Tag: இலங்கை
ஆறுபேர் இணைந்து சிறுமியை அடித்து கொன்ற கொடூரம்
ஆறுபேர் இணைந்து சிறுமியை அடித்து கொன்ற கொடூரம்
இலங்கை பெரிய கல்லாறு பகுதியில் பன்னிரண்டு வயது சிறுமி ஒருத்தியை மூன்று பெண்கள்
உள்ளிட்ட ஆறுபேர் இணைந்து நாள்தோறும் அடித்து துன்புறுத்தியுள்ளனர்
இந்த அடி காயங்களினால் அவளது புண்களில் ஏற்பட்ட தொற்று கிருமி ஊடாக அவர் இறந்துள்ளார் என விசாரணைகளில் தெரிய வந்துள்ளது
இதனால் ஆறு பேரும் கைது செய்ய பட்டு கொலை குற்றச்சாட்டில் நீதி விசாரணைகள் இடம்பெற்று வருகிறது,
மேற்படி சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது
கச நோயினால் 600 பேர் ஆண்டு தோறும் இறப்பு
கச நோயினால் 600 பேர் ஆண்டு தோறும் இறப்பு
இன்று உலக காசநோய் தினமாகும். இலங்கையில் காசநோயினால் ஒரு வருடத்திற்கு 500 க்கும் 600 க்கும் இடைப்பட்டவர்கள் உயிரிழப்பதாக சுகாதார அறிக்கைகளில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் அறிக்கைகளின்படி இந்நாட்டினுள் இனங்காணப்படாத காச நோயாளர்கள் கிட்டத்தட்ட 4000 க்கும் 5000 க்கும் இடைப்பட்டவர்கள் சமூகத்தில் இருப்பதாக காச
நோய் ஒழிப்பு மற்றும் மார்பு நோய் சம்பந்தப்பட்ட தேசிய வேலைத்திட்டத்தின் சமூகம் மருத்துவர் சுவனி தசநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும், சுகாதார அறிக்கைகளின்படி குழந்தைகளுக்கு காச நோய் உருவாகும் அபாயம் அதிகம் இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த நோயானது பல பெயர்களால் அழைக்கப்படுகின்றது. ஆதிகாலம் முதல் இந்நோய் இருந்து வந்திருப்பதாக ஆய்வுகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் இங்கிலாந்தைச் சேர்ந்த ரிச்சர்ட் மோட்டன், பிரான்சைச் சேர்ந்த ஜின் என்டன் விலமின் பாஸ்டர் ஆகிய விஞ்ஞானிகள் காசநோய் தொடர்பாக பல ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.
பலதரப்பட்ட பரிசோதனை முடிவுகளின்படி காச நோய்க்கு எதிராக உள்ள ஒரேயொரு தடுப்பூசி டீ.ஊ.பு என்று தற்போது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் தற்போது காச நோயை குணப்படுத்துமளவிற்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தூக்கில் தொங்கிய நிலையில் பெண் சடலமாக மீட்பு
திருகோணமலை, தம்பலகாமம் பாலம்போட்டாறு பத்தினிபுரப் பகுதியில் உள்ள வயல் நிலத்தை அண்டிய குடியிருப்பு குடிசையில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் ஒன்று இன்று (21) கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.
