Tag: அறிவிப்பு
மக்களை வெளியேற இஸ்ரேல் அறிவிப்பு
மக்களை வெளியேற இஸ்ரேல் அறிவிப்பு
மக்களை வெளியேற இஸ்ரேல் அறிவிப்பு ,இஸ்ரேலிய இராணுவம் பெய்ரூட்டில் புதிய வெளியேற்ற உத்தரவை வெளியிட்டது.
பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகளில் வசிப்பவர்கள் உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேல் ராணுவம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
போர்ஜ் எல்-பராஜ்னே பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் வசிப்பவர்களை தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுமாறு இராணுவம் குறிப்பாக அழைப்பு விடுத்தது.
லெபனான் தலைநகர் மீதான வன்முறை வான்வழித் தாக்குதல்களுக்கு சற்று முன்னதாகவே இஸ்ரேலிய இராணுவத்திடம் இருந்து கிட்டத்தட்ட இரவு நேர நிகழ்வாக மாறியுள்ள இந்த வெளியேற்ற உத்தரவுகள் வெளியிடப்பட்டன.
துப்பாக்கிகளை கையளிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவிப்பு
துப்பாக்கிகளை கையளிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவிப்பு
துப்பாக்கிகளை கையளிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவிப்பு ,பொதுமக்களுக்கு தற்காப்புக்காக வழங்கப்பட்டுள்ள அனைத்து துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை மீண்டும் கைப்பற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
குறித்த துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் எதிர்வரும் நவம்பர் 07 ஆம் திகதிக்கு முன்னர் ஒப்படைக்கப்பட
வேண்டும் என பாதுகாப்பு அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.
துப்பாக்கிகள் மதிப்பாய்வு செய்யப்பட்டு தேவை என்ன என்பதை ஆராய்ந்த பின்னர் மீண்டும் உரிமையாளர்களுக்கு கையளிக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது..
இலங்கை தொடர்பில் IMF வௌியிட்ட அறிவிப்பு
இலங்கை தொடர்பில் IMF வௌியிட்ட அறிவிப்பு
இலங்கை தொடர்பில் IMF வௌியிட்ட அறிவிப்பு ,இலங்கையில் புதிதாக தெரிவாகியுள்ள ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுவதற்கு தயாராக இருப்பதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) அறிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வௌியிட்டு சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் இதனைக் குறிப்பிட்டார்.
நாணய நிதியம் கடன் உதவியுடன் தற்போது இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வருகின்றது. இவ்வாறான சூழ்நிலையில்
இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் புதிய அரசாங்கத்துடன் பணியாற்றத் தயாராக உள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், மூன்றாவது மதிப்பாய்வு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விரைவில் கலந்துரையாடல்களை ஆரம்பிக்கவுள்ளதாகவும் சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பதட்டம் அவசர இலக்கங்கள் அறிவிப்பு
பதட்டம் அவசர இலக்கங்கள் அறிவிப்பு
பதட்டம் அவசர இலக்கங்கள் அறிவிப்பு ,அடுத்து வரும் நாட்களில் நாட்டில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் என பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.
இன்று (21) மாலை 4 மணியளவில் வாக்கெடுப்பு முடிவடைந்த பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் கலகத் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தேவைக்கேற்ப கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் வீதித் தடைகள் உள்ளதாகவும், எனவே முடிவுகள் வெளியாகும் வரை பாதுகாப்புத் திட்டம் நாட்டில் முழுமையாகச் செயற்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, தேர்தலுக்குப் பின்னரான காலப்பகுதியில் ஒரு வார காலத்திற்குள் எந்தவொரு நபரும் வாகனங்களிலோ அல்லது பாதயாத்திரையிலோ ஊர்வலம் செல்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாகவும், சகல மக்களும் இந்த விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிக்கின்றார்.
ஒரு பிரஜை என்ற வகையில், சட்டத்தை அமைதியாகக் கடைப்பிடித்து, நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க இலங்கை காவல்துறைக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
அமைதியை சீர்குலைக்கும் செயல் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறும் பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.
119
118
107 (வடக்கு, கிழக்கிற்கு)
011 202 7149
011 201 3243
111 239 9104 – (தொலைநகல் எண்)
- போதையில் சாரதி இரு பெண்கள் பலி

