Tag: ரணில் விக்கிரமசிங்க
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பசில் ராஜபக்ஷ மீண்டும் சந்திப்பு
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பசில் ராஜபக்ஷ மீண்டும் சந்திப்பு
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று (21) நடைபெறவுள்ளது.
இந்த சந்திப்பு இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் உள்ளிட்ட அரசியல் விவகாரங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பசில் ராஜபக்ஷ மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்றும் அண்மையில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ரணில் விக்கிரமசிங்க ராஜபக்ஸ குடும்பத்தையே வாழ வைத்துள்ளார்
ரணில் விக்கிரமசிங்க ராஜபக்ஸ குடும்பத்தையே வாழ வைத்துள்ளார்
ரணில் விக்கிரமசிங்க மஹிந்த ராஜபக்ஸ குடும்பத்தையே வாழ வைத்துள்ளார் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்துவ பண்டார தெரிவித்துள்ளார்.
வவுனியாவிற்கு நேற்று (13) விஜயம் செய்த நிலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாடு மிகவும் மோசமாக சீரழிந்த நிலையில் உள்ளது. மூன்று வேளை சாப்பிட்டவர்கள் இரண்டு வேளையும், இரண்டு வேளை சாப்பிட்டவர்கள் ஒரு வேளையும் சாப்பிடும் வங்குரோத்து நிலை ஏற்பட்டுள்ளது.
பாடசாலையில் இடம்பெறும் விசேட நிகழ்வுகளில் மாணவர்கள் மரணிக்கும் நிலை கூட ஏற்பட்டுள்ளது. வன்னி மாவட்டத்தில் வாழும் மக்கள் பிரதானமாக விவசாயத்தை மையமாக கொண்டு வாழ்கிறார்கள்.
ரணில் விக்கிரமசிங்க ராஜபக்ஸ குடும்பத்தையே வாழ வைத்துள்ளார்
நோயுற்ற நிலையில் வைத்தியசாலை செல்லும் போது அங்கு மருந்துகள் இல்லாத நிலை உள்ளது. இதனால் பலர் மரணிக்கும் நிலை உள்ளது. சுகாதார அமைச்சராக இருந்த ஒருவர் ஊழல் மோசடி செய்து சிறையில் உள்ளார்.
போசாக்கு இன்றி குழந்தைகள் மோசமான நிலையில் காணப்படுகின்றனர். இந்தநிலைக்கு தற்போதைய அரசாங்கமும் பதில் சொல்ல வேண்டும். ரணில் விக்கிரமசிங்க அவர்களும் ஏனையவர்களும் எமது குழந்தைகள் தொடர்பில் சிந்திக்காது தமது அரசியல் குறித்து சிந்திக்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டும்.
இன்னும் ஒரு சில மாதங்களில் தேர்தல்கள் வர இருக்கின்றது. மொட்டு சின்னமோ அல்லது ரணிலோ வந்தால் தற்போதைய நிலை தான் நீடிக்கும். ஐக்கிய மக்கள் சக்தியை பலப்படுத்த வேண்டும். கடந்த கடந்த காலத்தில் மக்கள் வீதிக்கு இறங்கி மகிந்த ராஜபக்ஸ, கோட்டபாய ராஜபக்ஸ ஆகியோரை வீட்டுக்கு அனுப்பினர். ரணில் விக்கிரமசிங்க மஹிந்த ராஜபக்ஸ குடும்பத்தையே வாழ வைத்துள்ளார் என தெரிவித்தார்.
புதிய கல்வி முறைமை அவசியம் ரணில் விக்கிரமசிங்க
புதிய கல்வி முறைமை அவசியம் ரணில் விக்கிரமசிங்க
நாட்டை பொருளாதார மாற்றத்திற்கு இட்டுச் செல்வதற்கு, உலகத்திற்கு உகந்த வகையிலான புதிய கல்வி முறைமை அவசியமானது எனவும், அதன் மூலம் போட்டி நிறைந்த உலகச் சந்தைக்குத் தேவையான துறைசார் நிபுணர்களை உருவாக்க முடியும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க சுட்டிக்காட்டினார்.
பரீட்சை சுமையை குறைத்து, ஆங்கிலம் மற்றும் தொழில்நுட்ப பாடங்களை கல்வி முறையில் உள்ளடக்கி, தொழிலுக்கு ஏற்றவகையிலான மாணவர்களை உருவாக்க எதிர்பார்ப்பதாகவும், புதிய தொழிற்கல்லூரிகள் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களை நிறுவுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
கொள்ளுப்பிட்டி புனித அந்தோனியார் பெண்கள் கல்லூரியில் இன்று (14) பாடசாலை மாணவ, மாணவிகளுக்கான இலவச பாடசாலை பாடப் புத்தகங்கள் மற்றும் பாடசாலை சீருடைகள் வழங்கும் தேசிய நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
பாடசாலை பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கும் இந்த நிகழ்வுடன் இணைந்ததாக நாடளாவிய ரீதியில் உள்ள 10,126 பாடசாலைகள் மற்றும் 822 பிரிவெனாக்களின் பிக்கு மாணவர் மற்றும் பாடசாலை மாணவர்கள் ஆகியோருக்கும் பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கப்படும்.
இதன்போது அடையாரீதியாக, பிக்கு மாணவர் மற்றும் பாடசாலை மாணவர்கள் சிலருக்கு சீருடைகள் மற்றும் பாடசாலை பாடப்புத்தகங்கள் ஜனாதிபதியினால் வழங்கி வைக்கப்பட்டன.
புதிய கல்வி முறைமை அவசியம் ரணில் விக்கிரமசிங்க
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு புனித அந்தோனியார் பெண்கள் கல்லூரியின் அதிபர் ஏன் கிறிஸ்டீன் நினைவுப் பரிசை வழங்கி வைத்தார்.
இங்கு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியதாவது,
எனது வீட்டிற்கு அருகில் ஐந்து பாடசாலைகள் உள்ளன. நான் கற்ற றோயல் கல்லூரி மற்றும் தேர்ஸ்டன் கல்லூரி, மகளிர் கல்லூரி, மகாநாம கல்லூரி மற்றும் புனித அந்தோனியார் பெண்கள் கல்லூரி என்பனவே அவை. அதனால் எனக்கு கல்வித்துறையில் அதிக கவனம் செலுத்த முடிந்துள்ளது. ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தனவின் ஆட்சிக் காலத்தில் இப்பாடசாலைகளின் அபிவிருத்தியில் கவனம் செலுத்தினோம்.
2022 இல் நாட்டில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடியால், கல்வித் துறை மட்டுமல்ல, அனைத்துத் துறைகளும் சரிவைச் சந்தித்தன. பாடசாலை பாடப்புத்தகங்கள், சீருடைகள் வழங்க முடியவில்லை. அந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்க எந்த தலைவரும் முன்வரவில்லை. அப்போது, சவாலை ஏற்று, நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் திட்டத்தை ஆரம்பித்தேன்.
