Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
பெண் பொலிஸ் உத்தியோகத்தர்
பெண் பொலிஸ் உத்தியோகத்தர்
பெண் பொலிஸ் உத்தியோகத்தர் அவிசாவளையில் இருந்து கலிகமுவ நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியை பரிசோதிக்கும் போது பெண் பொலிஸ் உத்தியோகத்தரால் ஒருவருக்கும் சாரதி ஒருவருக்கும் இடையில் இடம்பெற்ற
சர்ச்சைக்குரிய உரையாடலின் காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ, குறித்த காணொளி தொகுக்கப்பட்டுள்ளதாக (Editing) தெரிவித்தார்.
பிந்தெனிய பொலிஸ்
பிந்தெனிய பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் பெண் பொலிஸ் உத்தியோகத்தரால் ஒருவருக்கும் முச்சக்கரவண்டி சாரதி ஒருவருக்கும் இடையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கருத்துத் தெரிவிக்கையில்,
“வாகன வருமான உத்தரவுப் பத்திரம் மற்றும் காப்பீட்டு சான்றிதழில் வெவ்வெறு பெயர்கள் இருந்துள்ளன. சாரதியாக மற்றொருவர் இருந்துள்ளார்.
வாகன வருமான உத்தரவுப் பத்திரம்
வாகன வருமான உத்தரவுப் பத்திரம் மற்றும் காப்பீட்டு சான்றிதழின் முகவரியும் வேறுபட்டுள்ளன. சாரதி வேறு பகுதியில் வசிப்பவர்.
இந்த காரணங்களால், வாகனத்தின் உரிமையை மாற்றாதது குறித்து அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்துள்ளது .
நீதிமன்ற உத்தரவின்படி ரூ. 5,000 அபராதமும் செலுத்தப்பட்டுள்ளது.” என்றார்.
சீரற்ற வானிலை மின்சாரம் துண்டிப்பு
சீரற்ற வானிலை மின்சாரம் துண்டிப்பு
சீரற்ற வானிலை மின்சாரம் துண்டிப்பு ,சீரற்ற வானிலை காரணமாக கடந்த 3 நாட்களில் 300,000க்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அமைச்சர் தனது உத்தியோகபூர்வ X கணக்கில் குறிப்பொன்றையிட்டு இதனைத் தெரிவித்துள்ளார்.
36,900 மின்சார துண்டிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
மின்விநியோகத்தை சீரமைக்க மேலதிக ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், மின்சாரம் துண்டிக்கப்பட்ட இடங்களுக்கு அடுத்த 24 மணித்தியாலங்களில் மின்சாரம் விநியோகிக்கப்படும் எனவும் அமைச்சர் தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
மின்சாரம் விநியோகம்
இதேவேளை, மின்சார பாவனையாளர்கள் 1987 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பு அல்லது குறுஞ் செய்தி அனுப்பி மின்வெட்டு தொடர்பில் அறிவிக்க முடியும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது அறிவிப்பில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பாதிக்க பட்ட ,பகுதிகளுக்கும் மின்சார தேவை உள்ள மக்களுக்கும் விரைவாக நடவடிக்கை மேற்கொள்ள பட்டு ,அவர்கள் மின்சாரம் பெறும் வழிகள் பெற்று தரப்படும் என தெரிவிக்க பட்டுள்ளது .
யாழில் வாள் வெட்டு
யாழில் வாள் வெட்டு
யாழில் வாள் வெட்டு ,யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவம் ஒன்றில் காங்கேசன்துறை பொலிஸ் பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் உத்தியோகஸ்தர் உட்பட மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தொல்புரம் பகுதியில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்திற்கு, பொலிஸ் உத்தியோகத்தர் உள்ளிட்ட இளைஞர்கள் இடையிலான மோதலே காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை
இதில் பொலிஸ் உத்தியோகத்தர் உள்ளிட்ட மூவர் காயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில், தனிப்பட்ட முரண்பாடே வாள் வெட்டு சம்பவத்திற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸ் விசாரணை
இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மகிந்த ராஜப்பா பாக்ஸர் ஆட்சியின் பின்னரே யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு சம்பவங்கள் அதிகரித்து காணப்பட ஆரம்பித்தன .
கோத்தபாயவின் நிழல் டிவிஷன் படையின் நேரடி அறிவுறுத்தலின் பிரகாரம் இந்த வாள்வெட்டு தாக்குதல் யாழ்ப்பாணத்தில் அதிகரிக்க காரணமாக விளங்கியது.
இவ்வாறான குற்ற சாட்டு மக்களினால் முன் வைக்க பட்டு வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது .
மாணவியை கொன்ற பேரூந்து
மாணவியை கொன்ற பேரூந்து
மாணவியை கொன்ற பேரூந்து ,புதிய கருவாத்தோட்டம் பிரதேசத்தில் இன்று காலை தனியார் பேருந்து ஒன்றின் சில்லில் சிக்கி 10 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.
