கண்டதெல்லாம் கனவு
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

கண்டதெல்லாம் கனவு

கண்டதெல்லாம் கனவு

நெஞ்சில் நீ இருக்க
உன் நினைவில் நான் துடிக்க
உன்னை மறப்பேனா
உயிரே வெறுப்பேனா

பக்கம் வர துடிக்குதடி
பார்க்க மனம் ஏங்குதடி
வெட்க படும் வயதாலே
ஏங்கி ஏங்கி சாகிறேண்டி

அஞ் சுகமே உன்னை உள்ளம்
அணைக்க தூண்டுதடி
அக்கினியாய் ஆசை வந்து
அடியே கொல்லுதடி

வேண்டுதலை நான் செய்ய
வேளைக்கு வந்திடடி
வியர்வையில் உடல் குளிக்க
விழி திறந்து பார்தேண்டி

கண்டதெல்லாம் கனவு என்று
கண் உறக்கம் சொன்னதடி
தப்பி விட்டேன் நான் என்றே
தாராளமாய் சிரித்தேண்டி ..!

ஆக்கம் -04-05-2025
வன்னி மைந்தன்