டக்கிளஸ் அதிரடி அறிவிப்பு
Posted in இலங்கை செய்திகள்

டக்கிளஸ் அதிரடி அறிவிப்பு

டக்கிளசின் அதிரடி அறிவிப்பு

டக்கிளஸ் அதிரடி அறிவிப்பு ,ஒலுவில் துறைமுகத்தை புனர் நிர்மாணம் விமானம் செய்யப் போகிறேன் என மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார் .

 கிழக்கு மாகாணத்தில் அமைய பெற்றுள்ள ஒலுவில் துறைமுகத்தை புனர்நிர்மாயம் செய்து அதனை மக்கள் பயன்பாட்டுக்கு ஏற்றவாறு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக டக்கிளஸ் அதிரடி அறிவிப்பு தெரிவித்துள்ளார் .

துறைமுகம் தற்பொழுது புதிய வகையில்

டக்கிளஸ் தேவானந்தாவின் அமைச்சின் ஊடாக இந்த துறைமுகம் தற்பொழுது புதிய வகையில் வடிவமைக்கப்பட்டு அதனை மக்களுக்கு ஏற்றவாறு மாற்றி அமைக்கப் போவதாக அவர் தெரிவித்திருக்கின்றார் .

அஸ்ரப் கனவையும் அதனுடைய மக்களுடைய கனவையும் நினைவாக்கும் நன்கிணைந்த திட்டமாக இந்த துறைமுகம் வெகு விரைவில் மக்கள் பாவனைக்கு உட்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

மீனவ அமைச்சராக விளங்கி வருகின்ற அவர் இந்த அறிவிப்பை கொடுத்திருக்கின்றார் .

தேர்தல் நடைபெறுகின்ற பொழுதுதான் தற்பொழுது அபிவிருத்தி மக்கள் நல்லெண்ண நடவடிக்கையில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில் தற்பொழுது துறைமுகத்தினை காண வந்துள்ளதாக அந்தப் பகுதி மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

எனினும் இந்த வலுவில் துறைமுகம் டக்லஸ் தேவானந்தா கூறுவதுபோன்று புனர்நிமயம் செய்யப்பட்டு மாற்றி அமைக்கப்பட்டால் .அது வரவேற்கப்பட வேண்டிய விடயம் எனவும் அதேபோல அவ்வாறு செய்தால் அவரை பாராட்ட வேண்டும் எனவும் அந்த மக்கள் இப்படியும் தெரிவிக்கின்றனர் .

கச்சத்தீவு யாருக்கு சொந்தமானது பட்டிமன்ற தலைவரான டக்கிளஸ்
Posted in இலங்கை செய்திகள்

கச்சத்தீவு யாருக்கு சொந்தமானது பட்டிமன்ற தலைவரான டக்கிளஸ்

கச்சத்தீவு யாருக்கு சொந்தமானது பட்டிமன்ற தலைவரான டக்கிளஸ்

கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமா அல்லது இந்தியாவிற்கு சொந்தமா என்று பார்த்தால் இரண்டு தரப்புகளும் வெவ்வேறு கருத்துக்களை கூறி வருகின்றனர் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று (04) தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை தரப்பு கூறுகின்றது கச்சத்தீவு தங்களுக்கு சொந்தம் என்று அதேபோல் இந்தியா தரப்பில் கூறப்படுகின்றது தங்களுக்கு சொந்தம் என்று எது எவ்வாறு இருந்தாலும் இந்தியாவில் இப்போது தேர்தல் ஒன்று நடைபெறுகின்றது தேர்தல் காலங்களில் இவ்வாறான கோஷங்கள் தான் வந்துக்கொண்டு இருக்கிறது.

1974ஆம் ஆண்டு கச்சத்தீவு தொடர்பாக இலங்கை அரசும் இந்தியா அரசும் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்ட அந்த ஒப்பந்தத்தின் படி இந்திய கடற்தொழிலாளர்கள் இலங்கையிலும் இலங்கை கடற்தொழிலாளர்கள் இந்திய கடல் எல்லைக்குள் சென்று தொழில் செய்யலாம் என்று இருக்கிறது என தெரிவித்தார்.

Featured

Loading...
13 ஆவது திருத்தத்தினை திருத்தி தீர்வை தாங்க - டக்கிளஸ் கூவல்
Posted in இலங்கை செய்திகள்

13 ஆவது திருத்தத்தினை திருத்தி தீர்வை தாங்க – டக்கிளஸ் கூவல்

13 ஆவது திருத்தத்தினை திருத்தி தீர்வை தாங்க – டக்கிளஸ் கூவல்

அதிகாரப் பகிர்வினை மேற்கொள்ளுமாறு இனவாதிகளும் சொல்வதற்குரிய சூழலை ஏற்படுத்த வேண்டுமே தவிர, இனவாத சக்திகளுக்கு மெல்வதற்கு அவலை கொடுக்க கூடாது என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுத்தியுள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று (06.12.2022) இடம்பெற்ற கடற்றொழில் அமைச்சு தொடர்பான வரவு செலவுத் திட்ட குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

குறித்த விவாதத்தில், கடற்றொழில் அமைச்சின் செயற்பாடுகள், கடந்த கால அடைவுகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பாக தெளிவுபடுத்திய கடற்றொழில் அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

“கௌரவ ஜனாதிபதி அவர்கள், தமிழ் மக்களின் பிரதிநிதிகளுக்கு விடுத்திருக்கின்ற அழைப்பினை ஏற்று அதனை எமது மக்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதற்கு தமிழ் அரசியல் தரப்பினர் முன்வர வேண்டும்.

எம்மைப் பொறுத்தவரையில், தற்போது இந்த நாட்டின் அரசியல் யாப்பில் நடைமுறையில இருக்கின்ற எமது அரசியல் யாப்பின் 13 ஆவது திருத்தத்தினை பலப்படுத்தி அதனை முன்னெடுப்பதையே எமது மக்களின் அரசியல் ரீதியான பிரச்சினைக்கு ஓர் ஆரம்பத் தீர்வாகக் கருதுகிறோம்.

13 ஆவது திருத்தத்தினை திருத்தி தீர்வை தாங்க – டக்கிளஸ் கூவல்

இல்லாததைப் பற்றிக் கதைத்து இருப்பதையும் கைவிட்டு விடக்கூடாது என்பதை நாம் வலியுறுத்துகிறோம்.
தமிழ் மக்களது பிரச்சினை தொடர்பில், கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக இப்போதே சில நாடகங்கள் அரசியல் அரங்கில் மேடையேற்றப்பட்டு வருவதையும் அவதானிக்க முடிகின்றது” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை ,பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளித்த அமைச்சர் ,கடற்றொழில் அமைச்சரென்ற வகையில் மீனவர்களின் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கான முழு அதிகாரத்தையும் ஜனாதிபதி

எனக்கு வழங்கியுள்ளார்.இலங்கை- – இந்திய மீனவர்களின் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக இருதரப்பு இராஜதந்திர பேச்சு வார்த்தைகளை நாம் கைவிடவில்லை

கைப்பற்றப்பட்ட பழுதடைந்த இந்திய இழுவை மடி வலைப் படகுகளை பல்வேறு அழுத்தங்கள் எதிர்ப்புகள் மத்தியிலும் நாம் ஏலம் விட்டிருந்தோம். அந்நிதியை, மேற்படி இந்திய இழுவை மடி வலைப் படகுகள் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள எமது

கடற்றொழிலாளர்களுக்கு இழப்பீடாக வழங்குவதற்கு தீர்மாளித்துள்ளோம்.
அரசுடைமையாக்கப்படுகின்ற இந்திய இழுவை மடி வலைப் படகுகளைத் திருத்தியமைத்து
பயன்பாட்டில் ஈடுபடுத்துவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்தார்.