இந்த பொருளாதார வேலைத்திட்டத்தினால் இன்று நாடு ஓரளவு பொருளாதார ஸ்திரத்தன்மை பெற்று வருகின்றது. அதன்படி, பாடசாலை சீருடைகள் மற்றும் பாடப்புத்தகங்களை உரிய நேரத்தில் வழங்க அரசாங்கத்தினால் முடிந்துள்ளது. அதற்காக 14 பில்லியன் ரூபாவுக்கும் அதிக தொகை செலவிடப்பட்டது.
கல்வி மறுசீரமைப்பின் ஊடாக நாட்டில் புதிய கல்வி முறையொன்றை உருவாக்க வேண்டும். உலகிற்கு பொருத்தமான தொழில் படையினை உருவாக்குவது குறித்து கவனம் செலுத்த வேண்டும். நாட்டில் பொருளாதார புரட்சியை ஏற்படுத்துவதற்கு கல்வி முறையை உலகிற்கு பொருத்தமான வகையில் மாற்றியமைக்க வேண்டும். அதன் மூலம் உலகிற்கு தேவையான தொழில் படையினை உருவாக்க முடியும்.
அதனூடாக சர்வதேச சந்தையுடன் போட்டியிடும் வாய்ப்பு எமக்கு கிடைக்கும். பரீட்சைகளின் சுமைகளை குறைத்து ஆங்கிலம் மற்றும் தொழில்நுட்ப பாடங்களை கல்வி முறையில் உள்வாங்கி தொழில் முறைகளுக்கு உகந்த சமூகத்தை உருவாக்க எதிர்பார்க்கிறோம். அதற்காக தொழில், தொழில்நுட்பக் கல்லூரிகளை உருவாக்கவும் எதிர்பார்க்கிறோம்.
நாம் எவரும் 2022 இல் இருந்த நிலைக்குச் செல்வதை விரும்பவில்லை. எரிவாயு, எரிபொருள் உணவு வரிசைகள் அற்ற சமூகமே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும். எனவே அவ்வாறான யுகத்திற்குள் மீண்டும் நாடு செல்லாமலிருக்க வலுவான பொருளாதாரத்தை நாம் உருவாக்குவோம். வலுவான பொருளாதாரம் கொண்ட இலங்கையை கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டத்தினை நாம் ஆரம்பித்துள்ளோம். என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த,
இந்த தேசிய வேலைத்திட்டத்திற்கு இணையாக 09 மாகாணங்களின் அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் பாடசாலை சீருடை மற்றும் பாடப்புத்தங்கள் இன்று வழங்கப்படுகின்றன. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றுக் கொண்டதன் பின்னர் கல்வித்துறையின் நான்கு பிரிவுகளை ஒரு அமைச்சின் கீழ் கொண்டு வந்து மனித வளத்தை முகாமைத்துவம் செய்து மாணவர்களுக்கு முறையான கல்வியை வழங்குவதற்கான வசதிகளை ஏற்படுத்தினார்.
இன்று வழங்கப்படும் பாடசாலை சீருடையில் 80% சீன அரசாங்கத்தின் அன்பளிப்பாகும். எஞ்சிய 20% சதவீதம் இலங்கை அரசாங்கத்தின் செலவில் பெற்றுகொடுக்கப்பட்டது.
இந்திய கடன் உதவியில் கிடைத்த கடதாசியை கொண்டு பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டன. அதனால் உரிய தினத்தில் பாடப்புத்தங்களை அரசாங்கத்தினால் வழங்க முடிந்துள்ளது. அரச அச்சீட்டு பணிகளில் இலாபம் ஈட்டவும் முடிந்துள்ளது. அனைத்து பாடசாலைகளினதும் மாணவர்களுக்கும் சீருடை மற்றும் பாடப்புத்தகங்களை வழங்க அரசாங்கம் 19 பில்லியன்களை செலவிடுகிறது.
கொவிட் மற்றும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக தாமதமாகிவரும் சாதாரண தர பரீட்சைகளை 2025 ஆம் ஆண்டிலிருந்து உரிய காலப்பகுதியில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல் கல்வி மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கு ஜனாதிபதி பெரும் பங்களிப்பு வழங்குகிறார். உலகிற்கு பொருத்தமான வகையில் கல்வி முறையை மாற்றியமைக்க அவர் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறார். இந்த அனைத்து வேலைத்திட்டத்துடனும் உலகை வெல்லக்கூடிய சமூகத்தை கட்டியெழுப்புவதே எமது நோக்கமாகும்.
கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த குமார், பாராளுமன்ற உறுப்பினர் யாதாமினி குணவர்தன, மேல் மாகாண ஆளுநர் மார்ஷல் ஒப் தி எயார் ரொஷான் குணதிலக்க,கல்வி அமைச்சின் செயலாளர் வசந்தா பெரேரா, கல்வி வெளீயீட்டுத் திணைக்களத்தின் பணிப்பாளர் இஸட்.தாஜூதீன் உள்ளிட்டவர்களுடன் சென். புனித அந்தோனியார் பெண்கள் கல்லூரி அதிபர், ஆசிரியர்கள், மாணவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.
ரணில் விக்கிரமசிங்க ஐநா அன்டோனியோ குட்டரஸுக்கும் இடையில் பேச்சு
ரணில் விக்கிரமசிங்க ஐநா அன்டோனியோ குட்டரஸுக்கும் இடையில் பேச்சு
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஐநா நாயகம் அன்டோனியோ குட்டரஸுக்கும் இடையில் இலங்கை அபிவிருத்தி தொடரபாக ரணில் விக்கிரமசிங்கா பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார் .
ஐக்கிய நடுகள் சபை நாயகம் அன்டோனியோ குட்டரஸுடன் இடம்பெற்ற பேச்சு பயன் உள்ளதாக அமைந்துள்ளதாக இலங்கை வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது .
இலங்கையில் தேர்தலை நடத்திட இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா நகர்வுகளை மேற்கொண்டு வருகிறார் .
இலங்கையில் தேர்தலை நடத்த பணம் தேவை படுகிறது ,அது தொடர்பாக இங்கே ரணில் விக்கிரமசிங்கா பேசியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
எதிரியாகா மாறிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க
எதிரியாகா மாறிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க
எதிரியாகா மாறிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. ஜனாதிபதி தான்தோன்றிதனமாக அரசியலமைப்பு பேரவையின் செயற்பாடுகளில் தலையை நுழைக்கின்றார்.
இது அரசியலமைப்பை மீறும் செயற்பாடாகும். இதனை அடிப்படையாக வைத்து, ஜனாதிபதிக்கு எதிராக குற்றப்பிரேரணை கொண்டுவருவதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது .
இவ்வாறு சுதந்திர மக்கள் பேரவையின் செயற்குழு உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ், திங்கட்கிழமை (11) தெரிவித்தார்.
