Tag: மரணம்
நீரில் மூழ்கி சிறுவன் மரணம்
நீரில் மூழ்கி சிறுவன் மரணம்
நீரில் மூழ்கி சிறுவன் மரணம் , ஹால வெல பகுதியில் நீர்த்தோக்கத்தில் நீராடிச் சென்ற 11 வயது சிறுவன் நீரில் மூழ்கிபலியாகியுள்ளார் .Boy dies after drowning ( இன்றைய இலங்கை செய்திகள் )
மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .It has caused shock among the people.
பரிதாபகரமாக பலியாகி உள்ள சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
ஹலவெல பகுதியை சேர்ந்த சிறுவனே சம்பவ இடத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர் .
இவ்விதம் நீரில் மூழ்கிய சிறுவனை உறவினர்கள் மற்றும் பொது மக்கள் சிறுவனை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த பொழுதும் அவர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார் .
இலங்கையில் நீர் எரிகளில் Water fires in Sri Lanka
இலங்கையில் நீர் எரிகளில் இவ்வாறு நீராட செல்கின்ற மக்களில் வருடம் தோறும் 1800க்கு மேற்பட்டவர்கள் பலியாகி வருவதான புதிய புள்ளி விவரங்கள் மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .
அவ்வாறு இருந்தும் இந்த விபத்துக்கள் நடப்பது தெரிந்தும் நீர் நிலைகளில் மக்கள் இறங்கி நீராடிச் செல்வது ஏன் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
மக்கள் மத்தியில் விழிப்புணர்வும் தெளிவின்மையும் இல்லாத காரணத்தினாலேயே இந்த இறப்புகள் இடம் பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு இல்லாத நீரேரிகளில் பாதுகாக்கப்பட்ட முறையில் நீராடச் செல்வதால் இந்த மரணங்கள் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்மருத்துவமனையில் பிறந்த சிசு மரணம்
யாழ்மருத்துவமனையில் பிறந்த சிசு மரணம்
யாழ்மருத்துவமனையில் பிறந்த சிசு மரணம் பெற்றவர்கள் கொதிப்பில் உறைந்துள்ளார்கள்.Baby born at Jaffna Hospital dies
யாழ்ப்பாணம் போதனை வைத்திய சாலை Jaffna Teaching Hospital
யாழ்ப்பாணம் போதனை வைத்திய சாலையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட பொழுது .அவர் பெற்ற சிசு 4 நாள் பின்னர் இருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிசுவின் மரணம் தொடர்பில் தற்பொழுது மரண விசாரணை அதிகாரி ஆறுமுகம் இயல்பான சிங்கம்
விசாரணை மேற்கொண்டு உடற்கூற்று பரிசோதனைக்கு உத்தரவு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு இறந்த பிள்ளையினுடைய தாய் நவாலி தெற்கு மாணிப்பாயைச் சேர்ந்தவர் என்ன தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனையின் அலட்சியப் போக்கு Hospital negligence
மரணத்தில் சந்தேகம் ஏற்படுவதால் மருத்துவமனையின் அலட்சியப் போக்கும் தவறான சிகிச்சை காரணமாக பிறந்திருக்க கூடும் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
இதனால் மீளவும் யாழ்ப்பாண போதனா பூவைத்தியசாலை சர்ச்சையில் சிக்கி இருக்கிறது.
மக்கள் போராட்டம் மறுவதுமனைக்கு எதிராக வெடிக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது .
உக்கிரைன் போரில் வடகொரியா சிப்பாய் மரணம்
உக்கிரைன் போரில் வடகொரியா சிப்பாய் மரணம்
உக்கிரைன் போரில் வடகொரியா சிப்பாய் மரணம் ,உக்கிரன் போரில் வடகொரியா சிப்பாய் மரணமடைந்ததை அடுத்து அவரது குடும்பத்தை அழைத்து மரியாதை செலுத்தி இருக்கிறார் வடகொரியாவின் அதிபர் இரும்பு மனிதர் கிங் ஜாங் உன் அவர்கள்.North Korean soldier dies in Ukraine war
இறந்த ராணுவ சிபாயின் படங்களை தாங்கியவாறு அரங்கில் மக்கள் அங்கே காணப்படுகின்றனர் .
இராணுவச்சிப்பாய்க்குரிய மரியாதை
அந்த இராணுவச்சிப்பாய்க்குரிய மரியாதைகளை செலுத்தி, அவரது குடும்ப உறவுகளுக்கு தனது ஆழ்ந்த அனுதாபத்தையும் அன்பையும் பரிமாறிக்கொண்டார்.
இரக்கமில்லாதவர் இரும்பு மனிதர் மக்களை அச்சுறுத்தி ,அடக்கி ஆண்டு வைத்து வருகிறார் என்றெல்லாம் மேற்குலக நாடுகள் குற்றம் சுமத்தின .
ஆனால் தனது நாட்டின் மக்களுக்கு உரிய சேவைகளை ஆற்றி வருவது இதனூடாக தெரிய வருகிறது.
மேற்குலக ஓநாய்கள் கூக்குரல்
வடகொரியா சர்வாதிகார முறைமையின் கீழ் மக்களை கொடுமைப்படுத்துவதாக மேற்குலக ஓநாய்கள் கூக்குரல் இட்டு வருகின்ற நிலையில் ,அவரது செயல்பாடுகள் அந்த மக்களை மனமகிழ்ச்சி அடைய செய்திருக்கிறார்.
ஆகவே இந்த காணொளி என்பது தற்போது உலக நாட்டு உளவுத்துறைகளுக்கு மேற்குலக நாடுகளுக்கும் , மிகப்பெரும் சாட்டை அடியாக விழுந்திருக்கிறது.
ரஷ்யாவின் அதிபர் விளாதிமீர் புட்டின் வடகொரியாவின் ராணுவ சிப்பாய் மரணமானதை உறுதிப்படுத்தியதை அடுத்து தற்பொழுது இந்த கௌரவத்தை அவர் நிகழ்த்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
- இந்தியா ஈரான் மோதல் உச்சம்

