம் தழுவிய நிலையில் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இதுவரை

ஒரு லட்சத்து முப்பது ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் இருபது லட்சம் பேர் பாதிக்க பட்டுள்ளனர் .

சுமார் ஐந்து லட்சம் பேர் அந்த நோயில் இருந்து விடு பட்டு அவர் தம் வீடுகளுக்கு சென்றுள்ளனர் என உலக சுகாதார் மையம் தெரிவிக்கிறது

தொடர்ந்து நாள் தோறும் பல்லாயிரம் பேர் இறந்த வண்னம் உள்ளனர் ,இதற்குரிய மருந்து பிரிட்டனால் கண்டு பிடிக்க

பட்டுள்ளது எனவும் ,அதன் தடுப்பு ஊசி செப்டாம்பர் மாதத்திற்கு முன்னர் பயன் பாட்டுக்கு வந்து விடும் என தெரிவிக்க பட்டுள்ளது

அதற்கு இடையில் பல லட்சம் மக்கள் இறந்து விடுவார்கள் என்பதே மக்கள் கருத்தாக உள்ளது .

கொரனோ தாக்குதல்
கொரனோ தாக்குதல்
Posted in பிரித்தானிய செய்தி

லண்டன் -Croydon னில் போலி கொரனோ சோதனை கருவி விற்ற மருந்தகம் அடித்து பூட்டு

லண்டன் -Croydon னில் போலி கொரனோ சோதனை கருவி விற்ற மருந்தகம் அடித்து பூட்டு

தெற்கு லண்டன் ,Croydon பகுதியில் உள்ள மருந்தகம் ஒன்றில் போலியான கொரனோ சோதனை கருவிகளை விற்பனை புரிந்த

மருந்தகம் ஒன்று காவல்துறையினரால் முற்றுகைக்கு உள்ளாக்க பட்டு அடித்து மூட பட்டுள்ளது

உரிய ஆதாரங்கள் ,அனுமதி இன்றி மேற்படி போலிக் கருவிகளை விற்று வந்த நிலையில் இந்த மருந்தகம் அடித்து பூட்ட பட்டுள்ளது .


மேலும் குறித்த கடையில் இருந்து இருபதாயிரம் பவுண்டுகளும் பணமும் மீட்க பட்டுள்ளது .

ஐரோபியா ,பிரிட்டன் ,மருத்துவ அனுமதி இன்றி இந்த கருவிகள் விற்பனை செய்ய பட்டுள்ளதாகவும் ,அவை போலியானை எனவும் தெரிவிக்க பட்டுள்ளது

சீனாவானது கள்ள சந்தையில் இவ்வாறான போலியான கருவிகளை தாராளமாக விற்று வருகிறது ,அவையே இப்பொழுது இவ்வாறான

மருந்தகங்கள் மூலமும் விற்பனை புரிய பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது

இதுவரை பல நாடுகளில் கொரனோ சோதனை கருவிகள் இல்லாது தவித்து வருவதும் ,போலியானவற்றை வாங்கி ஏமாற்றம் அடைந்துள்ளதும் தெரிந்ததே ,

லண்டன் -Croydon னில் கொரனோ
லண்டன் -Croydon னில் கொரனோ
Posted in பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் கடைகளுக்கு ஆப்படித்த இன்சூரன்ஸ் நிறுவனம் =தவிக்கும் தமிழர்கள்

பிரிட்டனில் கடைகளுக்கு ஆப்படித்த இன்சூரன்ஸ் நிறுவனம் =தவிக்கும் தமிழர்கள்

பிருத்தானியாவில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குத்தல் காரணமாக முக்கால் வாசி கடைகள் பூட் பட்டுள்ளன .

இவ்வாறு அரசின் உத்தரவுக்கு அமைய பூட்ட பட்ட கடைகளுக்கு காப்புறுதி செலுத்த பட்டு வந்தன ,அவ்வாறு செலுத்த பட்ட

காப்புறுதி நிறுவனங்கள் தற்போது பல கடைகளை அம்போ என விட்டுள்ளன .

அதில் இவ்வாறு பூட்ட படுவதால் தமக்கு முழு அளவில் காப்புறுதி வழங்கிட

இயலாது எனவும் ,சில நிறுவனங்களோ முற்று முழுதாக தந்திட இயலாது எனவும் கையை விரித்துள்ளனவாம் .


