தோழனே
Posted in கவிதைகள்

தோழனே…

தோழனே…

நீ எனக்கு நண்பனாக கிடைக்க
நான் ஏது தவம் செய்தேனோ?
கலகலவென நகைக்கும் வயதில்
சலனமில்லாமல் இவ்வளவு சோகமா?

உனக்குள் இருக்கும் சோகத்தை
எனக்குள் இன்றே புதைத்துவிட்டு
கள்ளமின்றிச் சிரித்திட
உல்லாச வானில் பறந்திடு

உன் இலட்சியங்களை நிறைவேற்ற
என்றும் உனக்கு துணையாவேன்
இன்றே சோகத்தை மறந்திடு
நன்றே நடக்கும் உன்வாழ்வில்

பழையனவற்றை மறந்திடு
புதியதை தேடி விரைந்திடு
சோகத்தை தூக்கி எறிந்திடு
தோழி என் தோளில் தலை சாய்ந்திடு

ஆயிரம் உறவுகள் தோன்றியும்
அன்பில்லையே என சலிக்காதே
நட்பைவிட வேறேது பெரிதாகிடும்
நானிருப்பேன் கலங்காதே…!

என்னவனே
Posted in கவிதைகள்

என்னவனே

என்னவனே.!!
உனக்காக நானும்
எனக்காக நீயும்
மடல் எழுதியது இல்லை
ஆனால் இன்று ..?

உனக்காக என் மனக்குமுறளை ..
அனுப்புவதில் எனக்கு உடன்பாடு இல்லை
இதுந்தும் இதோ…

என்னை நீ இதுவரை புரியாத
காரணம் நான் அறியேன்..
நீ இனி அறிய
எத்தனிக்கும் போது
உன்னருகிள் நான்
இருக்கப்போவதில்லை ..

உனக்காக நான் சிரித்ததும்
உண்டு ..
உனக்காக நான் அழுததும்
உண்டு ..
ஏன்
உனக்காக நான் என்னை
தந்ததும் உண்டு ..
ஆனால் எனக்காக
நீ …
இன்னொருத்தனோடு சேர்ந்து மட்டும் பார்த்தாய்
அன்றே இரண்டான
என் இதயம்
இன்னமும் ரண களமாய் ஒலித்துக் கொண்டிருக்கிறது..

நீ என்னை இப்படி தான் நேசிப்பாய் என்று
தெரிந்து இருந்தால் ..
நம் காதலை
அன்றே கருவில்
கருக்கலைப்பு செய்திருப்பேன் .

உன்னை தேடும் என்
மனசுக்கு எதை நான் சொல்லி புரிய வைப்பேன்
நீ என்மேல் கொண்டது
காதல் அல்ல..
வெறும் ஆசை மட்டும் தான் என..
காத்து இருக்கிறேன் ..
உனக்காக அல்ல
காலம் உனக்கு
என்னை யார் என்று
உணர்த்தும் வரை ..
நீ தொலைத்த நான் ..
உன்னவள்
லண்டன் !

நட பிணமாய் இன்றும்
Posted in கவிதைகள்

நட பிணமாய் இன்றும்

நீ ,,
நான் ,,
எனறு இருந்த நாம்
நாம் என்று ஆன போது

நமக்குள்
ஏனோ கருத்து மோதல்..

கருத்துக்களை பூ என
நினைத்து அள்ளி அள்ளி வீசினாய் ..
அதில் முள்ளும் கலந்து தான்
இருக்குது என்று நான்
அறிந்திருக்கவில்லை ..

பல ஏமாற்ராத்தின் புயலில்
சிக்கிய நான்
வலியின் ரணத்தில் தான்
வாழ்க்கை பயணம் என்று இருந்தேன்
மீண்டும் சூராவளியாக
வந்த நீ
என்னை மீட்டுவாய்
என்று இருக்க ..
என் வாழ்க்கையில்
கோர தாண்டவம் ஆடியதும்
ஏனோ..?

