Posted in இலங்கை செய்திகள்

இலங்கைக்கு எதிராக இந்தியா செல்படாது – இலங்கை ஆரூடம்

இலங்கைக்கு எதிராக இந்தியா செல்படாது – இலங்கை ஆரூடம்

இலங்கையுடன் மிக சிறந்த நட்புடனும் ,பொருளாதார பாதுகாப்பு ஒத்துழைப்புடன் செயல்படுகிறது ,இவ்வாறான வேளையில்

இந்தியா எமக்கு எதிராக ஒரு போதும் செயல்படாது என பீரீஸ் தெரிவித்துள்ளார்

கொழும்பு துறைமுக விடயம் பெரும் சல சலப்பை ஏற்படுத்திய நிலையில் மேற்படி விடயத்தை இவர் தெரிவித்துள்ளமை குறிப்பிட தக்கது

Home » இலங்கை » Page 136
Posted in இலங்கை செய்திகள்

மரணவீட்டுக்கு சென்ற பேரூந்து கவிழ்ந்தது – 13 பேர் காயம்

மரணவீட்டுக்கு சென்ற பேரூந்து கவிழ்ந்தது – 13 பேர் காயம்

இலங்கை நுவரெலியா நானு ஓயா பகுதியில் பயணித்து கொண்டிருந்த தனியார் பேரூந்து ஒன்று

சாரதியின் கட்டுப் பாட்டை இழந்து விபத்தில்சிக்கியது ,இதன்பொழுது

அதில் பயணித்த 13 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்


மரண வீடொன்றுக்கு சென்றுவிட்டு திரும்பி கொண்டிருந்த பொழுதே மேற்படி விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

Home » இலங்கை » Page 136
Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

இராணுவம் போர் குற்றத்தில் ஈடுபடவில்லை- இலங்கை திமிர் பேச்சு

இலங்கை ஹிட்லர் ர் மகிந்த ஆட்சியில் மேற்கொள்ள பட்ட தமிழ் இனப் படுகொலையின்

பொழுது இலங்கை அரச இராணுவம் எவ்வித போர் குற்றங்களிலோ ,மனித உரிமை மீறல்களிலோ ஈடுபடவில்லை என இலங்கை அரசு திமிராக பேசி வருகிறது

புலிகள் மீது குற்ற சாட்டு

அனைத்து குற்றங்களையும் புரிந்தவர்கள் ஒன்று பட்ட இலங்கை சோஷலிச குடியரசை இரண்டாக உடைக்க பிரிவினைவாத போரில்

ஈடுபட்ட தமிழீழ விடுதலை புலிகளே என ஆளும் இராணுவ மயப்படுத்தப் பட்ட இலங்கை பவுத்த பேரினவாத தேசம் தெரிவித்துள்ளது

ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவையில் இடம் பெற்று வரும் இலங்கை தொடர்பான தீர்மானத்தில் இறுக்கமான நிலைகள் எட்ட பட்டு

அவை சர்வதேச விசாரணை வரை செல்ல வேண்டும் என்ற எழுத்துமூல வாக்குறுதிகள் காண்பிக்க பட்டுள்ள பொழுதும்

ஏற்று கொள்ள மறுக்கும் இலங்கை

,ஐநாவில் வெளியிட பட்ட இந்த அறிக்கையை எம்மால் ஏற்று கொள்ள முடியாது எனவும், அது ஆதாரங்கள் இலலாத பொய் புனைவுகள் என இலங்கை அரச ஆட்சியாளார்கள் மீளவும் கூறி வருகின்றனர்

பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கு இலங்கை உட்பட்டு, பாதிக்க பட்ட மக்களுக்கு நேர்த்தியான தீர்வினை வழங்க வேண்டும்

என்கிறது ஐநா மனித உரிமை ஆணையம் ,ஆனால் அதனை செவி மடுத்து கொள்ளும் நோக்கில் இலங்கை செயல்படவில்லை

இந்தியாவை பணியவைத்து குறித்த குற்றங்களுக்கு எதிராக தனது நிலை காப்பை எடுத்து இலங்கை நகர்ந்து வருகிறது

கொழும்பு துறைமுக அபிவிருத்தி பணி கிளறலும் ,இதனை மையப்
படுத்திய இலங்கையின் பிராந்திய நலன் சார்ந்த நகர்வாக மாற்றம் பெற்றுளளது

இந்தியாவை அடக்கும் தந்திரம்

இந்தியாவை சீண்டி ,தமது கொள்கைக்குள் அடிபணிய வைக்கும் நரித்திட்ட நகர்வில் இலங்கை இராய தந்திரம் நகர்ந்து செல்கிறது

சுருங்க செல்ல போனால் தொட்டிலையும் ஆட்டி ,பிள்ளையையும் நுள்ளி விடுகின்ற நிலையில் சீனா,இந்தியா உறவு நகர்ந்து செல்கிறது

Home » இலங்கை » Page 136

எனக்கு இரு பொண்டாட்டி ,வேணும் என்பவருடன் எப்பொழுதும் சென்று விடுவேன் .,மற்றவரை கைவிட்டு விடுவேன் என்பது தான் இலங்கையின் நிலைப் பாடாக நகர்கிறது

மேற்படி இலங்கையின் இந்த இராய தந்திர நகர்வுக்கு இந்தியாவால் கட்டு போட முடியாத நிலை ஏற்படுகிறது ,

மாறாத இந்தியா புலிகள் நிலை

இந்திய கொள்கை வகுப்பாளர்களின் நகர்வுகள் ,புலிகள் இல்லாத காலத்திலும் ,புலிகள் நிலைப் பாடுகள் மீது கோபம் கொள்ள காரணமாக அமைந்து செல்கிறது

இந்திரா காந்தி வளர்த்த புலிகள் ,தமிழக முதல்வர் எம் யீ ஆரால் வளர்க்க பட்ட புலிகளுக்கு ,அதே நாடு ஒற்றை காரணத்தை வைத்து எதிராக நிற்பது வேடிக்கையாக உள்ளது

மாறும் உலக அரசியல்

இது கால மாற்றத்தில் மறையும் நிலை ஏற்படும் ,ஈராக்,ஈரான் பரம எதிரி நாடுகள் ,பெரும் போரை கூட தொடுத்தன ,ஆனால் இப்பொழுது இரு நாடுகளும் இணைந்து பொது எதிரிகளை வெளியேற்றுவதில் கங்கணம் கட்டி நிற்கின்றன

அவ்விதமான சூழல் எதிர்வரும் பத்து ஆண்டுக்குள் இலங்கையில் தலைகீழ் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை அடித்து சொல்கிறோம்

நீதி நிலை நாட்டும் ஐநா ..?