- கடல் அபாயகரமானதாக மாறுவதால் எச்சரிக்கை

- யாழா பருவத்திற்கு நீர்த்தேக்கங்களில் 63% நீர் இருப்பு உறுதி: நீர்ப்பாசனத் திணைக்களம்

- டிரம்ப் நிர்வாகத்தில் இந்திய அதிகாரி ராஜினாமா

- குற்றவாளிகளை மிரட்டு அனுரா அரச உளவுத்துறை

- இலங்கை கடல் எல்லையில் கப்பலை சிறை பிடித்த அமெரிக்கா

- வாகன இறக்குமதியில் குறைவு இல்லை சவால் விடும் சுங்கத் தரவு

- இலங்கையில் வேகமாக பரவும் காய்ச்சால்

- இலங்கையில் புதிய மலேரியா ஒட்டுண்ணி அச்சுறுத்தல்

- சீனப் பாதுகாப்புத் தூதர் பாதுகாப்புச் செயலாளரைச் சந்தித்தார்

தேர்தல்கள் ஆணைக்குழு பொலிஸாருக்கு அவசர அறிவிப்பு
தேர்தல்கள் ஆணைக்குழு பொலிஸாருக்கு அவசர அறிவிப்பு
தேர்தல்கள் ஆணைக்குழு பொலிஸாருக்கு அவசர அறிவிப்பு ,ஜனாதிபதி வேட்பாளர்களை விளம்பரப்படுத்தும் வகையில் வாகனங்களில் ஒட்டப்பட்டுள்ள அனைத்து ஸ்டிக்கர்களையும் உடனடியாக அகற்றுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
1981 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க ஜனாதிபதி தேர்தல் சட்டத்தின் 74 ஆவது பிரிவின் கீழ் அது குற்றமாகும் என ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
தனியார் பஸ்கள், முச்சக்கர வண்டிகள் உள்ளிட்ட தனியார் வாகனங்களில் ஜனாதிபதி வேட்பாளர்கள் மற்றும் கட்சிகளை விளம்பரப்படுத்தும் அடையாளங்கள், புகைப்படங்களுடன் கூடிய ஸ்டிக்கர்கள், கொடிகள் போன்றவற்றை காட்சிப்படுத்துவது தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
குறித்த ஸ்டிக்கர்களை அகற்றுவதற்கு அனைத்து பொலிஸ் அதிகார பிரிவுகளையும் உள்ளடக்கிய வகையில் அவசர சோதனைகளை மேற்கொள்ளுமாறும் தேர்தல்கள் ஆணைக்குழு பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இதுவரை 3,041 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அந்த முறைப்பாடுகளில் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பாக 2,947 முறைப்பாடுகளும் வன்முறைச் செயல்கள் தொடர்பாக 25 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன.
இதேவேளை, எதிர்வரும் 21ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளமையினால், எதிர்வரும் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளும் மூடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
வாக்கு எண்ணும் மையங்களாகப் பயன்படுத்தப்படும் பாடசாலைகளை தேவைக்கேற்றவாறு மூடுவதற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் தொடர்பான அறிவிப்பு
எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் தொடர்பான அறிவிப்பு
எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் தொடர்பான அறிவிப்பு ,2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபை தேர்தல் தொடர்பில் எல்பிட்டிய பிரதேச சபைக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது தொடர்பான அறிவிப்பை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
இதன்படி, 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது தொடர்பான அறிவிப்பு, எல்பிட்டிய உள்ளூராட்சி சபையின் தேர்தல் அதிகாரியினால் இன்று (26) அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கட்டுப்பணத்தை செலுத்தும் நடவடிக்கை இன்று முதல் செப்டம்பர் 11 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரையும் மேற்கொள்ள முடியும் எனவும்,
வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது செப்டம்பர் 9 ஆம் திகதி முதல் செப்டம்பர் 12 ஆம் வரை காலி மாவட்ட ஆளுநர் அலுவலகத்தில் நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையாளர் நாயகம் திரு.சமன் ஸ்ரீ ரத்நாயக்க அறிவித்துள்ளார்.
இஸ்ரேலுக்கான விமானங்கள் இரத்து இத்தாலி அறிவிப்பு
இஸ்ரேலுக்கான விமானங்கள் இரத்து இத்தாலி அறிவிப்பு
இஸ்ரேலுக்கான விமானங்கள் இரத்து இத்தாலி அறிவிப்பு,ஈரான் தாக்குதல் எதிரொலி ,அலறும் சர்வதேசம் .
- தெற்கு லெபனானில் இஸ்ரேலிய தாக்குதலில் இருவர் பலி, 22 பேர் காயம்