நீ
மீட்டிடுவாய் என்று
நான் இல்லை ..
நான் இதில் மீண்டிடுவேன் என்ற நம்பிக்கையில்
நட பிணமாய் இன்றும்..!

ஆக்கம் – லண்டன் அக்கா

வன்னிமைந்தன் டிக் டாக்கில் வாசிக்க பட்ட கவிதை இது

முள்ளிவாய்க்கால் புதிய பாடல் வெளியீடு
Posted in இலங்கை செய்திகள் கவிதைகள் பாடல்கள்

முள்ளிவாய்க்கால் புதிய பாடல் வெளியீடு

முள்ளிவாய்க்கால் புதிய பாடல் வெளியீடு

முள்ளிவாய்க்கால் புதிய பாடல் வெளியீடு இன்று எதிரி இணையம் ஊடாக வெளியீடு செய்து வைக்கப்படுகிறது.

ஈழ மண்ணின் விடுதலைக்காக தனது மதுரை குரல் ஊடாக பாடல்களை பாடி உணர்வுகளை ஊட்டி பலம் கொடுத்த பாசறைப்பாளர் தேனிசை செல்லப்பாவின் புதல்வன் இளங்கோ செல்லப்பா அவர்களுக்கு நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறோம் .

இளங்களோ செல்லப்பா இசையில் ,அவரது மகன் பாவேந்தன் அவர்களுடைய மதுரை குரலில், இளம்பிறை (குமார் )அவர்கள் வரியில், இந்தப் பாடலை எதிரி இணையம் வெளியீடு செய்வதில் மகிழ்ச்சி அடைகிறது.

இலைமறை காய்களாக மறைந்திருக்கும் புதிய கவிஞர்களை இனம் கண்டு அவர்களை ஊக்குவிக்கும் நடவடிக்கையில் வன்னி மைந்தன் tiktok இடம் பெற்றுள்ளது.

அதனை ஏற்றுக் கொண்டு அந்த புதியவர்களுக்கு வாய்ப்பளித்து, அவர்களையும் ஈழ மண் விடுதலை நோக்கி அழைத்துச் செல்வதற்கு, ஆதரவு தந்து அவர்களை பலப்படுத்தி கரங்களை நீட்டிய இளங்கோ செல்லப்பா

பாவேந்தன் மற்றும் ஐயா செல்லப்பா ஆகியோருக்கும், இந்த வேளையில் நாங்கள் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில், எங்கள் மக்கள் பாட்ட பேரவலம் தொடர்பாக இந்த பாடல் வரி வலி சுமந்து கனக்கிறது .

கனத்த நெஞ்ச வலிகளோடு கால்கள் நடக்கின்ற பொழுது ,அதன் வலிகளை விழி நீர் சொரிய இந்த பாடல் கேட்க வைக்கிறது .

ஆகவே அழகான வரிகள் ஊடாக இந்த பாடல் மொழியாக்கப்பட்டுள்ளது. சிறந்த காட்சி அமைப்பை பாவேந்தன் அவர்கள் செய்திருக்கின்றார்.

சிறந்த ஒரு இசையை எங்களுடைய இசை மேதை இளங்கோ செல்லப்பா அவர்கள் கொடுத்திருக்கிறார் .

ஆகவே உயிரோட்டமாக இருக்கிறது பாடல் கேட்கும்போது .மீள மீள இந்த பாடல் கேட்கத் தோன்றுகிறது, எனவே இந்த பாடல்

ஊடாக பாடல் ஆசிரியராக பரிணாமம் பெற்றுள்ள இளம்பிறை அவர்களுக்கும் எமது நன்றிகளையும் பாராட்டுகளையும்

வன்னி மைந்தன் tiktok மற்றும் எதிரி இணையம் மக்கள் சார்பாக பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம் நன்றி.

பாடியவர் – பாவேந்தன் இளங்கோவன்
இசை – இளங்கோ செல்லப்பா
பாடல் வரிகள் – இளம்பிறை ( குமார் )
வெளியீடு – எதிரி இணையம்


வன்னி மைந்தன் டிக் டாக்கில் பயணித்த உறவை பாடல் ஆசிரியராக அறிமுக படுத்திய இளங்கோ செல்லப்பா அண்ணாவிற்கு மிக்க நன்றிகள்.

