யாழில் தீமூட்டி மூதாட்டி தற்கொலை
Posted in இலங்கை செய்திகள்

யாழில் தீமூட்டி மூதாட்டி தற்கொலை

யாழில் தீமூட்டி மூதாட்டி தற்கொலை

யாழில் தீமூட்டி மூதாட்டி தற்கொலை ,யாழில் தீவூட்டி மூதாட்டி தற்கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

உறக்க இன்மை காரணமாக அவதியுற்று வந்த மூதாட்டி

உறக்க இன்மை காரணமாக அவதியுற்று வந்த மூதாட்டி மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் தற்பொழுது தற்கொலை செய்துள்ளார் .

மூதாட்டி தனக்குத்தானே தீ மூட்டி தற்கொலை

வீட்டில் வசித்து வந்த 75 வயது மதிக்க தக்க மூதாட்டிய தனக்குத்தானே தீ மூட்டி தற்கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் அதிகரித்துச் செல்லும் மன அழுத்தம் மற்றும் வாழ்வியல் புறச் சூழல்கள் என்பன, ஒரு மனிதனை பாடா படுத்துகிறது என்பதை இந்த மூதாட்டி உடைய மரணம் எடுத்துக்காட்டுகிறது.

மேற்படி மூதாட்டியின் தற்கொலை சம்பவம் மக்கள் மத்தியில் அச்சத்தையும் பரபரப்புத்தையும் ஏற்படுத்தி உள்ளதுடன் ,இவ்வாறான நிலவரங்கள்

எழுவதற்கான காரணம் என்ன என்பதை அதற்கான தீர்வு என்ன என்பதை இப்பொழுது கேள்வியாக எழுப்பி நிற்கிறது .

பருத்தித்துறையில் மூதாட்டி ஒருவர் அடித்துக் கொலை
Posted in இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் மூதாட்டி ஒருவர் அடித்துக் கொலை

பருத்தித்துறையில் மூதாட்டி ஒருவர் அடித்துக் கொலை

பருத்தித்துறையில் மூதாட்டி ஒருவர் அடித்துக் கொலை ,யாழ். பருத்தித்துறை – தும்பளையில் மூதாட்டி ஒருவர் பொல்லால் தாக்கி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

மாம்பிரம்பற்றை வீதி, தும்பளையில் சகோதரியுடன் வசித்து வந்த செம்பியன்பற்று வடக்கை சேர்ந்த சின்னத்தம்பி குணதேவி (வயது 69) என்ற மூதாட்டியே இத்தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.

வீட்டில் திருடும் நோக்குடன் சென்ற இளைஞரே மூதாட்டியைத் தாக்கி படுகொலை செய்துள்ளார். மேற்படி இளைஞன் பொலிஸாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

குறித்த வீட்டில் சகோதரிகளான இரண்டு மூதாட்டிகள் வசித்து வருகின்றனர். அதில் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (20) காலை உயிர்த்த ஞாயிறு பிரார்த்தனைக்காக தேவாலயத்துக்குச் சென்றுள்ளார். மற்றையவர் வீட்டில் தனிமையில் இருந்துள்ளார்.

அந்நிலையில் இரண்டு மூதாட்டிகளும் தேவாலயத்துக்குச் சென்றுள்ளார்கள் என நினைத்து, அயல்வீட்டு இளைஞர் வீட்டினுள் களவுக்குச் சென்றுள்ளார்.

அவ்வேளை வீட்டில் இருந்த மூதாட்டி இளைஞர் களவில் ஈடுபடுவதை அவதானித்ததை அடுத்து இளைஞர் பொல்லால் மூதாட்டியைத் தலையில் பலமாகத் தாக்கி விட்டு தப்பிச் சென்றுள்ளார். இரத்த வெள்ளத்தில் வீழ்ந்த மூதாட்டி உயிரிழந்தார்.

தேவாலயத்துக்கு சென்ற மற்றைய மூதாட்டி வீட்டுக்கு வந்த போது மூதாட்டி இரத்த வெள்ளத்தில் சடலமாகக் காணப்பட்டதை அவதானித்து அயலவர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அதனையடுத்து அயலவர்கள் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியதை அடுத்து , சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த துடன், சடலத்தை மீட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் அயல் வீட்டு இளைஞரை தும்பளை, மணல் ஒழுங்கையில் வைத்து மடக்கிப் பிடித்தனர்.