ஐநா மனித உரிமை பொது உலக சமாதானத்தை நிலை நாட்டை வேண்டும் எனின் ,தமிழர் இன படுகொலைக்கு உரிய தீர்வினை வழங்க வேண்டும் ,

அது ,பிரிந்து செல்லும் நாடு அமைத்தல் ,அல்லது மாநில சுயாட்சி முறைமையான ஆட்சி பகிர்வாக இது அமைய பெறும் ,பிரிட்டனில் மூன்று மானில சுயாட்சிகள் உள்ளமை குறிப்பிட தக்கது

அதுபோன்ற நிலை ஒன்றே இலங்கையை வசப்படுத்தும் ,நிலைக்கு இலங்கையின் ஆளும் அதிகாரங்கள் வழியமைத்து செல்கின்றன

புதைகுழி தோண்டும் கோட்டா,மகிந்தா

நிரந்தர அரசியல் தீர்வுக்கு சாதகமான பல வழிமுறைகள் கிடைக்க பெற்ற பொழுதும், இனவாத வெறியுடன் ,அடக்குமுறையை விரித்து செல்லும் நிலையினால் ,தவறான வரலாற்றை ஆளும் ஆட்சியாளர்கள் எழுதி வைக்க போகின்றனர்

அதுவே அவர்கள் ஆட்சிக்கு சாவு மணி அடிக்கும் ஒன்றாகவும் மாற்றம் பெற போகிறது ,நிலை மாறும் இலங்கை ஆளும் சிந்தையில்,திசை மாறும் உலகின் திடீர் நகர்வுகளுக்குள் சிக்கும் பேராபத்து ஏற்பட போகிறது …!

– வன்னி மைந்தன் –

Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் கொரனோவால் 445 பேர் மரணம்

இலங்கையில் கொரனோவால் 445 பேர் மரணம்

இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி சுமார் 445 பேர் இதுவரை மரணமாகியுள்ளனர்

தொடர்ந்து இந்த நோயின் பரவல் கட்டு படுத்த நடவடிக்கை மேற்கொள்ள

பட்டு வருகின்ற பொழுதும் ,மக்கள் உயிர் பலியை தடுக்க முடியாது அரச நிர்வாகம் தினறி வருகிறது

Posted in இலங்கை செய்திகள்

புத்தர்சிலை உடைத்தவர் சகோதரி – முஸ்லீம் தீவிரவாதி என கைது

இலங்கையில் சிங்கள அரச பயங்கரவாதம் மேற்கொண்ட முஸ்லீம் மக்களுக்கு எதிரான சொத்தழிப்பு ,மற்றும் மனித குல தாக்குதலினால் கொதித்து போன முசுலீம் வாலிபர்கள் சிலர் இணைந்து புத்தர் சிலைகளை உடைத்தெறிந்தனர்

பொய் வழக்கு

அவ்விதம் உடைக்க பட்ட நபர்களது குடும்பங்களை சேர்ந்த பெண்களை ,இலங்கையில் இடம்பெற்ற குண்டு தாக்குதலின்

பொழுது சகரான் பயிற்சி வழங்கியதாக கூறி கைது செய்யப் பட்டுள்ளனர்

இந்திய போலீசாரை மிஞ்சிய பொய்வழக்கு பதிவு செய்து பழிவாங்கும் அரசியலில் ஆளும் இரத்த தமிழ் இனக் கொலையாளி கோட்டா அரச நிர்வாகம் மேற்கொண்ட வண்ணம் உள்ளது

புலிகள் எழுச்சி

தமிழர்கள் சிலர் வடக்கில் மீளவும் புலிகளை எழுச்சி கொள்ள செய்யு போராட்டத்தை ஆரம்பிக்க முற்பட்டார்கள் என

ஆயுதங்களுடன் கைது செய்தனர் ,இவ்வாறு கைது செய்தவர்களில் பலர் புனர்வாழ்வு பெற்று சமூக வாழ்வில் இணைக்க பட்டவர்கள் ஆகும்

Posted in இலங்கை செய்திகள்

சகரானிடம் பயிற்சி பெற்ற இளம் பெண் குண்டுதாரி கைது

இலங்கையில் தொடராக இடம் பெற்ற பாரிய குண்டு வெடிப்புக்களை முன் நின்று நடத்திய இலங்கை முஸ்லீம்

இலங்கை முஸ்லீம் பயங்கரவாதி

பயங்கரவாதி சகரானிடம் பயிற்சி பெற்ற இருபத்தி நான்கு வயது பெண்மணி ஒருவர் குற்ற தடுப்பு பிரிவினரல கைது செய்ய பட்டுள்ளார்

விசாரணை

கைதானவர் உரிய முறை விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார் ,

இடம்பெற்று வரும் விசாரணைகளில் மேலும் பல விடயங்கள் அம்பலத்திற்கு வர கூடும் என எதிர் பார்க்க படுகிறது

Posted in இலங்கை செய்திகள்

பாகிஸ்தான் அதிபர் பாதுகாப்பு அதிகாரிகள் இலங்கை வருகை

எதிர் வரும் வாரம் செவ்வாய்க்கிழமை பாகிஸ்தான் அதிபர் இம்ரான்கான் இலங்கை வரவுள்ள நிலையில் அவருக்குரிய