இதில் அழுத்தி காணொளி பார்க்க

கவலைப் படுகிறேன்
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

கவலைப் படுகிறேன்

கவலைப் படுகிறேன்

எதுகை மோனை எடுத்துவா
எழுத வா கவிதை வா
பாடலாம் இங்கு வா
பா வை ஒண்ணு பாட வா

ஆட இங்கு கூட்டி வா
ஆட வரா விட்டு வா
ஆடலாம் பார்க்க வா
ஆடு களம் திறக்க வா

அரியணையில் உள்ள வரா
அடுக்கு மாடி கொண்டவரா
திறன் இருந்தால் எடுத்து வா
திராணி இருந்தால் படிக்க வா

முதுமையில வாலிபத்தை
முன்னே தேட முடியாது
இளமையில தொலைத்தவற்றை
இன்று பெற முடியாது

அன்று செய்த தவறுகளோ
ஆள் மனதில் வலிக்கிறது
இந்த வலி ஆறுமா
இதயமது தேறுமா

ஆக்கம் – 09-05-2025
வன்னி மைந்தன்

யார் மேல் குற்றம்
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

யார் மேல் குற்றம்

யார் மேல் குற்றம்

உன்னை நானும் பார்க்கல
உன் உறவை நானும் கேட்கல
என்னை நீயும் தேடல
என்ன கேட்டாய் கேடில

பொல்லா வார்த்தை போடுறாய்
போலியாக தூவுறாய்
கண்ணா என்ன கேட்கிறாய்
காதில் என்ன ஓதுறாய்

விண்ணில் ஏறி பறக்கத்தான்
விண் வெளியை அளக்கத்தான்
காடு மலை ஏறுறேன்
கண்ணாம் பூச்சி ஆடுறேன்

ஓடுகிற ஆற்றில -காற்று
ஆடும் அந்த ஆற்றிலே
ஓங்கி எழும் அலையிலே
ஓர் தேசம் நனையுதே

எல்லாம் இங்கு ஒண்ணுதான்
ஏழை இங்கு பாவம் தான்
சொன்னா இங்கு கேடுதான்
சொல்லாம தூங்குறான் ……

ஆக்கம் – 09-05-2025
வன்னி மைந்தன்

சொல்வாயா
Posted in கவிதைகள்

சொல்வாயா

சொல்வாயா

உனை நான் பார்த்தேன்
எனையே உடன் மறந்தேன்

காளை உனை நினைத்து
காதல் கொண்டு துடித்து

நீ செல்லும் வழி மீது
நித்தமும் விழி வைத்து

துடிதுடிக்கும் இதயத்தோடும்
படபடக்கும் விழிகளோடும்

கன்னி நான் காதலோடு
உனை எண்ணிக் காத்திருக்கின்றேன்

திருமகனே என் மனமகனே
ஒருமுறையேனும் உன்

உதட்டைக் குவித்து
நெத்தியில் அன்பாக

முத்தம் ஒன்று இட்டு
சத்தமாக சொல்

கன்னி இவளே உன்
காதலி என்று…!

சொல்வாயானால்,

வெண்ணிலா சிரிக்கும்
விண்மீன் ஒளிரும்

வானம் பூத்தூவும்
வானவில் நிறம்கூடும்

மின்னல் மின்னும்
முகில்கள் நாணும்

இவைக்காக என்றாலும்
அவைமுன் காதலை சொல்

கன்னி இவளே உன்
காதலி என்று…!