நல்லூர், மூதூர் எனும் முகவரியை கொண்ட கந்தவேல் இந்திரானி வயது (46) என்ற பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
ஆடு மேய்ப்பதற்காக குறித்த குடியிருப்பு பகுதியில் தனது கணவன் மற்றும் தாயுடன் குறித்த பெண் வாழ்ந்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையிலேயே, குடிசைப் பகுதிக்குள் கழுத்து கட்டப்பட்ட நிலையில் அரைப்பகுதி உடம்பு தொங்கிய நிலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது கொலையா ?தற்கொலையா? எனபது தொடர்பில் தம்பலகாமம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
10 மில்லியன் போதைவஸ்துடன் பெண் கைது
10 மில்லியன் போதைவஸ்துடன் பெண் கைது
இலங்கை Thalagala in Homagama பகுதியில் உள்ள வீடொன்றில் மறைத்து வைக்க பட்டிருந்த நிலையில் பத்து மில்லியன் ரூபா பெறுமதியான ஐஸ் போதைவஸ்து மீட்க பட்டுள்ளது
விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் பொழுது இந்த போதைவஸ்து மீட்க பட்டுள்ளது ,கைதான பெண் தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார்
இலங்கை விடயத்தில் ஐ.நா தனது கடந்தகால தவறை சரிசெய்ய ஓர் வாய்ப்பு ! -நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரதிநிதி இடித்துரைப்பு
இலங்கை விடயத்தில் ஐ.நா தனது கடந்தகால தவறை சரிசெய்ய ஓர் வாய்ப்பு ! -நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரதிநிதி இடித்துரைப்பு
Virtual Statement I 46th Session I UN Human Rights Council I Ministry of International Affairs TGTE
Virtual Statement for the 46th Session of the UN Human Rights Council (HRC) by Minister Manicka Vasagar ( International Affairs – Transnational Government…
youtu.be
உலகெங்கும் போரினாலும், இனப்படுகொலைகளினாலும் பாதிக்கப்பட்டவர்கள் தமக்கான நீதியினை பெற்றுக் கொள்வதில், ஐ.நாவின் தேவை தற்போது கேள்விக்குறியாகியுள்ள நிலையில்,
சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் முன் நிறுத்துவதன் மூலம், தனது கடந்த கால தவறுகளை சரிசெய்வதற்கு ஐ.நாவுக்கு தற்போது ஓர் வாய்ப்பு கிட்டியுள்ளது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் ஐ.நா மனித உரிமைச்சபை தனது தலைமைத்துவத்துக்கும், முன்னேற்றத்துக்கும் வாய்ப்பாக இது அமையும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சிறிலங்கா தொடர்பில் ஐ.நா மனித உரிமைச்சபையில் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மான வரைவு தொடர்பில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை ஐ.நா அங்கத்துவ
நாடுகளுக்கு அனைத்துலக தொடர்பாடலுக்கான அமைச்சர் மாணிக்கவாசகர் காணொளி வாயிலாக முன்வைத்திருந்தார்.
அவர் தனதுரையில், கடந்த 12 ஆண்டுகளாக நாங்கள் இன்னமும் நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்காகக் காத்திருக்கிறோம்.
ஐ.நா. தீர்மானங்கள் குறித்து சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்து இணங்காதது, மற்றும் போர்க்குற்றங்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் உட்பட இடைக்கால நீதி வழிமுறைகளை நிறுவுவதில்
தாமதம் என்பன போரில் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோருக்கு உண்மை மற்றும் நீதியை வழங்குவதைத் தவிர்ப்பதற்கான ஒரு முயற்சியாகும்.
எந்தவொரு தீர்மானத்தையும் நடைமுறைப்படுத்தி நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான சூழலை உருவாக்கும் நம்பிக்கை மற்றும் நல்லிணக்கத்தை உள்நாட்டு பொறிமுறை மூலம் செய்யமுடியாது என்பதை சிறீலங்கா மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வந்ததன் மூலம் தெளிவாகிவிட்டது.
உங்களது தற்போதைய தீர்மான வரைவு, பாதிக்கப்பட்டவர்களை மேலும் துன்பத்திற்கும் அடக்குமுறைக்கும் உள்ளாக்குவதோடு, சிறிலங்கா இனவாத அரசுக்கும் அதன் குற்றவாளிகளுக்கும் மேலதிக நேரமும் வெகுமதியும் அளிப்பதாக அமைகிறது.
உலகெங்கும் போரினால் பாதிக்கப்பட்டவர்கள், கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை, போர்க்குற்றங்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு உட்படுத்தப்படுவதால் போரினால்
பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் ஐ.நா மனித உரிமைப்பேரவையின் தேவை இப்போது கேள்விக்குறியாகியுள்ளது.
சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் முன் நிறுத்துவதின் மூலம், தனது தலைமைத்துவத்தைக் காண்பிப்பதற்கும், கடந்த கால தவறுகளை சரிசெய்வதற்கும்,
முன்னேறுவதற்கும் ஐ.நா மனித உரிமைப்பேரவைக்கு இது ஒரு வாய்ப்பாக அமையும் என உறுதிபடத் தெரிவிக்கின்றோம் என தெரிவித்துள்ளார்.
On behalf of The Transnational Government of Tamil Eelam (TGTE), and the victims of the Mulliavaikkal War, appeal to the Council, that after 12 years, we are still waiting for justice and accountability.
As you all are aware, the war has resulted in more than 70 000 dead including women, and children, 89 000 widows, about 40 000 disabled, 60 000 IDPs, and 146 000 are still unaccounted for, either dead or missing.
The continued non-compliance, by the Government of Sri Lanka on the UN HRC resolutions, and delaying the establishment of transitional justice mechanisms, including a special court to prosecute alleged war crimes, is an attempt to avoid delivering on the truth and justice, for the thousands of victims of the country’s civil war.
It has become very clear, and repeated and reiterated by the GoSL, that a home-grown mechanism to implement any resolution will never ever be possible, to build any trust for an environment for reconciliation, justice, or accountability.
Your current draft is only to continue to victimise and suppress the victims with more pain and sufferings, and to reward a rogue state and the perpetrators to buy more time.
The relevancy of the Council for the victims of war, around the world, has now come into question, who are continued to be subjected to structural Genocide, War Crimes and Crimes Against Humanity.
Here, it’s an opportunity for the Council to show leadership, to correct past mistakes and to move forward, by referring Sri Lanka to the ICC.
Thank You.
காவல்துறை சுற்றிவளைப்பில் 1,158 பேர் கைது
காவல்துறை சுற்றிவளைப்பில் 1,158 பேர் கைது
இலங்கை மேல் மாகாணத்தில் காவல்துறையினர் மேற்கொண்ட
திடீர் சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையின் பொழுது 1,158 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்
இவ்வாறு கைது செய்ய பட்டவர்களில் நீதிமாறினால் தேட பட்டு வந்த பலரும் கைது செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
பாட்டியை கட்டி வைத்து சிறுமியை கற்பழித்த காமுகன் தப்பி ஓட்டம்
பாட்டியை கட்டி வைத்து சிறுமியை கற்பழித்த காமுகன் தப்பி ஓட்டம்
இலங்கையில் 73 வயது பாட்டியுடன் வசித்து வந்த 12 வயது சிறுமி ஒருவர் காமுகனால் கற்பழிக்க பட்டுளளார்
சம்பவ தினம் அன்று பாட்டியை கட்டி போட்டு விட்டு சிறுமியை தனது இச்சை தீரும் வரை கற்பழித்ததுள்ளான் ,
தனது வேட்டை முடிந்ததும் அவர் தப்பி ஓடியுள்ளார்
மேற்படி சம்பவத்தில் பாதிக்க பட்டவர்கள் வழங்கிய புகாரின் அடிப்படையில் தப்பி ஓடிய நபரை தேடி கண்டு பிடிக்கும் பணியில்
போலீசார் ஈடுபட்டுள்ளனர் .குறித்த செயலை புரிந்தவர் திருமணமானவர் என்பது குறிப்பிட தக்கது
இலங்கையில் பரவும் புதியவகை நோய்
இலங்கையில் பரவும் புதியவகை நோய்
இலங்கை அனுராதாபுரம் பகுதியில் டைனியா எனப்படும் புதிய வகை நோயானது பரவி வருகிறது ,இது மனிதர்களின் தோலினை
தாக்கிய பின்ன அது உடல் முழுவதும் வேகமாக பரவி மனிதர்களின்
உயிரை கொல்லும் கொடிய ஆபத்தான நோயாக பார்க்க படுகிறது
இது தொடர்பான விழிப்புணர்வு எச்சரிக்கை நிகழ்வுகள் நடத்த பட்டு வருகின்றன
நாடெங்கிலும் 500 உற்பத்திக் கிராமங்கள் – ஆட்டம் காட்டும் கோட்டா
நாடெங்கிலும் 500 உற்பத்திக் கிராமங்கள் – ஆட்டம் காட்டும் கோட்டா
நாடெங்கிலும் 500 உற்பத்திக் கிராமங்களை நிறுவும் வேலைத்திட்டத்தை இவ்வாண்டுக்குள் பூர்த்தி செய்வதற்கு நிதி
ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்ஹ தெரிவித்துள்ளார்.