பாதுகாப்பினை வழங்கும் நோக்குடன் இலங்கைக்கு அவரது பாதுகாப்பு துறையினர் வருகை தந்துள்ளனர்

அவர் செல்ல போகும் சாலைகள் ,மற்றும் தங்குமிடங்கள் என்பனவற்றை

இவர்கள் ஆராய்ந்ததன் பின்னரே அவர் அங்கு வருகை தரவுள்ளமை குறிப்பிட தக்கது

Posted in Uncategorized

இலங்கையில் நிலநடுக்கம் ஏற்படும் என எச்சரிக்கை

இலங்கையில் எதிர் காலத்தில் நில நடுக்கம் தொடராக ஏற்படும் வாய்ப்புக்கள் உள்ளதாக காலநிலை ஆராய்ச்சியார்கள் தெரிவித்துள்ளனர்

நில நடுக்கம்

உலகம் மாறி வரும் பருவ நிலையின் காரணமாக ஏற்பட்ட மாறுதலே இந்த நில நடுக்கம் ஏற்பட காரணமாக அமைந்துள்ளது
என சுட்டி காட்டப்பட்டுள்ளது ,

ஈரான் ,பனாமா துருக்கி ,இந்தோனேசிய போன்ற நாடுகளில் அதிக கூடிய நில நடுக்கம் ஏற்பட்டு இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது

எச்சரிக்கை

எனவே இதனை கருத்தில் கொண்டு மலை பகுதியில்வளை மக்கள் மிக அவதானமாக இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகவும்

குறிப்பிடும் இவர்கள் சமீப நாட்களில் இலங்கையில் ஏற்பட்ட தொடர் நிலஅதிர்வுகள் இதனாலே ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்

Posted in இலங்கை செய்திகள்

கத்தியால் குத்தி ஒருவர் படுகொலை

கத்தியால் குத்தி ஒருவர் படுகொலை

இலங்கை நெத்திபலகம பகுதியில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய் தர்க்கம் முற்றி படுகொலையில் முடிந்துள்ளது

முப்பத்தி எட்டு வயதுடைய நபரை இவ்வாறு படுகொலை செய்ய பட்டுள்ளார் ,

சடலம் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது ,மேற்படி

கொலையை புரிந்த நபர் கைது செய்ய பட்டு நீதிமன்ற விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுளளார்


இலங்கையில் இவ்விதமான மரணங்கள் தற்போது அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது

Posted in இலங்கை செய்திகள்

அரசியல்வாதிகள் குடும்பத்திற்கு களவாக கொரனோ ஊசிகள்

இலங்கையில் ஆளும் கோட்டா அடிமை அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் எம்பிக்கள் குடும்பங்களுக்கு கொரனோ

ஊசியானது திருட்டு தனமாக செலுத்த பட்டுள்ளதாக சஜித் கட்சி பிரமுகர் குற்றம் சுமத்தியுள்ளார்

திருட்டு

மகிந்தவின் ஆட்சியின் பொழுது பல மில்லின ரூபாய்களை அரச பணத்தில் இருந்து கொள்ளையடித்தமை வெளியாகியது போல

இந்த திருட்டுக்களும் கோட்டா ஆட்சி அகன்றதன் பின்னர் தெரிய வரும் என்பதில் சந்தேகம் இல்லை

அலிபாவாவும் நாப்பது திருடர்களும் ஆளுகின்ற பொழுது திருட்டு சாதாரணம் தானே ,நீங்க திருடுங்க அமைச்சர்களே ,திருட பிறந்த கூட்டம் திருடுகிறது

Posted in இலங்கை செய்திகள்

ஆற்றில் மிதந்த வாலிபனின் சடலம் – தொடரும் கோட்டா படுகொலைகள்

ஆற்றில் மிதந்த வாலிபனின் சடலம் – தொடரும் கோட்டா படுகொலைகள்

மர்ம கொலைகள்

இலங்கையில் ஆளும் இரத்த காட்டேறி கோட்டாபய ஆட்சிக்கு அமர்ந்ததன் பின்னர் ஜெ ஆர் ஜேவர்தனாவின் கொள்கையை

பின்பற்றி பயணிக்கும் இவரது நிழல் டிவிஷன் படைப்பிரிவால் நாட்டின் பல பகுதிகளில் கொலைகள் இடம் பெற்று வருகின்றன

மர்மமாக கொலை செய்ய பட்டு ஆறுகளில் சடலங்கள் வீச பட்டு வருகின்றன ,ஆண் ,பெண்கள் என இவ்வாறு மீட்க பட்டு வருகின்றனர் .

மகாவலி கங்கையில் சடலம்

கடந்த தினம் மகாவலி கங்கையில் வேலைக்கு சென்று வருவதாக கூறி சென்ற பதினேழு வயது வாலிபன் ஒருவர் சடலமாக மீட்க பட்டுள்ளார்

இலங்கையின் வடக்கு தமிழர் வசிக்கும் யாழ்ப்பாண பகுதியில் அரசியல்வாதிகள்

உள்ளிட்டவர்கள் நீர் நிலைகளில் சடலங்களாக மீட்க பட்டனர் என்பது இங்கே குறிப்பிட தக்கது

Posted in இலங்கை செய்திகள்

ஒரு நாளில் ஆறு மோட்டர் சைக்கிள் திருட்டு

ஒரே நாளில் ஆறு மோட்டர் பைகில்கள் மாயம் – மக்களுக்கு காவல்துரை அவசர எச்சரிக்கை

திருடர்கள் கைவரிசை
இலங்கையில் பல மாதங்காளாக ஊந்துருளிகள் திடீரென காணமல் போகின்றன ,வீடுகளுக்கு முன்னால் மற்றும் கடை தொகுதிகளில்

நிறுத்தி வைக்க பட்டவை காணாமல் போயின
,மேற்படி திருட்டை கும்பல் ஒன்று இணைந்து செய்து வந்துள்ளது