- ஈராக்கில் தீவிர ஊழல் ஒழிப்பு நடவடிக்கையில் 375 கிலோ தங்கம் பறிமுதல்

- மொஜ்தபா கமெனி 90% அழிந்துவிட்டார் டிரம்ப்

- 20% என்பது மிக அதிகம், ஈரான் நியாயமாக நடந்துகொள்ளும்

- புரிந்துணர்வு ஒப்பந்தக் கடமைகளை அமெரிக்கா நிறைவேற்றாவிட்டால், ஒப்பந்தத்தை ஏற்க மாட்டோம் ஈரான்

- மத்திய ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலில் குறைந்தது ஒருவர் பலி, ஏழு பேர் காயம்

- ஹோர்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்பட வேண்டும் ஐரோப்பிய ஒன்றியம்

- ஈரான் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை கடும் போர் மூண்டது

- ஈரானின் ஐந்து நகரங்கள் மீது தாக்குதல்

- வளைகுடா நாடுகள் முழுவதும் ஈரானின் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல்

- ஜோர்டான் குவைத் கத்தார் அமெரிக்கத் தளங்கள் மீது தாக்குதல்

- ஈரானின் ஆராய்ச்சி உள்கட்டமைப்பில் 300 மில்லியன் டாலர் சேதம் ஏற்பட்டது.