Featured

Loading...
Posted in இலங்கை செய்திகள்

வெளிநாட்டு தமிழர்கள் தடை என்னாலே இடம்பெற்றது டக்கிளஸ் பெருமிதம்

வெளிநாட்டு தமிழர்கள் தடை என்னாலே இடம்பெற்றது டக்கிளஸ் பெருமிதம்

இலங்கையில் மகிந்த ராஜபக்ச அரசினால், வெளிநாட்டில் உள்ள, தமிழர் அமைப்புக்கள் மீது தடைகள் விதிக்க பட்டது.

அவ்வாறு விதிக்க பட்ட தடைகள் ,தற்போது நீக்க பட்டுள்ளதாக, இலங்கையில் ஆளும் அரசு அறிவித்துள்ளது .

மேலும் கறுப்பு பட்டியலில் இணைக்க பட்ட, 350 க்கு மேற்பட்டவர்கள், மீதான தடையும் நீக்க பட்டுள்ளதாக இலங்கை அறிவித்தது .

இவ்வாறான ,தமிழர் அமைப்புக்கள் மற்றும், நபர்கள் மீதான தடை நீக்குதலுக்கு தானே காரணம் என ,மன்மதன் டக்கிளஸ் தேவானந்தா பெருமிதம் தெரிவித்துள்ளார் .

இந்த தடையின் பின்னராவது ,இலங்கையில் உள்ள மக்களுக்கு ,வெளிநாட்டு தமிழர்கள் ,உதவிட வேண்டும் என்கிறார் அமைச்சர் டாக்கின்ஸ்

கேட்கல ,இலங்கை மக்களுக்கு உதவிடுங்க .ஓகே சார் .

    Posted in இலங்கை செய்திகள்

    தமிழர் பிரச்சனைக்கு தீர்வு வேண்டும் டக்கிளஸ் அந்தர் பெல்ட்டி

    தமிழர் பிரச்சனைக்கு தீர்வு வேண்டும் டக்கிளஸ் அந்தர் பெல்ட்டி

    தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு உட்பட காணிப் பிணக்குகள் மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளிட்ட பிரதான பிரச்சனைகளுக்கான தீர்வுகளும் சர்வ கட்சி அரசொன்றிற்கான பொது வேலைத்திட்டத்தில்

    உள்வாங்கப்பட வேண்டும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.


    சர்வகட்சி அரசொன்றை அமைப்பதற்கான பொது வேலைத்திட்டத்திற்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பங்களிப்பை கோரிக்கையாக விடுத்து,

    ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனுப்பியுள்ள கடிதத்திற்கு பதிலளித்து தமிழ் மக்களின் சார்பில் பத்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து எழுதிய பதில் கடிதத்திலேயே இவ்வாவாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

    நாட்டில் இயல்புநிலையை மீட்டெடுப்பதற்கும், நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி தீர்க்கவுமான சவாலான பணியை முன்னெடுக்க

    அனைத்து அரசியல் கட்சிகள், நிபுணர்கள், சிவில் சமூகங்கள் போன்றவற்றின் பங்கேற்புடன் ஒரு பொது வேலைத்திட்டத்தை செயல்படுத்தும் தங்களின் கடுமையான முயற்சியை பாராட்டுகிறேன்,

    தமிழர் பிரச்சனைக்கு தீர்வு வேண்டும் டக்கிளஸ் அந்தர் பெல்ட்டி

    நாம் 19ஆவது திருத்தம் மற்றும் பாராளுமன்ற மேற்பார்வைக் குழுவை மீள அறிமுகப்படுத்துவதற்கும் மேலதிகமாக ஒரு பரந்த உரையாடலுக்காக

    முயற்சிப்பதையிட்டு எமது பாராட்டுக்களை தெரிவிப்பதுடன் பின்வரும் 10 அம்சக் கோரிக்கைகளையும் உங்கள் நிகழ்ச்சி நிரலில் சேர்த்துக்கொள்ளுமாறு முன்மொழிகிறேன் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார்.

    அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் முன்மொழியப்பட்டுள்ள பத்து அம்சக் கோரிக்கைகள் பின்வருமாறு:

    1. மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு தேவையான சட்டமியற்றுதல்.
    2. அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தின் அரசியலமைப்பு விதிகளை முழுமையாக அமுல்படுத்துவதை மேற்பார்வையிடும் ஒரு குழுவை அமைப்பது.
    3. அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதை உறுதி செய்வதற்குத் தேவையான நிர்வாக மற்றும் சட்டரீதியான நடவடிக்கைகளை இந்தக் குழு பரிந்துரைக்க வேண்டும்.
    4. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அல்லது குற்றம் சாட்டப்பட்டு நீண்ட காலமாக சிறையில் வாடும் அரசியல் கைதிகளை விடுதலை செய்தல்.
    5. வடக்கு மற்றும் கிழக்கில் பாதுகாப்பு படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளை விடுவித்தல்.
    6. வனப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்புகள், சாகுபடி செய்யக்கூடிய, மீன்வளர்ப்பு விவசாயத்திற்குப் பயன்படுத்தக்கூடிய
    7. மற்றும் மேய்ச்சலுக்குப் பயன்படுத்தப்படும் நிலங்களை வன காப்பகங்களாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக நாடளாவிய ரீதியில் பல புகார்கள் உள்ளன.

    இது வடக்கில் பயிர்ச்செய்கையையும், நன்னீர் மீன்வளர்ப்பையும் தடுத்து சிரமத்தை ஏற்படுத்துகிறது. ஆகவே இவ்விவகாரங்கள் தொடர்பாக 2012 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட வர்த்தமானிகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

    1. தொல்லியல் திணைக்களம், தொல்பொருள் கட்டளைச் சட்டத்தின் விதிகளின்படி, தொல்பொருள் நினைவுச் சின்னங்களாக அறிவிக்கும் வர்த்தமானி அறிவிப்புகள்
    2. எதுவும் வெளியிடப்படாமல், வடக்கு மற்றும் கிழக்கில் தொல்லியல் பெறுமதிமிக்க இடங்களாக ஒதுக்கியுள்ளதாக பல முறைப்பாடுகள் உள்ளன. தொல்பொருள் இடங்களாக முறையாக அறிவிக்கப்படாத போதிலும், அந்த இடங்களுக்குள் மக்கள் நுழைவதை திணைக்களம் தடுக்கிறது.