ஆக்கம் – ராகவி
08/05/2025

Posted in கவிதைகள்

உறங்கிய காதல்

உறங்கிய காதல்

பார்த்ததும் உன்மேல்
பூத்தது காதல் என்னில்
பழகாமலே ருசித்தேன்
விலகியே நடந்தேன்

விண்ணில் இருந்தே
மண்ணில் இருக்குமுனை
தொட நினைத்து

நீட்டினேன் கைகளை
முடியாமல் தவித்தேன்
சிட்டாக மாறியுனை
கட்டியணைக்க எண்ணி

சட்டென வந்தேன் மண்மீது
அருகிருந்தே உனை நான்
அளந்தேன் பார்வைகளால்

இதமாக இருந்த போதிலும்
இமைகள் படபடத்தன பயத்தில்
பூவான நான்.. காதலை இயம்ப
புயலாக நீ மாறி… எனை காயமாக்கி

அனலான பார்வையால் எனை
தகனம் செய்துவிடுவாய் என்று
சொல்ல நினைத்த காதலை
சொல்லாமலே புதைத்தேன்

இன்றுதான் தெரிந்துகொண்டேன்
அன்று நீயும் எனைபோலவே…..

உன்மீதான என் காதலும்
என்மீதான உன் காதலும்
உச்சரிக்கப்படாமல் உரசாமல்
உறங்கியது மனக்கல்லறைகளில்…!

யோசி...நேசி...
Posted in கவிதைகள்

யோசி… நேசி…

யோசி… நேசி…

அந்திசாயும் இதமான நேரம்
மந்திகள் தொங்கும் மரநிழலின்கீழ்

உன் தோளில் என் தலைசாய்த்து
பன்னாட்டு கதை பல பேசி….

இனிமையான அப்பொழுதில்
இணைந்த நம் இதழ்களோடு

நாசிகள் உரசியவேளையில்
நங்கையிவள் சட்டென கூசி…

இன்னும் எத்தனையோ சில்மிசங்கள்
இவையனைத்தயும் ஒருநொடியில்

மறந்ததுமேனோ மன்னவனே
மனம் திறந்து நீ யோசி….

என் உடல் உருக உருக
உன்னையே தினமும் சுற்றி சுற்றி

கன்னக்குழிகள் தெரிய சிரித்து வந்த
பெண்ணிவளை ஒருகணம் யாசி…

பட்டாம்பூச்சியென பறந்து திரிந்தவள்
விட்டில் பூச்சியாகி சாகத்துணிந்து

தன்னந் தனிமையில் அல்லாடும்
கன்னியவளை வா வந்து நேசி…!

கொஞ்சி விளையாட
Posted in கவிதைகள்

கொஞ்சி விளையாட

கொஞ்சி விளையாட

புலர்ந்தது பொழுது
மலர்ந்தது என் வதனம்
எழுந்தேன் படுக்கைவிட்டு
தொழுதேன் உன்கால்களை

ஏன் என்று நீ கேட்கிறாயா?
எப்போதேனும் உன் கால்களை
வார நான் குனியும் போது
உனக்கு ஐயம் வராதல்லவா?

சரியன்பே கொஞ்சம்
சிரி உன்னிதழ்விரித்து…
குளிர்த்து நீராடிவிட்டு
குளிர்போக சுடுநீரில்
அன்பைக் கலந்து
அணங்கு நான்
தேநீர் தயாரிக்க
போகணும் அன்பே…

சிரி ஒருமுறை சிரி
குவி உன்னிதழைக் குவி
கவி நீயானாலும்
பல கவி நான்
எழுதுவேன் உன்னிதழ் மேல்..!

மங்கை நான் அருகிருக்க
அங்கை அள்ளத் துடிக்கையில்

அன்பே…
கொங்கைகள் ஏங்குமடா!
சங்குக் கழுத்தும்
உன்னிதழ் முத்தத்திற்காக
காத்திருக்குதடா!

பொங்குகின்ற இன்பம் கோடி
மங்கை எனக்குள்ளே…
ஏங்குகின்ற என்னை ஏனடா
அலட்சியம் செய்கிறாய்?