- வெடித்து சிதறிய ஈரான் ஆயுத கிடங்கு

- ஓமான் ஈரான் பேச்சு எதிரி கொதிப்பு

- என்னை கொல்ல ஈரான் முயற்சித்தால் ஈரானை அழிப்பேன் டிரம்ப்

முல்லைஇளைஞன் மரணம் இராணுவ சிப்பாய்கைது
முல்லைஇளைஞன் மரணம் இராணுவ சிப்பாய்கைது
முல்லைஇளைஞன் மரணம் இராணுவ சிப்பாய்கைது முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட முத்துஐயன்கட்டு குளத்திலிருந்து இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது .
மூன்று இராணுவ சிப்பாய்களும் விளக்கமறியலில்
செய்யப்பட்ட மூன்று இராணுவ சிப்பாய்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கைதானவர்களை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இளைஞனின் மரணம் தொடர்பில் பிரதேச மக்கள்
குறித்த இளைஞனின் மரணம் தொடர்பில் பிரதேச மக்கள் வழங்கிய வாக்குமூலத்திற்கு அமைய முத்துஐயன்கட்டு
இராணுவ முகாமை சேர்ந்த மூன்று இராணுவ சிப்பாய்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
முத்துஐயன்கட்டு பகுதியை சேர்ந்த 05 இளைஞர்களை இரும்பு சேகரிக்க வருமாறு அழைத்து இராணுவ சிப்பாய்கள் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதன்போது அங்கிருந்து தப்பிப்பதற்காக குளத்தில் குதித்த போதே குறித்த இளைஞன் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
9குழந்தைகள் மரணம் நீச்சல்குளத்திற்கு ஆப்பு
9குழந்தைகள் மரணம் நீச்சல்குளத்திற்கு ஆப்பு
9குழந்தைகள் மரணம் நீச்சல்குளத்திற்கு ஆப்பு ,9 குழந்தைகள் இறந்த பிறகு 5 மில்லியன் நிலத்தடி நீச்சல் குளங்கள் திரும்பப் பெறப்பட்டன
ஒன்பது குழந்தைகள் இறந்ததைத் தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள முக்கிய சில்லறை விற்பனையாளர்களிடம் விற்கப்பட்ட மில்லியன் கணக்கான .
நிலத்தடி நீச்சல் குளங்கள் திரும்பப் பெறப்படுகின்றன
நிலத்தடி நீச்சல் குளங்கள் திரும்பப் பெறப்படுகின்றன என்று நுகர்வோர் தயாரிப்பு பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
பெஸ்ட்வே, இன்டெக்ஸ் மற்றும் பாலிகுரூப், CPSC உடன் இணைந்து ஜூலை 21 அன்று சுமார் 5 மில்லியன் நீச்சல் குளங்களை திரும்பப் பெறுவதாக அறிவித்தன, இது நீரில் மூழ்கும் அபாயத்தைக் காரணம் காட்டியது.
குளங்களின் சுருக்கப் பட்டைகளால் உருவாக்கப்பட்ட கால்தடங்கள் மூலம் குழந்தைகள் குளங்களுக்குள் நுழைந்த பிறகு 22 மாதங்கள் முதல் 3 வயது வரையிலான குழந்தைகள் ஒன்பது பேர் இறந்துள்ளதாக CPSC நம்புகிறது.
கலிபோர்னியா, புளோரிடா, மிச்சிகன், மிசோரி, டெக்சாஸ்
கலிபோர்னியா, புளோரிடா, மிச்சிகன், மிசோரி, டெக்சாஸ் மற்றும் விஸ்கான்சினில் 2007 மற்றும் 2022 க்கு இடையில் குழந்தைகளின் இறப்புகள் நிகழ்ந்தன.
2011 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் நடந்த மூன்று கூடுதல் சம்பவங்கள் குறித்தும் CPSC அறிந்திருப்பதாகக் கூறியது,
அங்கு குளங்களை அணுகிய குழந்தைகள் குளங்களுக்குள் நுழைவதற்கு சுருக்கப் பட்டைகளைப் பயன்படுத்தியதாக முன்பு புகார் அளித்தனர்.
இலங்கையில் கொவிட் மரணங்கள்
இலங்கையில் கொவிட் மரணங்கள்
இலங்கையில் கோவிட் தொற்றுக்குள்ளான இருவர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
நாடளாவிய ரீதியில் பரவிவரும் கொவிட் -19 திரிபினால் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட
மருத்துவப் பேராசிரியர் துஷாந்த மெதகெதர தெரிவித்தார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட, வயம்ப மருத்துவ பீடத்தின் முதன்மை மருத்துவப் பேராசிரியர் துஷாந்த மெதகெதர மேலும் கூறுகையில்,
“இலங்கை தொற்று நோயியல் பிரிவு தகவலின்படி, சுவாச நோயாளிகளில் 9% முதல் 13% வரை தற்போது புதிய கொவிட் திரிபினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த கொவிட் தொற்று மிகக் குறைந்த தீவிரத்தன்மை கொண்டது. இதனால் ஏற்படும் தாக்கம் மிகக் குறைவு. ஆனால் 65 வயதுக்கு மேற்பட்ட நோயாளிகளுக்கும் பலவீனமான நோயெதிர்ப்பு சக்தி கொண்டவர்களுக்கும் இது தீவிரமாக இருக்கலாம்.
இவ்வாறானவர்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும். நாட்டில், இதுவரை இரு மரணங்கள் பதிவாகியுள்ளன. இருவருக்கும் நோய்கள் இருந்தன.
அதைத் தவிர, தற்போது எங்களுக்கு எந்த ஆபத்தான நிலைமைகளும் இல்லை, எனவே தேவையற்ற அச்சம் தேவையில்லை. ஆனால் குறிப்பிட்ட தரப்பினர் இது குறித்து விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்” எனத் தெரிவித்தார்.
33 பாலஸ்தீன மக்கள் மரணம்
33 பாலஸ்தீன மக்கள் மரணம்
33 பாலஸ்தீன மக்கள் மரணம் என பாலஸ்தீனம் காசா சுகாதார அமைச்சு அதிரடியாக அறிவித்துள்ளது.

கடந்த 24 மணித்தியாலமாக யூத படைகள் நடத்திய இராணுவ தாக்குதலில் ,இந்த அப்பாவி மக்கள் பலியாகி உள்ளதாக, காசா சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இதன் அடிப்படையில் 33 மக்கள் பலியாகியும் ,94 க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
இறந்தவர்களில் முதியவர்கள் ,சிறுவர்கள் ,பெண்கள் , உள்ளடங்கு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு வருடங்களுக்கு மேலாக நீடித்துச் செல்லும், இஸ்ரேல் பாலஸ்தீன யுத்தத்தினால் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட ,பாலஸ்தீன மக்கள் பலியாகி ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் காயமடைந்து வெறுக்கின்றனர்.
இந்த லட்சத்துக்கு மேற்பட்ட வீடுகள் முற்றாக அழிக்கப்பட்டு சுடுகாடக்கப்பட்டுள்ளன.
சமாதான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில் ,யூத படைகள் வலிந்து தாக்குதலை நடத்தி காசா ,மக்கள் மீது கண்மூடித்தனமான ,இனப்படுகொலை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளமை இங்கே கவனிக்கத்தக்கது.
- இந்தியா ஈரான் மோதல் உச்சம்

