Tag: வவுனியா
வவுனியாவில் விபத்து ஐவர் காயம்
வவுனியாவில் விபத்து ஐவர் காயம்
மோட்டார் சைக்கிள் மீது தேங்காய் ஏற்றிச்சென்ற ஜீப் ரக வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் ஐவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்தானது பொருளாதார மத்திய நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்றிருந்தது.
விபத்து தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,
வவுனியாவில் விபத்து ஐவர் காயம்
நகரில் பகுதியில் இருந்து மூன்று முறிப்பு நோக்கி சென்ற ஜீப் ரக வாகனம் முன்னே சென்ற மோட்டார் சைக்கிளின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் மோட்டார் சைக்கிள் மற்றும் ஜீப் ரக வாகனத்தில் பயணித்த ஐவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
- டெங்கு பாதிப்புகள் அதிகரிப்பு பிரதி அமைச்சர்
- பெருவின் ஜனாதிபதித் தேர்தலில் கெய்கோ ஃபுஜிமோரி வெற்றி
- ஏ/எல் 2025 மறுதேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன
- ரஷ்யாவின் எண்ணெய் முனையத்தை உக்ரைன் தாக்கியது
- மன்னார் மலைப்பகுதி இரயில் போக்குவரத்து நிறுத்தம்
- ரிவர்ஸ்டன் ஹட்டன் நுவரெலியா சாலையில் சாலைப் போக்குவரத்து தடை
- குழந்தைகளுக்கு நவீன திறன்களை வழங்குவதில் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது பிரதமர்
- அக்குரெகொட இரட்டைக் கொலை வழக்கில் தேடப்பட்ட நபர் கைது
- கமெனியின் இறுதிச் சடங்கில் 2 கோடி மக்கள் கலந்துகொள்வார்கள்
- ஈரான் விமானத்தை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா
வவுனியா இரட்டைக் கொலை தேடப்பட்டு வந்தவர் சிக்கினார்
வவுனியா இரட்டைக் கொலை தேடப்பட்டு வந்தவர் சிக்கினார்
வவுனியா, தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர்களில் ஒருவர் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று (24) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா, தோணிக்கல் பகுதியில் கடந்த ஜூலை மாதம் 23 ஆம் திகதி அதிகாலை வீடு புகுந்து தாக்குதல் நடத்தி பெற்றோல் ஊற்றி எரியூட்டப்பட்ட சப்பவத்தில் இருவர் மரணமடைந்திருந்தனர்.
குறித்த இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேகத்தில் ஆறு பேர் கைது செய்யப்பட்டிருந்ததுடன், அவர்களிடம் குற்றப் புலனாய்வு
திணைக்களத்தின் கொலை விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.
இதன்போது, மேலும் மூன்று சந்தேக நபர்களுக்கு எதிரான சாட்சியங்கள் உறுதிப்படுத்தப்பட்டமையினால் அவர்களை கைது செய்ய குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
வவுனியா இரட்டைக் கொலை தேடப்பட்டு வந்தவர் சிக்கினார்
குறித்த மூவரும் தலைமறைவாக இருந்ததால் அவர்களது கடவுச் சீட்டுகள் நீதிமன்றத்தால் முடக்கப்பட்டுள்ளதுடன், அவர்களை கைது செய்வதற்கான
பகிரங்க பிடியாணை உத்தரவு கடந்த செப்டெம்பர் மாதம் 7 ஆம் திகதி வவுனியா நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இது தொடர்பில் நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்த குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கொலை விசாரணைப் பிரிவினர் சந்தேக
நபர்களில் ஒருவர், ஹொரவப்பொத்தானை பகுதியில் மறைந்திருந்த நிலையில் அவரை கைது செய்துள்ளனர்.
அவரிடம் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.