கருவாத்தோட்டம் பொலிஸ் பிரிவு
புதிய கருவாத்தோட்டம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடஹென்தென்ன பிரதேசத்தில் பேருந்தில் இருந்து இறங்கி குறித்த பேருந்துக்கு முன்னால் வீதியைக் கடக்கச் சென்ற போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த மாணவி, புதிய கருவாத்தோட்டம் பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை புதிய கருவாத்தோட்டம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையில் அதிகரித்து செல்லும் பேரூந்து விபத்தினால் ,மக்கள் பேருந்துகளில் பயனாகவே அச்சம் கொண்டுள்ளனர் .
சாரதிகள் பேருந்துகளை வீதி விதிமுறைகளுக்கு ஏற்ப செலுத்தி செல்லா நிலையிலேயே ,இலங்கையில் நாடு தழுவிய நிலையில் அதிக பேரூந்து விபத்துக்கள் அதிகரித்து காணப்படுகின்றன என்ற விடயம் அம்பலமாகியுள்ளது .
நிலங்களை பயிர்ச்செய்கைக்கு பயன்படுத்துவதற்கு புதிய சட்டங்கள்
நிலங்களை பயிர்ச்செய்கைக்கு பயன்படுத்துவதற்கு புதிய சட்டங்கள்
நிலங்களை பயிர்ச்செய்கைக்கு பயன்படுத்துவதற்கு புதிய சட்டங்கள் ,சமூக வலுவூட்டலுக்கு நிலம் ஒரு முக்கிய காரணியாக இருப்பதால், பயிரிடப்படாத
பயிர்ச்செய்கைக்கு நிலங்களை பயன்படுத்துவதற்கு அவசியமான புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருவதாக சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் தெரிவித்தார்.
கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை
மேலும், சமூக வலுவூட்டலுக்காக கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைக்கு திறன்விருத்தி மற்றும் தொழிற்கல்வியை உள்ளடக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் இதனைத் தெரிவித்தார்.
இராஜாங்க அமைச்சர்
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல்,
சமூக வலுவூட்டலுக்காக கல்வி முறையில் மாற்றம் வரவேண்டும். அதன்படி, கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையில் கணிதம், மதம், மொழி
போன்ற பாடங்களில் சித்திபெறாமை, பரீட்சையில் சித்திபெறாததாகக் கருதக் கூடாது.
எனவே, க.பொ.த சாதாரணதரப் பரீட்சையின் பாடத்திட்டத்தில் திறன்விருத்தி மற்றும் தொழிற்கல்வி பாடத்தை உள்ளடக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, இத் தீர்மானத்தை அடுத்த ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்த கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
கல்விச் சீர்திருத்தங்கள்
அதற்கிணங்க எதிர்காலத்தில் ஒரு முழுமையான நிபுணத்துவத்துவம் மிக்கவர்களை உருவாக்குவதற்குத் தேவையான கல்விச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.
சமூகத்தை வலுப்படுத்த நிலம் ஒரு முக்கிய காரணியாகும்.
எனவே, பயிர்ச்செய்கைக்கு ஏற்ற, ஆனால் இதுவரை பயிரிடப்படாத நிலத்தைப் பயன்படுத்தும் வகையில் புதிய சட்டங்களை கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஓய்வூதியம் வழங்க கோரிக்கை
முழு நாட்டையும் வலுவூட்ட அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.
அதற்காக, அரச மற்றும் தனியார் துறையினர் மட்டுமின்றி அனைத்து சுயதொழில் செய்பவர்களுக்கும் பங்களிப்பு ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கின்றோம்.
அதேபோல், ஒரு தொழில்முயற்சியாளர்களைக் கொண்ட நாட்டை உருவாக்க நாமும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். அதனுடன், அனைவரும் தொழில் கல்வியையும் பெற வேண்டும்.
அபிவிருத்தி நாட்டை செய்வதற்கும் முன்னேற்றுவதற்கும் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
முன்பள்ளி ஆசிரியர்களை வலுவூட்டுவதற்காக “லியசவிய நிகழ்ச்சித்திட்டத்தையும்” நாங்கள் ஆரம்பித்துள்ளோம்.
அஸ்வெசும பெறுபவர்களில் 12 இலட்சம் பயனாளிகளுக்கு வலுவூட்டுவது எமது முக்கிய நோக்கமாகும்.
அதற்காக இந்த வருடம் 03 இலட்சம் குடும்பங்கள் வலுவூட்டப்பட வேண்டும். அதற்குத் தேவையான சுமார் 188,000 ஆவணங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.
உலக வங்கி திட்டத்தின் கீழ்
அதன்போது, உலக வங்கி திட்டத்தின் கீழ் 10,000 குடும்பங்களையும், ஆசிய அபிவிருத்தி வங்கியின் கீழ் 16,000 குடும்பங்களையும் வலுவூட்டுத் தேவையான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளன.
அதற்காக அதிகாரிகளுக்கு வழங்கப்படும் பயிற்சியும் இம்மாதம் நிறைவடையும்.
இளைஞர் சேவைகள் மன்றம், தெங்கு அபிவிருத்திச் சபை மற்றும் சிறுதோட்ட அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைந்து பல சமூக வலுவூட்டல் வேலைத்திட்டங்கள் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இவற்றின் மூலம் உற்பத்திப் பொருளாதாரத்தை உருவாக்க எதிர்பார்க்கின்றோம்” என்று சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் மேலும் தெரிவித்தார்.