திருடப்பட்ட ஊந்துருளிகள் பாகங்களாக கழற்றி விற்பனை செய்ய பட்டும் வந்துள்ளன

இவ்வாறு கடந்த 24 மணித்தியாலத்தில் ஆறு ஊந்துருளிகள் காணாமல் போயுள்ளன

திடீர் சுற்றிவளைப்பு

போலீசார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை

புலிகள் ஒரு லட்சம் பேரை தலை வெட்டி கொன்றனர்

தொடர்ந்து இந்த திருடடை கட்டு படுத்த நடவடிக்கை மேற்கொள்ள பட்டும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

Posted in இலங்கை செய்திகள்

மோடி கட்சி இலங்கை வந்தால் அடி விழும் – மனோ எச்சரிக்கை

இந்தியாவின் வடகிழக்கு மாநிலம் திரிபுராவின் பீஜேபி முதல்வர் பிப்லப் டெப் நேபாளத்திலும், இலங்கையிலும், பீஜேபி கிளைகள் உருவாக்குவோம் என்ற மாதிரி சொன்னாராம் என இங்கே சிலர்,

அடி விழும்

மிகப்பெரிய தேசபக்தர்களை போன்று வேடம் புனைந்து சும்மா கூச்சல் போட்டு குழப்பி கொள்கிறார்கள். நம் நாட்டின் உண்மை பிரச்சினைகளால் மக்கள் துவண்டு போய் இருப்பதை திசை திருப்ப

இது இன்று பயன்படுத்தப்படுகிறது என கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் எம்பி தெரிவித்துள்ளார்.

மனோ எம்பி இதுபற்றி மேலும் கூறியுள்ளதாவது,

இது ஒரு சிறு நிகழ்வு. நம் நாட்டிலும் இந்தியாவை பற்றி, வேறு நாடுகளை பற்றி, அந்நாட்டு அரசுகளை பற்றி, இந்நாட்டு

அரசியல்வாதிகள் பேசுவதில்லையா? இதை மறந்து, சாதாரண பாமரருக்கும் தெரிந்த விடயம் பற்றி, அரசியல் சட்ட விற்பன்னர்கள்

, ஊடகங்களில் வந்து, ஏதோ பெரிய அரசியல் சட்ட வியாக்கியானம் வேறு கொடுக்கின்றார்கள். இவை என்ன என எங்களுக்கு தெரியாதா?

இந்திய பிரதமர் மோடி ஆசை

இந்திய பிரதமர் மோடியின் தலைமையில் இந்நாட்டில் கட்சி அமைக்க முடியாது. இந்திய பீஜேபியின் நேரடி கிளையை இங்கே அமைக்க சட்டத்தில் இடமில்லை.

ஆனால் இங்கே ஒரு கட்சியை வேண்டுமானால், சட்டப்படி “பாரதீய ஜனதா கட்சி” (பீஜேபி) என பதிவு செய்ய விண்ணபிக்கலாம்.

அல்லது உள்ள ஒரு கட்சியின் பெயரைக்கூட பீஜேபி என மாற்றிக்கொள்ளலாம். இதற்கு சட்டம், கட்டம் போட முடியுமா, என்ன?

இங்கே ஹெல உறுமய, ருஹுனு ஜனதா, தமிழ் முற்போக்கு, தமிழ் தேசிய, முஸ்லிம் காங்கிரஸ் என பல கட்சிகள் உள. இவை போன்று இதுவும் அவசியமானால் அமையலாம்.

உலகம் முழுக்க, இலங்கை, இந்தியா உள்ளிட்ட பல ஆசிய, ஆபிரிக்க, இலத்தின் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் கம்யூனிஸ்ட், சோசலிஸ்ட்… என்ற பெயரில் கட்சிகள் இல்லையா?

பல நாடுகளில் கிறிஸ்தவ ஜனநாயக கட்சி…. என்றும், கிரீன் பார்ட்டி…. என்றும் கட்சிகள் இருக்கின்றன. அதேபோல், இஸ்லாமிய… என்ற பெயர் கொண்ட கட்சிகளும் உள்ளன.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பிறகு இலங்கையின் ஆர்சி ஆண்டகை பேராயர் ரஞ்சித் மெல்கம் அவர்கள் “இலங்கை

கிறிஸ்தவ ஜனநாயக கட்சி” என்று ஒரு கட்சி அமைக்க போகின்றாரோ என்ற கதை அடிப்பட்டது. அந்தளவுக்கு அவரது உரைகளில் அரசியல் இருந்தது.

இன்னமும் சில கட்சிகள் பெயரளவில் ஒரு அடிப்படையில் இல்லாவிட்டாலும் கூட, கொள்கை அடிப்படையில், உலகமட்ட

ஒருமைபாடுகளை கொண்டுள்ளன. நம்ம ஜேவீபீ, பல உலக புரட்சி இயக்கங்களுடன் ஒருமைபாடு கொண்டிருந்தது. இப்போது கூட

அவர்களது மாநாடுகளுக்கு வேறு நாடுகளின் பல கட்சி பிரதிநிதிகள் வருகிறார்கள்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி, சுதந்திர கட்சி மாநாடுகளுக்கு சீன கம்யூனிஸ்ட் கட்சி பிரதிநிதிகள் வருகின்றார்கள். நம்ம ஸ்ரீலங்கா

முஸ்லிம் காங்கிரஸ் நிகழ்வுகளில் இந்திய முஸ்லிம் லீக் பிரதிநிதிகளை கண்டுள்ளேன். ஆக இதெல்லாம், சின்ன, சின்ன அரசியல் நகர்வுகள்தான்…!

பிப்லப் டெப், ஒரு துடிப்பான இளம் பீஜேபி அரசியலர். எதிர்கால இந்தியாவின் ஒரு முன்னணி தலைவராக வரக்கூடியவர். இன்று

கொஞ்சம் அதிகமாக பேசி விட்டார், அவ்வளவுதான். இப்போ அவரை அழைத்து பிரதமர் மோடி விளக்கம் கேட்டுள்ளார்.