எதிரியாகா மாறிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க
பேராசிரியர் ஜி. எல். நாவல சுகந்த ஜனதா சபையின் பிரதான காரியாலயத்தில் திங்கட்கிழமை (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே பீரிஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அமுல்படுத்தியதன் மூலம் சர்வதேச சமூகம் இலங்கைக்கு சிவப்பு விளக்கு காட்டியுள்ளதாகத் தெரிவித்த பேராசிரியர்,.
தேர்தல் காலத்தில் ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டும் என சர்வதேச சமூகம் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
- ரஷ்ய சுகாதார அமைச்சரின் இலங்கை விஜயம் நிறைவு
- உரம் கொள்வனவில் அனுரா அரசு மோசடி
- நடிகர் ஜீவா தந்தை சவுத்திரி மரணம்
- 200 000 இலஞ்சம் பெற்ற காவலர் கைது
- மாகாண சபை தேர்தல் நடக்கும் அனுரா
- விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த நாமல்
- இலங்கை மின்சார சபை முக்கிய அறிவிப்பு
- ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவுக்குப் பிணை
- தேர்தல் தோல்வி கண்ணீருடன் சீமான் வெளியிட்ட வீடியோ | Seeman Video about Election results 2026
- எரிபொருள் விலை உயர்வு பேரூந்துகள் திண்டாட்டம்
- இலங்கை இளைஞர்களுக்கு சீனத் தூதர் எழுதிய கடிதம்
- தமிழக தேர்தல் விஜய் அமோக வெற்றி
பேரூந்து விபத்தில் பலியானவர்களுக்கு ஐந்து லட்சம் வழங்கும் ரணில்
பேரூந்து விபத்தில் பலியானவர்களுக்கு ஐந்து லட்சம் வழங்கும் ரணில்
இலங்கை கொள்ளுப்பிட்டி பகுதியில் பேரூந்து ஒன்றின் மீது மரம் முறிந்து வீழ்ந்தது ஐந்து பேர் பலியாகியுள்ளனர் .
இந்த பேரூந்து விபத்தில் பலியான ஒவ்வொருவருக்கும் ஐந்து லட்சம் வழங்கும் படி இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா பணித்துள்ளார் .
தேர்தலை மைய படுத்தி மக்களை தம்பக்கம் திசை திருப்ப ரணில் விக்கிரமசிங்க இந்த கண்துடைப்பு நாடகத்தை ஆடி வருகிறார் .
ஜெர்மன் ஊடகத்தில் சிக்கி திணறிய ரணில் விக்கிரமசிங்கா ,அடுத்து தமக்கு என்ன நடக்கும் என்பது நன்குணர்ந்துளளர் .
அதை மனதில் வைத்து இந்த கண்துடைப்பு நாடகத்தை அரங்கேற்றியுள்ளளார் ,என்பதை அவதானிக்க முடிகிறது .
- ரஷ்ய சுகாதார அமைச்சரின் இலங்கை விஜயம் நிறைவு
- உரம் கொள்வனவில் அனுரா அரசு மோசடி
- நடிகர் ஜீவா தந்தை சவுத்திரி மரணம்
- 200 000 இலஞ்சம் பெற்ற காவலர் கைது
- மாகாண சபை தேர்தல் நடக்கும் அனுரா
- விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த நாமல்
- இலங்கை மின்சார சபை முக்கிய அறிவிப்பு
- ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவுக்குப் பிணை
- தேர்தல் தோல்வி கண்ணீருடன் சீமான் வெளியிட்ட வீடியோ | Seeman Video about Election results 2026
- எரிபொருள் விலை உயர்வு பேரூந்துகள் திண்டாட்டம்
ஜனாதிபதி நாளை ஜேர்மனி பயணமாகிறார்
ஜனாதிபதி நாளை ஜேர்மனி பயணமாகிறார்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாளை (26) இரவு ஜேர்மனிக்கு செல்லவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பேர்லின் உலகலாவிய விவாதத்தில் பங்கேற்பதற்காக இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ள நிலையில் மாநாட்டில் உரையாற்றவும் உள்ளார்.
தற்போதைய புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார சவால்களுக்கு உலகளாவிய தீர்வுகளைக் கண்டறிவதற்கான பெர்லின் உலகலாவிய விவாதம் 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் நடைபெற உள்ளது
- ரஷ்ய சுகாதார அமைச்சரின் இலங்கை விஜயம் நிறைவுby நிருபர் காவலன்
- உரம் கொள்வனவில் அனுரா அரசு மோசடிby நிருபர் காவலன்
- நடிகர் ஜீவா தந்தை சவுத்திரி மரணம்by நிருபர் காவலன்
- 200 000 இலஞ்சம் பெற்ற காவலர் கைதுby நிருபர் காவலன்
- மாகாண சபை தேர்தல் நடக்கும் அனுராby நிருபர் காவலன்
பிரான்ஸ் பிரித்தானியாவுக்கு பறக்கும் ரணில் விக்கிரமசிங்க
பிரான்ஸ் பிரித்தானியாவுக்கு பறக்கும் ரணில் விக்கிரமசிங்க
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா பிரிட்டன் பிரித்தானியாவுக்கு
அரசமுறை உத்தியோக பூர்வ பயணத்தை மேற்கொள்கிறார் .
அவரது இந்த பயணத்தில் ,நாட்டுக்கு வழங்க படும் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் பேச பட உள்ளதாக தெரிவிக்க படுகிறது .
பொருளாதாரத்தில் வீழ்ச்சி நிலையில் காணப்படும்
,இலங்கை ,உலக நாடுகளிடம் கடனை வாங்கியுள்ளது ,
அந்த கடனை மீள் செலுத்த முடியா நிலையில் சிக்கி தவித்து வருகிறது .
இதனால் ,இலங்கை வரும் நான்கு வருடங்களில் சோமாலியாவாக,
மாற்றம் பெறும் நிலை காணப்படுகிறது .
ரணில் விக்கிரமசிங்க மகிந்த ராஜபக்ச திடீர் சந்திப்பு
ரணில் விக்கிரமசிங்க மகிந்த ராஜபக்ச திடீர் சந்திப்பு
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆகியோர் திடீரென சந்தித்துள்ளனர் .
இந்த சந்திப்பில் எதிர்வரும் தேர்தலில் எவ்விதம் செயல்பட வேண்டும் என்பது தொடர்பில் கலந்துரையாட பட்டுள்ளது .
மொட்டு கட்சி மக்களினால் துரத்தியடிக்க படும் என எதிர் பார்க்க பட்ட நிலையில் ,இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது கவனிக்க தக்கது .
