Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

பதில் சொல்

பதில் சொல்

இரவுகளை மட்டும்
இரவல் கேட்கிறாய்
இது தான்
இன்றுந்தன் காதலா

உன் இச்சை தீர்ந்ததும்
உதறி போனாயே
காதல் என்ற போர்வையில்
கண்ணீரை ஏன் தந்தாய்

சுகமான காதலை
சுமையாக்கி போனாயே
என்னை கொன்றிட தான்
எமனாகி வந்தாயா

தேடி வந்த போதெல்லாம்
தேய் பிறையை தேய்ந்தேனே
காலாவதி ஆகினேனோ
கழித்து விட்டு போனாய்

03-09-2022

https://www.youtube.com/watch?v=lczTOQYV9t0
தவிக்கிறேன்
Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

உன்னை எண்ணி தவிக்கிறேன் ..!

உன்னை எண்ணி தவிக்கிறேன் ..!

என்ன செய் தாயோ
என்னை ஏங்க வைத்தாயோ
என்னை ஏங்க வைத்தேனோ
என் இதயம் பறித்தாயோ

முன் பனியாய் பின்னிரவில்
முன்னே வாராயோ – நான்
முழு நிலவில் குளித்திட
முழு உலா வாராயோ

எதுகை மோனை எனதாகும் – என்
ஏக்கம் வாங்கு உனதாகும்
படித்து பாரு புதிராகும்
படைக்க முனை விழிப்பாகும்

சந்தம் இல்லா பாட்டுக்குள்ளே
சங்கதி இருக்காதே
அந்தி சாயும் வேளையிலே
ஆள் மனம் தூங்காதே

முத்தம் தரவா முன்னே வரவா
முழு நிலவே பதில் தர வா
நித்தம் வரவா நீளும் இரவா
நினைவில் வைத்திட வா

உன்னை எண்ணி தவிக்கிறேன்
உருகி மெழுகாய் அழுகிறேன்
வின் விட்டு வாராயோ
விழுந்து உடல் தழுவாயோ ..?

வன்னி மைந்தன்
ஆக்கம் 03-01-2022

Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

நான் வாழ நீ வா ..!

நான் வாழ நீ வா ..!

இன்றேவா இதயம்தரவா
இக்கீதம் இசைந்தே இசைக்கவா
இசையே இணைந்தால் இசையாவேன்
இன்றே இணையே இசைவேன்

நீபாட நினைவுக்குள் நீராடா
நிகழ்காலம் நின்றாட
ஓடும்நதியாக ஓடுவேன்
ஓடும்கரை ஓடமாவேன்

நாள்தோறும் நான்வாழ
நீவா நினைவுதா
உன்னை உயிலெழுதி
உயிரே உயிரேதா

சீர்மோனை சீதனமா
சீரிட்டாய் சிக்கனமா
உன்னாலே ஊர்கிறேன்
உள்ளமே உயிராகிறேன்

எந்நாளும் என்நெஞ்சில்
ஏமனமே ஏறியாடு
எனக்காக என்னுயிரே
எந்நாளும் ஏக்கமிடு …!

வன்னி மைந்தன்
ஆக்கம் 10-12-2021

    Posted in Uncategorized

    வென்றுவிட ஒன்று படு

    வென்றுவிட ஒன்று படு

    வென்றுவிட ஒன்று படு …!

    சிங்கள தனி சட்டம் நாட்டினிலே
    சிறுபாண்மை வாடுது வீட்டினிலே
    சில்லறை காவடி தோள்களிலே
    சிலுக்காக ஆடுது வேட்டிகளே

    தன் மானம் இங்கே விற்று விட்டார்
    தமிழரை காலடி வைத்து விட்டார்
    தான் ஒங்க வீட்டை வளர்த்து விட்டார்
    தமிழரே தாமெனே கூவி நின்றார்

