Posted in இலங்கை செய்திகள்

50 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று

50 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு ,தேசிய வளி மண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப்பிரிவால் வெளியிடப்பட்டது.

2022 செப்டம்பர்12ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு

2022 செப்டம்பர்12ஆம் திகதிஅதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது

நாட்டின் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

50 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று

நாட்டின்ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்தியமலை நாட்டின் மேற்கு சரிவுப்பகுதிகளிலும் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ
மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

    Posted in இலங்கை செய்திகள்

    கண்டி மாவட்டத்தில் 14 மணிநேர நீர் விநியோகத்தடை

    கண்டி மாவட்டத்தில் 14 மணிநேர நீர் விநியோகத்தடை

    கண்டி மாவட்டத்தில் சில பகுதிகளில் நாளை ,14 மணிநேர நீர் விநியோகத்தடை அமுலாகும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

    கட்டுகஸ்தோட்டவில் அமைந்துள்ள கண்டி நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் திருத்த வேலைகள் காரணமாக நாளை 13ஆம் திகதி (13.09.2022) மு.ப. 6 மணி

    முதல் பி.ப. 8 மணி வரையிலான 14 மணிநேர நீர் விநியோகத்தடை பின்வரும் பகுதிகளில் அமுலாகும் என சபை அறிவித்துள்ளது.

    ஹரிஸ்பத்துவ, அக்குறணை, பூஜாப்பிட்டிய, பாத்ததும்பர, கண்டி மாநகர சபைக்குட்பட்ட பிரதேசம், அம்பிட்டிய மற்றும் ஹந்தான ஆகிய பகுதிகள் நீர்

    விநியோத் தடையினால் பாதிக்கப்படும். இதனால் பாவனையாளர்களுக்கு ஏற்படும் அசெளகரியங்களுக்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை

    கவலை தெரிவிப்பதோடு, நீரை முன்கூட்டியே சேமித்து வைத்து சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

    மேலதிக விபரங்களுக்கு 1939 என்ற தொலைபேசி துரித இலக்கத்துடன் தொடர்புகொள்ள முடியும்.

      Posted in இலங்கை செய்திகள்

      சந்தைகளில் மரக்கறிகளின் விலைகள் மீண்டும் அதிகரிப்பு

      சந்தைகளில் மரக்கறிகளின் விலைகள் மீண்டும் அதிகரிப்பு

      கடந்த நாட்களில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக சந்தைகளில் மரக்கறிகளின் விலைகள் மீண்டும் அதிகரித்துள்ளன.

      இதன்படி, ஒரு கிலோகிராம் போஞ்சி 600 ரூபாவுக்கும், கரட் ஒரு கிலோ 400 ரூபாவுக்கும், ஒரு கிலோகிராம் கறிமிளகாய் 800 ரூபாவுக்கும் கத்தரிக்காய் ஒரு

      கிலோகிராம் 400 ரூபா வரை அதிகரித்துள்ளதாகவும் வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

      அதேநேரம் வெள்ளரிக்காய், பீர்க்கங்காய் மற்றும் மரவள்ளிக்கிழங்கு என்பவற்றின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன

      Posted in இலங்கை செய்திகள்

      லண்டன் பயணிக்கும் ரணில் விக்கிரமசிங்க ராணியில் இறுதி நிகழ்வில் கலந்து கொள்வார்

      லண்டன் பயணிக்கும் ரணில் விக்கிரமசிங்க ராணியில் இறுதி நிகழ்வில் கலந்து கொள்வார்

      பிரிட்டன் இரண்டாம் மகாராணி எலிசபெத் மரண நிகழ்வில் கலந்து கொள்ள ,இலங்கை ஜனாதிபதி ,ரணில் விக்கிரமசிங்கா லண்டன் பயணமாகவுள்ளார் .

      எதிர் வரும் 17 திகதி பிரிட்டன் செல்லும் அவர் 19 அம திகதி மகாராணியின் இறுதி நிகழவி கலந்து கொள்வார். என தெரிவிக்க பட்டுள்ளது .

      லண்டன் பயணிக்கும் ரணில் விக்கிரமசிங்க ராணியில் இறுதி நிகழ்வில் கலந்து கொள்வார்

      பிரிட்டன் செல்லும் ரணில் விக்கிரமசிங்க ,பிரிட்டனில் உள்ள தமிழர் அமைப்புகள் சிலதுடன் கலந்துரையாட உள்ளதாக தெரிவிக்க படுகிறது.

