Tag: இலங்கை
காலி முகத்திடலில் தொடரும் ஓயாத அலைகள் – திணறும் கோட்டா
காலி முகத்திடலில் தொடரும் ஓயாத அலைகள் – திணறும் கோட்டா
இலங்கையில் தொடரும் அரசுக்கு எதிரான போராடடம் இன்று 19 தாவது நாளை
எட்டியுள்ள நிலையில் கோட்டா பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளார்
மக்களின் பொருளாதார நெருக்கடியை தணிக்கவும் ,அவர்க்ளின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து
விலகிடவும் மறுத்து வரும் அரசுக்கு எதிரான அவ நம்பிக்கை தீர்மானம் சபைக்கு
வரவுள்ள நிலையில் இடைக்கால கூட்டாட்சி அரசுக்கு தாம் தயார் என கோட்டா அறிவித்துள்ளார்
கட்சிகளும் ,மக்களும் இவர்களை விலகு என தொடந்து போராட்டம் நடத்தி வருவதால் பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளனர்
இலங்கைக்கு இத்தாலி 125 மில்லியன் கடனுதவி
இலங்கைக்கு இத்தாலி 125 மில்லியன் கடனுதவி
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ,அதனை நிவர்த்தி
செய்யும் அவசர உதவி கடனாக 125 மில்லியன் டலரை இத்தாலி இலங்கைக்கு வழங்கியுள்ளது
இவ்வாறான செயல் பாடு தற்காலத்திற்கு உதவியாக உள்ளதாக இலங்கை தெரிவித்து
வருகின்றமை குறிப்பிட தக்கது
கத்தி முனையில் மனைவியை கடத்தி வெட்டி கொன்ற கணவர் – இரு பெண்கள் காயம்
கத்தி முனையில் மனைவியை கடத்தி வெட்டி கொன்ற கணவர் – இரு பெண்கள் காயம்
இலங்கை Webada in Weliweriya பகுதியில் கடலுக்கு சென்று திரும்பிய மனைவியை கத்தி
முனையில் கடத்திய கணவன் அவரை வெட்டி கொன்றார் ,மேலும் அவரது சகோதரி
,மற்றும் நண்பி ஆகியோர் பலத்த வெட்டு காயங்களுக்கு உள்ளாகியுள்ள நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர்
குறித்த சம்பவம் தொட்ரபிள் போலீசாரை விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
ஊசலாடும் கோட்டா ஆட்சி – வரும் வாரம் ஆட்சி கவிழ்ப்பு
ஊசலாடும் கோட்டா ஆட்சி – வரும் வாரம் ஆட்சி கவிழ்ப்பு
அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை 11 அரசியல் கட்சிகள்
மற்றும் 42 சுயேச்சை எம்.பி.க்கள் இணைந்து இந்த வாரம் பாராளுமன்றத்தில்
சமர்ப்பிக்கவுள்ளதாக பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே 125 எம்பிக்கள் என்சிஎம்முக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளதாக அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
“இதன் விளைவாக, அரசாங்கம் NCM ஆல் தோற்கடிக்கப்பட்டால், SLPP MP ஒருவர் பிரதமராக நியமிக்கப்படுவார், மேலும் ஒரு இடைக்கால அரசாங்கம் அமைக்கப்படும்.
வரைவு NCM SJB, JVP மற்றும் SLPP க்கு அனுப்பப்பட்டுள்ளது, மேலும் அவர்கள்
ஏற்கனவே பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க தங்கள் ஆதரவை உறுதியளித்துள்ளனர், ”என்று அவர் கூறினார்.