    வந்தேறி குந்திட வைத்து விட்டார்
    வலிகளை அள்ளியே வைத்து விட்டார்
    துயர் போக்க இன்று என் செய்வார்
    தூர பார்வை என்று கொள்வார்

    வேங்கைகள் தாமென முழங்கி வந்தார்
    வேரோடு வீரத்தை சாய்த்து விட்டார்
    ஓட்டுக்கு மட்டும் வீடும் வந்தார்
    ஓடமாய் கரை ஏறி ஓடி விட்டார்

    இவர் தான் எங்கள் தலைவர் என்றால்
    இடி மின்னல் இவரை கொல்லாதோ
    இன்றே தமிழர் விழித்து விட்டால்
    இன்றே நல் தீர்வு கிட்டாதோ …?

    வன்னி மைந்தன்
    ஆக்கம் 24-10-2021

      Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

      இவளை எனக்கு தா

      இவளை எனக்கு தா

      உருண்டு வரும் நீரலைகள்
      உன் உடலில் மோதி விழ
      என் உடலோ நடுங்குதடி
      ஏக்கத்தில தவிக்குதடி

      கட்டியணைத்து பேரலைகள்
      கண்ட படி முத்தமிட
      விட்டு உடல் இருப்பவளே
      விடை கூறு என் செய்வேன்

      அங்கமதை தொட்டு விழி
      ஆடை உருவி பார்க்குதடி
      வேர்க்காத என் உதடும்
      வேர்த்து இன்று கொட்டுதடி

      வான் நிலவு அருவியில
      வளைந்து நீராட
      நாள் எழுதி கொடுத்தவரே
      நான் உனக்கு மாலையிட

      தேதி ஒன்று தருவீரா – என்
      சேதி சொல்லி போவீரா
      புகழ் மாலை பாடிடுவேன் – இந்த
      பூவை எனக்கு தருவீரா ..?

      வன்னி மைந்தன்
      ஆக்கம் 22-10-2021

      வன்னி மைந்தன் கவிதைகள்

        Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

        உயிர் பிரியும் மர்மம்

        உயிர் பிரியும் மர்மம்

        ஏ மனிதா உன் உடலில்
        ஏழடுக்கு தோலிருக்கு
        ஓர் அடுக்கு தடுத்து விட்டால்
        ஓர் உயிரும் பிரியாது

        கட்டை விரல் ஊடக
        கடைசி உயிர் பிரிந்திடுமாம்
        கட்டை விரல் கட்டி போடும்
        காரணங்கள் இதுவொன்றாம்

        நாடி பிடித்து பார்த்த பின்னே
        நல்ல மனிதன் செத்தான் என்பார்
        இறந்து விட்டால் கருவிழியோ
        இரண்டாக வெடித்திடுமாம்

        அரவம் மனிதன் தீண்டி விடின்
        அட இரண்டரை மணி முன் பிழைப்பார்
        கவிழ் தும்பை சாறெடுத்து
        காதோடு மூக்கு வழி

        உயிர் பிரியும் மர்மம்

        விட்டு பாரு பிழைத்திருப்பான்
        வீரனாக உயிர்த்தெழுவான் – இல்லை
        ஒற்றை காது உள் புகுந்து மறு காது வடிந்து விடின்
        மரணித்தான் என்பாராம்

        இறந்தவர்கள் மூன்று நாளின்
        இடைவெளிக்குள் உயிர்த்திடுவார்
        அதனாலே மூன்று நாள்
        அவர் உடலை வைத்திருப்பார்

        பண்டைய மருத்துவத்தின்
        பறை சாற்றல் இதில் இருக்கு
        இக்குறிப்பை எடுத்து வைத்து
        இரண்டொருவர் பகிர்ந்து விடு

        விலங்குகள் உயிர் பிழைக்கும்
        விசித்திரம் இதில் இருக்கு
        கானகத்தில் இம் மூலிகையை
        கண்டு உண்டு உயிர் வாழும்

        பார்த்தாயா என் மனிதா
        படைத்தவனின் படையலதை
        வீரப்பன் காட்டில் வாழ்ந்த
        விசித்திரம் இது தானோ ..?