போதைப்பொருளுடன் பிலிப்பைன்ஸ் பெண்கைது
போதைப்பொருளுடன் பிலிப்பைன்ஸ் பெண்கைது
கொக்கேய்ன் போதைப்பொருளுடன் பிலிப்பைன்ஸ் பெண்கைது கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சுங்கப் பிரிவினரால் கைது
விமான நிலைய சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட போது, அவரிடம் இருந்து 2 கிலோ 851 கிராம் கொக்கெய்ன் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த கொக்கெய்ன் தொகையின் பெறுமதி 200 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாகும் என சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கட்டார் ஊடாக
இந்த பெண் எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபாவிலிருந்து தோஹா – கட்டார் ஊடாக இந்த நாட்டுக்கு வந்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் தனது சூட்கேஸில் மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் கோதுமை மா அடங்கிய 03 பொதிகளுடன் கொக்கைன் போதைப்பொருள் அடங்கிய 03 பொதிகளையும் மறைத்து வைத்திருந்தார்.
அவர் பிலிப்பைன்ஸில் வசிக்கும் 47 வயது உதவி கணக்காளர் என்பது தெரியவந்துள்ளது.
சந்தேகநபரான பெண்ணின் நண்பியின் ஊடாக போதைப்பொருள் கடத்தல்காரர்களால் குறித்த போதைப்பொருள் இலங்கைக்குள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும், போதைப்பொருள் கடத்தல்காரர்களால், குறித்த பெண் 5 நாட்களுக்கு இலங்கையில் உள்ள சுற்றுலா ஹோட்டல்களில் தங்குவதற்கு தேவையான
வசதிகளை செய்து தருவதற்கு தேவையான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக மேலும் தகவல் வெளியாகியுள்ளது.
புதிய மதுபான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படும்
புதிய மதுபான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படும்
புதிய மதுபான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படும் ,நாட்டின் சனத்தொகை மற்றும் சுற்றுலா பயணிகளின் வருகை போன்ற காரணிகளின் அடிப்படையில் மாத்திரமே
நிதி இராஜாங்க அமைச்சர்
புதிய மதுபான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
கரவனெல்ல பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றின் பின்னர், சதொச நிறுவனத்திற்கு சொந்தமான 100 மதுபான அனுமதிப்பத்திரங்களில் 55 அனுமதிப்பத்திரங்களை அர்ஜுன் அலோசியஸுக்கு சொந்தமான வேறு
நிறுவனங்களுக்கு மாற்ற அரசாங்கம் செயற்பட்டு வருவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து ஊடகவியலாளர்கள் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் கூறியதாவது –
வசூலிக்கப்படும் வரிகள்
மதுபான நிறுவனங்களிடம் இருந்து வசூலிக்கப்படும் வரிகள் இவ்வளவு கவனம் செலுத்தி, முறைபடி வசூலித்த ஒரு காலம் வேறு எங்கும் இல்லை.
அத்துடன் குற்றம் சுமத்தப்பட்டது போல், சதொச நிறுவனத்திற்கு சொந்தமான மதுபான அனுமதிப்பத்திரங்களை வழங்குமாறு எமக்கு கோரிக்கை விடுக்கப்படவில்லை.
மேலும், இதுபோன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டாலும், மதுபான உரிமத்தை வேறு ஒருவருக்கு குத்தகைக்கு விட முடியாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆகவே சட்டவிரோத மதுபானம் உற்பத்திச் செய்ததைக் கட்டுப்படுத்துவதும் அரசாங்கத்தின் நோக்கமாகும். மேலும், குறிப்பிட்ட பகுதிக்கு மதுபான உரிமம் வழங்கினால், பிரதேச செயலாளர் மற்றும் பொலிசாரின் கருத்தை கட்டாயம் கேட்க
வேண்டும். நியாயமான ஆட்சேபனைகள் எழும் போது எந்த நேரத்திலும் அந்தப் பகுதிகளுக்கு மதுபான உரிமம் வழங்க நடவடிக்கை எடுக்க மாட்டோம்.
2003ம் ஆண்டு மட்டும் வரி விதிப்பால் மதுவின் விலை 108% அதிகரித்துள்ளது. ஒருபோதும் மதுவின் சட்டப்பூர்வ பயன்பாட்டை அரசு அதிகரிக்கப் போவதில்லை.
நண்பர்களுக்கு மதுபான உரிமம்
அரசு தனது நண்பர்களுக்கு மதுபான உரிமம் வழங்குவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரிக்கிறோம்.
தற்போது வரை, நாட்டிலுள்ள மதுபான நிறுவனங்களுக்கு வழங்கப்படும் ஆர்.பி. 04 உரிமம் வெளியிடும் போது முதற்கட்ட கட்டணம் எதுவும் செலுத்தப்படவில்லை என்றாலும், தற்போது ஒன்றரை கோடி ரூபாய் (15 மில்லியன்) கட்டணமாக வசூலிக்கின்றது.