ஆனால் அரசோ சிறு ,மற்றும், பெரும் முதலாளிகளுக்கு இழப்பப்பை வழங்கிட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தது

ஆனால் காப்புறுதி நிறுவனங்கள் தமக்கு இதனை வழங்கிட இயலாது என கையை விரித்து வருகின்றன ,எனிநும் பாதிக்க பட்ட

பொது நடைமுறையை கருத்தில் கொண்டு இவர்களுக்கு அரைவாசி இழப்பு என்றாலும் வழங்க வேண்டும் என வலியுறுத்த பட்டு வருகிறது

இதனால் தலையில் துண்டை போட்டு உட்க்காந்து இருக்கும் தமிழர் நிறுவனங்கள் சில ,

பிரிட்டனில் கடைகளுக்கு
பிரிட்டனில் கடைகளுக்கு
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை பயணிகள் விமானங்கள் வெளி நாடுகளுக்கு பறக்காது

இலங்கை பயணிகள் விமானங்கள் வெளி நாடுகளுக்கு பறக்காது

இலங்கை அரசிக்கு சொந்தமான எயார் லங்கா விமான சேவைகள் எதிர்வரும்

சித்திரை முப்பதாம் திகதி வரை பறப்பில் ஈடுபடாது எனவும் ,திட்டமிட்ட

படி தொடர்ந்து சரக்கு விமானங்கள் மட்டும் சேவையில் இருக்கும் என குறித்த விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளது

இதனடிப் படையில் இவைகள் இடம் பெறும் எனவும் ,முப்பதாம் திகதி

தமது மறு அறிவித்தலில் இது தொடர்பான விடயங்கள் தெரிய படுத்த படும் என மேலும் கூறப்பட்டுள்ளது

வெளிநாடுகள் சென்ற இலங்கையர்கள் விமானிகள் இன்றி பெரிதும் சிக்கி தவித்து வருகின்றமை குறிப்பிட தக்கது

இலங்கை பயணிகள்
இலங்கை பயணிகள்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் 214 பேர் கொரனோவால் பாதிப்பு

இலங்கையில் 214 பேர் கொரனோவால் பாதிப்பு

இலங்கையில் இதுவரை கொரனோ வைரஸ் நோயின் தாக்குதலில் சிக்கி

214 பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,மேலும் இன்று நான்கு பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்

இதுவரை ஏழுபேர் இறந்துள்ளனர் ,தொடர்ந்து பதின் மூவாயிரத்து மேற்பட்டவர்கள்

தனிமை படுத்த பட்டுள்ளனர் ,எதிர்வரும் நாட்களில் இந்த

நோயானது வேகமாக பரவும் அபாயம் உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

தமிழர் கடல் பகுதி எங்கும் இராணுவம் குவிக்க பாட்டு இறுக்கமான கண்காணிப்புக்கு உள்ளாக்க பட்டுள்ளது

இலங்கையில் கொரனோ
இலங்கையில் கொரனோ
Posted in பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

பிரிட்டன் நான்கு வாரத்திற்கு அடித்து பூட்டு – அறிவித்த அரசு

பிரிட்டன் நான்கு வாரத்திற்கு அடித்து பூட்டு – அறிவித்த அரசு

பிரிட்டனில் நிலவி வரும் கொரனோ நோயின் தாக்குதல் உயிர் பலிகளை

அடுத்து எதிர்வரும் நான்கு வாரங்களிற்கு மேலும் அடித்து பூட்ட படுவதாக அரசு அறிவித்துள்ளது

நோயினை கட்டு பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு இவ்வாறு மக்களை

வீடுகளை விட்டு வெளியில் நடமாட விடாது தடைகள் விதிப்பதன் மூலமே

காப்பாற்றிட முடியும் என்ற நிலை ஏற்பட்டதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது

அமைச்சர்களுடன் இடம்பெற்ற சந்திப்பை அடுத்து இந்த முடிவு மேற்கொள்ள பட்டுள்ளது .