        கடாறிந்த பழங்குடியின
        கை வைத்தியம் இதுவன்றே
        ஏ மனிதா கை கூப்பி
        எமை படைத்தவனை வணங்கி விடு …!

        வன்னி மைந்தன்
        ஆக்கம் 21-10-2021

        வன்னி மைந்தன் கவிதைகள்

          Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

          இன்றே மன்னித்து விடு

          இன்றே மன்னித்து விடு

          வாயோடு வாய் வைத்து
          வந்து வழி பேசி நின்றேன்
          நீயுரைத்த மொழி கேட்டு
          நீர் விழியோடு யான் தவித்தேன்

          ஆறாத என் மொழிகள்
          ஆறாண்டாய் வாட்டியதோ …?
          சுட்டெரிக்கும் வார்த்தை என்றால்
          சூட்டோடே சொல்லி விடு

          வார்த்தையால் உனை கொன்று
          வாழ்வதென்ன வாழ்வோ …?
          வளர் பிறையின் முழு நிலவே
          வாழும் போதே புரிந்து விடு

          திட்டமிட்டு வாயில் வந்து
          திட்டுவது யான் அல்ல
          திட்டங்களை மூழ்கடிக்க
          திரிபுகளாய் வீழ்ந்திருக்கும்

          உச்சி முதல் உள்ளம் வரை
          உயிரே வலிக்குதடி
          பகுத்தறிவை படித்து வைத்து
          பக்குவத்தை நட்ட பின்னர்

          உன்னை வசை பாட
          உயிரே நான் நினைத்ததில்லை
          என் உயிலில் மாற்றமதை
          எண்ணுறவே கண்டு விடு

          எட்டாண்டு உயிர் வாழும்
          என் உடலோ புரிந்து விடு
          இறக்கும் முன்னர் ஒரு முறை
          இன்றே மன்னித்து விடு

          வன்னி மைந்தன்
          ஆக்கம் 19-10-2021

          வன்னி மைந்தன் கவிதைகள்

            Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

            இன்றே இவரை விரட்டு

            இன்றே இவரை விரட்டு

            சுட்டு வீழ்த்தடா பகைவனை – இந்த
            சுட்டு காட்டை ஒழியடா நாட்டிடை
            ஒற்றுமை பேனா தமிழனை – தலை
            ஒடித்து போடடா காட்டிடை

            லட்சங்கள் வீசும் பகைவனின் – கால்
            நக்கியே பிழைக்கும் நாய்களை
            கொத்தியே எறிதல் முறையடா – தமிழ்
            கோடிகள் வாழ்ந்திட புரியடா

            அறத்தினை கொன்றவன் நாட்டிடை
            அண்டியே வைத்தால் தீட்டடா
            வாலாட்டும் இந்த நாய்களால்
            வையத்தில் முளைக்குத்து கேடடா

            வீடே முதலெனே நினைப்பவர் – இன
            விடியலுக்கு வேலியாய் நிற்பவர் – முகத்தில்
            தூவெனெ துப்படா – இந்த
            துரோகியை இன்றே வீழ்த்தடா

            கோபத்தில் களையாய் பொங்கடா
            கொடியோர் செயல் விழ பாயடா
            நாளை தமிழர் ஆளவே
            நம்பிக்கை நட்டு வையடா ….!

            வன்னி மைந்தன்
            ஆக்கம் 18-10-2021

            வன்னி மைந்தன் கவிதைகள்

              Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

              உன்னை காதலிக்கிறேன்

              உன்னை காதலிக்கிறேன்

              குப்பையில கிடந்த என்னை
              குளிப்பாட்டி எடுத்தவளே
              மனிதனாக நட்டு வைத்து
              மறந்தின்று போவதெங்கே ..?