- இஸ்ரேலியத் துப்பாக்கிச் சூட்டில் பாலஸ்தீனிய மீனவர் கொல்லப்பட்டார்

- தெற்கு காசாவில் ஹமாஸ் தளபதி பலி

- அமெரிக்கா அதிகாரிகளை உளவு பார்க்கும் இஸ்ரேல் வெடித்த சர்ச்சை

- காசா மருத்துவமனை இயக்குநர் அபு சஃபியாவை விடுவிக்க ஆம்னெஸ்டி தலைவர் அழைப்பு

- உலகக் கோப்பை தூதுக்குழு உறுப்பினர்களுக்கு அமெரிக்கா விசா மறுப்பு

- பச்சிளங்குழந்தை மீது இஸ்ரேலியப் படைகள் துப்பாக்கிச் சூடு

- பிராங்பர்ட்டில் போயிங் 787 விமானத்தின் முன்சக்கர அமைப்பு உடைந்ததில் பலர் காயம்

- ஈரான் போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்யா உதவும் புட்டீன்

- லெபனானில் இஸ்ரேல் சிப்பாய் பலி

இஸ்ரேலை தாக்குவோம் ஈரான் அறிவிப்பு
இஸ்ரேலை தாக்குவோம் ஈரான் அறிவிப்பு
இஸ்ரேலை தாக்குவோம் ஈரான் அறிவிப்பு , பாலஸ்தீன ஹமாஸ் மக்கள் விடுதலை இயக்க தலைவர் இஸ்மாயில் ஹனியா ஈரான் தலைநகரில் வைத்து படுகொலை செய்யப்பட்ட நடவடிக்கைக்கு இஸ்ரேலை தாக்குவோம் ஈரான் தெரிவித்துள்ளது .
- தெற்கு லெபனானில் இஸ்ரேலிய தாக்குதலில் இருவர் பலி, 22 பேர் காயம்

- இஸ்ரேலியத் துப்பாக்கிச் சூட்டில் பாலஸ்தீனிய மீனவர் கொல்லப்பட்டார்

- தெற்கு காசாவில் ஹமாஸ் தளபதி பலி

- அமெரிக்கா அதிகாரிகளை உளவு பார்க்கும் இஸ்ரேல் வெடித்த சர்ச்சை

- காசா மருத்துவமனை இயக்குநர் அபு சஃபியாவை விடுவிக்க ஆம்னெஸ்டி தலைவர் அழைப்பு

- உலகக் கோப்பை தூதுக்குழு உறுப்பினர்களுக்கு அமெரிக்கா விசா மறுப்பு

- பச்சிளங்குழந்தை மீது இஸ்ரேலியப் படைகள் துப்பாக்கிச் சூடு

- பிராங்பர்ட்டில் போயிங் 787 விமானத்தின் முன்சக்கர அமைப்பு உடைந்ததில் பலர் காயம்

- ஈரான் போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்யா உதவும் புட்டீன்