இதேவேளை, வவுனியா, 4ஆம் கட்டைப் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே மறைந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
- டெங்கு பாதிப்புகள் அதிகரிப்பு பிரதி அமைச்சர்
- பெருவின் ஜனாதிபதித் தேர்தலில் கெய்கோ ஃபுஜிமோரி வெற்றி
- ஏ/எல் 2025 மறுதேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன
- ரஷ்யாவின் எண்ணெய் முனையத்தை உக்ரைன் தாக்கியது
- மன்னார் மலைப்பகுதி இரயில் போக்குவரத்து நிறுத்தம்
- ரிவர்ஸ்டன் ஹட்டன் நுவரெலியா சாலையில் சாலைப் போக்குவரத்து தடை
- குழந்தைகளுக்கு நவீன திறன்களை வழங்குவதில் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது பிரதமர்
- அக்குரெகொட இரட்டைக் கொலை வழக்கில் தேடப்பட்ட நபர் கைது
- கமெனியின் இறுதிச் சடங்கில் 2 கோடி மக்கள் கலந்துகொள்வார்கள்
- ஈரான் விமானத்தை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா
வவுனியாவில் 15 குளங்கள் உடைப்பு
வவுனியாவில் 15 குளங்கள் உடைப்பு
வவுனியாவில் 93 குளங்கள் வான் பாய்வதுடன், 15 குளங்கள் உடைப்பெடுத்துள்ளதாக கமநல அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.
தற்போது தொடர்ச்சியாக பெய்து வருகின்ற மழை காரணமாக வவுனியா மாவட்டத்தில் உள்ள குளங்களிற்கான நீர் வரத்து அதிகரித்தமையினால்,
குளங்களின் நீர்மட்டம் அதிகரித்து 93 குளங்கள் வான் பாய்கின்றன. மேலும் பல குளங்கள் வான் பாயும் கட்டத்தை அடைந்துள்ளன.
வவுனியாவில் 15 குளங்கள் உடைப்பு
அத்துடன், வவுனியா மாவட்டத்தில் 15 குளங்கள் சிறு உடைப்பெடுத்த நிலையில் அவை தற்காலிகமாக புனரமைக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்துள்ளது.
இதேவேளை, வான் பாய்வதனை அதிகளவான மக்கள் பார்வையிட்டு வருவதுடன் நீர்நிலைகளில் மீன்பிடித்தும் வருகின்றமையும் அவதானிக்க கூடியதாக இருந்தது.
- டெங்கு பாதிப்புகள் அதிகரிப்பு பிரதி அமைச்சர்
- மன்னார் மலைப்பகுதி இரயில் போக்குவரத்து நிறுத்தம்
- ரிவர்ஸ்டன் ஹட்டன் நுவரெலியா சாலையில் சாலைப் போக்குவரத்து தடை
- குழந்தைகளுக்கு நவீன திறன்களை வழங்குவதில் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது பிரதமர்
- அக்குரெகொட இரட்டைக் கொலை வழக்கில் தேடப்பட்ட நபர் கைது
- கைபேசிகளைப் பயன்படுத்திக்கொண்டே சாலைகளில் நடப்பது குறித்து எச்சரிக்கை
- கொசு இனப்பெருக்கச் சட்டத்தில் திருத்தம் செய்ய சஜித் அழைப்பு
- மூன்று நாட்களில் 3000க்கும் மேற்பட்ட டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளன
- போதைப்பொருள் அச்சுறுத்தல் பெற்றோர்கள் கவலை
- திருகோணமலை கடற்பகுதியில் படகு கவிழ்ந்தது
வவுனியாவில் இரு பெண்கள் உட்பட நால்வர் கைது
வவுனியாவில் இரு பெண்கள் உட்பட நால்வர் கைது
மன்னாரில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த பேருந்தில் 20 பவுண் நகைகளை திருடியதாக இரு பெண்கள் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸார் நேற்று (26) தெரிவித்தனர்.
மன்னாரில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த பேரூந்தில் முருங்கன் பகுதியில் இருந்து ஆசிரியரான பெண் ஒருவரும் பயணித்துள்ளார்.
குறித்த பேரூந்து வவுனியா, மாவட்ட செயலகம் முன்பாக பயணித்த போது குறித்த பெண் பேரூந்தில் இருந்து இறங்கியுள்ளார்.
இதன்போது குறித்த பெண்ணின் கைப் பை திறக்கப்பட்டு அதற்குள் இருந்த அவரது சங்கிலி, மோதிரம் உட்பட 20 பவுண் நகைகள் காணாமல் போனமையை அவதானித்துள்ளார். உடனடியாக பேரூந்தை நிறுத்தி பேரூந்தில் தேடிய போதும் நகை கிடைக்கவில்லை.
இதனையடுத்து வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசில் குறித்த ஆசிரியர் முறைப்பாடு செய்துள்ளார்.