தூங்குகின்ற சிறு பிள்ளை போல
பாசாங்கு செய்யாதே
நடிக்காதே எழுந்திரு
துடிக்கின்றேன் காளையே
உன் அணைப்புக்குள்
நான் அடங்கணும்
சத்தமின்றி நீ இடும்
முத்தத்தில் நான் உருகணும்

மஞ்சத்தில் தோகை விரித்து
நெஞ்சில் தலைசாய்த்து
கெஞ்சலோடு நான் சிணுங்கணும்
தொட்டிலில் கொஞ்சி விளையாட
சிறு முல்லைப் பூவொன்று
நீ தருவாயா..!
பிஞ்சு விரல்கள்
என் தேகம் தொடுகின்ற
இன்பம் அதுவும் தருவாயா..!!

கண்டதெல்லாம் கனவு
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

கண்டதெல்லாம் கனவு

கண்டதெல்லாம் கனவு

நெஞ்சில் நீ இருக்க
உன் நினைவில் நான் துடிக்க
உன்னை மறப்பேனா
உயிரே வெறுப்பேனா

பக்கம் வர துடிக்குதடி
பார்க்க மனம் ஏங்குதடி
வெட்க படும் வயதாலே
ஏங்கி ஏங்கி சாகிறேண்டி

அஞ் சுகமே உன்னை உள்ளம்
அணைக்க தூண்டுதடி
அக்கினியாய் ஆசை வந்து
அடியே கொல்லுதடி

வேண்டுதலை நான் செய்ய
வேளைக்கு வந்திடடி
வியர்வையில் உடல் குளிக்க
விழி திறந்து பார்தேண்டி

கண்டதெல்லாம் கனவு என்று
கண் உறக்கம் சொன்னதடி
தப்பி விட்டேன் நான் என்றே
தாராளமாய் சிரித்தேண்டி ..!

ஆக்கம் -04-05-2025
வன்னி மைந்தன்

ஏமர்ந்த காதல்
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

ஏமார்ந்த காதல்

ஏமார்ந்த காதல்

உன்னை பார்த்த நாள் முதலாய்
ஊன் உறக்கம் தொலைத்து விட்டேன்
கண்ணுக்குள்ள வீழ்ந்தவளே
காணாமலே போனதெங்கே

சொல்லி ஆற முடியாத
சோகமதை தந்து விட்டு
பைங்கிளியே போனதெங்கே
பார்க்க என்னை மறந்ததென்ன

கண்ணுக்குள்ள நீ இருக்க
கற்பனையில் நீ உலவ
சொற்கள் எல்லாம் உன்னை தேட
சொந்தம் உன்னை இழந்தேனோ

பக்கத்தில நீ இருக்க
பார்த்து பார்த்து உனை இரசிக்க
முடியாமல் போனதினால்
முழு நெஞ்சும் வலிக்குதடி

கத்தும் கடல் மேல் எழுந்து
கதறுகின்ற அலைபோல
கண்கள் எல்லாம் நீராச்சு
காதல் இன்று புன்னாச்சு

செத்திடத்தான் துடிக்கிறேன்
முடியமால் தவிக்கிறேன்
இப்படி ஒரு தண்டனையை
இனி யாருக்கும் நீ கொடுத்திடாதே..!

அக்கம் -01-05-2025
வன்னி மைந்தன்

அர்ச்சுனா ஆவி பேசிறது
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

அர்ச்சுனா ஆவி பேசிறது

அர்ச்சுனா ஆவி பேசிறது

கொள்ளையடிக்க வந்தவன்
கொள்கை அற்று நிற்பவன்
பைத்தியமாய் நடிப்பவன்
வைத்தியன் என்பவன்

கேடு கெட்ட வார்த்தைகளை
கேளிக்கையாய் சொல்பவன்
முகமூடி கொள்ளையனாய்
முன்னேறி நிற்பவன்

நடமாடும் ஊடகமாய்
நாடெல்லாம் அலைபவன்
வெளிநாட்டு பணத்திற்கு
வெள்ளை அடிப்பவன்

தங்கத்தை மட்டுமே
தாராளம் நம்புறவன்
தமிழரின் சாபமாக
தலைகீழாய் நிற்பவன்

மொத்தத்தில் இவனொரு
பைத்தியமாய் ஆனவன்
பகல் கொள்ளையனை
பார் தமிழா விரட்டி விடு.