      இலங்கை ஜனாதிபதியானதும் ,ரணில் விக்கிரமசிங்கா செல்லும் முதலாவது வெளிநாட்டு பயணம் இது என்பது குறிப்பிட தக்கது .

        Posted in இலங்கை செய்திகள்

        ஜெனீவா மனித உரிமை கூட்ட தொடர் ஆரம்பம் சிக்குமா இலங்கை

        ஜெனீவா மனித உரிமை கூட்ட தொடர் ஆரம்பம் சிக்குமா இலங்கை

        ஜெனிவா மனித உரிமை கூடட தொடர் ஆரம்பிக்க பட்டுள்ளது ,இவ்வாறான இந்த கூட்ட தொடர் நாளை ஆரம்பிக்க படவுள்ளது .

        இந்த நிலையில் ,இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்த பட்ட குற்றங்களில் ,முன்னாள் ராஜபக்ச அரசுகளுக்கு தண்டனை வழங்க படுமா என்பது தொடர்பில் கேள்வி எழுப்ப படுகிறது .

        ஜெனீவாவில் ஆரம்பிக்க படவுள்ள , 51 வது , மனித உரிமை கூட்ட தொடரில் ,இலங்கை தொடர்பாக ,முக்கிய முடிவுகள் அறிவிக்க படலாம் என எதிர் பார்க்க பாடுகிறது .

        ஜெனீவா மனித உரிமை கூட்ட தொடர் ஆரம்பம் சிக்குமா இலங்கை

        இந்த ஜெனீவா விடயத்தை ,கையாளவ்தற்கு இலங்கை வெளிவிவகார அமைச்சர் ,மற்றும் இலங்கை நீதி அமைச்சர் ஆகியோர் ,ஜெனீவா சென்றுள்ளனர் .

        இவர்கள் அங்கு முக்கிய அதிகாரிகளை சந்திக்கவுள்ளார் .இலங்கை நிலவரம் தொடர்பாக ஜெனிவாவில் இலங்கை சிக்கும் என எதிர் பார்க்க படுகிறது .

        இம்முறை இலங்கைக்கு வழங்க பட்ட ,கால நீடிப்பு கடந்து சென்றுள்ளதால் ,சர்வதேச நீதிமன்ற விசாரணைகளுக்கு ,
        இலங்கை உட்படுத்த படலாம் என எதிர் பார்க்க படுகிறது .

          Posted in இலங்கை செய்திகள்

          தம்பியை குத்தி கொன்ற அண்ணன் இலங்கையில் நடந்த பயங்கரம்

          தம்பியை குத்தி கொன்ற அண்ணன் இலங்கையில் நடந்த பயங்கரம்

          தம்பியை குத்தி கொன்ற அண்ணன் செயல் இலங்கையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுயுள்ளது.

          இலங்கை அக்குரஸ்ஸ மாதொல பகுதியில் ,சகோதரர் இருவருக்கு இடையில் இடம்பெற்ற ,நில தகராறு காரணமாக ஏற்பட்ட, வாய் தர்க்கம் கத்தி குத்து கொலையில் முடிவடைந்துள்ளது .

          போதையில் இருந்த சகோதரனுக்கு , இடையில் நில தகராறு தொடர்பில் ,ஏற்பட்ட வாய் தர்க்கம் இறுதியில், கத்தி குத்து கொலையில் முடிவடைந்துள்ளது .

          தம்பியை குத்தி கொன்ற அண்ணன் இலங்கையில் நடந்த பயங்கரம்

          தம்பியை கொன்ற அண்ணன் காவல்துறையால், கொலை குற்றத்தில் கைது செய்ய பட்டுளளார் .

          தம்பியை குத்தி கொன்ற அண்ணன் செயலினால், அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுளள்து .

          நில விடயம் ஒன்றினால் ,கூடி பிறந்தவன் ,கொலை செய்யப் பட்டுள்ளான் ,

          இலங்கையில் சமீப காலங்களாக, இவ்வாறு கத்தி குத்து படு கொலை சம்பவங்கள் அதிகரித்து செல்கின்றமை இங்கே குறிப்பிட தக்கது.

            Posted in இலங்கை செய்திகள்

            இலங்கை காவல்துறை மீது புத்தளத்தில் தாக்குதல்

            இலங்கை காவல்துறை மீது புத்தளத்தில் தாக்குதல்

            இலங்கை காவல்துறையினர் ,மீது புத்தளத்தில் வைத்து ,மர்ம நபர்கள் திடீர் தாக்குதலை நடத்தினர் .