இந்தியாவுக்குள் அகதியாக நுழைந்த இலங்கை தமிழர்கள்
இந்தியாவுக்குள் அகதியாக நுழைந்த இலங்கை தமிழர்கள்
இலங்கையில் ஏற்பட்டுள்ள தற்கால பொருளாதார நெருக்கடி காரணமாக
இலங்கையில் இருந்து படகுமூலம் பதின் ஐந்து தமிழர்கள் இந்தியா சென்றடைந்துள்ளனர்
நாள் தோறும் இவ்விதம் இந்தியா செல்லும் அகதிகள் எண்ணிக்கை அதிகரித்து
வருகின்றமை குறிப்பிட தக்கது
- வாகன எரிபொருள் முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்னாள் சபாநாயகர் மறுக்கிறார்
- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை
- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை
- 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவிற்கு ஆதரவாக மற்றொரு மனு தாக்கல்
யாழ்ப்பாணம் பறந்த அமெரிக்கா தூதர்
யாழ்ப்பாணம் பறந்த அமெரிக்கா தூதர்
இலங்கைக்கான அமெரிக்கா தூதுவர் ஐீலி சுங் யாழ்ப்பாணம் சென்று நல்லூரில்
தரிசனத்தை மேற்கொண்டார் ,பின்னர் மக்களை சந்தித்து கலந்து உரையாடியதாக
தெரிவிக்க படுகிறது
இவரது இந்த திடீர் பயணம் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது
- வாகன எரிபொருள் முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்னாள் சபாநாயகர் மறுக்கிறார்
- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை
- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை
- 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவிற்கு ஆதரவாக மற்றொரு மனு தாக்கல்
ஆசிரியர்கள் போராட்டம் – பாடசாலைகள் பூட்டு
நாடளாவிய ரீதியில் அதிபர்கள், ஆசிரியர்கள் முன்னெடுத்துவரும் பணி பகிஷ்கரிப்பு
போராட்டம் காரணமாக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன.
நாட்டில் நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு உடனடி தீர்வைக் கோரி,
அரச பாடசாலைகளின் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள்,
இன்று (25) பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
சிறிலங்காவில் தமிழர் தேசத்தின் மீதான ஆக்கிரமிப்பு !
சிறிலங்காவில் தமிழர் தேசத்தின் மீதான ஆக்கிரமிப்பு !
சிறிலங்காவில் எவ்வகை மாற்றம் நிகழ்தாலும் தமிழர் தேசத்தின் மீதான அபகரிப்பு நீங்காது என்பதனையே மூதூர் சம்பவம் வெளிக்காட்டுவதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஈழத்தமிழர்களின் பண்டைய அடையாளங்களில் ஒன்றாக திருகோணமலை மூதூர் 64ம் கட்டையில் உள்ள இராஜவந்தான் மலையில் மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்
அழிக்கப்பட்டு வருவதோடு பௌத்த சின்னங்களை நிறுவுவதற்கான வேலைப்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நேற்று சனிக்கிழமை (ஏப்ரல் 23) தமிழ்மக்கள் மற்றும் சைவ குருமார்கள் பண்டைய வழிபாட்டு தளத்திற்கு சென்ற போது, பௌத்த பிக்கு ஒருவர் காவல்துறையினர் மற்றும்
புலனாய்வாளர்கள் சகதிம் அவர்களை தடுத்து நிறுத்தி அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் கருத்தினை வெளியிட்டுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சு,
சிறிலங்காவில் ஆட்சியாளர்களுக்கு எதிராக தென்னிலங்கையில் போராட்டங்கள் இடம்பெற்று வருவதோடு, ஆட்சி மாற்றம், அமைச்சரவை மாற்றம், அரசியலமைப்பு மாற்றம், 21ம் திருத்தச்சட்டம் என பல மாற்றங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
தமிழர் தாயக மக்களையும் தென்னிலங்கை போராட்டத்தோடு பயணிக்குமாறு அழைப்புக்கள் விடுக்கப்பட்ட போதும், தமிழ்மக்கள் மௌனமான முறையில் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந் நிலையில் மூதூர் சம்பவமானது, பொருளாதார நெருக்கடியினால் சிக்குண்டுள்ள தென்னிலங்கை, அதில் இருந்து மீளுவதற்கு பல மாற்றங்களை முன்வைத்திருந்தாலும், அதன் அரச இயந்திரம் (கட்டமைப்பு) தமிழர் தேசத்தின் மீதான ஆக்கிரமிப்பு, அபகரிப்பு ஓயாது என்பதiயே வெளிக்காட்டுகின்றது.
தொல்பொருள் செயலணி, வனஜீவராசிகள் இலக்கா என தனது பல்வேறு திணைக்களங்கள் ஊடாக தமிழர் தாயகத்தின் மீதான பௌத்த மயமாக்கல், சிங்கள மயமாக்கல் முன்னெடுக்கப்பட்டு வருவதோடு, இதற்கு துணையாக தமிழர் தேசத்தினை ஆக்கிரமித்து நிற்கின்ற இராணுவமே இருக்கின்றது.
பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டுள்ள சிங்கள தேசம், இதற்கு முதன்மைக்
காரணமாக உள்ள தனது இராணுவச் செலவீனங்கள் பற்றி மூடிமறைத்து,
தனது ஆக்கிரமிப்பு இராணுவத்தை கட்டிக்காத்து, தொடர்ந்தும் தமிழர் தேசத்தின்
மீதான ஆக்கிரமிப்பையும், கட்டமைப்புசார் இனஅழிப்பையும் மேற்கொள்ளவே என்பது மூதூர்
சம்பவத்தின் ஊடாக மீண்டும் வெளிப்படுகின்றது என தெரவிக்கப்பட்டுள்ளது.
பிரான்சில் இமானுவல் மேக்ரான் அமோக வெற்றி
பிரான்சில் இமானுவல் மேக்ரான் அமோக வெற்றி
பிரான்சில் ஆளும் இமானுவல் மேக்ரான் மீண்டும் அதிபராக தெரிவு செய்ய பட்டுள்ளார்
,இவர் 58 சதவீத வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார் ,அதேபோல குடியேற்ற
வாசிகளுக்கு எதிராக கடும் சட்டங்களை அமூல் படுத்தி அவர்களுக்கு எதிரான
பார்ப்புரை மேற்கொண்டு போட்டி போட்ட பெண் வேட்பாளர் பலத்த தோல்வியை சந்தித்துள்ளார்
ஆளும் அதிபர் மீளவும் அதிபராக தெரிவு செய்ய பட்ட நிலையில் உலக நாட்டு தலைவர்கள் அவருக்கு வாழ்த்துக்களை
தெரிவித்த வண்ணம் உள்ளனர்
இலங்கை அரச பேரூந்து இரண்டாக கழன்று ஓட்டம் – மக்கள் கொதிப்பு
இலங்கை அரச பேரூந்து இரண்டாக கழன்று ஓட்டம் – மக்கள் கொதிப்பு
இலங்கை அரசுக்கு சொந்தமான பேரூந்து ஒன்று அனுராத புரத்தில் இருந்து கொழும்பு
நோக்கி புறப்பட்டது ,இவ்வேளை இந்த பேரூந்து சில்லு அச்சுடன் கழன்று தனியாகவும் ,அதன் பாடி தனியாகவும் ஓடியுள்ளது
இதனால் அதி பயணித்த மக்கள் பெரும் பீதியடைந்தனர்
இன்று ஆளும் லஞ்ச ஊழல் பெருச்சாளி கோட்டாவின் ஆட்சியின் அசிங்கத்தில் ஒன்றாக
இது பார்க்க படுகிறது


கத்தியால் குத்தி ஒருவர் படுகொலை
கத்தியால் குத்தி ஒருவர் படுகொலை
இலங்கை வெல்லம்பிட்டிய காவல்துறை பகுதியில் இரு பேக்கரி ஊழியர்களுக்கு
இடையில் இடம்பெற்ற சண்டையை அடுத்து ஒருவர் குத்தி படுகொலை செய்ய பட்டுளளார்
குற்றவாளி கைது செய்ய பட்டு விசாரணைக்கு உட்படுத்த பட்டுளளார் ,பகைமை காரணமாக இந்த கொலை
இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது
ஒருவர் சுட்டுக் கொலை – உருவெடுக்கும் கலாச்சாரம்
ஒருவர் சுட்டுக் கொலை – உருவெடுக்கும் கலாச்சாரம்
இலங்கை பெலியத்த பகுதியில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டு
தாக்குதலில் சிக்கி 42 வயதுடைய நபர் ஒருவர் பலியாகியுள்ளார்
ஒருவாரத்தில் இடம்பெற்ற மூன்றாவது துப்பாக்கி சூட்டு தாக்குதல் இதுவாக அமைய பெற்றுள்ளது
இலங்கையில் ஆயுதங்கள் வைத்திருந்தால் அவர்களுக்கு இருபது வருட சிறை
தண்டனை வழங்க படும் என்பது விதியாக உள்ள நிலையிலும் இவ்விதமான சம்பவங்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளமை குறிப்பிட்ட தக்கது
விடுதியில் தங்கிய பளை மாணவி -சடலமாக மீட்பு
விடுதியில் தங்கிய பளை மாணவி -சடலமாக மீட்பு
யாழ்ப்பாணம், கலட்டிச் சந்தியில் உள்ள தங்குமிடத்தில் இருந்து பல்கலைக்கழக
மாணவி ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தவறான முடிவெடுத்து அந்த மாணவி உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார் என்று தெரிய வருகின்றது.