- லெபனானில் இஸ்ரேல் சிப்பாய் பலி

அர்ச்சுனா அறிவிப்பு அரசியலுக்கு வருகிறேன்
அர்ச்சுனா அறிவிப்பு அரசியலுக்கு வருகிறேன்
அர்ச்சுனா அறிவிப்பு அரசியலுக்கு வருகிறேன்,கண்டி பெரதெனியா மருத்துவமனைக்கு மாற்றம் செய்ய பட்ட மருத்துவர் அர்ச்சுனா அங்கு பணியை ஏற்றுக்கொண்டுள்ளார் .
தற்போது ஆறு நாள் விடுமுறையில் செல்வதாகவும் நாளை சாவகச்சேரி வரவுள்ளதாக அறிவித்துள்ளார் .
அதனை அடுத்து சாவகச்சேரிக்கு செல்லும் இவரை மக்கள் சந்திக்க தயாராகி வருகின்றனர் .
யாழ்ப்பாணம் சாவகச்சேரிக்கு வருகை தரும் இவர் சாவகச்சேரி மருத்துவமனைக்கு செல்ல போகிறாரா அல்லது அங்கு மக்களை சந்திக்க போகின்றாரா என்பது தொடரப்பாக எதுவும் தெரியவில்லை .
அவரது பேச்சை காணொளியில் முலைமையாகி பார்க்க
- போதையில் சாரதி இரு பெண்கள் பலி

- கடல் அபாயகரமானதாக மாறுவதால் எச்சரிக்கை

- யாழா பருவத்திற்கு நீர்த்தேக்கங்களில் 63% நீர் இருப்பு உறுதி: நீர்ப்பாசனத் திணைக்களம்

- டிரம்ப் நிர்வாகத்தில் இந்திய அதிகாரி ராஜினாமா

- குற்றவாளிகளை மிரட்டு அனுரா அரச உளவுத்துறை

- இலங்கை கடல் எல்லையில் கப்பலை சிறை பிடித்த அமெரிக்கா

- வாகன இறக்குமதியில் குறைவு இல்லை சவால் விடும் சுங்கத் தரவு

- இலங்கையில் வேகமாக பரவும் காய்ச்சால்

- இலங்கையில் புதிய மலேரியா ஒட்டுண்ணி அச்சுறுத்தல்

- சீனப் பாதுகாப்புத் தூதர் பாதுகாப்புச் செயலாளரைச் சந்தித்தார்

தமிழருக்கு விடுதலை பிரிட்டன் தொழில் கட்சி அறிவிப்பு
தமிழருக்கு விடுதலை பிரிட்டன் தொழில் கட்சி அறிவிப்பு
தமிழருக்கு விடுதலை பிரிட்டன் தொழில் கட்சி அறிவிப்பு ,பிரிட்டனில் இடம்பெற உள்ள தேர்தலில் தொழில் கட்சி வெற்றி பெற்றால் ,இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாகவும் ,அவர்களின் தீர்வுகளை பெற்றுக்கொடுக்க நாம் அயராது பாடுபடுவோம் என பிரிட்டன் தொழில் கட்சி அறிவித்துள்ளது .
இவர்கள் கட்சியில் உமா குமரன் என படும் தமிழ் பெண் ஒருவரும் போட்டியிடுகின்றார்.
அவ்வாறான நிலையில் தமிழர்களை சந்தித்து பேசிய முக்கிய பிரிட்டன் தொழிற்கட்சி பிரமுகர்கள் கீழ்வருமாறு தெரிவித்துள்ளார் .
நமது நாடு மிகப் பெரிய சமூகம் அல்ல சிறுபான்மை சமூகம், ஆனால் நீங்கள் உங்கள் குரலை ஒலிக்கச் செய்திருக்கிறீர்கள்,
தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்த கரேத் தோமஸ்
ஆம், எங்கள் தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்த கரேத் தோமஸ், லைட்டோனா ,போன்ற ஸ்டீபன் டிம்ஸைப் போன்ற லைட் லிம் பிரவுன் போன்ற ஏராளமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.
உங்கள் நீதிக்கான கூக்குரலைக் கேட்காத தமிழ் மக்களே இல்லாத இன்னும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொறுப்புக்கூறலுக்கான உங்கள் கோரிக்கையைக் கேட்டு, 100% பங்களிக்க உங்களுடன் இருக்கிறார்கள்,
எங்கள் நிழல் வெளியுறவுச் செயலாளர் டேவிட் லாமி உட்பட, எங்கள் தற்போதைய தலைவர் உட்பட, நமது அடுத்த பிரதமர் கியாவின் விவசாயியாக இருப்பார் என நான் நம்புகிறேன்,
இன்னும் இரண்டு வாரங்களுக்குள் நமக்கு ஒரு தொழிலாளர் அரசாங்கம் இருந்தால்,
இலங்கையில் மனித உரிமை மீறல்கள்
இலங்கையில் மனித உரிமை மீறல்கள் வரலாற்று மற்றும் தற்காலம் தொழிலாளர்களின் வெளியுறவுக் கொள்கை மற்றும் மனித உரிமைகளில் உச்சத்தில் இருக்கும் என தொழில் கட்சி தெரிவித்துள்ளது .
Tamil Cofmmunity the largest minority community
Our country isn’t the largest community the largest minority community but you’ve made your voice heard and yes there are lots of parliamentarians like myself light lim Brown like Stephen Tims like Gareth Thomas lightonna who spoken up for our Tamil constituents but there are so many more parliamentarians who have few on no Tamil constituents who have heard your cries for Justice who have heard your calls for accountability and are with you 100% including our shadow foreign secretary and I hope our next Foreign Secretary David Lamy and including our current leader and I hope our next prime minister kia’s farmer so you know if we have a labor government in two weeks time human rights abuses in Sri Lanka historic and current will be at the top of labour’s foreign policy and human rights ago
- போதையில் சாரதி இரு பெண்கள் பலி