அனைத்து மதுபான அனுமதிப்பத்திரங்களுக்கும் அறவிடப்படும் வருடாந்த கட்டணம் பத்து மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கமைவாக சட்டவிரோத
மதுபானத்தின் வளர்ச்சியை குறைப்பதற்கும் சட்டப்பூர்வ மது பாவனையை குறைப்பதற்கும் அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
வாங்கிய பாணில் கண்ணாடி துண்டு
மக்கள் வாங்கிய பாணில் கண்ணாடி துண்டு
வாங்கிய பாணில் கண்ணாடி துண்டு ,யாழ்ப்பாணம், மருதானர்மடத்தில் உள்ள கடையொன்றில் நேற்று வாங்கிய பாணில் கண்ணாடி துண்டுகளில் ஒன்று காணப்பட்டுள்ளது.
சாப்பிட்டவர் பாணுக்குள் கண்ணாடி
பாணை வாங்கி சாப்பிட்டவர் பாணுக்குள் கண்ணாடிப் துண்டை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
குறித்த கடைக்கு சுன்னாகம் பகுதியில் உள்ள வெதுப்பகம் ஒன்றில் இருந்தே பாண் வழங்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவரால் பொதுச் சுகாதார பரிசோதகருக்கு அறிவித்து சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
உரிய முறையில் உணவகங்களை கண்காணிக்க மறுப்பு
இலங்கை சுகாதார அமைச்சு உரிய முறையில் உணவகங்களை கண்காணிக்க மறுத்து வரும் நிலையிலேயே ,இவ்விதமான சம்பவங்கள் அதிகரித்து செல்ல காரணமாகிறது .
மக்கள் நாள் தோறும் அதிகம் உட்க்கொள்ளும் உணவாக பாண் காணப்படுகிறது .
அவ்வாறு அதிகம் உண்ணும் பாண் தயாரிக்கும் வெதுப்பகங்களை கண்காணிக்க மறுப்பதாலே ,இவ்வாறு பாண்களில் பொருட்கள் காணப்பட காரணமாகிறது .
மேற்படி குற்ற சாட்டை ,பாணை விரும்பி உண்ணும் மக்கள் தெரிவித்து வருகின்றனர் எனற விடயம் வெளியாகியுள்ளது குறிப்பிட தக்கது .
வீட்டுக்கு சென்றவர் வெட்டிக் கொலை
வீட்டுக்கு சென்றவர் வெட்டிக் கொலை
வீட்டுக்கு சென்றவர் வெட்டிக் கொலை ,மொறொந்துடுவ, பொல்ஹேன பகுதியில் கூரிய ஆயுதங்களால் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக மொறொந்துடுவ பொலிஸார் தெரிவித்தனர்.
பண்டாரகம பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாய்த்தர்க்கம் நீண்டதில் மோதல்
உயிரிழந்த நபருக்கும் அவரது மைத்துனருக்கும் இடையிலான வாய்த்தர்க்கம் நீண்டதில் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தில் சந்தேக நபரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்த நபர் மேலும் சிலருடன் பொல்ஹேன பிரதேசத்தில் உள்ள தனது சகோதரியின் வீட்டிற்கு சென்றிருந்த போது இந்த தகராறு ஏற்பட்டுள்ளது.
பொலிஸார் விசாரணை
சம்பவம் தொடர்பில் மொரந்துடுவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையில் சமீப காலங்களாக இவ்வாறு வெட்டி படுகொலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன .
வோரோதம் காரணமாகவே வெட்டி படுகொலைகள் அதிகம் இடம்பெறுவதாக குற்றவியல் விசாரணை குழுக்கள் தெரிவிக்கின்றன .
அவ்வாறு தெரிவிக்கும் காவல்துறையினால் கூட இவ்வாறு இடம்பெறும் வெட்டி படுகொலை சம்பவங்களை ,தடுக்க முடியவில்லை என்ற விடயம் வெளியாகியுள்ளது .
துப்பாக்கிச் சூடு களுத்துறையில்
களுத்துறையில் துப்பாக்கிச் சூடு
துப்பாக்கிச் சூடு களுத்துறையில் ,களுத்துறை, கட்டுகுருந்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், அவரது 8 வயது மகள் மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று (20) இரவு கட்டுகுருந்த புகையிரத நிலைய பொல வீதி பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் வீட்டினுள் புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கட்டுகுருந்த பிரதேசத்தில் வசிக்கும் 39 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் சுட்டு கொலை
குறித்த நபர் தனது 3 பிள்ளைகளுடன் தனது வீட்டில் இரவு உணவு அருந்திக் கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவரை சுட்டுக் கொன்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ரி 56 ரக துப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும், துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் துக்கதினம் பிரகடனம்
ஈரான் ஜனாதிபதிக்கு துக்கதினம் பிரகடனம்
இலங்கையில் துக்கதினம் பிரகடனம், ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மறைவை முன்னிட்டு இன்று (21) இலங்கையில் தேசிய துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார்.
ஈரானின் வடமேற்குப் பகுதியில்
ஈரானின் வடமேற்குப் பகுதியில் உள்ள மலைப் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உயிரிழந்தார்.