அமைச்சர்களுடன் இடம்பெற்ற
அமைச்சர்களுடன் இடம்பெற்ற
Posted in உலக செய்திகள்

கொரோனா பாதித்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது

கொரோனா பாதித்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது

கேரளாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதையடுத்து குழந்தை நலமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

கேரளாவில் கொரோனா பாதித்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது


கேரளாவில் கொரோனா பாதித்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது

இந்தியாவில் முதல் கொரோனா பாதிப்பு கேரளா மாநிலத்தில் தான் கண்டறியப்பட்டது.

காசர்கோடு அருகே கும்பலா பகுதியில் இருந்து வளைகுடா நாட்டில் பணிபுரிந்த நபர் கடந்த மாதம் முதல் வாரம் கேரளா திரும்பினார்.

அவரை பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி ஆனது.

அவர் மூலம் அந்த நபரின் மனைவிக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து கணவன் -மனைவி இருவரையும் பரியராம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். அந்த பெண் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு கணவன் -மனைவி இருவரும் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டனர்.

கொரோனா தொற்றில் இருந்து மீண்ட கணவரை வீட்டுக்கு அனுப்பிய டாக்டர்கள், அவரது மனைவிக்கு பிரசவ நேரம் நெருங்கியதால் அவரை மட்டும் ஆஸ்பத்திரியில் தங்க வைத்தனர்.

நேற்று முன்தினம் அந்த பெண்ணுக்கு அழகான ஆண்குழந்தை பிறந்தது. குழந்தை நல்ல உடல் நலத்துடன் 3 கிலோ எடையுடன்

காணப்பட்டது. தற்போது காயும், சேயும் ஆஸ்பத்திரியில் நலமுடன் இருப்பதாக அவருக்கு பிரசவம் பார்த்த அரசு டாக்டர்கள்

தெரிவித்தனர். கொரோனா பாதித்த பெண்ணுக்கு குழந்தை பிறந்து இருப்பது கேரளாவில் இதுவே முதல் முறை என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

கரூர் மாவட்டம் கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த 29 வயது கர்ப்பிணி பெண் கடந்த 10-ந் தேதி நாமக்கல் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டார். அவருக்கு அங்கு ஆண் குழந்தை பிறந்தது.

இந்தநிலையில் அவருக்கு காய்ச்சல், சளி, இருமல் ஏற்பட்டதால் அவரது ரத்த மாதிரி பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதில் அந்த பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவருக்கு கரூரைச் சேர்ந்த அவரது குடும்பத்தினர்

அல்லது உறவினர்களிடம் இருந்து நோய் தொற்று பரவியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் தற்போது கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 45 ஆக உள்ளது.

Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் கொரனோவால் 190 பாதிப்பு – 7 பேர் பலி

இலங்கையில் கொரனோவால் 190 பாதிப்பு – 7 பேர் பலி

நேற்றைய தினம் (2020.04.09) இலங்கையில் உறுதி செய்யப்பட்ட கொரோனா வைரசு நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 190

ஆகுமென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க அவர்கள் கொவிட் 19 தொற்று

பரவுவதை தடுக்கும் செயற்பாட்டு மத்திய நிலையத்தில் உறுதி செய்தார்.

நேற்றைய தினம் ஒரு நோயாளர் மாத்திரம் அடையாளங்காணப்பட்டார் என்றும் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.


134 தொற்றாளர்கள் தொடர்ந்தும் அங்கொடை தொற்று நோய் வைத்தியசாலை, வெலிகந்த மற்றும் முல்லேரியா ஆதார வைத்தியசாலைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா வைரஸ் தொற்று என்ற சந்தேகத்தில் நாடளாவிய ரீதியில் 32 வைத்தியசாலைகளில் 242 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் இதுவரை இலங்கையின் 14 மாவட்டங்களில் இருந்து அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


இதேவேளை நோயாள்களுள் 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இதுவரையில் பூரண குணமடைந்த நிலையில் 49 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

இலங்கையில் கொரனோவால்
இலங்கையில் கொரனோவால்
Posted in இலங்கை செய்திகள்

இன்று முதல் ஊரடங்கு சட்டத்தை மீறி சென்றால் – தனிமை படுத்தல் முகாமில் அடைப்பு – பொலிஸ் அவசர அறிவிப்பு