    தொல்லியல் மற்றும் தொல்பொருள் இடங்களின் நினைவுச்சின்னங்களை அடையாளம் காணும் திணைக்கள அதிகாரிகளின் எந்தவொரு முயற்சியிலும் வடக்கு மற்றும்

    கிழக்கில் தொல்பொருள் மதிப்புமிக்க இடங்களாக வர்த்தமானியில் வெளியிடுவதற்கு முன்னர், அப்பகுதி மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அதிகாரிகள் இடம்பெறுவதுடன், குறிப்பாக தொடர்புடைய இனக்குழுக்களின் ஆலோசனையையும் பெற வேண்டும்.

    1. பாதுகாப்புப் படைகள் மற்றும் பொலிஸ் சேவை ஆகியவற்றில் நாட்டின் இன விகிதாசாரத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதை உறுதி செய்வதற்கான திட்டத்தை உருவாக்குதல்.
    2. அரச விழாக்களில் இரு மொழிகளிலும் (சிங்களம் மற்றும் தமிழ்) தேசிய கீதத்தைப் பாடுவது.
    3. தனிநபர்கள், புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் முஸ்லிம் அமைப்புகள் மீதான தடையை நீக்குதல்.
    4. 18 வயதை அடைந்த பின்னர் நாட்டை விட்டு வெளியேறி வெளிநாட்டில் வசிப்பவர்கள் மற்றும் வேலைக்காக வெளிநாட்டில் இருப்பவர்கள் பொதுத் தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கும் வகையில் தேர்தல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருதல்.

    5. போன்ற கோரிக்கைகளை முன்மொழிந்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா , மேலே குறிப்பிடப்பட்டுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதானது உங்களது பொது வேலைத்திட்ட
      முயற்சிக்கு மேலும் வலுச் சேர்ப்பதாகவும் அமையும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
      Posted in Uncategorized

      மகிந்தா தமிழ் கைக்கூலிகள் ,சம்பந்தன்,சுமந்திரன்,டக்கிளஸ்,கருணா,பிள்ளையான் வீடுகளை எரிக்க தமிழர் கோரிக்கை – வீடியோ

      மகிந்தா தமிழ் கைக்கூலிகள் ,சம்பந்தன்,சுமந்திரன்,டக்கிளஸ்,கருணா,பிள்ளையான் வீடுகளை எரிக்க தமிழர் கோரிக்கை – வீடியோ

      இலங்கையில் மகிந்தவின் ஆதரவு கைக்கூலிகளாக வாழும் தமிழர் முகமூடிகளான கருணா,பிள்ளையான் ,சம்பந்தன்,சுமந்திரன்,அங்கயன் ,சாணக்கியன் வீடுகளையும் எரியூட்டும் படி


      மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

      இவர்கள் யாவரும் இரட்டை வேடம் போடும் சிங்கள கைக்கூலிகள் என அவர்கள் கூறி வருகின்றனர்

      இவ்வாறு சில காணொளிகள் சமுக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது ,அதனை அவ்வாறே தமிழர்கள் அதிகமாக பகிர்ந்து தமது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்

      இதன் எதிரொலியாக அங்கயன் அலுவலகம் எரியூட்ட பட்டுள்ளமை இங்கே குறிப்பிட தக்கது

        Posted in இலங்கை செய்திகள்

        எல்லை தாண்டி வரும் படகுகள் அரசுடமையாக்கப்படும்- டக்கிளஸ் கூவல்

        எல்லை தாண்டி வரும் படகுகள் அரசுடமையாக்கப்படும்- டக்கிளஸ் கூவல்

        எல்லை தாண்டி வரும் படகுகள் அரசுடமையாக்கப்படும்- டக்கிளஸ் கூவல்
        எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பினுள் நுழைகின்ற இந்திய மீன்பிடிப் படகுகள் கைது

        செய்யப்பட்டு சட்ட ரீதியாக அரசுடமையாக்கப்படும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

        மயிலிட்டித் துறைமுகத்தின் இரண்டாம் கட்ட அபிவிருத்திப் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

        மயிலிட்டித் துறைமுக்திற்கான விஜயத்தினை நேற்று மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர், தடுத்து வைக்கப்படடுள்ள இந்திய இழுவை வலைப் படகுகளை பார்வையிட்ட பின்னர் பிரதேச கடற்றொழிலாளர்கள் மற்றும் துறைமுக நிர்வாகத்தினருடனாக கலந்துரையாடலின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

        இலங்கை கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தினையும் இலங்கையின் கடல் வளத்தையும் பாதிக்கும் வகையில் எல்லை தாண்டி வந்து சட்ட விரோதத் தொழில் முறைகளில் ஈடுபடுகின்ற

        இந்திய கடற்றொழிலாளர்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அறிவுறுத்தல்களை வழங்கிய ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருக்கும்

        நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற கடற்படையினருக்கும் வடக்கு கடற்றொழிலாளர்கள் சார்பில் நன்றி தெரிவிப்பதாகத் தெரிவித்தார்.

        அரசுடமையாக்கப்படுகின்ற படகுகளை பிரதேச கடற்றொழில் சங்கங்களிடம் கையளித்து, ஆழ்கடல் மீன்பிடி போன்ற சட்ட ரீதியான தொழில்களில் ஈடுபடுவதற்கு பயன்படுத்தப்படும்

        எனவும், அவ்வாறு பயன்படுத்த முடியாத படகுகளை விற்பனை செய்து இந்தியக் கடற்றொழில் படகுகளினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஸ்டஈட்டினை வழங்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

        ‘மயிலிட்டித் துறைமுகத்தின் முதலாவது கட்டப் புனரமைப்பு தவறான நோக்கங்களுக்காக முன்னெடுக்கப்பட்டமையினால் சரியான முறையில் திட்டமிடப்படவில்லை.

        இதன் காரணமாக இந்தப் பிரதேசத்தினைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள் இந்தத் துறைமுகத்தினால் பூரணமான நன்மைகளைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை. இந்நிலையில்,

        இரண்டாம் கட்ட அபிவிருத்திப் பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படவுள்ள நிலையில், பிரதேச மக்களின் கருத்துக்களும் உள்வாங்கப்பட்டு இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும்.’ எனவும் தெரிவித்தார்.

          Posted in இலங்கை செய்திகள்

          புயலினால் பாதிக்க பட்ட மக்களுக்கு இழப்பீடு – கடல் வலை டக்கிளஸ் கூவல்


          புயலினால் பாதிக்க பட்ட மக்களுக்கு இழப்பீடு – கடல் வலை டக்கிளஸ் கூவல்

          இலங்கை வடக்கு பகுதிகளில் புயலினால் பாதிக்க பட்ட மீனவர்களுக்கு வாழ்வாதர பொருளியல்

          உபகரண இழப்பு வழங்க படும் என கடலில் வலைவீசும் கடல் அமைச்சர் டக்கிளஸ் தெரிவித்துள்ளார்

          புலிகள் உள்ளவரை அந்த அமைப்பை காட்டி கொடுத்த ஏப்பம் விட்ட இவர் தற்பொழுது பாதிக்க

          படும் தமிழ் மக்களுக்கும் உதவிட மறுத்து இவ்வாறான வெட்டு கூச்சலிட்டு வருவதனை வாடிக்கை அரசியல் வியாபாரமாக கொண்டுள்ளார் என்பதை கவனிக்க

            Posted in இலங்கை செய்திகள்

            கடல்சார் பொருளாதார அபிவிருத்திக்கு – – இந்தியா உதவவேண்டும் டக்கிளஸ்

            கடல்சார் பொருளாதார அபிவிருத்திக்கு – – இந்தியா உதவவேண்டும் டக்கிளஸ்

            கடல்சார் பொருளாதார அபிவிருத்தியில் இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் கைகோர்த்து செயற்பட வேண்டும் என்று தெரவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தின் போது தேவையான அனைத்து ஒத்துழைப்புக்களையும் வழங்கிய இந்தியாவிற்கு நன்றியினையும் தெரிவித்தார்.

            எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தின் போது அவசர உதவிகளையும் ஒத்துழைப்புக்களையும் வழங்கிய இந்திய கடலோர காவற்படை மற்றும் இந்தியக் கடற்படையினருக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு கொழும்பு துறைமுக்தில் நேற்று (02.07.2021) நடைபெற்றது.

            இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

            அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய கடற்றொழில் அமைச்சர், ‘ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலில் எக்ஸ பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தினால் ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பாக தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

            எமது அவசர கோரிக்கையை ஏற்று, தேவையான அனைத்து ஒத்துழைப்புக்களையும் வழங்கிய இந்திய அரசாங்கம் மற்றும் இந்திய கடற்படை, இந்திய கடலோர காவற்படை ஆகியவற்றுக்கு இலங்கை அரசாங்கத்தின் சார்பாகவும் இலங்கை மக்கள் சார்பாகவும் நன்றி தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

            இலங்கைக்கு உதவிகளும் ஒத்துழைப்புகளும் தேவைப்படுகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்தில் உடனடியாக உதவுகின்ற இந்தியா கப்பல் விபத்தின் போதும், விரைந்து வந்து தமது உதவிகளை வழங்கியிருந்தன.

            எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்துவற்கு மாத்திரமன்றி, ஏற்பட்ட பாதிப்புக்ளை மதிப்பிடுவதிலும் இந்தியாவின் ஒத்துழைப்பு எமக்கு பேருதவியாக அமைந்திருந்தது.

            எதிர்காலத்திலும், கடலுக்கு அடியில் இருக்கின்ற கொள்கலன்களை கண்டறிந்து அவற்றை பாதுகாப்பாக அப்புறப்படுத்துவதற்கான தொழில் நுட்ப உதவிகளை இந்தியாவிடம் இருந்து பெற்றுக் கொள்ள எதிர்பார்க்கின்றோம்’ என்று தெரிவித்தார்.

            மேலும், கப்பல் விபத்தினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கான வாழ்வாதார உதவிகளை இந்திய அரசாங்கத்திடம் தான் கோரியிருப்பதை சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இரண்டு நாடுகளும் அவசர தேவைகளில் மாத்திரமன்றி கடல்சார் பொருளாதார அபிவிருத்தியிலும் கைகோர்த்து செயற்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

            Posted in இலங்கை செய்திகள்

            கடல் உணவுகளை பயமின்றி சாப்பிடுங்க – டக்கிளஸ் தாத்தா முழக்கம்

            கடல் உணவுகளை பயமின்றி சாப்பிடுங்க – டக்கிளஸ் தாத்தா முழக்கம்

            கடலுணவுகளை உட்கொள்வதற்கு மக்கள் தயங்கத் தேவையில்லை என்று தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கப்பல் விபத்துக்குள்ளான கொழும்பு மற்றும்

            கம்பஹா மாவட்ட கடல் பிரதேசத்தில் மீன்பிடி செயற்பாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

            கொழும்பு துறைமுகதிற்கு இரசாயனப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை ஏற்றிவந்த சரக்கு கப்பலில் ஏற்பட்ட வெடி விபத்தின் காரணமாக உயிரினங்களுக்கு கேடு ஏற்படுத்தக்கூடிய இரசாயனப் பதார்த்தங்கள் கடலில் கலந்திருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகின்றது.

            இதன்காரணமாகக் கடலுணவுகளை உண்பது தொடர்பாக மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்ச நிலையை நீக்கும் வகையில் கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

            இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,

            “இதுவரையில், குறித்த சம்பவத்தினால் கடல் வாழ் உயிரினங்களுக்கு பாதிப்புக்கள் ஏற்பட்டிருப்பதாக உறுதிப்படுத்தப்படவில்லை.

            எவ்வாறெனினும், கப்பலில் விபத்து ஏற்பட்ட நேரத்தில் இருந்து சம்மந்தப்பட்ட கடல் பிரதேசத்தில் மீன்பிடி நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்படடுள்ளது.

            அதேவேளை, கடலில் கலந்திருக்கக் கூடிய பாதார்த்தங்கள் தொடர்பாகவும், அவற்றினால் உருவாக்கக்கூடிய தாக்கங்கள் தொடர்பாகவும் கண்டறிவதற்கான ஆய்வுகளில் நாரா எனப்படும் தேசிய நீரியல்வள ஆராய்ச்சி நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

            குறித்த ஆராய்ச்சி அறிக்கை கிடைக்கும் வரையில், சம்மந்தப்பட்ட கடல் பிரதேசத்தில் மீன்பிடிச் செயற்பாடுகளுக்கான தடையை இறுக்கமாக அமுல்ப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

            அதேவேளை, போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள காலப் பகுதியிலும் நாடளாவிய ரீதியில் கடலுணவுசார் போக்குவரத்துகளை மேற்கொள்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

            எனவே, பேலியகொட உட்பட நாடளாவிய ரீதியில் உள்ள சந்தைகளில் கொழும்பு மற்றும் கம்பஹா போன்ற சந்தேகத்திற்கிடமான கடல் பிரதேசங்களைத் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் இருந்து

            கொண்டு வரப்படட கடலுணவுகளே விற்பனை செய்யப்படுகின்றன என்ற அடிப்படையில், அவற்றை உட்கொள்வது தொடர்பாக மக்கள் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை” என்று தெரிவித்துள்ளார்

              Posted in இலங்கை செய்திகள்

              கொரனோவால் பாதிக்க படும் ஐயர் மாருக்கு உதவி வழங்க, டக்கிளஸ் நடவடிக்கை

              கொரனோவால் பாதிக்க படும் ஐயர் மாருக்கு உதவி வழங்க, டக்கிளஸ் நடவடிக்கை

              கொறோனா வைரஸினால் பாதிக்கப்படுகின்ற இந்துச் சிவாச்சாரியர்கள் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ள

              அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சிவாச்சாரியர்களின் தேவைகள் தொடர்பாக விசேட அவதானம் செலுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

              கொறோனா வைரஸினால் பாதிககப்படுகின்ற சிவாச்சாரியர்கள் தனிமைப்படுத்தல் முகாம்களில் எதிர்கொள்ளுகின்ற நடைமுறைப் பிரச்சினைகள் தொடர்பாக கௌரவ பிரதமரின்

              இந்து விவகாரம் தொடர்பான இணைப்பாளர் சிவஸ்ரீ பாபு சர்மா இராமசந்திரக் குருக்களினால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தது.

              இதுதொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடிய கடற்றொழில் அமைச்சர்இ பாதிக்கப்பட்டிருக்கின்ற

              சிவாச்சாரியர்களுக்கான உணவு நடைமுறை மற்றும் ஆகமக் கடமைகளை மேற்கொள்வதற்கு வேண்டிய ஏற்பாடுகள் தொடர்பாக அவதானம் செலுத்தினார்.

              இதன்போதுஇ சிவாச்சாரியர்களுக்கு தேவையான சைவ உணவுகள் ஆச்சார முறைப்படி பரிமாறப்படுவதை உறுதிப்படுத்துமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ஆலோசனை வழங்கப்பட்டது.

              அதேவேளைஇ வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி தனிமைப்படுத்தல் பராமரிப்பு நிலையத்தில்

              தற்போது மூன்று சிவாச்சாரியர்கள் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ள வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர்

              வைத்தியக் கலாநிதி கேதீஸ்வரன்இ தேவையேற்படின் சிவாச்சாரியர்களுக்கான தனியான

              தொகுதி ஒன்றினை அமைப்பதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

                Posted in இலங்கை செய்திகள்

                பத்தாயிரம் மீனவர்களுடன் இந்தியா செல்வேன் – டக்கிளஸ் கூவல்

                இந்திய மீனவர்களின் பிரச்சனைக்கு தீர்வு காணாவிட்டால் இங்கிருந்து கதைப்பதை விட, பத்தாயிரம் வடமாகாண கடற்தொழிலாளர்களுடன் இந்தியாவுக்குப் படகில் சென்று, அந்த

                பிரச்சனையை தீர்ப்பதற்கு யோசித்துக்கொண்டிருக்கின்றேன் என கடற்தொழில் நீரியல்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்

                முல்லைத்தீவில் வைத்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

                இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், இந்திய மீனவர்களின் ஆக்கிரமிப்பு நிறுத்தப்படுமெனவும், இந்திய மீனவர்களின் பேச்சு

                வார்த்தை வருவது போவதாக உள்ளது. தீர்வு என்று எதுவும் இல்லாவிட்டாலும் இந்திய மீனவர்களின் வருகை நிதந்தரமாக

                காணப்படுவதாக கடற்தொழிலாளர்கள் என்னிடம் முறையிட்டுள்ளார்கள் என்றார்.

                இதனை தீர்த்து தராவிட்டால் ஆர்ப்பாட்டம், தொழில்முடக்கம், அமைச்சரின் வடமாகாண நடமாட்டத்தினை முடக்குவோம் என்று

                சொல்லிக்கொண்டு இருக்கின்றார்கள். நான் பொறுமை பொறுமை என்று சொல்லிக் கொண்டிருக்கின்றேன் இருந்தாலும் அது

                நியாயமான கோரிக்கை இதனை நான் விரைவில் தீர்க்க முயற்சிப்பேன் எனவும் தெரிவித்தார்.

                Home » டக்கிளஸ்
                Posted in இலங்கை செய்திகள்

                கடற்றொழிலாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு – டக்கிளஸ் கூவல்

                கடற்றொழிலாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு – டக்கிளஸ் கூவல்

                அல்லைப்பிட்டி கடற்றொழிலாளர்கள் வழமைபோன்று எதுவித தடைகளும் இன்றி தமது கடற் தொழில் நடவடிக்கைகளை

                முன்னெடுக்க முடியும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

                முன்னர் அல்லைப்பிட்டி பிரதேசத்தில் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்த ஒருவர் அண்மையில் இந்திய கடலோர காவற்படையால் கைதுசெய்யப்பட்டதை அடுத்து

                இப்பகுதியின் கடற்றொழில் நடவடிக்கைகளுக்கு கடற்படையினர் பல கட்டுப்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும், குறிப்பாக யுத்த காலங்களில் நடைமுறையில் இருந்த பாஸ் நடைமுறை

                பின்பற்றப்பட வேண்டும் என அப்பிரதேச கடற்படை அதிகாரியால் தொழிலாளர்களுக்கு இடைஞ்சல் கொடுக்கப்பட்டுவந்ததாகவும்

                தெரிவித்து குறித்த பகுதி தொழிலாளர்கள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தனர்.

                இந்நிலையில் கடற்றொழிலாளர்களது பிரச்சினைகள் தொடர்பில் அவதானத்தில் கொண்ட அமைச்சர் குறித்த பிரதேச கடற்படை

                அதிகாரிகளுடன் விடயம் தொடர்பில் ஆராய்ந்ததுடன் அவ்வாறான நடைமுறைகளை உடனடியாக இல்லாது செய்து அல்லைப்பிட்டி

                கடற்றொழிலாளர்களது பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது

                Posted in இலங்கை செய்திகள்

                யுத்தத்தில் இறந்தவர்களை நினைவு கூறுவதற்கு பொதுத் தூபி- டக்கிளஸ் வெடி

                யுத்தத்தில் இறந்தவர்களை நினைவு கூறுவதற்கு பொதுத் தூபி- டக்கிளஸ் வெடி

                தமிழ் மக்களின் பெயரால் நடைபெற்ற ஆரம்பிக்கப்பட்ட யுத்தத்தின் காரணமாக உயிரிழந்தவர்களை நினைவு கூறுவதற்கு

                பொதுவான நினைவுத் தூபி அவசியம் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

                யாழ். பல்கலைக் கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இடித்தழிக்கப்பட்டமை தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்தார்

                இதுதொடர்பாக மேலும் கருத்து தெரிவிக்கையில், உரிய அனுமதி பெறப்படாமல் சட்டத்திற்கு முரணாக அமைக்கப்பட்ட

                காரணத்தினாலேயே குறித்த தூபி இடிக்கப்பட்டதாக யாழ். பல்கலைக் கழக துணைவேந்தர் வெளியிட்டுள்ள கருத்தை சுட்டிக்

                காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நீண்ட காலத் திட்டமிடல் இன்றி குறுகிய காலச் சிந்தனையுடன் மேற்கொள்ளுகின்ற

                தீர்மானங்கள் எந்தளவு அவமானத்தையும் அசௌகரியங்களையும் ஏற்படுத்தும் என்பதை இந்தச் சம்பவமும் வெளிப்படுத்தியுள்ளது எனவும் தெரிவித்தார்.

                மேலும், கடந்த ஆட்சிக் காலத்தில் யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்கான பொதுவான தூபி அமைக்கப்பட வேண்டும்

                என்று தனிநபர் பிரேரணை கொண்டு வந்ததை சுட்டிக் காட்டிய அமைச்சர், தமிழ் பிரதிநிதிகளின் போதிய ஒத்துளைப்பு

                இன்மையினால் தொடர்ந்தும் முன்னெடுக்க முடியவில்லை என்று தெரிவித்ததுடன், எதிர்வரும் அமைச்சரவையில் குறித்த விடயம்

                தொடர்பாக பிரஸ்தாபிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

                Posted in இலங்கை செய்திகள்

                அபிவிருத்திக் குழுவிற்கு தெரிவிக்காமல் காணிகளை வழங்கக் கூடாது- டக்கிளஸ்

                அபிவிருத்திக் குழுவிற்கு தெரிவிக்காமல் காணிகளை வழங்கக் கூடாது- டக்கிளஸ்

                கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுவிற்கு தெரிவிக்காமல் காணிகளை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்ற திட்டவட்டமான அறிவுறுத்தலை கிளிநொச்சி மாவட்ட

                அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவர், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் காணி சீர்த்திருத்த ஆணைக்குழுவிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

                கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

                பூநகரி பகுதியில் உள்ள எல்ஆர்சி காணிகளை அரசாங்க அதிகாரிகள் பணம் பெற்று வழங்கியதாக அமைச்சருக்கு கிடைத்த

                முறைப்பாட்டை அடுத்து குறித்த உத்தரவை அமைச்சர் வழங்கியுள்ளார்.