            இந்த தாக்குதல் சம்பவத்தில் காவல்துறையினருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது .

            போதை பொருள் கடத்தல் மற்றும் விற்பனை, மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டவர்களை ,கைது செய்துவிட்டு ,மீள திருப்பி வருகின்ற பொழுது இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது .

            இலங்கை காவல்துறை மீது புத்தளத்தில் தாக்குதல்

            திடீரென வீதியை மறித்த மர்ம கும்பல் ,காவல்துறை மீது திடீர் தாக்குதலை நடத்தி விட்டு தப்பி ஓடியுள்ளனர் .

            காவல்துறையை தாக்கும் பொழுது ,காவல்துறை துப்பாக்கிகள் என்ன செய்தன என்பதே இங்கு கேள்வியாக உள்ளது .

            அப்பாவிகளை சுட்டு கொலை செய்திடும் காவல்துறை ,தெரிவித்துள்ள இந்த தகவல்களில், உண்மை தன்மை தொடர்பாக சந்தேகம் எழுந்துள்ளது .

              Posted in இலங்கை செய்திகள்

              சமந்தா பவர் ரணில் விக்கிரமசிங்கா சந்திப்பு

              சமந்தா பவர் ரணில் விக்கிரமசிங்கா சந்திப்பு

              சமந்தா பவர் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவை சந்தித்து பேச்சில் ஈடுபட்டார் .

              இவரது இந்த சந்திப்பில் இலங்கையின் நிகழ்கால நிலவரம், மாற்றும் ,அமெரிக்காவின் உதவிகள் தொடர்பில் தெரிவிக்க பட்டுள்ளது

              மேலும் அமெரிக்காவில் முக்கிய நிபந்தைகள் இலங்கைக்கு விதிக்க பட்டு இருக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது

              சமந்தா பவர் இரு நாட்கள் பயணம் மேற்கொண்டு இலங்கை வந்தடைந்தார் .

              இவரது இந்த் பயணத்தில் ,தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேசுவார் என எதிர் பார்க்க படுகிறது

              மந்தா பவர் ரணில் விக்கிரமசிங்கா சந்திப்பு

              ரணில் சமந்தபவருக்கு பவருக்கு இடையில் பேச பட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் வெளியாகவில்லை.

              இலங்கையின் நிகழ் கால நிலைமைகளை ஆராய்ந்து ,அதன் பின்னர் இலங்கைக்கு உதவுவதாக தெரிவிக்க பட்டுள்ளது .

              மேலும் விவசாயிகள் நலனுக்கு 40 மில்லியன் வழங்கி இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது .

                Posted in இலங்கை செய்திகள்

                கிளிநொச்சியில் தற்கொலைகள் அதிகரிப்பு காரணம் என்ன

                கிளிநொச்சியில் தற்கொலைகள் அதிகரிப்பு காரணம் என்ன

                கிளிநொச்சி மாவட்டத்தில் ஒரு இலட்சம் பேருக்கு 34 பேர் வரையில் தற்கொலை செய்து கொள்கின்றனர் என கடந்த ஆய்வுகளில் இனங்கான

                ப்பட்டுடிருப்பதாக யாழ் போதனா வைத்திய சாலையின் உளநல வைத்தியர் சிவதாஸ் தெரிவித்துள்ளார் .

                உலக தற்கொலை தடுப்பு தின நிகழ்வு (10-09-2022) நேற்று கிளிநொச்சி மாவட்ட பொது வைத்திய சாலையில் நடைபெற்றுள்ளது.

                குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் .

                தொடர்ந்து உரையாற்றுகையில் கிளிநொச்சி மாவட்டத்தில் தற்கொலை வீதம் அதிகரித்து காணப்படுகின்றது.

                தற்கொலை தொடர்பில் தேசிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட கணிப்பீட்டின்படி ஒரு லட்சம் பேருக்கு 14 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

                கிளிநொச்சியில் தற்கொலைகள் அதிகரிப்பு காரணம் என்ன

                ஆனால் கிளிநொச்சி மாவட்டத்தில் ஒரு இலட்சம் பேருக்கு 34 பேர்தற்கொலை செய்து கொள்ளும் நிலை காணப்படுகின்றது.

                அதேபோன்று கிளிநொச்சி மாவட்டத்தில் குடும்ப வன்முறைகள் ஐம்பது வீதமாக அதிகரித்துள்ளது .