இன்று முதல் ஊரடங்கு சட்டத்தை மீறி சென்றால் – தனிமை படுத்தல் முகாமில் அடைப்பு – பொலிஸ் அவசர அறிவிப்பு

ஊரடங்கு சட்டத்தை மீறி ஒரு மாவட்டத்திலிருந்து மற்றுமொரு மாவட்டத்திற்கு செல்வதற்கு முயற்சிப்பார்களாயின்

அவ்வாறானோர் கைது செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்படும் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர்கள் என்று பிரதி

பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

ஊரடங்;குச்சட்டம் அமுல் நடத்தப்பட்ட கடந்த 19 ஆம் திகதி தொடக்கம் இன்று வரையில் ஊரடங்கு சட்டத்தை மீறிய சுமார் 19

ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்றைய தினம் மாத்திரம் ஆயிரத்து 700 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று

தெரிவித்த பிரதி பொலிஸ் மா அதிபர
இவ்வாறு சட்டத்தை மீறுவோர் நாளை முதல் 14 நாட்கள்

தனிமைப்படுத்தப்படும் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர்கள் என்றும் கூறினார்.

அத்தியாவசிய தேவைக்காக வழங்கப்பட்டுள்ள அவசரகால அனுமதிப்பத்திரத்தை சிலர் முறைகேடாக பயன்படுத்துவதாக

தெரியவந்துள்ளது இவ்வாறோனருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன மேலும் தெரிவித்துள்ளார்.

இன்று முதல் ஊரடங்கு
இன்று முதல் ஊரடங்கு
Posted in இலங்கை செய்திகள்

முன்னாள் எம்பி மஸ்தானுக்கு கொரனோ -தனிமை படுத்த பட்டார்

முன்னாள் எம்பி மஸ்தானுக்கு கொரனோ -தனிமை படுத்த பட்டார்

இலங்கை வவுனியாவின் முன்னாள் எம்பி மஸ்தானுக்கு கொரனோ தொற்று உள்ளதாக

சந்தேகிக்க படுவதல் அவர் இருபத்தி ஒரு நாளுக்கு தனிமை படுத்த பட்டுள்ளார்

மரண வீடொன்றுக்கு சென்று திரும்பிய பொழுதே இவருக்கு இந்த நோயானது உள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது

மருத்துவர்கள் ஆலோசனையின் பிரகாரம் மஸ்தான் சுய தனிமை படுத்தலுக்கு உள்ளாக்க பட்டுள்ளார்


,இலங்கையில் தமிழ் அரசியல் கட்சி பிரமுகர்கள் நால்வர் ஏற்கனவனே இந்த

நோயின் அறிகுறியால் அடையாளம் காணப்பட்டு சுய தனிமை படுத்தலுக்கு உள்ளாகி இருந்தமை குறிப்பிட தக்கது

முன்னாள் எம்பி மஸ்தானுக்கு
முன்னாள் எம்பி மஸ்தானுக்கு

Posted in குற்ற செய்திகள்

கடைக்கு சென்று பொருட்களை நக்கிய கொரனோ பெண் – பதறிய ஓடிய ஊழியர்கள்

கடைக்கு சென்று பொருட்களை நக்கிய கொரனோ பெண் – பதறிய ஓடிய ஊழியர்கள்

அமெரிக்கா South Lake Tahoe பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கடை ஒன்றுக்கு

சென்றுள்ளார் ,அங்கு வைக்க பட்டிருந்த நகைகளை அவர் பார்வையிட்டுள்ளனர் ,

அதன் பின்னர் தான் பார்வையிட்ட நகைகளை நாக்கினால் நக்கியுள்ளார் .

இதனை கண்ணுற்ற ஊழியர்கள் பீதியில் பறந்தடித்து காவல்துறைக்கு

சம்பவத்தை தெரிவித்தனர் ,
விரைந்து வந்த போலீசார் விசாரணையை நடத்தினர் ,

அதன் பின்னர் இவர் நக்கிய பொருள்களை கொள்வனவு செய்திட மறுத்த நிலையில் கைது செய்ய பட்டு நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டார்

தற்போது பத்தாயிரம் டொலர் பிணையில் விடுதலை செய்ய பட்டுள்ளார் ,

கொரனோ தொற்றினால் மக்கள் அலறிய வண்ண இருக்க இந்த பெண் புரிந்தசெயல்

பெரும் அதிர்ச்சியை ஏற் படுத்தியுள்ளதுடன் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது

