யாழில் பொலிசார் சுற்றிவளைப்பு
Posted in இலங்கை செய்திகள்

யாழில் பொலிசார் சுற்றிவளைப்பு

யாழில் பொலிசார் சுற்றிவளைப்பு

யாழில் பொலிசார் சுற்றிவளைப்பு ,யாழ்ப்பாணம் ஒஸ்மானிய கல்லூரிக்கு அருகாமையில் பாழடைந்த கட்டிடம் ஒன்றில் சட்டவிரோதமாக மாடுகள் மற்றும் ஆடுகளின் இறைச்சியினை வெட்டி வந்த நிலையம் ஒன்றை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.

பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவல்

பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் நிசாந்தவின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்டது .

இந்த சுற்றிவளைப்பில் நான்கு மாடுகள் தலை வெட்டப்பட்ட நிலையிலும், உயிருடன் 21 மாடுகளையும் 4 ஆடுகளையும் கைப்பற்றியுள்ளனர்.

இதனையடுத்து சந்தேகநபர் ஒருவரை பொலிசார் கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நீண்டகாலமாக குறித்த இடம் செயற்பட்டு வந்திருக்கலாம் என பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் நோக்கி பல இடங்களில் இருந்தும் குறித்த மாடுகள் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன

இதேவேளை அந்த இடத்தில் இருந்து விலங்குகளை இறைச்சியாக்குவதற்காக பயன்படுத்தப்பட்டுள்ள ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

திருடப்படும் மாடுகள் இங்கே வைத்து வெட்டி இறைச்சி விற்பனைக்கு எடுத்து செல்ல பட்டதாக தெரிவிக்க படுகிறது .

இதனை அடுத்து யாழ்ப்பாண போலீசார் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டனர் .

Featured

Loading...
போதைவஸ்துடன் பொலிஸ் அதிகாரி கைது
Posted in இலங்கை செய்திகள்

போதைவஸ்துடன் பொலிஸ் அதிகாரி கைது

போதைவஸ்துடன் பொலிஸ் அதிகாரி கைது

போதைவஸ்துடன் பொலிஸ் அதிகாரி ஒருவர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார் .

ஐஸ் போதைவஸ்துடன் மோட்டார் பயணித்து கொண்டிருந்த பொலிஸ் அதிகாரியே பொலிசாரிடம் சிக்கினார் .

பொலிஸ் அதிகாரி சிக்கியது எப்படி ..?

பொலிஸ் அதிகாரி ஐஸ் போதைவஸ்துடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளார் ,அபோலித்து வீதி சோதனையில் காத்திருந்த காவல்துறையினர் அவரை நிறுத்திய பொழுது ,நிறுத்தாமல் துரத்திய பொழுதே சகா காவல்துறையிடம் சிக்கி கொண்டார் .

இந்த காவல்துறை அதிகாரி நீண்டகாலமாக ஐஸ் போதை பொருளுக்கு அடிமையான நிலையில் தனது வாகனத்தில் போதை பொருள் கடத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் .

அடுத்தே இன்று சகா போலீசாரிடம் வசமாக சிக்கி கொண்டுள்ளார் .

இலங்கையில் அதிகரிக்கும் போதைவஸ்து கலாச்சாரம்

இலங்கையில் அதிகரிக்கும் செல்லும் போதைவஸ்து கலாச்சாரம் காரணமாக அதிக குற்றங்கள் நாடெங்கும் நடக்கிறது .

கடத்தல் ,கொலை ,கொள்ளை ,கற்பழிப்பு ,வெட்டு ,கொத்து ,விவகாரத்து ,போன்ற சம்பவங்கள் இந்த போதைக்கு ஆண் பெண்கள் அடிமையான நிலையில் ஏற்படுவதாக சமூக நல ஆர்வலர்கள் குற்றம், சுமத்தி வருகின்றனர் .

மக்களை காப்பாற்ற வேண்டிய காவல்துறை அதிகாரிகளும் ஐஸ் போதைவஸ்த்துக்கு அடிமையாகி செல்வதில் இருந்து இலங்கை போதைவஸ்துக்கு நீண்ட நெடுங்காலமாக சிக்கியுள்ளதை எடுத்து காட்டுகிறது .

Featured

Loading...
இந்தியாவில் மக்கள் பொலிஸ் மோதல் இருவர் மரணம் 80 பேர் காயம்
Posted in உலக செய்திகள்

இந்தியாவில் மக்கள் பொலிஸ் மோதல் இருவர் மரணம் 80 பேர் காயம்

இந்தியாவில் மக்கள் பொலிஸ் மோதல் இருவர் மரணம் 80 பேர் காயம்

இந்தியா வடக்கு நகரமான ஹல்த்வானியில் சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஆளர்கள் அமைத்த வீடுகள் கடைகள் என்பனவற்ற புல்டோசர் கொண்டு அரச படைகள் உடைக்க முற்பட்ட பொழுது மக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல் வெடித்தது .