- கடல் அபாயகரமானதாக மாறுவதால் எச்சரிக்கை

- யாழா பருவத்திற்கு நீர்த்தேக்கங்களில் 63% நீர் இருப்பு உறுதி: நீர்ப்பாசனத் திணைக்களம்

- டிரம்ப் நிர்வாகத்தில் இந்திய அதிகாரி ராஜினாமா

- குற்றவாளிகளை மிரட்டு அனுரா அரச உளவுத்துறை

- இலங்கை கடல் எல்லையில் கப்பலை சிறை பிடித்த அமெரிக்கா

- வாகன இறக்குமதியில் குறைவு இல்லை சவால் விடும் சுங்கத் தரவு

- இலங்கையில் வேகமாக பரவும் காய்ச்சால்

- இலங்கையில் புதிய மலேரியா ஒட்டுண்ணி அச்சுறுத்தல்

- சீனப் பாதுகாப்புத் தூதர் பாதுகாப்புச் செயலாளரைச் சந்தித்தார்

பேச்சுக்குத் தயார் கமாஸ் அறிவிப்பு
பேச்சுக்குத் தயார் கமாஸ் அறிவிப்பு
பேச்சுக்குத் தயார் கமாஸ் அதிரடி அறிவிப்பு ,இஸ்ரேல் காசாவுக்கு இடையில் இடம் பெற்று வருகின்ற இந்த யுத்தத்தில் பல்வேறுபட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன .
சமரசத்தை ஏற்படுத்த பல நாடுகள் முயற்சித்து வருகின்ற பொழுதும் அவை பலனளிக்காது தொடர்ந்து யுத்தத்தினை அரசும் அரச ராணுவம் நடத்திக் கொண்டுள்ளது .
இதனை அடுத்து பலஸ்த்தீன மக்களுக்காக போராடி வரும் ஹமாஸ் மக்கள் விடுதலை இயக்க அரசியல் துறை பொறுப்பாளர் கனிய அவர்கள் தான் நிரந்தர யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்தினால் .
அனைத்து விதமான பேச்சுவார்த்தைக்கும் வருவதற்கு தயார் என அறிவித்தல் விடுத்துள்ளார்.
இவரது இந்த அறிவிப்பை ஏற்றுக் கொண்டு இப்ப பேச்சுக்கு வருமாறு கேள்வியை எழுப்பப்படுகிறது
உடனடியாக யுத்தத்தி முத்து முடிவுக்கு கொண்டு வருவதற்கு பல நாடுகள் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
போர் முடிவுற்றால் மட்டுமே மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்ட முடியும் என்கின்ற கருத்து ஓங்கி ஒழித்து வருகின்றது.
கமாஸ் விடுதலை அமைப்பு
அதன் அடிப்படையில் கமாஸ் விடுதலை அமைப்பின் அரசியல் துறை பொறுப்பாளர் கனியா அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளார் .
இந்த விடயம் தற்போது வரவேற்பை பெற்றுள்ளது .
கைதிகள் அனைவரையும் விடுதலை செய்தால் மட்டுமே நாங்கள் பேச்சுவார்த்தைக்கு வர முடியும் என இஸ்ரேல் அரசு தொடர்ந்து வலியுறுத்தி கூறி வருகின்றது.
அதனை ஏற்றுக்கொண்டு தற்பொழுது இந்த அறிவிப்பை விடுத்துள்ள கமாஸ் மக்கள் விடுதலை இயக்கம் அனைத்து பலஸ்தீன கைதிகளும் இஸ்ரேலிய சிறையில் இருந்த விடுதலை செய்யப்பட வேண்டும் என்கின்ற கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர் .
இதனால் தான் இஸ்ரேல் அரசுக்கும் கமாஸ் மக்கள் விடுதலை இயக்கத்துக்கு இடையிலான பேச்சு வார்த்தைகள் ,மற்றும் மோதல்கள் இடம்பெற்று செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.