                அதுமட்டுமல்லாது சிறுவயது கர்ப்பங்கள் அதிகரித்து காணப்படுகின்றன.

                இந்த தற்கொலைகளில் இள வயதினரே அதிகம் ஈடுபடுகின்றனர்.

                குறிப்பாக 24 வயது வரை பிள்ளைகள் மீது பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும் குறிப்பாக தனிமை மற்றவர்களிடமிருந்து விலகி இருத்தல்

                உறவுகளுடனான முரண்பாடு போதைப்பொருள் மற்றும் மதுபான பாவனை துஷ்பிரயோகங்கள் மனநோய் பொருளாதார நெருக்கடிகளை கையாள தெரியாமை அதாவது எல்லோருக்கும் பொருளாதார நெருக்கடிகள் உள்ளது.

                ஆனால் அதனை சரியான முறையில் கையாள தெரியாமை வேலைவாய்ப்பின்மை தற்கொலைகளுக்கான காரணங்களாக அமைகின்றன.

                கடந்த ஆண்டுகளிலேயே கிளிநொச்சியில் தற்கொலைகள் அதிகரித்து காணப்படுகின்றன என்றும் அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார் .

                குறித்த நிகழ்வில் யாழ் போதனா வைத்திய சாலையினுடைய உளநல வைத்தியர் சிவதாஸ் மற்றும் சுவிஸ் நலவாழ்வு மருத்துவத்துறை நிபுணர்

                அமைப்பின் உறுப்பினரும் மனநிலை மருத்துவர் மற்றும் ஆலோசகர் கேம நவரஞ்சன் உள்ளிட்டோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டு உரையாற்றினர்.

                கிளிநொச்சியில் தற்கொலைகள் அதிகரிப்பு காரணம் என்ன

                சுவிஸ் நலவாழ்வு மருத்துவத்துறை நிபுணர் அமைப்பின் உறுப்பினரும் மனநிலை மருத்துவர் மற்றும் ஆலோசகர் கேம நவரஞ்சன் அவர்களது மனநல

                மருத்துவம் தொடர்பான நுல் அறிமுகம் செய்து வைக்கப்பட்டதுடன் கொவிட் காலத்தில் சேவையாற்றிய தாதியர்கள் மதிப்பளிக்கப்பட்டனர்.

                குறித்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை பொறுப்பு வைத்தியர் சுகந்தன் மாவட்ட பொது வைத்திய சாலையின் மனநல மருத்துவர் ம.

                ஜெயராசா வைத்தியர்கள் தாதியர்கள்,
                தாதிய உத்தியோகத்தர்கள் பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

                  Posted in இலங்கை செய்திகள்

                  பாண் விலையை அதிகரிக்க வேண்டாம் என அரசாங்கம் கோரிக்கை

                  பாண் விலையை அதிகரிக்க வேண்டாம் என அரசாங்கம் கோரிக்கை

                  பாண் விலையை அதிகரிக்க வேண்டாம் என அரசாங்கம் வெதுப்பகங்களிடம் கோரிக்கை .

                  இலங்கையில் அதிகம் விற்பனையாகும் ,உணவு பொருட்களில் பாண் முதலிடமும் வகிக்கிறது .

                  இவ்வாறான நிலையில் .பாணின் விலையை அதிகரிக்க வேண்டாம் என இலங்கை வெதுப்பகங்களிடம் இலங்கை அரசு வேண்டியுள்ளது .

                  இலங்கையில் பாணின் விலை அதிகரித்து செல்கின்ற நிலையில் ,மக்கள் பெரிதும் துயர்களை சந்தித்த வண்ணம் உள்ளனர்.

                  பாண் விலையை அதிகரிக்க வேண்டாம் என அரசாங்கம் கோரிக்கை

                  பாண் ஒன்றின் விலை 300 ரூபாவுக்கு விற்பனை செய்ய படுகிறது .

                  இந்த விலை அதிகரிப்பு, மக்களை பெரும் ,அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது

                  அரசாங்கத்தின் வேண்டுதல் ஏற்று ,பாணின் விலையை ,இலங்கை வெதுப்பகங்கள் குறைக்குமா என்பது சந்தேகமே.

