என் உயிரே நான் வெல்வேன்
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

என் உயிரே நான் வெல்வேன்

என் உயிரே நான் வெல்வேன்

இராத்திரியில் தூக்கத்தை
இராத்திரியில் பறிப்பவளே
இரா பகலா என்னையே
ரணகளம் ஆக்கியவளே

கவிதையில் எனை துளைத்து
கவிதை படைத்தாயோ
கவிதைக்கு சாதனையாய்
கவி புலமை தரித்தாயோ

விழிக்குள்ளே எனை வைத்து
விழியாலே கொல்கின்றாய்
விளையாட்டாய் பா குழைத்து
விளையாடல் செய்தாயோ

எது வந்து சொன்னாலும்
ஏற்களையே நான் தானே
என் மனதை வதை செய்து
ஏன் என்னை காயமிட்டாய்

உன் வலையில் நான் விழுந்து
உயிரை மாய்ப்பேனா
என் நிலவை நான் மறந்து
என் உயிரை எரிப்பேனா

விதி வந்து விளையாட
விதியிலே வீழ்வேனா
எதை வந்து செய்தாலும்
என் உயிரே நான் வெல்வேன் .

ஆக்கம் – 15-05-2025
வன்னி மைந்தன்

5 கட்சிகளுக்கு வன்னியில் ஆசனம்
Posted in இலங்கை செய்திகள்

5 கட்சிகளுக்கு வன்னியில் ஆசனம்

5 கட்சிகளுக்கு வன்னியில் ஆசனம்

5 கட்சிகளுக்கு வன்னியில் ஆசனம் ,0 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் வன்னி மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன்படி, வன்னி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

தேசிய மக்கள் சக்தி (NPP)- 39,894 வாக்குகள் (2 ஆசனங்கள்)
ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 32,232 வாக்குகள் (1 ஆசனம்)


இலங்கை தமிழரசு கட்சி (ITAK)- 29,711 வாக்குகள் (1 ஆசனம்)
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA)- 21,102 வாக்குகள் (1 ஆசனம்)
இலங்கை தொழிலாளர் கட்சி (SLLP) – 17,710 வாக்குகள் (1 ஆசனம்)

Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

தமிழன் அழிந்த நாள் ….!

தமிழன் அழிந்த நாள் ….!

நந்தி கடலே நந்தி கடலே
நீயும் அழுவதா
நித்தம் குமுறி மடிவதா – நீயும்
நித்தம் குமுறி மடிவதா

ஆண்டு பல ஆகிப் போச்சு
ஆனாலும் என்ன ஆச்சு
உலகம் எல்லாம் பொய்யா போச்சு – எங்கள்
உணர்வுகளும் செத்து போச்சு

வல்லரசு ஆதிக்கம் தான்
வாலாட்டுது எங்கும் தான்
பலம் இழந்தால் இழிவாச்சு
பாதணியாய் கிழிவதாச்சு

படு கொலையை புரிந்தாரை
பாடையிலே ஏற்றலையே
தீர்ப்பெழுத மறந்தவரே
தீர்வென்ன கூறாயோ

ஆதிக்க இன வெறியான்
அரசாண்டு மகிழ்வதுவோ
இனம் அழித்தான் இனவெறியன்
இன்றாழ விடுவதுவோ

முள்ளிவாய்க்கால் முடிவிற்கு
முன் தீர்ப்பு எழுதிவிடு
நாம் வாழும் நாடொன்றை
நலமுடனே தந்து விடு …!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 14-05-2022

வன்னி மைந்தன் கவிதைகள்

    Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

    நான் வாழ நீ வா ..!

    நான் வாழ நீ வா ..!

    இன்றேவா இதயம்தரவா
    இக்கீதம் இசைந்தே இசைக்கவா
    இசையே இணைந்தால் இசையாவேன்
    இன்றே இணையே இசைவேன்

    நீபாட நினைவுக்குள் நீராடா
    நிகழ்காலம் நின்றாட
    ஓடும்நதியாக ஓடுவேன்
    ஓடும்கரை ஓடமாவேன்

    நாள்தோறும் நான்வாழ
    நீவா நினைவுதா
    உன்னை உயிலெழுதி
    உயிரே உயிரேதா

    சீர்மோனை சீதனமா
    சீரிட்டாய் சிக்கனமா
    உன்னாலே ஊர்கிறேன்
    உள்ளமே உயிராகிறேன்

    எந்நாளும் என்நெஞ்சில்
    ஏமனமே ஏறியாடு
    எனக்காக என்னுயிரே
    எந்நாளும் ஏக்கமிடு …!

    வன்னி மைந்தன்
    ஆக்கம் 10-12-2021

      Posted in இலங்கை செய்திகள்

      தமிழர் பகுதிகளில் புதிய இராணுவ சோதனை சாவடிகள் – தாக்கிட முயற்சி – சிறிதரன்

      தமிழர் பகுதிகளில் புதிய இராணுவ சோதனை சாவடிகள் – தாக்கிட முயற்சி – சிறிதரன்

      இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்த சிங்கள பேரினவாத அரசு


      வீதிகளில் இராணுவ காவலரண்கள் அமைத்து இராணுவம் குவிக்க பட்டுள்ளது

      போர் வெறியுடன் தமிழர்களை அடக்கியாளும் நிலையில் சிங்கள பவுத்த

      இனவெறி இராணுவம் வீதியில் குவிக்க பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கவுரவ ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்

      போர் குணங்களுடன் ,போர்கால பகுதியில் எவ்விதம் நாட மாடினார்களோ

      அதே போன்ற செயலுடன் இராணுவம் வீதிகளில் இறக்கிவிட பட்டுள்ளது ,

      அனைவரும் புது முகங்கள் ,எனவும் தமது வாகனங்களை சோதனை செய்திட

      இராணுவத்தினர் தம்மை தாக்காத குறையாக அவர்கள் பார்வை மற்றும் உடல் அசைவுகள் இருந்ததாக தெரிவித்துள்ளார்

      மக்களினால் தெரிவு செய்ய பட்ட ஒரு பாரளுமன்ற உறுப்பினருக்கே இவ்வாறான

      நிலை என்றால் சாதாரண மக்களுக்கு எவ்விதம் என்பதை மக்கள் புரிந்து கொள்ள முடியும் ,இது தான் இன்றைய இலங்கை