வவுனியாவில் இரு பெண்கள் உட்பட நால்வர் கைது
முறைப்பாட்டையடுத்து வவுனியா தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜயதிலக வழிகாட்டலில் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ரத்நாயக்கா தலைமையில் பொலிஸ் சார்ஜன்டுகளான திஸாநாயக்கா (37348), திலீப் (61461), பொலிஸ் கான்டபிள்களான உபாலி (60945), தயாளன் ( 91792), இரேசா (11643) உள்ளிட்ட குழுவினர் துரித விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
இதனை போது குறித்த சம்பவம் தொடர்பில் மகாறம்பைக்குளத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்த புத்தளம், 4 ஆம் கட்டைப் பகுதியைச் சேர்ந்த இரு பெண்களும், இரு ஆண்களும் ஆக 4 பேர் கைது செய்யப்பட்டதுடன், திருடப்பட்டதாக கூறப்பட்ட 20 பவுண் நகை, முச்சக்கர வண்டி மற்றும் பட்டா ரக வாகனம் ஒன்றும் பொலிசாரால் கைப்பறப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணையின் பின் குறித்த நான்கு பேரையும் நீதிமன்றில் முறப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
- டெங்கு பாதிப்புகள் அதிகரிப்பு பிரதி அமைச்சர்by நிருபர் காவலன்
- மன்னார் மலைப்பகுதி இரயில் போக்குவரத்து நிறுத்தம்by நிருபர் காவலன்
- ரிவர்ஸ்டன் ஹட்டன் நுவரெலியா சாலையில் சாலைப் போக்குவரத்து தடைby நிருபர் காவலன்
- குழந்தைகளுக்கு நவீன திறன்களை வழங்குவதில் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது பிரதமர்by நிருபர் காவலன்
- அக்குரெகொட இரட்டைக் கொலை வழக்கில் தேடப்பட்ட நபர் கைதுby நிருபர் காவலன்
வவுனியா ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் பலி
வவுனியா ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் பலி
வவுனியா, ஏ9 வீதி, பறண்நட்டகல் சந்தியில் நேற்று (22 ) இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளதாக ஓமந்தைப் பொலிசார் தெரிவித்தனர்.
ஓமந்தையில் வெதுப்பகம் நடத்தி வரும் சிவசேகரம் தினேசன் என்பவர்
வவுனியாவில் இருந்து ஓமந்தைக்கு தனது மோட்டார் சைக்கிளில் செல்லும் போது, பறண்நட்டகல் சந்தியில் உள்ள பேருந்து தரிப்பிடத்தில் நிறுத்தியிருந்த பேரூந்தை முந்தி செல்ல முற்பட்ட போது எதிர் திசையில் இருந்து வந்த பட்டா ரக வாகனம் ஒன்று மோதியதில் இவ் விபத்து ஏற்பட்டது.
இதன் போது மோட்டார் சைக்கிளில் சென்ற சி. தினேசன் சம்பவ இடத்திலேயே பலியானதுடன், அவரது சடலம் வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
குறித்த விபத்து தொடர்பான விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
- டெங்கு பாதிப்புகள் அதிகரிப்பு பிரதி அமைச்சர்by நிருபர் காவலன்
- பெருவின் ஜனாதிபதித் தேர்தலில் கெய்கோ ஃபுஜிமோரி வெற்றிby நிருபர் காவலன்
- ஏ/எல் 2025 மறுதேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டனby நிருபர் காவலன்
- ரஷ்யாவின் எண்ணெய் முனையத்தை உக்ரைன் தாக்கியதுby நிருபர் காவலன்
- மன்னார் மலைப்பகுதி இரயில் போக்குவரத்து நிறுத்தம்by நிருபர் காவலன்
வவுனியாவில் எரிந்த நிலையில் 23 வயது இளைஞனின் சடலம் மீட்பு
வவுனியாவில் எரிந்த நிலையில் 23 வயது இளைஞனின் சடலம் மீட்பு
வவுனியா, காத்தார்சின்னகுளம் பகுதியில் எரிந்த நிலையில் 23 வயது இளைஞனின் சடலம் ஒன்று பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த இளைஞரின் பெற்றோர் இன்று (28.06) காலை வெளியில் சென்றுவிட்டு மதியம் வீடு திரும்பியிருந்தனர். இதன்போது குறித்த இளைஞர் வீட்டின் பின்புறத்தில் எரிந்த நிலையில் சடலமாக கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
வவுனியாவில் எரிந்த நிலையில் 23 வயது இளைஞனின் சடலம் மீட்பு
சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா பொலிசார் சடலத்தை மீட்டுள்ளதுடன் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். குறித்த சம்பவத்தில் அதேபகுதியை சேர்ந்த அயந்தன் என்ற 23 வயது இளைஞரே சாவடைந்துள்ளார்.