                    Posted in இலங்கை செய்திகள்

                    பாரிய விபத்து மூவர் சம்ப இடத்தில் மரணம்

                    பாரிய விபத்து மூவர் சம்ப இடத்தில் மரணம்

                    பாரிய விபத்தில் சிக்கி மூவர் சம்பவ இதில் பாலிய்க்கையுள்ளனர்

                    கொழும்பில் இருந்து கேகாலை நோக்கி பயணித்த வான் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள்கள் மோதி சிதறியதில் இந்த மரணம் இடம்பெற்றுள்ளது

                    வான் சாரதியின் அலட்சியம் காரணமாக இந்த பாரிய விபத்து இடம்பெற்றுள்ளது ,என தெரிவிக்க பட்டுள்ளது .

                    சம்பவத்தில் இறந்த மூவரும் வாலிபர்கள் என கண்டறிய பட்டுள்ளது

                    வான் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் என்பன கடுமையான சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது .

                    காவல்துறை விசாரணைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது.

                      Posted in இலங்கை செய்திகள்

                      பதுளையில் தாய் மகள் வெட்டி கொலை

                      பதுளையில் தாய் மகள் வெட்டி கொலை

                      பதுளை பகுதியில், தாய் மற்றும் மகள் முக ,முடிமூடி தரித்த கும்பலினால் சரமரியாக வெட்டி கொலை செய்ய பட்டுள்ளனர் .

                      இந்த தாய் மகள் வெட்டி கொலைக்குரிய காரணம் தெரியவரவில்லை .

                      மேலும் ஒரு பெண் வெட்டு காயங்களுக்கு உள்ளாகி ,படுகாயமடைந்த நிலையில் ,மருத்துவ மனையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளார் .

                      முக மோடி தரித்த படி நுழைந்த குழுவினர், தாய் மகள் மீது நடத்திய ,கத்தி வெட்டு தாக்குதலில் ,தாய் மகள் பலியாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

                      இலங்கையில் நாள் தோறும் ,இவ்வாறான கத்தி வெட்டு படு கொலைகள் அதிகரித்த வண்ணம் உள்ளது கவலையை ஏற்படுத்தியுள்ளது .

                        Posted in இலங்கை செய்திகள்

                        மீதமான சாததில் 5 நிமிடத்தில் சுவையான snacks ரெடி செஞ்சு பாருங்க

                        மீதமான சாததில் 5 நிமிடத்தில் சுவையான snacks ரெடி செஞ்சு பாருங்க

                        வீட்டில் மீதமான சாததில் 5 நிமிடத்தில் மிக சுவையான, snacks ரெடி பண்ணிக்கலாம் ..
                        பெரியவர்கள் முதல் சிரியவர்கள் வரை ,விரும்பி உண்ணுவாங்க .முதல்ல இதை செஞ்சு பாருங்க .

                        சாதம் வீட்டில் மிஞ்சிருச்சு என்றால் ,கவலை வேண்டாம் .இது போல நீங்களும் செஞ்சு அசத்துங்க .மிகு இலகுவான செய் முறையில் நேரம் மிச்சம் ,சுவையான snacks .

                        வாங்க இப்போ இந்த snacks செய்வது எப்படி என்பதாகி பார்க்கலாம் .

                        வீட்டில் மீதமான சாதத்தில் snacks செய்வது எப்படி .

                        மீதமான சாததில் 5 நிமிடத்தில் சுவையான snacks ரெடி செஞ்சு பாருங்க

                        செய் முறை ஒன்று

                        வீட்டில மீதமான சாதம் ஒன்றை கப் எடுத்திருங்க .அப்புறம் அதை கையினால் நனறாக அழுத்தி நசுக்கி வாங்க .
                        இல்லை அப்படின்னா ,மிக்சியில் போட்டும் அரைத்து எடுக்கலாம் .

                        இது கூட மூன்று உருளை கிழங்கு, நனறாக வேக வைத்து ,தோல் உரித்து இது கூட சேர்த்திருங்க .அப்புறம் அத்தனையும் சாதம் கூட சேர்த்து , நன்றாக அழுத்தி பிசைந்து வாங்க .

                        இப்பொழுது கட்டி இல்லாம நன்றாக மசித்து கொள்ளுங்க .
                        இது கூட பெரிய வெங்காயம் நறுக்கியது ,கூடவே ஒரு பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது சேர்த்திடுங்க .

                        மூன்று கரண்டி அளவு கடலை மாவு ,
                        கொஞ்சமா கருவேப்பிலை ,பொடியாக நறுக்கிய கொத்தமல்லி ,
                        தேவையான அளவு உப்பு ,அரை கரண்டி மஞ்சள் தூள் ,காரத்திற்கு ஏற்ப மிளகாய் தூள் ,கரம் மசலா ,ஒரு கரண்டி இஞ்சி துருவல் .எல்லாம் சேர்த்திடுங்க .