              இதய வங்கியில
              இன் முகத்தை வைத்தேனே
              அங்கமெல்லாம் உனை தொடர
              அன்பே சிறை பட்டனே

              சுட்டெரிக்கும் வெயில் பட்டு
              சுடுகின்ற என் உடலில்
              குளிர்கின்ற உன் நினைவு
              குழந்தை போல் கத்துதே

              தேகமதில் தென்பு தந்து
              தேர்வெழுத வெல்ல வைத்து
              நட்பை நட்டவளே – உனை
              நான் மறந்து போவதுவோ ..?

              எல்லாமும் செய்தவளே
              என் மனதை காணலையோ ..?
              உன்னிடத்தில் வச பட்டேன்
              உள் மனதை புரியலையோ ..?

              வன்னி மைந்தன்
              ஆக்கம் 17-10-2021

              வன்னி மைந்தன் கவிதைகள்

                Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                வீழ்த்தடா அவன் தான் பகைவன்

                வீழ்த்தடா அவன் தான் பகைவன்

                முப்படை தாங்கியே எழுந்தார்
                முன் தினம் விழ நின்றார்
                இப் படை ஆட்சியில் நன்றே
                இடை அடி கழுவி நின்றார்

                குதிரை குண்டி கழுவி – நெய்தலில் (நெடுந்தீவு )
                குலவி வெள்ளைய மகிழ்ந்தான்
                இத்தரை தமிழ் நிலம் எங்கும்
                இது போல் தொடர்நிலை இன்றேன் ..?

                வல்வையில் பிறந்தான் ஒருவன்
                வைத்தொரு போரை செய்தான்
                இப் புவி தமிழன் ஆழ
                இல்லம் வந்து தொழுதான்

                முத்தி பெற்றிட முன்னே
                முன் நிலை அறியா அவனை
                வீழ்த்தினர் கூடி கயவர் – இன்றே
                வீழ்த்தடா அவன் தான் பகைவன் …!

                வன்னி மைந்தன்
                ஆக்கம் 16-10-2021

                வன்னி மைந்தன் கவிதைகள்

                  Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                  வெற்றி நிச்சயம் – இது வேத சத்தியம்

                  வெற்றி நிச்சயம் – இது வேத சத்தியம்

                  தொடரென பகைவர் உடல் விழ-நிலம்
                  தொட்டதை விட்டான் கடல் எழ
                  வன புலி என்றே இவன் எழ
                  வாடினர் பகைவர் விழி அழ

                  நெய்தலின் கரையில் பிறந்தவன் – ஈழம்
                  நெய்திட அன்றே வந்தான்
                  கொடிய வேந்தர் செயல் விழ- சேனை
                  கொடி நாட்டே போர் செய்தான்

                  கடலென தரையென விரிந்தவர்
                  கடுகதி வானிடை ஏறினர்
                  முப்படை தாங்கியே விண்ணிடை
                  முப் போரினை விரித்தனர்

                  அப்படை தளபதி அரியணை
                  அத்தனை வந்ததுமே குந்தினர்
                  எப் படை வந்தும் தோற்றனர் -ஆனையிறவில்
                  எங்களின் மறவரே தரித்தனர்

                  இப்படி புலி பலம் விரித்தவர் – ஈற்றில்
                  இப்படி விழும் படி சிரித்தனர்
                  இப்பகை வீழ்த்தியே வென்றிடும்
                  இப் புகழ் நிலை விடியலிடும் …!