வவுனியா கணேசபுரத்தில் உதவித் திட்ட பதிவுகளில் மோசடி எனத் தெரிவித்து மக்கள் போராட்டம்
வவுனியா கணேசபுரத்தில் உதவித் திட்ட பதிவுகளில் மோசடி எனத் தெரிவித்து மக்கள் போராட்டம்
அரசாங்கத்தின் நலன்புரி உதவித் திட்ட பதிவுகளில் முறைகேடு எனத் தெரிவித்து வவுனியா பெரியகட்டு கிராம சேவையாளர் அலுவலகம் முன்பாக மக்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் வவுனியா – மன்னார் பிரதான வீதியும் மக்களால் முடக்கப்பட்டது.
இன்று (28.06) காலை 9.00 மணி தொடக்கம் 10.30 மணி வரை சுமார் ஒன்டரை மணித்தியாலத்திற்கு மேலாக இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதுடன், அவ் வீதியூடான போக்குவரத்தும் ஸ்தம்பிதம் அடைந்திருந்தது.
வவுனியா கணேசபுரத்தில் உதவித் திட்ட பதிவுகளில் மோசடி எனத் தெரிவித்து மக்கள் போராட்டம்

அரசாங்கத்தினால் நலன்புரி உதவித்திட்ட கொடுப்பனவுகள் வழங்குவதற்கான பெயர்ப்பட்டியல் அண்மையில் வெளிவந்திருந்த நிலையில் இரு நேரம் மட்டும் உணவை உட்கொண்டு வாழ்பவர்கள், விசேட தேவைக்குட்பட்டவர்கள், முதியோர்கள், விதவைகள் உட்பட்ட வறுமைக்கோட்டிற்கு உட்பட்டவர்களின் பெயர்கள் உள்வாங்கப்படாமல் வெளிநாடுகளில் இருப்போர், அரச உத்தியோகத்தர்கள், வசதியானவர்களுக்கே கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவித்து பெரியகட்டு கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட கணேசபுரம் கிராமத்தினை சேர்ந்த மக்களினால் இவ் கவனயீர்ப்பு வீதி மறியல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

வவுனியா பெரியகட்டு கிராம சேவையாளர் அலுவல வாயில் முன்பாக காலை 9.30 மணியளவில் மக்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் 30 நிமிடங்களின் பின்னரும் எவ்வித அதிகாரிகளும் போராட்ட இடத்திற்கு வருகை தராமையினையடுத்து ஆத்திரமடைந்த மக்கள் வவுனியா – மன்னார் பிரதான வீதியினை முற்றாக வழிமறித்து போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். இதன் காரணமாக அவ்வீதியுடான போக்குவரத்து ஒரு மணி நேரமாக முற்றாக ஸ்தம்பிதம் அடைந்திருந்தது.

அதன் பின்னர் போராட்ட இடத்திற்கு வருகை தந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடியும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வீதியினை விட்டு செல்ல மறுப்பு தெரிவித்தனர்.
அதன் பின்னர் அவ்விடத்திற்கு வருகை தந்த பெரியகட்டு கிராம சேவையாளர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடி மேல்முறையீடுகளை மேற்கொள்ளுமாறும் தன்னால் இயன்ற உதவிகளை தாம் செய்வதாகவும் தெரிவித்தமையினையடுத்து போராட்டம் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டதுடன் பொதுமக்கள் வீதியினை விட்டு வெளியேறினர்.
வவுனியா ஆசிகுளம் கிராம அலுவலர் அலுவலகம் மக்களால் முற்றுகை
வவுனியா ஆசிகுளம் கிராம அலுவலர் அலுவலகம் மக்களால் முற்றுகை
அரசாங்கத்தின் நலன்புரி உதவித் திட்ட பதிவுகளில் முறைகேடு எனத் தெரிவித்து வவுனியா, ஆசிகுளம் கிராம சேவையாளர் அலுவலகம் முன்பாக மக்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் வவுனியா – சிதம்பரபுரம் பிரதான வீதியும் மக்களால் முடக்கப்பட்டது.
இன்று (27.06) காலை 9.30 மணி தொடக்கம் 11.00 மணி வரை சுமார் ஒன்றரை மணித்தியாலத்திற்கு மேலாக இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதுடன் அவ் வீதியூடான போக்குவரத்தும் ஸ்தம்பிதம் அடைந்திருந்தது.