                அதுமட்டுமல்லாது வறுமைக் கோட்டுக்கு உட்பட்ட விவசாயத்தை நம்பி வாழும் குடும்பங்களுக்கு விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள குறித்த காணிகள் வெகுவிரைவில்

                பகிர்ந்தளிக்கப்படும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதன்போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

                Posted in இலங்கை செய்திகள்

                இந்தியா மீனவர்களை எச்சரித்த டக்கிளஸ்- இந்தியாவுக்கு கெடு

                எல்லை தாண்டும் மீனவர் விவகாரத்தில் இந்தியத் தரப்பினரே நல்லெண்ணத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

                வவுனியாவில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனைத் தெரிவித்தார்.

                அண்மைக்காலமாக இந்திய கடற்றொழிலாளலர்களின் எல்லை தாண்டும் செயற்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில் இலங்கை

                கடற்றொழிலாளர்களும் பொறுமை இழந்து போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

                இந்நிலையில், கடந்த சில நாட்களாக எல்லை தாண்டிய இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து கடற்றொழில் திணைக்களத்திடம் ஒப்படைத்து வருகின்றனர்.

                இதனையடுத்து, கைது செய்யப்பட்டவர்கள், நீதிமன்றில் முன்னிலையாக்கப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

                இந்நிலையில், தொடர்பு கொண்டுள்ள இந்தியத் தரப்புக்கள், எதிர்வரும் 30 ஆம் திகதி நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைக்கான நல்லெண்ண சமிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளவர்களை

                விடுதலை செய்யுமாறு கோரியுள்ளதாக தெரிவித்த கடற்றொழில் அமைச்சர், உண்மையில் இந்தியத் தரப்பினரே எல்லை தாண்டும்

                செயற்பாடுகளை இடை நிறுத்தி தமது நல்லெண்ணத்தை வெளிப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

                மேலும், தடைசெய்யப்பட்ட தொழில் முறையை இந்திய மீனவர்கள் பயன்படுத்துவதால் கடல் வளம் பாதிக்கப்பட்டு எதிர்கால இலங்கை

                – இந்திய சந்ததியினருக்கு வாழ்வாதரப் பிரச்சினை ஏற்படாமல் கடல் வளத்தை பாதுகாக்க வேண்டும் எனவும் கடற்றொழில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

                Posted in இலங்கை செய்திகள்

                தமிழ் மக்கள் மிதிக்கப்படாமல் மதிக்கப்படும் சூழலை உருவாக்குவோம்- டக்கிளஸ் கூவல்

                தமிழ் மக்கள் மிதிக்கப்படாமல் மதிக்கப்படும் சூழலை உருவாக்குவோம்- டக்கிளஸ் கூவல்

                பேரினவாத தீக்கு எண்ணெய் வார்க்கின்ற செயற்பாடுகளை போலித் தமிழ் தேசிய வாதிகள் குத்தகைக்கு எடுத்துள்ளனர் என்று குற்றஞ்சாட்டியுள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,

                சில தரப்புக்களிடம் சலூன் கதவுகள் போன்று இருக்கும் பேரினவாதத்தினை திறக்கச் செய்வதால் எமது மக்களே பாதிக்கப்படுகின்றனர் எனவும் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.

                பாராளுமன்றத்தில் இன்று (10.12.2020) நடைபெற்ற வரவு செலவுத் திட்ட விவாதத்தின் இறுதி நாள் அமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

                இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய கடற்றொழில் அமைச்சர், மக்கள் வாழ்வாதாரம் – சுகாதாரம் – பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்புகளுக்கு முகங்கொடுத்து வருகின்ற நிலையில், மக்களது

                பிரச்சினைகளை வேறு திசை நோக்கி திருப்பிவிடுகின்ற செயல்களில் போலி தமிழ்த் தேசியம் பேசுகின்றவர்களும், அதிதீவிர

                போலி தமிழ்த் தேசியம் பேசுகின்றவர்களும் ஈடுப்பட்டு வருவதாகவும் சுட்டிக் காட்டினார்.

                மேலும், ‘எமது மக்கள் முகங்கொடுத்துள்ள உண்மையான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முன்வராமல், அந்தப்

                பிரச்சினைகளை மேலும் வளரவிடுவதும். அதனோடு மேலும் பல பிரச்சினைகளை கோர்த்து விடுவதும் இவர்களது வரலாற்று செயற்பாடுகளாகவே தொடர்கின்றன.

                புரெவி புயல் வந்துவிட்டுப் போய் விட்டது. ஆனால் இந்த போலித் தமிழ்த் தேசியவாதிகளின் பிறவிக் குணங்களில் எவ்வித மாற்றமும்

                இல்லை. ஆயிரம் புரெவிகள் வந்தாலும் இவர்களது பிறவிக் குணங்கள் மாறுமா? என்பது சந்தேகமாகவே இருக்கின்றது.

                இறுதி யுத்தத்தின்போது யார் யார் எங்கிருந்தார்கள் என்பது பற்றி இப்போது அறிக்கை பட்டிமன்றம் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அந்த அழிவு ஏற்படக் கூடாது என்ற எனது

                மனிதாபிமான நோக்கு காரணமாக அதனை நிறுத்துவதற்கு அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களுடன் பேசுவோம் வாருங்கள் என அப்போது பாராளுமன்றத்தைப்

                பிரதிநிதித்துவப் படுத்தியவர்களை அழைத்தபோது, அவர்கள் அதற்கு இணங்கியிருக்கவில்லை. புலிகள் அழிய வேண்டும் என்ற மனநிலையிலே இருந்தார்கள்.

                இந்த நாட்டில் பேரினவாதத்திற்கும் குறிப்பிட்ட தமிழ் அரசியல்வாதிகளின் இனவாதத்திற்கும் இடையில் ஒப்பந்தங்கள் இருக்கக் கூடாது என்பதையே நான் வலியுறுத்த விரும்புகின்றேன்.

                எனவே பதின்மூன்று பேர் சேர்ந்து, எமது மக்களை தொடர்ந்தும் மிதித்துக் கொண்டிருக்கின்ற நிலைமையை ஏற்படுத்தாமல் – எமது மக்களை மதித்துக் கொண்டிருக்கின்ற நிலைமையை இந்த நாட்டில்

                ஏற்படுத்தவதற்கு முன்வருமாறு கேட்டுக் கொள்கின்றேன்’ என்று தன்னுடைய ஆதங்கத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.