                  வன்னி மைந்தன்
                  ஆக்கம் 11-10-2021

                  வன்னி மைந்தன் கவிதைகள்

                    Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                    அழுகுரல் கேட்கிறதா

                    அழுகுரல் கேட்கிறதா

                    அந்தி பொழுதில் நந்தி கடலில்
                    அழுகுரல் கேட்கிறதா?
                    அவல சாவின் ஆவிகளின்
                    ஆத்மா துடிக்கிறதா

                    ஓடிவந்தவர் கூடி நின்றவர்
                    ஒரு நொடி வீழ்ந்தனரே
                    ஓடி வந்த கந்தக கூண்டில்
                    ஓர் நூறாய் கிழிந்தனரே

                    பகைவர் விட்டு பாவிகள் கொன்றீர்
                    இது தான் படையெடுப்போ ..?
                    பகலும் இரவும் மாறி வரும்
                    பகைமை உணர்வீரா

                    ஒரு நொடி எங்கள் தமிழர் விழித்தல்
                    ஓடிடும் பகைமைகளே
                    ஒரு நாள் எங்கள் அவலம் தரிப்பீர்
                    ஓடி அழுவீரே

                    விதைத்தவன் வினையை
                    விரைவில் அறுப்பான்
                    விளைச்சல் இது தானே – இந்த
                    விபரம் தெரிவானே

                    எங்கள் மண்ணிலே எம்மை அழித்தவன்
                    எப்படி வாழ்ந்திடுவான்..?
                    ஏதடா மனிதா நீயெல்லாம் தமிழனா
                    எப்போ வெடித்திடுவாய்..?

                    வன்னி மைந்தன்
                    ஆக்கம் 10-10-2021

                    வன்னி மைந்தன் கவிதைகள்

                      Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                      இதை சொல்ல உன்னால் முடியுமா

                      இதை சொல்ல உன்னால் முடியுமா

                      இன்றே உலகம் படித்து விட
                      இணையம் வந்திடவா
                      எதிரி அந்த பகைவன் கொலையை
                      எழுதி வைத்திடவா

                      அதிர்வில் ஓடி அந்தபுரத்தை
                      அலசி வந்திடவா
                      சூரியன் ஓடி வாசல் வந்திட -சத்தி
                      சுழற்றி கூட்டிடவா

                      விண்ணில் ஏறிய தமிழ் விண்ணின்
                      விடு கதை சொல்லிடவா
                      அத்தனை கொள்ளையர் ஒன்றாய் கூடிய
                      ஐ பீ சி கொழுத்திடவா

                      ஆதவன் அன்றே ஆடி நின்றார்
                      ஆயுள் முடிந்ததுவோ ..?-அட டா
                      நெருப்பில் வீழ்ந்து நெறியை கொன்ற
                      நேர்த்தி இவர் அல்லவா

                      காலை கதிரில் மாலை மலரில்
                      கண்ணீர் கதையல்லவா – நீ
                      வடையுடன் கேசரி வாயில் அவிக்கும்
                      வீர கேசரியா

                      இதை சொல்ல உன்னால் முடியுமா

                      மனிதம் இல்லா மனிதன் அறிவில்
                      மறதி முதல் அல்லவா
                      பதிவு செய்தி பதியா மருவும்
                      பகலவன் இவர் அல்லவா

                      லங்காசிறியின் லட்சிய நெருப்பில்
                      லட்சங்கள் பார்த்துவிடு
                      இறந்தவர் நாளில் பணத்தை அள்ளும்
                      இழிநிலை செப்பிவிடு

                      புதின பலகையில் சங்கதி ஏறி
                      புதினம் தந்திடுமா ..?
                      தேனியில் ஏறி கூடு கட்டி
                      தேன் வலம்புரி வந்திடுமா ..?

                      யாழில் ஏறி அதிரடி ஓட -புது
                      யாழ் பிறந்திடுமா ..?
                      உதயனில் ஓடி தினக்குரல் பாட
                      உதயம் பொங்கிடுமா ..?

                      இதுவரை படித்ததில் எத்தனை இணையம்
                      இன்றே எண்ணிவிடு
                      இந்த துணிவு எவருக்கு வரும்
                      இருந்தால் சொல்லி விடு …!