அரசாங்கத்தினால் நலன்புரி உதவித்திட்ட கொடுப்பனவுகள் வழங்குவதற்கான பெயர்ப்பட்டியல் அண்மையில் வெளிவந்திருந்த நிலையில் இரு நேரம் மட்டும் உணவை உட்கொண்டு வாழ்பவர்கள், விசேட தேவைக்குட்பட்டவர்கள், முதியோர்கள், விதவைகள் உட்பட்ட வறுமைக்கோட்டிற்கு உட்பட்டவர்களின் பெயர்கள் உள்வாங்கப்படாமல் வெளிநாடுகளில் இருப்போர், அரச உத்தியோகத்தர்கள், வசதியானவர்களுக்கே கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவித்து ஆசிகுளம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட 12 கிராமங்களை சேர்ந்த மக்களினால் இவ் கவனயீர்ப்பு வீதி மறியல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

வவுனியா ஆசிகுளம் கிராம அலுவலர் அலுவலகம் மக்களால் முற்றுகை
வவுனியா ஆசிகுளம் கிராம சேவையாளர் அலுவலகம் முன்பாக காலை 9.30 மணியளவில் மக்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் 30 நிமிடங்களின் பின்னர் பேரணியாக சென்று வவுனியா – சிதம்பரபுரம் பிரதான வீதியினை முற்றாக வழிமறித்து போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். இதன் காரணமாக அவ்வீதியூடான போக்குவரத்து ஒரு மணி நேரமாக முற்றாக ஸ்தம்பிதம் அடைந்திருந்தது.
அதன் பின்னர் போராட்ட இடத்திற்கு வருகை தந்த சிதம்பரபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் ஆசிகுளம் கிராம சேவையாளர், சமுரத்தி உத்தியோகத்தர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடினர்.

இதன்போது, மேல் முறையீடு செய்வதற்குரிய நடவடிக்கைகள் மற்றும் அதற்குரிய உதவிகளை பெற்றுத்தருவதுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னாலான செயற்பாடுகளை முன்னெடுப்பதாகவும் மேலும் இறுதிப்பட்டியல் வரும் வரை காத்திருக்குமாறும் ஆசிகுளம் கிராம சேவையாளர் தெரிவித்தமையினையடுத்து காலை 11.00 மணியளவில் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
வவுனியாவில் 7 விபச்சாரிகளுக்கு தொற்று நோய்: தொடர்பை பேணியவர்களுக்கு விடப்பட்ட கோரிக்கை
வவுனியாவில் 7 விபச்சாரிகளுக்கு தொற்று நோய்: தொடர்பை பேணியவர்களுக்கு விடப்பட்ட கோரிக்கை
வவுனியாவில் விபச்சாரத் தொழில் ஈடுபட்ட 7 பேருக்கு கொனோறியா மற்றும் ஷர்ப்பீஸ் நோய் தொற்றுக்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளதால் அவர்களுடன் தொடர்பை பேணியவர்களை உடனடியாக மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளுமாறு சுகாதாரப் பிரிவினர் கோரியுள்ளனர்.
இந் நோயானது பாலியல் உறவின் மூலம் தொற்றாளரிடம் இருந்து பிறருக்கு பரவக் கூடியது ஆகும். குறித்த 7 விபச்சாரிகளும் வவுனியா நகரம் மற்றும் தேக்கவத்தை ஆகிய பகுதியில் விபச்சாரத் தொழில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
வவுனியாவில் 7 விபச்சாரிகளுக்கு தொற்று நோய்: தொடர்பை பேணியவர்களுக்கு விடப்பட்ட கோரிக்கை
எனவே, அவர்களுடன் தொடர்புகளைப் பேணியோர் உடனடியாக வவுனியா வைத்தியசாலையில் எச்.ஐ.வி தடுப்பு பிரிவுக்கு சென்று தம்மை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ளுமாறும் சுகாதாரப் பிரிவினரால் கோரப்பட்டுள்ளது.
வவுனியாவில் தெரு ரவுடிகள் 8 பேர் கைது
வவுனியாவில் தெரு ரவுடிகள் 8 பேர் கைது
வவுனியாவில் தமிழ் தெரு ரவுடிகள் ஆறு பேர் கைது செய்யப் பட்டுள்ளனர் .
வவுனியாவில் பல்வேறு பட்ட சமூக விரோத குற்ற செயல்களில் ,ஈடுபட்டு வந்த கும்பலை சேர்ந்த ,நபர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டார்
அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் ,18 வயதுடைய 8 பேர் கைது செய்யப்பட்டனர் .