இந்த விபத்தில் ஹெலிகொப்டரில் பயணித்த ஈரான் வெளிவிவகார அமைச்சர், ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உட்பட 8 பேரும் உயிரிழந்துவிட்டதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஈரான் ஜனாதிபதியின் மறைவை முன்னிட்டு
இந்நிலையில் ஈரான் ஜனாதிபதியின் மறைவை முன்னிட்டு ,இலங்கையில் துக்கதினம் பிரகடனம் 5 நாட்கள் துக்க தினத்தை அனுசரிக்க ஈரான் நாட்டில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஈரான் ஜனாதிபதியின் மறைவுக்கு உலகத் தலைவர்கள் பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்துள்ளதோடு, பல நாடுகளில் துக்க தினங்களும் அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சிறைக்கைதி மூளைக் காய்ச்சலால் உயிரிழப்பு
சிறைக்கைதி மூளைக் காய்ச்சலால் உயிரிழப்பு
சிறைக்கைதி மூளைக் காய்ச்சலால் உயிரிழப்பு ,காய்ச்சலால் மாத்தறை சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மாத்தறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கைதி நேற்று (20) இரவு உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சுமார் 3 மாதங்களுக்கு முன்னர் சிறையில் அடைக்கப்பட்ட 24 வயதுடைய நபர் ஒருரே இவ்வாறு காய்ச்சலால் உயிரிழந்துள்ளார்.
குறித்த கைதி மூளைக் காய்ச்சலால் உயிரிழந்துள்ளதாகவும், இது தொடர்பான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இது தவிர மாத்தறை சிறைச்சாலையில் உள்ள மற்றுமொரு கைதியும் காய்ச்சல் காரணமாக மாத்தறை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த டிசம்பரில் மாத்தறை சிறைச்சாலையில் மூளைக் காய்ச்சல் கைதிகள் பாதிக்கப்பட்டதோடு, சில மரணங்களும் பதிவாகியமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை அரசைனால் பராமரிக்க படும் சிறை சாலைகளில் ,நோயினால் பாதிக்க பட்டு மரணமாகவும் நிலையில் ,கைதிகள் நிலை உள்ளது என்ற விடயம் ,இந்த கைதி மரணத்தின் ஊடக அம்பல .பட்டுள்ளது
சிறை சாலைகள் மக்கள் வாழ்வதற்கு ஏற்ற இடம் அல்ல என்பதையும் ,இவ்வாறு நோய் வாய்ப்பட்டு இறந்து விடுங்கள் என்ற விடயமே, இதன் ஊடக குற்றங்களை விளைவிக்கும் நபர்களுக்கு இலங்கை சிறைச்சாலை நிர்வாகம் தெரிவிப்பதை இதன் ஊடாக காணமுடிகிறது .
உழவு இயந்திரம் கவிழ்ந்தது
உழவு இயந்திரம் கவிழ்ந்தது
உழவு இயந்திரம் கவிழ்ந்தது ,பல பிரதேசங்களில் இடம்பெற்ற 5 வீதி விபத்துக்களில் பாடசாலை மாணவன் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்துகள் நேற்று (20) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
முல்லைத்தீவு பரந்தன் வீதியில்வீதி விபத்து
புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு பரந்தன் வீதியில் மூங்கிலாறு பகுதியில் உழவு இயந்திரம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பாடசாலை மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.
இதில் பயணித்த 6 பேர் படுகாயமடைந்து மூங்கிலாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதில் தம்பிராசபுரம், தர்மபுரம் பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய பாடசாலை மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.
உழவு இயந்திரத்தில் பயணித்த 14 பேர் முல்லயாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆலயம் ஒன்றில் இடம்பெற்ற வைபவம் ஒன்றிற்காக பயணித்த போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முச்சக்கர வண்டி லொறியுடன் மோதல்
இதேவேளை, நீர்கொழும்பு – திவுலப்பிட்டி வீதியில் முச்சக்கர வண்டி ஒன்று லொறியுடன் மோதியதில், பலந்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அம்பிலிபிட்டிய – நோனாகம மேரி ஹல்மில்லகெட்டிய பிரதேசத்தில் லொறி ஒன்று எதிர்திசையில் வந்த முச்சக்கர வண்டியுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி
விபத்தில் காயமடைந்த முச்சக்கரவண்டியின் சாரதியும் அதில் பயணித்த இருவர் எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் முச்சக்கரவண்டியின் சாரதி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் திக்வெல்ல பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவர்.
தெலில்பலே பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அளவெட்டி – மைலோட் வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 35 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மின்கம்பத்தில் மோதி விபத்து
மோட்டார் சைக்கிளை கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விட்டு விலகி மின்கம்பத்தில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
குளியாபிட்டிய – நாரம்மல வீதியின் தும்மோதர பிரதேசத்தில் 2 மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 34 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இலங்கையில் இடம்பெறும் இவ்விதமான விபத்துக்களை தடுத்திட அரசும் ,அரசு இயக்கும் காவல்த்துறையும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வேண்டுதல் விடுவிக்க பட்டுள்ளது .
