Tag: விசாரணைகள்
மகிந்த மனைவி சிக்கினார் ஊழல் விசாரணைகள் ஆரம்பம்
மகிந்த மனைவி சிக்கினார் ஊழல் விசாரணைகள் ஆரம்பம்
மகிந்த மனைவி சிக்கினார் ஊழல் விசாரணைகள் ஆரம்பம் ,ஷிரந்தியின் இரண்டு நில பரிவர்த்தனைகள் குறித்து விசாரணை நடத்த சிஐடி உத்தரவிட்டுள்ளது
கம்பஹாவில் முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட நில பரிவர்த்தனைகள் குறித்து சிஐடி விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக துணை தொழிலாளர் அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இது தொடர்பாக பதில் ஐஜிபி கோரிக்கை விடுத்துள்ளதாக ஜெயசிங்க கூறினார்.
இம்புல்கொட மற்றும் மாகோலவில் உள்ள நிலங்கள் 2012 இல் வாங்கப்பட்டு 2023 இல் விற்கப்பட்டதாக துணை அமைச்சர் கூறினார்.
மகிந்த ராஜபக்ச ஆன்மீக அறக்கட்டளையின் கீழ் 2012 இல் இஹல இம்புல்கொடவில் ரூ. 500,000 க்கு வாங்கப்பட்ட ஒரு நிலம் ரூ. 10 மில்லியனுக்கு
விற்கப்பட்டுள்ளதாகவும், அந்த நிலத்தின் உரிமையாளர் தங்காலை, கார்ல்டன் ஹவுஸைச் சேர்ந்த ஷிரந்தி விக்ரமசிங்க ராஜபக்ஷ என்றும் அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
மாகோலவில் ரூ. 01 மில்லியனுக்கு வாங்கப்பட்ட மற்றொரு நிலம் ரூ. 12 மில்லியனுக்கு விற்கப்பட்டுள்ளதாகவும், அதன் உரிமையாளர் தங்காலை, கார்ல்டன் ஹவுஸைச் சேர்ந்த ஷிரந்தி விக்ரமசிங்க ராஜபக்ஷ என்றும்
ஜெயசிங்க கூறினார். நில பரிவர்த்தனைகள் தொடர்பான விசாரணைகளில், இந்தப் பத்திரங்கள் அலரி மாளிகையில் வரையப்பட்டு கையொப்பமிடப்பட்டு,
2023 ஆம் ஆண்டு நுகேகொடையில் வசிக்கும் ஒருவருக்கு மாற்றப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
ஊடகவியலாளர் தாக்குதல் விசாரணைகள் ஆரம்பம்
ஊடகவியலாளர் தாக்குதல் விசாரணைகள் ஆரம்பம்
ஊடகவியலாளர் தாக்குதல் விசாரணைகள் ஆரம்பம், யாழ்ப்பாணம் அச்சுவலி பகுதியில் ஊடகவியலாளர் ஒருவர் வீட்டுக்குள் நுழைந்த மர்மகும்பல் அங்கு திடீர்னு நடத்தி மோட்டார் சைக்கிள் எரித்து வீடுகளை தாக்கி சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றனர் .
மாற்று பாலினத்துக்கு எதிராக குறித்த ஊடகவியலாளர்கள் மாற்றுக்கருத்தினை தெரிவித்த நிலையில் ஆக்கிரமித்தவர்கள் இந்த தாக்குதலை நடத்தி இருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது .
ஆனால் மிகப்பெரும் ஊடகவியலாளராகவும் மக்கள் சமூக அக்கறையுடன் செயல்பட்டு வருபவர் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் செய்திகள் தெரிவிக்கின்றன.
தனிநபர் தாக்குதலாக பார்க்கப்படுகின்றது.
யாழ்ப்பாணம் அச்சுவேலி பத்தமேனி காளி கோவில் பகுதியில் உள்ள ஊடகவியலாளரான பிரதிபரின் வீட்டின் மீது இந்த தாக்குதல் இடம்பெற்றது .
இந்த தாக்குதல் தனிநபர் தாக்குதலாக பார்க்கப்படுகின்றது.
இதன் பொழுது போக்கில் உள்ள வாகனங்கள் சேதமாக்கப்பட்ட நிலையில் தற்போது யாழ்ப்பாணத்தின் ஆளுநரின் விசேட உத்தரவின் அடிப்படையில் நான்கு போலீஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இந்த விசாரணையின் பொழுது மர்ம நபர்கள் தாக்குதலை நடத்தியவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் அவர்களது பின்புலம் யாது என்பது விரைவில் தெரியவரும் என்பதாக அந்த ஊடக நபர் வட்டாரங்கள் ஊடாக செய்திகள் வெளியாகி உள்ளது .
யாழ்ப்பாணத்தில் இவ்வாறான வாள் வெட்டு அத்துமீறல் சம்பவங்கள் வன்முறை சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன .
காவல்துறையும் ராணுவமும் வீதிக்கு வீதி குவிப்பு
எனினும் காவல்துறையும் ராணுவமும் வீதிக்கு வீதி குவிக்கப்பட்டுள்ள பொழுதும் இவ்வாறான பல்வேறுபட்ட சம்பவங்கள் தொடர்கின்றன .
தாலியறுப்பு சம்பவங்கள், நகைதிருட்டுகள், தடுக்க முடியாது இலங்கை போலீசார் திணறி வருகின்றனர் .
அவ்வாறான நிலையில் தற்போது ஊடகவியலாளர் வீட்டில், இந்த தாக்குதல் இடம் பெற்றுள்ளது ,பேசு பொருளாக தற்போது மாற்றம் பெற்றுள்ளது.
காணாமல் போனவர்கள் விசாரணைகள் வரும் ஆண்டு நிறைவடையும் இலங்கை
காணாமல் போனவர்கள் விசாரணைகள் வரும் ஆண்டு நிறைவடையும் இலங்கை
இலங்கையில் இறுதி போரின் பொழுது கைது செய்யப்பட்டு காணமால் போன உறவுகள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
இந்த விசாரணைகள் எதிர்வரும் ஆண்டு நிறைவடையும் என என அமெரிக்கா தூதுவரிடம் இலங்கை நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார் .
மகிந்தா ,மைத்திரி ,கோத்தபாயா அதன் பின்னர் ரணில் விக்கிரமசிங்கா என நான்கு ஜனாதிபதிகள் ,ஆண்டு ஆட்சி புரிந்த பொழுதும் ,இதுவரை இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்படவில்லை என்பது இங்கே கவனிக்க தக்கது .


