இவர்கள் கெத்து பசங்க என்ற தெரு ரவுடி குழு இயங்கி வந்துள்ளது கண்டு பிடிக்க பட்டது .
இவர்கள் போதை மாத்திரைகள் ,வாள்வெட்டு மற்றும் கொலை ,கொள்ளை ,கடத்தல் ,மிரடடல் என்ற சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்தமை அம்பலமாகியுள்ளது .
கைதானவர்கள் காவல்துறையின் ,சிறந்த உரியமுறை விருந்து ஏற்பாட்டில் கவனிக்க பட்டு வருகின்றனர் .
வவுனியாவில் கோர விபத்து – 10 பேர் காயம்
வவுனியாவில் கோர விபத்து – 10 பேர் காயம்
வவுனியா கனகராயன்குளம் பகுதியில் இன்று (24) காலை பஸ் – டிப்பர் மோதிக்கொண்ட விபத்தில் டிப்பர் சாரதி மற்றும் பேருந்தில் பயணித்த பயணிகள் உட்பட பத்திற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று (24) காலை 5.30 மணியளவில் இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
வவுனியாவில் கோர விபத்து – 10 பேர் காயம்
தங்காலையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற பேருந்தும் மாங்குளத்திலிருந்து கனகராயன்குளம் நோக்கி சென்ற டிப்பரும் மோதிக்கொண்டதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் டிப்பர் வாகன சாரதி உட்பட பேருந்தில் பயணித்த பயணிகள் உள்ளிட்டோர் காயமடைந்த நிலையில் 6 பேர் மாங்குளம் வைத்தியசாலையிலும் 4 பேர் வவுனியா வைத்தியசாலையிலும் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கனகராயன்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
Featured
வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் சடலம் மீட்பு
வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் சடலம் மீட்பு
வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் ஆண் ஒருவர் சடலமாக மீட்க பட்டுள்ளார் .
வவுனியா தாண்டிக்குளம் ரயில்வே நிலைய தாண்டவாளம் பகுதி அருகில் இந்த மனித சடலம் கண்டு பிடிக்க பட்டுள்ளது.
இவ்வாறு வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் ,சடலமாக கண்டு பிடிக்க பட்டவர் 45 வயதுடைய ஆண் என அடையாள காணப் பட்டுள்ளார் .
குறித்த ஆணின் சடலம் மீட்க பட்டு உடல் கூற்று ஆய்வுக்கு உட்படுத்த பட்டுள்ளது .
வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் சடலம் மீட்பு
இவரது சடலத்தின் அருகில் ஊந்துருளி ஒன்றும் இருந்து மீட்க பட்டுள்ளது .
இது கொலையா தற்கொலையா என்பது தொடர்பில் தெரியவரவில்லை விசாரணைகள் தொடர்கின்றன .
நெடுங்கேணியில் கிணற்றில் இருந்து வாலிபன் சடலமாக மீட்பு
நெடுங்கேணியில் கிணற்றில் இருந்து வாலிபன் சடலமாக மீட்பு
இலங்கை வவுனியா நெடு நெடுங்கேணி பகுதியில் ,கிணற்றில் இருந்து வாலிபர் ஒருவர் சடலமாக மீட்க பட்டுளளார் .
வீட்டு கிணற்றில் இருந்து ,மீட்க பட்ட வாலிபர் , சடலம் உடல் கூற்று ஆய்வுக்கு உட்படுத்த பட்டுள்ளது.
இருபத்தி ஆறு வயதுடைய வாலிபன், தற்கொலை செய்தாரா , அல்லது படுகொலை செய்ய பட்டாரா என்பது தொடர்பில் ,விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன.
இலங்கையில் சமீப காலங்களாக கிணறு ,நீர் நிலைகளில் இருந்து மனித சடலங்கள் ,மீட்க பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது.
வவுனியா வாலிபனை காணவில்லை
வவுனியா வாலிபனை காணவில்லை
வவுனியா குருமன்காடு பகுதியில் இருபது வயதுடைய வாலிபன் ஒருவர் காணாமல் போயுள்ளார்
இவர் கடந்த 31 ஆம் திகதி வீட்டில் இருந்து புறப்பட்டார் , இதுவரை வீடு திரும்பவில்லை இவ்வாறு காணாமல் போன வாலிபனை
தேடி கண்டு பிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்
மாயமான வாலிபன் உயிருடன் உள்ளாரா அல்லது கடத்தப் பட்டாரா என்பது தொடர்பில் தெரியவரவில்லை
இலங்கையில் தொடராக காணாமல் போகும் நிகழ்வுகள் அதிகரித்த வண்ணம் உள்ளது
குறிப்பிட தக்கது
வவுனியாவில் -தலை சிதறிய நிலையில் வீதியில் மிதந்த மனித சடலம்
வவுனியா நகரில் பஜார் வீதியிலுள்ள வர்த்தக நிலையத்திற்கு முன்பாக நேற்று (27) 11.30 மணியளவில் தலை சிதறிய நிலையில் வெளிநாட்டவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வவுனியா பஐார் வீதியிலுள்ள வர்த்தக நிலையத்தின் முன்பகுதியில் தலை சிதறிய நிலையில் இரத்தின் மத்தியில் ஒருவர் காணப்பட்ட நிலையில் உடனடியாக மக்கள் செயற்பட்டு வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
எனினும் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர் தெரிவித்துள்ளனர்
இவ்விடயம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்த நிலையில் குறித்த நபர் வர்த்தக நிலையத்தின் மேற்பகுதியில் விடுதி
அமைந்துள்ள மூன்றாம் மாடி கட்டிடத்திலிருந்து கீழே வீழ்ந்து மரணித்துள்ளது விசாணைகளின் ஆரம்ப கட்டத்தில் தெரியவந்துள்ளதுடன் குறித்த நபரின் மரணம்
கொலையா? அல்லது தற்காெலையா? என்ற கோணத்தில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்தியா நாட்டை சேர்ந்த 36 வயதுடைய சன்டிப் மலிக் என்ற நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.
சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன்
தடவியல் பொலிஸாரின் உதவியுடன் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
தமிழ் அரசியல்வாதிகளிற்கு எதிராக மக்கள் போராட்டம்
தமிழ் அரசியல்வாதிகளையும் ‘கர்மா விடாது’ என்று வவுனியாவில் தொடர் போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர்ச்சியான போராட்டம், நேற்றையதினத்தோடு 1919 நாளை எட்டியுளளது.
இதனையொட்டி, நேற்று (23) இடம்பெற்ற ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே, அவர் இவ்வாறு தெரிவித்தனர்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்கள், வடக்கு- கிழக்கில் இராணுவத்தை அகற்றுமாறுஇ சர்வதேச நாணய நிதியம் நிபந்தனைகளை விதித்ததால் , இலங்கை பொருளாதாரத்தின் 15 சதவீத செலவீனம் இதுவாகும்.
இது தமிழ் மக்களின் பிரதான கோரிக்கையாகும். இதனைத்தெடர்நது மக்கள் பிரதிநிதிகள், சிவில் அமைப்புகள் இந்த கோரிக்கையை வலுப்படுத்த வேண்டும்.
‘ஐ நா கூட்டத்தொடருக்கு முன்பு இலங்கைக்கு உதவிகள் வழங்கும் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளிடம் வலுவான கோரிக்கைகளை தமிழ் அரசியல்வாதிகள்,
சிவில்அமைப்புக்கள் முன்வைக்கவேண்டும். இல்லாவிடில், கர்மா அனைவரையும் பாதிக்கும்.
‘சிங்கள அரசியல் வாதிகள் பதவிக்கு வந்ததும் இனவாதிகளாக பேசுவார்கள். இதுதான்
74 வருட தமிழர்களின் வரலாறு. நல்லிணக்கம் மற்றும் தெற்கு அரசியல் பற்றிபேசும் தமிழ் அரசியல்வாதிகள் இனப் படுகொலைக்கான
நீதியை பெறமுடியாது’ என்றனர்.
வவுனியாவில் நகை திருட்டு அதிகரிப்பு
வவுனியாவில் நகை திருட்டு அதிகரிப்பு
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதர நெருக்கடி காரணமாக திருட்டு சம்பவம் அதிகரித்துள்ளது ,
வவுனியா – குருமண்காடு, யாழ் வீதி, இறம்பைக்குளம், கோவில்குளம் பகுதியில்
நகைகள் திருடர்கள் கத்தி முனையில்
நகைகளை திருடி செல்வதாக தெரிவிக்க படுகிறது
நீர்வீழ்ச்சியில் காணாமல் போன பெண்கள் சடலமாக மீட்பு
நீர்வீழ்ச்சியில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல் போன வவுனியாவை சேர்ந்தவர்களின் பெயர் விபரம் வெளியானது – ஒருவரின் சடலம் மாத்திரம் மீட்பு
வவுனியாவிலிருந்து நுவரெலியாவுக்கு சுற்றுலாச்சென்றவேளை, நுவரெலியா – கொத்மலை, இறம்பொடை நீர்வீழ்ச்சியில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல்
போயிருந்த மூன்று பேரில், யுவதியொருவரின் சடலம் இன்று (13) காலை மீட்கப்பட்டுள்ளது.