ISISசேர்ந்த இலங்கையர் இந்தியாவில் கைது
ISISசேர்ந்த இலங்கையர் இந்தியாவில் கைது
ISISசேர்ந்த இலங்கையர் இந்தியாவில் கைது ,இலங்கையைச் சேர்ந்த நால்வரை குஜராத் தீவிரவாத தடுப்புப் பிரிவு, இந்தியாவில் அகமதாபாத்திலுள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்துள்ளது.
ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் என்ற சந்தேகத்தில் குறித்த நால்வரையும் கைது செய்துள்ள குஜராத் தீவிரவாத தடுப்புப் பிரிவு.
தீவிர விசாரணை
தீவிர விசாரணைக்காக சந்தேக நபர்களை அழைத்துச் சென்றுள்ளது.
அகமதாபாத் விமான நிலையத்திற்கு சந்தேக நபர்கள் நால்வரும் ஏன் வந்தார்கள் என்பதற்கான துல்லியமான காரணம் இதுவரை தெளிவாக தெரியவில்லை.
விமான நிலையம் முழுவதும் பாதுகாப்பு
இதனால் அந்த விமான நிலையம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஐ.பி. எல் போட்டிகள் இடம்பெறுவதால் தகுதிச் சுற்று மற்றும் எலிமினேட்டர் ஆட்டங்களுக்காக மூன்று அணிகள், அகமதாபாத் விமான நிலையத்திற்கு வருவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னதாக குறித்த நால்வரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர் .
இந்த கைதை அடுத்து மிக பெரும் தாக்குதல் ஒன்று முறியடிக்க பட்டுள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது .
இராணுவவாகனம் மோதி யுவதி பலி
இராணுவவாகனம் மோதி யுவதி பலி
இராணுவவாகனம் மோதி யுவதி பலி ,யாழ்ப்பாணத்தில் இராணுவ வாகனம் மோதி யுவதியொருவர், திங்கட்கிழமை (20) உயிரிழந்துள்ளார்.
புத்தூர் வாதரவத்தையை சேர்ந்த 23 வயதுடைய சுதாகரன் சாருஜா என்ற யுவதியே உயிரிழந்துள்ளார்.
துவிச்சக்கர வண்டியில் பால் எடுத்து சென்ற வேளை , புத்தூர் – கனகம்புளியடி வீதியில் வீரவாணி சந்திக்கு அருகில் இராணுவ வாகனம் மோதியதில் யுவதி படுகாயமடைந்துள்ளார்.
படுகாயமடைந்த யுவதியை அங்கிருந்தவர்கள் மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை யுவதி உயிரிழந்துள்ளார்.
யுவதியின் சடலம் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த யுவதியின் பிறந்தநாள் இன்றாகும் (திங்கட்கிழமை 20) என்பதும் குறிப்பிடத்தக்கது.
நாள்தோறும் வெளியாகவும் இலங்கை செய்திகளில் வாகன விபத்துக்கள் தலைப்பு செய்திகளாக வலம் வருகின்றன .
இலங்கையில் விபத்துக்கள் அதிகம் என்பதே இலங்கை தலைப்பு செய்திகள் ,மூலம் இலங்கை நாடு ஆபத்தான நாடக உள்ளதை இவை எடுத்து காட்டுகின்றன .
இந்த அவல நிலை மாற்றம் பெற்று இலங்கை வீதி போக்குவரத்திற்கு சிறந்த நாடக என்று மாற்றம் பெறும் என்பதே நமது மக்கள் வேண்டுதலாக உள்ளது .
இலங்கை வருகிறார் எலோன் மஸ்க்
இலங்கை வருகிறார் எலோன் மஸ்க்
இலங்கை வருகிறார் எலோன் மஸ்க் ,தனது ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவையை தொடங்குவதற்காக இந்த ஆண்டு இலங்கைக்கு வருமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பை எலோன் மஸ்க் ஏற்றுக்கொண்டதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி விக்கிரமசிங்க
ஜனாதிபதி விக்கிரமசிங்க, காலநிலை விவகாரங்கள் தொடர்பான தனது ஆலோசகர் ருவான் விஜேவர்தனவுடன் நேற்று இந்தோனேசியாவின் பாலியில்
எலோனைச் சந்தித்து, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் உலக அரசியல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடினார்.
எவ்வாறாயினும், எலோனின் இலங்கை விஜயத்தின் சரியான திகதிகள் இன்னும் நிர்ணயிக்கப்படாததுடன் இலங்கை அரசாங்கம் எலோனின் குழுவுடன் தொடர்பு கொண்டு ஏற்பாடுகளை தீர்மானிக்கவுள்ளது.
“இலங்கை எவ்வாறு ஒப்புதல் செயல்முறையை விரைவுபடுத்துகிறது என்பதைப் பொறுத்தே, அது முடிந்தவுடன், Starlink ஐ அறிமுகப்படுத்த எலோன் இலங்கைக்கு வருவார்.
இந்த ஆண்டின் இறுதியில் அவர் இலங்கைக்கு வருவார் என்று தற்காலிகமாக விவாதிக்கப்பட்டது” என்று தகவலறிந்த வட்டாரம் தெரிவித்தது.
டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் பில்லியனர் தலைவரும், எக்ஸ் சமூக தளத்தின் உரிமையாளருமான எலோன் மஸ்க், ஸ்டார்லிங்க்
செயற்கைக்கோள் இணையச் சேவையைத் தொடங்க இந்தோனேசியாவின் ரிசார்ட் தீவான பாலிக்கு வந்தார்.
ஸ்டார்லிங்க் சேவையை இலங்கையில்
ஸ்டார்லிங்க் சேவையை இலங்கையில் தொடங்குவதற்கு எலோன் விண்ணப்பம் அனுப்பியிருந்ததுடன், மேலும் அந்தச் செயல்முறையை விரைவுபடுத்துவதற்கு ஜனாதிபதி ஒப்புக்கொண்டார்.
இலங்கையின் கிராமிய கல்வியை அபிவிருத்தி செய்வதற்கு இவ்வாறான இணைய சேவை உதவிகரமாக அமையும் எனவும் ஜனாதிபதி கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.
சிக்கிய திருட்டு கும்பல்
சிக்கிய திருட்டு கும்பல்
சிக்கிய திருட்டு கும்பல் ,பல மாதங்களாக ஒழுங்கமைக்கப்பட்ட கால்நடை திருட்டில் ஈடுபட்டு வந்த முன்னாள் இராணுவ சிப்பாய் உட்பட 7 பேரை போதைப்பொருள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் பிலியந்தலை பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
இந்த வருடத்தின் கடந்த 5 மாதங்களில் நாட்டின் பல பகுதிகளில் சுமார் 50 மாடுகளை இந்தக் குழுவினர் திருடிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
பிலியந்தலை பிரதேசத்தில் மாடு திருட்டில் ஈடுபட்டும் வேன் ஒன்று உலாவுவதாக பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருக்கு கிடைத்த தகவலின்
அடிப்படையில் பிலியந்தலை பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசேட சோதனை நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.
வேனை பொலிஸ் அதிகாரிகள் வழிமறித்தனர்.
இதன்படி மொரட்டுவை வீதியில் தெனிய பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளை பயன்படுத்தி சந்தேகத்திற்கிடமான வேனை பொலிஸ் அதிகாரிகள் வழிமறித்தனர்.
இதன்போது அந்த வேனில் இருந்து 02 கைக்குண்டுகள், 15 கிராம் ஐஸ் போதைப்பொருள், மாடுகளை அறுப்பதற்கு பயன்படுத்தப்படும் இரண்டு வாள்கள், மன்னா கத்தி, பொல்லு, கயிறுகள் என்பன காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதன்படி குறித்த வாகனத்தில் இருந்த 05 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் இராணுவ விசேட படையின் ஓய்வுபெற்ற ராணுவ சிப்பாய் ஒருவர் தலைமையில் மாடு கடத்தல் நடவடிக்கை இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.
இந்த வருடத்தின் கடந்த 5 மாதங்களில் கெஸ்பேவ, பிலியந்தலை, கஹத்துடுவ, பொரலஸ்கமுவ, மொரந்துடுவ, பண்டாரகம மற்றும் ஹிரண ஆகிய 07 பொலிஸ் பிரிவுகளில் சுமார் 50 மாடுகள் திருடப்பட்டுள்ளதாக விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
திருடப்பட்ட மாடுகள்
இவ்வாறு திருடப்பட்ட மாடுகள், வத்தளை, மாபோல மற்றும் காலி பிரதேசங்களில் உள்ள இறைச்சி கூடங்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன.
சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது, கெஸ்பேவ பிரதேசத்தில் வாடகைக்கு தங்கியிருந்த வீட்டை சோதனையிட்ட போது, மற்றுமொரு கைக் குண்டு, 05 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் பல போலி வாகன இலக்கத் தகடுகளுடன் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் ருக்கஹவில நிட்டம்புவ, பண்டாரகம வெல்மின்ன, கொழும்பன்ன மற்றும் கெஸ்பேவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாகும்.
சந்தேகநபர்கள் கெஸ்பேவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
நாட்டில் உற்பத்தி நடவடிக்கைகளில் பின்னடைவு
நாட்டில் உற்பத்தி நடவடிக்கைகளில் பின்னடைவு
நாட்டில் உற்பத்தி நடவடிக்கைகளில் ,ஏப்ரல் மாதத்தில், நாட்டில் உற்பத்தி நடவடிக்கைகளில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
மார்ச் மாதத்தில் 62.05 வீதமாக இருந்த உற்பத்தித் துறையின் இலங்கை கொள்வனவு முகாமையாளர்களின் சுட்டெண் கடந்த மாதத்தில் 42 வீதமாக பதிவாகியுள்ளது.
அதன்படி, இந்த மாதத்தில் புதிய முன்பதிவு, உற்பத்தி, வேலைவாய்ப்பு மற்றும் மொத்த கொள்முதல் குறியீடுகளில் ஏற்பட்ட சரிவின் விளைவாக ஒட்டுமொத்த சுட்டெண் வீழ்ச்சியடைந்ததாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விடுமுறை
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விடுமுறைகள் காரணமாக ஏப்ரல் மாதத்தில் பல தொழிற்சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டமையே இந்த பின்னடைவுக்கு
முக்கிய காரணம் எனவும், நீண்ட விடுமுறை காரணமாக விநியோகஸ்தர்கள் முன்பதிவை வழங்குவதற்கு எடுத்துக்கொண்ட நேரம் முன்னையதை விட ஏப்ரலில் வேகமாக அதிகரித்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேவைத் துறையில், இலங்கை கொள்வனவு முகாமையாளர்களின் சுட்டெண் 56.7 வீத மெதுவான வளர்ச்சியைக் காட்டியுள்ளது.