                அத்துடன், தமிழ் மக்களுக்கு அன்றாட – அபிவிருத்தி மற்றும் அரசியல் ரீதியிலான பிரச்சினைகள் உள்ளது என்பதை வலியுறுத்தியதுடன், அதேபோன்று முஸ்லிம் மக்களுக்கும்

                கத்தோலிக்க மக்களுக்கும் பிரச்சினைகள் இருக்கின்ற நிலையில் அவற்றை தீர்ப்பதற்கு அரசாங்கத்தின் ஊடாக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

                எனவே அரசாங்கத்துடன் இணைந்து எமது மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பகிரங்க அழைப்பினை விடுப்பதாவும் இறுதி யுத்த காலத்தில் அதனை புறக்கணித்தது போன்று, எமது

                மக்களின் நலன்கருதிய இந்த அழைப்பையும் சுய இலாபங்களுக்காக கோட்டைவிட்டு விடாது, கைகோர்த்து வரும்படி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது..

                Posted in இலங்கை செய்திகள்

                தமிழகத்தில் சிக்கியிருப்போரை நாட்டிற்கு அழைத்து வருவதற்கு திட்டம்- டக்கிளஸ்

                தமிழகத்தில் சிக்கியிருப்போரை நாட்டிற்கு அழைத்து வருவதற்கு திட்டம்- டக்கிளஸ்

                கொவிட் 19 காரணமாக நாட்டிற்கு திரும்ப முடியாமல் தமிழகத்தில் சிக்கியிருபோரை நாட்டிற்கு அழைத்து வருவதற்கு நடடிவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர்

                டக்ளஸ் தேவானந்தா, நாட்டிற்கு வருவதற்கு விரும்புகின்றவர்கள் தொடர்பான விபரங்களை அறியத் தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

                பல்வேறு தேவைகள் நிமித்தம், இந்தியாவிற்கு – குறிப்பாத தமிழகத்திற்கு சென்றிருந்த நிலையில் கொவிட் 19 காரணமாக ஏற்பட்ட கொறோனா பரவலினால் போக்குவரத்து தடங்கல்

                காரணமாக சுமார் 1500 பேர் வரையில் தமிழகத்தில் அவதிப்பட்டு வருவதாக கடற்றொழில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு

                வரப்பட்ட நிலையிலேயே அமைச்சரினால் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

                குறுகிய காலத் திட்டமிடலுடன் சென்றவர்கள் திட்டமிட்டவாறு நாட்டுக்கு திரும்ப முடியாமையினால், கடந்த பல மாதங்களாக எதிர்கொள்ளக் கூடிய இன்னல்களை தன்னால் உணர்ந்து கொள்ளக்

                கூடியதாக இருக்கின்றது என்று குறித்த அறிவிப்பில் சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த

                இன்னல்களில் இருந்து பாதிக்கப்பட்டிருக்கின்றவர்களை மீட்க வேண்டியது தன்னுடைய தார்மீகக் கடமை எனவும் தெரிவித்தார்.

                மேலும், இதுதொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபஷவுடன் கலந்துரையாடி, பாதுகாப்பான முறையில் உங்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான

                ஏற்பாடுகளை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாகவும், நாட்டிற்கு வருவதற்கு ஆவலாக இருப்போர் +94760225167, +94769122831, +919003067621 ஆகிய இலக்கங்களில் ஒன்றிற்கு தொலைபேசி

                ஊடாகவோக அல்லது வட்ஸ்அப் செயலி ஊடாகவோ தொடர்பு கொண்டு தங்களில் விபரங்களை வழங்கினால் அழைத்து

                வருவதற்கான திட்டமிடல்களை மேற்கொள்வதற்கு இலகுவாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

                Posted in இலங்கை செய்திகள்

                கிளிநொச்சியில் கூட்டம் கூடிய டக்கிளஸ்

                கிளிநொச்சியில் கூட்டம் கூடிய டக்கிளஸ்

                கிளிநொச்சி மாவட்ட மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவர் கௌரவ. டக்ளஸ்

                தேவானந்தா அமைச்சர் அவர்களின் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவினை மிகவும்

                வினைத்திறனுடையதாக நடாத்துவதற்கான முன்னாயத்த குழு கூட்டம் நேற்று காலை 10.00 மணிக்கு நடைபெற்றது.

                மேற்படி கூட்டத்தினை ஆரம்பித்து வைத்த கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. றூபவதி கேதீஸ்வரன் அவர்கள் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவினை மிகவும் வினைத்திறனுடையதாக

                நடாத்துவதற்காக இக்கூட்டத்தினை கௌரவ அமைச்சர் ஒழுங்குபடுத்தியுள்ளதாக தெரிவித்தார். மேலும்

                மாவட்டத்தினுடைய பிரச்சினைகள், தேவைகள் தொடர்பான விடயங்களை முன்வைக்குமாறு கேட்டுக் கொண்டார்.

                கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவரும் அமைச்சருமாகிய கௌரவ. டக்ளஸ் தேவானந்தா அவர்கள் குறிப்பிடுகையில் இது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு

                கூட்டத்திற்குரிய முன்னாயத்த குழு கூட்டமாக அமைவதாகவும் முன்னதாக தீர்க்கக் கூடிய பிரச்சினைகளை ஆராய்வதற்காகவே இக்கூட்டம் நடாத்தப்படுகின்றது எனத் தெரிவித்தார். மக்களுடைய கோரிக்கைகள் தன்னிடம் வரும் போது அதற்காக

                அபிப்பிராயங்கள், ஆலோசனைகள், பங்களிப்பினை அதிகாரிகளிடமிருந்து எதிர்பார்ப்பதாகவும் கருத்து தெரிவித்தார்.

                இந்த கலந்துரையாடலில் பல விடயங்கள் ஆராயப்பட்டு தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.

                • கரைச்சிப் பிரதேச செயலர் பிரிவினை கரைச்சி மற்றும் அக்கராயன் என இரு செயலக பிரிவுகளாக அமைப்பது தொடர்பான விடயங்கள்.

                • கிளிநொச்சி மாவட்டத்தினை இரு வலயக்கல்வி அலுவலகங்களாக உருவாக்குவதற்கான விடயங்கள்.

                • கரைச்சிப் பிரதேச சபையின் ஒரு பகுதியினை நகர சபையாக உருவாக்குதலும் கண்டாவளை மற்றும் கரைச்சி பிரதேசங்களை தனித்தனி பிரதேச சபைகளாக உருவாக்குவதற்கான விடயங்கள்.

                • அரச காணிகளில் குடியிருப்பவர்களிற்கு அனுமதிப்பத்திரங்களை வழங்குவது தொடர்பான விடயங்கள். மற்றும் காணி சம்பந்தமான பிரச்சினை தொடர்பில் மேற்கொள்ளப்படவேண்டிய சட்ட நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டன.

                • கண்டாவளை பிரதேசத்தில் மத்திய வகுப்புத்திட்டத்தில் வழங்கப்பட்ட ஆரம்ப உரிமையாளர்கள் அடையாளம் காணப்படாமையினால் குடியிருக்கும் மக்களுக்கு காணி வழங்குவது தொடர்பிலான விடயங்கள்.

