Tag: நோயாளி
நோயாளிகளுக்கான முதல் உணவு மற்றும் பானங்கள் துறை தொடங்கப்பட்டது
நோயாளிகளுக்கான முதல் உணவு மற்றும் பானங்கள் துறை தொடங்கப்பட்டது
நோயாளிகளுக்கான முதல் உணவு மற்றும் பானங்கள் துறை தொடங்கப்பட்டது

மகாரகமவில் உள்ள அபேக்ஷா மருத்துவமனை நாளை (6) உணவு மற்றும் பானங்கள் துறையைத் திறக்கும், இது ஒரு அரசு மருத்துவமனையில் முதல்
முறையாக அறிமுகப்படுத்தப்படுவதைக் குறிக்கிறது. சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் தலைமையிலான இந்த முயற்சி, ஒரு முன்னோடி திட்டத்தின் கீழ்
உள் நோயாளிகளுக்கு தனிப்பயனாக்கப்பட்ட, சத்தான உணவை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ இந்த அறிமுகத்தைத் தொடங்கி வைப்பார், மேலும் சீரான மற்றும் சுவையான
உணவுகளை அணுகுவதை உறுதி செய்வதன் மூலம் நோயாளி பராமரிப்பை மேம்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய அமைப்பின் கீழ், நோயாளிகள்
பாரம்பரிய ஒற்றைத் தட்டு மாதிரியை மாற்றியமைத்து, அரிசி, காய்கறிகள் மற்றும் புரதங்களின் தனித்தனி பகுதிகளுடன் தனிப்பயனாக்கப்பட்ட தட்டுகளைப் பெறுவார்கள்.
ஒரே நேரத்தில் 2,000 நோயாளிகளுக்கு உணவு தயாரிக்கும் திறன் கொண்ட புதிதாக நிறுவப்பட்ட நவீன சமையலறையும் திறக்கப்படும். இந்த
சமையலறை புதிதாக உருவாக்கப்பட்ட உணவு மற்றும் பானங்கள் துறையின் கீழ் செயல்படும்.
இந்த திட்டம் அபேக்ஷா மருத்துவமனை நிர்வாக ஆணையத்தின் வழிகாட்டுதலின் கீழ், அமைச்சகம், இலங்கை மருத்துவ ஊட்டச்சத்து சங்கம்
(SLMNA) மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் சங்கத்துடன் இணைந்து செயல்படுத்தப்படுகிறது. ருஹுணு மகா கதிர்காம தேவாலயா, இலங்கை
இராணுவம், லேடி ஜே, ஹிர்தராமணி குழுமம் மற்றும் கிராண்ட் மோனார்க் ஹோட்டல் உள்ளிட்ட நிறுவனங்களும் ஆதரவை வழங்கியுள்ளன.
இந்த முயற்சி குறித்துப் பேசிய அபேக்ஷா மருத்துவமனையின் மருத்துவ ஊட்டச்சத்து மருத்துவரும் திட்ட ஒருங்கிணைப்பாளருமான டாக்டர் சஜித
மல்லவராச்சி, சிகிச்சையின் போது ஏற்படும் சிக்கல்களைக் குறைக்க சத்தான மற்றும் சுவையான உணவை வழங்குவது அவசியம் என்று கூறினார்.
வீட்டிலிருந்து கொண்டு வரப்படும் உணவை விட சமமாகவோ அல்லது சிறப்பாகவோ, போதுமான அளவு, சுவை மற்றும் ஊட்டச்சத்து மதிப்புடன்
உணவுகள் இருப்பதை உறுதி செய்வதே முக்கிய குறிக்கோள் என்று அவர் மேலும் கூறினார்.
சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சகம் எதிர்காலத்தில் நாடு முழுவதும் உள்ள பிற அரசு மருத்துவமனைகளுக்கும் இந்த திட்டத்தை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாக டாக்டர் மல்லவராச்சி மேலும் தெரிவித்தார்.
தாதியைதாக்கி விட்டு தப்பிசென்ற நோயாளி
தாதியைதாக்கி விட்டு தப்பிசென்ற நோயாளி
தாதியைதாக்கி விட்டு தப்பிசென்ற நோயாளி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது. The patient who attacked the nurse and escaped .