இதை பிடித்துக்கொண்டு இங்கே சிலர் பெரிய யோக்கியர்கள், உலக மகா உத்தமர்கள் போன்று பெரிய கட்டு கட்டுகிறார்கள். இவர்களை பற்றி எனக்கு தெரியாதா ?

போர்த்துகீசியர், ஒல்லாந்தரால் கைப்பற்ற முடியாமல் போன கண்டி ராஜ்யத்தை, ஆங்கிலேயர் எப்படி கைப்பற்றினார்கள்? கண்டியின் கடைசி வீர தமிழ் மன்னன் கண்ணுசாமி நாயக்கர் என்ற

ஸ்ரீவிக்கிரம ராஜசிங்கனை காட்டிக்கொடுத்து, போட்டுக்கொடுத்து தேசத்துரோகம் செய்த, பிலிமத்தலாவை, எகலபொல நிலமே ஆகியோர் யார் என்பதை தேடி பார்த்தாலே விடை கிடைக்கும்.

மேடையில் ஏறி தேசப்பற்றும், தமிழ், முஸ்லிம் இலங்கையருக்கு எதிராக இனவாதமும் பேசிவிட்டு, கீழே இறங்கி வந்து இரகசியமாக

சீனாவுக்கோ, வெளிநாடுகளுக்கோ நாட்டை விற்று பிழைப்பு நடத்தும் பிலிமத்தலாவை, எகலபொல போன்ற நபர்கள் இந்நாட்டில் இன்றும் இருக்கிறார்கள்.

இதை மனதில் கொண்டு நாம் இலங்கையர்களாக உள்நாட்டில் ஒற்றுமையாக இருந்தால், எவரும் எம்மை ஆக்கிரமிக்க முடியாது, இல்லாவிட்டால் அதோகதிதான் என்பதை உணர்வோம்.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலம் திரிபுராவின் பீஜேபி முதல்வர் பிப்லப் டெப் நேபாளத்திலும், இலங்கையிலும், பீஜேபி கிளைகள் உருவாக்குவோம் என்ற மாதிரி சொன்னாராம் என இங்கே சிலர்,

மிகப்பெரிய தேசபக்தர்களை போன்று வேடம் புனைந்து சும்மா கூச்சல் போட்டு குழப்பி கொள்கிறார்கள். நம் நாட்டின் உண்மை பிரச்சினைகளால் மக்கள் துவண்டு போய் இருப்பதை திசை திருப்ப இது இன்று பயன்படுத்தப்படுகிறது என கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் எம்பி தெரிவித்துள்ளார்.

மனோ எம்பி இதுபற்றி மேலும் கூறியுள்ளதாவது,

இது ஒரு சிறு நிகழ்வு. நம் நாட்டிலும் இந்தியாவை பற்றி, வேறு நாடுகளை பற்றி, அந்நாட்டு அரசுகளை பற்றி, இந்நாட்டு அரசியல்வாதிகள் பேசுவதில்லையா? இதை மறந்து, சாதாரண

பாமரருக்கும் தெரிந்த விடயம் பற்றி, அரசியல் சட்ட விற்பன்னர்கள், ஊடகங்களில் வந்து, ஏதோ பெரிய அரசியல் சட்ட வியாக்கியானம்

வேறு கொடுக்கின்றார்கள். இவை என்ன என எங்களுக்கு தெரியாதா?

இந்திய பிரதமர் மோடியின் தலைமையில் இந்நாட்டில் கட்சி அமைக்க முடியாது. இந்திய பீஜேபியின் நேரடி கிளையை இங்கே அமைக்க சட்டத்தில் இடமில்லை.

ஆனால் இங்கே ஒரு கட்சியை வேண்டுமானால், சட்டப்படி “பாரதீய ஜனதா கட்சி” (பீஜேபி) என பதிவு செய்ய விண்ணபிக்கலாம்.

அல்லது உள்ள ஒரு கட்சியின் பெயரைக்கூட பீஜேபி என மாற்றிக்கொள்ளலாம். இதற்கு சட்டம், கட்டம் போட முடியுமா, என்ன?

இங்கே ஹெல உறுமய, ருஹுனு ஜனதா, தமிழ் முற்போக்கு, தமிழ் தேசிய, முஸ்லிம் காங்கிரஸ் என பல கட்சிகள் உள. இவை போன்று இதுவும் அவசியமானால் அமையலாம்.

உலகம் முழுக்க, இலங்கை, இந்தியா உள்ளிட்ட பல ஆசிய, ஆபிரிக்க, இலத்தின் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் கம்யூனிஸ்ட், சோசலிஸ்ட்… என்ற பெயரில் கட்சிகள் இல்லையா?

பல நாடுகளில் கிறிஸ்தவ ஜனநாயக கட்சி…. என்றும், கிரீன் பார்ட்டி…. என்றும் கட்சிகள் இருக்கின்றன. அதேபோல், இஸ்லாமிய… என்ற பெயர் கொண்ட கட்சிகளும் உள்ளன.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பிறகு இலங்கையின் ஆர்சி ஆண்டகை பேராயர் ரஞ்சித் மெல்கம் அவர்கள் “இலங்கை

கிறிஸ்தவ ஜனநாயக கட்சி” என்று ஒரு கட்சி அமைக்க போகின்றாரோ என்ற கதை அடிப்பட்டது. அந்தளவுக்கு அவரது உரைகளில் அரசியல் இருந்தது.

இன்னமும் சில கட்சிகள் பெயரளவில் ஒரு அடிப்படையில் இல்லாவிட்டாலும் கூட, கொள்கை அடிப்படையில், உலகமட்ட

ஒருமைபாடுகளை கொண்டுள்ளன. நம்ம ஜேவீபீ, பல உலக புரட்சி இயக்கங்களுடன் ஒருமைபாடு கொண்டிருந்தது. இப்போது கூட

அவர்களது மாநாடுகளுக்கு வேறு நாடுகளின் பல கட்சி பிரதிநிதிகள் வருகிறார்கள்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி, சுதந்திர கட்சி மாநாடுகளுக்கு சீன கம்யூனிஸ்ட் கட்சி பிரதிநிதிகள் வருகின்றார்கள். நம்ம ஸ்ரீலங்கா

முஸ்லிம் காங்கிரஸ் நிகழ்வுகளில் இந்திய முஸ்லிம் லீக் பிரதிநிதிகளை கண்டுள்ளேன். ஆக இதெல்லாம், சின்ன, சின்ன அரசியல் நகர்வுகள்தான்…!