- ஈராக்கில் தீவிர ஊழல் ஒழிப்பு நடவடிக்கையில் 375 கிலோ தங்கம் பறிமுதல்

- மொஜ்தபா கமெனி 90% அழிந்துவிட்டார் டிரம்ப்

- 20% என்பது மிக அதிகம், ஈரான் நியாயமாக நடந்துகொள்ளும்

- புரிந்துணர்வு ஒப்பந்தக் கடமைகளை அமெரிக்கா நிறைவேற்றாவிட்டால், ஒப்பந்தத்தை ஏற்க மாட்டோம் ஈரான்

- மத்திய ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலில் குறைந்தது ஒருவர் பலி, ஏழு பேர் காயம்

- ஹோர்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்பட வேண்டும் ஐரோப்பிய ஒன்றியம்

- ஈரான் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை கடும் போர் மூண்டது

- ஈரானின் ஐந்து நகரங்கள் மீது தாக்குதல்

- வளைகுடா நாடுகள் முழுவதும் ஈரானின் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல்

- ஜோர்டான் குவைத் கத்தார் அமெரிக்கத் தளங்கள் மீது தாக்குதல்

- ஈரானின் ஆராய்ச்சி உள்கட்டமைப்பில் 300 மில்லியன் டாலர் சேதம் ஏற்பட்டது.

முதலாவது மாவீரன் சங்கர் தந்தைமரணம்
முதலாவது மாவீரன் சங்கர் தந்தைமரணம்
முதலாவது மாவீரன் சங்கர் தந்தைமரணம் ,தமிழீழ விடுதலை புலிகளின் போராட்டவரலாற்றின் முதலாவது மாவீரன் சங்கர் அவர்களின் தந்தையார் லண்டனில் மரணமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
லண்டனில் வசித்து வந்த முதலாவது மாவீரன் சங்கர் அவர்களின் தந்தையார் தற்பொழுது உடல் சுகவீன காரணமாக மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதலாவது வித்தாக சங்கர் அவர்கள் வீரமரணம் அடைந்திருந்தார்.
அவரை தொடர்ந்து பல ஆயிரக்கணக்கான விடுதலை மறவர்கள் தங்கள் மண்ணுக்காக தங்கள் இன்னுயிரை ஈகம் செய்தார்கள்.
தற்பொழுது சங்கருடைய தந்தை மரணமானதை அடுத்து லண்டன் வாழ் தமிழ் மக்கள் ,அவரது இறுதி நிகழ்வில் கலந்து கொள்வதற்கு தயாராகி வருகிறார்கள்.

விடுதலை இன்று வீரம் இழந்து போயிருந்தாலும் ,ஆனால் அந்தக் காலத்தில் எங்களுக்காக நின்ற அரும் பெரும் தலைவர்களையும், தலைமைகளையும் மாமர வீரர்களையம் மக்கள் மறக்கவில்லை.
லண்டன் பகுதியில் இவரது இறுதி நிகழ்வு தொடர்பான விடயங்கள் விரைவில் தெரிவிக்கப்படும் எனவும் ,அவ்வளை பல நூற்றுக்கணக்கான மக்கள் அங்கு திரண்டு தமது இறுதி நிகழ்வை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
வீரத்தின் விளைநிலமாகவும், விடுதலையின் கனவாகவும் ,அண்ணனுக்கு தம்பியாகவும் ,தமிழின போருக்கு துணையாக நின்று களமாடி, வீரமரணம் அடைந்த சங்கர் அவர்களின் ,தந்தையை நினைவு கூறுவோம் .

தமிழர்களை ஒன்று திரண்டு வருக விரைவில் மேலதிக விபரம் இணைக்கப்படும்.
இந்த மாமற வீரன் சங்கர், கடல் புலிகளின் தளபதி சூசை அவர்களுடைய உறவுக்காரர் என்பதை இங்கே குறிப்பிடத்தக்கது .
- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 70000ஐ நெருங்குகின்றன

- பொதுமக்களுக்கு பொலிஸ் எச்சரிக்கை

- பள்ளிகளுக்கான இரண்டாம் பருவத் தேர்வு தேதி

- பொலிஸ் அதிகாரி போல வேடமிட்டு மோசடி செய்த மூவர் கைது

- ஏர்பஸ் கையூட்டு விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு

- நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் 31பேர் பலி

- பலத்த காற்றுக்கான வானிலை எச்சரிக்கை

- ஐ நா அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்திய விமல் வீரவன்ச மீதான வழக்கு

- வட சீனாவில் ஏற்பட்ட கடும் வெள்ளம்

- இலங்கையின் மிக வயதான பெண்மணி 114 வயதில் காலமானார்

- டெங்கு பாதிப்பு மாணவருக்கு பாதுகாப்பு ஆடை

- 12 நாட்களில் இலங்கையில் 13,292 டெங்கு வழக்குகள்

தலைக்கவசத்தால் தாக்கப்பட்ட மாணவன் மரணம்
தலைக்கவசத்தால் தாக்கப்பட்ட மாணவன் மரணம்
தலைக்கவசத்தால் தாக்கப்பட்ட மாணவன் மரணம் ரிதீகம – வெலெகெதர – ஷகரலிய வத்த பகுதியில் பாடசாலை உயர் வகுப்பு மாணவர்களால் தாக்குதலுக்கு இலக்காகி, குருணாகல் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மாணவன் ஒருவன் நேற்று உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர், குருணாகலை – புலுவல மகா வித்தியாலயத்தில் 11ஆம் தரத்தில் கல்வி கற்ற திலிண விராஜ் ஆவார்.
கடந்த 16ஆம் திகதி, ரிதீகம – வெலெகெதர – அங்ஹந்திய பகுதியில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வில் பங்கேற்பதற்காக, குறித்த மாணவன் சென்றிருந்தான்.
இதன்போது, அதே பாடசாலையில் சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் குழுவொன்றும், மற்றொரு வெளியாட்கள் குழுவும், தனிப்பட்ட பகைமையை காரணமாக அவனைத் தாக்கியுள்ளனர்.
இதன்போது, தலைக்கவசங்களால் மாணவனின் தலையில் தாக்கப்பட்டதால், அவர் மயக்கமடைந்து, முதலில் மாவத்தகம முதன்மை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக குருணாகலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
எனினும், குருணாகலை வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மாணவன் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தெரியவந்ததும், வெளிநாட்டில் இருந்த திலிணவின் தாய் தற்போது வீட்டிற்கு திரும்பியுள்ளார்.
மாணவனைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதல் நடத்திய அனைத்து சந்தேக நபர்களையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, குருணாகலை – வெலெகெதர பொலிஸ் நிலையத்தின் முன்பாக ஷகரலிய தோட்ட பகுதி மக்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தனர்
கழிப்பறைக்கு முன் பிரசவித்த தாயும் சேயும் மரணம்
கழிப்பறைக்கு முன் பிரசவித்த தாயும் சேயும் மரணம்
கழிப்பறைக்கு முன் பிரசவித்த தாயும் சேயும் மரணம் ,குழந்தை பிறப்பதற்கு ஆறு நாட்களுக்கு முன்பு, அந்த சிசுவை பிரசவித்த தாயும் அவரது குழந்தையும், வீட்டின் கழிப்பறைக்கு முன்னால் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து கிடந்துள்ளனர் என மாளிகாவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர், கொழும்பு 10, மாளிகாவத்தையில் வசிக்கும் இரண்டு குழந்தைகளின் தாயார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இறந்த பெண் வீட்டின் கழிப்பறைக்கு முன்னால் தரையில் முகம் குப்புறக் கிடந்ததாக கணவர் அளித்த வாக்குமூலத்தில் கூறப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அவளுடைய மைத்துனரிடமிருந்து செய்தி வந்ததும்,
அவர்கள் வீட்டிற்குச் சென்று வீட்டைப் சோதித்தனர், அவளுடைய உடலிலும் தரையிலும் அதிக அளவு இரத்தம் இருப்பதைக் கண்டனர்.
இறந்த மனைவியின் வயிற்றில் இருந்த குழந்தை அந்த நேரத்தில் அவரது காலடியில் இருந்ததாகவும், குழந்தை தொப்புள் கொடியை வெட்டாமல் ஒரு துணியில் சுற்றப்பட்டிருந்ததாகவும், மனைவியும் குழந்தையும் முச்சக்கர
வண்டியில் பொரளை பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களைப் பரிசோதித்த பிறகு, அங்குள்ள மருத்துவர்கள், இருவரும் இறந்துவிட்டதாக அறிவித்தனர். இந்த மரணங்கள் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தயிரும் தேன் வளையமும் சாப்பிட்ட குழந்தை மரணம்
தயிரும் தேன் வளையமும் சாப்பிட்ட குழந்தை மரணம்
தயிரும் தேன் வளையமும் சாப்பிட்ட குழந்தை மரணம் ,மொனராகலை, அத்திமலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விலாஓயா பகுதியைச் சேர்ந்த இரண்டு வயதும் ஆறு மாதங்களேயான பெண் குழந்தை கடந்த 7 ஆம் திகதி திடீரென உயிரிழந்ததாக அத்திமலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அன்று மாலை தயிரும் தேன் வளையமும் சாப்பிட்டுவிட்டு தூங்கச் சென்ற அந்தப் பெண் குழந்தை எழுந்திருக்கவில்லை. அம்மா அவளை தூக்கிய போது, அவள் உடல் உயிரற்ற நிலையில் இருப்பதைக் கண்டாள். அவர் பிராந்திய
மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக மொனராகலை மாவட்ட பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.அங்கு சிறுமி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மொனராகலை மாவட்ட பொது மருத்துவமனையின் சிறப்பு தடயவியல் மருத்துவ அதிகாரி லக்மாலி. அத்திமலையின் பதில் பொலிஸ் மா அதிபர் எல்.ஏ. ஜினதாச விசாரணைகளை நடத்தி வருகின்றனர்
இராணுவ சிப்பாய் திடீர் மரணம்
இராணுவ சிப்பாய் திடீர் மரணம்
இராணுவ சிப்பாய் திடீர் மரணம் ,திவுல்வெவ ஏரியில் குளிக்கச் சென்ற இராணுவ வீரர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக கப்புகொல்லாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இறந்தவர் கேகாலையில் வசிக்கும் இஷான் உதய குமார (38) என்ற சிப்பாய் ஆவார், அவர் வவுனியாவில் உள்ள பன்பேமடுவ இராணுவ முகாமில் இணைக்கப்பட்டிருந்தார்.
இந்த சிப்பாய், மேலும் மூன்று சிப்பாய்களுடன், அதே இராணுவ தளத்தில் பணியாற்றும் ஒரு சிப்பாயின் தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக கீழ் திவுல்வேவ பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு வந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இறுதிச் சடங்குகளை வியாழக்கிழமை (27) முடித்துக்கொண்டு இராணுவ முகாமுக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, கீழ் திவுல்வெவ ஏரியில் குளிக்கச் சென்றிருந்தபோது, குறித்த இராணுவ வீரர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கனடா வாகன விபத்தில் பகீரதனும் அவரது 3 வயது மகளும் மரணம்
கனடா வாகன விபத்தில் பகீரதனும் அவரது 3 வயது மகளும் மரணம்
கனடா வாகன விபத்தில் பகீரதனும் அவரது 3 வயது மகளும் மரணம் ,கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் தந்தையும் அவரது மூன்று வயது மகளும் உயிரிழந்துள்ளனர்.
வாகனமொன்றில் மோதுண்டதனால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வாகனத்தில் மோதுண்டு விபத்துக்குள்ளான நிலையில் குறித்த நபர் வாகனத்தை விட்டு கீழே இறங்கி மகளை தூக்கிக் கொண்டு விதியின் மறுமுனைக்கு செல்ல முயற்சித்த போது மற்றும் ஒரு வாகனம் குறித்த இருவர் மீதும் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த மோதல் காரணமாக குறித்த இருவரும் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பின்னர் சிகிச்சைகள் பலனின்றி இருவரும் உயிர் இழந்து விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த வாகன விபத்தில் மூன்று வாகனங்கள் தொடர்பு பட்டியிருந்ததாகவும் ஒரு வாகனத்தின் சாரதி சம்பவ இடத்தை விட்டு தப்பி சென்று விட்டதாகவும் மற்றவர்கள் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எரியும் கலிபோனியா 12பேர் மரணம்
எரியும் கலிபோனியா 12பேர் மரணம்
எரியும் கலிபோனியா 12பேர் மரணம்,அமெரிக்கா தெற்கு கலிபோர்னியாவில் இடம்பெற்று வருகின்ற தொடர்ச்சியான தீ காரணமாக தற்பொழுது 12 க்கு மேற்பட்டவர்கள் மரணமாகி உள்ளதாக தீயணைப்பு படையினர் தெரிவிக்கின்றனர்.
வேகமாக பரவி வருகின்ற இந்த காட்டுத்தீ காரணமாக அதனை அணைக்க முடியாத தீயணைப்பு படையினர் போலீசார் வானூர்திகள் என்பன திணறி வருகின்றன.
பரவி வரும் தீ காரணமாக தற்பொழுது பல வீடுகள் பாதிக்கப்பட்டு அழிந்தும் தீயில் எரிந்தும் காணப்படுகின்ற காட்சிகள் வெளியாகியுள்ளன.
மக்கள் வாழ்விடங்களுக்குள் வேகமாக தீயானது பரவி வருவதால் கலிபோனியா மக்கள் சொல்லென்னா துயரை சந்தித்த வண்ணம் உள்ளனர் .
தொடரும் இந்த பெரும் தீ அனர்த்தம் காரணமாக கலிபோர்னியாவில் பல மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,
அதனை மக்களுக்கு ஈடு செய்கின்ற வகையில் தற்பொழுது அந்த மாநில அரசு செயல்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
கடன் வலையில் சிக்கி 200 பெண்கள் மரணம்
கடன் வலையில் சிக்கி 200 பெண்கள் மரணம்
