Tag: ஆபத்து
ஈரானை தாக்க திட்டம் | ஈரான் மத தலைவருக்கு நெருங்கும் ஆபத்து
ஈரானை தாக்க திட்டம் | ஈரான் மத தலைவருக்கு நெருங்கும் ஆபத்து
ஈரானை தாக்க திட்டம் | ஈரான் மத தலைவருக்கு நெருங்கும் ஆபத்து
AI பயன்பாட்டால் இலங்கை தொழிலாளர்களுக்கு ஆபத்து
AI பயன்பாட்டால் இலங்கை தொழிலாளர்களுக்கு ஆபத்து
AI பயன்பாட்டால் இலங்கை தொழிலாளர்களுக்கு ஆபத்து ,இலங்கை உட்பட தெற்காசியாவில் செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாடு வேகமாக
அதிகரித்துள்ளதாக உலக வங்கி தனது அறிக்கையொன்றில் சுட்டிக்காட்டியுள்ளது.
AI பயன்பாடு தொழிலாளர் சந்தையில் ஏற்படுத்தும் தாக்கம்
தெற்காசியாவின் AI பயன்பாடு தொழிலாளர் சந்தையில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையின்படி, தெற்காசியாவில் நேபாளம் மற்றும் இந்தியாவுடன் ஒப்பிடும்போது, அதிக AI பயன்படுத்துவோர்
கொண்ட தொழிலாளர் சக்தியைக் கொண்ட நாடுகளாக பூட்டானும் இலங்கையும் மாறியுள்ளன.
எனினும், தெற்காசிய நாடுகளில் AI மனித நிரப்பியாக அதாவது மனித திறன்களுடன் தொழில்நுட்பத்தைச் சேர்ப்பதில் இலங்கை குறைந்த இடத்தில்
உள்ளது என்றும், திறன்களை மேம்படுத்தாமல் AI பயன்பாடு விரைவுபடுத்தப்பட்டால் வேலை இழப்புகள் ஏற்படும் என்றும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
இலங்கையில் AI தொடர்பான வேலைவாய்ப்புச் சந்தை, தெற்காசியாவில் உள்ள மற்ற நாடுகளை விட வேகமாக விரிவடைந்து வருகிறது, மேலும் 2025
ஆம் ஆண்டில் இலங்கையில் உள்ள அனைத்து தொழில்முறை மற்றும் நிர்வாக வேலைவாய்ப்பு அறிவிப்புகளில் 7.3 சதவீதத்திற்கு AI தொடர்பான திறன்கள் தேவைப்பட்டுள்ளன.
இது பிராந்தியத்திலேயே அதிகபட்ச பங்கு என்றும், இந்தியாவில் இது 5.8% ஐத் தாண்டுகிறது என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தகவல் தொடர்பு
இந்த வேலைவாய்ப்புகள் நகர்ப்புறப் பகுதிகளில் பரவி, தொழில்முறை மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்ப (ICT) சேவைத் துறைகளில் குவிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இலங்கையின் நிதித் துறை, தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்முறை சேவைகளுக்கு AI பயன்பாடு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
என்றும், இலங்கையில் வலுவான AI வேலைவாய்ப்புச் சந்தை இருக்க வேண்டும் என்றும் உலக வங்கி அறிக்கை கூறுகிறது.
இதற்கிடையில், AI பயன்பாடு காரணமாக தெற்காசியா முழுவதும் உள்ள வேலைவாய்ப்புகளில் சுமார் 7% அதிக ஆபத்தில் உள்ளதாகவும், அழைப்பு மைய அதிகாரிகள், கணக்காளர்கள், ஒப்பு நோக்குபவர்கள், கணினி
மென்பொருள் போன்ற பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்புகளில் ஏற்கனவே சரிவு காணப்படுவதாகவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
மேலும், ChatGPT பயன்பாடு குறித்து உலக வங்கி தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளதுடன், தெற்காசியாவில் இரண்டாவது அதிக தனிநபர்
ChatGPT பயன்பாடு கொண்ட நாடாக இலங்கை தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதில் மாலைத்தீவு முதலிடத்தில் உள்ளதுடன், இலங்கைக்கு அடுத்தபடியாக அதிக ChatGPT பயன்பாடு கொண்ட நாடாக இந்தியா உள்ளது.
அத்துடன், இந்த AI பயன்பாட்டினால் அதிகப் பலன்களைப் பெறக்கூடிய கொள்கை ரீதியான வாய்ப்புகள் குறித்தும் உலக வங்கி வெளியிட்டுள்ள
அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், இது AI கண்டுபிடிப்பாளர்களைத் தக்கவைத்துக் கொள்ளவும் உதவும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதன்படி, டிஜிட்டல் திறன்களை மேம்படுத்துதல், STEM கல்வியை விரிவுபடுத்துதல், நம்பகமான மின்சாரம் மற்றும் இணைய உட்கட்டமைப்பில்
முதலீடு செய்தல், அத்துடன் தொழிலாளர் நகர்வு மற்றும் வேலைவாய்ப்பு வசதி அமைப்புகளை மேம்படுத்துதல் ஆகியவை முக்கியம் என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மகிந்த உயிருக்கு ஆபத்து பாதுகாப்பு
மகிந்த உயிருக்கு ஆபத்து பாதுகாப்பு
மகிந்த உயிருக்கு ஆபத்து பாதுகாப்பு ,முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கான பாதுகாப்பை வழங்குவதற்கு அரசாங்கம் தயாரென பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
மஹிந்தவின் பாதுகாப்புத் தேவைகள்
மஹிந்தவின் பாதுகாப்புத் தேவைகள் மற்றும் அவர் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களை மதிப்பிட்டு அறிவித்தால், நிலைமைகளை மதிப்பீடு
பாதுகாப்பு வழங்குவதில் எவ்வித பிரச்சினையும் இருக்காது
செய்ததன் பின்னர், பாதுகாப்பு வழங்குவதில் எவ்வித பிரச்சினையும் இருக்காது எனவும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆகவே, இந்த விடயம் தொடர்பில் எவ்வித பிரச்சினையும் இருக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேல் அணு உலைக்கு ஆபத்து
இஸ்ரேல் அணு உலைக்கு ஆபத்து
இஸ்ரேல் அணு உலைக்கு ஆபத்து உள்ளதால் அதன் படகுகப்புக்கு புதிய கட்டடம் ஒன்றை இஸ்ரேல் நிறுவி வருகிறது .Israel’s nuclear reactor in danger
ஈரானின் அணு உலைகளை இஸ்ரேல் தாக்கினால் அதற்கு பதிலாக ஈரானும் இஸ்ரேலின் அணு உலையை தாக்க கூடும்
என்ற பதட்டம் நிலவுவதால் ,இஸ்ரேல் இப்பொழுது அதன் பாதுகாப்பை பலப்படுத்தி வருகிறது .
இஸ்ரேல் ஈரான் அதி பதட்டத்தில் Israel and Iran are in high tension
அதனால் இப்பொழுது இஸ்ரேல் ஈரான் அதி பதட்டத்தில் உறைந்துள்ளனர் .எப்பொழுதும் எதுவும் நடக்கலாம் என்கின்ற நிலை காணப்படுகிறது .
யூத இராணுவம் பல நாடுகள் மீது நடத்தி வரும் தாக்குதலுக்கு பதிலடி அதிரடியாக ஈரான் வழங்க தயாராகி வருவதாக எதிர் பார்க்க பாடுகிறது .
போர் ஆரம்பித்தால் If the war starts
இம்முறை போர் ஆரம்பித்தால் இஸ்ரேல் பாரளுமன்றம் உள்ளிட்டவைகள் அதிதீத தாக்குதலுக்கு உள்ளாக கூடும் என்ற நிலை காணப்படுகிறது .
இதனால் இஸ்ரேல் இராணுவம் பல மாற்று நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
முட்டைகளை கழுவிசேமித்து வைப்பதால் ஆபத்து
முட்டைகளை கழுவிசேமித்து வைப்பதால் ஆபத்து
முட்டைகளை கழுவிசேமித்து வைப்பதால் ஆபத்து முட்டைகளை கழுவிய பின் சேமித்து வைப்பது நுகர்வுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
முட்டைகளைக் கழுவுவதன் ஊடாக
முட்டைகளைக் கழுவுவதன் ஊடாக முட்டையின் மேற்பரப்பில் உள்ள கிருமிகள் முட்டைக்குள் செல்லக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் புலின ரணசிங்க தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்து கருத்து வௌியிட்ட புலின ரணசிங்க,
“முட்டை ஓடு என்பது முழுமையாக மூடப்பட்ட ஒன்றல்ல. இது மிக நுண்ணிய துளைகளைக் கொண்டுள்ளது. எனவே, முட்டைகளைக் கழுவும்போது,
மேற்பரப்பில் உள்ள அழுக்கு, தூசி மற்றும் விலங்குகளின் மலம் தண்ணீரில் கரைந்து முட்டையின் உள்ளே செல்லும்.
முட்டையின் உள்ளே புரதம் நிறைந்துள்ளது. நுண்ணுயிரிகள் அதில் நுழைந்தால், அவை விரைவாக வளர்ந்து நச்சு நிலைமைகளை ஏற்படுத்தும். எனவே, கழுவிய பின் முட்டைகளை சேமிக்க முடியாது.