உயிரிழந்தவர் பளையைச் சேர்ந்தவர் என்றும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக
கலைப்பீட இரண்டாம் வருட மாணவி என தெரியவந்துள்ளது.
உயிரிழப்புக்கான காரணம் தெரியவராத நிலையில் யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக
விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
யாழில் கோடாரி வெட்டு – ரவுடிகள் அட்டூழியம்
யாழில் கோடாரி வெட்டு – ரவுடிகள் அட்டூழியம்
யாழ்ப்பாணம் பருத்துறை திக்கம் பகுதியில் 44 வயதான நபர் மீது கோடரி வெட்டு
தாக்குதல் இடம்பெற்றுள்ளது
மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரே இந்த தாக்குதலை நடத்தி விட்டு தப்பி
சென்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது
பாதிக்க பட்டவர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டுளளார்
இலங்கையில் சீமெந்தின் விலை பை ஒன்றுக்கு 450 ஆக அதிகரிப்பு
இலங்கையில் சீமெந்தின் விலை பை ஒன்றுக்கு 450 ஆக அதிகரிப்பு
இலங்கையில் சீமந்தின் விலை பை ஒன்றுக்கு 450 ரூபாவால் அதிகரிக்க பட்டுள்ளது
,தற்போது ஒரு பய் மூவாயிரம் ரூபாவுக்கு விற்க படுகிறது
நாள் தோறும் இலங்கையில் பொருள்களின் விலைகள் அதிகரிக்க பட்டு வருவதால் மக்கள் மேலும்
கொந்தளித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
எண்ணெய் பவுசருக்கு தீவைத்தவர் கைது
எண்ணெய் பவுசருக்கு தீவைத்தவர் கைது
இலங்கை ரம்புகளை பகுதியில் எண்ணெய் பவுசருக்கு தீவைத்த இருபத்தி எட்டு வயது
நபர் ஒருவர் உளவுத்துறையால் கைது செய்ய பட்டுள்ளார்
கைதானவர் தீவிர விசாரனைக்கு உட்படுத்த பட்டுள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர்
இந்தியவிடம் மேலும் 500 மில்லியன் டொலர் கடன் வாங்கும் இலங்கை
இந்தியவிடம் மேலும் 500 மில்லியன் டொலர் கடன் வாங்கும் இலங்கை
இலங்கையில் ஏற்பட்டுள்ள தற்கால பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உலக
நாடுகளிடம் ஓடி ஓடி இலங்கை கடனை வாங்கி குவிகிறது
தற்போது ஐநூறு மில்லியன் டொலரினை இலங்கைக்கு இந்தியா மேலும் கடனாக வழங்க உள்ளது
இந்த டொலர் கடன் ஒயில் இறக்குமதிக்கு பயன் படுத்த படும் என இலங்கை
நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்
இலங்கையில் உணவகங்கள் முப்பது வீதமானவை அடித்து பூட்டு
இலங்கையில் உணவகங்கள் முப்பது வீதமானவை அடித்து பூட்டு
இலங்கையில் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக நாடளாவிய ரீதியில் இயங்கி வந்த
முப்பது வீதமான உணவகங்கள் அடித்து பூட்ட பட்டுள்ளன
மேலும் இந்த தட்டுப் பாடு தொடர்ந்தால் பேக்கரி உற்பத்தியிலும் பாதிக்க படும் நிலை
ஏற்படும் என தெரிவிக்க படுகிறது
இந்த உணவகங்கள் மூடப்பட்டதால் அரசுக்கு பல மில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளதாக
சுட்டி காட்ட பட்டுள்ளது
இலங்கைக்கு சீனா அவசர உதவிகளை வழங்கும் – சீனா உறுதி
இலங்கைக்கு சீனா அவசர உதவிகளை வழங்கும் – சீனா உறுதி
இலங்கைக்கு கடனை அள்ளி வழங்கி மத்திய வங்கியை இலங்கை வரலாற்றில் முதன்
முதலாக கறுப்பு பட்டியலில் சீனா இணைத்தது
தற்போது எழுந்துள்ள நெருக்கடி நிலையில் இலங்கைக்கு சீனா மேலும் உதவிகளை வழங்கும் என தெரிவித்துள்ளது
