சந்திரிகா வீட்டில் துப்பாக்கிச் சூடு

சந்திரிகா வீட்டில் துப்பாக்கிச் சூடு
Spread the love

சந்திரிகா வீட்டில் துப்பாக்கிச் சூடு

சந்திரிகா வீட்டில் துப்பாக்கிச் சூடு , இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்காவிற்கு சொந்தமான ஹரஹலா தோட்டத்தில் தேங்காய் திருட முற்பட்ட திருடன் மீது அங்கு இருந்து வாயில் காவலாளி திடீர் துப்பாக்கிச் சூட்டு தாக்குதலை நடத்தினார்.

இந்த துப்பாக்கி சூட்டு தாக்குதலில் பலத்த காயமடைந்த நிலையில் அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் .

பொலிஸ் துப்பாக்கிச் சூடு

23 வயதுடைய இளைஞனே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காக பலத்த காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தார் .

அவசர சிகிச்சை மேலதிகமாக வழங்கப்பட வேண்டிய காரணத்தினால் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டுள்ளார் .

அதனை அடுத்து இந்த துப்பாக்கி சூட்டு தாக்குதலை நடத்திய 2 போலீஸ் காவலர்கள் காவலர்கள் தற்பொழுது கைது செய்யப்பட்டு தீவிர விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர் .

தேங்காய் திருட வந்தவர் மீது ஏன் துப்பாக்கி சூட்டு தாக்குதலை நடத்த வேண்டும் என்ற கேள்வி இப்பொழுது எழுப்பப்பட்டுள்ளது .

இலங்கையில் காவல்துறையினர் வன்முறையாளர்கள்

இலங்கையில் காவல்துறையினர் வன்முறையாளர்கள் என தெரிவித்து அவர்கள் மீது உடனடியாக துப்பாக்கி சூட்டு தாக்குதலை நடத்துவது இயல்பான ஒரு விடயமாக காணப்படுகின்றது.

தேர்தல் இடம்பெற உள்ள இந்த காலப்பகுதியில் சந்திரிகாவின் வீட்டில் இடம்பெற்ற இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தேர்தலை விட மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது .

இது ஒரு திட்டமிடப்பட்ட சதியா அல்லது தவறுதலாக இடம்பெற்ற ஒரு விடயமா என்பது தொடர்பாகவே ,போலீசார் தற்பொழுது விசாரணை ஆரம்பித்து இருக்கின்றனர்.