வித்தியாசமாக திருடிய பெண்களுக்கு வலை
Posted in இலங்கை செய்திகள்

வித்தியாசமாக திருடிய பெண்களுக்கு வலை

வித்தியாசமாக திருடிய பெண்களுக்கு வலை

வித்தியாசமாக திருடிய பெண்களுக்கு வலை ,நுவரெலியாவில் இருந்து ஹட்டன் நோக்கி சனிக்கிழமை 11 ஆம் திகதி காலை 7.30 மணிக்கு பயணித்த

அரச பேருந்தில் பயணம் செய்த பெண்

அரச பேருந்தில் பயணம் செய்த பெண் ஒருவரின் 3 பவுன் எடை உள்ள தங்க சங்கிலி ஒன்று களவாடப்பட்டுள்ளது

என திம்புள்ள- பத்தனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஸ்டோனிகிலிப் தோட்ட சிறுவர் காப்பக உத்தியோகத்தரே முறைப்பாடு செய்துள்ளார்.

பேருந்தில் பயணம் செய்து கொண்டு இருந்த போது தனக்கு அருகில் கர்ப்பிணி அமர்ந்திருந்தார்., குழந்தை ஒன்றை வைத்து கொண்டு இருந்த பெண்,

பெண் தனக்கு அருகில் நின்று கொண்டு பயணித்தனர்

மற்றொரு பெண் தனக்கு அருகில் நின்று கொண்டு பயணித்தனர். பேருந்து சற்று பிரேக் செய்த வேளையில் என் மீது இரண்டு பெண்களும் சரிந்துவிட்டனர்.

அந்த மூன்று பெண்களும் டெவோன் பகுதியில் வைத்து பேருந்தில் ஏறி கொட்டகலை அரச வைத்தியசாலை பகுதியில் இறங்கி சென்று உள்ளனர்.

சற்று தூரம் சென்ற பின்னர் தனது கழுத்தில் இருந்த சங்கிலி இல்லாமை தெரிய வந்தது பேருந்தில் இருந்து உடனடியாக இறங்கி முச்சக்கர வண்டி

எடுத்து அப் பகுதியில் தேடியும் அவர்கள் அகப்படவில்லை என தெரியவந்துள்ளது.

அவர்கள் பற்றி விரிவாக தேடுதல் நடவடிக்கையில் பத்தனை பொலிஸார். மேற்கொண்டு வருகின்றனர் மேலும் தற்போது பண்டிகை காலம் என்பதால்

மலையக பகுதிகளில் உள்ள அனைத்து மக்களும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என பத்தனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அறிவுறுத்தியுள்ளார்.

இஸ்ரேலிய அணுசக்தி தளங்கள் ஈரான் வலையில்
Posted in உலக செய்திகள்

இஸ்ரேலிய அணுசக்தி தளங்கள் ஈரான் வலையில்

இஸ்ரேலிய அணுசக்தி தளங்கள் ஈரான் வலையில்

இஸ்ரேலிய அணுசக்தி தளங்கள் ஈரான் வலையில் ,இஸ்ரேலிய அணுசக்தி தளங்கள் குறித்த முக்கியமான தரவுகளை ஈரான் வெளிப்படுத்துகிறது, நிபுணர்கள்

இஸ்ரேலிய ஆட்சியின் அணுசக்தி தளங்கள்

சியோனிச இஸ்ரேலிய ஆட்சியின் அணுசக்தி தளங்கள் மற்றும் விஞ்ஞானிகள் தொடர்பான மூலோபாய மற்றும் முக்கியமான தகவல்கள் மற்றும்

ஆவணங்களை ஈரானிய உளவுத்துறை அமைச்சகம் வகைப்படுத்தியுள்ளது என்று உளவுத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

ஈரானிய உளவுத்துறை அமைச்சகம் மூலோபாய மற்றும் முக்கியமான அணுசக்தி தளங்கள் மற்றும் அறிவியல் பற்றி ஈரானிய உளவுத்துறை பெற்ற

முக்கியமான தரவு மற்றும் ஆவணங்களை வெளிப்படுத்தும் ஒரு நிகழ்ச்சியை தேசிய ஈரானிய தொலைக்காட்சி புதன்கிழமை இரவு ஒளிபரப்பியது.

இந்தத் தரவுகள் மற்றும் ஆவணங்கள் சில மாதங்களுக்கு முன்பு ஜூன் மாதத்தில் ஈரானிய உளவுத்துறையால் பெறப்பட்டன.