கடன் வலையில் சிக்கி 200 பெண்கள் மரணம் ,இலங்கையில் கடந்த சில வருடங்களில் நுண்நிதிக் கடன் வலையில் சிக்கிய சுமார் 200 பெண்கள் தங்களது உயிர்களை மாய்த்துக் கொண்டுள்ளதாகத் தேசிய மகளிர் ஒன்றியத்தின் தலைவி ஹாஷினி சில்வா தெரிவித்துள்ளார்.
இந்நாட்டில் 28 இலட்சம் பேர் நுண்நிதிக் கடன் பெறுகின்றனர், அதில் 24 இலட்சம் பேர் பெண்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இலங்கையிலுள்ள நுண் நிதி நிறுவனங்கள் 38 தொடக்கம் 40 சதவீதம் வரை அதிக வட்டிக்கு கடன் வசதிகளை வழங்குவதாகவும், கடனை செலுத்த முடியாத சில பெண்களும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் சில
பிரதிநிதிகளினால் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாவதாகவும் ஹாஷினி சில்வா தெரிவித்துள்ளார்.
இந்நிலைமையினால் குடும்பங்களுக்கிடையில் முரண்பாடுகள் வளர்ந்து பிள்ளைகள் ஆதரவற்றவர்களாக மாறியுள்ளதாகவும், சில பெண்கள் வேலை செய்ய வீட்டையும் நாட்டையும் விட்டு வெளியேறத் தூண்டப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், சிறு நிதி கடன் பிரச்சினையால் கிராமப்புறங்களில் உள்ள பெண்கள் கடுமையான பொருளாதார அழுத்தத்தில் உள்ளனர்.
அவர்களில் பலர் வருமானம் ஈட்டும் வாய்ப்புகள் இல்லாமல், பதிவு செய்யப்பட்ட வங்கிகளில் கடன் பெற முடியாமல் நுண்கடன் நிறுவனங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிறுவனங்கள் வாரத்திற்கு 20 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை அதிக வட்டி வீதங்களுடன் வசூலிக்கின்றன, இதனால் பெண்கள் கடனில் தள்ளப்படுகிறார்கள்.
நுண்கடன் நிறுவனங்களை ஒழுங்குபடுத்தும் சட்டமூலத்தை அரசாங்கம் கொண்டு வந்துள்ள போதிலும், அது இன்னும் சரியாக நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
மூதாட்டி 116 வயதில் மரணம்
மூதாட்டி 116 வயதில் மரணம்
மூதாட்டி 116 வயதில் மரணம் , உலகில் அதிக வயது கூடிய பெண்மணியாக ஜப்பானில் வாழ்ந்து வந்த மூதாட்டி 116 வயதில் தற்பொழுது மரணமாகியுள்ளதாக ஜப்பான் செய்திகள் தெரிவிக்கின்றன.
உலகில் அதிக வயது கூடிய முதலாவது பெண்மணி என்ற பட்டத்தை இவர் தட்டி செல்கிறார்.
உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் தற்பொழுது மரணமான செய்தி உலக மக்கள் மத்தியில் பெரும் துயரை ஏற்படுத்தி இருக்கிறது .
உலகில் அதிக வயது கூடிய இவராக காணப்படுகின்றார் .
இவர் மே மாதம் 23 ஆம் தேதி 1908 ஆம் ஆண்டு பிறந்தவராக காணப்படுகின்றார் .
எதிர் வருகின்ற மே மாதம் இவருக்கு 117 வயதை அடைய முடியதாக அவர் இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவருக்கு பல பேரப்பிள்ளைகள் பூட்டப் பிள்ளைகள் கொள்ளு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் அதிக வயது கூடிய பெண்மணி என்ற பட்டத்தையும் இவர் தக்க வைத்து சென்றிருக்கின்றார்.
இவரது இந்த ரெகோட்டை உடைக்க இனி யார் அதிக ஆண்டுகள் வாழ்ந்து இறக்கப் போகிறார்கள் என்பதுதான் கேள்வியாக இருக்கிறது.
இவரது வாழ் நாள் சாதனையை முறியடிக்க எவராலும் முடியுமா என்கின்ற கேள்வியும் தற்போது எழுப்பப்படுகிறது .
ஹமாஸ் போலீஸ் தளபதி மரணம்
ஹமாஸ் போலீஸ் தளபதி மரணம்
ஹமாஸ் போலீஸ் தளபதி மரணம், பலசீலத்தில் மக்களுக்காக போராடிவரும் ஹவாஸ் மக்கள் காவல்துறையினுடைய தளபதி ஸ்டில் ராணுவ நடத்திய விமான வழி தாக்குதலில் மரணம் ஆகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
என்ற தாக்குதல் இவருடன் தளபதியும் வருடமாகியுள்ளதாக ஸ்டில் படைகள் தெரிவித்திருக்கின்றனர்.
இவர்கள் தங்கி இருந்த மறைவிடம் ஒன்று துல்லியமாக இஸ்ரேல் மொசாட் உளவுத்துறைக்கு கிடைக்கப்பெற்ற நிலையில் , அந்த இடம் மீது நடத்தப்பட்டது அதன் பொழுதே இந்த இருவரும் சம்பவத்தில் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கமாசினுடைய முக்கிய தளபதிகளை இலக்கு வைத்து முற்றாக அந்த அமைப்பை செயல் இழக்க வைக்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு தொடர்ச்சியாகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பலஸ்தீனம் இஸ்ரேலுக்கு இடையில் நீண்டு செல்லும் இந்த யுத்தத்தில் தற்பொழுது பலஸ்தீனம் லெபனான் என்பது முற்றாக துடைத்து அழிக்கப்பட்டு முடக்கப்பட்டு வருகின்ற சம்பவங்கள் இவ்விதமான தாக்குதல் ஊடாக காண முடிகிறது.