ரணில் விக்கிரமசிங்க பசில் ராஜபக்சவுக்கு இடையில் பேச்சு
ரணில் விக்கிரமசிங்க பசில் ராஜபக்சவுக்கு இடையில் பேச்சு
இலங்கையின் முன்னாள் நிதியமைச்சர் பசில் மற்றும் ,ஆளும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவுக்கு இடையில், தொலைபேசி வாயிலாக இரகசிய பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளது .
தேர்தல் ஒன்று இடம்பெற்றால் ,அதில் எவ்விதம் கூட்டணி அமைத்து கொள்வதது என்பது தொடர்பில் கவனம் செலுத்த பட்டுள்ளது .
எதிர் வரும் தேர்தலில் தாமே அதிக வெற்றி வாய்ப்பை தட்டி செல்வோம் என்கின்ற நிலையில் ,மகிந்த தரப்பு பேசிய வருகிறது .
இவ்வாறான பேச்சு பரப்புரையை ராஜபக்ச குடும்பம் மேற்கொண்டு வரும் நிலையில் ,பசில் ரணிலுக்கு இடையில் இந்த இரகசிய பேச்சு இடம் பெற்றுள்ளது குறிப்பிட தக்கது .
லண்டன் பயணிக்கும் ரணில் விக்கிரமசிங்க ராணியில் இறுதி நிகழ்வில் கலந்து கொள்வார்
லண்டன் பயணிக்கும் ரணில் விக்கிரமசிங்க ராணியில் இறுதி நிகழ்வில் கலந்து கொள்வார்
பிரிட்டன் இரண்டாம் மகாராணி எலிசபெத் மரண நிகழ்வில் கலந்து கொள்ள ,இலங்கை ஜனாதிபதி ,ரணில் விக்கிரமசிங்கா லண்டன் பயணமாகவுள்ளார் .
எதிர் வரும் 17 திகதி பிரிட்டன் செல்லும் அவர் 19 அம திகதி மகாராணியின் இறுதி நிகழவி கலந்து கொள்வார். என தெரிவிக்க பட்டுள்ளது .
லண்டன் பயணிக்கும் ரணில் விக்கிரமசிங்க ராணியில் இறுதி நிகழ்வில் கலந்து கொள்வார்
பிரிட்டன் செல்லும் ரணில் விக்கிரமசிங்க ,பிரிட்டனில் உள்ள தமிழர் அமைப்புகள் சிலதுடன் கலந்துரையாட உள்ளதாக தெரிவிக்க படுகிறது.
இலங்கை ஜனாதிபதியானதும் ,ரணில் விக்கிரமசிங்கா செல்லும் முதலாவது வெளிநாட்டு பயணம் இது என்பது குறிப்பிட தக்கது .
மகிந்த ராஜபக்ச குடும்பத்தை மிரட்டும் ரணில் விக்கிரமசிங்க
மகிந்த ராஜபக்ச குடும்பத்தை மிரட்டும் ரணில் விக்கிரமசிங்க
இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ,மகிந்த ராஜபக்ச குடும்பத்தை மிரட்டும், உள்ளக அரசியல் சித்து விளையாட்டுக்கள் ஆரம்பித்துள்ளன .
இலங்கை வரலாற்றில், எம்பி பதவியை இழந்து தவித்த ரணில் விக்கிரமசிங்க ,தனது கட்சியின் ஆதரவு அற்று, இலங்கையின் ஜனாதிபதியான வரலாற்று நிகழ்வு எழுத பட்டுள்ளது.
மக்களினால் எதிரி போன்று ,ராஜபக்ச குடும்பம் பார்க்க பட்டு ,அந்த ராஜபக்ச குடும்பங்களுக்கு எதிராக ,மக்கள் போராட்டம் நடத்திய நிலையில் ,தம்மை பாதுகாக்க, ரணில் விக்கிரமசிங்காவை மகிந்தா ராஜபக்ச ஜனாதிபதியாக்கினார் .
ஆனால் ஜனாதிபதியானது ரணில் விக்கிரமசிங்க ,ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைக்கும் செயல்களில் ஈடுபட்டுளளார் .,
புதிய அமைச்சரவையில், மகிந்த ராஜபாக்ச குடும்பத்தினரால், பரிந்துரைக்க பட்டவர்கள் பலர், அமைச்சர்களாக நியமிக்க படாது , ரணில் தனது விசுவாசிகளை அமைச்சர்களாக்கி அழகு பார்த்துளளார் .
இதனால் எழுந்த உள்ளக விரிசல் ,மகிந்த ராஜபக்ச குடும்பத்திற்கு பெரும் போராக மாற்றம் பெற்று வருகிறது .,
இன்றைய இலங்கை அரசியல் நிலவரத்தின் பிரகாரம் ,விரும்பியோ விரும்பாமலோ ,ரணில் விக்கிரசிங்காவை ஆதரிக்க வேண்டிய, நெருக்கடியில் ராஜபக்ச குடும்பம் சிக்கியுள்ளது .
போர் குற்றம் ஒருபுறம் ,மற்றும் லஞ்ச ஊழல் மோசடி மறுபுறம், என இரட்டை தலை பாம்புகளாய் , இவர்கள் இரு தரப்பையும் உற்று பார்த்து ஓட வேண்டிய விரக்தி நிலைக்குள் தள்ள பட்டுள்ளனர்.
இதனை தனக்கு சாதகமாக்கிய ரணில் விக்கிரசிங்க ,தனது அரசியல் நரி தந்திர விளையாட்டை ஆரம்பித்துள்ளார் .
அவ்வாறு நோக்கின், விரைவில் மகிந்தா ராஜபக்ச குடும்பம் ,ரணில் விக்கிரமசிங்காவுக்கு இடையிலான உள்ளக மோதல்கள் ,கைதுகள் வரை செல்லும் என எதிர் பார்க்க படுகிறது .
ராஜபக்ச குடும்பத்தை மிரட்ட இந்த நகர்வை, ரணில் எதிர்காலத்தில் ஆரம்பிப்பார் என்பதே இன்றைய உள்ளக கசிவுகளாக உள்ளன .
இலங்கையில் பத்தொன்பது மாதங்களில் தேர்தல் நடத்திட வேண்டிய நிலை உள்ளது ,இவாறான நிலையில் தந்து கட்சியை வளர்த்திட, ரணில் விக்கிரமசிங்க ஆடுகளத்தை ஆரம்பித்துள்ளார் .
இந்த கட்சி போரே, தற்போது மகிந்தா ராஜபக்ச குடும்பத்திற்கு இடையில் ,பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது .
மக்கள் ஆதரவு அற்ற இவர்களினால் தேர்தலில் வென்றிட முடியாத நிலை உள்ளது .
ஆர்ப்பாட்டக்காரர்களுடன் வெளிப்படைத்தன்மையுடன் பணியாற்றத் தயார் ரணில்
ஆர்ப்பாட்டக்காரர்களுடன் வெளிப்படைத்தன்மையுடன் பணியாற்றத் தயார் ரணில்
ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் இளைஞர்களுடன் இணைந்து வெளிப்படைத்தன்மையுடன் செயற்பட தான் தயார் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தெரிவித்துள்ளார்.