இதன் பொருள் முட்டைகளை சமைக்கும்போது கழுவ வேண்டும் என்பதல்ல.
கழுவிய முட்டைகள் சந்தையில் பொதி செய்யப்படுவதில்லை என்று நினைக்கிறேன். முட்டை உற்பத்தி செயல்முறையின் போது அழுக்கு, தூசி
மற்றும் மலம் மாசுபடுவதைக் கட்டுப்படுத்த நல்ல தரமான முகாமைத்துவ முறைகளைப் பின்பற்றி உற்பத்தி செய்யப்படும் முட்டைகள் உள்ளன.
உலகில் சாதாரணமாக முட்டைகளை சுத்தப்படுத்தும் செயற்பாடுகளை இயந்திரங்களின் ஊடாகவே மேற்கொள்வது வழக்கம். அவைகள் கழுவி சுத்தப்படுத்தப்படுவதில்லை” என்றார்.
நிலவுக்கு ஆபத்து விஞ்ஞானிகள் எச்சரிக்கை
நிலவுக்கு ஆபத்து விஞ்ஞானிகள் எச்சரிக்கை
நிலவுக்கு பெரும் ஆபத்து இருப்பதாகவும் அதனை இழக்க நேரிடும் எனவும் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
2024 YR4′ எனும் விண்கல் நிலவை மோத வாய்ப்பு இருப்பதாகவும், இந்த சம்பவத்தால் நாம் நிலவை நிரந்தரமாகக்கூட இழக்கலாம் என விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்திருக்கின்றனர்.
அப்படி நடந்தால் அது பூமியிலும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். நாசாவின் ‘ஜேம்ஸ் வெப்’ தொலைநோக்கி ‘2024 YR4’ எனும் விண்கல்லை, தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது.
இக்கல் பயணிக்கும் பாதைக்கு குறுக்கே பூமி வரும், இதனால் இந்த விண்கல் பூமி மீது மோதும் என்று தொடக்கத்தில் கணிக்கப்பட்டிருந்தது.
ஆனால் அதற்கான சாத்தியங்கள் இல்லை என்று இப்போது உறுதி செய்யப்பட்டிருக்கின்றன.
ஆனால் இக்கல் நிலவு மீது மோத வாய்ப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.
நிலவை இக்கல் 2032ம் ஆண்டு தாக்கலாம். முதன் முதலில் இக்கல் கடந்த ஆண்டு டிசம்பரில் கண்டுபிடிக்கப்பட்டது.
நிலவுடன் ஒப்பிடும்போது இக்கல், மிகவும் எடை குறைந்தது. எனவே பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. எனவே அச்சப்பட வேண்டியதில்லை என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
ஆனால் சில தனியார் விண்வெளி ஆய்வாளர்கள், இக்கல் நிலவு மீது மோதும்போது நிலவு பூமியை விட்டு மேலும் விலகி செல்ல வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார்கள். அப்படி நடந்தால், அதன் விளைவுகளை பூமி எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.
நிலவின் ஈர்ப்பு விசையால் கடல் அலைகள் உருவாகின்றன. நிலவு இல்லையெனில், சூரியனின் ஈர்ப்பு மட்டுமே அலைகளை உருவாக்கும், இதனால் அலைகள் மிகவும் பலவீனமாகவும் ஒழுங்கற்றதாகவும் இருக்கும்.
நிலவு பூமியின் சுழற்சி அச்சை நிலைப்படுத்த உதவுகிறது. இல்லையெனில், பூமியின் அச்சு பெரிய அளவில் பாதிக்கப்படும். இது காலநிலையில் தீவிர மாற்றங்களை ஏற்படுத்தும்.
நிலவு இரவில் இயற்கையான வெளிச்சத்தை வழங்குகிறது. இது இல்லையெனில், இரவுகள் மிகவும் இருண்டதாக இருக்கும், இது விலங்குகள் மற்றும் மனிதர்களின் நடவடிக்கைகளை பாதிக்கும்.
உதாரணத்திற்கு கடற்கரை மணற் பரப்பிலிருந்து வெளிவரும் ஆமை குஞ்சுகள் நிலவின் வெளிச்சத்தை அடையாளம் கண்டுதான் கடலுக்கு போகிறது.
கடல்வாழ் உயிர்களுக்கு இனப்பெருக்கம், வேட்டையாடுதல் உள்ளிட்டவற்றிற்கு நிலவு வெளிச்சம் அவசியம். நிலவு இல்லையெனில் ஆமை போல பல உயிர்கள் பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
- செல்லப்பா உன்ன தேசம் மறக்குமா |709|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa

- தெற்கு லெபனான் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் இஸ்ரேலியத் தாக்குதலில் பலி

- இஸ்ரேல் பிரிட்டன் முறுகல் இஸ்ரேல் உறவு முறிந்தது

- மொஜ்தபா கமெனியின் வழிகாட்டுதலின் கீழ், காலிபாஃப் தலைமையில் ஈரானியப் பேச்சுவார்த்தை

- அமெரிக்காவின் அரசு ஆதரவு கடற்கொள்ளை

மினுவாங்கொடையில் அதிகரிக்கும் ஆபத்து
மினுவாங்கொடையில் அதிகரிக்கும் ஆபத்து
மினுவாங்கொடையில் அதிகரிக்கும் ஆபத்து ,மினுவாங்கொடையில் அமைந்துள்ள பிரதான ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றும் 133 பணியாளர்கள் சின்னம்மை நோய் தொற்று காரணமாக சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
இங்குள்ள 64 ஊழியர்களுக்கு முதலில் நோய் இருப்பது கண்டறியப்பட்டு, சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டு மீண்டும் பணிக்கு அனுப்பப்பட்டனர்.
இதையடுத்து, அங்கு மேலும் 69 ஊழியர்களுக்கு சின்னம்மை தொற்று இருப்பது தெரியவந்துள்ளது
அணுசக்தி தளங்களுக்கு ஆபத்து
அணுசக்தி தளங்களுக்கு ஆபத்து
அணுசக்தி தளங்களுக்கு ஆபத்து ,ஈரானின் அணுசக்தி தளங்களில் இஸ்ரேலின் தாக்குதலை ஆதரிக்கப் போவதில்லை என்று பிடன் கூறுகிறார்
ஈரானின் ஏவுகணைத் தாக்குதலுக்கு இஸ்ரேலிய பதில் ‘விகிதாசாரமாக’ இருக்க வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி கூறுகிறார்.
இஸ்ரேல் மீது தெஹ்ரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலுக்குப் பதிலடியாக ஈரானின் அணு ஆயுத தளங்களில் தாக்குதல் நடத்துவதற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
அத்தகைய பதிலடிக்கு ஆதரவளிப்பீர்களா என்று புதன்கிழமை செய்தியாளர்கள் கேட்டதற்கு, பிடென் “பதில் இல்லை” என்று கூறினார்.
இஸ்ரேல் மீது ஈரான் சுமார் 180 பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசிய ஒரு நாளுக்குப் பிறகு பிடனின் கருத்துக்கள் வந்துள்ளன, இது ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு அந்நாட்டின் மீதான இரண்டாவது தாக்குதலாகும். ஹமாஸ் தலைவர்
இஸ்மாயில் ஹனியே மற்றும் ஹெஸ்பொல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா உட்பட ஈரானுடன் இணைந்த முக்கிய பிரமுகர்கள் படுகொலை
செய்யப்பட்டதற்கு பதிலடியாக இஸ்ரேலிய இராணுவ தளங்கள் மீதான ஈரானின் சமீபத்திய தாக்குதல்கள் வந்துள்ளன.
அர்ச்சுனாவுக்கு உயிர் ஆபத்து
அர்ச்சுனாவுக்கு உயிர் ஆபத்து
அர்ச்சுனாவுக்கு உயிர் ஆபத்து ,சாப கச்சேரி மருத்துவமனையில் முன்னாள் பொறுப் அதிகாரியாக விளங்கிய ஐயா அர்ச்சுனா இராமநாதன் அவர்களுக்கு உயிர் அச்சத்தில் காணப்படுவதாக தெரிய வருகின்றது.
