ஓடும் அந்த அருவி பக்கம்

Spread the love

ஓடும் அந்த அருவி பக்கம்

ஓடம் காத்திருந்தேன்
நீ வருவாயென பார்த்திருந்து
நிமிடங்கள் தொலைத்து நின்றேன்
அருவி பாடிய ஓசையில – உன்

ஆடல் கேட்கவில்லை
அந்த வேளையில் கண்ணுறக்கம்
அன்பே தெளியவில்லை
மூணு நாளா எடுத்து வைத்த

முன்னோட்டம் கரைந்திருச்சு
ஆள் மனதில் முளத்த ஆசை
ஆற்று மண்ணா கரைந்திருச்சு
உன் மீது குற்றமிட

உண்மையில் முடியவில்லை
உள்ள வேதனை மறைத்துவிட
உருளும் விழிக்கு தெரியவில்லை
நான் வரைந்த ஓவியத்தின்

நனையும் மையா நீயிருந்தாய்
உனை வரைய எனை வைத்து- நீ
ஊமையாகி ஏன் போனாய் …?

வன்னி மைந்தன்
ஆக்கம் 08-10-2021

வன்னி மைந்தன் கவிதைகள்

    Leave a Reply