ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணிக்கு தலைவர் ரணில்
Posted in இலங்கை செய்திகள்

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணிக்கு தலைவர் ரணில்

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணிக்கு தலைவர் ரணில்


ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணிக்கு தலைவர் ரணில் ,ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணிக்கு ரணில் விக்கிரமசிங்க தலைமை தாங்குவார் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.

தற்போது புதிய கூட்டணியை உருவாக்கும் நோக்கில் எதிர்க்கட்சிகள் பலவும் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றன.

எனினும், பொதுத் தேர்தலில் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட ஐக்கிய தேசியக் கட்சி ஏற்கனவே தீர்மானித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைவது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி கலந்துரையாடிய போதிலும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்வைத்த நிபந்தனைகளால் பேச்சுவார்த்தை முறிவடைந்தது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையில் புதிய கூட்டணி
Posted in இலங்கை செய்திகள்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையில் புதிய கூட்டணி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையில் புதிய கூட்டணி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான புதிய கூட்டணியை அடுத்த வாரம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நேற்று (01) இடம்பெற்ற கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை குறிப்பிட்டுள்ளார்.

பொதுஜன ஐக்கிய முன்னணியின் அரசியலமைப்பு திருத்தம் செய்யப்பட்டுள்ளதால், எதிர்காலத்தில் அதற்கான அதிகாரிகளை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் நாயகம் துஷ்மந்த மித்ரபால தெரிவித்துள்ளார்

Posted in இலங்கை செய்திகள்

மகிந்த ராஜபக்ச தலைமையில் புதிய கூட்டணி – நாமல் ராஜபக்ச அறிவிப்பு

மகிந்த ராஜபக்ச தலைமையில் புதிய கூட்டணி – நாமல் ராஜபக்ச அறிவிப்பு

மகிந்தா ராஜபக்ச தலைமையில் ,இலங்கையில் புதிய கூட்டணி ஒன்று உருவாகும் என ,மகிந்த மகன் ,நாமல் ராஜ பக்ச அறிவித்துள்ளார் .

இலங்கை பெரும் பொருளாதார நெருக்கடியைச சந்திக்க ,பிரதான காரணமாக விளங்கியவர்கள் ,ராஜபக்ச குடும்பம் .

அவ்வாறன ராஜபக்ச குடும்பம், இலங்கையில் மீள் ஆட்சி பீடம் ஏறிட துடிக்கிறது .என்பதை நாமல் ராஜபக்ச அறிவின் மூலம் காணமுடிகிறது .

ஆட்சி அதிகார வெறியில் மூழ்கியுள்ள ,ராஜ பாக்ஸ் குடும்பம் ,மீளவும் நாட்டை கொள்ளையடிக்க திட்டமிடுவதை ,இந்த நிகழ்வுகள் கோடிட்டு காட்டுகின்றன .

இவ்வாறான மகா திருடர்களை இலங்கையை விட்டு சிங்களவர்கள் ,துரத்துவர்களா என்பதே கேள்வியாக உள்ளது .