அனுராதபுர மாவட்டத்தின் அலியாபத்துவ கிராமத்தில் சமுர்த்தி உற்பத்;திக் கிராம வேலைத் திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதனூடாக ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் இரண்டு உற்பத்திக் கிராமங்களை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
சமுர்த்தி அபிவிருத்தி அமைச்சு நாடு முழுவதிலும் ‘சௌபாக்கிய வாரத்தை’ அமுலாக்கி வருகின்றது.
இதன் மூலம் சுயதொழில்கள் உருவாக்குவதுடன், உற்பத்திகளை சந்தைப்படுத்த சந்தை வசதிகளையும் உருவாக்கத்
திட்டமிட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்ஹ குறிப்பிட்டார்.
500 கோடி டொலரில் -.கொழும்பில் புதிய ரயில் பாதைகள்.
500 கோடி டொலரில் -.கொழும்பில் புதிய ரயில் பாதைகள்.
கொழும்பு மாநகரில் வாகன நெரிசலைக் குறைக்கும் நோக்கத்துடன் ரயில் பாதைகளை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டம் ஒன்று அமுலாக்கப்படவுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் கொழும்பு உள்ளிட்ட சனநெரிசல்மிக்க பிரதேசங்களை உள்ளடக்கியவாறு மூன்று ரயில் பாதைகள் நிர்மாணிக்கப்படும்.
ராகமயில் இருந்து கொழும்பு கோட்டை ஊடாக கிருலப்பனை வரையிலும், மொரட்டுவை, பிலியந்தலை, நாராஹென்பிட்டி ஊடாக
களனி வரையிலும், கொட்டாவ, பன்னிப்பிட்டி, தலவத்துகொட ஊடாக ஹணுப்பிட்டி வரையிலும் ரயில் பாதைகள் அமைக்கப்படவுள்ளன.
இதுபற்றி ஆராயும் கலந்துரையாடல் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று நிதியமைச்சில் இடம்பெற்றுள்ளது.
திட்டத்தில் மஹரகம நகரையும் உள்ளடக்குவது பிரயோசனமாக இருக்குமென பிரதமர் சுட்டிக்காட்டினார். மக்கள் தேவைக்கு
அமைய அபிவிருத்தி இடம்பெற வேண்டும். அவ்வாறில்லாத அபிவிருத்தித் திட்டங்கள் நாட்டிற்குத் தேவையில்லை.
இதற்கமைய, கொட்டாவை, ஹணுப்பிட்டி ரயில் பாதையில், மஹரகம நகரையும் உள்ளடக்க முடியும் என நகர அபிவிருத்தி அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் சுட்டிக்காட்டினார்கள்.
வீதிப் போக்குவரத்து நெரிசலால் 2019ம் ஆண்டு விளைந்த நாளாந்த நஷ்டம் நூறு கோடி ரூபாவென பொருளாதார மதிப்பீடுகள் சுட்டிக்காட்டுகின்றன.
இதற்கான தீர்வுகளுள் ஒன்றாக ஆரம்பிக்கப்பட்ட ‘சிற்றி பஸ் சேவை’ சிறப்பாக முன்னெடுக்கப்படுகின்றது.
உத்தேச ரெயில் பாதைத் திட்டம் அரச – தனியார் ஒத்துழைப்பு நிகழ்ச்சித் திட்டமாக அமுலாக்கப்படும். இதற்கான நேரடி
வெளிநாட்டு முதலீடு 500 கோடி அமெரிக்க டொலராகும். அரசாங்கம் 6 சதவீத பங்களிப்பை வழங்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இந்திய விமானப் படைத் தளபதி -மகிந்தா சந்திப்பு
இந்திய விமானப் படைத் தளபதி -மகிந்தா சந்திப்பு
இந்திய விமானப் படைத் தளபதி எயார் ஷீவ் மார்ஷல் ராக்கேஸ் குமார்சிங்க பாதவுரியா பிரதம மந்திரி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.