மக்களே எச்சரிக்கை கடைக்கு சென்றால் முன் வரிசையில் உள்ள பொருட்களை வாங்கிடாதீங்க ,

அமெரிக்கா சரக்கு விமானம் மீது எறிகணை தாக்குதல் – அதிர்ச்சியில் அமெரிக்கா click here

பிரான்சு விமான தங்கி கப்பல், கடல் படையினர் 50 பேருக்கு கொரனோ click here

கொரனோ தாக்குதல் பிரிட்டனில் 1,038பேர் பலி click here

அமெரிக்கா இராணுவ தளம் மீது ஏவுகணை தாக்குதல் – முகாம் பலத்த சேதம்- Read More Click Here

கடைக்கு சென்று பொருட்களை
கடைக்கு சென்று பொருட்களை
Posted in இலங்கை செய்திகள்

மன்னார் தாராபுரம் கொரனோ அபாய வலயாமாகி பிரகடனம் – மக்கள்ஸ் செல்ல தடை

மன்னார் தாராபுரம் கொரனோ அபாய வலயாமாகி பிரகடனம் – மக்கள்ஸ் செல்ல தடை

இலங்கை மன்னார் தாராபுரம் பகுதியில் நபர் ஒருவர்க்கு கொரனோ தொற்று ஏற்பட்டதை அடுத்து குறித்த கிராமம்

இராணுவத்தினரால் மக்கள் செல்ல தடை விதிக்க பட்டு முடக்க பட்டு

அந்த மக்கள் சுய தனிமை படுத்தலுக்கு உள்ளாக்க
பட்டுள்ளனர் .

மேலும் அவர்களுக்கு இந்த நோயானது உள்ளதா என்ற சோதனை நடவடிக்கை

மேற்கொள்ளவே இவ்வாறு புரிந்துள்ளதாக அந்த பகுதி சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

ஒருவருக்கு கொரனோ என்றால் அந்த கிராமத்தையே தனிமை படுத்தி

முடக்கும் மிக சிறந்த செயல் பாட்டில் இலங்கை ஈடுபடுவதாக நெட்டிசன்கள் கழுவி ஊற்றுகின்றனர்

அப்படி என்றால் இலங்கை முழுவதிலும் உள்ள கிராமங்கள் இவ்வாறு

அடித்து பூட்ட படும் நிலை ஏற்பட்டாலும் ஆச்சர்ய படுவதற்கு இல்லை

மன்னார்,தாராபுரம்,கொரனோ ,
மன்னார்,தாராபுரம்,கொரனோ ,
Posted in கொரனோ வைரஸ்

ஸ்பெயினில் 510 பேர் பலி – பெல்ஜியம் 205 பேர் பலி -ஈரான் 131 பேர் பலி

ஸ்பெயினில் 510 பேர் பலி – பெல்ஜியம் 205 பேர் பலி -ஈரான் 131 பேர் பலி

கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் இடம்பெற்ற கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை


ஸ்பெயினில் 510 ஆக உயர்ந்துள்ளது ,இங்கு இடம் பெற்ற மொத்த எண்ணிக்கை சுமார் 14,555 ஆக உயர்வடைந்துள்ளது

மேலும் இந்த நோயினால் பாதிக்க பட்ட நிலையில் சுமார் 146.690 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்

அதே போல பெல்யியத்தில் 205 பேர் பலியாகியுள்ளனர் ,மொத்த இறப்பு எண்ணிக்கை சுமார்


2,240 ஆக தற்போது உயர்வடைந்துள்ளது ,இதுவரை 233,403 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

அதே போல ஈரானில் 131 பேர் பலியாகியுள்ளனர்
மொத்த இறப்பு

எண்ணிக்கை 4,003 ஆக உயர்வடைந்துள்ளது ,பாதிப்பு எண்ணிக்கை 67,286 ஆக உயர்வடைந்துள்ளது

ஸ்பெயினில் 510 பேர்
ஸ்பெயினில் 510 பேர்
Posted in இலங்கை செய்திகள்

1,262 பேர் தொடர்ந்து தனிமை படுத்தல் இராணுவம் அறிவிப்பு

1,262 பேர் தொடர்ந்து தனிமை படுத்தல் இராணுவம் அறிவிப்பு

இலங்கையில் வைரஸ் நோயினால் பாதிக்க பட்டவர்கள் என சந்தேகிக்க

படும் நபர்கள் கைது செய்ய பட்டு தனிமை படுத்தி வைக்க பட்டுள்ளனர் .