                        இப்போ இவை எல்லாத்தையும் சேர்த்து ,நனறாக பிசைந்து கலக்கி வாங்க .ஒன்றுடன் ஒன்று சேருவது போன்ரு நன்றாக கலக்கி வாங்க .
                        தண்ணி ஏதும் சேர்க்காதீங்க .

                        இப்போ நன்றாக பிசைந்த பின்னர் எலுமிச்சை சாறு விட்டிருங்க .இப்போ நன்றாக பிசைந்த பின்னர் .இப்போ பிபிசைந்து வைத்ததை பின்னர் ஒரு தட்டில வைத்து ,சதுராமா அழுத்தி பிடித்திருங்க .

                        அப்புறம் அதன் மேலும் கீழும் மேலுமாக ,எண்ணெய் விட்டு அழுத்தி சதுரமாக எடுத்திருங்க .

                        இப்போ அவற்றை சின்ன சின்ன சதுரமா வெட்டி கொள்ளுங்க .

                        அடுத்து ,அடுப்பில காடாய வைத்து எண்ணெய் ஊற்றி ,எண்ணெய் சூடானதும் ,அதில் போட்டு நன்றாக பொரித்து எடுத்திருங்க .,.

                        இரண்டு பக்கமும் வேகிற மாதிரி ,புரட்டி புரட்டி வேக வைத்து கொள்ளுங்க .
                        நன்றாக கோல்டன்ட் பிரவுன் கலர் வர மாதிரி பொரித்து எடுத்திருங்க .

                        இப்போ மீதமான சாதத்தில் உருவான snacks ரெடியாடிச்சு .இது கூட தக்காளி சோஸ் சேர்த்து சாப்பிடுங்க செமையாக இருக்கும் .

                        சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,இந்த snacks விரும்பி சம்பிடுவாங்க .

                        வீட்டில் சாதம் மீதமான கவலை வேண்டாம் ,இதுபோல செஞ்சு அசத்துங்க மக்களே .

                          Posted in இலங்கை செய்திகள்

                          அமெரிக்கா முக்கிய அதிகாரி சமந்தா பவர் இன்று இலங்கை வருகிறார்

                          அமெரிக்கா முக்கிய அதிகாரி சமந்தா பவர் இன்று இலங்கை வருகிறார்

                          அமெரிக்கா முக்கிய அதிகாரி சமந்தா பவர் இன்று இலங்கை வருகிறார் .
                          வார விடு முறை நாட்கள் ,இலங்கையில் தங்கி இருக்கும் ,இவர் அவ்வேளை முக்கிய சந்திப்புக்களை நடத்துவார் .

                          இவரது இந்த சந்திப்பின் மூலம் ,மக்கள் விடயங்கள் மற்றும் அரசியல் நிலைமைகள் தொடர்பாக ஆராயப்படவுள்ளது .

                          அதன் பின்னரே இலங்கைக்கு வழங்க உள்ள நிதி உதவிகள் ,தொடர்பில் தெரிய படுத்த படும் என எதிர் பார்க்க படுகிறது .

                          அமெரிக்கா முக்கிய அதிகாரி சமந்தா பவர் ,தமிழ் தேசிய கூட்டமைப்பை சந்தித்து பேசும் என எதிர் பார்க்க படுகிறது .


                          சமந்தா பவர் தமிழர் தரப்பை சந்தித்து பேசினாலும் ,அந்த பேச்சின் வாயிலாக தமிழர்களுக்கு தீர்வு கிட்டுமா என்பதே கேள்வியாக உள்ளது .

                          தன்னல அரசியல் முன்னிலை பெற்றால் ,தமிழர் பிரச்னை பின்னிலை செல்வதை தடுக்க முடியாது .

                            Posted in இலங்கை செய்திகள்

                            மகிந்த ராஜபக்ச தலைமையில் புதிய கூட்டணி – நாமல் ராஜபக்ச அறிவிப்பு

                            மகிந்த ராஜபக்ச தலைமையில் புதிய கூட்டணி – நாமல் ராஜபக்ச அறிவிப்பு

                            மகிந்தா ராஜபக்ச தலைமையில் ,இலங்கையில் புதிய கூட்டணி ஒன்று உருவாகும் என ,மகிந்த மகன் ,நாமல் ராஜ பக்ச அறிவித்துள்ளார் .

