Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

நன்றி உனக்கு

நன்றி உனக்கு

நேற்றெந்தன் அகவையில
நேர் வந்த இளங்கிளியே
நீயுரைத்த வாழ்த்தொன்றால்
நிமிடங்கள் பேசுதடி

நாள் தோறும் அகவையில
நீ வந்து வாழ்த்திவிடு
நான் வாழ நீ தானே
நலமுடனே வாழ்த்து இடு

உன்போல உறவொன்றை
உயிரே நான் காணவில்லை
உள்ளத்தில் நீ இருக்க
ஊந்துகணை பயமில்லை

கரை பதிந்த அலை தடத்தை
காற்றே அழித்திடுமோ ..?
காயா நினைவலையை
கறையான் புற்று அரித்திடுமோ …?

ஓயாத அலை ஒன்றாய்
ஒலிக்கின்றாய் நெஞ்சுக்குள்
வரலாற்று சமரதுவாய்
வாழ்கின்றாய் நெஞ்சுக்குள்

குடாரப்பு தரையிறக்கம்
குழி தோண்டிய முற்றுகையாய்
வெறி கொண்ட வெற்றி ஒன்றாய்
வெளிச்சத்தை நீ தந்தாய் …!

  • வன்னி மைந்தன் ( ஜெகன் )
    ஆக்கம்-11-03-2021
  • வன்னி மைந்தன் கவிதைகள்

    Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

    சிரிக்கும் ….வாழ்வு ….!

    சிரிக்கும் ….வாழ்வு ….!

    சந்தன மேனி வெந்தணல் வேக
    சாலையில் போகுதடி ….
    சாளரம் வைத்த சட்டை மாட்டி-
    சர வெடி போடுதடி-

    ஆளை அள்ளும் புயலும் கிள்ள
    அந்தோ நெளியுதடி ….
    ஆடவர் கண்கள் மேனியில் துள்ள
    அடி வாங்கியே மாயுதடி …

    கூடு உடைத்து கறைவைகள் ஓட
    கூடுது வீதிகளே ….
    கூட்டியே அள்ளிட – பார்த்தே
    கூடுது சதிகளே ….

    ஏங்கி சாகும் வேருக்கின்று
    ஏக்கம் புரியாது .
    ஏறி பறக்கும் சீட்டுக்கின்று – இந்த
    ஏக்கம் தெரியாது ….

    அடி வாங்கி நொந்து
    அழுகையில் தானே அவலம் புரிகிறது- இப்போ
    அழுது புலம்பி என் கண்டாய்
    அட வாழ்வு சிரிக்கிறது ….!

    வன்னி மைந்தன் – ( ஜெகன் )
    ஆக்கம் -24/02/2019