நாம் இப்போது பொருளாதாரப் போராட்டத்தில் வெற்றிபெற வேண்டும் என்பதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி விக்கிரமசிங்க அவர்கள், அந்தப்
பொருளாதாரப் போராட்டத்தின் வெற்றிக்கு போராட்டக் களத்தில் உள்ள அனைத்து இளைஞர், யுவதிகளையும் சகல வழிகளிலும் பங்கேற்கச் செய்ய தாம் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
இப்போது பொருளாதாரப் போராட்டத்தில் வெற்றி பெற வேண்டும்.
அதற்கு இளைஞர்களின் அர்ப்பணிப்பு அவசியம்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கும் காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தின் பல தரப்பினருக்கும் இடையில் இன்று (05) ஜனாதிபதி
அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்.
ஆர்ப்பாட்டக்காரர்களுடன் வெளிப்படைத்தன்மையுடன் பணியாற்றத் தயார் ரணில்
ஜனநாயக விரோத அரசியலையும் வன்முறையையும் தாம் எதிர்ப்பதாகவும், ஒடுக்குமுறைக்காகவே செயற்படுபவர்கள், பல்கலைக்கழக செயற்பாட்டின்
ஊடாக பகிடிவதையை நிறுத்தி சிறந்த சமூக ஜனநாயகத்துக்காக முன்வர வேண்டும் எனவும் ஜனாதிபதி அவர்கள் வலியுறுத்தினார்.
இன்று நமது பல்கலைக்கழகக் கட்டமைப்பு சீர்குலைந்து இருப்பதற்கு முக்கியக் காரணங்களில் ஒன்று பகிடிவதை ஆகும். வேலைநிறுத்தங்கள் எல்லா காலத்திலும் தொடர்ந்தன.
வேலைநிறுத்தங்கள் மூலம் ஒரு நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது என்றும், பேச்சுவார்த்தை மூலம் மத்தியஸ்த நிலைக்கு வந்து
கோரிக்கைகளை பெற்றுக்கொள்வதைப் போன்று, நாட்டுக்காக செய்ய வேண்டிய பணிகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
அனைத்து ஆர்ப்பாட்டக்காரர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான குழுவொன்றை உருவாக்குமாறு கூறிய ஜனாதிபதி அவர்கள், அக்குழுவிற்கு
அனைத்து மதங்களின் பிரதிநிதித்துவம் மற்றும் பெண்களின் பிரதிநிதித்துவம் அவசியமானது எனவும் குறிப்பிட்டார்.
இளைஞர்களின் தேவைகளுக்காக அரச அனுசரணையுடன் செயற்படுத்துவதற்கு, கொழும்பு கோட்டை மிதக்கும் சந்தை மற்றும் பல்வேறு இடங்களை முன்மொழிய தான் விரும்புவதாகத் தெரிவித்த ஜனாதிபதி ரணில்
விக்கிரமசிங்க அவர்கள், அது தொடர்பில் முறையான ஆலோசனைகளை பெரும்பான்மையான ஆர்ப்பாட்டக்காரர்களின் பங்களிப்புடன் தயாரித்து கையளிக்குமாறும் தெரிவித்தார்.
அந்தச் செயற்பாட்டில், கல்விக்கான நூலகங்கள், அரசியல் கல்விக்கான வசதிகள், இசை, கலை, நாடகம் போன்ற இளைஞர்களின் திறன்கள் மற்றும்
தேவைகளை பூர்த்தி செய்யும் ஒரு மத்திய நிலையமாக அது உருவாக்கப்பட வேண்டுமென்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.
ஆர்ப்பாட்டக்காரர்களுடன் வெளிப்படைத்தன்மையுடன் பணியாற்றத் தயார் ரணில்
அவசரகால நிலையை முடிந்தவரை விரைவில் நீக்குவது நாட்டின் பொருளாதார மற்றும் சமூக ஸ்திரத்தன்மைக்கு முக்கியமாக
இருப்பதைப்போன்று, தற்போதுள்ள நிலைமைகள் காரணமாக நாட்டின் நிர்வாகத்திலும் அதன் தாக்கம் இருப்பதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
தற்போது LGBT சமூகம் தொடர்பில் அவசரகாலச் சட்டம் காரணமாக பிரச்சினைக்குரிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக தமக்கு
தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அதனை நீக்குவதற்கு தேவையான சட்டப் பின்னணியை தயார் செய்யுமாறு சட்டமா அதிபருக்கு அறிவித்துள்ளதாகவும் ஜனாதிபதி அவர்கள் மேலும் தெரிவித்தார்.
மேலும், பொதுமக்கள் சபைகளை ஸ்தாபிப்பது தொடர்பில் ஏற்கனவே பல தரப்பினரிடமிருந்து முன்மொழிவுகள் தமக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக
சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள், அடுத்த வாரம் குறித்த வேலைத்திட்டம் தொடர்பில் உரிய தரப்பினருடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஆர்ப்பாட்டக்காரர்களை பிரதிநிதித்துவப்படுத்தி வருகை தந்தவர்களின் கோரிக்கையானது, அமைதியான பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள
ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களை சட்ட விரோதமாகவோ அல்லது தன்னிச்சையாகவோ கைது செய்வதைத் தடுத்து நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்பதாகும்.
தற்போது எந்த தவறும் செய்யாது தளத்தில் இருக்கின்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் பலர் கைது செய்யப்படுவதால் அங்கிருந்து வெளியே செல்ல பயப்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
இப்போராட்டத்தின் மிகவும் கடினமான பகுதி தற்போது ஆரம்பமாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள், நாட்டின் ஒட்டுமொத்த மக்களின் சிந்தனைகளிலும் புரட்சி ஏற்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
இளம் தலைமுறையினர் எல்லையற்ற அர்ப்பணிப்புடன் நாட்டிற்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தவே இந்தப் போராட்டத்தை முன்னெடுத்ததாகவும், அரசியலமைப்பு ரீதியில் சாதகமான பலனைப் பெறுவதே தமது எதிர்பார்ப்பு
எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். கல்வி சீர்திருத்தங்கள் மற்றும் சமூக சீர்திருத்தங்கள் உட்பட நாட்டை முறையான மற்றும் ஸ்திரமான நிலைக்கு
கொண்டு வர விரைவான சீர்திருத்த செயல்முறையை நிறுவ வேண்டும் என்றும் அவர்கள் பரிந்துரைத்தனர்.