இஸ்லாமிய மக்கள் மீது தாக்குதலை நடத்தியத்தில் இருவர்
பலியாகியும் எண்பது பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது

இந்த வன்முறைக்குஆளும் அரசாங்கம் மேற்கொண்ட மக்கள் சட்டவிரோத அடக்குமுறை நடவடிக்கையே காரணம் என பாதிக்க பட்ட மக்கள் தரப்பில் தெரிவிக்க படுகிறது .

தொடர்ந்து அந்த பகுதியில் இயல்பு நிலை பதிக்க பட்டு பதட்டம் தொடர்கிறது .

இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் படுகாயம்
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

பொலிஸாருக்கு புதிய உத்தரவு திணறும் இலங்கை பொலிஸ்

பொலிஸாருக்கு புதிய உத்தரவு திணறும் இலங்கை பொலிஸ்

இலங்கை பொலிஸாருக்கு புதிய உத்தரவு பொலிஸ் தலைமையக்கத்தால் பிறப்பிக்க பட்ட நிலையில் இலங்கை பொலிஸார் திணறி வருகின்றனர் .

லொறி சாரதி ஒருவரை சிவில் உடையில் நின்ற பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்தி படுகொலை செய்தனர் .

இதனை அடுத்து இலங்கை பொலிஸ் நிலையங்கள் யாவற்றுக்கும் உடனடி அமூலுக்கு வரும் நிலையில் ,சிவில் உடையில் பணியாற்றும் இலங்கை பொலிஸார் யாவரும் வாகனங்களை சோதனை செய்த்திட தடை விதிக்க பட்டுள்ளது .

பொலிஸாருக்கு வழங்க பட்ட இந்த அதிரடி உத்தரவை அடுத்து லஞ்ச போலிஸ் பெருச்சாளிகள் கலக்கத்தில் உறைந்துள்ளனராம் .

Posted in இலங்கை செய்திகள்

ஆயிரம் லீற்றர் டீசல் காவல்துறையால் மீட்பு

ஆயிரம் லீற்றர் டீசல் காவல்துறையால் மீட்பு

கொட்டகலை, கொமர்ஷல் பகுதியிலுள்ள மொத்த வியாபார நிலையமொன்றில் பதுக்கி வைக்கப்பட்டதாகக் கூறப்படும் ஆயிரம் லீற்றர் டீசல் கைப்பற்றப்பட்டுள்ளது.

ஐந்து பெரல்களில் சேமித்து வைக்கப்பட்டிருந்த டீசலே திம்புள்ள – பத்தனை பொலிஸாரால் இன்று (26) பிற்பகல் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தக நிலையத்தில் டீசல் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக திம்புள்ள – பத்தன பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலொன்றில் அடிப்படையில், சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது ஆயிரம் லீற்றர் டீசல் மீட்கப்பட்டுள்ளது. ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சட்ட நடவடிக்கைக்காக அவர் நாளை (27) அட்டன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

” நாங்கள் மொத்த வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள். போக்குவரத்து சேவைக்கு எமக்கு டீசல் தேவை. அதற்காகவே சேமித்து வைக்கப்பட்டது.” என கைதானவர் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

    Posted in Uncategorized

    வடக்கு லண்டனில் £184 மில்லியன் பெறுமதியான போதைவஸ்து மீட்பு -10 பேர் கைது

    பிரிட்டன் – வடக்கு லண்டன் பகுதியில் விசேட காவல்துறை அணியினர் நடத்திய திடீர் சுற்றிவளைப்பில் £184 மில்லியன் பெறுமதியான கொக்கையின் போதைவஸ்து மீட்க பட்டுள்ளது


    பெரும் போதைவஸ்து கடத்தல்

    இந்த பெரும் கடத்தல்களில் ஈடுபட்டதாக கூறப்படும் பத்து பேர் கைது செய்ய பட்டுள்ளனர் ,இவர்கள் அனைவரும் 21 வயது முதல் 56 வயதும் கொண்டவர்கள்

    தொடரும் விசாரணை


    கைதானவர்கள் தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளனர் ,பெரும் தொழில் நிறுவன ஒன்றை வைத்து நடத்தி வந்த குழுவினரே

    லொறி ஒன்றுக்குள் மறைத்து எடுத்துவரப்பட்டு மேற்படி போதைவஸ்தை மீட்டுள்ளனர்

    இரகசிய தகவல்


    உளவுத்துறைக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து மேற்படி சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது ,இதன்போது ஆயுதங்கள்

    மற்றும் பெருமளவான பணமும் மீட்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது

    Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

    பிரிட்டனில் 600.000 பவுண்டுகள் மோசடி செய்த கும்பல் மடக்கி பிடிப்பு

    பிரிட்டனில் பணமோசடியில் ஈடுபட்ட கொள்ளை கும்பல் – வீடு புகுந்து மடக்கி பிடித்த இரண்டு மாவட்ட போலீசார் ,தொடரும் விசாரணைகள்