                      வன்னி மைந்தன்
                      ஆக்கம் 09-10-2021

                      வன்னி மைந்தன் கவிதைகள்

                        Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                        ஓடும் அந்த அருவி பக்கம்

                        ஓடும் அந்த அருவி பக்கம்

                        ஓடம் காத்திருந்தேன்
                        நீ வருவாயென பார்த்திருந்து
                        நிமிடங்கள் தொலைத்து நின்றேன்
                        அருவி பாடிய ஓசையில – உன்

                        ஆடல் கேட்கவில்லை
                        அந்த வேளையில் கண்ணுறக்கம்
                        அன்பே தெளியவில்லை
                        மூணு நாளா எடுத்து வைத்த

                        முன்னோட்டம் கரைந்திருச்சு
                        ஆள் மனதில் முளத்த ஆசை
                        ஆற்று மண்ணா கரைந்திருச்சு
                        உன் மீது குற்றமிட

                        உண்மையில் முடியவில்லை
                        உள்ள வேதனை மறைத்துவிட
                        உருளும் விழிக்கு தெரியவில்லை
                        நான் வரைந்த ஓவியத்தின்

                        நனையும் மையா நீயிருந்தாய்
                        உனை வரைய எனை வைத்து- நீ
                        ஊமையாகி ஏன் போனாய் …?

                        வன்னி மைந்தன்
                        ஆக்கம் 08-10-2021

                        வன்னி மைந்தன் கவிதைகள்

                          Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                          எப்படி வாழ்வில் உயர்வாய்

                          எப்படி வாழ்வில் உயர்வாய்

                          மெல்லிய அலைகள் ஓடி விழ- வயலில்
                          மெலிந்த கடலலை ஆடி எழ
                          இரட்டை எருதுகள் கால் விழ
                          இங்கொரு துயர் முளை எழ

                          உழவு செய்வான் விவசாயி – இந்த
                          உயர் வதை செய்வான் அவன் பாவி
                          எருதை வதைத்தால் உயர்ந்திடுமா – உன்
                          வாழ்வில் ஏற்றம் வந்து பிறந்திடுமா ..?

                          முக்கி வதங்கி மூச்சடக்கி
                          முக்கால் வயிறு பசியடக்கி
                          முன்னே வாயால் நுரை தள்ள
                          முன்னே தன் பலம் அது தள்ள

                          அரை ஏக்கர் உளவு
                          அன்றைய தினம் பிளவு
                          ஓய்வு என்பது ஒரு மணிதான்
                          ஓல வாழ்வு அனுதினம் தான்

                          மதத்தில் சைவம் என்பானே
                          மாதா மாட்டை மிதிப்பானே
                          இப்படி வதைகள் இவர் விதைத்தால்
                          எப்படி வாழ்வில் உயர்வு வரும் …!

                          வன்னி மைந்தன்
                          ஆக்கம் 07-10-2021

                          வன்னி மைந்தன் கவிதைகள்

                            Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                            நீ தமிழனா

                            நீ தமிழனா

                            தென் திசை பகைவர் வந்தார் – பெரும்
                            செந்தமிழ் திசை எங்கும் கொன்றார்
                            வண்டமிழ் எழுச்சியில் தீங்கார் – கூடி
                            வழியில் பெரும் சதி செய்தார்

                            விண்ணிலே ஏறி ஆடி – தமிழ்
                            வீரம் உலகில் சொன்னார்
                            வேள்வியை இடையிலே கொய்தார் – இந்த
                            வேளையில் தமிழர் கொதித்தார்

                            போரிலே வென்றிட வேண்டும்
                            பெரும் பலம் ஆளணி என்றார்
                            வரும் பகை வழியில் எய்தே
                            வாழ்வோம் நலமுடன் என்றார்

                            நீ தமிழனா

                            செய் நெறி வாய்மை கேளார்
                            செந்தணலாகி கொதித்தார்
                            வந்தனர் பகைவர் வாயில் – இன்றோ
                            வாளை சுருட்டி கொண்டார்

                            எம் தமிழ் வாயே எங்கோ – இன்றே
                            ஏறி பறையடி அங்கே
                            வந்தனர் பகைவர் வாயில் -கை
                            வாழ்த்தியே தொழுதாய் நன்றோ ..?