இந்த நோயின் தாக்குதல் பாதிப்பு இல்லாதவர்களை தாம் விடுதலை புரிந்து வருவதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்

1,262 பேர் தொடர்ந்து தனிமை
1,262 பேர் தொடர்ந்து தனிமை
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் 186 பேர் கொரனோவால் பாதிப்பு

இலங்கையில் 186 பேர் கொரனோவால் பாதிப்பு

இலங்கையில் பரவி வரும் கொரனோ வைரஸ் நோயில் சிக்கி இதுவரை

186 பேர் பாதிக்க
பட்டுள்ளதாக இலங்கை சுகாகாதார அமைச்சு அறிவித்துள்ளது

மேலும் இதன் பாதிப்பு அதிகரிக்க படலாம் என்பதால் மக்களை வீடுகளை

விட்டு வெளியில் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்க பட்டு வருகிறது

தொடர்ந்து ஊரடங்கு சட்டங்கள் அமூல் படுத்த பட்டுள்ளது

மேலும் இந்த நோயின் தாக்குதல் அறிகுறி என சந்தேகிக்க படும் பல்லாயிரம் பேர் தனிமை படுத்த பட்டுள்ளனர்

இலங்கையில் 186 பேர்
இலங்கையில் 186 பேர்
Posted in இலங்கை செய்திகள்

கொரனோவால் இனம் காணப்பட்ட நபர் கண்டி மருத்துவ மனையில் அனுமதி

கொரனோவால் இனம் காணப்பட்ட நபர் கண்டி மருத்துவ மனையில் அனுமதி

இலங்கை கண்டி பகுதியில் நபர் ஒருவர் கொரனோ வைரஸ் தாக்குதல்

காரணமாக அடையாளம் காணப்பட்ட நிலையில் தற்பொழுது அவர்

கண்டி ஆதர் வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டுள்ளார்

மேலும் இவருடன் பழகிய உறவுகள் ,நண்பர்களை தனிமை

படுத்தும் முயற்சியில் சுகாதார அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்

இலங்கையில் பெருகி வரும் சேதங்களை அரசு மறைத்து வந்த நிலையில்

அது தாண்டி தற்பொழுது அதிக அளவிலான மக்கள் பாதிக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

கொரனோவால் இனம்
கொரனோவால் இனம்
Posted in இலங்கை செய்திகள்

யாழில் கொரனோ அபாயம் – மக்களை வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என எச்சரிக்கை

யாழில் கொரனோ அபாயம் – மக்களை வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என எச்சரிக்கை

யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் சில நாட்களில் கொரனோ வேகாம்க பரவும்

அபாயம் உள்ளதால் அது அபாய வலயமாக பிரகடன படுத்த பட்டுள்ளது

அதனால் மக்களை சில வாரங்களுக்கு வீடுகளை விட்டும் வெளியில்

செல்ல வேண்டாம் என கண்டிப்பான வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது

மீறி வெளியில் செல்வோர் கைது செய்ய படுவார்கள் என அறிவிக்க பட்டுள்ளது ,

மக்களே இதனை அதிகம் பகிருங்கள் உங்கள் நண்பர்களுக்கும் தெரிய படுத்துங்கள் ,வரும் முன் தடுப்போம் ,உயிரை காப்போம் ,

அரசின் அவசர எச்சரிக்கை …

யாழில் கொரனோ அபாயம்
யாழில் கொரனோ அபாயம்
Posted in சினிமா

கொரோனா சாதி மதம் பார்க்காமல் கொல்கிறது பிரபல நடிகை

கொரோனா சாதி மதம் பார்க்காமல் கொல்கிறது பிரபல நடிகை

கொரோனா சாதி, மதம் பார்க்காமல் கொல்வதாகவும், அதற்கு எதிரான போரில் இணைந்து செயல்படுவோம் என்றும் நடிகை ராஷி கன்னா கூறியுள்ளார்.