கைது செய்யப்பட்ட இளைஞர், கொலைக் குற்றத்தை ஏற்றுக்கொண்டு வாக்குமூலம் வழங்கியுள்ள நிலையில், பருத்தித்துறை பொலிஸார் அவரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மூதாட்டி 116 வயதில் மரணம்
Posted in உலக செய்திகள்

மூதாட்டி 116 வயதில் மரணம்

மூதாட்டி 116 வயதில் மரணம்

மூதாட்டி 116 வயதில் மரணம் , உலகில் அதிக வயது கூடிய பெண்மணியாக ஜப்பானில் வாழ்ந்து வந்த மூதாட்டி 116 வயதில் தற்பொழுது மரணமாகியுள்ளதாக ஜப்பான் செய்திகள் தெரிவிக்கின்றன.

உலகில் அதிக வயது கூடிய முதலாவது பெண்மணி என்ற பட்டத்தை இவர் தட்டி செல்கிறார்.

உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் தற்பொழுது மரணமான செய்தி உலக மக்கள் மத்தியில் பெரும் துயரை ஏற்படுத்தி இருக்கிறது .

உலகில் அதிக வயது கூடிய இவராக காணப்படுகின்றார் .

இவர் மே மாதம் 23 ஆம் தேதி 1908 ஆம் ஆண்டு பிறந்தவராக காணப்படுகின்றார் .

வீடியோ

எதிர் வருகின்ற மே மாதம் இவருக்கு 117 வயதை அடைய முடியதாக அவர் இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவருக்கு பல பேரப்பிள்ளைகள் பூட்டப் பிள்ளைகள் கொள்ளு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் அதிக வயது கூடிய பெண்மணி என்ற பட்டத்தையும் இவர் தக்க வைத்து சென்றிருக்கின்றார்.

இவரது இந்த ரெகோட்டை உடைக்க இனி யார் அதிக ஆண்டுகள் வாழ்ந்து இறக்கப் போகிறார்கள் என்பதுதான் கேள்வியாக இருக்கிறது.

இவரது வாழ் நாள் சாதனையை முறியடிக்க எவராலும் முடியுமா என்கின்ற கேள்வியும் தற்போது எழுப்பப்படுகிறது .

பேத்திக்கு வைத்த குறியில் மூதாட்டி பலி
Posted in இலங்கை செய்திகள்

பேத்திக்கு வைத்த குறியில் மூதாட்டி பலி

பேத்திக்கு வைத்த குறியில் மூதாட்டி பலி

பேத்திக்கு வைத்த குறியில் மூதாட்டி பலி பதவிய, போகஹவெவ பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரினால் நேற்று (5) இரவு வீடொன்றில் வைத்து 73 வயதுடைய பெண் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவரையும் புல்மோட்டை முகாமில் கடமையாற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை

அதிகாரிகள் கைது செய்ததன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் இருவரும் டுபாய் இராச்சியத்தில் மறைந்திருந்து இந்நாட்டில் போதைப்பொருள் வலையமைப்பு மற்றும் குற்றச் செயல்களை வழிநடத்தும்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான வெலிஓய பிரியந்தவின் இரண்டு உதவியாளர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபர்கள் இருவரும் கிரிஹிப்பன்வெவ, வெலிஓயா பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இக்கொலை உட்பட 3 கொலைகளுக்கு பயன்படுத்தப்பட்ட T56 துப்பாக்கி மற்றும் அதன் மெகசின், 08 தோட்டாக்கள், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட

ரிவால்வர் மற்றும் அதன் 04 தோட்டாக்கள், 61 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 105 கிராம் ஹெரோயின் என்பன விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. .

டுபாயில் தலைமறைவாக உள்ள வெலிஓயா பிரியந்தவின் மனைவியுடன் தகாத தொடர்பு வைத்திருந்த ஒருவரைக் கொல்வதற்காகவே மேற்படி கொலைகளில் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் போகஹவெவ பிரதேசத்தில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த கொலையுண்ட

பெண்ணின் பேத்தியை சுடுவதற்காக வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

நிலச்சரிவில் தப்பிய மூதாட்டியை பாதுகாத்த யானைகள்
Posted in உலக செய்திகள்

நிலச்சரிவில் தப்பிய மூதாட்டியை பாதுகாத்த யானைகள்

நிலச்சரிவில் தப்பிய மூதாட்டியை பாதுகாத்த யானைகள்


நிலச்சரிவில் தப்பிய மூதாட்டியை பாதுகாத்த யானைகள் ,வயநாடு நிலச்சரிவின் போது வீட்டை விட்டு தனது கணவர், பேரன் பேத்திகளுடன் வெளியேறி நடுக்காட்டுக்குள் யானைக் கூட்டத்துடன் மாட்டிக்கொண்ட முதாட்டி தொடர்பான சுவாரஸ்ய நிகழ்வை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

“திங்கட்கிழமை இரவு பலத்த மழை பெய்து கொண்டிருந்ததால் எனக்கு அதிகாலை 1.15 மணிக்கு முழிப்பு வந்தது. அப்போது ஒரு பெரிய சத்தம் கேட்டது.

