சட்டமா அதிபரை அவசரமாக சந்தித்தார் ஜனாதிபதி
Posted in இலங்கை செய்திகள்

சட்டமா அதிபரை அவசரமாக சந்தித்தார் ஜனாதிபதி

சட்டமா அதிபரை அவசரமாக சந்தித்தார் ஜனாதிபதி

சட்டமா அதிபரை அவசரமாக சந்தித்தார் ஜனாதிபதி ,ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை வழக்கில் மூன்று சந்தேக நபர்களை விடுதலை செய்யும் முடிவு குறித்த காரணங்களை அறிய, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க

சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்கவை இன்று (6) ஜனாதிபதி செயலகத்திற்குl அழைத்துள்ளார்.

இவர்களுடன், நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவும் இணைந்து கொண்டார்.

சுமார் 2 மணி நேரம் நீடித்த கலந்துரையாடலுக்குப் பிறகு, சட்டமா அதிபரும் நீதி அமைச்சரும் மாலை 4 மணியளவில் ஜனாதிபதி செயலகத்திலிருந்து வெளியேறினர்.

சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியரும், மூத்த பத்திரிகையாளருமான லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பான வழக்கில், சாட்சியங்களை மறைத்தல் மற்றும் சாட்சிகளுக்கு அழுத்தம் கொடுத்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட சந்தேக நபர்கள் மூவரை வழக்கில் இருந்து விடுவிக்கலாம் என்று சட்டமா அதிபர் ஒரு கடிதம் மூலம் குற்றப் புலனாய்வு பிரிவுக்கு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

மன்னர் ஆயரை சந்தித்தார் ரணில்
Posted in இலங்கை செய்திகள்

மன்னர் ஆயரை சந்தித்தார் ரணில்

மன்னர் ஆயரை சந்தித்தார் ரணில்

மன்னர் ஆயரை சந்தித்தார் ரணில் ,ஜனாதிபதி ரணில் விக்ரமா சிங்கா அவர்கள் மன்னர் மறை மாவட்ட ஆயர் ஆதி வணக்கத்திற்குரிய கலாநிதி இமானுவேல் ஆகியோருடன் சந்திப்பை மேற்கொண்டுள்ளார் .

இவர் மிக முக்கியமான மதத் தலைவராக இலங்கையில் காணப்படுகின்றார் .

ஒரு சக்தி வாய்ந்த மதத் தலைவராக காணப்படும் இவருடன் இந்த நேரத்தில் ராணுவ விக்கிரமசிங்கா பேச்சுவார்த்தையில் நடத்தியுள்ளார் .

இலங்கையில் இடம்பெற்ற தேவாலய குண்டுவெடிப்பு தொடர்பாகவும் அதற்கான நீதி விசாரணைகள் தேவை எனவும் அவர் ஜனாதிபதியிடம் வேண்டுதல் விடுதுள்ளதாக புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன .

தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பின் முக்கிய சூத்திரதாதிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை எனவும் அவர்கள் தற்பொழுது ரணில் அரசுடன் ஆதரவு தெரிவித்து சுகபோகங்களை அனுபவித்து வருவதான குற்றச்சாட்டு ஒன்று மக்கள் சமூகத்தின் முன்னாள் வைக்கப்படுகின்றது .

அவ்வாறு அவர்களை கைது செய்து நீதியை நிலை நாட்டி இலங்கை இறையாண்மை கொண்ட நீதியின் சட்டத்தின் பால் உயிர் வாழ்கிறது என்பதே நிலைநாட்ட வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேர்தல் வருகின்ற நேரத்தில் இவ்வாறான மதத்தலைவர்கள் மிக முக்கியமான தலைவர்கள் தமிழ் மக்கள் பிரதிநிதிகளை சந்திது வருகின்றார் .

தனது கட்சிக்கு ஆதரவைத் தேடும் பொருட்டு இவ்வாறான சந்திப்புகளை அவர்கள் மேற்கொண்டு வருவது இது அரசியல் ராஜதந்திர என தெரிவிக்க படுகிறது .

மக்களை கவரும் ஒரு நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது .

அவரது ஆதரவு ஊடகங்கள் வாயிலாக இவர் என்ன செய்திகளை பரப்பி நாங்கள் இணக்கப்படும் கூடிய அரசியல் தீர்வை ஏற்படுத்தப் போவதான ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்துவதாக காண முடிகின்றது.

15 ஆண்டுகள் கழிந்தும் தமிழர்களுக்கான தீர்வு வழங்கப்படாத நிலையிலும், தங்களுடைய விதிக்கப்பட்டிருந்த பயங்கரவாத தடைச் சட்டம் எடுக்கப்படாத போதும் ,இப்பொழுதும் இந்த பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகிறது .