Tag: குளங்கள்
அதிக வெப்பம் குளங்கள் வெறுமை
அதிக வெப்பம் குளங்கள் வெறுமை
அதிக வெப்பம் குளங்கள் வெறுமைவறண்ட வானிலை காரணமாக பல நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது – நீர்ப்பாசனத் திணைக்களம்
நிலவும் வறண்ட வானிலை
நிலவும் வறண்ட வானிலை காரணமாக, தீவு முழுவதும் உள்ள நீர்த்தேக்கங்களின் மொத்த நீர் சேமிப்புத் திறன் தற்போது கிட்டத்தட்ட 47.3%
ஆக உள்ளது என நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் மேலாண்மைப் பணிப்பாளர் எச்.எம்.பி.எஸ்.டி. ஹெரத் தெரிவித்துள்ளார்.
நீர்ப்பாசனத் திணைக்களத்தால் நிர்வகிக்கப்படும் முக்கிய நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் தற்போது சுமார் 34.4% ஆக உள்ளது என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையில், அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் அமைந்துள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் தற்போது சுமார் 20% ஆக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
யாழ சாகுபடிப் பருவம்
இருப்பினும், யாழ சாகுபடிப் பருவம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால், மீதமுள்ள பருவத்திற்குத் தேவையான நீர் இருப்பு போதுமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த மழை பெய்யும் வரை, இந்த நீர்த்தேக்கங்களைச் சார்ந்துள்ள பகுதிகளின் குடிநீர் தேவைகளை தற்போதுள்ள நீர் இருப்பு பூர்த்தி செய்யும் என்றும் அவர் மேலும் கூறினார்.
தீவின் பல பகுதிகளில் நிலவும் வெப்பமான வானிலை காரணமாக நீர்த்தேக்கங்களில் இருந்து ஆவியாதல் மூலமான நீர் இழப்புகள் அதிகரித்துள்ளதால்,
விவசாயப் பணிகள் மற்றும் குடிநீர் தேவைகளுக்கு பொதுமக்கள் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்று அவர் மேலும் வலியுறுத்தினார்.
வரவிருக்கும் மகா சாகுபடி பருவத்திற்கான திட்டங்கள் தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாகவும் ஹெரத் கூறினார்.
பருவத்தின் தொடக்கத்தில் உள்ள நீர் இருப்பு மற்றும் அந்தந்த சாகுபடிக் கூட்டங்களில் எடுக்கப்படும் முடிவுகளைப் பொறுத்து, மகா பருவத்தை கூடிய விரைவில் தொடங்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
வவுனியாவில் 15 குளங்கள் உடைப்பு
வவுனியாவில் 15 குளங்கள் உடைப்பு
வவுனியாவில் 93 குளங்கள் வான் பாய்வதுடன், 15 குளங்கள் உடைப்பெடுத்துள்ளதாக கமநல அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.
தற்போது தொடர்ச்சியாக பெய்து வருகின்ற மழை காரணமாக வவுனியா மாவட்டத்தில் உள்ள குளங்களிற்கான நீர் வரத்து அதிகரித்தமையினால்,
குளங்களின் நீர்மட்டம் அதிகரித்து 93 குளங்கள் வான் பாய்கின்றன. மேலும் பல குளங்கள் வான் பாயும் கட்டத்தை அடைந்துள்ளன.
வவுனியாவில் 15 குளங்கள் உடைப்பு
அத்துடன், வவுனியா மாவட்டத்தில் 15 குளங்கள் சிறு உடைப்பெடுத்த நிலையில் அவை தற்காலிகமாக புனரமைக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்துள்ளது.
இதேவேளை, வான் பாய்வதனை அதிகளவான மக்கள் பார்வையிட்டு வருவதுடன் நீர்நிலைகளில் மீன்பிடித்தும் வருகின்றமையும் அவதானிக்க கூடியதாக இருந்தது.
- இருவர் வெட்டி படுகொலை
- லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு சபாநாயகர் மீது விசாரணை
- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை
- ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் நடந்த ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் விசாரணை
- கலு கங்கையின் தாழ்வான பகுதிகளில் சிறு வெள்ளப்பெருக்கு
- மூன்று மாவட்டங்களுக்கு நிலச்சரிவு முன்னறிவிப்பு எச்சரிக்கை
- குளியாபிட்டியவில் துப்பாக்கி, கையெறி குண்டு மற்றும் தோட்டாக்களுடன் சந்தேக நபர் கைது
- வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் நாளை தாய்லாந்திற்கு உத்தியோகபூர்வ பயணம்
- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை
- தென்னை விவசாயிகளை ஊக்குவிக்க நடவடிக்கை
5,000 குளங்கள் அபிவிருத்தி
5,000 குளங்கள் அபிவிருத்தி
ஜனாதிபதி கோட்டாபய ராஐபக்ஷவின் எண்ணக்கருவில் 5000 குளங்களை புனரமைக்கும் செயல்திட்டத்தினை நாடு பூராகவும் நடைமுறைப்படுத்துவதற்கான முதலாவது கூட்டமும் விவசாய
அபிவிருத்திகுழுவின் விசேட கூட்டமும் நேற்று (11) பிற்பகல் மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான கணபதிப்பிள்ளை கருணாகரன் தலைமையில் நடைபெற்றது.
சுபீட்சத்தை நோக்கிய கிராமிய பொருளாதாரத்தினை அபிவிருத்தியூடாக நஞ்சற்ற உணவு உற்பத்தியினை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் ஐந்து வருடங்களுக்கு மேலாக
அபிவிருத்திசெய்யப்படாத குளங்கள் மற்றும் வாய்க்கால்கள், தூர்ந்து போன குளங்கள், அணைக்கட்டுகள் போன்றவற்றை அபிவிருத்திசெய்யும் திட்டம் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.
மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 17 கமநல சேவை நிலையங்களிலும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. ஒவ்வரு கமநல
சேவை நிலைய பிரிவுகளிலும் மூன்று முதல் ஐந்து குளங்கள் தெரிவு செய்யப்பட்டு எதிர்வரும் பெப்ரவரி 4ம் திகதி இலங்கை முழுவதும் ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இவ்வேலைத்திட்டமானது ஒப்பந்தகாரர்களுக்கு வழங்கப்படமாட்டாது. மாறாக விவசாய அமைப்பினர் பொது மக்கள் நலன்விரும்பிகள் மாணவர்கள் தொண்டர்கள் மூலமாகவே
இந்த வேலைத்திட்டங்கள் அமுல்படுத்தப்படவுள்ளன். மத்திய மாகாண அரசாங்கத்தின் கீழ்வருகின்ற 87குளங்கள் மட்டக்களப்பில் அவிவிருத்தி செய்யப்படவுள்ளன.




















