தமிழர் வாழ இவர்கள் வருவார்களா

Spread the love

தமிழர் வாழ இவர்கள் வருவார்களா

சோழ பரம்பரை ஆண்ட கடலினுள்
வேங்கை படை இல்லையா ?
கரிகாலன் ஆண்ட பூமியில்
காக்கை வன்னியரா

கொல்லி வைத்தவன் குடிமனை புகுந்து
கொள்கை சொல்லிடவோ
அள்ளி வைத்தவர் ஆக்கினை புரிந்தவர்
அரியணை ஆண்டிடவோ

செந்தமிழ் பாடியே ஆடிய புலவர்
செம்மண் மிதிபடவோ
வந்தேறி ஆரியர் வழங்களை சுரண்டி – தமிழ்
வம்சம் அழிப்பதுவோ

கந்தக தீயில் வெந்திட இலங்கா
கலகம் பிறந்திடுமா
கொன்றவன் வாயிலில் கொலைகள் வீழ்ந்திட
கொடும் பகை தகர்ந்திடுமா

வான் படை காவியே வானில் ஏறிய
வரி புலி வந்திடுமா ?
வரும் தளிர் செழித்திட மொழியும் விழித்திட
வாயில் வந்திடுமா ..?

வன்னி மைந்தன்
ஆக்கம் 24-09-2021

வன்னி மைந்தன் கவிதைகள்

    Leave a Reply