பாலஸ்தீனம் தனி நாடாக அறிவிப்பு
பாலஸ்தீனம் தனி நாடாக அறிவிப்பு
பாலஸ்தீனம் தனி நாடாக அறிவிப்பு கொண்டாட்டம் மக்கள் .
இஸ்ரேல் அரச பயங்கரவாத இராணுவத்தினரால் பாலஸ்தீனம் காசா மக்கள் மீது கொடூர இனஅழிப்பு நடத்த பட்டு வந்தது .
இனப் படுகொலையின் உச்சம்
அவ்வாறன இனப்படுகொலையின் உச்சத்தின் காரணமாக இந்த எட்டு மாதத்தில் முப்பத்தி ஆறாயிரம் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர் ,எழுபத்தி ஆறாயிரம் பேர் படுகாயங்களுக்கு உள்ளாகி இருந்தனர் .
அவ்வாறன நிலையில் திட்டமிட்டபடி இன்று ஸ்பெயின் ,நோர்வே ,ஐயர்லாந்த் ,என்பன உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளனர் .
பாலஸ்தீனம் சுதந்திர நாடாக அறிவிப்பு
உலக பந்தில் புதிய நாடாக பாலஸ்தீனம் சுதந்திர நாடாக அறிவிக்க பட்டுள்ளது .
அழுத மக்களின் கண்ணீருக்கும் ,வலிகளுக்கும் ,உயிர் உடமை இழப்புக்களும் ,இன்று தீர்வு கிட்டப்பட்டுள்ளது .
மனம் எல்லாம் அப்படி ஒரு சந்தோசம் ,இனம் புரியாத மகிழ்வு .நாம் பலஸ்தீனியர் இல்லை ,ஆனால் அந்த மக்கள் வலிகள் எமக்கு நிகழ்ந்தது போன்று ஒன்றாக காணப்பட்டது .
அதனால் அந்த மக்கள் மகிழ்வான நிலையன் சுதந்திரத்துடன் வாழ்வதற்கு எல்லாம் வல்ல இறைவன் பலம் கொடுக்க வேண்டும் .
கடவுளுக்கும் அங்கீகரித்த அணைத்து நாடுகளுக்கும் இவ்வேளை எமது நன்றி ,
கைதிகளை விடுவிக்க முடியாது ஹாமாஸ் அறிவிப்பு
கைதிகளை விடுவிக்க முடியாது ஹாமாஸ் அறிவிப்பு
கைதிகளை விடுவிக்க வேண்டுமானால் போரை நிறுத்தி எமது கைதிகள் விடுவிக்க
வேண்டும் முடியாது என்றால் கைதிகளை விடுவிக்க முடியாது ஹாமாஸ் அறிவிப்பு
தப்பிச் சென்ற கைதிகள் தொடர்பில் அறிவிப்பு
தப்பிச் சென்ற கைதிகள் தொடர்பில் அறிவிப்பு
கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து தப்பிச் சென்ற 15 கைதிகளைத் தவிர ஏனையோர் சரணடைந்துள்ளதாக புனர்வாழ்வு நிலையம் தெரிவித்துள்ளது.
புனர்வாழ்வு நிலையத்தின் செயற்பாடுகள் தற்போது வழமைக்குத் திரும்பியுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
தப்பிச் சென்ற கைதிகள் தொடர்பில் அறிவிப்பு
நேற்று முன்தினம் (12) பிற்பகல், கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் கைதிகள் குழுவிற்குள் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையில் கைதிகள் குழுவொன்று காயமடைந்துள்ளதுடன் மற்றுமொரு குழுவினர் தப்பிச் சென்றுள்ளனர்.
காயமடைந்தவர்களில் 05 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் 2 நாட்களுக்கு மின்சாரம் தூண்டிக்க படமாட்டாது என அறிவிப்பு
இலங்கையில் 2 நாட்களுக்கு மின்சாரம் தூண்டிக்க படமாட்டாது என அறிவிப்பு