                • வனவளத்திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்ட காணிகள் மற்றும் வயல் நிலங்களை உரியவர்களிற்கு வழங்குதல் தொடர்பான விடயங்கள்.

                நீண்டகாலமாக வெளிமாவட்டத்தில் இருந்து வருகைதந்து கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் சொந்த மாவட்டத்தில் கடமையாற்றக் கூடியவாறான இடமாற்றம் தொடர்பான விடயங்களும் கலந்துரையாடப்பட்டன. மேலும் இலங்கை விவசாய சேவைக்குரியவர்களுக்கான பரீட்சை நடாத்தப்பட வேண்டும் என பிரதி விவசாயப்பணிப்பாளர் கேட்டுக்கொண்டமைக்கு எழுத்து மூலமான அறிக்கை வழங்குமாறு தெரிவிக்கப்பட்டது.

                • பாதுகாப்பான புகையிரத கடவையில் பணியாற்ற தேவையான உத்தியோகத்தர்களை ஒரு லட்சம் பேருக்கான வேலை வாய்ப்பினை வழங்கும் திட்டத்தில் நியமிப்பதற்கு நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

                • உமையாள்புரத்தில் பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைக்கு அருகில் பாடசாலை அமைந்துள்ளது இவ்விடத்தில் பாதுகாப்பான புகையிரதக் கடவை அமைக்கப்பட வேண்டும் எனும் விடயத்தினை மீளவும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு கௌரவ அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

                • வேலைவாய்ப்பற்ற இளைஞர் யுவதிகளிற்கு அரச வேலைகள் தவிர்த்து சுயதொழில் வாய்ப்புகளை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள்.

                • நுண்கடன் நிதியளிப்பு முறையினால் பாதிக்கப்பட்ட வறிய மக்களிற்கு நிவாரணம் வழங்குதல் தொடர்பிலான விடயங்களோடு கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெறும் சட்ட விரோத மண் அகழ்வினை தடுப்பது தொடர்பாக இராணுவத்தினுடைய உதவியினைப் பெற்று தடுக்குமாறு கௌரவ அமைச்சர் தெரிவித்தார்.

                மேலும் காடழித்தல் என்பதற்கு மேலாக காடு வளர்த்தல் நடவடிக்கையையும் முன்னெடுக்குமாறு கிளிநொச்சி மாவட்ட பனை தென்னை வள நிர்வாகம் கள் இறக்குமதி செய்வதனை தடுத்து உள்ளுர் உற்பத்தியினை மேம்படுத்துமாறும்

                கேட்டுக்கொண்டார். தொடர்ந்து யானைத்தொல்லை மற்றும் குரங்குத் தொல்லையினை கட்டுப்படுத்துவது தொடர்பான அறிக்கையினை வழங்குமாறு வனவள திணைக்களத்தினையும் விவசாயத் திணைக்களத்தினையும் கேட்டுக்கொண்டார்.

                கிளிநொச்சி சர்வதேச விளையாட்டு மைதான புனரமைப்பு பணிகள் தொடர்பாக விரிவான அறிக்கையினை

                சமர்ப்பிக்குமாறும் கிளிநொச்சி மத்திய பேருந்து நிலைய அபிவிருத்திப்பணிகளை மீள ஆரம்பிப்பது தொடர்பான அறிக்கையினையும் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

                • முன்மொழியப்பட்ட கிளிநொச்சி பொதுச்சந்தை கட்டட நிர்மாணப்பணிகளை ஆரம்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உள்ளுராட்சி உதவி ஆணையாளர் தெரிவித்தார்.

                • சகல வசதிகளையும் கொண்ட பொது நூலக கட்டட தொகுதியொன்றை உருவாக்குவதற்கு நீண்டகாலமாக கோரிக்கை விடப்பட்டுள்ளது. இது தொடர்பான தொடர் நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு உள்ளுராட்சி உதவி ஆணையாளரை கௌரவ அமைச்சர் கேட்டுக் கொண்டார். தொடர்ந்தும் இடம்பெற்ற கூட்டத்தில் கிராமிய வீதிகளை புனரமைத்தல் தொடர்பான பிரச்சினையை முன்னுரிமைப்படுத்தி வேலைத்திட்டங்களை ஆரம்பிப்பது பொருத்தமானது எனவும் அதற்கான முன்மொழிவுகளை சமர்ப்பித்து நடவடிக்கை மேற்கொள்வதாக மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான கௌரவ.டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார். மேலும் மாவட்டத்தினுடைய பிரச்சினைகள், தேவைகள் தொடர்பான பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டு தீர்மானங்களும் எடுக்கப்பட்டன

                Posted in இலங்கை செய்திகள்

                வடக்கில் நீரியல் விவசாய துறையை வளப்படுத்துவேன் – டக்கிளஸ் சூளுரை

                வடக்கில் நீரியல் விவசாய துறையை வளப்படுத்துவேன் – டக்கிளஸ் சூளுரை

                வடக்கு மாகாணத்தில் விவசாயத்திற்கு பொருத்தமான பாரியளவு வயற் காணிகள் மற்றும் தோட்ட நிலங்கள் பயன்படுத்தப்படாத நிலையில் காணப்படுகின்றன.

                இத்தகைய குளங்களையும் வாவிகளையும் மீள பயன்பாட்டுக்கு கொண்டு வருவதன் ஊடாக விவசாயத் துறையையும் நீரியல் வள செய்கையினையும் ஒரே நேரத்தில் மக்கள் பயன்பெறுகின்ற

                வகையில் மேற்கொள்ள முடியும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நேற்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில்

                இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

                இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,ஜனாதிபதி அவர்களது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு இத்தகைய காணிகள் அனைத்தையும் விவசாய செய்கைக்காக

                விடுவித்து மானிய மற்றும் இலகு கடன் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய விவசாய

                செய்கையை மேம்படுத்தி பரவலாக்குவதும் அதிகூடிய விளைச்சலை ஏற்படுத்துவதும் எமது நோக்கமாக இருக்கின்றது.

                இதன் மூலமாக நெல் உள்ளிட்ட உப உணவுப் பயிர்களை அதிகளவில் உற்பத்தி செய்வதன் ஊடாக அவற்றின் இறக்குமதிகளை நிறுத்தி உணவு உற்பத்தியில் எமது நாட்டை

                தன்னிறைவு காணச் செய்வதே எமது ஆரம்ப இலக்காகும். அதன் அடுத்த இலக்கு ஏற்றுமதிக்கான வழியேற்படுத்தலாகும் என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

                அத்துடன் குளங்கள் வாவிகள் புனரமைப்பு மற்றும் மறுசீரமைப்பு தொடர்பிலும் மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களது கருத்து தெரிவித்துள்ளார்.

                இத்தகைய குளங்களை வாவிகளை மீள பயன்பாட்டுக்கு கொண்டு வருவதன் ஊடாக விவசாயத் துறையையும் நீரியல் வள செய்கையினையும் ஒரே நேரத்தில் மக்கள் பயன்பெறுகின்ற

                வகையில் மேற்கொள்ள முடியும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.