இலங்கை விமானப் படையின் 70 ஆவது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக இந்திய விமானப் படைத் தளபதி இலங்கை வந்துள்ளார்.
இந்த விஜயத்தில் அவர் பிரதமரைச் சந்தித்திருக்கின்றார். இதன்போது இலங்கைக்கு தொடர்ந்து பாதுகாப்பு உதவிகளை
வழங்கப்போவதாக இந்திய விமானப் படைத் தளபதி உறுதியளித்துள்ளார்.
இலங்கையும் இந்தியாவும் நீண்ட கால பாதுகாப்பு ஒத்துழைப்பைப் பேணி வருகின்றன. இது சமுத்திரவியல் பாதுகாப்பு,
போதைப்பொருள் கடத்தலை முறியடித்தல் போன்ற பல்துறை சார்ந்ததாக விஸ்தாரம் பெற்றுள்ளது. இந்த ஒத்துழைப்பை மேலும்
விரிவுபடுத்தலாம் என இந்திய விமானப் படைத் தளபதி தெரிவித்துள்ளார்
வவுனியாவில் பொலிஸார் துப்பாக்கி சூடு – இருவர் காயம்
வவுனியாவில் பொலிஸார் துப்பாக்கி சூடு – இருவர் காயம்
இன்று காலை வவுனியா பகுதியில் காவல்துறையினர்
மேற்கொண்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்
பிக்கப் ரக வாகனம் ஒன்றில் மரங்களை வெட்டி கடத்தில் சென்ற குழு மீதே இந்த தாக்குதல் நடத்த பட்டுள்ளது ,
இதில் இருவர் காயமடைந்த நிலையில் அதே பகுதி மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்
மர கடத்தல் ,மற்றும் மணல் கொள்ளையர்கள் மீது இவ்விதமான
துப்பாக்கி சூட்டு தாக்குதல்களை போலீசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிட தக்கது
ஓடும் பேரூந்தில் இருந்து வாலிபர் தள்ளி படுகொலை
ஓடும் பேரூந்தில் இருந்து வாலிபர் தள்ளி படுகொலை
கடந்த தினம் இலங்கை கண்டி Udawela பகுதியில் பயணிகள் பேரூந்தில்
பயணித்து கொண்டிருந்த இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய் தகராறு கொலையில் முடிவடைந்துள்ளது
ஓடிக் கொண்டிருந்த பேரூந்தில் இருவருக்கும் வாய்த்தகராறு
ஏற்பட்டுள்ளது ,அதில் சீற்றம் உற்ற மறு நபர் குறித்த நபரை அதில் இருந்து தள்ளி வீழ்த்தியுள்ளார் .
இதன்பொழுது பேரூந்தில் இருந்து வீழ்ந்த நபர் அவ்விடத்திலே மரணித்துள்ளளார் ,
மேற்படி சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
பத்தாயிரம் மீனவர்களுடன் இந்தியா செல்வேன் – டக்கிளஸ் கூவல்
இந்திய மீனவர்களின் பிரச்சனைக்கு தீர்வு காணாவிட்டால் இங்கிருந்து கதைப்பதை விட, பத்தாயிரம் வடமாகாண கடற்தொழிலாளர்களுடன் இந்தியாவுக்குப் படகில் சென்று, அந்த
பிரச்சனையை தீர்ப்பதற்கு யோசித்துக்கொண்டிருக்கின்றேன் என கடற்தொழில் நீரியல்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்
முல்லைத்தீவில் வைத்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், இந்திய மீனவர்களின் ஆக்கிரமிப்பு நிறுத்தப்படுமெனவும், இந்திய மீனவர்களின் பேச்சு
வார்த்தை வருவது போவதாக உள்ளது. தீர்வு என்று எதுவும் இல்லாவிட்டாலும் இந்திய மீனவர்களின் வருகை நிதந்தரமாக
காணப்படுவதாக கடற்தொழிலாளர்கள் என்னிடம் முறையிட்டுள்ளார்கள் என்றார்.