பிப்லப் டெப், ஒரு துடிப்பான இளம் பீஜேபி அரசியலர். எதிர்கால இந்தியாவின் ஒரு முன்னணி தலைவராக வரக்கூடியவர். இன்று

கொஞ்சம் அதிகமாக பேசி விட்டார், அவ்வளவுதான். இப்போ அவரை அழைத்து பிரதமர் மோடி விளக்கம் கேட்டுள்ளார்.

இதை பிடித்துக்கொண்டு இங்கே சிலர் பெரிய யோக்கியர்கள், உலக மகா உத்தமர்கள் போன்று பெரிய கட்டு கட்டுகிறார்கள். இவர்களை பற்றி எனக்கு தெரியாதா ?

போர்த்துகீசியர், ஒல்லாந்தரால் கைப்பற்ற முடியாமல் போன கண்டி ராஜ்யத்தை, ஆங்கிலேயர் எப்படி கைப்பற்றினார்கள்?

கண்டியின் கடைசி வீர தமிழ் மன்னன் கண்ணுசாமி நாயக்கர் என்ற ஸ்ரீவிக்கிரம ராஜசிங்கனை காட்டிக்கொடுத்து, போட்டுக்கொடுத்து

தேசத்துரோகம் செய்த, பிலிமத்தலாவை, எகலபொல நிலமே ஆகியோர் யார் என்பதை தேடி பார்த்தாலே விடை கிடைக்கும்.

மேடையில் ஏறி தேசப்பற்றும், தமிழ், முஸ்லிம் இலங்கையருக்கு எதிராக இனவாதமும் பேசிவிட்டு, கீழே இறங்கி வந்து இரகசியமாக

சீனாவுக்கோ, வெளிநாடுகளுக்கோ நாட்டை விற்று பிழைப்பு நடத்தும் பிலிமத்தலாவை, எகலபொல போன்ற நபர்கள் இந்நாட்டில் இன்றும் இருக்கிறார்கள்.

இதை மனதில் கொண்டு நாம் இலங்கையர்களாக உள்நாட்டில் ஒற்றுமையாக இருந்தால், எவரும் எம்மை ஆக்கிரமிக்க முடியாது, இல்லாவிட்டால் அதோகதிதான் என்பதை உணர்வோம்.

Posted in Uncategorized

தமிழீழம் கேட்கும் வெளிநாட்டு தமிழர்கள் – குமுறிய கோட்டா

உலக சமாதானத்தை நிலை நாட்ட தான் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் உழைப்பேன் என
ஆளும் இலங்கை தமிழ் இன கொலையாளியும் இன்றைய ஜனாதிபதியுமான கோட்டபாய தெரிவித்துள்ளார்

நாம் பயங்கரவாதிகளை அழித்து நாட்டு மக்களை காப்பாற்றியுள்ளோம் ,

சிறைகளில் எவரும் இல்லை எமக்கு எதிராக சேறு பூசும் நபர்களாலே வெளி நாடுகளில் இருந்து பொய் பரப்புரை செய்கின்றனர் என கோட்டா குமுறியுள்ளார்

அவர்களின் கனவு தமிழீம் அது ஒருபோதும் சாத்தியமாகாது எனவும் ,தாம் போரில்

ஒரு தமிழர்களையும் கொலை செய்யவில்லை எனவும் ,புலிகளே

கொன்றார்கள் என கொக்கரித்துள்ளார் இரத்தக் கறை படிந்த எசமான் கோட்டா ,

    Posted in இலங்கை செய்திகள்

    ஸ்பெயின்,ரொமேனியா நாடுகளில் புதிய இலங்கை தூதரகங்கள் திறப்பு

    இலங்கையின் புதிய தூதராலயங்கள் ஸ்பெயின் மற்றும் ரொமேனியா ஆகிய நாடுகளில் திறக்க பட்டுள்ளது

    இவ்வாறான தூதரகங்கள் ஊடக நாடுகளுக்கு இடையிலான பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு தொடர்பில்


    நல்லுறவை வளர்த்து கொள்ளு நோக்குடன் இந்த தூதரகங்கள் திறக்க படுவதாக இலங்கை தெரிவித்துள்ளது

    இதுவரை இல்லாது இப்பொழுது மட்டும் அவசரமாக இலங்கை திறப்பதற்கு என்ன கரணம் ..?

    ஐரோப்பிய நாடுகளில்வாழும் தமிழர்களுக்கு இது விடயம் புரிந்திருக்க கூடு என்பதே வெளிப்படை

      Posted in இலங்கை செய்திகள்

      சிங்கள பொலிஸ் மிரட்டல் – காட்டி கொடுத்த மனோ

      பொத்துவில்-பொலிகண்டி பேரணி தொடர்பில் மனோ கணேசனிடம் பொலிஸ் வாக்குமூலம்தன்னிடம் வாக்குமூலம் பெற்ற பொலிஸ் அதிகாரிகளிடம், “சட்டமா அதிபர் திணைக்களத்தின்

      ஒத்தாசையுடன், நீங்கள் நீதிமன்றகளுக்கு தவறான தகவல்களை தந்து, மரியாதைக்குரிய நீதிமன்றங்களை தவறாக வழி நடத்தி, அரசாங்கத்துக்கு தேவையான தடையுத்தரவுகளை, அரசாங்கத்தின்

      நோக்கங்களுக்கு அமைய வாங்குகிறீர்கள்” என்று பொலிஸ் மீது குற்றம்சாட்டி வாக்குமூலம் அளித்ததாக கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனநாயக மக்கள் முன்னணி

      தலைவரும், முன்னாள் தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து கலாச்சார அமைச்சருமான மனோ கணேசன் எம்பி தெரிவித்துள்ளார்.