இந்திய பிரதமர் மன்மோகன்சிங் மரணம்
இந்திய பிரதமர் மன்மோகன்சிங் மரணம்
இந்திய பிரதமர் மன்மோகன்சிங் மரணம், இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் உடல்நிலை குறைவால் தற்பொழுது வருடமாகியுள்ள வருடமாக உள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் அவர்கள் மரணமானதை அடுத்து தற்பொழுது அவருக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக மக்கள் கூடி வருகின்றனர்.
காங்கிரஸ் சோனியா ஆட்சியில் பிரதமராக பதவியேற்ற மன்மோகன்சிங் அவர்கள் தற்பொழுது 92வது வயதில் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் மிகப்பெரும் பொருளாதார மேதையாக காணப்பட்டார் .இவரது ஆட்சி காலத்திலேயே தமிழீழ விடுதலைப்புலிகள் அந்த மண்ணில் வேரோடு வேராக அழிக்கப்பட்டனர்.
தமிழ் மக்களை அழிப்பதற்கு மூல காரணமாக இருந்த முதலாவது எட்டப்ப இந்திய பிரதமர் சிங் பலியான சம்பவம் தமிழர்கள் மத்தியில் மகிழ்விகளை ஏற்படுத்தி இருக்கின்றது.
எமது மக்களை கொன்றிட ஆயுதம் வழங்கி படுகொலைக்கு உட்படுத்திய சோனியாவுடைய ஆட்சியில் கொன்று குவிக்க மூல காரணமாக விளங்கியவர் இதை மன்மோகன் சிங் ஆகும் .
அவ்வாறான ஒரு நபரே தற்போது பலியாகி உள்ளது ,மக்கள் மத்தியில் ஒருவித மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாகவே தமிழ் மக்கள் பேசிக் கொள்கிறார்கள்.
4பேர் மரணம் திரவ கசிவினால்
4பேர் மரணம் திரவ கசிவினால்
4பேர் மரணம் திரவ கசிவினால் New Hampshire , அமெரிக்காவில் லதார் தினத்தை அடுத்து பகுதியில் நான்கு பேர் கார்பனேட் மொன்ஸ்டர் திரவகசிவினால் பலியாகியுள்ளதாக அமெரிக்கா போலீசார் தெரிவித்துள்ளார்.
சம்பவத்தை அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் பகுப்பாய்வு குழுவினர் பலியானவருடைய சடலங்களை மீட்டு மருத்துவ பகுப்பாய்வுக்கு உட்படுத்தினர் .
இதன்பொழுதே திரவ கசிவு ஏற்பட்டதினால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இந்த திரவம் எவ்வாறு கசிந்தது என்பது தொடர்பில் தற்பொழுது ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன .
இதே திட்டமிடப்பட்ட ஒரு சதியா அல்லது விபத்தினால் ஏற்பட்டதா என்பது தொடர்பாகவே போலீசார் முதற்கட்ட விசாரணங்களை ஆரம்பித்துள்ளனர் .
பாதிக்கப்பட்ட பகுதியில் சடலங்கள் மீட்கப்பட்ட பகுதிகள் தொடர்ந்தும் போலீசார் உடைய வலையத்துக்கள் கொண்டுவரப்பட்டு,
அவை தொடர்ந்து நடக்கப்பட்டு சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக தெரிய வருகின்றது மேற்படி விடயம் பெரும் பரபரப்பை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது .
இராணுவ அதிகாரி மரணம்
இராணுவ அதிகாரி மரணம்
இராணுவ அதிகாரி மரணம், பலாலி இராடுவ முகாமில் கடமையாக்கிய ராஜேந்திர அதிகாரி ஒருவர் மாரடைப்பு காரணமாக மரணித்துள்ளதாக பலாலி இராணுவ முக அமைச்சர்கள் ராணுவ தரப்பு தெரிவித்துள்ளது.
குருநாகலை சேர்ந்த ர முப்பத்தி ஐந்து வயதுடைய ராணுவ அதிகாரியே இவ்வாறு உயிரிழந்தவர் .
இவர் திருமணம் முடித்து இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
மாரடைப்பு காரணமாக மரணமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவரது இழப்பை அடுத்து குடும்பத்தினர் தவித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இலங்கை ராணுவத்தில் அவ்வப்போது பல இராணுவ சிப்பாய்கள் தற்கொலை செய்து வருவதும் விபத்துகளில் பலியாகி வருகின்ற சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.
இது ராணுவத்திற்கு ஏற்பட்ட மன அழுத்தங்களை அல்லது ராணுவ முகாமில் அவர்களுக்கு நடக்கின்ற சில இன்னல்கள் காரணமாக இந்த மரணங்கள் இடம் பெறுகின்றதா என்பதுமாகவே குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது .
இறந்தவர்கள் சடலத்தை தனது குடும்பம் ஒப்படைக்கும் நடவடிக்கை இலங்கை ராணுவ ஈடுபட்டுள்ளதாக அங்கு இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.




















