இதனை தீர்த்து தராவிட்டால் ஆர்ப்பாட்டம், தொழில்முடக்கம், அமைச்சரின் வடமாகாண நடமாட்டத்தினை முடக்குவோம் என்று
சொல்லிக்கொண்டு இருக்கின்றார்கள். நான் பொறுமை பொறுமை என்று சொல்லிக் கொண்டிருக்கின்றேன் இருந்தாலும் அது
நியாயமான கோரிக்கை இதனை நான் விரைவில் தீர்க்க முயற்சிப்பேன் எனவும் தெரிவித்தார்.
ஜப்பான் போர் கப்பல் இலங்கை வருகை
ஜப்பான் போர் கப்பல் இலங்கை வருகை
இலங்கை கம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஜப்பான் நாட்டின் போர் கப்பல் ஒன்று தரித்துள்ளது ,இரு நாடுகளுக்கு இடையிலான போர் பயிற்சி மற்றும் ,பாதுகாப்பு தொடர்பில்
கலந்துகொள்வதற்காக அந்த கப்பல் வருகை தந்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது
குறித்த கப்பல் பகுதி சீனாவுக்கு இலங்கையால் வழங்க பட்ட
நிலையில் அதே துறைமுகத்தில் ஜப்பான் கப்பல் வருகை தந்துள்ளமை குறிப்பிட தக்கது
இலங்கைக்கு ஆதரவாக 21 நாடுகள் ஐநாவில் பேச்சு
இலங்கைக்கு ஆதரவாக 21 நாடுகள் ஐநாவில் பேச்சு
இலங்கை அரச பயங்கரவாதம் புரிந்த தமிழ் இனப்படுகொலைக்கு எதிராக ஐக்கியா நாடுகள் மனித உரிமை பேரவையில் விவாதம்
இடம்பெற்று வருகிறது ,இதில் ஆளும் அரசு புரிந்த படு கொலைகளுக்கு தீர்வு காணப்பட்டு பாதிக்க பட மக்கள்
நின்மதியாக வாழும் வாழ்வுரிமை நிலைநாட்ட பட வேண்டும் என பிரிட்டன் ,அமெரிக்கா,ஐரோப்பிய யூனியன் ,கனடா ,ஜெர்மன் உள்ளிட்ட நாடுகள் குரல் கொடுத்தன
ஆனால் இதற்கு எதிராகவும் ,இலங்கைக்கு ஆதரவாகவும் ,வடகொரியா,,பாகிஸ்தான்,சிரியா,நேபாளம்
,மலேசியா,கியூபா,எகிப்த்,கொலம்பியா,வியட்நாம் ,பிலிப்பைன்ஸ்,ரசியா,எரித்திரியா ,உள்ளிட்ட நாடுகள் இயங்கின
யார் பக்கமும் சர்ப்பினிற் இந்தியா ,ஜப்பான்,அவுஸ்ரேலியா உள்ளிட்டவை ,
வெளியில் நின்றன ,இதே நிலைய இந்தியா தொடர்ந்தும் செய்து வருகின்றமை இங்கே கவனிக்க தக்கது
நகைக் கடையில் 3.8 பில்லியன் ரூபா நகை கொள்ளை -திருடர்கள் கைது
நகைக் கடையில் 3.8 பில்லியன் ரூபா நகை கொள்ளை -திருடர்கள் கைது
இலங்கை திருகோணமலையில் உள்ள நகைக்கடை ஒன்றில் ஆயுத முனையில்
புகுந்த திருடர்ககள் அப்கிருந்து சுமார் 3,8 மில்லியன் ரூபா பெறுமதியான நகைகளை திருடி கொண்டு தப்பி ஓடினர்
மேற்படி கொள்ளை சம்பவம் தொடர்பில் போலீசார் மேற்கொண்ட
விசாரணைகளின் பின்னர் தற்போது ஆறு பேர் கைது செய்ய பட்டுள்ளனர்
கைதானவர் தொடர்நது தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டு வருகின்றனர்
கோட்டா அட்டூழியம் தொடர்கிறது – ஐநாவில் வெடித்த குண்டு