சீனாவின் இந்த உதவி திட்டம் இலங்கைக்கு மேலும் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்பது வெளிப்படை
ஜனாதிபதி முறையுடன் மாகாணசபைகளும், விகிதாசார தேர்தல் முறையும் போக வேண்டும்-மனோ கணேசன்
ஜனாதிபதி முறையுடன் மாகாணசபைகளும், விகிதாசார தேர்தல் முறையும் போக வேண்டும் என்ற கருத்து ஆபத்தானது
- மனோ கணேசன்
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை அகற்றப்படுமானால், 13ம் திருத்தம் அதனோடு மாகாணசபைகளும், அதனோடு விகிதாரசார தேர்தல் முறைமையும் போக வேண்டும்” என்ற கருத்து அரங்குக்கு மெல்ல வருகிறது. இது ஆபத்தானது. கண்களை விற்று சித்திரம் வாங்க நாம் தயார் இல்லை. அரசியலமைப்பை திருத்துகிறோம் என்ற போர்வையில், இன்றைய அரசியலமைப்பின் கீழ் இருக்கும் இந்த குறைந்தபட்ச உரிமைகள் மீது, எவரும் கை வைத்தால், அதற்கு எதிராக தமிழ் முற்போக்கு கூட்டணி உயிரை கொடுத்து போராடும்.
வடக்கு கிழக்கின் ஏனைய தமிழ் கட்சிகளும், முஸ்லிம் கட்சிகளும் இந்த இரண்டு விவகாரங்கள் தொடர்பில் தமது நிலைப்பாடுகளை பகிரங்கமாக அறிவித்தால், ஒட்டு
மொத்த தமிழ், முஸ்லிம் கட்சிகளின் நிலைப்பாடுகளை நாம் அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் நாட்டுக்கு அறிவிக்கலாம் என ஜனநாயக மக்கள் முன்னணி – தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.
இதுபற்றி மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,
அரசில் இருந்து விலகி விட்டதாக கூறும் இரத்தின தேரர் “நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை அகற்றப்படுமானால், 13ம் திருத்தம் அதனோடு மாகாணசபைகளும்,
அதனோடு விகிதாரசார தேர்தல் முறைமையும் போக வேண்டும்” என, கட்சி தலைவர்கள் கூட்ட்டத்தில் கூறினார்.
அவரை இறுக்கமாக இடைமறித்து “எந்த அரசியலமைப்பு திருத்தம் வந்தாலும், விகிதாசார தேர்தல் முறைமை, 13ம் திருத்தம் என்ற குறைந்தபட்ச அதிகாரபரவலாக்கல் ஆகியவற்றின் மீது கைவைக்க நாம் விட மாட்டோம்.” என்று நான் பதில் சொன்னேன்.
இந்த நிலைப்பாட்டிலேயே ஐக்கிய மக்கள் கூட்டணியின் சகோதர பங்காளி கட்சிகளான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்
ஆகியவையும் உறுதியாக இருக்கின்றமையை அக்கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இந்த பிக்கு எம்பியின் இந்நிலைப்பாடு அங்கு வேறு சிலரின் மனதுகளுக்குள்ளும் ஒளிந்து இருப்பது எனக்கு தெரியும். கடந்த சில தினங்களாக நடைபெறும் கட்சி தலைவர்கள் கலந்துரையாடல்களில், இந்த கருத்து நேரடியாகவும், மறைமுகமாகவும், பல பெரும்பான்மை கட்சி அரசியல் கட்சி தலைவர்களால், பிரதிநிதிகளால் கூறப்பட்டது.
இதுபற்றிய பேச்சு, நேற்று நடந்த கட்சி தலைவர் கூட்டத்தில் மீண்டும் வந்தது. நான் மீண்டும் சொன்னேன். “விகிதாசார தேர்தல் முறைமை, மாகாணசபைகளை அகற்றித்தான் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை அகற்ற முடியுமென்றால்,
நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை முழுமையாக அகற்ற வேண்டாம். 20ம் திருத்தத்தை முழுமையாக அகற்றி 19ம் திருத்தத்தை மீண்டும் கொண்டு வருவோம். அதில் ஜனாதிபதி படுபலவீனமாகி விடுவார்.”