பாநந்துறை ஆதார வைத்திய சாலையில் கீழே விழுந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி
அங்கு பணியில் இருந்த தாதியரை தாக்கி விட்டு தப்பிச் சென்றுள்ளார்.
நோயாளி தப்பிச்செல்லும் பொழுது மது போதையில் The patient was drunk when he escaped.
இந்த நோயாளி தப்பிச்செல்லும் பொழுது மது போதையில் இருந்ததாகவும் அதன் பொழுதே அவர் தாதியை தாக்கி விட்டு தப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான தாதிக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தற்பொழுது தப்பிச்சென்ற நோயாளியை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாணாந்துறை ஆதார வைத்தியசாலை Panadura Base Hospital
மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் அங்கு பணிபுரிந்த தாதி மீது தாக்குதல நடத்திய சம்பவம் பாணாந்துறை ஆதார வைத்தியசாலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கையை இழந்து கதறும் நோயாளி|யாழில் நடந்த மருத்துவ மோசடி |அதிர்ச்சி தகவல்
கையை இழந்து கதறும் நோயாளி|யாழில் நடந்த மருத்துவ மோசடி |அதிர்ச்சி தகவல்
கையை இழந்து கதறும் நோயாளி|யாழில் நடந்த மருத்துவ மோசடி |அதிர்ச்சி தகவல்,
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் வாள் வெட்டு குழுவினரால் வெட்டப்பட்ட ,தோழர் ஒருவர் சிகிச்சை பெற சென்ற பொழுது ,அங்கு நடந்த மருத்துவர்கள் தவறான சிகிச்சை வழங்கிய மருத்துவர் சிலரது விடயம் வெளியாகியுள்ளது .
காயங்களுக்கு உள்ளான நிலையில் ,நோயாளி பட்ட வேதனைகள் ,அவரது கையை துண்டாக வெட்ட வேண்டும் என் அகோபி சங்கர் தெரிவித்துள்ளதாக பாதிக்க பட்டவர் வழங்கிய செவ்வியில் காணப்படுகிறது .
யாழ் தனியார் வைத்திய மருத்துவமனையாக விளங்கி வரும் நோதன் மருத்துவமனையின் சத்திர சிகிச்சையையாளராக காணப்படும், கோபி சங்கர், தவறான சிகிச்சை வழங்கி மக்களை தண்டித்து வருவதாக பாதிக்க பட்டவர் கருத்து தெரிவித்துள்ளார் .
மேலும் நோயாளிக்கு அச்சுறுத்தல் விடும் வகையில் ,வெட்டுக்கு உள்ளன கையை துண்டாக வெட்டி இருக்க வேண்டும் என கூறியதாக அவர் தெரிவித்துள்ளார் .
பலத்த வெட்டு காயம்
வாள்வெட்டு குழுவின் தாக்குதலில் கையில் பலத்த வெட்டு காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் ,சிகிச்சை பெற சென்றவர் வழங்கிய நேர்காணல் கீழே ,அவரது குரலில் காணப்படுகிறது .
மக்களே அதனை கண்டிப்பாக பாருங்கள் ,அதற்கு மருத்துவ அறிவு சார்ந்த ஒருவர் வழங்கிய பதில் கருதும் இணைக்க பட்டுள்ளது .
இதில் இணைந்து தமது பக்க விளக்கத்தை வழங்கிய ஹப்பி என்ற பெயர் கொண்ட ,அந்த உறவுக்கு எதிரி இணையதின் சார்பாக நன்றிகளை ,தீபன் ,ஹாப்பி ஆகிய இருவருக்கும் தெரிவித்து கொள்கிறோம் .
- வெளிநாட்டு இலங்கையர் கட்டடம் வங்கிக்கு பணம் அனுப்ப வேண்டுமாம் பிச்சை எடுக்கும் இலங்கை