                            முன் தினம் வீரம் எங்கே
                            முரசொலி தமிழ் எங்கே
                            விண் புகழ் ஏறிய வீரம்
                            வீரரை கொய்தாய் நன்றோ ..?

                            எம் தமிழ் மானம் இன்றோ
                            எமனவன் காலில் நன்றோ
                            இது தான் தமிழ் நில பண்போ
                            ஏதடா நீயெல்லாம் தமிழோ ..?

                            வன்னி மைந்தன்
                            ஆக்கம் 06-10-2021

                            வன்னி மைந்தன் கவிதைகள்

                              Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                              உண்மை சொல்

                              உண்மை சொல்

                              மூச்சு முட்ட மூச்சு முட்ட
                              முன்னே வந்து நிற்கிறாய்
                              முத்தத்தாலே உன்னை தைக்க
                              முன்னே ஏனோ ஊந்துறாய் ..?

                              ஆலயத்தின் சாமிகளாய்
                              ஆடை இன்றி நிற்பதா ..?
                              இயற்கை தந்த பேரழகை
                              இயமனுக்கே விற்பதா ..?

                              ஆசைகளை தூண்டி விட்டு
                              அருகில் வந்து இரசிக்கிறாய்
                              அந்தரத்தில் தவிக்க விட்டு – ஏன்
                              ஆராத்தி எடுக்கிறாய் ..?

                              கலைந்து போன கூந்தலில்
                              கை வைத்து போனது யார்
                              கட்டி வைத்த பேரழகை
                              கடத்தி இன்று விற்றது யார் ..?

                              விற்பனைக்கு சந்தையில
                              விண்ணிலவை வைத்தது யார் ..?
                              விவரமாக சொல்லி விடு
                              விசாரணைக்கு வருகிறேன் …!

                              வன்னி மைந்தன்
                              ஆக்கம் 05-10-2021

                              வன்னி மைந்தன் கவிதைகள்

                                Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                                தமிழர் வாழ இவர்கள் வருவார்களா

                                தமிழர் வாழ இவர்கள் வருவார்களா

                                சோழ பரம்பரை ஆண்ட கடலினுள்
                                வேங்கை படை இல்லையா ?
                                கரிகாலன் ஆண்ட பூமியில்
                                காக்கை வன்னியரா

                                கொல்லி வைத்தவன் குடிமனை புகுந்து
                                கொள்கை சொல்லிடவோ
                                அள்ளி வைத்தவர் ஆக்கினை புரிந்தவர்
                                அரியணை ஆண்டிடவோ

                                செந்தமிழ் பாடியே ஆடிய புலவர்
                                செம்மண் மிதிபடவோ
                                வந்தேறி ஆரியர் வழங்களை சுரண்டி – தமிழ்
                                வம்சம் அழிப்பதுவோ

                                கந்தக தீயில் வெந்திட இலங்கா
                                கலகம் பிறந்திடுமா
                                கொன்றவன் வாயிலில் கொலைகள் வீழ்ந்திட
                                கொடும் பகை தகர்ந்திடுமா

                                வான் படை காவியே வானில் ஏறிய
                                வரி புலி வந்திடுமா ?
                                வரும் தளிர் செழித்திட மொழியும் விழித்திட
                                வாயில் வந்திடுமா ..?