ஆக்கம் – 29-04-2025

வன்னி மைந்தன்

தோற்று போன காதல்
Posted in கவிதைகள்

தோற்று போன காதல்

தோற்று போன காதல்

முற்றத்தில் நீ இருக்க
முகம் கழுவா உன்னை பார்க்க
பக்கத்தில நான் வந்தேன்
பார்க்க என்னை மறந்ததேன்

சொர்க்கத்தில் இருப்பதுவாய்
சொல்லிவிட முடியாத
பாசத்தில் நான் துடிக்க
பாவை என்னை மறந்ததேன்

தேன் மலரும் பூ விழியால்
தேடுதல் செய்தவளே
ஒத்தை வரி சொல்லமால்
ஓடி போனதென்ன

மெத்தையில நீ இருந்து
மேனி வருட கண்ட கனா
பக்கத்தில கூடலையே
பார் விழி நோகுதடி

ஆசை பட்ட வாழ்வதனை
அப்படியே தந்து விட
வெளிநாடு போனேண்டி
வெற்றிடமாய் நின்றேண்டி

மணமகளாய் நீ யிருக்க
மாலையதை சூடிவிட
வீடு வந்து பார்த்த போது
விசரணாய் ஆனேண்டி

ஏன் நினைத்தேன் நான் அன்று
எனை மறப்பாய் நீ என்று
உன் நினைவை நான் சுமந்து
ஒத்தையாக வாழ்கிறேனே .

ஆக்கம் =- 29-04-2025

  • வன்னி மைந்தன் –
  • 0044 7536707793

லண்டன் அண்ணன் ஒருவரது உண்மை காதல் கேட்ட பொழுது என் பேனா முனையில் இப்படி உதிர்ந்து .

எனக்கு என்ன ஆச்சு
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

எனக்கு என்ன ஆச்சு

எனக்கு என்ன ஆச்சு

உயிரே உன்னை பிடிக்குதே – ஏனோ
உன்னால் உள்ளம் துடிக்குதே
கண் இரண்டில் காட்சிகளாய் நீ விழ
கவலை மெல்ல கலையுதே

ஏனோ உன்னால் இரவும் விடியுதே
ஏதோ மாற்றம் எனக்குள் நிகழுதே
புரிய முடியா தவிக்கிறேன்
புகலிடமாய் மனம் தவிக்குதே

விடியும் பொழுதில் விழியோரம்
விடயம் சொல்கிறாய் –
கனவில் வந்தே கதைகள் சொல்ல
கண் உறக்கம் தொலைக்கிறேன்

நிலவரம் என்னவோ – இந்த
நிகழ்வு என்னவோ
தெரிந்தவளே பதில் சொல்லு
தெரியா கேட்கிறேன்

எனக்கு என்ன ஆச்சு
என்னை கேள்வி கேட்கிறேன்
ஆனால் அமைதியாகும் மனதால்
அவதி படுகிறேன்

புரிந்தவளே புதிர் சொல்லு
புரியும் மொழியில் சொல்லு
ஏன் இப்படியானேன்
எனக்கு ஏதும் தெரியலையே …!

அக்கம் – 28-04-2025

  • வன்னி மைந்தன் –

வன்னி மைந்தன் உதவி திட்டம் புது பாடல் வெளியீடு |வைரலாகும் வீடியோ| Vanni Mainthan New Song Release
Posted in கவிதைகள்

வன்னி மைந்தன் உதவி திட்டம் புது பாடல் வெளியீடு |வைரலாகும் வீடியோ| Vanni Mainthan New Song Release

வன்னி மைந்தன் உதவி திட்டம் புது பாடல் வெளியீடு |வைரலாகும் வீடியோ| Vanni Mainthan New Song Release