      மனோ எம்பி இதுபற்றி மேலும் கூறியுள்ளதாவது,

      மாங்குளம் பொலிஸ், முல்லைத்தீவு நீதிமன்றத்தில் AR154/21 என்ற இலக்கத்தின் கீழ் பெற்றதாக கூறப்படும் தடையுத்தரவை நான் பெப்.6ம் திகதி மீறினேன் என்பதே குற்றச்சாட்டு. மாங்குளம் பொலிஸ் அறிவித்து, கொகுவளை நிலைய அதிகாரிகள் விடுத்த கோரிக்கையை அடுத்து வீட்டுக்கு வந்து வாக்குமூலத்தை பெரும்படி நான் கூறியிருந்தேன். எட்டு (08) விஷயங்களை உள்ளடக்கி, எழுத்து மூலமாக ஆங்கில மொழியில், இலங்கை பொலிசை சேர்ந்த பிரதம ஆய்வாளர் பரணகம, கான்ஸ்டபிள் நிஷங்க ஆகியோருக்கு நான் வழங்கிய வாக்குமூலத்தின் விபரங்கள் பின்வருமாறு:

      (1) எனக்கு ஒருபோதும் எந்தவித தடை உத்தரவும் நேரடியாக ஒருபோதும் வழங்கப்படவில்லை.

      (2) அப்படியான ஒரு உத்தரவு ஒலிபரப்ப பட்டிருந்தாலும், பேரணியின் போது இரைச்சல் காரணமாக, நான் அதை செவிமடுத்திருக்கவில்லை.

      (3) எவ்வாறாயினும் நான் கோவிட்19 சுகாதார வழிமுறைகளை எனக்காகவும், பிறருக்காகவும் எப்போதும் கடைபிடித்து வருகிறேன்.

      (4) இத்தகைய ஆர்ப்பாட்டங்களை, பேரணிகளை, ஊர்வலங்களை, கூட்டங்களை நான், கொழும்பு மாநகரின் பொது இடங்களில், சாலைகளில், நாட்டின் ஏனைய இடங்களில் தினசரி காண்கிறேன். அன்றும், அதற்கு முன்னும், பின்னும் இன்றும், இப்போதும் இவை நடைபெறுகின்றன. ஆகவே ஒரே மாதிரியான சம்பவங்களுக்கு, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வெவ்வேறு சட்டங்கள் இந்நாட்டில் இருக்கின்றன என நம்புவதற்கு எனக்கு எந்தவித காரணமும் இருக்கவில்லை.

      (5) நான் ஒரு தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர். கட்சி தலைவர். கூட்டணி தலைவர். சமீபத்தைய முன்னாள் அமைச்சரவை அமைச்சர். நான் சட்டம், ஒழுங்கை மதிப்பவன். நீதிமன்றங்களை மதிப்பவன். ஆனாலும், இப்போது சட்டமாஅதிபர் திணைக்களத்தின் ஒத்தாசையுடன், மரியாதைக்குரிய நீதிமன்றகளுக்கு தவறான தகவல்களை தந்து, அரசாங்கத்தின் நோக்கங்களுக்கு அமைய தடையுத்தரவுகளை இலங்கை பொலிஸ் வாங்குகின்றது என நான் கவலை, சந்தேகம் கொள்கிறேன்.

      (6) மேற்கண்ட எதிர்ப்பு பேரணி, அரசாங்கத்தை எதிர்த்து நடத்தபட்டதே தவிர, அது நாட்டை எதிர்த்து நடைபெறவில்லை. அரசாங்கம் என்பதற்கும், நாடு என்பதற்கு இடைப்பட்ட வேறுபாடு பற்றிய அரசியல் அறிவு எனக்கு தெளிவாக இருக்கின்றது. ஆகவே இந்த அரசாங்க எதிர்ப்பு பேரணியிலிருந்து பின்வாங்க எனக்கு எந்தவித காரணமும் இருக்கவில்லை.

      (7) மேற்கண்ட எதிர்ப்பு பேரணி, எமது நாட்டின் அரசியலமைப்பில் சொல்லப்பட்டுள்ள ஜனநாயக நடைமுறைகளை பின்பற்றி நடத்தப்பட்டதால், இந்த அரசாங்க எதிர்ப்பு பேரணியிலிருந்து பின்வாங்க எனக்கு எந்தவித காரணமும் இருக்கவில்லை.

      (8) மேற்கண்ட எதிர்ப்பு பேரணி, பல்லின, பன்மத, பன்மொழி நாடான இலங்கை மக்களின் பொதுவான, தமிழ் பேசும் மக்களின் குறிப்பான ஜனநாயக எதிர்பார்ப்புகளான, நீண்டகாலமாக சிறையில் இருக்கும் அரசியல் கைதிகளின் பிரச்சினை, காணாமல் போனோர் பிரச்சினை, ஜனாசா நல்லடக்க பிரச்சினை, தோட்ட தொழிலாளர்களின் வேதன பிரச்சினை, தமிழ் பெளத்த, இந்து புராதன சின்னங்கள் தொடர்பிலான அகழ்வாராய்ச்சி திணைக்கள பிரச்சினை ஆகியவை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்ததால், இந்த அரசாங்க எதிர்ப்பு பேரணியிலிருந்து பின்வாங்க எனக்கு எந்தவித காரணமும் இருக்கவில்லை.