ஏனைய ஒரு யுவதியும், இளைஞனும் நீரிழ் மூழ்கி பலியாகியிருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அவர்களின் சடலங்களை மீட்பதற்கான தேடுதல் வேட்டை தொடர்ந்து 2ஆவது நாளாகவும் இடம்பெற்று வருகின்றது.
வவுனியா மாவட்டத்திலுள்ள ஆடைத்தொழிற்சாலையொன்றில் பணிபுரியும் இளைஞர், யுவதிகள் 48 பேர் பேரூந்து ஒன்றில், புத்தாண்டை முன்னிட்டு, மலையகத்தில் நுவரெலியாவுக்கு நேற்று (12) சுற்றுலாப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இவ்வாறு சுற்றுலா செல்லும் வழியில், நுவரெலியா இறம்பொடையில் உள்ள நீர்வீழ்ச்சிக்கு அருகாமையில் பஸ்ஸை நிறுத்திவிட்டு, நீர்வீழ்ச்சியையும், அதனை
சூழவுள்ள இயற்கை பகுதிகளையும் பார்வையிடுவதற்கு குழுக்களாக பிரிந்து சென்றுள்ளனர்.
இதில் ஆறு யுவதிகளும், ஒரு இளைஞனுமாக 7 பேர் கொண்ட குழுவினர் இறம்பொடை நீர்வீழ்ச்சி அமைந்துள்ள ஆற்றுப் பகுதியில் நீராடச்சென்றபோது நீரில்
அடித்துச்செல்லப்பட்டுள்ளனர்.
வவுனியா நெடுங்கேனியைச் சேர்ந்த புவனேஸ்வரன் வினோதனி (வயது – 18), வவுனியா, கல்மடு – ஈஸ்வரிபுரம் பகுதியைச் சேர்ந்த பொன்னுதுரை மதுசாலினி
(வயது- 21) ஆகிய இரு யுவதிகளும், வவுனியாவை சேர்ந்த விதுசான் (வயது – 21) ஆகிய மூவருமே காணாமல் போயுள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்ட யுவதி வவுனியா, கல்மடு – ஈஸ்வரிபுரம் பகுதியைச் சேர்ந்த பொன்னுதுரை மதுசாலினி (வயது- 21) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவரின்
சடலம் கற்பாறை
ஒன்றுக்குள் சிக்கியிருந்த நிலையிலேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மனைவி மகளை வெட்டிய கணவன்- தப்பி ஓட்டம்
மனைவி மகளை வெட்டிய கணவன்- தப்பி ஓட்டம்
வவுனியாவில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் தாயும் மகளும் படுகாயமடைந்த நிலையில்
வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.குறித்த சம்பவம் நேற்றையதினம் இரவு 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
நேற்றையதினம் (20) இரவு தனது மகளும், மனைவியும் வீட்டில் இருந்த நிலையில் கணவனால் வாள்வெட்டு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.
இதனால் படுகாயமடைந்த அவர்கள் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையின் விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.
வாள்வெட்டில் ஈடுபட்ட நபர் தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்
வவுனியாவில் பொலிஸார் துப்பாக்கி சூடு – இருவர் காயம்
வவுனியாவில் பொலிஸார் துப்பாக்கி சூடு – இருவர் காயம்
இன்று காலை வவுனியா பகுதியில் காவல்துறையினர்
மேற்கொண்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்
பிக்கப் ரக வாகனம் ஒன்றில் மரங்களை வெட்டி கடத்தில் சென்ற குழு மீதே இந்த தாக்குதல் நடத்த பட்டுள்ளது ,
இதில் இருவர் காயமடைந்த நிலையில் அதே பகுதி மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்
மர கடத்தல் ,மற்றும் மணல் கொள்ளையர்கள் மீது இவ்விதமான
துப்பாக்கி சூட்டு தாக்குதல்களை போலீசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிட தக்கது





