வன்னி மைந்தன் உதவி திட்டம் புது பாடல் வெளியீடு |வைரலாகும் வீடியோ| Vanni Mainthan New Song Release

video

என்னை பார்ப்பாயா பதில் சொல்
Posted in கவிதைகள்

என்னை பார்ப்பாயா பதில் சொல்

என்னை பார்ப்பாயா பதில் சொல்

உன்னை தினம் பார்க்கையிலே
உள்ளம் இன்று குளிருதடி
கன்னக்குழி பேரழகில்
கவிதை வந்து கொட்டுதடி

கொஞ்சி பேசும் உன் மொழிதனையே
கெஞ்சி கேட்க துடிக்குதடி
வஞ்சி உன் பேரழகில்
வாடி மனம் போகுதடி

பிள்ளை உன் செயலினால்
பிரியம் மனம் கூடுதடி
கள்ளம் இல்லா பேச்சினால்
காதல் வந்து ஊறுதடி

நித்தம் உன்னை பார்த்திடவே
நிலவே மனம் துடிக்குதடி
சத்தம் இல்ல பேசிடவே – இதயம்
சாளரம் மெல்ல திறக்குதடி

உன்னை தினம் எண்ணி எண்ணி
உயிரே உயிர் ஏங்குதடி
வெள்ளை மனம் கொண்டவளே
வெளி நாடு நீ வந்திடடடி

சோர்ந்து மனம் போகையிலே
சோர்வகற்றி போறவளே
வாடி நான் போகாமல்
வைய்யத்தில் என்னை பார்ப்பாயா ..?

வன்னி மைந்தன் (ஜெகன் )
ஆக்கம் – 25-01-2025

மீண்டும் பதிகின்றேன்
Posted in கவிதைகள்

மீண்டும் பதிகின்றேன்

மீண்டும் பதிகின்றேன்

தூண்டா மணிவிளக்காய்
ஆண்டாண்டு தோறும்
எரிகின்ற தீபத்தின் முன்
அண்ணாவின் குரல் ஒலிக்கும்

இன்று
வேண்டாத துயரை
விலத்தியே வைத்து நாம்
வீட்டிற்குள் வணங்குகின்றோம்

வரிக்குள் அடங்காத வலிகளை நாம்
வார்த்தைக்குள் ஒழித்து வைப்போம்

அடிமைகளா நாம் என்று மனம் அடிக்கடி எம்மைக்கேட்டாலும்
துடிக்கின்ற இதயத்தில்
வழிகின்ற குருதியும்
உடல் முழுவதும்
அண்ணாவின் பெயர்
எழுதும்

சிலிர்த்திடும் வேங்கையின் சிந்தனையில் சிக்குண்டு தவிப்பவர் நெஞ்சங்களில்
தீக்குச்சியாய் என்றும்
நீர் இருப்பீர்

வணங்கா மண்ணுக்காய்
அன்று கடலோரக் கவிதைகளாய்
காத்துக் கிடந்து
காய்ந்த
மக்களின் கண்ணீரை
இன்று
பிரபா கரத்தால்
நீர் துடைப்பீர்

காயாத விழிகளில்
கரையோரக் காட்சியாய்
நீர் அங்கு தோன்றினால்
உலகமே வியக்கும்
சிலருக்கு வியர்க்கும்

பாதையெல்லாம்
பூமலராய்
கார்த்திகை தந்த
செம்மலராய்
பூங்கதவே நீ
தாழ் திறவாய்

எழுவது இன்று
மேதகு என்று
தொழுவது நன்று

அகவை ஒன்று
நகர்ந்தது என்று
ஆர்பரிக்கின்றது
மக்கள் கூட்டம்
கடலாய் நின்று

பிறந்த நாள் வாழ்த்துகள்
26/11/2024

நீறாகிப் போன நினைவுகள்
Posted in கவிதைகள்

நீறாகிப் போன நினைவுகள்

நீறாகிப் போன நினைவுகள்

நீறாகிப் போன நினைவுகள் எல்லாம்
இன்று நட்ட மரம்போல
எழுந்து நிமிர்ந்து நிற்குமய்யா உங்கள் பெயரை சொன்னால்….

விழுந்து படுத்த
கிழடுகள் கூட இன்று
நாட்டு நடப்பென்னவென்று
தலைப்புச் செய்தியை தேடுமய்யா உங்கள் பெயரின்
நினைவுக்கு பின்னால்…..