மார்ச் மாதத்தில் கொள்கை வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டதன் மூலம், நிதிச் சேவைகள் துணைத் துறையின் வணிக நடவடிக்கைகள் மேலும் வளர்ச்சியடைந்துள்ளதுடன்,
பண்டிகைக் காலத்தின் தேவை
பண்டிகைக் காலத்தின் தேவைக்கு மத்தியில் மொத்த மற்றும் சில்லறை வர்த்தக உப பிரிவின் நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில், நிகழ்ச்சிகள் மற்றும் ஒளிபரப்பு, தொலைத்தொடர்பு மற்றும் சொத்து விற்பனை ஆகிய துணைத் துறைகளும் ஏப்ரல் மாதத்தில் சாதகமான முன்னேற்றங்களை பதிவு செய்துள்ளன.
எவ்வாறாயினும், மார்ச்ச மாதத்துடன் ஒப்பிடும் போது ஏப்ரல் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்ததிற்கு அமைய தங்குமிடம் மற்றும்
உணவு விநியோக சேவையின் உப பிரிவானது சிறிதளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் யார்
ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் யார்
ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் யார் ,ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் பதவிக்கு தற்போது ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு, வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரி ஒருவரை தூதரகத்திற்கு அனுப்ப அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
புதிய தூதுவர் நியமிக்கப்படும் வரை அந்த பதவிக்கு வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் பொறுப்பு வகிப்பார் என தெரிவிக்கப்படுகிறது.
ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவரின் பதவிக்காலம் நிறைவடைந்துள்ள நிலையில் புதிய தூதுவரை நியமிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பதவி பல மாதங்களாக வெற்றிடமாக உள்ளதால் தற்போது பரபரப்பாக பேசப்படும் உக்ரைன் – ரஷ்யா போருக்கு ராணுவ வீரர்களை அனுப்பிய விவகாரம் பெரும் நெருக்கடியாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது.
ரசியாவுக்கு ஆதரவாக இலங்கை இராணுவத்தின் போரிட சென்றதன் பின்புலத்தில் ,இலங்கைக்கான ரஷ்ய இலங்கை தூதர் உள்ளார் என்ற குற்ற சாட்டின் அடிப்படையில் இந்த விடயம் கேள்வி எழுப்ப பட்டுள்ளது .
மகிந்தவின் ஆட்ச்சியில் அவரது சகோதரர் உறவு காரர் ஒருவர்ரஷ்ய தூதரக இருந்து கோட்டாவுக்கு ஆதரவை வழங்கி வந்தார் என்பது குறிப்பிட தக்கது .
அதிசய வேம்பு பார்க்க வரும்மக்கள்
அதிசய வேம்பு பார்க்க வரும்மக்கள்
அதிசய வேம்பு பார்க்க வரும்மக்கள் ,அக்கரைப்பற்றில் உள்ள 241ஆம் படைப்பிரிவின் தலைமை அலுவலகத்தின் சிற்றுண்டிச்சாலையின் முன்னாள் .
இருக்கும் வேம்பு மரத்திலிருந்து கடந்த ஒரு வாரகாலமாக பால்போன்ற திரவம் வழிந்து வருவதை அவதானிக்க முடிகின்றது.
ஆரம்பத்தில் சாதாரணமாக வெளியேற தொடங்கிய பால்போன்ற பதார்த்தம் தொடர்ந்தும் வழிந்து வருவதுடன் போத்தல்களில் சேமிக்கும் அளவிற்கும் வெளியேறி வருவதை காண முடிகின்றது.
போத்தல்களில் பால் சேமிப்பு
சில காலங்களில் சில வேம்பு மரங்களிலிருந்து இது போன்ற பால் வெளியேறும் சம்பவங்கள் நடைபெற்றாலும் கூட கண்ணகி அம்மனின் ஆலயங்கள்
திறக்கப்பட்டு திருக்குளிர்த்தி உற்வசங்கள் நடைபெற்றுவரும் இக்காலத்தில் இவ்வாறு பால்போன்ற திரவம் வழிந்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் தற்போது இதனை பலரும் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.
வேம்பு மரத்தின் பால் சுரக்கும் காட்சி
இந்த அதியச வேம்பு மரத்தின் பால் சுரக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது .
இதில் வடியும் திரவம் என்ன என்பது தொடர்பாக மக்கள் மத்தியில் பலவித பேச்சுக்கள் ஊசலாடுகின்றன .
குறித்த வேப்ப மரத்திலிருந்து வெளியேறும் பால்போன்ற திரவம் இனிப்பாக உள்ளமையும் அப்பிரதேசத்தில் ஒரு வகை வாசம் வீசி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.






