ஈரானிய தொலைக்காட்சி

இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜூன் மாதம் ஒளிபரப்பப்பட்ட ஈரானிய தொலைக்காட்சியின் அறிக்கையின்படி, மேற்கூறிய ஆவணங்களைப் பெறுவதற்கான நடவடிக்கை அதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு

மேற்கொள்ளப்பட்டாலும், ஏராளமான ஆவணங்கள் மற்றும் முழு கப்பலையும் நாட்டிற்குள் பாதுகாப்பாக கொண்டு செல்ல வேண்டிய அவசியம் ஆகியவை

செய்திகள் வெளியிடப்படுவதைத் தடுக்க காரணமாக இருந்தன, அவை அனைத்தும் நோக்கம் கொண்ட பாதுகாக்கப்பட்ட இடங்களை அடைவதை உறுதி செய்யும் வரை.

அறிக்கையின்படி, “ஒரு ரகசிய நடவடிக்கையின் போது தரவு சேகரிப்பு பிரித்தெடுக்கப்பட்டது”, மேலும் “ஆவணங்கள், படங்கள் மற்றும் வீடியோக்கள் உட்பட ஏராளமான பொருட்கள்” இதில் அடங்கும்.

ஜூன் மாதத்தில் வெளியான தேசிய தொலைக்காட்சி அறிக்கை, தரவுகள் ஈரானிய அதிகாரிகளால் பாதுகாப்பாக நாட்டிற்கு மாற்றப்பட்ட பின்னர் முழுமையாக மதிப்பாய்வு செய்யப்பட்டதாக முடிவு செய்தது.

இன்றிரவு முன்னதாக தேசிய ஈரானிய தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த புலனாய்வு அமைச்சர் எஸ்மாயில் காதிப், “முன்னர் எதிர்பார்க்கப்பட்ட

தரவுத்தள ஆவணங்களின் வெற்றிகரமான பரிமாற்றம் உளவுத்துறை மற்றும் செயல்பாட்டு நடவடிக்கைகளின் சக்திவாய்ந்த கலவையின் ஒரு பகுதி மட்டுமே” என்று கூறினார்.

கடன் வலையில் சிக்கி 200 பெண்கள் மரணம்
Posted in இலங்கை செய்திகள்

கடன் வலையில் சிக்கி 200 பெண்கள் மரணம்

கடன் வலையில் சிக்கி 200 பெண்கள் மரணம்

கடன் வலையில் சிக்கி 200 பெண்கள் மரணம் ,இலங்கையில் கடந்த சில வருடங்களில் நுண்நிதிக் கடன் வலையில் சிக்கிய சுமார் 200 பெண்கள் தங்களது உயிர்களை மாய்த்துக் கொண்டுள்ளதாகத் தேசிய மகளிர் ஒன்றியத்தின் தலைவி ஹாஷினி சில்வா தெரிவித்துள்ளார்.

இந்நாட்டில் 28 இலட்சம் பேர் நுண்நிதிக் கடன் பெறுகின்றனர், அதில் 24 இலட்சம் பேர் பெண்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இலங்கையிலுள்ள நுண் நிதி நிறுவனங்கள் 38 தொடக்கம் 40 சதவீதம் வரை அதிக வட்டிக்கு கடன் வசதிகளை வழங்குவதாகவும், கடனை செலுத்த முடியாத சில பெண்களும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் சில

பிரதிநிதிகளினால் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாவதாகவும் ஹாஷினி சில்வா தெரிவித்துள்ளார்.

இந்நிலைமையினால் குடும்பங்களுக்கிடையில் முரண்பாடுகள் வளர்ந்து பிள்ளைகள் ஆதரவற்றவர்களாக மாறியுள்ளதாகவும், சில பெண்கள் வேலை செய்ய வீட்டையும் நாட்டையும் விட்டு வெளியேறத் தூண்டப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், சிறு நிதி கடன் பிரச்சினையால் கிராமப்புறங்களில் உள்ள பெண்கள் கடுமையான பொருளாதார அழுத்தத்தில் உள்ளனர்.

அவர்களில் பலர் வருமானம் ஈட்டும் வாய்ப்புகள் இல்லாமல், பதிவு செய்யப்பட்ட வங்கிகளில் கடன் பெற முடியாமல் நுண்கடன் நிறுவனங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

video

இந்த நிறுவனங்கள் வாரத்திற்கு 20 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை அதிக வட்டி வீதங்களுடன் வசூலிக்கின்றன, இதனால் பெண்கள் கடனில் தள்ளப்படுகிறார்கள்.

நுண்கடன் நிறுவனங்களை ஒழுங்குபடுத்தும் சட்டமூலத்தை அரசாங்கம் கொண்டு வந்துள்ள போதிலும், அது இன்னும் சரியாக நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.