எழுந்து ஓடமுடியாத ஒற்றைக் காலை
இழந்தவரும்
ஏதோ
ஓர்மம் கொண்டு
சாதிக்கத் துடிக்கின்றார்
நம்ப முடியவில்லை என்னால்….

பழுத்த உதிர்ந்த இவைகளுமின்று
சொல்வது என்ன
நாம் சருகாகிப் போனாலும்
மண்ணுக்கு உரமாவோம்

மீண்டும் மீண்டும்
மன்னா உமது பெயர்
சொல்லும்
கார்த்திகை மலராவோம்

சாத்தியமான சத்தியம்
என்று விடுதலை தேடி
விரைந்து ஓடும்
மேகத்தைப் போல

உலகமெங்கும்
பரந்து கிடக்குது

மேதகு புகழ்

தெளிந்த நீல
வானத்தைப் போல…..

வணக்கம் சொல்லி
வாழ்த்துகள் சொல்ல
இங்கு வார்த்தைகள்
எல்லாம் மலர்களாய்
மாறும் மாயமென்ன

கார்த்திகை
இருபத்தாறு
கடவுள் அமைத்து வைத்த
காலத்தின் மேடையில்
என்றும்
காட்சியின் நாயகன்

எழுவது இன்று என்று
எழுந்து நின்று
தொழுவது
அகிலம் எங்கும்
தமிழனின் கரம்

வாழ்ந்து பார்த்தது
எங்கள் வரம் 💐🙏
26/11/2024

கார்த்திகை இருபத்தாறுக்கு முதல் வணக்கம்.
Posted in இலங்கை செய்திகள் கவிதைகள்

கார்த்திகை இருபத்தாறுக்கு முதல் வணக்கம்.

கார்த்திகை இருபத்தாறுக்கு முதல் வணக்கம்.

முடிந்தால்
என் கவிதைகளையும்
இன்று இணைத்துக் கொள்ளுங்கள்
மிக்க நன்றி
அருள்நிலா வாசன் 🙏
தூண்டா மணிவிளக்காய்
ஆண்டாண்டு தோறும்
எரிகின்ற தீபத்தின் முன்
அண்ணாவின் குரல் ஒலிக்கும்

இன்று
வேண்டாத துயரை
விலத்தியே வைத்து நாம்
வீட்டிற்குள் வணங்குகின்றோம்

வரிக்குள் அடங்காத வலிகளை நாம்
வார்த்தைக்குள் ஒழித்து வைப்போம்

அடிமைகளா நாம் என்று மனம் அடிக்கடி எம்மைக்கேட்டாலும்
துடிக்கின்ற இதயத்தில்
வழிகின்ற குருதியும்
உடல் முழுவதும்
அண்ணாவின் பெயர்
எழுதும்

சிலிர்த்திடும் வேங்கையின் சிந்தனையில் சிக்குண்டு தவிப்பவர் நெஞ்சங்களில்
தீக்குச்சியாய் என்றும்
நீர் இருப்பீர்

வணங்கா மண்ணுக்காய்
அன்று கடலோரக் கவிதைகளாய்
காத்துக் கிடந்து
காய்ந்த
மக்களின் கண்ணீரை
இன்று
பிரபா கரத்தால்
நீர் துடைப்பீர்

காயாத விழிகளில்
கரையோரக் காட்சியாய்
நீர் அங்கு தோன்றினால்
உலகமே வியக்கும்
சிலருக்கு வியர்க்கும்

பாதையெல்லாம்
பூமலராய்
கார்த்திகை தந்த
செம்மலராய்
பூங்கதவே நீ
தாழ் திறவாய்

எழுவது இன்று
மேதகு என்று
தொழுவது நன்று

அகவை ஒன்று
நகர்ந்தது என்று
ஆர்பரிக்கின்றது
மக்கள் கூட்டம்
கடலாய் நின்று

பிறந்த நாள் வாழ்த்துகள்
26/11/2024