எங்கள் தலைவிதி

Spread the love

எங்கள் தலைவிதி

இளம் காற்று பாடும் ஈழ கரையோரம்
இதயங்கள் நொறுங்கும் சோக துயரம்
எவர் செய்த சதியோ இத்துயர் கோலம்
எங்களின் வாழ்வில் ஏனோ இப் பாரம்

கரும்புகை ஏறி வானை மறைக்கும்
கந்த துகளில் மூச்சு உறையும்
வெடியோசை மண் கிளற வீழ்ந்தே இறந்தோம்
உடன் இருந்தார் விட்டே ஊர் ஏறி கடந்தோம்

வலியில் நெஞ்சு வாடி தவிக்க
வழி தெரியா நின்றோம்
உரிமை போரும் முடிவில் தவிக்க
உதவுவார் இன்றி ஏங்கி தவித்தோம்

தரணியில் நாங்கள் பிறந்தது கேடா
தமிழனாய் இங்கு வாழ்தல் பிழையா
சுதந்திரம் கேட்டோல் சூடு காடா
சுதந்திர தேசமே நீதி இல்லையா

மொத்த தமிழன் அழித்தான் உலகில் நடக்கிறான்
ஒட்டு துணி இல்லா தமிழன் தவிக்கிறான்
இத்துயரில் தினமும் எங்களின் தேசம்
இதயம் இல்லா நடக்கும் உலகம்..!

வன்னி மைந்தன்
ஆக்கம் 25-03-2021

    Leave a Reply