அவரது வீட்டுக்கு சென்ற நான்கு மர்ம ஆசாமிகள் முகமூடிகளை மூடிக்கொண்டு அவரது கதவுகளை தட்டி, அவருக்கு உயிர் எஅச்சுறுத்தல் விடுத்தது சென்றுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அரசியல் கட்சி ஒன்றினால் திட்டமிடப்பட்டு, கொலைக்கு அமர்த்தபட்டவர்களாக இவர்கள் காணப்படுவதாக ,விடயம் அறிந்த வட்டாரங்கள் செய்திகளை வெளியிடுகின்றன.
மக்களுக்காக குரல் கொடுத்த மா மனிதன்
பாதுகாப்பு நிலையில் தன்னந்தனியாக மக்களுக்காக குரல் கொடுத்து இந்த மக்களது நெஞ்சங்களில், ஆழ ஊடுருவி உள்ள அர்ஜுனா அவர்கள் எவ்வளையும் தாக்கப்படலாம்.
ஆதலால் மக்களுடைய விடியலுக்காகவும் மக்களுடைய எண்ண எழுச்சி களுக்காகவும் ,தன்னை அர்ப்பணித்து, இன்று மனச்சோர்வு நிலையில் உள்ளாக்கப்பட்டு தண்டிக்கப்பட காத்திருக்கின்ற ,
அரசியல் வாதிகளினால் அல்லது கூலி குழுக்களினால் இவர்கள் படுகொலை செய்யப்படலாம் என கருதப்படுகின்றது.
இதற்கு மக்கள் தமது ஆதரவுகளை வாங்கி இவருக்கு நீங்கள் காவலாக அடிக்க வேண்டியது உங்கள் கடமையாகும் .
காலத்தின் முன்னால் வந்திருக்கக்கூடிய ஒரு கரிகாலனுக்கு நீங்கள் அவனது வாயிலிருந்து பாதுகாப்பு அளிக்க வேண்டியது உங்களது தேவையாக இருக்கின்றது .
நீதிக்காகவும் நேர்மைக்காகவும் தன்னை நெஞ்சை நிமிர்த்தி அஞ்சாது சாகத் துணிந்து வந்திருக்கின்ற ,அந்த சாகா வீரனுக்கு உங்களது ஆதரவினை வழங்க வேண்டியது உங்களது கடமையாகும்.
வீழ்வது ஒரு நாள் தான் ,ஆனால் விழும் போது வரலாறாகி விட வேண்டும் என்பது வாழ்வியல் தத்துவ விதியாக காணப்படுகிறது .
அந்த வகையில் அர்ஜுனா மருத்துவரை காப்பாற்ற வேண்டியதும் எம்மோடு அரவணைத்து பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது மக்கள் கடமையாகும்.
தயவு செய்து இதுகளை உடனடியாக பரப்பி அவர்களுக்கு நல்லவர்களே நெஞ்சோடு உள்ளவர்களே பாதுகாப்பாக நீங்கள் ,காவலுக்கு நிற்க வேண்டும் என்பது எமது வேண்டுதலாக இதில் முன்வைக்கின்றோம்.
- செல்லப்பா உன்ன தேசம் மறக்குமா |709|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa

- பாணரே எங்க பாணரே |707|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa

- செல்லப்பா செல்லப்பா தேனிசை செல்லப்பா |706| Thenisai Chellappa

- செல்லப்பா எங்க செல்லப்பா |705| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa

- தேசம் மறக்குமா எங்க தேசம் மறக்குமா செல்லப்பா |704| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa

- தேனிசை செல்லப்பா நிகழ்வு காட்சிகள்

- வீரத்தின் குரலோனே வீரவணக்கம் | தேனிசை செப்பாவின் நினைவு பாடல் |பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG

- ஒரு முறை எழுவாயா | இந்த குரல் இனி ஒலிக்காதோ | பாசறை பாணர் செல்லப்பா பாடல் Thenisai Chellappa SONG

- தேனிசை உறங்கியதோ |கண்ணீர் பாடல் | பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG

- பாயும் புலியே செல்லப்பா |கண்ணீர் பாடல் | பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEWSONG

இலங்கையில் நிலநடுக்கம் ஏற்படும் என எச்சரிக்கை
இலங்கையில் எதிர் காலத்தில் நில நடுக்கம் தொடராக ஏற்படும் வாய்ப்புக்கள் உள்ளதாக காலநிலை ஆராய்ச்சியார்கள் தெரிவித்துள்ளனர்
நில நடுக்கம்
உலகம் மாறி வரும் பருவ நிலையின் காரணமாக ஏற்பட்ட மாறுதலே இந்த நில நடுக்கம் ஏற்பட காரணமாக அமைந்துள்ளது
என சுட்டி காட்டப்பட்டுள்ளது ,
ஈரான் ,பனாமா துருக்கி ,இந்தோனேசிய போன்ற நாடுகளில் அதிக கூடிய நில நடுக்கம் ஏற்பட்டு இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது
எச்சரிக்கை
எனவே இதனை கருத்தில் கொண்டு மலை பகுதியில்வளை மக்கள் மிக அவதானமாக இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகவும்
குறிப்பிடும் இவர்கள் சமீப நாட்களில் இலங்கையில் ஏற்பட்ட தொடர் நிலஅதிர்வுகள் இதனாலே ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்
சாப்பிடுவதற்கு முன்பு சானிடைசர் பயன்படுத்தினால் என்ன நடக்கும் தெரியுமா ..?
நாம் சாப்பிடுவதற்கு முன்பு சானிடைசர் பாவித்தால் அதனால் உடலுக்கு ஏன்னா தீங்கு நடக்கும் தெரியுமா
கொரோனா வைரசிடம் இருந்து தற்காத்துக்கொள்வதில் முக கவசமும், சானிடைசரும் முக்கிய பங்கு வகிக்கின்றன. வைரஸ்களை கொல்வதற்கு சானிடைசர் உதவினாலும் அதனை
சற்று கவனமாக கையாள வேண்டும். தொடர்ந்து பயன்படுத்தும்போது சில தொல்லைகள் ஏற்படக்கூடும். சானிடைசரில் 60 சதவீதத்திற்கும் அதிகமாக ஆல்கஹால்
கலந்திருப்பதால் வைரஸ்களை திறம்பட கொல்லும். ஆனால் சில சானிடைசர்களில் ஆல்கஹாலுக்கு பதிலாக டிரைக்ளோசான் என்ற
வேதிப்பொருள் கலக்கப்படுவதால் கவனமாக பார்த்து வாங்க வேண்டும். விரும்பிய விளையாட்டு
டிரைக்ளோசான் என்ற வேதிப் பொருள் பூச்சி கொல்லி மருந்துகளில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. அதனால் அதில்
விஷத்தன்மையும் கலந்திருக்கிறது. அது மக்களின் பொதுவான பயன்பாட்டிற்கு ஏற்றது அல்ல.
அத்தகைய சானிடைசர்களை அடிக்கடி பயன்படுத்தும்போது அவை உடலில் உறிஞ்சப்பட்டால் தைராய்டு சுரப்பியின் செயல்பாடுகள் பாதிப்புக்குள்ளாகும். தசைகள் மற்றும் ஈரலுக்கும்
பாதிப்பை ஏற்படுத்தும். சாப்பிடுவதற்கு முன்பு சானிடைசர் பயன்படுத்தி கைகழுவுவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
அதிலுள்ள வேதிப்பொருட்கள் உடலுக்குள் சென்று, செரிமான மண்டலத்துக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். குழந்தைகளின் நோய்
எதிர்ப்பு மண்டலத்தையும் பாதிக்கவைத்துவிடும். சிலர் சானி டைசரை கொண்டு முக கவசத்தை கழுவும் வழக்கத்தையும் பின்பற்றுகிறார்கள். அது ஆபத்தானது.
அதில் இருக்கும் வேதிப்பொருட்கள் முக கவசத்தில் கலந்துவிடும். அதனை மறுபடியும் உபயோகிக்கும் போது சுவாசம் சார்ந்த
பிரச்சினைகள் ஏற்படலாம். வெளி இடங் களுக்கு செல்லும்போது தவிர்க்க முடியாத பட்சத்தில் மட்டும் சானிடைசர் பயன்படுத்துங்கள்
