                            இலங்கை பெரும் பொருளாதார நெருக்கடியைச சந்திக்க ,பிரதான காரணமாக விளங்கியவர்கள் ,ராஜபக்ச குடும்பம் .

                            அவ்வாறன ராஜபக்ச குடும்பம், இலங்கையில் மீள் ஆட்சி பீடம் ஏறிட துடிக்கிறது .என்பதை நாமல் ராஜபக்ச அறிவின் மூலம் காணமுடிகிறது .

                            ஆட்சி அதிகார வெறியில் மூழ்கியுள்ள ,ராஜ பாக்ஸ் குடும்பம் ,மீளவும் நாட்டை கொள்ளையடிக்க திட்டமிடுவதை ,இந்த நிகழ்வுகள் கோடிட்டு காட்டுகின்றன .

                            இவ்வாறான மகா திருடர்களை இலங்கையை விட்டு சிங்களவர்கள் ,துரத்துவர்களா என்பதே கேள்வியாக உள்ளது .

                              Posted in இலங்கை செய்திகள்

                              அழுகிய நிலையில் மனித சடலம் மீட்பு

                              அழுகிய நிலையில் மனித சடலம் மீட்பு

                              அழுகிய நிலையில் வீடு ஒன்றுக்குள் இருந்து மனித சடலம் ஒன்று மீட்க பட்டுள்ளது .

                              இலங்கை புத்தளம் மதுரங்குளி பகுதியில் ,புதிதாக நிர்மாணிக்க பட்ட கட்டடம் ஒன்றுக்குள் இருந்து ,இந்த மனித சடலம் மீட்க பட்டுள்ளது .

                              நண்பருடன் வசித்து வந்த நண்பரே இவ்வாறு ,இந்த வீட்டுக்குள் அழுகிய நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளார் .

                              கட்டடத்துக்குள் இருந்து தூர் நாற்றம் வீசுவதை அவதானித்த ,நண்பர் மகன் ,அங்கு சென்று பார்த்த பொழுது ,
                              நண்பர் இறந்த நிலையில் காணப்பட்டதை அடுத்து அதிர்ச்சியில் உறைந்தனர். .

                              சம்பவ இடத்திற்கு வருகை தந்த காவல்துறை மற்றும் ,நீதவான் ஆகியோர் ,விசாரணை நடத்தி சடலம் உடல் கூற்று ஆய்வுக்கு உட்படுத்த உத்தரவிட பட்டுள்ளது .

                              காவல்துறை விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

                                Posted in இலங்கை செய்திகள்

                                இலங்கைக்கு 203 மில்லியன் வழங்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி

                                இலங்கைக்கு 203 மில்லியன் வழங்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி

                                இலங்கைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி 203 மில்லியன் அமெரிக்கா டொலர்களை கடனாக வழங்குகிறது .

                                தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ,வாழ்வா தாரத்தில் நெருக்கடியில் சிக்கியுள்ள ஏழை மக்களுக்கு உதவுகிறது .

                                ஏழை மக்களின் , உணவு மற்றும் அவர் பாதுகாப்பு தொடர்பில், அதிக அக்கறை கொண்டுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கி .

                                ஏழைகளின் நலன் கருதி , 203 ம்மில்லியன் அமெரிக்கா டொலர்களை கடனாக வழங்குகிறது .

                                இந்த கடன் வழங்கும் ஒப்பந்தத்தில் ,ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கை கைச்சாத்திட்ட நிலையில் ,இந்த உதவி இலங்கைக்கு வந்தடைகிறது .

                                கடன் மேல் கடனை வாங்கி ,கடனில் நாட்டை ஒட்டி செல்லும் இலங்கை, வாழ்வியலில் எப்பொழுது மாற்றம் ஏற்பட போகிறது ..?

                                என்பதே இன்றைய மக்களின் கேள்வியாக உள்ளது.

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  இலங்கையில் போராட்டத்தை நடத்த தலைமை வகித்த லஹிரு வீரசேகர கைது

                                  இலங்கையில் போராட்டத்தை நடத்த தலைமை வகித்த லஹிரு வீரசேகர கைது

                                  இலங்கையில் போராட்டம் நடத்த தலைமை வகித்த லஹிரு வீரசேகர காவல்துறையால் கைது செய்ய பட்டுள்ளார் .