நாட்டின் முன்னேற்றத்தை விரும்புவோரின் ஆர்ப்பாட்டத்தின் முன்னேற்றம் கலந்துரையாடல் மற்றும் பேச்சுவார்த்தை மூலம் செய்துகொள்ளப்படுகின்ற இணக்கப்பாடுகளில் அடங்கியுள்ளதாகவும், அதற்காக ஜனநாயக
நடவடிக்கைகள் பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியிலும் மேற்கொள்ளப்படும் என நம்புவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
போராட்டத்தின் மூலம் நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் பல பெரிய வெற்றிகளை இளைஞர்கள் பெற்றுத் தந்தது தங்களது தலைமுறையின்
தனிச்சிறப்பு என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். உலகம் முழுவதும் ஜனநாயகத்தைப் போற்றும் மக்களால் இந்தப் போராட்டம் மதிக்கப்படுதாகவும்,
அதன் காரணமாகவே நமது நாடு உலகின் கவனத்தைப் பெற்றதாகவும் அவர்கள் கூறினர்.
ரணிலுக்கு வாக்களித்த கூட்டமைப்பில் சிலர் ரகசியம் அம்பலம்
ரணிலுக்கு வாக்களித்த கூட்டமைப்பில் சிலர் ரகசியம் அம்பலம்
கூட்டமைப்பின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் தனக்கு ஆதரவாக வாக்களித்திருந்ததாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
இதன்போது, குறித்த கூட்டத்தில் பங்கேற்றிருந்த கூட்டமைப்பின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் மௌனம் அமைதி காத்ததாகவும் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று நேற்று நடைபெற்றுள்ளது.
ரணிலுக்கு வாக்களித்த கூட்டமைப்பில் சிலர் ரகசியம் அம்பலம்
ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
இந்த சந்திப்பின் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனை பகிரங்கப்படுத்தியுள்ளார்.
அத்துடன், ஜனாதிபதியின் தேசிய வேலைத்திட்டத்தின் அடிப்படையிலேயே, சர்வ கட்சி அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவதா இல்லையா என்பதனை
தீர்மானிக்க முடியும் என கூட்டமைப்பினர் ஜனாதிபதியிடம் குறிப்பிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் கொந்தளிப்பை தணிக்க எரிபொருள் விலையை குறைக்கும் ரணில்
மக்கள் கொந்தளிப்பை தணிக்க எரிபொருள் விலையை குறைக்கும் ரணில்
இலங்கை ,கொழும்பு ; இலங்கையில் எட்டாவது புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எரிபொருள் விலைகளை குறைக்க திட்டமிட்டுள்ளார் .
இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் ஐம்பது முதல் நூறு ரூபா வரை குறைக்க படவுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்திய வண்ணம் உள்ளனர் .
மக்கள் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நாடத்தினால் அது தனது அரசியல் வாழ்வை முடக்கிவிட்டும் என்பதால் ரணில் விக்கிரமசிங்க இந்த அதிரடி விலை குறைப்பு நடவடிக்கைக்கு திட்டமிட்டுள்ளார் .
மேலும் சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளை சமாளிக்க வேண்டிய நிலையில் உள்ளதாலும் இந்த விடயம் கண்துடைப்பு நாடகமாக அரங்கேற்ற படுகிறது .
இந்த எரிபொருள் விலை குறைப்பின் பின்னர் இலங்கையில் ஆளும் ரணில் விக்கிரமசிங்க ஆட்சி நிலைத்து நிற்குமா .மக்கள் கோபம் தணியுமா என்பதே கேள்வியாக உள்ளது .
தேசிய அரசு தொடர்பில் அரசாங்கத்திடமிருந்து அதிகாரபூர்வ அழைப்பு எவருக்கும் வரவில்லை மனோ கணேசன்
தேசிய அரசு தொடர்பில் அரசாங்கத்திடமிருந்து அதிகாரபூர்வ அழைப்பு எவருக்கும் வரவில்லை மனோ கணேசன்
இலங்கை ,கொழும்பு ; தேசிய அரசு அல்லது சர்வ கட்சி அரசு அமைப்பது தொடர்பில், அரசாங்கத்திடமிருந்து எமக்கு இதுவரை அதிகாரபூர்வ அழைப்பு எதுவும் வரவில்லை. ஏனைய எதிர்கட்சிகளுக்கும் அதிகாரபூர்வ அழைப்புகள்
வரவில்லை. ஆகவே அதற்குள் “பேச்சுகள் நடக்கின்றன; அமைச்சர்கள் ஆகிறார்கள்” என்பவையெல்லாம் வெறும் சுவாரசிய செய்திகளாக மட்டுமே இருக்கின்றன. ஆனால், நாடு இன்று இருக்கும் அவதி நிலையில், ரணில்
விக்கிரமசிங்க அரசாங்கத்துக்கு நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டுவர அவகாசம் கொடுக்க வேண்டும் எனவும், அவசரப்பட்டு எதிர்ப்பு அரசியல்
ஆர்ப்பாட்டங்களை செய்யக்கூடாது எனவும், தமிழ் முற்போக்கு கூட்டணி நம்புகிறது என கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திடமிருந்து அதிகாரபூர்வ அழைப்பு எவருக்கும் வரவில்லை மனோ கணேசன்
இதுபற்றி மனோ எம்பி மேலும் கூறியதாவது,
தேசிய அரசு அல்லது சர்வ கட்சி அரசு அமைப்பது தொடர்பில் அதிகாரபூர்வ அழைப்பு வரவில்லை. ஆனால், கட்சி தலைவர்கள் கூட்டத்தின் போது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க என்னிடமும், ஏனைய கட்சி
தலைவர்களிடமும் நேரடியாக இது பற்றி கூறினார். ஆனால், கட்சிகளுக்கு சர்வ கட்சி அரசு அமைப்பது தொடர்பில், அரசாங்கத்திடமிருந்து அதிகாரபூர்வ அழைப்பு வரவேண்டும்.
அதன் பிறகு நாம் எமது கட்சிகள் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி அரசியல் குழுக்கள் மத்தியில் இதுபற்றி பேசுவோம். அதேபோல் ஐக்கிய மக்கள் கூட்டணி தலைமைக்குழுவிலும் பேசுவோம்.
இதுதான் ஒரு பொறுப்புள்ள நேர்மையுள்ள ஜனநாயக அரசியல் கட்சி செய்ய வேண்டிய முறைமை.
அரசாங்கத்திடமிருந்து அதிகாரபூர்வ அழைப்பு எவருக்கும் வரவில்லை மனோ கணேசன்
அதை நாம் செய்வோம். எமது முடிவுகளை எமக்கு வாக்களித்து தெரிவு செய்துள்ள, எமது மக்களின் நலன்களை முன்னிட்டு, நாம் ஒற்றுமையாக எடுப்போம்.
அதேவேளை, நாடு இன்று இருக்கும் அவதி நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்துக்கு நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டுவர அவகாசம் கொடுக்க வேண்டும் எனவும்,
அவசரப்பட்டு எதிர்ப்பு அரசியல் ஆர்ப்பாட்டங்களை செய்யக்கூடாது எனவும் தமிழ் முற்போக்கு கூட்டணி திடமாக நம்புகிறது.