“அதை விடுத்து, விகிதாசார தேர்தல் முறைமை, 13ம் திருத்தம் என்ற குறைபட்ச அதிகாரபரவலாக்கல் ஆகியவற்றின் மீது கை வைத்தால், அதற்கு எதிராக நான் என் உயிரை கொடுத்தாவது போராடுவேன்.” என்று கட்சி தலைவர்கள் கூட்டத்தில் நான்
கூறியுள்ளேன். மேலும் இருக்கும் பிரச்சினைகளிலிருந்து விடுபடுவதை விடுத்து, மேலும் புதிய பிரச்சினைகளை உருவாக்க வேண்டாம் என சபாநாயகரிடம் நான் கூறினேன்.
எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, இதுபற்றிய தன் கருத்தை நேற்று முதல்நாள் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் மிக தெளிவாக அறிவித்தார். “நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை முழுமையாக அகற்ற வேண்டும் என நாம் சொன்னாலும்,
விகிதாசார தேர்தல் முறைமையையும், 13ம் திருத்தத்தையும் மாற்ற நாம் உடன்பட மாட்டோம். இவை தொடர்பாக எங்கள் பங்காளி கட்சிகளுக்கு நாம்
உறுதியளித்துள்ளோம்.” என்று சஜித் பிரேமதாச, ஐக்கிய மக்கள் கூட்டணியின் சார்பாக கூறினார். இது ஒரு தேசிய கட்சி/கூட்டணி ஒன்றின் தலைவரின் மிக முற்போக்கான நிலைப்பாடாகும்.
13ம் திருத்தம் தொடர்பில் தமக்கு அக்கறை இல்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் நண்பர் கஜேந்திரகுமார் எம்பி என்னிடம் கூறியுள்ளார்.
ஆனால், விகிதாசார தேர்தல் முறைமையும், ஏதோ ஒருவகையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையும் தொடர வேண்டுமென்பதே தமது கட்சியின் நிலைப்பாடு என அவர் மேலும் கூறியுள்ளார்.
13ம் திருத்தம் மூலமான மாகாணசபைகள், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மட்டுமல்ல, முழு நாட்டிலும் ஒன்பது மாகாணங்களிலும், குறிப்பாக மத்திய, மேல்,
சப்ரகமுவ, ஊவா மாகாணங்களிலும் உள்ளன. ஆகவே அதுபற்றிய தமிழ் முற்போக்கு கூட்டணியின் நியாயமான நிலைபாட்டை வடக்கு கிழக்கு தமிழ் கட்சிகள் புரிந்துகொண்டிருப்பதாக நான் நினைக்கிறேன்.
கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதியாக கலந்துக்கொள்ளும் நண்பர் சுமந்திரன் எம்பி, விகிதாசார தேர்தல் முறைமை, 13ம் திருத்தம் ஆகியவை தொடர்பில் எமது நிலைப்பாடுகளுடன் உடன்படுவதாக
கூறுகிறார். ஆனால், அவரது சில கருத்துகள், “விகிதாசார தேர்தல் முறைமை, 13ம் திருத்தம்” ஆகியவற்றை தேசிய தளத்தில் தேவையற்ற சிக்கல்களில் கொண்டு போய் மாட்டி விடுமோ என்ற சந்தேகம் எனக்குள் ஏற்பட்டுள்ளது. ஆகவே இத்தகைய
தேவையற்ற முரண்பாடுகளை தவிர்த்து கொள்ளும் நோக்கில், தமிழ் தேசிய கூட்டமைப்பு, இந்த இரண்டு விவகாரங்கள் தொடர்பில் தமது இன்றைய தெளிவான நிலைப்பாடுகளை அறிவிக்க கோருகிறேன்.
வடக்கு கிழக்கின் ஏனைய தமிழ் கட்சிகளும் இந்த இரண்டு விவகாரங்கள் தொடர்பில் தமது நிலைப்பாடுகளை பகிரங்கமாக அறிவித்தால், ஒட்டு மொத்த தமிழ், முஸ்லிம்
கட்சிகளின் நிலைப்பாடுகளை நாம் அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் நாட்டுக்கு அறிவிக்கலாம்.