எங்கள் வீட்டிற்குள் திடீரென தண்ணீர் புகுந்தது. நாங்கள் அனைவரும் கட்டில் மீது ஏறி அமர்ந்தோம்.

ஆனால், அடுத்த நிமிடமே பெரிய மரக்கட்டைகள் எங்கள் வீட்டின் மீது முட்டி மோதியது” என தனது அனுபவத்தை கேரள மாநிலம் முண்டக்கை பகுதியைச் சேர்ந்த சுஜாதா சொல்லத் தொடங்குகிறார்.

ஆனால், அதற்கு முன்னதாகவே இந்த பதட்டத்தை உணர்ந்தது கேரளத்தின் வயநாடு பகுதியில் உள்ள சூரல்மலை, மேப்பாடி ஆகிய பகுதிகள்.

கடந்த திங்கள்கிழமை, அதாவது ஜூலை 29ஆம் திகதி இரவுதான், அடுத்த நாள் தாம் சந்திக்க உள்ள இன்னலை அறியாமல் பலர் தூங்கிக் கொண்டிருந்தனர், சிலர் தூங்க தயாராகிக் கொண்டிருந்தனர்.

அந்த நேரத்தில் தொடங்கிய கனமழையில் திடீரென பெரிய இடி விழுந்த சத்தமும் கேட்டது. ஆனால், அது இடி அல்ல. அவை பாறைகள்.

என்ன இது பாறைகள் அடித்து வரப்படுகிறதே? என எண்ணிப் பார்ப்பதற்குள் கண்ணீரில் ஆழ்த்தியது பெருவெள்ளமும், நிலச்சரிவும்.

இதில், சிக்கி இதுவரை 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், 50க்கும் மேற்பட்டவர்களின் உடல்கள் 30 கி.மீ அப்பால் உள்ள நிலம்பூர் பகுதியிலும் கண்டுபிடிக்கப்பட்டது இந்த நிலச்சரிவின் கோர முகத்தைக் காட்டுவதை நம்மால் அறிய முடிகிறது.

ஆனால், இதனிடையே தனது மகள் சுஜிதா, கணவர் குட்டன், பேரன் சூரஜ் (18) மற்றும் பேத்தி மிருதுளா (12) ஆகியோருடன் வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார் சுஜாதா.

அது மட்டுமல்லாமல், இடிபாடுகளில் இருந்து பேத்தி கதறி அழுததைச் சமாளித்து அவளது கையை பிடித்துக்கொண்டு குடும்பத்தில் உள்ள மற்ற மூவரும் வெளியேறி, பாய்ந்தோடும் நீரை கடந்து மலைக்குச் சென்றதாக தனது அனுபவத்தை ஊடகங்களின் வாயிலாக பகிர்ந்தார் சுஜாதா.

“அப்போது பலத்த மழை பெய்தது. மின்சாரம் முழுவதுமாக துண்டிக்கப்பட்டு காடே இருளாக காணப்பட்டது. நாங்கள் நிற்கும் இடத்திற்கு அருகே தூரத்தில் ஒரு காட்டு யானை கூட்டம் இருந்தது. அந்த கூட்டம் எங்களை பார்த்தது.

அதில் கொம்பன் (ஆண் யானையும்) நின்றிருந்தது. பார்க்கவே பயமாக இருந்தது” என இயற்கைப் பேரிடரில் இருந்து தப்பிப்பதற்காக யானையிடம் மாட்டிக் கொண்டோமோ என்ற நினைப்பை நம்முள் வட்டமிட வைத்தார் சுஜாதா.