மதசார்பற்ற கொரோனா…. சாதி, மதம் பார்க்காமல் கொல்கிறது –
கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் அதிகரித்து வருகிறது.

வைரஸ் பரவலை தடுக்க மத்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கு பிறப்பித்து உள்ளது. வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை

அளிக்கப்படுகிறது. அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்படுகிறார்கள்.

டெல்லியில் சமீபத்தில் நடந்த மாநாட்டில் பங்கேற்று திரும்பிய பலருக்கு கொரோனா வைரஸ் தாக்கி இருப்பது பரிசோதனையில்

உறுதியானது. இதையடுத்து அந்த மாநாட்டில் பங்கேற்றவர்கள் தானாக முன்வந்து மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளும்படி மத்திய, மாநில அரசுகள் வற்புறுத்தி உள்ளன.

ராஷி கன்னா

இந்த நிலையில் இமைக்கா நொடிகள், அடங்க மறு, அயோக்யா, சங்கத்தமிழன் போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்துள்ள

ராஷிகன்னா தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு கடிதத்தை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: கோவிட்-19 வைரஸ்

மதசார்பற்றது. மதத்தின் அடிப்படையில் மக்களை அது பிரிக்கவும் இல்லை. சாதி, மதம், சொத்து போன்ற எதையும் பார்க்காமல்

அவர்களை தொற்றிக்கொள்கிறது. கொல்லவும் செய்கிறது. எனவே ஒருவரையொருவர்

குற்றம் சொல்வதை விடுத்து கொரோனாவுக்கு எதிரான போரில் இணைந்து செயல்படுவோம்.

இவ்வாறு ராஷிகன்னா கூறியுள்ளார்.

கொரோனா சாதி மதம்
கொரோனா சாதி மதம்
Posted in இலங்கை செய்திகள்

ஏழ்மை குடும்பங்களுக்கு உலர் உணவு வழங்கிய பல்கலைகழக மாணவர்கள் -photo

ஏழ்மை குடும்பங்களுக்கு உலர் உணவு வழங்கிய பல்கலைகழக மாணவர்கள் -photo

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைகழக மாணவர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்

இன்று (07) புஸ்ஸல்லாவ பிரதேசத்தில் காணப்படும் தோட்டங்களில் நிவாரணங்கள் எதுவும்


கிடைக்காத பெருந்தோட்ட குடும்பங்களுக்கு உலர் உணவு

பொருட்கள் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைகழகத்தின்

நமக்காக நாம் செயற்திட்டத்தில் அன்றாடம் தொழில் புரியும் பின்தங்கிய குடும்பங்களுக்கு ஊவா வெல்லஸ்ஸ


பல்கலைகழக மாணவர்களின் பூரண அணுசரனையில் உலர் உணவு பொருட்கள் வழங்கப்பட்டன

பல்கலைகழக மாணவர்களின்
பல்கலைகழக மாணவர்களின்
Posted in இலங்கை செய்திகள்

இந்தியா சென்று வந்தவர் கொரனோவால் மரணம் – மனைவியும் பாதிப்பு

இந்தியா சென்று வந்தவர் கொரனோவால் மரணம் – மனைவியும் பாதிப்பு

இலங்கையில் கொரனோ பாதிப்பால் மரணமான நபர் இந்தியா சென்று

நாடு திரும்பியவர் எனவும் அவ்வேளை இவருக்கு இந்த தொற்று நிகழ்ந்து உள்ளதாக சுகாதார அமைச்சசு தெரிவித்துள்ளது

மேலும் இறந்தவராது மனைவிக்கும் இந்த நோயானது தொற்றியுள்ள நிலையில்

அவர் சிறப்பு தனிமை படுத்தும் முகாமில் தனிமை படுத்த பட்டு வைக்க பட்டுள்ளார் என தெரிவித்துள்ளார்

இந்தியா சென்று வருபவர்கள் அனைவரும் சுய தனிமை படுத்தலுக்கு

உள்ளாக்கி கொள்ளுமாறு வேண்டுதல் விடுக்க பட்டிருந்தமை குறிப்பிட தக்கது