அதுவே எங்கள் மக்களின் நிலைப்பாடாகவும் இருக்கிறது. பெரும்பான்மை அரசியல் கட்சிகளின் நலன்களை சார்ந்து மாத்திரம் தமிழ் முற்போக்கு கூட்டணி அரசியல் செய்யாது.
அரசில் சேருகிறோமோ, இல்லையோ, புதிய அரசியலமைப்பு தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள
அமைச்சருடன் நாம், மலையக தமிழ் இலங்கையர்களின் அரசியல் அபிலாஷைகளை முன் வைப்போம்.
அடுத்து வரும் அரசியலமைப்பு திருத்தத்தில் எமது மக்களின்
எதிர்பார்ப்புகளை இடம்பெறச்செய்ய எம்மால் ஆனதை நாம் பொறுப்புடன் செய்வோம்.
ராஜபக்ஸவின் கைப்பாவை அரசாங்கம் ரணிலை தாக்கிய சஜித் பிரேமதாசா
ராஜபக்ஸவின் கைப்பாவை அரசாங்கம் ரணிலை தாக்கிய சஜித் பிரேமதாசா
ராஜபக்ஸவின் கைப்பாவை அரசாங்கத்தின் வழமையான மிருகத்தனம் மற்றும் உத்தியோகபூர்வ வன்முறையைப் பயன்படுத்தி, தற்போதைய “ராஜபக்ஸ நிழல்
அரசாங்கம்” இன்று காலை காலிமுகத்திடல் அமைதியான போராட்டக்காரர்களுக்கு எதிராக கோழைத்தனமான மற்றும் வன்முறைத் தாக்குதலை நடத்தியுள்ளது.
அதனைப் செய்தியிட வந்த பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் மற்றும் அங்கவீனமான போர்வீரர்களும் அந்த மனிதாபிமானமற்ற தாக்குதலுக்கு
முகங்கொடுக்க நேரிட்டதோடு இந்த தாக்குதல் உண்மையான அர்த்தத்திலயே கொடூரமான உத்தியோகபூர்வ வன்முறையாகும்.
புதிய ஜனாதிபதி பதவிக்கு வந்து ஒரு நாள் கழிவதற்குள் இந்த மனிதாபிமானமற்ற தாக்குதலைத் தொடுத்துள்ளதுடன் தனது எதிர்கால ஆட்சியின் தன்மை என்பதை இதன் மூலம் உணர்த்த முற்பட்டுள்ளார் என்றால், இவ்வாறான அட்டூழியங்களுக்கு
அப்பாற்பட்ட பலமிக்க அரசாங்கங்கள் மக்கள் சக்தியால் வீட்டுக்கு அனுப்பப்பட்டதை அவருக்கு நினைவூட்ட விரும்புகின்றோம்.
அந்தந்த சிவில் போராட்டத்தின் போராளிகள் ஆக்கிரமித்திருந்த இடங்கள் அனைத்தையும் மீள கையளித்து கொண்டிருக்கும் போதும், அதற்குள்,
பாதுகாப்புப் படையினர் விடியற்காலையில் புகுந்து, “உயர் உத்தரவுப்படி” இந்த கோழைத்தனமான
தாக்குதலை நடத்தியுள்ளனர். ராஜபக்ஸ அரசை வீட்டுக்கு அனுப்ப முற்படுவதற்கு எதிராக வெறியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதா என்பது
எங்களுக்குத் தெரியாது, ஆனால் அது அவ்வாறு இல்லை என்று நினைக்க எந்த காரணமும் இல்லை.
ராஜபக்ஸவின் கைப்பாவை அரசாங்கம் ரணிலை தாக்கிய சஜித் பிரேமதாசா
போராடுவதற்கும் எதிர்ப்பு தெரிவிப்பதற்கும் நாட்டு மக்களுக்குள்ள ஜனநாயக உரிமையை நாங்கள் எப்போதும் மதிக்கிறோம்.
அரச சொத்துக்கள் மற்றும் பொது சொத்துக்களை சேதப்படுத்தாமல், வன்முறைக்குப் பதிலாக நாகரீகமான போராட்டங்களுக்காக நாங்கள் தொடர்ந்து முன் நிற்கிறோம்.
ஒரு புறம் தற்போதைய ஜனாதிபதி ஆட்சிக்கு வருவதற்கு வழி வகுத்தது காலிமுகத்திடல் உட்பட இந்நாட்டு மக்கள் முன்னெடுத்த போராட்டத்தின் விளைவினாலாகும்.
எனினும் இந்த போராட்டம் அவரை ஜனாதிபதியாவதற்கு சிறிதும் ஊக்கமளிக்கவில்லை என்றாலும், அதன் மூலம் அவர் அதிகாரத்தைப் பெற்றார்.
தான் ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து 12 மணித்தியாலங்கள் செல்வதற்கு முன் அதனை ஜனாதிபதி மறந்து விட்டார் என்பது வருத்தமளிக்கிறது என்பதோடு,
ஒருவேளை ராஜபக்ஸ ஆட்சி கவிழ்க்கப்பட்டமைக்கு போராட்டம் காரணமாக அமைந்ததன் கோபமாக கூட இருக்கலாம்.
முன்னைய ராஜபக்ஸ அரசாங்கம் நாகரீக நாடாக எழுந்து நிற்பதற்கான எல்லா சந்தர்ப்பங்களையும் அழித்தொழித்தது என்பதோடு, அதுவே தற்போதைய “ராஜபக்ஸ நிழல் அரசாங்கத்தில்” நடக்க ஆரம்பித்துள்ளது.
ராஜபக்ஸ வெறியை விடவும் தீவிர வெறியாக மாறியிருப்பது தான் வித்தியாசமாக உள்ளது.
இந்த நாடு எவ்வளவு பாதாளப் படுகுழியில் வீழ்ந்துள்ளது என்பதை புரிந்து கொள்வதற்குப் பதிலாக, தனது அதிகாரத் திட்டத்திற்காக மட்டுமே செயல்படும் இந்த
“ராஜ்பக்ஸவின் நிழல் அரசாங்கம்” மக்களின் அடிப்படை உரிமையான எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமையையும், சுதந்திரத்தையும் மீறியுள்ளதோடு, ஊடகவியலாளர்களுக்கு உரித்தான சுதந்திரத்தையும் கொடூரமான முறையில் மீறியுள்ளது.
ஆயுதம் ஏந்தியவர்கள், அங்கவீனர்கள் மற்றும் பொதுமக்கள் மீது ஆயுதம் ஏந்தி தாக்குதல் நடத்திய உத்தியோகபூர்வ மற்றும் உத்தியோகபூர்வமற்ற அனைத்து
அதிகாரிகளுக்கும் எதிராக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்பதோடு, இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு உத்தரவிட்ட அனைவருக்கும் எதிராக உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும்.