கோட்டா அட்டூழியம் தொடர்கிறது – ஐநாவில் வெடித்த குண்டு
மனித உரிமைகள்
ஆளும் இலங்கை அர சாட்ச்சியில் மக்களின் மனித உரிமைகள் பேணி பாதுகாக்க படவில்லை எனவும் ,
அவை மீளவும் தலைவிரித் தாடுவதாக ஐக்கிய நாடுகள் மனித பேரவையில் நேற்று முன்வைக்க பட்ட பிரேரணையில் தெரிவிக்க பட்டுள்ளது ,
விதி மீறல்
பொறுப்புக் கூறல்,நல்லிணக்கம் ,தீர்வு,மனித உரிமைகள்,பேணி காப்பதில் இதுவரை அரசு எவ்வித விடயத்தையும் நடைமுறை
ப்படுத்தவில்லை என காட்டமாக தெரிவிக்க பட்டுள்ளது
புதிய 20 தவாது சட்ட சீர் திருத்தும் மக்களுக்கு முற்றிலும் எதிரானது எனவும் சுட்டி கட்ட பட்டுள்ளது
முஸ்லீம் அடக்குமுறை
மேலும் பரவி வரும் நோயின் பொழுது முசுலீம் மக்களின் சடலங்களை அடக்கம் செய்யும் விடயத்தில் கூட அவற்றுக்கு நீதி
மறுக்க பட்டு அடக்கியாளும் மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவதாக சுட்டி காட்ட பட்டுள்ளது
சர்வதேச ச நீதி விசாரணை
இலங்கை ஆளும் அரசுக்கு இந்த பிரேரணை பெரும் நெத்தியடியாக வீழ்ந்துள்ளது ,எனினும் அடுத்து வரும் அறிக்கையில் மிக முக்கிய
விடயங்கள் இலங்கை மீது திணிக்க படும் எனவும் ,அவை சர்வதேதச நீதிமன்றில் இலங்கையை பரப்படுத்தும் பொறிமுறை க்கு உள்ளாக்க படலாம் என எதிர்பார்க்க படுகிறது
வீதி விபத்தில் ஒரேநாளில் -12 பேர் மரணம்
வீதி விபத்தில் ஒரேநாளில் -12 பேர் மரணம்
இலங்கையில் காந்த 24 மணித்தியாலத்தில் நடந்த வீதி விபத்துக்களில்
சிக்கி சுமார் 12 பேர் மரணமாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
சாரதிகள் அலட்சிய போக்கின் காரணமாக ஏற்படும் இவ்விதமான விபத்துக்களில்
சிக்கி பெரும் தொகையில் ஒரேநாளில் மக்கள் பலி இடம்பெற்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுளளது
இலங்கை தமிழர் படுகொலைக்கு தீர்வு வேண்டும் -பிரிட்டன்
இலங்கை தமிழர் படுகொலைக்கு தீர்வு வேண்டும் -பிரிட்டன்
இலங்கையில் மகிந்த ஆட்சியில் இடம்பெற்ற தமிழ் இன அழிப்புக்கு
உரிய தீர்வினை ஐநா மனித உரிமை ஆணையம் பெற்று கொடுக்க வேண்டும் என பிரிட்டன் தெரிவித்துள்ளது
மனித உரிமை மையம் தனது கடமையை சரிவர செய்து .அந்த உரிமைகளை காப்பாற்ற வேண்டும் என அது வேண்டியுள்ளது
.பிரிட்டன் முன்வைக்க போகும் இந்த புதிய விடயத்தால் இலங்கை பெரும் நெருக்கடியில் உறைந்துள்ளது
நாளை இது தொடர்பான விவாதங்கள் ஐநாவில் இடம்பெறவுள்ள நிலையில் ,இந்தியா உதவியை இலங்கை நாடியுள்ளதாக தெரிவிக்க படுகிறது