ஆனால், “பொதுவாக யானைகள் பார்ப்பதற்கு மிகப்பெரிய உருவமாக இருந்தாலும் மிகவும் சாதுவானது. அதனை துன்புறுத்தாத வரை அது மனிதருக்கு துன்பத்தை ஏற்படுத்துவதில்லை” என்கிறார் கோயம்புத்தூர் வன

உயிரின பாதுகாப்பு அறக்கட்டளையின் தலைவர் முருகானந்தம். இவர் கூறியது போலவே அந்த யானைக் கூட்டமும் விடிந்து சுஜாதாவின்

குடும்பத்தைக் காப்பாற்ற ஆட்கள் வரும்வரை காத்திருந்துச் சென்றது என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆனால், அதுதான் உண்மை என்கிறார் கடவுளிடம் பிரார்த்தனை செய்த சுஜாதா.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “நான் யானையிடம் ஒரு வேண்டுகோளை முணுமுணுத்தேன். நான் ஒரு பேரழிவில் இருந்து தப்பித்துவிட்டோம். யாராவது வந்து எங்களை மீட்கும் வரை எங்களை ஒன்றும்

செய்து விடாதே. எங்களை இங்கே இருக்க அனுமதிக்கும்படி அதைக் கேட்டேன். என்னுடைய வேண்டுகோளை ஏற்றுக் கொண்டது போல் தோன்றியது.

நாங்கள் காலை 6 மணி வரை அங்கேயே இருந்தோம். காலையில் சிலர் எங்களை மீட்கும் வரை யானைகளும் அங்கேயே நின்றன. விடிந்ததும் அதன் கண்கள் துளிர்விடுவதைப் பார்த்தேன். அந்த தருணம் சொல்ல முடியாத

அனுபவம்” எனக் கூறும்போதே நம் உடல் மெய்சிலிர்த்து புல்லரிக்கச் செய்கிறது. அதையே, அந்த யானைகளால் தான் நாங்கள் மறு பிறவி பெற்றுள்ளோம் என தங்களது உணர்வுகளாக கொட்டியுள்ளார் சுஜாதா.

மேலும், இதேபோன்று சுனாமி ஏற்பட்ட போதிலும் தாய்லாந்தில் பலரை யானைகள் காப்பாற்றியதாக செய்திகள் வந்தது. அதே போன்று தான் இதையும் பார்க்க வேண்டி உள்ளது. யாராவது ஆபத்தில் இருந்தால் அவர்களை

காப்பாற்றவும் யானைகள் முயற்சி செய்யும், மிகவும் சாதுவான யானைகளை கொடுமைப்படுத்தினாலோ அல்லது அதற்கு துன்பம் கொடுத்தாலோ, அதன் குணம் மாறி மனிதர்களை தாக்குகிறது. எனவே இந்த பேருயிரை பாதுகாக்க

அனைவரும் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என யானையின் குணாதிசியங்களை மனிதர்கள் புரிந்துகொண்டு நடக்க வேண்டும் என்கிறார் முருகானந்தம்.

Posted in உலக செய்திகள்

118 பிறந்த நாளை கொண்டாடிய மூதாட்டி

118 பிறந்த நாளை கொண்டாடிய மூதாட்டி

உலகில் 1903 ஆம் ஆண்டு ஜப்பானில் பிறந்த தனக்கா என்ற

பெண்மணி தனது 118 டாவது பிறந்த தினத்தை கொண்டாடினார்

இவரே உலகில் அதிக வயதான பெண்மணி என்ற கிண்ண

சசாதனையை தற்போது தட்டி சென்றுள்ளார்

இவரது இந்த நிகழ்வை அறிந்த மக்கள் சமுக வலை தளங்கள்

ஊடாக தமது வாழ்த்தினை குவித்து வருகின்றனர்

மூதாட்டி
மூதாட்டி
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

கொரானோ தாக்கி 108 வயது மூதாட்டி பிரிட்டனில் பலி

கொரானோ தாக்கி 108 வயது மூதாட்டி பிரிட்டனில் பலி

பிரிட்டனில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி நூற்றி எட்டு வயது மூதாட்டி ஒருவர் பலியாகியுளளார் .


இவர் பிரிட்டனின் அதிக வயதானவர் என தெரிவிக்க பட்டுள்ளது

1918 ஆம் ஆண்டு பிறந்த இவர் பிரிட்டனின் வயதானவர்களின் முதலிடம் பிடித்து சாதனை படைத்த அவ்வாறான ஒருவரை

இப்பொழுது பிரிட்டன் இந்த நோயின் தாக்குதல் மூலம் இழந்து தவிக்கிறது


இவருக்கு சமுக வலைத்தளங்களில் ஆழ்ந்த இரங்கல்கள் பகிரப்பட்டு வருகிறது

இதுவரை பிரிட்டனில் 1.029 பேர் பலியாகியும் 17,000 பேர் பாதிக்க பட்டுள்ளதும் குறிப்பிட தக்கது


அத்துடன் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன

கொரானோ தாக்கி
கொரானோ தாக்கி