இலங்கையில் இன்று மற்றும் நாளை மின்சாரம் துண்டிக்க பட மாட்டாது என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார் .
புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது .இதனால் மக்கள் குசியில் உறைந்துள்ளனர் .
மேலும் அதனை அடுத்து வரும் நாட்களில் , இரண்டு மணித்தியாலம் இருப்பது நிமிடங்கள் வரை மின்சார தூண்டிப்பு இடம்,பெறும் என தெரிவிக்க பட்டுள்ளது .
ஓமானில் உள்ள இலங்கை பெண்கள் குறித்த அறிவிப்பு
ஓமானில் உள்ள இலங்கை பெண்கள் குறித்த அறிவிப்பு
ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் பாதுகாப்பு இல்லத்தில் தற்போது தங்கியுள்ள இலங்கைப் பெண்கள் தொடர்பிலான அறிவிப்பை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் வெளியிட்டுள்ளது.
பாதுகாப்பு இல்லத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 77 இலங்கைப் பெண்களில் 12 பேர் மாத்திரமே வெளிநாட்டு
வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
Featured
உக்கிரேனுக்கு ஆயுத உதவி பிரிட்டன் அறிவிப்பு
உக்கிரேனுக்கு ஆயுத உதவி பிரிட்டன் அறிவிப்பு
ரசியா இராணுவம் உக்கிரேன் மீது இராணுவ படையெடுப்பை நடத்திய வண்ணம் உள்ளது .
தொடரும் போரில் உக்கிரேனுக்கு ஆயுத உதவி மாற்றும் இராணுவ பயிற்சிகள் என்பன வழங்கப்படும் என பிரிட்டன் அறிவிப்பு செய்துள்ளது.
மூன்று மாத்திற்கு ஒருமுறை பத்தாயிரம் உக்கிரேன் இராணுவத்தினருக்கு பிரிட்டன் இராணுவம் பயிற்சிகளை வழங்கும் என்கிறது பிரிட்டன் .
தொடர்ந்து உக்கிரேன் போரில் இருந்து மீளும் வரை தாம் உதவிகள் புரிவோம் என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.
உக்கிரேன் போரினை அமெரிக்கா மற்றும் பிரிட்டன் தொடர்ந்து நடத்தி வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது .
ஈரானுக்கு புதிய தடைகள் அமெரிக்கா அதிரடி அறிவிப்பு
ஈரானுக்கு புதிய தடைகள் அமெரிக்கா அதிரடி அறிவிப்பு
ஈரான் நாட்டை சேர்ந்த பதினாறு பேருக்கு எதிராக அமெரிக்கா அரசினால் தடைகள் விதிக்க பட்டுள்ளது
இவர்கள் ஈரானை விட்டு வேறு நாடுகள் எங்கும் செல்லா முடியா வண்ணம் இந்த தடை உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளது
ஈரானுக்கு விதிக்க பட்ட புதிய தடைகளில் ஈரான் நாட்டு புரட்சிகர படைப் பிரிவை சேர்ந்த முக்கிய தளபதிகளும் அடக்கம் பெறுகின்றனர்
கிரேக்க பகுதியில் வைத்து இரண்டு அமெரிக்கா எண்ணெய் கடத்தல் கப்பல்களை ஈரான் கடலோர காவல் படையினர் சிறை பிடித்து சென்று இரண்டு வாரங்களுக்குள் அமெரிக்கா அரசினால் இந்த பயண தடை விதிக்க பட்டுள்ளது
அமெரிக்கா அரசினால் பிரகடன படுத்த பட்டு அறிவிக்க பட்டவர்கள் தீவிரவாதாத்துக்கு பண பரிவர்தனம் செய்து வருகின்றனர் எனவும் இந்த பணப்