இந்த வெறுக்கத்தக்க மற்றும் கோழைத்தனமான தாக்குதலால் நாங்கள் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளோம் என்பதோடு, தாக்குதலின் உள்ளார்ந்த வெறுப்புடன் அதைக்
கண்டிக்கிறோம். நமது நாட்டை கோத்திர நிலைக்கு தள்ள முயலும் “ராஜபக்ஸ நிழல் அரசுக்கு” எதிராக முழு நாடும் எழுந்து நிற்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை அரசுக்கு வலியுறுத்துகிறோம்!
சஜித் பிரேமதாஸ – எதிர்க்கட்சி தலைவர்
ராஜபக்சாக்களுக்கு நான் நண்பன் இல்லை ரணில் கூவல்
ராஜபக்சாக்களுக்கு நான் நண்பன் இல்லை ரணில் கூவல்
இலங்கை கொழும்பு ; இலங்கையில் எட்டாவது புதிய ஜனாதிபதியாக பதவி பிரமாணம் செய்துள்ள ரணில் விக்கிரமசிங்க தான் ராஜபக்சக்கள் நண்பன் இல்லை என தெரிவித்துள்ளார் .
மொட்டு கட்சியின் ஆதரவுடன் மகிந்தவின் ஆசிர்வாதத்துடன் ஜனாதிபதியாக தெரிவான ரணில் விக்கிரமசிங்க ராஜபக்சக்கள் நண்பன் இல்லை என்கின்ற தகவல் மக்களை சிரிப்பில் மூழ்கடித்துள்ளது.
எரிபொருள் கப்பல் வருகை அரசியல் நடத்தும் ரணில்
ரணில் வீடு முன்பாக பொலிஸ் மக்கள் மோதல் 26 பேர் காயம்
இதெல்லாம் அரசியலில் சகயமப்பா என்பதை ரணிலின் இந்த காமடி பேச்சில் தெரியப்படுத்த பட்டுள்ளது.
இலங்கை புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்திய வண்ணம் உள்ள நிலையில் மக்களை குஷி படுத்த ரணில் இவ்விதம் தெரிவித்துள்ளமை குறிப்பிட தக்கது .
ரணிலுக்கு ஒட்டு போட்டவர்களும் ரணிலும் வீட்டுக்கு செல்வார் மக்கள்அறிவிப்பு
ரணிலுக்கு ஒட்டு போட்டவர்களும் ரணிலும் வீட்டுக்கு செல்வார் மக்கள்அறிவிப்பு
இலங்கை ,கொழும்பு ; இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பதவி ஏற்றுக்கொண்ட ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவருக்கு வாக்களித்த 134 பேரையும் வீட்டுக்கு அனுப்புவோம் என போராட்ட காரர்கள் தெரிவித்துள்ளனர் .
மக்கள் விரோதி மற்றும் ராஜபக்ச குடும்பத்தை பாதுகாக்க மகிந்தாவினால் நியமிக்க பட்ட ரணில் விக்கிரமசிங்க முப்பது நாளுக்குள் வீட்டுக்கு செல்வார் என போராட்ட கார்கள் தெரிவித்துள்ளனர் .
மேலும் ரணில் விக்கிரமசிங்காவிற்கு வாக்களித்த 134 பேரையும் மக்கள் கவனித்து கொள்வார்கள் என்கின்றனர்.
எங்கள் ஆதரவு ரணிலுக்கு மைத்திரி குத்துக்கரணம்
அவ்வாறு எனினம் தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்பிக்கள் உள்ளிட்ட 134 எம்பிக்கள் வீடுகள் போராட்ட காரர்களினால் முற்றுகையிட பட போகிறது .
மேலும் இலங்கையில் புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டு விட்டார்.
நீங்கள் உங்கள் வேலைகளை பாருங்கள் என போராட்டக்கார்களை பார்த்து மகிந்த ராஜபக்ச கேவலமாக கூறிய வார்த்தை. போராட்ட கார்களை கொதிப்பில் உறைய வைத்துள்ளது.
ரணிலுக்கு ஒட்டு போட்டவர்களும் ரணிலும் வீட்டுக்கு செல்வார் மக்கள்அறிவிப்பு
வரும் வாரம் அளவில் போராட்டம் மீளவும் உக்கிரம் பெறும் என எதிர் பார்க்க படுகிறது .
மக்கள் போராட்டத்தை முன்னெடுப்பவர்களை குறிவைத்து கைது செய்யும் நகர்வில் ரணில் உத்தரவு வழங்கவுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
போராட்டக்காரர்கள் கூறுவது போன்று மீளவும் நாடு முடக்க பட்டால்
இலங்கை வரலாற்றில் குறைந்த நாட்கள் ஜனாதிபதியாக அங்கம் வகித்த பெருமை ரணிலுக்கு சாரும் என்பதை அடித்து கூறலாம் .
ரணில் ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் தள்ளாடும் புதிய அரசு
ரணில் ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் தள்ளாடும் புதிய அரசு
இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பாரளுமன்றினால் நியமிக்க பட்டுள்ள ரணில் விக்கிரசிங்கா ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடிக்க தயாராகிறது .
நரி ரணில் குட்டையை குழப்பி மீனை பிடித்து ஆட்சியில் ஏறி அமர்ந்தார் .அதே குட்டையை மீள குழப்பிட மக்கள் போராட்டம் தயாராகி வருகிறது.
இரும்பு கரம் கொண்டு பிரதமர் மற்றும் ஜனாதிபதி மாளிகைகள் என்பன பாதுகாப்பு இறுக்கம் மேற்கொள்ள பட்டுள்ளது .
ரணில் ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் தள்ளாடும் புதிய அரசு
கோட்டாவை துரத்தி ஜனாதிபதியாகும் ரணில் ஆட்டத்தை ஆரம்பித்தார்
இருந்த பொழுதும் இந்த இராணுவ தடைகளை உடைத்து மக்கள் போராட்டம் வெடிக்கும் என எதிர் பார்க்க படுகிறது.
ரணில் ஜனாதிபதி என்ற அறிவிப்பு போராட்ட காரர்கள் மத்தியில் கொதிப்பு நிலையை ஏற்படுத்தியுள்ளது .
பொம்மை ரணில் ராஜபக்ச குடும்பத்தை காப்பாற்றுவதில் தனது நாட்களை கழிப்பார் என்கின்ற நிலையில் மக்கள் போராட்டம் மீள வெடிக்க தயாராகி வருகிறது.
இவ்வாறு ரணில் ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்தால் இலங்கையில் குறுகிய நாட்கள் ஜனாதிபதியாக அங்கம் வகித்தவர் என்ற பெருமையை ரணில் தட்டி செல்வர் என்பதாகும்.
இவ்வாறு எனினும் 18 மதங்களில் ரணில் ஆட்சி கவிழ்க்க படும் நிலையே உள்ளது.





