                                வன்னி மைந்தன்
                                ஆக்கம் 24-09-2021

                                வன்னி மைந்தன் கவிதைகள்

                                  Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                                  ஆண்கள் பெறுமை இழந்தால் -இது நடக்கும்

                                  ஆண்கள் பெறுமை இழந்தால் -இது நடக்கும்

                                  கற்புக்கு பெண் என்று சொல்லாதே
                                  காசிற்கு விற்கிறார் மறக்காதே
                                  உவமைக்கும் இவரை காட்டாதே -இந்த
                                  ஊத்தையில் கண்ணை வைக்காதே

                                  பேருக்கு ஆனாய் இருக்காதே – இந்த
                                  பேரிடரை பெண்ணுக்கு வழங்காதே
                                  தன் பசி போக்க என் செய்வாள்
                                  தன்னிடம் உள்ளதை விற்கிறாள்

                                  கற்பிற்கு விலை வைக்கும் கறையானே
                                  கண்ணீரை உறிஞ்சும் உதையோனே
                                  வெப்பத்தை தூவி போகாதே – இந்த
                                  வேட்கையில் பெண்ணை நீ கொல்லாதே

                                  பூலன் தேவியாய் ஆக்காதே – இவள்
                                  புலியாகி எழுவாள் மறக்காதே
                                  எதை வந்து சொன்னாலும் ஏற்கேனே
                                  ஏளன பெண்ணை மிதிப்பேனே

                                  சிந்திக்கும் ஆற்றலை இழந்தாளை
                                  சிந்தைக்குள் வைக்க முனையாதே
                                  பானைக்குள் புகுந்த அகப்பைகள்
                                  பாதியில் முறியும் மறவாதே

                                  ஆண்கள் பெறுமை இழந்தால் -இது நடக்கும்

                                  தோன்றுதல் பிறந்திட வேண்டும் என்றால்
                                  தோலுக்குள் புகுந்திட வேண்டும்
                                  அணைத்து பால் மலர்ந்திட வேண்டும் என்றால் – இந்த
                                  ஆகமம் நடந்திட வேண்டும்

                                  எதை வந்து சொன்னாலும் எற்கேனே
                                  இந்த இழிசாதி பெண்ணை நம்பேனே
                                  ஆணை கொல்லும் எமன் என்பேன்
                                  ஆக்கினை இந்த பெண் என்பேன்

                                  நூற்றுக்கு 90நூறு இழிவென்பேன்
                                  நுண்ணறிவில்லா மலடென்பென்
                                  ஆண்கள் பெறுமை இழந்துவிடின்
                                  அத்தனை குடும்பமும் இரண்டென்பேன் ..!

                                  வன்னி மைந்தன்
                                  ஆக்கம் 19-09-2021

                                    Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                                    எங்கள் தலைவிதி

                                    எங்கள் தலைவிதி

                                    இளம் காற்று பாடும் ஈழ கரையோரம்
                                    இதயங்கள் நொறுங்கும் சோக துயரம்
                                    எவர் செய்த சதியோ இத்துயர் கோலம்
                                    எங்களின் வாழ்வில் ஏனோ இப் பாரம்

                                    கரும்புகை ஏறி வானை மறைக்கும்
                                    கந்த துகளில் மூச்சு உறையும்
                                    வெடியோசை மண் கிளற வீழ்ந்தே இறந்தோம்
                                    உடன் இருந்தார் விட்டே ஊர் ஏறி கடந்தோம்

                                    வலியில் நெஞ்சு வாடி தவிக்க
                                    வழி தெரியா நின்றோம்
                                    உரிமை போரும் முடிவில் தவிக்க
                                    உதவுவார் இன்றி ஏங்கி தவித்தோம்

                                    தரணியில் நாங்கள் பிறந்தது கேடா
                                    தமிழனாய் இங்கு வாழ்தல் பிழையா
                                    சுதந்திரம் கேட்டோல் சூடு காடா
                                    சுதந்திர தேசமே நீதி இல்லையா

                                    மொத்த தமிழன் அழித்தான் உலகில் நடக்கிறான்
                                    ஒட்டு துணி இல்லா தமிழன் தவிக்கிறான்
                                    இத்துயரில் தினமும் எங்களின் தேசம்
                                    இதயம் இல்லா நடக்கும் உலகம்..!

                                    வன்னி மைந்தன்
                                    ஆக்கம் 25-03-2021