பரிமாற்றம் Bahrain, Kuwait, Oman, Qatar, Saudi Arabia and the UAE குறித்த நாடுகளில் மேற்கொள்ள பட்டு வருவதாகவும் அமெரிக்கா சுட்டி காட்டியுள்ளது
அப்படி என்றால் அமெரிக்காவினால் மேலும் பலர் இந்த நாடுகளில் குறி வைக்க பட்டுள்ளனர் என்பதும் அவர்களுக்கும் விரைவில் இவ்விதமான அறிவிப்பு வெளியாகும் என எதிர் பார்க்கலாம்
ஈரானுக்கு அமெரிக்கா விதித்த இந்த புதிய தடைகள் ஈரான் நாட்டை பாதிக்குமா என்பதே சந்தேகம் ஆனாலும் விதித்துள்ளது
ஈரானுக்கு புதிய தடைகள் அமெரிக்கா அதிரடி அறிவிப்பு
பொருளாதார தடைகளை விதித்து ஈரானிய நாட்டினை அடி பணிய வைக்கும் முயற்சியில் அமெரிக்கா இஸ்ரேல் இணைந்து ஈடுபட்டு வருகிறது ஆனால் அதில் அவர்கள் தோல்வியை தழுவியுள்ளன
பல தொடர் தடைகள் விதிக்க படுகின்ற பொழுதும் ஈரானோ அசைந்து கொடுப்பதாக தெரியவில்லை, மாறாக தனது பொருளாதாரத்தை அசுர வேகத்தில் மேம்படுத்திய வண்ணம் தனது அபிவிருத்தி மற்றும் செல்வ சேர்ப்பில் ஈரான் ஈடுபட்டுள்ளது
தனது நாட்டின் பாதுகாப்புக்கு ஏற்ப ஏவுகணை சோதனையிலும் ஈடுபட்ட வண்ணம் உள்ளது ,தற்போது அணுகுண்டு தயாரிக்கும் அணுஉலை சோதனையும் முக்கிய கட்டத்தை அண்மித்துள்ளது
இவ்வாறான நெருக்கடிகளை தகர்த்து பயணிக்கும் ஈரானுக்கு புதிய தடைகள் ஈரானை பதற வைக்குமா நிலை குலைய வைக்குமா என்பதே சந்தேகமே ..!
- வன்னி மைந்தன் –
சிவகார்த்திகேயன் படத்தின் ரிலீஸ் அறிவிப்பு
சிவகார்த்திகேயன் படத்தின் ரிலீஸ் அறிவிப்பு
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் நடித்துள்ள படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவகார்த்திகேயன் படத்தின் தேதி அறிவிப்பு
சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த மே 13ம் தேதி வெளியான திரைப்படம் ‘டான்’. அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ள இந்த படத்தை லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து
தயாரித்திருந்தது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன்
நடித்திருந்தார். மேலும் டான் படத்தில் சூரி, சமுத்திரக்கனி, சிவாங்கி, ஆர்.ஜே.விஜய், முனிஷ்காந்த், பால சரவணன், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற டான் திரைப்படம் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது. இப்படம் வெளியான 12 நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளதாக லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.
இந்நிலையில் டான் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி டான் திரைப்படம் வரும் ஜூன் 10
ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது
.







