    பிரிட்டனில் நீண்ட காலமாக மோசடியில் ஈடுபட்டு வந்த கும்பல்

    ஒன்றை கென்ட் மற்றும் மீட்பான்ட் காவல்துறையினர் இணைந்து மடக்கி பிடித்துள்ளனர்

    மூன்று வருடங்களாக இந்த மோசடி கும்பல் ஈடுபட்டுள்ளது அம்பலமாகியுள்ளது

    மேலும் இவர்களது கார் ,வீடுகள் பணம் ,வாகனங்கள் என்பன மீட்க

    பட்டுள்ளன ,தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

    Posted in உலக செய்திகள்

    அவுஸ்ரேலியாவில் பொலிசார் மீது துப்பிய கொரனோ நோயாளி

    அவுஸ்ரேலியாவில்பொலிசார் மீது துப்பிய கொரனோ நோயாளி

    அவுஸ்ரேலியா தலை நகர் சிட்னி மேற்கு பகுதியில் சாலையில் பயணித்து

    கொண்டிருந்த போலீசார் காரின் கூரை மீது பாய்ந்த 24 வயது

    வாலிபர் ஒருவர் சரமாரியாக ,இரு பொலிசார் மீது துப்பியுள்ளார் .

    சுதாகரித்து கொண்ட பொலிசார் அவரை காரில் இருந்து தள்ளி விழுத்தி கைது செய்துளளனர்

    குறித்த நபர் கொரனோ நோயின் தொற்றுக்கு உள்ளாகி இருக்க கூடும் என

    கருத படுகிறது .இதுபோல முன்னரும் சில சம்பவங்கள் இதே நாட்டில் பதிவாகி இருந்தமை குறிப்பிட தக்கது

    அவுஸ்ரேலியாவில் பொலிசார்
    அவுஸ்ரேலியாவில் பொலிசார்
    Posted in இலங்கை செய்திகள்

    கொரனோவால் களைகட்டும் கள்ள சந்தை வியாபாரம்- சிக்கிய பெரும் புள்ளி

    கொரனோவால் களைகட்டும் கள்ள சந்தை வியாபாரம்- சிக்கிய பெரும் புள்ளி

    இலங்கையில் வைரஸ் நோயின் பரவலை தடுக்கும் முகமாக ஊரடங்கு சட்டம் பிறப்பிக்க பட்டுள்ளது ,


    மக்கள் நலன் கருதி முன்னெடுக்க பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்ட வண்ணம் இருக்க

    ,இதற்குள் கள்ள சந்தை வியாபாரம் ஊடாக குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க குறுக்கு மூலைகள் முயன்று வருகின்றன

    மலிந்த விலையில் சாராயத்தை கொள்முதல் செய்து அதிக விலைக்கு கொட்டல் ஒன்றில் விற்பனை செய்து வந்த ஓனர் ஒருவர்

    கைது செய்யப்பட்டுள்ளார் ,இவருக்கு இந்த கள்ள சந்தை வழியாக மதுபானங்கள் விற்பனை செய்தவர்களும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்க பட்டுள்ளனர்

    குறுக்கு வழியில் பயணிப்பவர்கள் ஒருநாள் சிக்க வேண்டி வரும் ,அன்று சம்பாதித்த அனைத்தும் இழக்க நேரிடும் என்பதற்கு இவை ஒரு முன்னுதாரணமாக உள்ளதை அவதானிக்க .

    கொரனோவால் களைகட்டும்
    கொரனோவால் களைகட்டும்
    Posted in இலங்கை செய்திகள்

    ஊரடங்கு சட்டத்தை அலட்சியம் செய்து சுற்றித் திரிந்த 25,031 பேர் கைது

    ஊரடங்கு சட்டத்தை அலட்சியம் செய்து சுற்றித் திரிந்த 25,031 பேர் கைது

    இலங்கையில் அரசினால் விதிக்க பட்டிருந்த ஊரடங்கு சட்டத்தை அல்டசியம்

    செய்து வீதிகளில் சுற்றி திருந்த சுமார் இருபத்தி ஐந்தாயிரத்து முப்பத்தி

    ஒரு பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறு கைது செய்யப் பட்டவர்களில்

    வாகனங்களில் பயணித்தவர்கள் வாகனங்களும் பறிமுதல் செய்யப் பட்டுள்ளதுடன்

    விதிகளை மீறி செயல் பட்டனர் என்ற குற்ற சாட்டில் ஐநூறு ரூபா முதலான தண்டமும் அறவிட பட்டுள்ளது

    மேலும் இவ்வாறு வீதிகளில் சுற்றுவார்கள் கைது செய்ய பட்டு தனிமை

    படுத்தல் முகாம்களில் அடைத்து வைக்க படுவார்கள் என அரசு எச்சரித்து இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது

    ஊரடங்கு சட்டத்தை
    ஊரடங்கு சட்டத்தை