                                  ஆளும் ரணில் விக்கிரமசிங்க அரசுக்கு எதிராக ,போராட்டம் நடத்தும் மக்களையும் ,போராட்டத்தை தலைமை தாங்கும் நபர்களையும் ,கைது செய்வதை ,இலக்கு வைத்து ,இலங்கை காவல்துறை செயல் பட்டு வருகிறது .

                                  இந்த மக்கள் போராட்டத்தை தலைமை ஏற்று நடத்தி சென்ற ,லஹிரு வீரசேகர காவல்துரையால் கைது செய்யப்பட்டுள்ளார் .

                                  இலங்கையில் போராட்டத்தை நடத்த தலைமை வகித்த லஹிரு வீரசேகர கைது

                                  லஹிரு வீரசேகர கைதின் ஊடாக ,இலங்கை மக்கள் போராட்டம் ,ரணில் விக்கிரமசிங்கா அரசினால் ,நசுக்க படுவதை மீளவும் இடித்து கூறியுள்ளது .

                                  இலங்கையில் போராட்டத்தை நடத்த ,எவர் தலைமை வகித்தாலும் ,அவர்களும் கைது செய்யப்படுவார்கள் என்கின்ற ,மிரட்டல் இதன் ஊடாக விடுக்க படுகிறது .

                                  போராட்டத்தை நடத்த எவர் தலைமை வகிக்க முனைகிறார்களோ ,அவர்களுக்கு சிறை காத்துள்ளது .


                                  என்பதே இந்த போராட்ட காரர்கள் கைதின் ஊடாக அரசு வெளிக்காட்டும் செய்தியாக உள்ளது .

                                    Posted in இலங்கை செய்திகள்

                                    இலங்கையில் போராட்டக் காரர்களை அடக்கும் அரசு சர்வதேச மன்னிப்பு சபை கண்டம்

                                    இலங்கையில் போராட்டக் காரர்களை அடக்கும் அரசு சர்வதேச மன்னிப்பு சபை கண்டம்

                                    இலங்கையில் போராட்டக்கார்களை ,ஆளும் அரசு அடக்கி ஒடுக்கி வதை செய்து வருவதாக, சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது .

                                    இலங்கை ஆட்சியாளர்களுக்கு எதிராக, மக்கள் அமைதியான போராட்டங்களை நடத்தி வந்தனர் .

                                    அவ்வாறான பொழுதும் ,ஆளும் ரணில் விக்கிரமசிங்கா அரசு, அந்த மக்களை அடக்கி ஒடுக்கி வருவதாக ,சர்வதேச மன்னிப்பு சபை குற்றம் சுமத்தியுள்ளது .

                                    அரசுகளுக்கு எதிராக, போராட்டம் நடத்திய மக்கள் ,கைது செய்ய பட்டு, சிறைகளில் அடைக்க பட்டு வருகின்றனர் ,என சர்வதேச மன்னிப்பு சபை தெரி வித்துள்ளது .

                                    சர்வதேச மன்னிப்பு சபையின் ,இந்த குற்ற சட்டை ,இலங்கை அரசு மறுத்துள்ளது குறிப்பிட தக்கது .

                                      Posted in இலங்கை செய்திகள்

                                      மட்டக்களப்பில் இறந்து கரை ஒதுங்கும் மீன்கள் பாம்புகள்

                                      மட்டக்களப்பில் இறந்து கரை ஒதுங்கும் மீன்கள் பாம்புகள்

                                      மட்டக்களப்பு வட்டுவான் பகுதியில் உள்ள ஆற்றில் மீன்கள், பாம்புகள், ,நண்டுகள் ,என கடல்வாழ் உயிரினங்கள், யாவும் இறந்த நிலையில் கரை ஒதுங்கு கின்றன .

                                      இங்கு உள்ள இறால் பண்ணையில் இருந்து வெளியேறும், நச்சு கழிவுகள் ,ஆற்றில் கலந்துள்ளன .

                                      இந்த நிலையில் ,இந்த மீன்கள் பாம்புகள் என்பன, இறந்த நிலையில் கரை ஒதுங்குவதாக மக்கள் தெரிவித்துள்ளனர் .

                                      எனினும் இந்த மீன்கள் ,பாம்புகள் மற்றும் கடல் வாழ் உயிரினங்கள், இறந்து கரை ஒதுங்குகின்றன .

                                      இந்த நிலை,தொடர்பாக,அரச அதிகாரிகள் கவனத்தில் எடுக்கவில்லை என படுகிறது.