- ஈஸ்டர் ஞாயிறு விசாரணை உருட்டும் அனுரா பயங்கரவாத அரசு

- தெற்கு ஆசியாவில் இலங்கை அமைதியான நாடாம்

- கோயில் ஸ்டுடியோ உபகரணங்களைத் திருடியதற்காக நபர் கைது

- மோடிக்கு அனுரா வாழ்த்து

- ஆபத்தான நிலையில் நாடு அவசரகால சட்டம் நீடிப்பு

- ரயில்வே ஊழியர் போராட்டம் தள்ளாடும் அனுரா பயங்கவாத ஆட்சி

- ஜேவிபி பயங்கரவாதி விமல் வீரவன்சாவுக்கு அனுரா பயங்கரவாதி ஆப்பு

- கடானா அருகே ரயில்-முச்சக்கர வண்டி மோதலில் இருவர் பலி

- இலங்கையர்கள் வாழ்வாதாரத்திற்காக அதிகமாகக் கடன் வாங்குகிறார்கள்

நோயாளியை தூக்கி சென்ற அவலம் வைத்தியசாலையில் நோயாளிகளுக்கு கெடுபிடி
நோயாளியை தூக்கி சென்ற அவலம் வைத்தியசாலையில் நோயாளிகளுக்கு கெடுபிடி
திருகோணமலை பொது வைத்தியசாலையில் நோயாளியை கொண்டு செல்வதற்கு சக்கர நாற்காலி வழங்கப்படாமையால் அவரின் உறவினர்கள் நோயாளியை தூக்கிக் கொண்டு சென்ற சம்பவம் நேற்று (19) இடம்பெற்றுள்ளது.
திருகோணமலை வைத்தியசாலையில் எலும்பு முறிவுக்கு உள்ளாகி சிகிச்சை பெறுவதற்காக சென்ற நோயாளியை கொண்டு செல்வதற்கு சக்கர நாற்காலி வழங்கப்படவில்லை எனவும்
இதனால் நோயாளியை தூக்கிக் கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதுபோன்ற பல சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகவும் இதனால் நோயாளிகள் பல அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாகவும் தெரிய வருகின்றது.
நோயாளியை தூக்கி சென்ற அவலம் வைத்தியசாலையில் நோயாளிகளுக்கு கெடுபிடி
அத்துடன் நோயாளிகளுக்கான கட்டில்கள் பற்றாக்குறையின் காரணமாக தரையில் காட்போட் அட்டைகளை விரித்து படுக்க வேண்டி இருப்பதாகவும் நோயாளிகள் கவலை வெளியிடுகின்றனர்.
திருகோணமலை வைத்தியசாலையில் நிலவும் வைத்தியர்கள், மருந்து மற்றும் வைத்தியசாலை உபகரணங்களின் பற்றாக்குறையின் காரணமாகவும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவருகின்ற பணிப்பகிஷ்கரிப்பின் காரணமாகவும் சிறந்த சேவையினை பெற்றுக் கொள்ள முடியாதுள்ளதாகவும் நேயாளிகள் விசனம் வெளியிடுகின்றனர்
- வெளிநாட்டு இலங்கையர் கட்டடம் வங்கிக்கு பணம் அனுப்ப வேண்டுமாம் பிச்சை எடுக்கும் இலங்கை
- ஈஸ்டர் ஞாயிறு விசாரணை உருட்டும் அனுரா பயங்கரவாத அரசு
- தெற்கு ஆசியாவில் இலங்கை அமைதியான நாடாம்
- கோயில் ஸ்டுடியோ உபகரணங்களைத் திருடியதற்காக நபர் கைது
- மோடிக்கு அனுரா வாழ்த்து
- ஆபத்தான நிலையில் நாடு அவசரகால சட்டம் நீடிப்பு
- ரயில்வே ஊழியர் போராட்டம் தள்ளாடும் அனுரா பயங்கவாத ஆட்சி
- ஜேவிபி பயங்கரவாதி விமல் வீரவன்சாவுக்கு அனுரா பயங்கரவாதி ஆப்பு
- கடானா அருகே ரயில்-முச்சக்கர வண்டி மோதலில் இருவர் பலி
- இலங்கையர்கள் வாழ்வாதாரத்திற்காக அதிகமாகக் கடன் வாங்குகிறார்கள்
நோயாளிகளால் நிரம்பி வழிகிறது நோயியல் வைத்தியசாலை
நோயாளிகளால் நிரம்பி வழிகிறது நோயியல் வைத்தியசாலை
இலங்கையில் ஒமிக்ரோன் பரவலால், தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில்
(IDH) நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ஹசித்த அத்தநாயக்க தெரிவித்தார்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை
அதிகரிப்பதுடன், அவர்களுக்கான ஒக்சிஜனின் தேவையும் அதிகரித்து வருகிறதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சுவாச பிரச்சினை நோயாளிகளுக்கு கொரோனா தொற்று பரிசோதனை
சுவாச பிரச்சினை நோயாளிகளுக்கு கொரோனா தொற்று பரிசோதனை
வைத்தியசாலைகளின் வெளிநோயாளர் பிரிவுகளுக்கு வரும் சுவாச பிரச்சினை
உள்ள நோயாளிகளின் மதிரிகளைப்பெற்று கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.
பிரதான தொற்றுநோய் தடுப்பு விசேட வைத்தியர் சுகத் சமரவீர இதுதொடர்பாக
தெரிவிக்கையில் .இந்த நடவடிக்கை அடுத்த வாரத்திலிருந்து 15 பிரதான வைத்தியசாலைகளில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கூறினார்.
இதேவேளை, கொரோனா தொடர்பான 12 ஆயிரம் பிசிஆர் பரிசோதனைகள்
மேற்கொள்ளப்பட்டிருப்பதாக மருத்துவ ஆராய்ச்சி நிறுவகத்தின் பணிப்பாளர் டொக்டர் ஜயருவன் பண்டார தெரிவித்தார்.
தேவைகளுக்கு அமைவாக பரிசோதனைகளின் எண்ணிக்கையையும் அதிகரிக்க முடியும் என்றும் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 269 ஆக உயர்வு
கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 269 ஆக உயர்வு
இலங்கையில் இதுவரையில் பதிவான கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை 269 ஆகும்.
இன்றைய தினம் (2020.04.19) இதுவரையில் கொரோனா வைரசு தொற்றினால் உறுதி செய்யப்பட்ட 15 நோயாளர்கள்
பதிவாகியிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க உறுதி செய்தார்.
இந்த நோயாளர்கள் 15 பேரும் கொரோனா தொற்று நோயாளர்களுடன்
நெருக்கமாக தொடர்பை கொண்டிருந்ததினால் கொழும்பு பிரதேசத்தில்
தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தவர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.