      Posted in இலங்கை செய்திகள்

      சீனாவின் ஆதிக்கத்தில் இலங்கை – சந்திரிக்கா குமுறல்

      இலங்கையில் சீனாவின் அத்துமீறல் – சந்திரிக்கா குமுறல் – கொதிக்கும் இந்தியா ஆட்சி மாற்றம் ஏற்படலாம்

      இலங்கையில் சீனா

      இலங்கை தற்பொழுது சீனாவின் ஆதிக்கம் நிறைந்த காலனித்துவ நாடாக மாற்றம் பெற்றுள்ளது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்க குமார தூங்க தெரிவித்துள்ளார்

      மகிந்த ஆட்சி

      மகிந்த ராஜபக்ச இலங்கையின் ஜனாதிபதியாக தெரிவானதன் பின்னர் சீனாவின் முழு ஆதிக்கத்தில் இலங்கை சென்றடைந்ததது

      ,புலிகள் அழிப்பின் ஊடாக தன்னை இலங்கையின் கீரோவாக காண்பித்த

      அவர் இப்பொழுது இலங்கையை சீனாவுக்கு அடகுவைத்து வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்

      பொதுஜன ஐக்கிய முன்னணி என்ற கட்சியே இலங்கையில்

      இல்லாது அழித்தார் மகிந்தா ராஜபக்சே என்பதும் இவரது கவலையாக உள்ளது

      Posted in இலங்கை செய்திகள்

      டீச்சருக்கு கொரனோ – பாடசாலை அடித்து பூட்டு

      இலங்கை ,கண்டி காட்டன் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கற்கை நெறி போதித்து வந்த டீச்சர் ஒருவருக்கு கொரனோ

      நோயானது உள்ளது கண்டு பிடிக்க பட்ட நிலையில் தற்போது அந்த பாடசாலை அடித்து பூட்ட பட்டுள்ளது

      மறு அறிவித்தல் வரும் வரை திறக்க பட மாட்ட்து என தெரிவிக்க பட்டுள்ளது ,சுகாதார முறைமைக்கு உட்படுத்த பட்டு கிருமி

      நாசினிகள் கொண்டு பாடசாலை முழுவதுதுமாக சுத்தம் செய்ய பட்டுள்ளது

      ,மேலும் இங்கு கல்வி பயின்ற மாணவர்கள் அனைவருக்கும் சோதனை மேற்கொள்ள பட்டு வருகிறது

      இதுவரை இலங்கையில் நானூருக்கு மேற்பட்டவர்கள் கொரனோ நோயினால் பலியாகியுள்ளமை குறிப்பிட தக்கது

      Posted in இலங்கை செய்திகள்

      100 மில்லியன் ரூபா போதைவஸ்து -நபர் மடக்கி பிடிப்பு

      இலங்கையில் கொடி கட்டி பறக்கும் போதைவஸ்து வியாபாரம்- கடத்தல் மன்னர்களாக மாறிய அரசியல் வியாபாரிகள்

      போதைவஸ்து

      இலங்கையில் தற்காலத்தில் அதிக போதைவஸ்து பாவனைகள் அதிகரித்துள்ளன ,இதனை ஆளும் அரசியல் செல்வாக்குடன் நடத்த

      படும் போதைவஸ்து வியாபாரமே கரணம் என்பது உள்ளக கசிவுகள் அடித்து கூறுகின்றன

      அவ்விதம் தற்போது நூறு மில்லியன் ரூபா பெறுமதியான போதைவஸ்துடன் இருபத்தி ஒன்பது வயது நபர் ஒருவர் காவல்துறையினால கைது செய்யப்பட்டுளளார்

      விசாரணை

      கைதானவர் தொடர்ந்து காவல்துறையினரின் தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ள்ளார் ,

      இந்த கடத்தல் காரரின் பின்புலத்தில் உள்ளவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்

      அரசியல் வியாபாரிகள்

      ஆளும் கோட்டாபய வெளிநாடு ஒன்றில் தங்கி இருந்த போதைவஸ்து கடத்தல் மன்னருடன் சிறப்பு சந்திப்பு ஒன்றை சில

      திருமணத்திற்கு முன்பு பெண்கள் செய்யும் அந்த விடயம்

      தலைவலி வர காரணங்கள்.

      மாதங்களுக்கு முன்னர் நடத்தி இருந்ததும் ,அதன் பின்னர் இந்த வியாபாரம் இலங்கையில் அதிகளவு இடம்பெற்று வந்துள்ளமையும் கண்கூடாக காண முடிகிறது

      மக்கள் நல்லாட்சி தத்துவத்தை மறந்து இவ்வாறான வியாபாரத்தில் ஆளும் அரசியல்வாதிகள் ஈடுபட்டுள்ளது குறிப்பிட தக்கது

      Posted in இலங்கை செய்திகள்

      தமிழர் பகுதி முகாம்களில் உள்ளவர்களுக்கு – புதியவகை கொரனோ

      தமிழர்களுக்கு கடத்த படும் புதிய வகை கொரனோ -தொடரும் மற்றுமொரு இன அழிப்பு

      இலங்கையில் தற்போது புதிய வகை கொரனோ நோயானது பரவியுள்ளதாக ஆளும் இராணுவத் தளபதியும் போர்குற்றவாளியுமான சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்

      முழங்காவில் பகுதியில் உள்ள இராணுவ தடுப்பு முகாமில் உள்ளவர்களுக்கு இந்த நோயானது கண்டு பிடிக்க பட்டுள்ளதாம்

      அரேபிய நாடுகளில் இருந்து இலங்கை வந்தடைந்த பதினொரு பேருக்கு இந்த நோயானது உள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளதாம்

      இவ்விதம் பதினாறு பேருக்கு இந்த நோயானது உள்ளது தெரியவந்த நிலையில்

      மிரட்டடி அடக்க நினைக்கும் கோட்டா – அடங்க மறுக்கும் அமைச்சர்

      இரண்டாவது பிள்ளை பிறக்க போகிறது

      விசேட மருத்துவ கண் காணிப்புக்கு கீழ் அவர்கள் வைக்க பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்

      இவ்வாறன முகாம்களை தமிழ் பகுதியில் நிறுவி தமிழர்களுக்கு இந்த

      கிருமிகளை கடத்தும் நாசகார நகர்வில் சிங்கள அரச பயங்கரவாத இராணுவம் ஈடுபட்டுள்ளது குறிப்பிட தக்கது